தொடர்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடர்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 டிசம்பர், 2011

அழிக்கப் பிறந்தவன் - 5

| அழிக்கப் பிறந்தவன்-1    |    அழிக்கப் பிறந்தவன்-2    |    அழிக்கப் பிறந்தவன்-3  |
| அழிக்கப் பிறந்தவன்-4    |


விஜயஷங்கர் ஃப்ரெஷ்ஷாக இருந்தான். ஏதோ இந்திப்பாட்டை முணுமுணுத்துக் கொண்டே, கண்ணாடி முன்பாக தாடியை சீப்பால் வாரினான். தலை வாரிவிட்டு மீண்டும் கையால் லேசாக கலைத்துவிட்டான். பாடி ஸ்ப்ரேவை எடுத்து தாராளமாக ஸ்ப்ரேவிக் கொண்டான். பச்சைநிற டீஷர்ட்டை தலைவழியாக மாட்டினான். பர்ஸ், சீப்பு ஆகியவற்றை ஜீன்ஸ் பாண்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக் கொண்டான். மறக்காமல் செல்போனை கையில் எடுத்துக் கொண்டான். ஆணியில் மாட்டியிருந்த பைக் சாவியை எடுத்தான்.


ரூமை பூட்டிக்கொண்டு வெளியே வந்தான். கிக்கரை ஸ்டைலாக உதைத்து பைக்கை ஸ்டார்ட் செய்தான். பிரசாத் லேப் வழியாக வடபழனி வந்தான். .வி.எம்.முக்கு எதிரில் அந்த பெட்டிக்கடையில் வண்டியை சைட் ஸ்டேண்ட் இட்டுநிறுத்தினான். அரை பாக்கெட் கோல்ட் ஃபில்டரும், ஒரு தினத்தந்தியும் வாங்கினான்.
லைட்டரில் சிகரெட்டை பற்ற வைத்தான். பேப்பரை புரட்டினான்.
பர்மாபஜார் வியாபாரி படுகொலை. குற்றவாளி யார்? போலிஸ் திணறல்!” செய்தியை வாசித்துவிட்டு தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
யார் இந்த விஜயஷங்கர்?
ந்த காலத்தில் விஜயஷங்கரின் அப்பா ஒரு பண்ணையார். செல்வச் செழிப்பான குடும்பம். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிப் பக்கம் சொந்த ஊர். பக்கத்தில் இருந்த டவுனில் ஒரு சின்ன தியேட்டர் வைத்திருந்தார்கள். படிப்பு சரியாக ஏறாத விஜயஷங்கரை, பத்தாவது வகுப்போடு ஏறக்கட்டி தியேட்டரைபார்த்துக்கொள்ள சொல்லி விட்டார் அப்பா.
ஆரம்பத்தில் கவுண்டரில் உட்கார்ந்து டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தான். கொஞ்சநாள் கேண்டீன் சேல்ஸ் கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருந்தான். திடீரென்று ஒரு நாள் புரொஜெக்டர் ஓட்டும் ஆசை வந்தது விஜயஷங்கருக்கு. ஆப்பரேட்டர் சொல்லிக் கொடுத்தபடி படம் ஓட்டத் தொடங்கினான். நிறைய படத்தை திரும்ப திரும்ப பார்த்து, இந்தக் கட்டத்தில் அவனுக்கு சினிமா மீது பெரிய ஈர்ப்பு ஏற்பட்டு விட்டது. இவர்களது தியேட்டரில் சென்னை, மதுரையில் எல்லாம் ஓடித்தேய்ந்த படங்கள்தான் வரும். ஒரு படம் வெளியாகி ஆறு மாதம் கழித்துதான் விஜயஷங்கரால் பார்க்க முடியும்.
அபூர்வ சகோதரர்கள் ஏன் 200 நாள் ஓடியது? ராஜாதிராஜா ஏன் வெள்ளிவிழா கண்டது என்று ஆராயத் தொடங்குவதில் அவனுக்கு ஆர்வம் மேலிட்டது. தோல்வியடைந்த படங்கள் ஏன் தோல்வி அடைந்தது என்று நாலு பேரிடம் விவாதிப்பான். புதுப்படங்களைப் பார்ப்பதற்காகவே ராமநாதபுரத்துக்கும், மதுரைக்கும், திருச்சிக்கும் படையெடுப்பான்.
ரெண்டு ரீலுக்கு முன்னாடியே படம் முடிஞ்சிடிச்சி. அதுக்கப்புறம் வெச்சு வளவளன்னு இழுத்ததாலேதான் புட்டுக்கிச்சி
புட்டுக்கிட்ட படம் தன் கைக்கு வரும்போது, தனக்கு பிடித்தமாதிரி எடிட் செய்து தியேட்டரில் ஓட்டுவான். “புதுக்கோட்டையிலே பார்த்தப்போ சுமாரா இருந்திச்சி. இங்க பார்க்குறப்போ இந்தப் படம் நல்லாருக்கே?” ரசிகர்களின் ரசனை விஜயஷங்கருக்கு அத்துப் படியானது.
மெல்லத் திறந்தது கதவுவந்தபோது இரண்டாம் பாதியை முதலிலும், முதல் பாதியை இரண்டாம் பாதியிலுமாக ஓட்டி படத்தின் கதையையே மாற்றி வசூலை அள்ளினான்.
எந்த படம் வந்தாலும் இவன் கை வைத்து காட்சிகளை முன்னுக்குப் பின் மாற்றி ஓட்ட ஆரம்பித்தான். தேவையில்லாத காட்சிகளில் கத்தரி வைத்தான். சென்னையிலேயே மரண அடி வாங்கிய படங்கள் கூட விஜயஷங்கரின் தியேட்டரில் இரண்டு வாரத்துக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
பையன் தியேட்டரை நல்லா பார்த்துக்குறான். முன்னை விட நல்லாவருமானம் வருதுஅப்பாவுக்கும் மகிழ்ச்சி.
உள்ளத்தை அள்ளித்தாவந்தபோது படம் பார்த்து அசந்துவிட்டான் விஜயஷங்கர். படம் வெளியாகி மூன்று மாதம் கழித்துதான் உள்ளூருக்கு வந்தது என்றாலும்வசூல் சக்கைப்போடு போட்டது. தியேட்டரில் ஓட்டும் நமக்கே இவ்வளவு லாபம் என்றால், வினியோகஸ்தருக்கும் தயாரிப்பாளருக்கும் எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும்? நாமும் தயாரிப்பாளர் ஆகிவிட்டால் என்ன? முதல் கட்டமாக ஒரு படத்தை எடுத்து மதுரை, ராமநாதபுரம் ஏரியாவுக்கு வினியோகித்துப் பார்ப்போமா? அப்பாவிடம் சொன்னான். ”நீ கையை வெச்சேன்னா எந்த தொழிலா இருந்தாலும் விளங்கிடும். நல்லாசெய்ப்பாஎன்றார்.
தனக்கு படம் எடுத்துக் கொடுக்கும் மீடியேட்டர் மூலமாக விசாரித்தான். ”மெட்ராஸுலே இதுக்கு தகுந்த ஆளுங்க இருக்காங்க சங்கரு. வேண்ணா ஒருக்கா நேராவேபோய் பார்த்துட்டு வந்துடு?”
திருச்சிக்கு வந்து டிராவல்ஸ் பஸ்ஸில் மெட்ராஸுக்கு வந்தான். பஸ்ஸில் டிவி இருக்கிறதா, படம் போடுவார்களா என்று கேட்டு உறுதி செய்துக்கொண்டான். “புதுப்படம். அதுவும் விஜய் படமே போடுவாங்க. ஏறி ஒட்காரு.” படம் போடாத பஸ்ஸில் அவன் ஏறுவதேயில்லை.
எழும்பூரில் ரூம் போட்டான். விஜயஷங்கருக்கு அதுவரை மெட்ராஸ் பெரிய பழக்கம் இல்லை. ஓரிரு முறை வந்திருக்கிறான். பீச், அண்ணாசமாதி, வண்டலூர் பார்த்திருக்கிறான்.
லாட்ஜ் ரிசப்ஷனில் விசாரித்தான் விஜயஷங்கர். “இங்கே சினிமா படம் விக்குற ஆளுங்க எங்கே இருப்பாங்க?”
ரிசப்ஷனில் இருந்தவன் இவனை மாதிரி நிறைய பேரை பார்த்திருக்கிறான். ”நடிக்கணுமா? எடுக்கணுமா? ஒழுங்காச் சொல்லு
இல்லீங்க. ராம்நாட்லே வினியோக யாவாரம் பண்ணலாம்னு இருக்கேன்
மவுண்ட்ரோடு பக்கத்துலே நரசிங்கபுரம்னு ஒரு தெரு இருக்கும். அங்கேதான் நிறைய டிஸ்ட்ரீப்யூட்டர்ஸ் ஆபிஸ் இருக்கும். ஒரு ஆட்டோ புடிச்சி போயி பார்த்து வாங்க
விஜயஷங்கர் கிளம்பினான். கெயிட்டி தியேட்டரில் ஏதோபடம் ஓடிக் கொண்டிருந்தது. நல்ல கூட்டம். கெயிட்டியை அடுத்து கேசினோ. ஏதோ ஜேம்ஸ்பாண்ட் இங்கிலீஷ் படம். இதுவும்தான். ஆனாலும் கூட்டம் கொஞ்சம் குறைவு. கேசினோவை ஒட்டிய தெருவில் ஆட்டோ நின்றது. “இதான் சார் நரசிங்கபுரம். ஆட்டோக்காரன் கேட்ட காசை கொடுத்து விட்டு தெருவில் இறங்கி நடந்தான்.
ஒவ்வொரு கட்டிடத்தின் முன்பாகவும் ஏதோ ஒரு சினிமாக் கம்பெனியின் பெயர் பலகை. தமிழ் சினிமாவின் தலையெழுத்தையே இந்த தெருதான் தீர்மானிக்கிறதோ?
யார் யாரையோ விசாரித்து ஒருவனை பிடித்தான். மெயின் டிஸ்ட்ரிப்யூட்டரையும், மற்ற மாவட்டங்களில் இருக்கும் குட்டி, குட்டி டிஸ்ட்ரிப்யூட்டர்களையும் இணைக்கும் ஒரு சின்ன மீடியேட்டர் இவன். பெயர் முருகன்.
மெனக்கெட்டு ஒவ்வொரு கம்பெனியாக அழைத்துப் போனான். மலையாள, தெலுங்கு, கன்னடப் படங்கள்தான் ஈஸியாக கிடைக்கிறது. கிடைக்கும் பாதி தமிழ்ப் படங்களும் ரிலீஸ் ஆகாமல் முடங்கிப் போயிருக்கும் உப்புமா படங்கள்.
ஆஸ்கர் பிலிம்ஸுன்னு ஒரு கம்பெனி இருக்கு சார். ஜாக்கி சான் படம் மொத்தமா வாங்கி வெச்சிருக்காங்க. சிட்டி, என்.எஸ்.சி.லேலாம் ஜாக்கிசான் படங்க செம்ம அள்ளு அள்ளுது. மவுண்ட் ரோடு அலங்கார் தியேட்டருலே வெள்ளிவிழா கூட ஓடிச்சின்னா பார்த்துக்குங்களேன். உங்க ஏரியாவுக்கு ட்ரை பண்ணிப் பார்க்கறீங்களா?”
இல்லீங்க. நம்ம ஊருலே மலையாளப் படம் போட்டா கூட தியேட்டரு காத்தாடும். இங்கிலீஷு நெனைச்சே பார்க்க முடியாது. தமிழ் தான் நமக்கு வேலைக்கு ஆவும்
சரிங்க. அப்பன்னா திருவிளையாடல், சரஸ்வதி சபதம், உலகம் சுற்றும் வாலிபன்னு நிறைய கிடைக்கும். கோயமுத்தூருக்கு கூட நாந்தான் முடிச்சித் தாந்தேன். சீப்பா புடிச்சிடலாம். பார்க்கலாமுங்களா?”
பழைய படம்லாம் வேணாங்க
சரி. ஷகீலான்னு ஒரு புதுப்பொண்ணு. கேர்ள் பிரண்ட்ஸ்லே சிலுக்கோட இண்ட்ரட்யூஸ் ஆச்சி. அந்தப் பொண்ணு நடிச்ச நாலைஞ்சி படம் மலையாளத்துலே சூப்பர் ஹிட். தமிழ்லே பிரண்டு ஒருத்தர் டப் பண்ணி வெச்சிருக்காருங்க. கட்டை ரேட்டுக்கு வாங்கித்தாரேன். மதுரையிலேயே நல்லா பெருசா காசு பார்க்கலாம்
இல்லீங்க. அப்படியாப்பட்ட படமெல்லாம் வேணாங்க. அப்பாவோட பேரு கெட்டுப் போயிடும். கொஞ்சம் கைக்காசு செலவானாலும், நல்லப் படமா புதுப்படம் ஒண்ணை பெருசா இறக்கிடனும்னு தான் ஆசை
ரஜினி, கமல் படம் மாதிரி இருந்தாலும் சரிங்களா?” கொஞ்சம் நக்கலாக தான்கேட்டான்.
கிடைச்சா சந்தோஷம்தான். காசு ஒண்ணும் பிரச்சினை இல்லை- இந்தப் பதிலை முருகன் எதிர்ப்பார்க்கவில்லை. குஷியானான்.
யார் யாருக்கோ போனை போட்டான். அரை மணி நேரம் போனில் பலரிடமும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசினான். “ரசினி படம் வேணும்யா. காசைப்பத்தி கவலையில்லை... கன் பார்ட்டி கையிலிருக்கும்ஹூம். முருகனுக்கு ராசியில்லை.
ரஜினி அருணாச்சலம் பண்ணிக்கிட்டிருக்காரு. எம்.ஆர். பூசை போட்ட அன்னிக்கே பெரிய ரேட்டுக்கு வித்துடிச்சாம். கமலோட அவ்வை ஷண்முகி புரொட்யூஸரோட ஓன் ரிலீஸா இருக்கும் மாதிரி தெரியுது. விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் படம் ஏதாவது பார்க்கலாமுங்களா?”
விஜயஷங்கருக்கு சட்டென்று பல்ப் எரிந்தது. “கார்த்திக் படம் ஏதாவது கிடைக்குமான்னு பாருங்க!” உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடியென்று அடுத்தடுத்து அப்போது ஹிட் கொடுத்திருந்தார் கார்த்திக்.
கார்த்திக் படமா? ராவு வெசாரிச்சி நாளைக்கு காலாம்பற சொல்றேன். லாட்ஜ் போன் நெம்பர் கொடுத்துட்டுப் போங்க!” அரை நாளிலேயே டயர்ட் ஆகிவிட்டிருந்தான் முருகன்.
பின்னர் விஜயஷங்கர் பிலால் ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டான். தேவி தியேட்டரில் இங்கிலீஷ் படம் பார்த்தான். சாந்தி தியேட்டர் பக்கத்தில் விசாரித்து காபரே பார்த்தான். ‘ஒட்டகத்தை கட்டிக்கோ. கெட்டியாக ஒட்டிக்கோ. ஒல்லியாக இருந்த ஒருத்தி, இல்லாத தனது மார்பை குலுக்கி , குலுக்கி ஆடினாள். ஆல்பட்டில் நைட் ஷோ. நாலு மணி நேர உறக்கம். முருகனின் போனுக்காக லாட்ஜில் விடிந்ததில் இருந்தே காத்துக் கிடந்தான்.
ஷங்கரு சாருங்களா? முருகன் பேசுறேன். கார்த்திக் படம் ஒண்ணு மாட்டியிருக்கு. ரேட்டு தான் கொஞ்சம் அதிகமா சொல்லுறாப்புள. இருந்தாலும் அடிச்சிப் புடிச்சி வாங்கிடலாம். பார்ட்டியை நேர்லே பார்த்து பேசலாமுங்களா?”
ஆர்வத்தோடு ஆட்டோவைப் பிடித்தான் விஜயஷங்கர்.
படம் பேரு சுந்தரப் பாண்டியன். வி.கே.ராமசாமி தயாரிப்பு சார். உள்ளத்தை அள்ளித் தா மாதிரியே நல்ல காமெடி சப்ஜெக்ட்டு. முந்தா நேத்து தான் சென்ஸார் சர்ட்டிவிகேட் வாங்கி இருக்காங்க. பார்த்தவங்க சொல்றாங்க. படம் சந்தேகமில்லாமே சூப்பர் ஹிட்டாம். மொதல்லே நாம படத்தைப் பார்ப்போம். அப்புறம் ரேட்டு பேசிக்குவோம். நீங்க என்னா சொல்றீங்க?”
தி.நகர்தேவி ஸ்ரீ தேவியில் மற்ற விநியோகஸ்தர்களோடுபிரிவ்யூ பார்த்தார்கள். விஜயஷங்கருக்கு படம் பிடித்திருந்தது. முருகன் சொன்னமாதிரி நிச்சயமாய் இது சூப்பர் ஹிட்தான். சந்தேகமேயில்லை.முருகன். இந்தப் படத்தையே முடிச்சிடலாம்.ரேட்டு மட்டும் கொஞ்சம் பார்த்து பேசிக் கொடுங்க
படத்தை மொத்தமாய் வாங்கியிருந்தவர் ஏரியா பிரித்து விற்றுக் கொண்டிருந்தார். முதலில் ரஜினி பட ரேட்டு சொன்னார். முருகன் அடித்து பிடித்துப் பேசினான். அவர்கள் சொன்ன ரேட்டுக்கும், முருகன் கேட்ட ரேட்டுக்கும் ஒட்டவே இல்லை. முருகனுக்கு விஜயஷங்கரை ரொம்பவும் பிடித்துப் போயிருந்தது. இந்தப் படத்தை முடித்துக் கொடுத்து, அவன் பெரியாளாகி விட்டால், தானும் கூடவே சேர்ந்து, அவனோடு கொஞ்சம் வளர்ந்துவிட முடியும் என்று நம்பினான். இதுநாள் வரைக்கும் இவனை மாதிரி ஒருவனைதான் அவன் தேடிக் கொண்டிருந்தான்.
அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வந்தார்கள். முருகன் கொஞ்சூண்டுமேலே ஏறிப் போனான். நகம் கடித்து விஜயஷங்கர் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். 'முருகன் ஏன் இவ்வளவு கறாராகப் பேசுகிறான். கடைசியாக அவர்கள் படம் கொடுக்க முடியாது என்று சொல்லிவிடப் போகிறார்கள்' என்று இவர்களுக்கு டென்ஷன். ஆனால் நடந்தது வேறு. அவர்கள் முதலில் கேட்ட ரேட்டில் பாதி ரேட்டுக்கு கடைசியில் ஒத்துக் கொள்ள வைத்தான் முருகன்.
ஆனால், அந்தப் பணமே கூட விஜயஷங்கரைப் பொறுத்தவரை கொஞ்சம் பெரிய பட்ஜெட்தான். இவ்வளவு பணம் அப்பாவிடம் இருக்குமா?

(தொடரும் - 5)

19 டிசம்பர், 2011

அழிக்கப் பிறந்தவன் - 4

| அழிக்கப் பிறந்தவன்-1   |   அழிக்கப் பிறந்தவன்-2   |   அழிக்கப் பிறந்தவன்-3 |



விடியலுக்கு இன்னும் இரண்டு மணி நேரம் பாக்கியிருந்தது. மாரியின் கண்கள் தூக்கத்துக்கு கெஞ்சியது. போட் ஓரத்தில் வந்து நின்றுகொண்டு கடலை பார்த்தான். அமைதியாக சந்தடியில்லாமல் உறங்கிக் கொண்டிருந்தது. மாரிக்கு விடியல்நேர கடலை வேடிக்கை பார்க்க ரொம்ப பிடிக்கும். அதற்காகவே கடலுக்கு வரும் இந்த வேலையை நேசித்தான்.
முகத்தில் புசுபுசுவென்று ஒரு மாத தாடி. கடல் காற்றில் தலை கன்னா பின்னாவென்று கலைந்திருந்தது. விரல்களை முடிகளுக்குள் சொருகி கோதினான். உப்புக்காற்றின் பிசுபிசுப்பு. கறுப்புநிற டிராயர் தெரிவதுப்போல, பூ போட்ட லுங்கியைத் தூக்கி கட்டியிருந்தான். கட்டம் போட்ட அரைக்கைச் நீலச்சட்டை. டிராயர் பாக்கெட்டில் இருந்து சிகரெட் பாக்கெட்டை எடுத்தான். ஃபில்டர் வைக்காத சிசர்ஸ். தீப்பெட்டி எடுத்து கொளுத்தி, புகையை ஆழமாக நெஞ்சுக்குள் செலுத்தினான். வாய் மூடி மூக்கு வழியாக வெளியேற்றினான். புகைவாசனை கொஞ்சம் சுறுசுறுப்பு சேர்த்தது.
இன்னும் ஒரு மணி நேரத்துலே கரை கிட்டார போயிடலாம். மத்த ஏற்பாடெல்லாம் ரெடிதானே மாரி?" சுக்கான் பிடித்து படகை செலுத்திக் கொண்டிருந்த சண்முகம் கேட்டான்.
ஆங். அதெல்லாம் பண்ணியாச்சி சம்முவம்! இன்னேரத்துக்கு டெம்போ வந்திருக்கும்
இந்தவாட்டி என்னா சரக்கு மாரி?" இந்த போக்குவரத்துகளில் பெரிய ஆர்வம் இல்லாவிட்டாலும், விடிகாலை அமைதியை சகித்துக்கொள்ள இயலாததால் சும்மா ஒப்புக்கு பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான் சண்முகம். மீனவனான சண்முகத்துக்கு ஒரு மாதம் மீன் பிடிக்க கடலுக்குப் போவதைவிட, மாரி மாதிரி ஆட்களுக்கு ஒரு நைட்டு போட் ஓட்டினால் போதும். ரெண்டு மாச வருமானத்தை ஒரே நாளில் அள்ளி விடலாம்.
யாரோ சினிமாலே புதுசா மீசிக் டைரக்டராம். ஆர்டரு பண்ணியிருந்தாரு. மீசிக் இண்ஸ்ட்ரூமெண்டுப்பா. லேட்டஸ்ட்டு. சிங்கப்பூர்லே இருந்து வருது. மொத்தம் நாலு ஆர்டரு. செலவு கிலவு எல்லாம் போவ, ஒரு ஆர்டருக்கு நாப்பது, நாப்பத்தஞ்சி ரூவா வரைக்கும் லாவம் மட்டுமே நிக்கும். ஏர்போட்டு ரூட்டுலே எடுத்தாந்தா பத்து ரூவா நின்னாலே பெருசு. இன்னாதான் இருந்தாலும் நம்ம தொழிலுக்கு இந்த கடல்ரூட்டு தாம்பா பெஸ்ட்டு." - கவனமாக அமவுண்டு மட்டும் குறைத்து சொன்னான் மாரி. இல்லையென்றால் சண்முகம் ட்ரிப்பு ரேட்டு ஏற்றிவிடக் கூடிய அபாயம் இருக்கிறது. மீசிக் இன்ஸ்ட்ரூமெண்ட் மட்டுமல்ல. வேறு சில சரக்குகளும் பொட்டியில் உண்டு. மாரி வாயிலிருந்து இந்த விஷயத்தில் மட்டும் உண்மை வரவே வராது என்று சண்முகத்துக்கும் தெரியும்.
நடுக்கடலில் கைமாற்றப்பட்ட சரக்கு இது. QC OK தரச்சோதனையெல்லாம் செய்துப் பார்க்க வாய்ப்பில்லை. பரஸ்பர நம்பிக்கையில்தான் இந்த பொழைப்பு ஓடுகிறது. அவன் கொடுக்கும் சரக்கு சரியாகதான் இருக்கும் என்று இவனுக்கு நம்பிக்கை. இவன் விற்கும் சரக்கு தரமானதாகதான் இருக்கும் என்று இவனிடம் வாங்கும் வாடிக்கையாளருக்கு நம்பிக்கை. கருப்புச் சந்தை உலகம் இயங்க அத்தியாவசியமான கச்சாப்பொருளே இந்த நம்பிக்கைதான்.
கிட்டத்தட்ட மாமல்லபுரத்துக்கு அருகாமையில் இருந்தார்கள். தூரத்தில் நகர வெளிச்சம், கீழ்வானத்தில் தெரிந்தது. மின்விளக்கில் அலங்கரிக்கப்பட்ட கடற்கரை கோயில் மினியேச்சர் மாதிரி இருந்தது. கோவளத்துக்கும், மாமல்லபுரத்துக்கும் இடையில் ஒரு ஸ்பாட்டில் சரக்கை கரையேற்றுவதாக திட்டம். அந்த ஸ்பாட் ஒரு இயற்கை துறைமுகம். நேவி ஆட்களுக்கு தெரியவே தெரியாது. போட் கரைவரை வந்து சேருமளவுக்கு நல்ல ஆழம் இருந்தது. பாறைகள் கொஞ்சம் ஜாஸ்தி. கவனமாக ஓட்டினால் பிரச்சினை இல்லை. தென்னைமரத் தோப்புக்கு இடையில் அமைந்த பகுதி என்பதால் சாலையில் இருந்து பார்க்கும் யாருக்கும், இங்கே இருக்கும்  ஆளரவம் சுத்தமாகத் தெரியவே தெரியாது. டெம்போவோ, மினிலாரியோ வந்துச் செல்ல வசதியாகவும் அந்த இடம் அமைந்திருந்தது.
கையில் எவ்வளவுதான் காசு புழங்கினாலும், இதுபோல சரக்கு கொள்முதல் செய்ய நேரடியாக களத்தில் இறங்கி வேலை செய்தால்தான் மாரிக்கு நிம்மதி. மாரி மட்டுமல்ல. பஜாரில் தொழில் செய்யும் பெரும்பாலான முதலாளிகள் இப்படித்தான். இது ஒருகெத்தும் கூட. "வேலைக்காரனை அனுப்பிட்டு கடையிலே உட்கார்ந்து கோழியாட்டம் முட்டை வெச்சிக்கிட்டிருக்கான் பாருஎன்று கடலுக்கோ, வானத்துக்கோ போகாத முதலாளிகள், பஜார் பையன்களால் கிண்டல் அடிக்கப்படுவார்கள். எனவேதான் எவ்வளவு சோம்பேறியான முதலாளியாக இருந்தாலும், மாதத்துக்கு ஒருமுறையாவது டைரக்டாக தொழில் செய்யப் போய்விடுவார்கள். இதுதான் தொழில் வீரம் என்கிற ரேஞ்சுக்கு ஒரு மூடநம்பிக்கை எப்படியோ இங்கே ஏற்பட்டு விட்டது.
கலாஸலா... கலஸலா... கலாஸலா.. கலஸலா.. மாரியின் செல்போன் கிணுகிணுத்தது. லேட்டஸ்ட் சோனி எரிக்சன். அமெரிக்காவுக்கே இந்த மாடல் புதுசு. ஏதோ ஒரு இங்கிலீஷ் படத்தில் பார்த்தான். ஆர்டர் செய்தான். போனை எடுத்து, நம்பர் பார்த்து காதுக்கு கொடுத்தவன்,  “சொல்றா கொசு!” என்றான்.
கொசு என்கிற பிரேம்குமார் கேட்டான். “மாரி எங்கிட்டுடா போய் தொலைஞ்சே? போனை போட்டா நாட் ரீச்சபுள் வருது
சரக்கு ஏத்தியாற கடலுக்கு வந்தேன். பையனாண்ட சொல்ட்டு வந்தேனே. உங்கிட்டே சொல்லலியா? இப்போதான் கரைக்கு வாறேன். உள்ளே சிக்னலே கிடைக்காது. கடலுக்குள்ளாற என்ன ஏர்டெல்லுகாரன் டவரா கட்டியிருக்கான்?”
மாரி. கொஞ்சம் ஜாக்கிரதையை இருந்துக்கடா. விஷயம் தெரியுமா? வாப்பாவையே போட்டுட்டானுங்களாம்.. அவரோட தம்பி மவனுங்க ஜாஹிரும், இஸ்மாயிலும் வெறி வெறின்னு ஏரியாவுலே ஆளுங்களை கூட்டிக்கிட்டு காரை போட்டு திரியறானுங்க. டிக்கி ஃபுல்லா பொருளு. பஜார்லே எவன் எவன் மேலே சந்தேகமோ, எல்லாத்தையும் போட்டுடணும்னு வெறி ஏறிப் போய் கெடக்கானுங்க. இங்கே ஒரே பிரச்சினையா இருக்கு
டேய் இன்னாடா சொல்றே? நம்ம வாப்பாவையே போட்டுட்டானுங்களா? நான் உடனே கிளம்பியாறேன்!
வேணாமுடா. நெடுஞ்செழியனே கூடஎஸ்ஆயிட்டதா கேள்வி. அவன் கிட்டே இல்லாத ஆளு, அம்பு, படைபலமா உனக்கு இருக்கு? அடிபட்ட பாம்பு கொஞ்ச நாளைக்கு சீறத்தான் செய்யும். நீயும் அப்படியே எங்கிட்டாவது அப்ஸ்காண்ட் ஆயிடு. போலிஸும் பஜாருக்குள்ளாற பூந்து சம்பந்தமில்லாத ஆளுங்களை தூக்கிட்டு போயி, பொழைப்பைக் கெடுத்துக்கிட்டு இருக்கானுங்க
கொசு சொல்வதும் சரிதான். போலிஸ் கேஸ் ஆகட்டும். பிசினஸ் பிரச்சினை ஆகட்டும். எப்பவும் பாதிக்கப்படுவது அப்பாவிகள்தான். ‘மேட்டர்செய்தவன், எங்கோ சுகமாக இதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பான்.
வாப்பாவின் உடல் இரண்டு நாள் கழித்துதான் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. ரோந்து போய்க்கொண்டிருந்த அண்ணா சதுக்க காவல்நிலைய கான்ஸ்டபிள் ஒருவர், இயற்கை உந்துதலுக்காக யதேச்சையாக அந்த கட்டிடத்துப் பக்கம் ஒதுங்கியபோது, அங்கே பரவிய துர்நாற்றத்தை மோப்பம் பிடித்து, சந்தேகம் கொண்டு சுற்றிப் பார்த்து, பாடியை கண்டுபிடித்திருந்தார். அந்த கட்டிடத்துக்கு யாராவது கள்ளக் காதலர்கள் ‘அது’க்காக ஒதுங்கினால்தான் உண்டு. இல்லையென்றால் வாப்பா மாதிரி வெள்ளிக்கிழமை இராமசாமிகள் அயிட்டத்தைத் தள்ளிக்கொண்டு வந்தால்தான் உண்டு.
பர்மாபஜாரின் பீஷ்மர்களில் ஒருவரான வாப்பா போலிஸ் வட்டாரத்திலும் கொஞ்சம் பிரபலமானவர்தான். ஒரு காலத்தில் போலிஸின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டி தொழில் புரிந்தவர். ‘போடப்பட்டது ஒரு பிரபலம்என்று போலிசுக்கு தெரிந்ததும், சம்பவம் திருட்டு டிவிடி மாதிரி பரபரவென்று தீயாய் நகருக்குள் பரவியது. வாப்பாவின் குடும்பத்தினர் வெட்டுவோம், கொல்லுவோம் என்று கொதித்தெழுந்தனர். ஆனால் யாரை வெட்டுவது, யாரை கொல்லுவது என்கிற தெளிவுதான் அவர்களிடம் சுத்தமாக இல்லை. ஆட்களை வாரிக்கொண்டு  பஜாருக்குப் போனார்கள். வாப்பாவிடம் சாதாரணமாக முந்தைய காலங்களில் வாய்ச்சண்டை போட்டவன், போட்டி சரக்கு எடுத்தவன் என்று கண்டவனையும் பிடித்து அடித்து நொறுக்கினார்கள். எவன் போட்டிருப்பான்? மாரியா, நெடுஞ்செழியனா? செட்டியாரா? வளர்த்த கடா மார்லே பாயுறதுதாண்டா இந்த தொழிலோட தலையெழுத்து!”
வாப்பாவுக்கு ஒரு காலத்தில் தொழில்ரீதியாக நிறைய எதிரிகள் இருந்ததென்னவோ உண்மைதான். அவர்களில் ஒருவர் கூட இன்று உயிரோடு இல்லை. தெம்போடு இருந்தப்போதே பலரையும் வெட்டிச் சாய்த்தவர் அவர். போலிஸ் செல்வாக்கு வைத்து சிலரை உள்ளே வைத்தார். சிலர் உயிர்பிழைக்க தொழிலைவிட்டு ஓடியே போய்விட்டார்கள். நேற்றுவரை பஜாரில் வாப்பா ஒரு கிங் மேக்கராக இருந்து வந்தார். மாரி, நெடுஞ்செழியன் மாதிரி எத்தனையோ தொழில்காரன்களை உருவாக்கி தந்துக் கொண்டிருந்தார். உருவாக்கப்பட்டவர்களும் சில நேரம் தொழிலில் வாப்பாவோடு மோத வேண்டியிருக்கும். இது சகஜம்தான். பீஷ்மரோடு பாண்டவர்கள் மோதின மாதிரி.
மாரிதான் அதிக முறை மோதியவன். இதனாலேயே ஒன்றரை ரெண்டு வருடங்களாக இவனிடம் வாப்பா முகம் கொடுத்துக்கூட பேசுவதில்லை. குருவையே கொஞ்சம் ஓவராக கலாய்த்துவிட்ட சிஷ்யன் அவன்.
ஆயிரம் தான் வாப்பாவோடு தொழில் மோதல் இருந்தாலும், மாரி ஒரு காலத்தில் அவருடைய நம்பிக்கைக்குரிய, செல்லமான சீடன். கட்டிவாடா என்று சொன்னால் வெட்டிவருவான். திறமையான குருவி. கஸ்டம்ஸ் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிவிட்டு சரக்கை கொண்டு வருவதில் கில்லாடி. கஸ்டமர்களோடுநேக்காகவும் பேசத்தெரிந்தவன்.
காலம் காலமாக வாப்பா கடையில் சரக்கெடுக்கும் பழைய ஆட்கள், அவரிடமே சொல்லியிருக்கிறார்கள். “வாப்பா.. அந்தக் காலத்துலே நீங்களும் மாரி மாதிரி தான் இருந்தீங்க. அவருக்கும் இது தெரியும். மாரியைப் பார்க்கும் போது தன்னையே கண்ணாடியில் பார்ப்பது மாதிரி உணர்ந்தார். ரத்தம் சுண்டும் வரை அவர் உழைக்காத உழைப்பா?
எத்தனை நாடுகளுக்கு போயிருப்பார்.. எவ்வளவு மனிதர்களை சந்தித்திருப்பார்? லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பாதித்து சம்பாதித்து பணத்தைப் பார்த்தாலே அலுப்பாக ஆகிவிட்டது. ரெஸ்ட் எடுக்க வேண்டிய நேரம். ஆனாலும் தொழிலை விட முடியவில்லை. இந்தத் தொழில் கஞ்சா, அபின் மாதிரி. உள்ளே நுழைந்தவர்கள், சுலபமாக வெளியே வந்துவிட முடியாது. கவருமெண்டு ஆபிஸர் மாதிரி அம்பத்தெட்டு வயசு ஆனதுமே ரிடையர்ட் எல்லாம் ஆக முடியாது. ரிஸ்க் எடுத்து யாவாரம் செய்வது ஒரு போதை. ஒரு த்ரில். மற்றவர்களெல்லாம் முடியாது என்று சொன்ன விஷயத்தை முடித்துக் காட்டுவதில் ஒரு பெருமை. வயசு இருக்கும்வரை நேரடியாக இறங்கி செய்யலாம். முடியாத பட்சத்தில் தகுந்த ஆட்களை உருவாக்குவதில்தான் ஒரு வியாபாரி, இங்கேடான்ஆகமுடியும்.. சந்தேகமில்லாமல் வாப்பா ஒருடான்!

(தொடரும் - 4)