அனேகமாக +2 படிக்கும்போது என்று நினைக்கிறேன். தினத்தந்தியில் அந்த
விளம்பரத்தைக் கண்டேன். “கட்டழகுக் கன்னியை கயவர் நால்வர் கதறக் கதறக்
கற்பழிக்கும் கதை!” என்று கேப்ஷன் போட்டு, ஆனந்த் தியேட்டரில் வெளியான ஓர்
ஆங்கிலப் படத்தின் விளம்பரம் கால்பக்க அளவுக்கு வந்திருந்தது. கான்செப்டே புதுசாக
இருக்கிறதே என்று ‘ஏ’வலோடு, ஸ்கூல் கட்டடித்துவிட்டு நண்பர்களோடு ஆனந்த்
தியேட்டருக்கு படையெடுத்தோம். படத்தின் பெயர் மறந்துவிட்டது. பெயரா முக்கியம்?
ம்ஹூம்.
ஒன்று. கட்டழகுக் கன்னி என்று விளம்பர வாசகத்தை எழுதிய எழுத்தாளர் நெஞ்சறிந்து
பொய் சொல்லியிருந்தார். தினத்தந்தியில் ‘இளம் அழகி’ என்று செய்தியில்
குறிப்பிடப்படுபவர், போட்டோவில் பேரன் பேத்தி எடுத்த கிழவியாக இருப்பதைப் போன்ற
‘ஐரனி’ தான் குறிப்பிட்ட அந்த திரைப்படத்திலும்.
இரண்டு. ஃபாரினிலும் கூட ரேப் சீனை இலைமறை காய்மறையாக – அதாவது இளநீர்
வெட்டுவது, மானை புலி வேட்டையாடுவது மாதிரி குறியீடுகளால் உணர்த்துவது – எடுக்கும்
பழக்கம் இருக்கிறது போல. ‘பிட்டு’ எதிர்ப்பார்த்து போனவர்கள் பிட்டுக்கு மண்
சுமந்து முதுகில் சாட்டையடி வாங்கிய சிவபெருமான் ரேஞ்சுக்கு புண்பட்டு போனோம்.
ஆனாலும், அந்த விளம்பர வாசகம் மட்டும் இத்தனை வருடங்கள் கழித்தும்
நினைவடுக்குகளில் இருந்து தொலையாமல் வசீகரித்துக் கொண்டே இருக்கிறது.
நேற்று ஏதோ ஒரு சேனலில் யதேச்சையாக ஒரு மொக்கைப்படத்தைக் காண நேர்ந்தது. லேசான
‘கில்மா’ காட்சிகள் இருந்ததால், சுவாரஸ்யத்தோடு முழுப்படத்தையும் காண அமர்ந்தேன்.
என்ன ஆச்சரியம்..? ‘கட்டழகுக் கன்னியை கயவர் நால்வர் கதறக் கதறக் கற்பழிக்கும்
கதை!’ தான் ஒன்லைனர். படத்தின் பெயர் ‘பிரதி
ஞாயிறு 9.00 மணி முதல் 10.30 வரை’. படுமோசமான
மேக்கிங். அதெல்லாம் பிரச்சினையில்லை. கண்டெண்ட் ஈஸ் த கிங்.
நான்கு கயவர்கள் நெருங்கிய நண்பர்கள். ஒன்றாகவே எல்லா கெட்ட காரியத்தையும்
செய்பவர்கள். திருச்சிக்கு செல்லும்போது ஒரு ஓட்டலில் ‘அந்தமாதிரி’ ஃபிகருக்காக
வெயிட் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அதே ஓட்டலின் அடுத்த அறையில் ஒரு
கம்பெனியின் இண்டர்வ்யூ நடந்துக் கொண்டிருக்கிறது. அந்த இண்டர்வ்யூக்கு வரும் ஒரு
ஃபிகர் தவறுதலாக இவர்களது அறைக்குள் நுழைந்துவிட, கடும்போதையில் இருக்கும்
நால்வரும் சேர்ந்து...
அடுத்த காட்சியே ஒரு ட்விஸ்ட். நால்வரில் ஒருவனுக்கு திடீர் திருமணம்.
மணப்பெண்ணின் முகத்தைப் பார்க்காமலேயே தாலி கட்டிவிடுகிறான். முதலிரவில்தான்
தெரிகிறது. தான் தாலி கட்டிய பெண், அந்த திருச்சி ஓட்டலில் சின்னாபின்னப் படுத்தப்பட்டவள்.
வாழ்க்கையே நொந்து கொத்துக்கறி ஆகிறான். போட்டுத் தள்ளவும் முடியாது. புதியதாக
மணமான பெண் இறந்துவிட்டால், தாசில்தார் அலுவலகத்தில் இருந்து வந்து விசாரணை
நடத்துவார்கள். வெளியே சொல்லவும் முடியாது. ஏனெனில் கற்பழிப்புக் குற்றம்.
கவுரவமான குடும்பம். இருதலை கொல்லியாக இல்லாமல் பலதலை கொல்லியாக தினம் தினம்
மனதளவில் செத்து செத்து விளையாடுகிறான். நெருங்கிய நண்பர்கள் மற்ற மூவருக்கும்
இவளை அறிமுகப்படுத்தவும் முடியாது. அவமானம்.
இப்படியாக நாயகனின் மனக்கொந்தளிப்புகளும், அவனுக்கும் அவனது மனைவிக்குமான கேட்
& மவுஸ் விளையாட்டும்தான் படத்தின் பிற்பாதி. நாயகனாக நடித்திருப்பவர்
எல்.கே.ஜி. பையன் ரத்தக்கண்ணீர் நாடகத்தில் நடித்திருப்பதைப் போன்ற பிரமாதமான
ரியாக்ஷன்கள் தருகிறார். பான்பராக்கை வாயில் போட்டு குதப்பி, தலையில்
துப்பிவிட்டால் எப்படியிருக்குமோ அப்படியொரு ஹேர்ஸ்டைலில் கருணாஸ் நண்பர்களில்
ஒருவராக நடித்திருக்கிறார். அவரே பாடி, ஆடியிருக்கும் ஒரு குத்துப்பாட்டு ஓக்கே.
நண்பர்கள் எல்லாம் கல்யாணம் ஆகாத இளைஞர்கள் எனும்போது நாற்பதை கடந்த தொப்பை
பார்ட்டிகளை நடிக்கைவைக்கும் கலாச்சாரம் என்றுதான் நம்மூரில் ஒழியுமோ. டிவியில்
லொள்ளுசபா மாதிரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஒரு விக்கு மண்டையரும் நான்கு
இளைஞர்களில் ஒருவர். ஒரே ஒருவர் மட்டும் ஓரளவுக்கு இளைஞர் மாதிரியிருக்கிறார்.
இந்தப் படத்தையே உருப்படியான இயக்குனர் ஒருவர், கொஞ்சம் சுமாரான பட்ஜெட்டில் மீண்டும்
ரீமேக் செய்தால் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக தரமுடியும். முதல் பாதி
நகைச்சுவை, இரண்டாம் பாதி க்ரைம் ட்விஸ்ட்டுகள் என்று நம்மூரின் அச்சு அசல் க்ரைம்
ஸ்டோரி ஃபார்முலா. எந்த காலத்துக்கும் ஒர்க் அவுட் ஆகக்கூடிய சப்ஜெக்ட்.
செண்டிமெண்டுகளை அசைத்துப் பார்க்கும் துணிச்சல் என்று மொக்கைப்படமாக இருந்தாலும்
பாராட்டக்கூடிய அம்சங்கள் நிறைய இருக்கிறது.
படத்தின் பெரிய ஆறுதல் ‘கதை’ என்றால்.. ஆச்சரியம் ஹீரோயின். “சென்னைப்
பட்டினம், எல்லாம் கட்டணம்.. கையை நீட்டினா காசுமழை கொட்டணும்” என்றொரு பாடலை
பார்த்திருக்கிறீர்களா? ‘அள்ளித் தந்த வானம்’ படத்தில் அப்பாடலுக்கு பிரபுதேவாவோடு
ஆடும் குட்டிப்பெண் கல்யாணியை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இல்லையென்றால் ‘ஜெயம்’
படத்தில் சதாவின் தங்கையாக நடித்த பாப்பையாவது நினைவிருக்கும். அந்த பாப்பாதான் இப்போ பீப்பாயாக மாறி, ஐமீன் பேபி கல்யாணி குமாரி பூர்ணிதாவாக மாறி கவர்ச்சிக் கடலில் குதித்திருக்கிறார்.
காட்டன் புடவை அவருக்கு மிக பாந்தமாக இருக்கிறது. குறிப்பாக மஞ்சள் புடவை. பாடல்
காட்சிகள் சிலவற்றில் ‘பேட்’ வைத்திருப்பது தெரிகிறது. அதற்கான நிர்ப்பந்தமும்
புரிகிறது. மாநிறம், களையான முகம். ஹோம்லியான பாடிலாங்குவேஜ். விடிகாலையில்
குளித்து, ஈரத்தலையில் டவல் சுற்றி, பூசை முடித்து, தீபாரதனை தட்டோடு ஒரு காட்சியில்
எதிர்படும் பூர்ணிதாவை பார்க்கும்போது இவரையே கல்யாணம் கட்டிக்கலாமா என்கிற எண்ணம்
நம்மைப் போன்ற ஒவ்வொரு இளைஞருக்கும் தோன்றும். அவ்வளவு தெய்வீகக்களை முகத்தில்.
கொஞ்சம் குள்ளம் என்பதுதான் பிரச்சினை.
இந்தப் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனதா என்று தெரியவில்லை. டிவிடியாவது
கிடைக்குமாவென்றும் தெரியவில்லை. எப்போதாவது சன் குழும சேனல்களில் காணும்
பாக்கியம் கிடைத்தால் நீங்களும் என்னைப்போல பரமபிதாவால் ஆசிர்வதிக்கப்பட்டவரே.