30 ஜூலை, 2009

எலுமிச்சை மரம்!


உலகப்பட ஆர்வலர்களுக்காக'மாதம் ஒரு உலக சினிமா' திட்டத்தின் கீழ் வரும் ஞாயிறு அன்று திரையிடப்பட இருக்கும் திரைப்படம் லெமன் ட்ரீ. கிழக்கு டூரிங் டாக்கிஸ் பக்காவாக டெண்டு கொட்டாய் ரேஞ்சுக்கு புதுப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் பெயர்: Lemon Tree (106 நிமிடங்கள்)

நாடு : இஸ்ரேல்

இயக்குநர் : Eran Riklis

நாள் : ஆகஸ்ட் 2ம் தேதி

நேரம் : மாலை 5.30 மணி

இடம் : கிழக்கு மொட்டை மாடி
எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை
சென்னை.

இப்படம் குறித்து சாரு எதுவும் எழுதவில்லை என்பதால், எஸ்.ராமகிருஷ்ணனின் லிங்க் இங்கே!

அனுமதி இலவசம்! வாய்ப்புள்ளோர் அனைவரும் வருக!!

28 ஜூலை, 2009

ஆபாசத்துக்கு எதிரான எதிர்வினை!


ச்சே.. கடுப்பாக இருக்கிறது. எங்கே பார்த்தாலும் ஆபாசம்! ரோட்டில் நடந்தால், பஸ்ஸில் பயணித்தால், டிவியை போட்டால், பேப்பரைப் பிரித்தால், சைபர்க்ரைமை வாசித்தால்..

டென்ஷன் ஆகிவிட மாட்டாரா தோழர் வினவு?

புரட்சிகர செயல்பாடுகள் இந்த ஆபாசத்தொல்லைகளால் அமுங்கிப் போய்விடாதா? அதனால் தான் 'ஆடுறா ராமா, ஆடுறா ராமா' என்று ஆட்டித் தள்ளியிருக்கிறார்.

புதியஜனநாயகமும், புதிய கலாச்சாரமும் வாசித்து, புரட்சிப் பட்டு தீப்பொறியாய் தெறித்து, வீங்கிப்போக வேண்டிய தோழரின் புரட்சி விழிகள், ஆபாசம் குடம் குடமாக பொங்கி வழியும் அஜால் குஜால் தொடரான சைபர் கிரைமை வாசிக்கலாமா? பு.ஜ.வையும், பு.க.வையும் தோழர்கள் கூட வாசிக்காவிட்டால் வேறு யார்தான் வாசிப்பது? இல்லையேல் அஜால் குஜால் தொடரைத்தான் வாசிப்பேன், வாசித்துவிட்டு கண்டனப் பதிவு போடுவேன் என்று தோழர்கள் சங்கல்பம் கட்டிக் கொண்டிருந்தால், புரட்சியை வேறு யார் கட்டமைப்பது?

தோழர்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன். “நான் அவ்வளவு ஒர்த் இல்லே தோழர்!”

ஆபாசத்தைக் கண்டிக்கும் தோழர் வினவின் புனிதப்பதிவில் கண்ட சில வாசகங்கள் மெய்சிலிர்க்க வைத்தது. உதாரணத்துக்கு ”நீலப்படத்தில் எல்லாம் அவுத்துப் போட்டு சட்டுனு ஜோலியை முடிப்பதால் கிக் இல்லையாம். கிக் குறித்து வாத்ஸ்யானர் கூட இப்படி யோசித்திருக்க முடியாது. படக்கதையில் சபீதா முதல் ஷாட்டில் முழுசாக முக்காடு போட்டுத்தான் அறிமுகமாம். அப்புறம் உணர்ச்சிகளின் ஏற்றத்தாழ்வுகளுக்கேற்ப உடையும் குறையுமாம். நீலப்படத்தில் காமார பார்க்காத கோணங்களையும் வாளிப்புகளையும் இந்த படத்தில் ஓவியர் த்தரூபமாக வரைவதால் இக்கதை பல்லாயிரம் ஹிட்ஸாக வெற்றி பெற்றதாம்.” தோழர்களே! இதையே தானய்யா நானும் எழுதினேன். நான் எழுதினால் ஆபாசம். நீங்கள் எழுதினால் புரட்சி புண்ணாக்கு சிந்தனைகளோ?

தோழர் வினவு என்னவோ புற்றெடுத்து புரட்சித்தவம் செய்துகொண்டிருந்தது போலவும், ஆபாச சைபர் கிரைம் லக்கிலுக்கு மேனகையாய் வந்து புரட்சித்தவத்தை கலைத்துவிட்டதைப் போலவும் கழிசடைத் தோழர்கள் சிலர், வினவு தளத்தை கக்கூசுப் பொட்டியாக நினைத்து பின்னூட்டங்களை தனிநபர் தாக்குதல்களாக கழிந்து கொண்டிருக்கிறார்கள்.

தனிப்பட்ட முறையில் பேசிய விவரங்களை பொதுவில் வைப்பது எனக்கு ஏற்பில்லாத ஒன்று. இருந்தாலும் சில நேரங்களில் வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. லக்கியை தனிப்பட்ட முறையில் தாக்கும் விதமான போக்கு வினவு தளத்துக்கு இல்லையென்று தோழர் வினவு தொலைபேசி உரையாடலில் வாக்களித்திருந்த போதிலும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து, மோசமான வார்த்தைகளில் சாடும் தனிநபர் பின்னூட்டங்களை வெளியிட்டுவிட்டு, சம்பிரதாயத்துக்கு ஆட்சேபித்து மகிழும் போக்கு புரட்சியோ புரட்சி!

தோழர்களின் பார்வையில் ஆபாச எழுத்தாளனாக மாறிவிட்ட எனக்கிருக்கும் அறமும், நேர்மையும், தார்மீகமும், நாகரிகமும் கூட புரட்சியைக் கட்டமைக்க மார்க்சியப் போர்வையில் மாங்காய் அடித்துக் கொண்டிருக்கும் தோழர்களிடம் இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம். எப்படியிருப்பினும் தோழர்களின் தியாகம், உழைப்பு போன்றவைக்கு என் நெஞ்சில் என்றுமே நல்லிடம் உண்டு!

* - * - * - * - * - * - * - * - * - *

நண்பர் பரிசல்காரன் சில நாட்களாக கவிதைகளாக எழுதித்தள்ளிக் கொண்டிருக்கிறார். ஓரிரண்டு கவிதை மாதிரிதான் இருக்கிறது. தினத்தந்தியில் வரும் சிங்கிள் காலம் மேட்டரை மடக்கி, மடக்கி எழுதிவிட்டால் கவிதையாகி விடும் என்ற சூட்சுமம் இப்போதுதான் விளங்குகிறது. ஆனால் அனுஜன்யா போன்றவர்கள் பரிசலின் கவிதைகளுக்கு(?) போடும் பின்னூட்டம்.. சூச்சூ.. மாரி... இதுமாதிரி எல்லாம் ஓவராக கும்மியடித்தால், ஏன் முந்தாநாள் மழையில் முளைத்த காளான்கள் எல்லாம் பிரபல/மூத்த பதிவர்கள் மீது ஒண்ணுக்கு அடிக்கமாட்டார்கள்?

நல்லா இருந்தா நல்லா இருக்குன்னு சொல்லுங்கப்பூ. சும்மானாக்காச்சும் தெரிந்தவர் என்பதால் ஷேக்ஸ்பியர், வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் ரேஞ்சுக்கு புகழ்ந்து பின்னூட்டம் போட்டால் திருவிழாவில் காணாமல் போன குழந்தைகள் மாதிரி திரியும் புதுசுகள் வயிறெரிவது நியாயம்தானே?

பரிசல் மிக நல்ல உரையாடல் ஆசிரியன். அவர் கவிதை, கிவிதை என்று கெட்டு சீரழிந்துப்போய் அருமையான சிறுகதைகளையும், கட்டுரைகளையும் கவிதையாக்கி கொலைசெய்வது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று!

* - * - * - * - * - * - * - * - * - *

சர்ச்சை நாயகன் நர்சிம் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்று எட்டிப்பார்த்தேன். 'என்'ணங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார். அரசியல், பதிவுலகம், இத்யாதிகள் கலந்த கலக்கல் காக்டெயில். திரட்டிகளில் இருந்து விலகியபிறகு அரசியல் கூட எழுத ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது. ரொம்ப தைரியம்தான்!

* - * - * - * - * - * - * - * - * - *

அவ்வப்போது திட்டரில் (இதை ட்விட்டர் என்றும் சொல்கிறார்கள்) உலவ ஆரம்பித்திருக்கிறேன். வாழைப்பள ப்ளேவர் குறித்து நான் போட்ட ஒரு திட்டருக்கு, டோண்டு சாரின் பதில் திட்டரைக் கண்டு பேஜாராகிப் போனேன். அவருக்கு வயது அறுபத்து நான்கா, பதினான்கா என்ற சந்தேகம் வந்துவிட்டது. திட்டர் நேரத்தை தின்கிறது. ஆனாலும் டீக்கடையில் கூடி வெட்டியாகப் பேசுவதைப் போல சுவாரஸ்யமாக தானிருக்கிறது. 140 எழுத்துகளில் திட்டுவதற்கு வசதியான களமாக இருப்பதால் நான் திட்டர் என்றே சொல்கிறேன்.

* - * - * - * - * - * - * - * - * - *

வால்பையனின் வாய்க்குள் - சர்க்கரை கூட பத்தாது - சர்க்கரை கொடவுனையே கொட்டலாம். போனவார ஞாயிறு மதிய தூக்கத்தை போன் போட்டு கெடுத்தவர், “என்ன மாம்ஸூ. நீங்களும் பரிசல் மாதிரி ஆயிட்டீங்க. ஒரு சண்டை சச்சரவையே காணோம்!” என்றார். இதோ தோழர்கள் கும்மாளம் அடித்துவிட்டார்கள்.

* - * - * - * - * - * - * - * - * - *

இன்னும் தலைப்புக்கே வராமல், மொக்கை போட்டுக் கொண்டிருப்பதாக நினைப்பவர்களுக்கு...

ஆபாசத்துக்கு எதிரான எதிர்வினை ஒன்று!

27 ஜூலை, 2009

லக்கிலுக்கும், ஆபாசமும்!


இணையத்தில் சைபர்கிரைம் பற்றி தேடு பொறியில் வலைவிரித்தால் இலட்சக்கணக்கில் பக்கங்களும் படங்களும் கிடைக்கும். தமிழகத்தில் நடக்கும் குற்றங்களில் பீரோ புல்லிங், போலீசு-இன்கம்டாக்ஸ் வேடத்தில் வழிப்பறி, காக்காய் எச்சத்தை போட்டு குனியவைத்து பையை பறிப்பது, 500 நூறூரூபாய் தாளை போட்டு உங்களுடையதா என கவனத்தை திசைதிருப்பி வங்கியில் எடுத்த பணத்தை அபேஸ் பண்ணுவது, கவரிங் நகை மோசடி, ரியல் எஸ்டேட் மோசடி, ஓடும் லாரியில் திருவது என எண்ணற்ற திருட்டு சாதனைகள் உள்ளன. இத்துடன் விபச்சாரம் என்பதும் செல்போன், மாருதி கார் வரை விரிந்திருக்கிறது. மற்றபடி செல்காமராவில் பாலியல் மோசடிகள் என்று தொழில்நுட்பம் உதவிய வகையில் வக்கிரங்கள் வகைதொகையில்லாமல் வளர்ந்திருக்கின்றன.

ஆக மண்ணில் நடக்கும் சாதாக் குற்றங்கள், பாலியல் வக்கிரங்களை மானிடரின் இணையத்தில் செய்தால் அதற்கென்று தனி மவுசா வந்து விடப்போகிறது? அப்படி ஒரு மவுசை உருவாக்குவதற்காக குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகை, பதிவுலகில் நொறுக்குத்தீனி எழுத்தில் கொடிகொட்டிப்பறக்கும் லக்கிலுக்கை, யுவகிருஷ்ணா என்ற பெயரில் மவுசின் உதவியால் சைபர் கிரைம் என்ற தொடரை எழுதப் பணித்திருக்கிறது. இதற்கு பதிவுலகில் பல அப்பாவிகள் வாழ்த்து வேறு தெரிவித்திருந்தார்கள். எல்லாம் நம்ம லக்கி சுஜாதா, சாருநிவேதிதா மாதிரி ஆகட்டும் என்ற நல்லெண்ணம்தான். நம்மைப் பொறுத்தவரை இதற்கு அனுதாபம் கூட தெரிவிப்பதற்கு லாயக்கானதில்லை.

முதல் இரண்டு தொடரை படிக்கும்போதே லக்கியை கவனிக்க வேண்டுமென்று நினைத்து அப்புறம் சரி விட்டுத் தொலைப்போம் என்று மறந்த நேரத்தில் தனது பதினோராவது பாகத்தில் மீண்டும் பலான விசயத்தை லக்கி தொட்டிருப்பதால் அதைப் பற்றி எழுதவில்லையென்றால் அந்த மகரகுழத்தாள் கூட மன்னிக்கமாட்டாள்!

லக்கியை வைத்து சைபர் கிரைமை எழுதுவதற்கு குமுதம் ஆசிரியர்களும், பின்னாளில் இந்த தொடரை நூலாக வெளியிட வாய்ப்புள்ள பதிப்பக ஓனரும் பாடத்திட்டத்தை தயார் செய்திருப்பார்கள் போலும். அதன்படி செக்ஸ் மேட்டரை தூக்கலாக காண்பித்து அதற்கு ஒரு ரிலீஃபாக பொருளாதார மோசடிகளையும் வைத்து எழுத தீர்மானித்திருப்பார்கள் என்று தெரிகிறது. இரண்டு தொடர்களுக்கு பின்னர் நைஜீரியா மோசடிகள் எல்லாம் எழுதப்பட்டாலும் அது வாசகர்களிடம் எடுபடவில்லையோ தெரியாது. பின்னே இலட்சத்திலும் கோடியிலும் நைஜீரியா பிளேடு கும்பலிடம் ஏமாறுவதற்கு கே.ஆர்.அதியமானது நண்பர்களாக இருக்கும் முதலாளிகளுக்குத்தானே வழியிருக்கிறது. எட்டு ரூபாய் ரிப்போர்ட்டரை வாங்கி மேயும் சாதரணர்களுக்கு அந்த போர்ஜரி வேலைகள் அவ்வளவு ருசிக்காது என்பதே அவர்களது பொருளாதார யதார்த்தம்.

ஆனால் இந்த சாதரணர்களை சுண்டி இழுக்கும் மகிமை சிட்டுகுருவி லேகிய சமாச்சாரங்களில்தானே இருக்கிறது? முதல் தொடரில் குற்றவாளிகள் என்றால் பிளேடு பக்கிரி போன்று இருக்கத் தேவையில்லை கோட்டு சூட்டு போட்டுக்கூட குற்றங்கள் செய்வார்கள் என்று ஆரம்பித்து அப்புறம் இணையத்தில் தொழில்நுட்பத்தின் உதவியால் நடக்கும் மோசடிகளைப் பற்றி ஒரு பில்டப் கொடுத்துவிட்டு பிறகு சரியாக ‘மேட்டருக்கு’ வருகிறார் லக்கி.
திரிஷா குளியலறை சி.டி முதல் விசயம்.

ஒரு வரியில் சொல்ல வேண்டிய விசயத்தை முழு நீள நீலப்படமாக வருணிக்கிறார் லக்கி. வந்தாள், ஆடையைத் துறந்தாள், காமரா அலைகிறது என்று அந்த பொழிப்புரை படிப்பவர்களின் நாக்கில் அஜினோமோட்டோ கணக்காய் எச்சிலை ஊறவைத்து அப்புறம் திரிஷாவின் அம்மாவின் மறுப்பு அதுவும் அந்த வருண்ணைகளுக்கு பொருத்தமாய் திரிஷா அப்படி ஆடைகளை வீசமாட்டார், பாத்டப்பில்தான் குளிப்பார், அவரது பாடி லாங்குவேஜ் எனக்கு தெரியும் என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சங்கதிகளை கூறி எல்லாம் முடிந்த பிறகு இந்த சைபர் குற்றங்களை தடை செய்யமுடியாது, மார்ஃபிங் தொழில் நுட்பத்தில் தலையை வெட்டி மாற்றலாம் என எல்லாம் அட்சுரசுத்தமாய் காயத்ரி மந்திரம் போல ஓதப்படுகிறது. அப்புறம் இந்த சி.டி, மொபைல் வழியாக எப்படியெல்லாம் பரவியது என விளக்கி விட்டு அடுத்த மேட்டருக்கு போகிறார்.

அது சிம்பு, நயன்தாராவின் உதடைக் கவ்விய படமாம். அதையும் விலாவாரியாக விவரித்துவிட்டு நயன்தாரா இதைப் பற்றி சைபர் கிரைமில் புகார் தெரிவிக்கவில்லை என்று வருத்தப்பட்டு முடித்து விட்டு மச்சான் சி.டிக்கு வருகிறார்.

இதில் நமீதா உடலமைப்பு கொண்ட பெண் இரு இளைஞர்களிடம் உறவு கொள்வது அரைமணி நேரம் ஓடுகிறதாம். நமீதா உடலமைப்பு ரசிகர்களுக்கு மனப்பாடமென்பதால் இந்த பெண்ணை நமீதா என்றே நம்புவார்கள் என கண்டுபிடிக்கிறார் லக்கி. இதைப்படித்து விட்டு உசிலம்பட்டியிலோ, மடிப்பாக்கத்திலோ மச்சான் சி.டி தேடி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் படையெடுத்திருப்பார்கள் என்பது நிச்சயம். இத்தனைக்கும் பிறகும் இந்த படங்களை வெறிப்பதற்கு நாக்கை தொங்கப்போட்டு அலையும் ஆண்களின் வக்கிரத்தை மருந்துக்கு கூட லக்கி கண்டிக்கவில்லை. அவரது நோக்கமே இவற்றை அறியாதவருக்கு அறிமுகம் செய்வதுதான், போர்னோ கிரைமை அறிமுகம் செய்கிறோம் என்ற பெயரில் ஆவலை உண்டுபண்ணுவதுதான் எனும்போது என்ன செய்வது? மற்றபடி இதெல்லம் சைபர் குற்றங்கள் என அவர் பொத்தாம் பொதுவாக கண்டிக்காமல் இல்லை. தலைப்பில் ஒழுக்கம் குறித்த எச்சரிக்கை, உடலில் ஒழுக்க மீறலை ஆவலுடன் கற்றுக் கொடுக்கும் சாமர்த்தியம். லக்கயின் இரட்டை வேடம் நன்றாகத்தான் பொருந்துகிறது!

இரண்டாவது தொடரில் செக்ஸ் ஆசைக்காக அலையும் மேட்டுகுடி ஆன்டிகள் என்று தூண்டில்போட்டு பணத்தை கறக்கும் கும்பலைப் பற்றி ஸ்டெப் பை ஸ்டெப்பாக விவரித்து வாசகர்களை எச்சரிக்கிறார். படிப்பவர்கள் இது போன்ற தூண்டில் புழுக்களிடம் சிக்கக்கூடாது என்ற நல்லெண்ணம்தான். ஐயா லக்கி அவர்களே இந்த மேட்டுக்குடி நடுத்தர வயது பெண்களை பிரச்சினை இல்லாமல் அனுபவிக்கத் துடிக்கும் ஆண் மனதின் அலைபாயும் எண்ணங்களை பற்றி இலேசாகக் கூட இடித்துரைக்க தோணவில்லையே ஏன்? பாலியல் ஒழுக்கத்தில் தனிப்பட்ட வாழ்வில் கற்பையும், பொதுவாழ்வில் விபச்சாரத்தையும் போற்றும் பார்ப்பனியத்தின் போலித்தனமான சமூக மதிப்பீடுகளை வைத்து காமத்தை இரகசிய உலகில் முடிவில்லாமல் ருசிக்க நினைக்கும் ஆண்களைப் பற்றியும் அவர்களது இரட்டை வேடத்தைப் பற்றியும் நோக்கினால்தானே இதில் பார்க்கும் குற்றவாளிகளை குறைந்த பட்சம் தமது பலவீனங்களை பரிசீலிக்க வைக்க முடியும்.

அதனால்தான் சொல்கிறோம் இந்த தொடர் சமூக ஆய்வல்ல, அதன் பெயரில் அறிமுகப்படுத்தப்படும் போர்னோதான் இதன் ஆன்மா. படிப்பவர்களின் மலிவான இச்சையை தொட்டுச் சொறிந்து பத்திரிகையின் எண்ணிக்கையை தக்கவைத்துக் கொள்ளும் சீப்பான தந்திரம்தான் இந்த சைபர் கிரைம்.

இதன்பிறகு பொருளாதார மோசடிகள் பக்கம் திரும்பிய லக்கி திரும்பிய வேகத்திலேயே யூ டார்ன் அடித்து மீண்டும் போர்னோ பக்கம் வந்தரா, வரவழைக்கப்பட்டாரா என்பது தெரியாது. ஆனால் லக்கி என்ற சூப்பர் மார்க்கெட்டில் எது வேண்டுமென்று கோரினாலும் அந்த சூப்பர் மார்க்கட் திருப்தி செய்யும் என்ற உண்மை நமக்கு தெரியவேண்டும்.

பதினோராவது தொடரில் சபிதா பாபியின் படக்கதையை படம் பார்ப்பவர்களுக்குக் கூட போரடிக்காத விதத்தில் எழுதுகிறார் லக்கி. பாபி என்றால் இந்தியில் அண்ணியாம். இந்த இந்தி அண்ணி செக்சுக்காக ஏங்கி வீட்டுக்கு வரும் சேல்ஸ்மேன் முதலான இளைஞர்களை அனுபவிக்கும் உணர்ச்சிப் போராட்டத்தை காமிக்ஸ் படக்கதையாக வெளியிடப்பட்டு இந்தியாவில் பெரும் வெற்றி பெற்றதாம். உயிருள்ள போர்னோ படங்கள் மவுசைக் கிளிக்கினால் கொட்டும் நெட்டில் இந்த உயிரற்ற ஓவியங்கள் வெற்றி பெற்றது எப்படி என்ற ‘சமூக ஆய்வை’ லக்கி அருவருப்பின்றி விளக்குகிறார்.

நீலப்படத்தில் எல்லாம் அவுத்துப் போட்டு சட்டுனு ஜோலியை முடிப்பதால் கிக் இல்லையாம். கிக் குறித்து வாத்ஸ்யானர் கூட இப்படி யோசித்திருக்க முடியாது. படக்கதையில் சபீதா முதல் ஷாட்டில் முழுசாக முக்காடு போட்டுத்தான் அறிமுகமாம். அப்புறம் உணர்ச்சிகளின் ஏற்றத்தாழ்வுகளுக்கேற்ப உடையும் குறையுமாம். நீலப்படத்தில் காமார பார்க்காத கோணங்களையும் வாளிப்புகளையும் இந்த படத்தில் ஓவியர் த்தரூபமாக வரைவதால் இக்கதை பல்லாயிரம் ஹிட்ஸாக வெற்றி பெற்றதாம்.

போர்னோ தளங்கள் இந்தியாவில் இயங்குவதற்கு தடை இருப்பதால் வெளிநாடுகளில் வைத்து நடத்தப்படுகிறதாம். டாக்டர் பிரகாஷ் புழலில் இருந்தாலும் அவரது படங்கள் இன்னும் உயிர்வாழ்கிறது என ஒரு போனஸ் செய்தியையும் லக்கி வாசகருக்கு தருகிறார். அப்போதுதானே பிரகாஷ் தளத்தின் படங்கள வாசகர்கள் ஆவலுடன் தேட முடியும். பிறகு சபிதா தளம் தடை செய்யப்பட்ட பிறகு அதன் உரிமையாளர் வெளிஉலகிற்கு தெரியவர என எல்லா சங்கதிகளையும் மர்மங்களை கட்டவிழ்க்கும் சுவாரசியத்துடன் தருகிறார். ஆகா பாலுணர்வு காமிக்ஸ் படக்கதை கூட கிக்கைத் தரும் போல என இந்நேரம் லக்கியின் புண்ணியத்தில் பல நூறு கைகள் கூகிலில் சபிதாபாபியைத் தேடிக் கொண்டிருக்கும். அந்தக் காலத்தில் சாண்டில்யனின் வாழத்தண்டு தொடை கதாநாயகிகளை வேறு வழியின்றி ருசித்த பெரிசுகளைப்போல இன்றைய இளசுகளுக்கு சபிதா அண்ணி. இரண்டும் ஓவியம்தான் என்றாலும் ரசனை மாறவேயில்லையே.

மற்றபடி தானும் போர்னோவை கண்டிப்பதாக பதிவு செய்யும் சடங்கிற்காக அரபு நாடுகளில் போர்னோ சைட்டுக்களை தடை செய்திருப்பதை ஆச்சரியத்துடன் முன்மாதிரியாக குறிப்பிடுகிறார். ஆனால் மக்களுக்கு மட்டும் காமத்தடை விதித்த ஷேக்குகளின் மாளிகைககளில் உள்ள டிஷ் ஆண்டாடனாக்கள் டிரிபிள் எக்ஸ் சானல்களை 24 மணிநேரமும் வழிய விட்டுக்கொண்டுதானே இருக்கிறது. இதே அரபுஷேக்குகள்தான் தமது பணத்திமிரினால் சிறுமிகளை மணப்பது முதல் எல்லா வக்கிரங்களையும் அரங்கேற்றுவதில் முன்னணி வகிக்கிறார்கள். பணக்காரர்களுக்கு வக்கிரத்தின் எல்லா வகையும் அனுபவிக்கலாம், ஏழைகள் செய்தால் அவை குற்றமென்பதுதான் அரபு நாடுகளின் விதிமுறை. இதையும் தவறாக குறிப்பிடும் அளவுக்கு லக்கியின் சமூக அறிவு போர்னோ படத்திற்கு மேலே வரமாட்டேன் என்கிறது.

இப்படி இன்றைய இளையோர் உலகம் இன்பத்தில் நீடித்திருப்பதைத் தவிர வேறு நோக்கமில்லை என்று இந்த தொடரைப் பார்த்து இன்னும் என்னவெல்லாம் அறிமுகம் செய்வார் என்று காத்திருக்கும் இதயங்களை வைத்து ரிப்போர்ட்டரின் பிரதிகள் சில ஆயிரம் கூடியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதற்கிணையாக ஜூனியர் விகடனில் நிருபரின் டயரிக் குறிப்பு என்ற பெயரில் சினிமா போர்னோ கிசுகிசு நடையில் பிளந்து கட்டிக் கொண்டிருக்கிறது. இப்படி நீயா, நானா என்ற போட்டியில் லக்கி ரிப்போர்ட்டரின் பங்கை வெட்கமின்றி நிறைவேற்றி வருகிறார்.
நண்பர்களே, பாலியல் மோசடிகள் அன்றாடம் கொலைகளிலும், அவலத்திலும் நடக்கும் நாட்டில் இந்த பிரச்சினைகளைப் பேசுவோர் உண்மையில் எதைப் பற்றி பேச வேண்டும்? கள்ள உறவுக்காக ஆத்திரத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணையோ, ஆணையோ கொலை செய்வது கூட பிரச்சினை இல்லை. அதை கள்ளக்காதலுக்காக கொலை என்ற தலைப்பில் கதையை கொலை செய்ய முடியாத கோழை கள்ளக்காதல் ஆர்வலர்களிடம் கேவலமாக படிக்க வைக்கிறார்களே அந்த தினசரிகள்தான் குற்றவாளிகள். சினிமாவில் சதையைக் காட்டி, தொலைக்காட்சியில் கள்ளக்காதல் ஒன்றும் கடினமல்ல என்று நெடுந்தொடரில் கற்பித்து, இப்படி ஊடகங்கள் எல்லாம் இயல்பான காமத்தை பிரம்மாண்டமாக வெறியூட்டி அலைய வைக்கின்றன.

இதுவே மேற்கத்திய நாடுகளில் இன்னும் பல்வேறு வகைகளில் நடந்து வருகிறது. ஆக பாலியல் பிரச்சினை பற்றி அதில் கணத்தில் தடுமாறி பிரச்சினைகளை வரவழைத்துக் கொள்ளும் மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கு ஒரு நியாயமான முயற்சி என்பதே இந்த ஊடகங்களை அம்பலப்படுத்துவதில்தான் ஆரம்பிக்க முடியும். மாறாக அந்த கயமைத்தனத்தில் இணைந்து கொண்டு சைபர் கிரைம் என்ற பெயரில் அதைப் பற்றி தெரியாதவர்களுக்கு இணைய போர்னோக்களை கா(ர்)ம சிரத்தையுடன் கற்றுக் கொடுக்கும் வேலையைத்தான் லக்கி, ரிப்போர்ட்டரின் ஆணைக்கிணங்க ஊதியம் வாங்கிக்கொண்டு செய்கிறார். பெண்ணுடலை குதறி தின்னும் பண்டமாக கருதும் ஆணின் மனசாட்சியை இந்த தொடர் ஒருபோதும் உலுக்கப் போவதில்லை. மாறாக அப்படி வெறியுடன் தின்னுவதற்கு நூற்றுக்கணக்கான புதிய முறைகளை லக்கி பக்திப் பரவசத்துடன் அறிமுகம் செய்கிறார்.

சும்மா வெட்கப்படாதீங்க சார் என்று நடிகைகளின் அங்கங்களை தெரிவிக்கும் படங்கள் லக்கியின் பிரபலத்திற்கு ஒரு முக்கியமான காரணமென்றால் யாராவது அதை மறுக்க முடியுமா? அதை வெறும் நகைச்சுவை என்றே பலரும் கருதுகிறார்கள். இப்போது ரிப்போர்ட்டரில் லக்கியின் கைங்கரியத்தை பார்க்கும் போது இனிமேலும் அதை வெறும் நகைச்சுவை என்று கருத முடியாது. ஆனால் லக்கி அவர்களே! இப்படி ஒரு பெண்ணுடலை ஆணின் வக்கிரத்திற்கு இரையாக்குவதன் மூலம் நீங்கள் முழு பெண்ணினத்தையும் கேவலப்படுத்துகிறீர்கள். உங்களுக்கு தமிழ்மொழி எனும் அழகான பெண் குழந்தை பிறந்ததற்கு பல வாசகிகள் பாசத்துடன் அண்ணாவிற்கு வாழ்த்து தெரிவித்ததையும் பதிவு செய்திருக்கிறீர்கள். அத்தகைய பெண்களுக்கு நீங்கள் எழுதும் போர்னோ கிரைமை சமர்ப்பணம் செய்யுங்கள் லக்கி! SHAME ON YOU !!

(நன்றி : வினவு.காம்)




ஒரு வாழ்த்து வெண்பா!

(தன் வலைப்பதிவில் கவர்ச்சிப் படங்களாக இடும் பதிவர் லக்கிலுக், பலான புத்தகங்களின் மார்க்கெட் விழுந்துவிட்டது என்று டிவிட்டரில் கவலைப்பட்டபோது பதிலாக எழுதியது)

படம்போட்டு மனதைப் பிடித்தார் இவர்
இடம்தேடி தேனியாய் மொய்த்தார்பலர் - தடம்
புரண்டு தன்மார்க்கெட் தேயுதே லக்கியாலென
மிரண்டுஅழு தாரேசரோசா தேவி

-இவன்சிவன்
(July 22, 2009)

யோகா டீச்சர்!


’யோகா டீச்சர்!’ - மலையாளப் பிட்டு படத்தின் டைட்டில் மாதிரி இருக்குதில்லே?

நான்கைந்து வருஷங்களுக்கு முன்னால் நடிகர் நாகார்ஜூனனின் மகன் நாகசைதன்யாவுக்கு யோகா கற்றுக் கொடுக்க ஒரு டீச்சர் பெங்களூரில் இருந்து வந்தார். யோகா டீச்சர் என்றால் சந்நியாசினி மாதிரி மஞ்சள், காவி ட்ரெஸ்ஸில் அழுது வடிந்துகொண்டு இல்லாமல் ப்ரெஷ்ஷாக மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருந்தார். ஃபிகரும் சூப்பராக இருக்க ஸ்டூடண்டின் அப்பா ரொம்ப இம்ப்ரஸ் ஆகிவிட்டார். விளைவு அவர் நடித்த ‘சூப்பர்’ படத்தில் துண்டு வேடத்தில் துண்டு கட்டிக்கொண்டு அனுஷ்கா அறிமுகம் ஆனார்.

ஏனோ அனுஷ்காவின் கவர்ச்சி அப்போது யாரையும் கவரவில்லை. அடுத்து ஒரு படம் இழுத்துப் போர்த்துக் கொண்டு நடித்தார். நடிப்பு சுமாராக இருந்ததாக பேசிக்கொண்டார்கள். இதே நேரத்தில் மெகாஸ்டாரின் ஸ்டாலின் படத்தின் ஒரு சூப்பர் டபுக்கு டபான் டேன்ஸ் ஆட அனுஷ்காவுக்கு வாய்ப்பு வந்தது. அம்மணி சூப்பர்ஹிட் ஆனார். அடுத்து ரவிதேஜாவோடு நடித்த விக்ரமகடு அனுஷ்காவின் சதைக்காட்சிக்காகவே சக்கைப்போடு போட்டது.

தென்னிந்தியாவுக்கு வெற்றிகரமான க்ளாமர் குயின் ரெடி! இன்றைய தெலுங்கு பில்லா வரை அனுஷ்காவின் கவர்ச்சிக்கு எல்லோரும் அடிமை. மாதவனின் ‘ரெண்டு’ மூலமாக தமிழுக்கும் வந்தார். சிலுக்கு ஸ்மிதா, டிஸ்கோ சாந்திகளை மிஞ்சும் வகையில் அம்மணி ‘திறமை’ காட்டியும், அப்போது மாதவனுக்கு இருந்த ராசி படத்தை பப்படமாக்கி விட்டது. திரும்ப தமிழுக்கு வரக்கூடிய வாய்ப்பே அவருக்கு அதனால் அமையாமல் போய்விட்டது.

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக இரட்டை வேடத்தில் நடிக்க இவரை கோடிராமகிருஷ்ணா ஒப்பந்தம் செய்திருந்தார். “அந்தப் பொண்ணையா நடிக்க வெக்கிறீங்க? மூஞ்சியிலே ரியாக்‌ஷனே வராதே?” என்று இயக்குனரை பலரும் பயமுறுத்தினார்கள். மிகக்குறைந்த சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டு அனுஷ்கா நடித்தார். கிளாமர் குயினான அனுஷ்கா அப்படத்தில் விஜயசாந்தி கெத்துக்கு ஃபிட் ஆகும் கேரக்டரில் சிரமப்பட்டு நடிக்க வேண்டியதாயிற்று. நன்றாக வந்த டேக்குகளையே திரும்ப திரும்ப எடுக்கும் ராமகிருஷ்ணா அனுஷ்காவின் பெண்டினை நிமிர்த்தினார்.

பல தடைகளுக்குப் பிறகு வெளிவந்த ‘அருந்ததீ!’ இன்று தென்னிந்தியாவின் நெ.1 நடிகையாக அனுஷ்காவை மாற்றியிருக்கிறது. தெலுங்கு பட கலர்ஃபுல் வசூல் ரெகார்டுகளை அனாயசமாக ஒரு ஹீரோயின் ஓரியண்டட் படம் உடைத்து தெரித்திருக்கிறது. கால்ஷீட் டயரி அடுத்த ரெண்டு வருடத்துக்கு ஃபுல். தமிழில் டப் செய்யப்பட்டும் சக்கைப்போடு போட, இப்போது தமிழ், தெலுங்கு இருமொழிகளிலுமே இவர் தான் டாப். அம்மணியின் சம்பளம் இப்போது அருந்ததிக்கு வாங்கியதை விட இருபது மடங்கு என்று ஹைதராபாத்வாலாக்கள் கிசுகிசுக்கிறார்கள். அதாவது கிட்டத்தட்ட ஒன் சி.

அழகான ஹீரோயின்களுக்கு குரல் எப்போதுமே திருஷ்டி படிகாரம். ஆனால் அனுஷ்கா பேசினால் உண்மையிலேயே குயில் கூவுவது போல இருக்கும். சூப்பர் மற்றும் ரெண்டு படங்களில் சொந்தக்குரலில் பாடியிருக்கிறார் என்பது நிறைய பேருக்கு தெரியாது.

படப்பிடிப்பு இடைவேளைகளில் கொஞ்ச நேரம் கிடைத்ததுமே யோகா செய்ய கிளம்பிவிடுவார் இந்த யோகா டீச்சர். சும்மா இருக்கும் நேரங்களில் அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கு இன்னமும் யோகா சொல்லிக் கொடுக்கிறாராம். வித்தியாசமான ஹாபி ஒன்று இவருக்கு உண்டு. இயற்கை சீற்றங்கள் குறித்த படங்களையும், செய்தித் துண்டுகளையும் சேகரித்து ஆல்பம் உருவாக்குவது.

நிறையபேர் நினைப்பது போல இவர் மும்பை இறக்குமதியல்ல. கர்நாடகாவின் மங்களூரில் பிறந்தவர். துளு தாய்மொழி. முழுப்பெயர் அனுஷ்கா ஷெட்டி. பார்ப்பதற்கு ஸ்வீட்டாக இருப்பதால் இவருக்கு ஸ்வீட்டி என்று செல்லப்பெயர் உண்டு. வயசு என்ன இருக்கும் என்று யாராலேயாவது யூகிக்க முடிகிறதா? 1981ல் பிறந்தவர். கணக்குப் பண்ண தெரிந்தவர்கள் கணக்குப் பண்ணிக் கொள்ளுங்கள். இவருடைய யோகா குரு பரத் தாக்கூர், பூமிகாவின் ஹஸ்பெண்ட்.

அனுஷ்கா மாதிரி யோகாடீச்சர் சென்னையில் இருந்தால் சொல்லுங்கள். யோகாவும், மற்றவையும் கற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறது!

26 ஜூலை, 2009

புதுப்பேட்டை!


செல்வராகவன் இயக்கிய படமல்ல. சென்னையின் டெட்ராய்ட். அண்ணாசாலையிலிருந்து தாராப்பூர் டவர்ஸ் அருகே லெஃப்ட் அடித்து நேராக போனால் சிந்தாதிரிப்பேட்டை. பாலத்தில் இடதுபக்கமாக திரும்பினால் புதுப்பேட்டை. இருசக்கர வாகன நட்டு போல்ட்டிலிருந்து மெர்சிடிஸ் பென்ஸ் காரின் ஸ்பேர் பார்ட்ஸ் வரை கிடைக்குமிடம்.

கிட்டத்தட்ட அறுபதாண்டுகள் பழமை வாய்ந்த மோட்டார் மார்க்கெட் இது என்கிறார்கள். ஆயிரம் கடைகள் இருக்கிறது. எல்லாக் கடைகளுமே இரும்புக் குப்பைகளால் நிரப்பப் பட்டிருக்கிறது. இந்த பகுதிக்கு ‘ஆட்டோ நகர்' என்று பெயர் வைக்க வேண்டுமென்பது இப்பகுதி வியாபாரிகளின் நீண்டநாள் கோரிக்கை. கடை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் ‘பாய்'கள். ஆங்காங்கே ‘இன்ஷா அல்லா' அதிகமாக கேட்கமுடிகிறது.

பொதுவாக இந்த இரண்டு பத்திகளையும் வாசிப்பவர்களுக்கு விவகாரமாக எதுவும் தெரிந்திருக்காது. பொல்லாதவன் படத்தில் தனுஷின் பைக் தொலைந்துவிடும் அல்லவா? உடனே தனுஷ் போய் தேடும் இடம் புதுப்பேட்டை. மண்ணில் புதைக்கப்பட்ட பல்சர் ஒன்றை காட்டுவார்களே? அந்த இடம் தான் புதுப்பேட்டை. சென்னையிலும், புறநகரிலும் எந்த பைக் தொலைந்தாலும் எல்லோரும் ஓடிப்போய் தேடுவது புதுப்பேட்டையில் தான். தேடிய எவருக்குமே இதுவரை பைக் திரும்ப கிடைத்ததாக சரித்திரமில்லை. பத்தே நிமிடத்தில் ஒரு பைக்கை பார்ட் பார்ட்டாக பிரித்து போடக்கூடிய வல்லுநர்கள் நிறைந்த இடம் இது.

சீப்பாக காருக்கும், டூவீலருக்கும் ஸ்பேர் பார்ட்ஸ் ஏதாவது வேண்டுமென்றால் தாராளமாக புதுப்பேட்டைக்கு போகலாம். செகண்ட் ஹேண்டில் நீங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விலைக்கு எதுவேண்டுமானாலும் கிடைக்கும். அந்த காலத்து பேபி ஸ்கூட்டருக்கான ஸ்பேர் பார்ட்ஸ் கூட இன்னமும் இங்கே கிடைக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிற்கான கார் ஆடியோ செட்டை நம் நண்பர் ஒருவர் இங்கே இருபதாயிரத்துக்கு முடித்துக்கொண்டு வந்தார் என்றால் நம்ப கடினமாக தானிருக்கும்.

இங்கே ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொன்று ஸ்பெஷல். டூவீலர் ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க வெங்கடாச்சல நாயக்கன் தெரு. லைட், இண்டிகேட்டர், மீட்டர் போன்ற எலக்ட்ரிக்கல் சமாச்சாரங்களுக்கு வெங்கடாச்சல ஆசாரி தெரு. கார், வேன் ஸ்பேர்களுக்கு ஆதித்தனார் சாலை. ஒட்டுமொத்தமாக பாடியே (சேஸிங் வகையறாக்கள்) வேண்டுமானால் கூவம் சாலை.

புதுப்பேட்டைக்குள் நுழைந்ததுமே ‘இன்னா சார் வோணும்? சொல்லு சார். எதா இருந்தாலும் கொடுத்துடலாம்' என்று எதிர்படும் எல்லா கடைக்காரர்களுமே சொல்லி வைத்தாற்போல கேட்பார்கள். நான் போன அன்று இன் செய்த சட்டையை எடுத்து விட்டேன், தலையை கலைத்து விட்டுக் கொண்டேன். வாயில் ஒரு மாணிக்சந்த் போட்டு, இல்லாத கடுமையை ஒரு ‘கெத்'துக்காக முகத்தில் வைத்துக்கொண்டேன். மூஞ்சை பார்த்து ஏமாளி என்று முடிவுகட்டிவிடக்கூடாது இல்லையா?

“சிடி டான் டேங்க் வேணும்ணா. இருக்கா?”

”நேரா போய் ரெண்டாவது ரைட் அடி”

ரெண்டாவது ரைட்டு ரொம்ப குறுகலானது. டூவீலர் போவதே கடினம். இருபக்கமும் ஏராளமான வண்டிகள் கடைகள் முன்பாக நிறுத்தப்பட்டிருக்கும். தெரியாத்தனமாக ஒரு ஆட்டோக்காரர் உள்ளே நுழைந்துவிட்டாலும் போதும். செம்மொழியில் அர்ச்சனை கிடைக்கும். “த்தா.. பிஸ்னஸ் அவர்லே எவண்டா மயிரு மாதிரி வண்டியை உள்ளே எட்தாந்தது?” என்பார்கள்.

ரெண்டாவது ரைட்டு அடித்தால் இருபுறமும் பெட்ரோல் டேங்குகள் தோரணமாக கட்டிவிடப்பட்டிருந்தன. பல்சர், யூனிகார்ன் என்று லேட்டஸ்ட் ப்ரீமியர் பைக்குகளின் டேங்குகளும் கிடைக்கிறது. அப்படியே புத்தம்புதுசாக ஒரிஜினல் பெயிண்டின் கருக்குலையாமல். ஒவ்வொரு கடையாக ”டாங்க் இருக்கா?” என்று கேட்டால் “எண்ணாண்டே டான் டேங்க் இல்லை, ஆனா ஆறாவது கடையிலே இருக்கும்” என்று தன் சகப்போட்டியாளர்களுக்கே பிஸினஸ் பிடித்துக் கொடுக்கிறார்கள். ஆறாவது கடையில் ஒரு பாய் உட்கார்ந்திருந்தார்.

”சிடி டான் டேங்க் வேணும்னா. இருக்கா?”

“இருக்குண்ணா”

வண்டியை விட்டு இறங்கவே கொஞ்சம் பயமாகதானிருக்கிறது.

“டேங்கு காட்டுண்ணா”

“எறங்கி வாண்ணா. மேல இருக்கு. மாடிக்கு போ எடுத்து கொடுப்பாங்க”

வண்டியை ஓரமாக நிறுத்தி, சைட் லாக் போட்டால், ”சைட் லாக் போடாதே” என்கிறார். கொஞ்சம் தயங்கியதுமே புரிந்துகொண்டவராக “புதுப்பேட்டைலே மட்டும் எவன் வண்டியும் திருடுபோவாது!” என்றார்.

தயங்கியபடியே வண்டியை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே மாடிக்கு சென்றேன். தரையே தெரியாத அளவுக்கு வண்டிகளின் ஸ்பேர் பார்ட்ஸ். மேலேயும் ஒரு பாய்.

“சிடி டான் டேங்க் வேணும்னே”

“இன்னா கலரு”

“பிளாக்”

ஒரு பையனை அனுப்பி “சாருக்கு ஒரு டாங்க் எடுத்துக் கொடு!” என்றார்.

பையன் உள்ளே எங்கேயோ அழைத்துப் போனான். சில படிக்கட்டுகள் ஏறி, சில படிக்கட்டுகள் இறங்கி சந்து மாதிரி போய்க்கொண்டே இருக்கிறது. கீழே விட்ட வண்டி என்னாகுமோ என்ற பயம் வேறு. ஒரு அறைக்கதவை திறந்து லைட் போட்டான். உள்ளே குறைந்தபட்சம் நூறு, நூற்றி ஐம்பது பெட்ரோல் டேங்குகளாவது இருந்திருக்கும். கவரில் சுற்றிவைக்கப்பட்ட ஒரு டாங்கை கொடுத்து “போய் அண்ணன் கிட்டே ரேட் பேசிக்கோ!” என்றான் அந்தப் பையன்.

“என் வண்டிலே வயலட் ஸ்டிக்கரு. இது பிரவுனா இருக்கே?”

“இங்கல்லாம் அப்படித்தான். கிடைக்கிறதை (?) தான் கொடுக்க முடியும்”

வேறு வழியின்றி அண்ணனிடம் போய் ரேட் பேசினேன்.

“எவ்ளோண்ணா”

“கொடுக்குறதை கொடு”

“பரவால்லை ரேட்டு சொல்லிக்கொடுண்ணா” - வெளியே நின்ற வண்டி என்ன கதியோ?

“ரெண்டாயிரம் கொடு”

“புதுசே அவ்ளோ தாண்ணா”

“புதுசு மூவாயிரத்து இருநூறு இன்னிக்கு ரேட்டு. எங்களாண்டியேவா தம்பி?”

நான் ஐநூறில் ஆரம்பித்து ஆயிரத்து நூறுக்கு வந்தேன். அவர் நூறு, இருநூறாக குறைத்துக் கொண்டே வர நான் இருபத்தைந்து, ஐம்பதாக ஏறிக்கொண்டே வந்தேன். கடைசியாக ஆயிரத்து இருநூறில் முடிந்தது. அச்சு அசலாக புது டேங்க். ஷோருமில் வாங்கியிருந்தால் எனக்கு இரண்டாயிரம் ரூபாய் கூடுதல் ஆகியிருக்கும்.

டேங்கை எடுத்துக்கொண்டு வேகவேகமாக தாவிக்குதித்து என் வண்டிக்கு ஓடினால்.. நல்லவேளை எதுவும் ஆகவில்லை. கீழே கடையில் இருந்த பாய் புன்னகைத்தார்.

”வேறு எது வேணும்னாலும் வாங்க. ஊடு எங்கேருக்கு?”

“நந்தனம்னே, நன்றி. கெளம்புறேன்”

வண்டியை வெளியே எடுத்துக் கொண்டுவரும்போது தெருமுனையில் ஒரு புது ஸ்பெளண்டரை அக்கு அக்காக பிரித்துக் கொண்டிருந்தார்கள். எதிர்காலத்தில் எவருக்காவது ஸ்பெளண்டர் டேங்க் வேண்டுமென்றால் பாய் கடையில் சகாய விலைக்கு கிடைக்கும்.

கீழைத்தீ - புதினத்தில் மலர்ந்த புரட்சித்தீ!

தோழர் பாட்டாளியின் எழுத்துளியால் செதுக்கப்பட்ட கீழைத்தீ புதினம் கம்பீரமான சிற்பமாக கருத்தை கவருகிறது. ஒரு புதினத்தில் இவ்வளவு கிளைக்கதைகளை, புரட்சிக்கருத்துக்களை, சந்தேகங்களுக்கு விடைகளை தரமுடியும் என்ற சாத்தியத்தை மெய்யாக்கியிருக்கிறார் தோழர். இப்புதினத்துக்கு பின்னால் இருக்கும் அவரது உழைப்பை, உழைப்பென்று சொல்லமுடியாது, தியாகம்.. தியாகத்தை தமிழர் யாவரும் கொண்டாட வேண்டியது அவசியம்.

புதினத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் மொழி எனக்கு புதியது. முதலிரண்டு அத்தியாயங்களை வாசிப்பதற்குள் திணறிவிட்டேன். அதன்பிறகு தஞ்சைத்தமிழ் நமக்கு பழகிவிடுகிறது. கீழ்வெண்மணி படுகொலைகளுக்கு பிறகான கீழ்த்தஞ்சையை களமாக எடுத்துக்கொண்டிருக்கிறார் பாட்டாளி.

எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வருவதை அப்பாவி விவசாய கூலித்தொழிலாளி கொண்டாடுவதும், வீட்டு விசேஷத்துக்கு மைக் செட்டை கூட சவுண்டாக வைக்கமுடியாத சாதி அவலமும், தச்சுத் தொழிலின் நுட்பமும், சன்னாசித் தாத்தாவின் கதைகளும், பார்ப்பனீய அசிங்கமும், போலிச்சாமியார்களின் பொய் வேஷமும், இடையே சாதிமறுப்பு காதலும், பண்ணையார்களின் அடாவடியும், பாட்டாளிகளின் போராட்டமும், நக்சல்பாரிகளின் எழுச்சியும், அழித்தொழிப்பும், கம்யூனிஸவாதிகளின் சுயவிமர்சனமும்.. அப்பப்பா.. எவ்வளவு விஷயங்களை அனாயசமாக தொட்டுச்செல்கிறார் தோழர். புதினத்தை வாசித்துமுடித்ததுமே அறுபதுகளில் கீழத்தஞ்சையில் பள்ளராகவோ, பறையராகவோ பிறந்து நக்சல்பாரி இயக்கத்தில் நாம் இயங்கியிருக்கக் கூடாதா என்ற ஏக்கம் வருகிறது.

நெல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரான கோபாலகிருஷ்ண நாயுடு அரைபடி நெல்லை கூலியாக உயர்த்திக் கேட்ட பாவத்துக்காக வெண்மணியில் 44 பேரை உயிரோடு கொளுத்தி, நீதிமன்றத்தில் சாட்சிகளை கலைத்து குற்றமற்றவர் என்ற தீர்ப்பை பணத்தால் வாங்குகிறார். நக்சல்பாரிகள் இயக்கம் கட்டமைத்து அந்த கொடுங்கோலனை அழித்தொழிப்பது தான் புதினத்தின் மையக்கரு.

கோபாலகிருஷ்ண நாயுடுவை சினிமா வில்லன் கணக்காக சித்தரிக்கிறார் தோழர். அவர் மீது வாசகனுக்கு வெறுப்பு ஏற்படவேண்டுமென்பதற்காக சில பக்கங்கள் வீணடிக்கப்பட்டதாக கருதுகிறேன். குறிப்பாக சவரத் தொழிலாளியை அழைத்து தனது அந்தரங்கப் பகுதியை சுத்தப்படுத்தச் சொல்வதும், பின்னர் அத்தொழிலாளியையே கைமைதுனம் செய்துதரச் சொல்வதையும், தன் பண்ணையில் வேலைபார்க்கும் கூலிப்பெண்களின் அங்கங்களை ஆபாசமாக அவன் வர்ணிப்பதையும் சொல்லலாம். இந்தளவுக்கு சித்தரித்தால் தான் அவன் மீது அறச்சீற்றம் வாசகனுக்கு எழும்பும் என்பதில்லை. கோபாலகிருஷ்ண நாயுடு என்ற பெயர் ஒன்றே போதும், கட்டற்ற வெறுப்பு வருவதற்கு.

வயதுக்கே வராத பெண் ஒருத்தியை கடத்தி கோபாலகிருஷ்ணநாயுடு பாலியல் வன்புணர்வு செய்வதாக சில காட்சிகள் வருகிறது. வெண்மணி சம்பவத்தை சித்தரித்து எழுதப்பட்ட குருதிப்புனல் என்ற புதினத்தில், கோபாலகிருஷ்ணநாயுடு ஆண்மையற்றவர் என்பதால் மனச்சிதைவு ஏற்பட்டு வெண்மணி கொலைகளை செய்தார், அது வர்க்கப் போராட்டமல்ல என்பதைப் போல எழுதியிருந்ததால், அதற்கு கவுண்டர் பாயிண்டாக கோபாலகிருஷ்ணநாயுடு ஒரு காமாந்தகன் என்பதாக பாட்டாளி சித்தரித்திருக்கலாம்.

பள்ளர் சாதியை சேர்ந்த ஜோதிக்கும், ஆச்சாரி சாதியை சேர்ந்த வெங்கிட்டுக்கும் மலரும் காதல் தீப்பிடித்து எரியும் மைதானத்துக்கு இடையே மலரும் ரோஜாப்பூ போல அழகும், சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருக்கிறது. ஜோதியை பின் தொடர்ந்து ஆற்றங்கரைக்கு சென்று வெங்கிட்டு பேசுவது, திருவிழாவில் வளையலும், குஞ்சமும் வாங்கித்தந்து காதல்மொழி பேசுவதெல்லாம் செம அழகு. போலிச்சாமியாரின் முகமூடியை ஆசைத்தம்பி கிழித்தெறிவது, சன்னாசித் தாத்தாவின் ஈமக்கிரியைகளின் போது பார்ப்பனன் ஏமாற்றுவது எல்லாம் நகைச்சுவையோடு சொல்லப்பட்ட சமூக அவலங்கள்.

கோபாலகிருஷ்ணநாயுடுவை அழித்தொழித்த சிலகாலத்தில் நக்சல்பாரி இயக்கம் தனது வர்க்க எதிரி அழித்தொழிப்புப் பணிகளை இந்தியா முழுமைக்கும் நிறுத்திவிடுகிறது. எந்தச் சூழ்நிலையில் அந்த முடிவெடுக்கப்படுகிறது, ஏன் எடுக்கப்படுகிறது என்பது குறித்து விலாவரியாக இறுதியில் சொல்லப்படவில்லை. ஆனாலும் இதனால் நக்சல்பாரி இயக்கங்கள் குறித்த மேலதிகத் தகவல்களை வாசிக்க ஆர்வம் ஏற்படுகிறது. கம்யூனிஸ இயக்கங்களால் இந்தியாவில் ஏன் புரட்சியை ஏற்படுத்த இயலவில்லை என்பதை மிக எளியமொழியில் கதாபாத்திரங்களின் வசனங்கள் மூலமாக சொல்கிறார் பாட்டாளி.

தயவுதாட்சணியமில்லாத திராவிட மறுப்புத்தொனி நாவலில் பல இடங்களில் காணமுடிகிறது. வர்க்க எதிர்ப்பில் எப்படி தோழர்களின் பங்களிப்பை எவனும் மறுக்கமுடியாதோ, அதுபோல சமூகநீதிக்கான பங்களிப்பில் திராவிட இயக்கத்தாரின் பங்களிப்பையும் எவனும் மறுதலிக்கமுடியாது. வெங்கட்டு - ஜோதி கலப்புமணம் மூலமாக நக்சல்பாரிகள் சமூகநீதியையும் தொட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பதாக பாட்டாளி சித்தரித்திருக்கிறார்.

இப்படியெல்லாம் சித்தரித்து தான் நக்சல்பாரிகளின் பங்களிப்பை சொல்லவேண்டுமென்பதில்லை, தோழர்களின் தியாகம் எப்போதும் மறக்கப்படாதது, மறைக்கமுடியாதது. ஆனால் கலப்புமணப்புரட்சியை தமிழகத்தில் ஏற்படுத்திய திராவிட இயக்கத்தாரின் பங்களிப்பையும் நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்கவேண்டும். இவ்விஷயத்தில் திராவிட இயக்கத்தாரின் சிந்தனை மற்றும் செயலாக்கத்தை தோழர்கள் சொந்தம் கொண்டாடுவது தேவையில்லாத விஷயம். புதினத்தில் எனக்கு நெருடிய சில விஷயங்களில் இதுவும் ஒன்று.

நாவலை வாசித்து முடித்ததும் நாட்டின் இப்போதைய சூழல் நக்சல்பாரி பாணி புரட்சிக்கு நம்மை அழைத்துச் செல்கிறதோ என்ற எண்ணம் வருகிறது. அத்தியாவசியப் பொருட்களை கூட தன் குடிமக்களுக்கு ஒழுங்காக வழங்க வக்கில்லாத நிலையில், அமெரிக்காவுக்கு அடிவருடுவதையே தன் பிறப்பின் கடமையாக நினைப்பவர்கள் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்புக்கு கடந்த பதினேழு ஆண்டுகளாக வருவதும், அவர்களால் வெகுஜனமக்களின் வாழ்வாதாரம், கலாச்சாரம் பறிக்கப்படுவதையும் கண்டால் புரட்சி மலர்வதை யாராலும் தடுக்க இயலாது என்றே தோன்றுகிறது. அப்படி புரட்சி ஏற்படும் சூழலில் இயக்கப் பாகுபாடில்லாமல் பாட்டாளிகளோடு, படித்தவர்களும், அதிகாரத்தின் கீழ்மட்டத்தில் இருப்பவர்களும் இணைவார்கள் என்பதும் உறுதி.


நூல் : கீழைத்தீ

ஆசிரியர் : பாட்டாளி

வெளியீடு :
புதிய பயணம் வெளியீட்டகம்
எண், 6, 7வது வடக்கு சந்து,
சிம்மக்கல், மதுரை - 625 001.

விலை : ரூ.150/- (மக்கள் பதிப்பு)

25 ஜூலை, 2009

ஷகீலா


மன்மதப்புயல் ஷகீலா என்றாலே முகம் சுளிப்பவர்கள் கூட சனிக்கிழமை இரவுகளில் ரகசியமாக முக்காடு போட்டுக் கொண்டு 'சூர்யா டிவி' பார்ப்பதை கண்டிருக்கிறேன். ஷகீலா மிகவும் வெள்ளந்தியானவர், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் எதிலுமே ‘வெளிப்படையாக' இருப்பவர் என்று சமீபத்தில் அவரை பேட்டி எடுக்க முயற்சித்த நமது பத்திரிகை நண்பர் ஒருவர் சொன்னார். சினிமா இண்டஸ்ட்ரியில் 'ஷகீலா' போன்ற நல்ல குணநலன்களோடு இப்போதும் ஒரு நடிகை இருப்பது ஆச்சரியமானது என்றும் அந்த நண்பர் சொன்னார்.

* ஷகீலா தனது பதினைந்தாம் வயதில் துணைநடிகையாக நடிக்கத் தொடங்கினார். அவர் நடித்த முதல் படம் ‘ப்ளே கேர்ள்ஸ்'. சில்க் ஸ்மிதா கதாநாயகியாக நடித்த திரைப்படம் இது.

* ஷகீலாவின் குடும்பம் பொருளாதாரரீதியாக ரொம்பவும் மோசமான நிலையில் இருந்த காலக்கட்டம் அது. பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே “ச்சீய்” ரக படங்களில் அதன்பின்னர் நடிக்க ஆரம்பித்தார்.

* ”மறுமலர்ச்சி” என்ற மம்முட்டி நடித்த படத்தை பார்த்திருக்கிறீர்களா? அந்தப் படத்தில் விவேக்குக்கு ஜோடியாக ஷகீலா நடித்திருப்பார்.

* ஷகீலா நடித்த ‘கிணரத்தும்பிகள்' படம் மெகாஹிட்.

* ஒரு கட்டத்தில் தொடர்ந்து ஆண்டுக்கு ஆறுபடங்களாவது ஷகீலா நடித்து, அவை செம ஹிட் ஆக மலையாள திரையுலகமே அதிர்ந்தது. மம்முட்டி, மோகன்லால் படங்களின் வசூல் ஷகிலாவால் பாதித்தது. ஷகிலா படங்கள் வெளியாகிறதென்றால் மற்ற படங்களின் வெளியீட்டுத் தேதியை அப்போதெல்லாம் தள்ளி வைத்து விடுவார்களாம். ஷகிலா படங்களை முடக்க மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களும், தயாரிப்பாளர்களும் முயன்றார்கள் என்று பேசப்பட்டது.

* ஷகீலா “ச்சீய்” ரக படங்களில் நடித்தாலும் அவருக்கு பாசில் போன்ற இயக்குனர்களின் இயக்கத்தில் மம்முட்டி, மோகன்லால் போன்ற நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக காமெடி வேடங்களில் நடிப்பதில் அவருக்கு அலாதிப்பிரியம்.

* ஷகீலா மன்மதப் புயலாக அறியப்பட்ட பிறகு தமிழில் ஜெயம், தூள், அழகிய தமிழ்மகன் போன்ற படங்களில் தலையைக் காட்டினார்.

* சினிமா இண்டஸ்ட்ரியில் "Cyclone" "லேடி லால்” போன்ற பெயர்களால் ஷகீலாவை குறிப்பிடுகிறார்கள்.

* 'வில்ஸ் பில்டர்' சிகரெட்டை விரும்பி புகைப்பாராம்.

* ஷகீலா நடித்த சூப்பர்ஹிட் திரைப்படங்களில் சில : 'ஆலில தோணி', 'மிஸ் சாலு', 'ஸ்நேகா', ‘சாகரா', 'அக்னிபுத்ரி', 'சவுந்தர்யலஹரி', 'பெண்மனசு', 'வீண்டும் துலாபாரம்' போன்றவை. இப்படங்களையே அடிக்கடி பெயர் மாற்றி, சில பிட்டுகளை சேர்த்து புதியப் படங்கள் போல ஆங்காங்கே திரையிடுவது வழக்கம்.

* மலையாளத் திரைப்படங்களில் இப்போது அவ்வளவாக ஷகீலா ஆர்வம் காட்டுவதில்லை. மற்ற மொழித் திரைப்படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ‘மோனலிசா' திரைப்படம் மூலமாக (இப்படத்தில் ஷகீலாவை விட சதா அதிகமாக காட்டியிருப்பார்) கன்னடத்திலும் கரைகடந்திருக்கிறது இந்தப் புயல்.

* இயக்குனர் தரணியின் படங்களில் ஷகீலாவுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. தரணி தெலுங்கில் இயக்கிய 'பங்காரம்' திரைப்படம் மூலமாக தெலுங்கிலும் ஒரு ரவுண்டு கட்டி அடிக்க ஆரம்பித்திருக்கிறார் ஷகீலா.

* தமிழில் டப் செய்யப்படும் ஷகீலாவின் திரைப்படங்களுக்கான ப்ரீமியர் காட்சி பரங்கிமலை ஜோதியில் தவறாது காட்டப்படுகிறது.

லக் - மரணவிளையாட்டு!

ஒரிஜினல்!

டூப்ளிகேட்!

பிரெஞ்ச் படமான ட்ஸாமெடியை (Tzameti) யாருக்கும் தெரியாமல் நைசாக இயக்குனர் சோஹம்ஷா உருவிவிட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் புகைந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் வந்த ஹாலிவுட் மொக்கையான டெத்ரேஸ் (Death race 2008) படத்தின் பாதிப்பும் நிறைய உண்டு இந்த லக்கில்.

லக்கியான ஆட்களைப் பற்றிய படமிது. சஞ்சய்தத் ஒரு லக்கியான ஆள். கரப்பான் பூச்சி மாதிரி. காலில் போட்டு நசுக்கினாலும் ஏதோ லக்கால் உயிர்பிழைத்துக் கொள்வார். உலகம் முழுவதுமிருந்து அவரை மாதிரி லக்கிகளை பிடித்து வந்து யாருக்கு அதிர்ஷ்டம் அதிகமென்று பெட் கட்டி விளையாடுகிறார். இண்டர்நெட்டில் கோடி கோடியாக பெட் கட்டுகிறார்கள். சஞ்சய்தத் மொழியில் சொன்னால் Its purely business. விளையாட்டு என்றால் சாதாரண விளையாட்டு இல்லை. தோற்றவர்களுக்கு உடலில் உயிர் இருக்காது. மரணவிளையாட்டு. செத்து செத்து விளையாடுவதுதான் இந்தப் படமே.

கலந்துகொள்பவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. எல்லோருக்கும் உயிரைவிட அதிகபட்சத் தேவையாக இருப்பது பணம் என்பது மட்டுமே ஒற்றுமை. தொடர்ந்து நடக்கும் தொடர் மரண விளையாட்டுகளும், மில்லியன் மில்லியனாக குவியும் பணமும்தான் மீதி கதை. ஒவ்வொரு காட்சியும், விளையாட்டும் இதயத்தை பலமாக பதம் பார்க்கும் வேகத்தோடு படமாக்கப்பட்டிருக்கிறது. நாடோடிகள் ‘சம்போ சிவ சம்போ’ ரேஞ்சில் ஹை-டெம்போவுக்கு ஒரு அதிரடி தீம் பாடலும் உண்டு.

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் அறிமுகமாகும் படம் என்பதால் தமிழகத்திலும் எதிர்ப்பார்ப்பு அதிகம். ஸ்ருதி ஹாலிவுட் நடிகைகளுக்கு சவால் விடும் கவர்ச்சி காட்டுகிறார். நீச்சல்குளத்தில் இருந்து எழுந்துவரும் காட்சியில் விண்ணதிர விசில் பறக்கிறது. அப்பாவை மாதிரியே அச்சு அசலாக முகம், குறிப்பாக அந்த முண்டக்கண்கள். தாராளமாக பாஸ் மார்க் போடலாம். ஹீரோ இம்ரான்கான் அபிஷேக் பாதி, ஹ்ருத்திக் பாதி கலந்து செய்த கலவை.

துப்பாக்கியில் ஒருவருக்கு ஒருவர் சுட்டுக் கொள்வது, பாராசூட்டில் குதிப்பது, சுறாமீன்களிடம் கடலில் தப்பிப்பது என்று விதம்விதமான விளையாட்டுகளை காட்டி எதிர்ப்பார்ப்புகளை எகிறவைத்து விடுகிறார் இயக்குனர். ஆனால் க்ளைமேக்ஸில் அரதப்பழசான ட்ரெயின் விளையாட்டு காட்டுவது கொடுமையிலும் கொடுமை. மெஷின் கன் வைத்து ஹீரோவை பத்து அடி தூரத்தில் இருந்து சுட்டால் கூட ஒரு குண்டு கூட அவர் மீது படுவதில்லை. லக்கோ லக்! மொத்தமாக வெடித்துச் சிதறிய பெட்டியில் இருந்து மேஜர் மிதுன் சக்ரபோர்த்தி எழுந்து வருவதன் மூலமாக டன் கணக்கில் காதில் பூ சுற்றுகிறார்கள்.

கேமிரா, ஸ்டண்ட், பிண்ணனி இசை, தடதடவென்று ஓடும் திரைக்கதை என்று பல தளங்களிலும் தரம் அபாரம். படம் நல்ல டைம் பாஸ். தயாரிப்பாளருக்கு லக் அதிகம். பணம் வானத்தைப் பிளந்துகொண்டு கொட்டோ கொட்டுவென்று கொட்டப்போகிறது!

லக் - இரண்டரை மணி நேர பக்.. பக்..

24 ஜூலை, 2009

அப்பாவி அடிமைகளுக்கு!

"அம்மா! ராமு புதுசா பேட் வாங்கியிருக்கான். அவன் கூட கிரவுண்டுக்கு வெளையாட போறேம்மா"

"கிருஷ்ணா ஒழுங்கா சமர்த்தா போய் படுத்து தூங்கு. லீவு வந்தாலே போதுமே. வெய்யில்ல சுத்த கிளம்பிடுவியே"

"அம்மா. ப்ளீஸ்மா ஹோம் ஒர்க் எல்லாம் சமர்த்தா முடிச்சிட்டேம்மா. ப்ளீஸ்மா."

"சொன்னா கேட்க மாட்டே. டாடி வந்தா அடிச்சுடுவார். போயி தூங்குடா"

----------------------------------------------------------------

"சார் பையன் மேத்ஸ், சயின்ஸ் ரெண்டுத்தேலேயும் நைண்டி பர்சண்ட் ஸ்கோர் பண்ணியிருக்கான் சார். தயவுசெஞ்சி பர்ஸ்ட் குரூப்பே கொடுத்துடுங்க"

"இல்லே சார். பர்ஸ்ட் குரூப்லே மொத்தம் 24 வேகன்ஸி தான் இருக்கு. அதுலே நாலு ஏரியா கவுன்சிலர் ஆக்குபை பண்ணிட்டார். 10 மேனேஜ்மெண்ட் ஆளுங்க எடுத்துக்கிட்டாங்க. மீதி பத்து டொனோர்ஸ்க்கு போயிடும். முடிஞ்சா 25 ரூபா ரெடி பண்ணிடுங்க. டோனோர்ஸ் கோட்டால கொடுத்திடலாம்"

"சார். நான் ஒரு பிரைவேட் கம்பெனிலே கிளார்க்கா இருக்கேன். ஹையர் செகண்டரிக்கே 25 ரூவா எல்லாம் செலவு பண்ண முடியாது சார். பையன் நல்லா படிப்பான். உங்க ஸ்கூல் பேரைக் காப்பாத்துவான்"

"இல்லே சார். பாலிசி டிசிஸன் இது. நான் நெனைச்சா மாத்த முடியாது. பிரின்ஸிபால் சொந்தக்காரப் பையன் ஒருத்தனுக்கே தேர்ட் க்ரூப் தான் கொடுத்திருக்கார். வேணும்னா உங்களுக்கு தேர்ட் குரூப் ஹிஸ்டரிக்கு பதிலா மேத்ஸ் கொடுக்க ட்ரை பண்ணுறேன்"

----------------------------------------------------------------

"சார். தீவாளி கேம்பைனுக்கு புதுசா ஒரு கான்செப்ட் ரெடி பண்ணியிருக்கேன். அட்டகாசமா வந்துருக்கு. ஓபனிங்லே புராடக்ட் லாங் ஷாட்டுலே இருந்து ஜூம் ஆகுது. அப்போ ஒரு பொடியன் கையிலே ராக்கெட்டோட வந்து......."

"குமார் உங்களுக்கு எதுக்கு தேவையில்லாத வேலை? நீங்க சாதாரண விஷுவலைஸர். கிரியேட்டிவ் டைரக்டர் இல்லே. ஞாபகம் வெச்சுக்கங்க"

"இல்லே சார். எம்.டி. சொல்லியிருக்காரு. யாரு வேணும்னாலும் கான்செப்ட் கிரியேட் பண்ணலாம்னு"

"யோவ் எத்தனை வாட்டி சொல்லுறது? மாசாமாசம் ஒழுங்கா சம்பளம் வருதில்லே. அதை வாங்கிட்டு ஒழிய வேண்டியது தானே? எதுக்குய்யா எங்க தாலி அறுக்கறே?"

----------------------------------------------------------------

"ஏண்டா. எவன் எவன் வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு வாட்ச் கட்டிக்கிட்டு போறதுன்னு வெவஸ்தை இல்லையா?"

"இல்லே எஜமான். பட்டணத்துலே வேலை செய்யுற எம் மவன் ஆசையா வாங்கிக் கொடுத்து அனுப்பிச்சான் எஜமான்"

"அதுக்கு பகட்டா நீ பாட்டுக்கு வெள்ளை வேட்டியும், கையிலே வாட்சும் கட்டிக்கிட்டு ஊருக்குல்லே நடந்தேன்னா, நாளைக்கு எவண்டா என்ன மதிப்பான்? உன்னை எல்லாம்.........."

----------------------------------------------------------------

"ஏங்க. கல்லுல்லே மாவரைச்சு மாவரைச்சு மாரெல்லாம் வலிக்குது. ஒரு கிரைண்டர் வாங்கணுங்க"

"வாங்கலாம்மா"

"எப்போங்க?"

"எதுக்குடி இப்போ நொய் நொய்ன்னு உயிரை எடுக்கறே? ஸ்ட்ரைக் முடிஞ்சு போனஸும், அரியர்ஸும் வரட்டும், வாங்கிடலாம்"

----------------------------------------------------------------

"தலைவா. இதெல்லாம் நியாயமில்லே. அசெம்பிளி எலெக்சனுலே தான் இதயத்திலே இடம் கொடுத்துட்டு கவுத்திட்டீங்க. லோக்கல்லேயாவது நம்ம ஆளுங்களை திருப்தி படுத்தற மாதிரி ஏதாவது இடம் கொடுங்க"

"இருந்தா இல்லேன்னாய்யா சொல்லப்போறேன். திண்டிவனத்தான், வந்தவாசிக்காரன், நாகைப்பட்டினத்துக்காரன், இடது, வலது எல்லாத்துக்கும் பிரிச்சி கொடுத்துட்டு கடைசியிலே எனக்கே ஒண்ணும் நிக்கலையேய்யா. பார்க்கலாம். மேல் சபை கொண்டாந்து உன் கட்சியிலே சில பேரை எம்.எல்.சி. ஆக்கறேன்"

"அதுவரைக்கும் நான் என்னத்த அரசியல் பண்ணுறது? ஏற்கனவே மதுரைக்காரன் கட்சியை உடைச்சிடுவேன்னு மெரட்டிக்கிட்டிருக்கான்"

"அப்போ ஒண்ணு பண்ணு... என்னை புடுங்காம அந்தப் பொம்பளை காலுலே போயி விழு...."

----------------------------------------------------------------

"ப்ளீஸ்மா. இன்னைக்கு மட்டும்"

"நோ. முடியாது"

"ப்ளீஸ்... ப்ளீஸ்... வருஷத்துக்கு ஒரு முறை தான் நியூ இயர். வெறும் பீர் மட்டும் தான்"

"இன்னைக்கு பீர்னு சொல்லுவீங்க. நாளைக்கு பிராந்தி. அப்புறம் மறுபடியும் சிகரெட், பான்பராகுன்னு பழைய வழிக்கு திரும்பிடுவீங்க. இனிமே உங்க பிரண்ட்ஸ் யார்கூடவும் நீங்க வெளிய போகக்கூடாதுன்னா போகக்கூடாது தான்."

----------------------------------------------------------------

"இன்னைக்கு எங்க டியூட்டி"

"வேளச்சேரி சுபிக்சாவிலே"

"டே மட்டும் தானே?"

"ஆமா சார். ஈவ்னிங் என் மச்சினிச்சிக்கு நிச்சியதார்த்தம். 6 மணிக்கெல்லாம் போயிடுவேன்"

"மணி லீவுலே இருக்கான் தெரியுமில்லே. யுனிவர்ஸல் டியூட்டி 7 மணிக்கும் நீதான் பார்த்துக்கணும்"

"இல்லே சார். நான் வீட்டுக்கு மூத்த மருமவன். அதான்...."

"யோவ். சொன்னா கேட்க மாட்டே. முதலாளி சொன்னதை தான் நான் சொல்லுறேன். டியூட்டி பார்த்தா பாரு. இல்லேன்னா இப்போவே மச்சினிச்சி நிச்சயதார்த்தத்துக்கு போயிடு. திரும்ப வரவே வராதே"

----------------------------------------------------------------

"தலை. எத்தினி நாளுக்கு தான் கத்தி, கபடான்னு உன் பின்னாலேயே சுத்திக்கிட்டு இருக்கறது. அந்த போக் ரோடு பார் டெண்டர் எடுத்துக் கொடு"

"ஏண்டா. வளர்ந்துட்டியா?"

"இல்லே தலை. எனக்கும் குடும்பம், குட்டின்னு இருக்கு. பையனை அடுத்த வருஷம் காலேசில சேர்க்கணும். நாலு காசு பார்க்கணும்.... எவ்வளவு நாளைக்கு தான்....."

"அடிங்கொ........ ஆளாளுக்கு வெள்ளை வேட்டி கட்ட ஆசை வந்துட்டா. நாங்கள்லாம் என்னாத்தைடா பண்ணுறது? அளவுக்கேத்த ஆசை வேணாமா? போடா.... பொழைப்பை பாரு.... என்னடா முறைக்கிறே"

----------------------------------------------------------------

"லொள்.... லொள்...."

"லொள்.... லொள்.... லொள்...." - கொஞ்சம் கோபமாக...

"லொள்.... லொள்.... லொள்.... லொள்...." - கொஞ்சம் ஆவேசமாக...

"லொள்.... லொள்.... லொள்...." - கொலைவெறியுடன்...

"லொள்.... லொள்...." - கொஞ்சம் சத்தம் குறைத்து வாலை ஆட்டி புறமுதுகிட்டு....

"லொள்.... லொள்.... லொள்.... லொள்...." - ஓவர் சவுண்டுடன். மனதுக்குள் "ஏரியா விட்டு ஏரியா வந்து சைட் அடிக்கிறியா? மவனே கொளுத்திடுவேன்"...

----------------------------------------------------------------

நாட்டுக்கு விடுதலை கெடைச்சி 60 வருஷமானாலும் பொருளாதாரரீதியா, வர்க்கரீதியா, சாதிரீதியா, மதரீதியா, அரசியல்ரீதியா, குடும்பரீதியா.... இன்னும் ஏகப்பட்ட ரீதிகளாக அடிமைப்பட்டிருக்கும் அப்பாவிகளுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்........

----------------------------------------------------------------

- 2006ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தேன்கூடு-தமிழோவியம் போட்டியில் முதல் பரிசு பெற்ற படைப்பு!

23 ஜூலை, 2009

எம்.ஜி.ஆர். நினைவு இல்லம்!


சென்னை தி.நகர் ஆற்காடு தெருவில் இருக்கிறது எம்.ஜி.ஆர் நினைவு இல்லம். சிவாஜியும், எம்.ஜி.ஆரும் ஒரு காலத்தில் பக்கத்து, பக்கத்து தெருக்காரர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதே ஆச்சரியமான ஒரு விஷயம். இந்திபிரச்சார சபாவுக்கு அருகில் சிம்பு வீட்டிலிருந்து தெற்கு போக் ரோடு வழியாக சிவாஜியின் அன்னை இல்லத்தை கடந்து சென்றால் பீச்சாங்கை பக்கமாக ஆற்காடு சாலை வரும்.

தமிழ் சினிமாவை கட்டி ஆண்ட சூப்பர் ஸ்டாரின் வீடு போல இல்லாமல் மேல்நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவரின் வீடுபோல எளிமையோ எளிமை. எம்.ஜி.ஆர் அறக்கட்டளை நிர்வகிக்கிறது. 1990ஆம் ஆண்டு ஜானகி எம்.ஜி.ஆர் திறந்து வைத்ததாக கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது. சுற்றிப் பார்க்க கட்டணம் இல்லை. ஆனால் வெளியே செருப்பினை விட மட்டும் 50 காசு கட்டவேண்டும். செவ்வாய் விடுமுறை. எம்.ஜி.ஆர் மறைந்து இருபத்தி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இன்றும் தினமும் ஐம்பது பேராவது நினைவு இல்லத்தை தரிசித்து செல்கிறார்கள்.

கீழ்த்தள ஹால் பெரியது. 1950களில் தொடங்கி எம்.ஜி.ஆருக்கு வழங்கப்பட்ட நினைவுப்பரிசுகள் இந்த ஹாலினை அலங்கரிக்கிறது. சுவற்றையொட்டி வைக்கப்பட்டிருக்கும் அலமாரிகள் முழுக்க நினைவுப்பரிசுகள். நினைவுப்பரிசுகள் பலவற்றிலும் கருப்பு சிவப்பு திமுக கொடி. பல நினைவுப்பரிசுகள் வேடிக்கையாகவும் இருக்கின்றன.

கிட்டத்தட்ட எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் 90 சதவிகிதப் படங்களுக்கு நூறாவது நாள் விழா ஷீல்டு கொடுத்திருக்கிறார்கள். இந்த நினைவுப்பரிசுகளை பாதுகாக்கவே எம்.ஜி.ஆர் மிகவும் மெனக்கெட்டிருக்க வேண்டும். ஹாலுக்கு மையத்தில் எம்.ஜி.ஆர் பயன்படுத்திய 4777 எண்ணுள்ள, சைரன் பொருத்தப்பட்ட அம்பாஸிடர் கார் புதுமெருகோடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

முதல் தளத்திலும் நினைவுப்பரிசுகளின் ஆதிக்கம். எம்.ஜி.ஆரின் வேட்டி சட்டை, டாக்டர் பட்டம் பெற்றபோது அணிந்த அங்கி, இடுப்பில் செருகும் குறுவாள், சாட்டை, மெகா சைஸ் பேனாக்கள் என்று அவர் பயன்படுத்திய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு அவரது ரசிகர்களும் தொண்டர்களும் வாள் வழங்குவதில் ஆர்வம் அதிகமாக காட்டியிருக்கிறார்கள். அவர் வளர்த்த சிங்கமான ராஜாவின் பதம் செய்யப்பட்ட பிரம்மாண்ட உடல் பிரமிப்பூட்டுகிறது. இந்த சிங்கம் அடிமைப்பெண் படத்தில் நடித்ததாக சொல்கிறார்கள்.

ஆச்சரியமான விஷயம் எம்.ஜி.ஆரின் நூலகம். வீடு முழுக்க ஆங்காங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நூல்களின் எண்ணிக்கை குறைந்தது ஐயாயிரமாகவாவது இருக்கக்கூடும். நிறைய ஆங்கிலநூல்களும் இருப்பது எதிர்பாராத விஷயம். எம்.ஜி.ஆர் ஆங்கிலமும் வாசிப்பார் என்பதை அவர் நூலகத்தில் இருக்கும் நூல்களை வைத்தே அறிய முடிகிறது. எம்.ஜி.ஆரின் பிரத்யேக அலுவல் அறை அப்படியே இருக்கிறது. மேஜையில் அவரது டிரேட் மார்க் தொப்பி.

அலுவல் அறை வழியாக மீண்டும் கீழ்தளத்தின் முன்பக்கத்துக்கு படிக்கட்டுகள் வழியாக வரமுடிகிறது. இவ்வறைகளில் எம்.ஜி.ஆர் நடித்த படங்களின் ஸ்டில்கள் வரிசையாக சதிலீலாவதியிலிருந்து, மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை (136 படங்கள்) பிரேம் போட்டு மாட்டப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட நாற்பதாண்டுக்காலம் திரைத்துறையில் வெற்றிகரமாகப் பணியாற்றியது அவரது அசைக்க முடியாத சாதனை. திரைப்பட ஸ்டில்கள் மட்டுமன்றி பல தலைவர்களோடு எம்.ஜி.ஆர் எடுத்துக்கொண்ட அரியப் புகைப்படங்கள் இல்லம் முழுக்க ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கிறது.

இல்லம் முழுக்க கவனித்ததில் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. எம்.ஜி.ஆரோடு நெருக்கமாக இருந்த ஜெயலலிதா பெயரும் சரி, கலைஞர் பெயரும் சரி, சரிசமமாகவே இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா எம்.ஜி.ஆருக்கு வழங்கிய ப்ளவர் வாஷ் ஒன்று, கலைஞர் எம்.ஜி.ஆருக்கு ஐரோப்பாவில் இருந்து எழுதிய ஒரு கடிதம், ஓரிரு புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற்றிருப்பது ஆச்சரியகரமானது.

மை சாஸ்ஸி கேர்ள்!


உங்கள் காதலி ரொம்ப கோபப்படுவாளா? எதற்கெடுத்தாலும்அடம் பிடிப்பாளா? காதலியிடம் முத்தம் கேட்டு செருப்பால் அடி வாங்கியிருக்கிறீர்களா? அவளின் இடுப்பை அவளுக்கு தெரியாமல் உணர்ச்சிவசப்பட்டு கிள்ளி கன்னத்தில் அறை பட்டிருக்கிறீர்களா? 'அடல்ட்ஸ் ஒன்லி' படத்துக்கு டிக்கெட் ரிசர்வ் செய்துவைத்து அவளை கூப்பிட்டு உங்களை எட்டி உதைத்திருக்கிறாளா? நீங்களே எதிர்பாராத நேரத்தில் பம்பர் பிரைஸாக உங்களை கட்டிப்பிடித்து உதட்டோடு உதடு முத்தம் கொடுத்திருக்கிறாளா? திடீர் திடீரென்று அழுதிருக்கிறாளா? பைத்தியம் போல பொது இடத்தில் பெருங்குரலில் சிரித்திருக்கிறாளா? அடிக்கடி ஓரக்கண்ணால் பார்த்திருக்கிறாளா? கண்ணுக்கு சந்திரமுகி மாதிரி பட்டையாக மை தீட்டிய சமயம் அவளை உங்களுக்கு பிடித்திருந்ததா? எல்லா கேள்விகளுக்கும் என்னைப் போலவே உங்களின் பதிலும் ‘ஆம்' என்றால் நீங்கள் சாஸ்ஸி கேர்ளை காதலிக்க ஆரம்பித்து விடுவீர்கள்.. ஏற்கனவே காதலியோ, மனைவியோ இருந்தாலும்..

2001ல் தென்கொரியாவில் கொரிய மொழியில் வெளிவந்த திரைப்படம் இது. கிம் ஹோ-சிக் என்பவரின் வாழ்வில் நடந்த உண்மைச்சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டது. தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை கிம் ஹோ-சிக் இண்டர்நெட்டில் ‘லவ் லெட்டர்ஸ்' என்ற பெயரில் தொடராக எழுதிவந்தார். பின்னர் இது நாவலாகவும் வெளிவந்தது.

”நான் சிறுவயதில் என் பெற்றோரால் ஒரு பெண்குழந்தை போலவே வளர்க்கப்பட்டேன். குழந்தையாக இருந்தபோது பெண்களின் பொது கழிவறைக்கு கூட செல்ல அனுமதிக்கப்பட்டேன். வயதாக ஆக எனது ஆண்குறி சுருங்கி பெண்ணுறுப்பாக மாறிவிடும் என்றுகூட அப்போதெல்லாம் நம்பினேன்” என்ற கதாநாயகனின் அதிரடி வாக்குமூலம் தான் கதாநாயகனின் எண்ட்ரியே.

படிப்பில் ரொம்ப சுமாரான பையன் பெண்களின் மீது இயல்பிலேயே ஈர்ப்பாக இருக்கிறான். ரயில் நிலையத்தில் குடித்துவிட்டு மப்பில் இருக்கும் ஒரு பேரழகியை கண்டவுடன் அவனது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை, அவனது மனோபாவத்தில் ஏற்படும் மாற்றங்களை இரண்டேகால் மணி நேர காதல் காவியமாக உருகி உருகி எடுத்திருக்கிறார் இயக்குனர் க்வாக் ஜேயோங்.

ஒரு மலையுச்சியில் நிற்கிறான் நாயகன் க்யான்-வூ. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அந்த மலையுச்சியில் இருக்கும் ஒரு மரத்தின் கீழ் டைம் கேப்சூல் என்று சொல்லக்கூடிய வஸ்துவை இருவருமாக சேர்ந்து புதைக்கிறார்கள். அந்த டைம் கேப்சூலில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் காதல்ரசம் சொட்ட பரிமாறிக்கொண்ட கடிதங்கள் இருக்கின்றன. இரண்டு ஆண்டுகள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாது, இரு ஆண்டுகள் கழித்து இதே மலையுச்சிக்கு வந்து புதைத்து வைக்கப்பட்ட டைம் கேப்சூலை நாமிருவருமாக சேர்ந்து எடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் செய்துக் கொள்கிறார்கள். குறிப்பிட்ட காலத்தில் க்யான்-வூ மட்டுமே வருகிறான், அவளது காதலி வரவேயில்லை. அவள் வந்தாளா? இவர்களது காதல் என்ன ஆனது? அவர்களுக்குள் இருந்தது காதல்தானா என்பது தான் க்ளைமேக்ஸ்.


படம் முடிந்தபின்னரும் கூட கதாநாயகியின் பெயர் என்னவென்பது உங்களுக்கு தெரிந்திருக்காது. சொல்லப் போனால் கதாநாயகனுக்கே அப்பெண்ணின் பெயர் தெரியாது. பெயர் சொல்லாமலேயே அந்த பாத்திரத்தை அழுந்த நம் மனதில் பதியவைத்திருப்பதில் தான் இயக்குனரின் வெற்றியே அடங்கியிருக்கிறது. நாயகன், நாயகி, ரயிலில் வரும் விக் பெரியவர், மோட்டல் ரிசப்ஷன் ஊழியர், லாக்கப் ரவுடிக்கூட்டம், காதலில் தோல்வியுற்ற ஒரு வன்முறையாளன், நாயகனின் பெற்றோர், நாயகியின் பெற்றோர், நாயகனின் ஆண்ட்டி என்று பாத்திரங்கள் வாயிலாகவே சம்பவங்களை அழகாக நகர்த்திச் செல்லும் பாங்கு அற்புதம். இறுதிக்காட்சியில் அந்த மலையுச்சி மரத்தடியில் அமர்ந்திருக்கும் கிழவர் ஒரு சஸ்பென்ஸ் ஹைக்கூ.

படம் முழுக்க நகைச்சுவைத் தோரணம், சீரியஸாக சொல்லப்போனால் இது காதல் படமல்ல, நகைச்சுவைப்படம். படம் பார்த்துவிட்டுவாய்விட்டு சிரிக்கலாம், பிறர் பார்க்காமல் வாய்விட்டு அழவும் செய்யலாம். இந்தியனாக இருந்தாலென்ன? கொரியனாக இருந்தாலென்ன உலகமெங்கும் பரவலாக எல்லொருக்கும் புரியும் ஒரே மொழி காதல் மொழிதானே? காதலுக்காக வாழவும், சாகவும் தானே ஆணும், பெண்ணும் படைக்கப்பட்டிருக்கிறார்கள்? காதல் ஒருவனை எந்த அளவுக்கு வழிநடத்தும், வெற்றியடையச் செய்யும் என்பதை அழகாக காட்சிப் படுத்தியிருக்கிறார்கள்.

கோடம்பாக்கத்தின் நாளைய ஸ்ரீதர்களும், கே.எஸ்.ரவிக்குமார்களும் இப்படத்தின் டிவிடியை பஞ்சர் ஒட்ட உப்புக்காகிதம் தேய்க்கும் ரேஞ்சுக்கு ப்ளேயரில் தேய்த்து தேய்த்து சீன் உருவிக்கொண்டிருக்கிறார்கள் என்று கேள்வி.

22 ஜூலை, 2009

ஒன்பது - ஒன்பது - ஒன்பது

“என்னடா முனீஸு அருவாளும், ஆடுமா எங்கே ஊர்வலம்?”

“போட்டுத் தள்ளிட்டு பிரியாணி செஞ்சி தின்ன வேண்டியதுதான்!”

“அடப்பாவி. புள்ளை மாதிரி வளர்த்த ஆட்டை ஏண்டா போட்டுத்தள்ளுறே?”

“ஒனக்கு விஷயமே தெரியாதா சேகரு? இன்னைக்கு தேதி 09.09.09. நைட்டு சரியா 09.09 மணிக்கு ஒலகம் அழிஞ்சிப்பூடுமாம். நம்மோட சேர்ந்து அழியப்போற ஆடுதானே? சாவறதுக்கு முன்னாடியாவது சந்தோஷமா சாப்புட்டுப்புட்டு சாவலாம் இல்லையா?” வேதனையோடு சொன்னான் முனீஸ்வரன்.

தனசேகருக்கு பக்கென்றிருந்தது. வாழ்க்கையில் இன்னமும் எதையுமே அனுபவிக்கவில்லையே? அதற்குள் உலகம் அழியப்போகிறதா? முணுக்கென்று கண்ணில் நீர் எட்டிப்பார்த்தது.

“நெஜமாவா சொல்றே முன்ஸூ”

“ஆமாம்டா. ஒன்பது சாமிக்கு ஆவாத நம்பராம். இன்னைக்கு எல்லாமே ஒன்பது ஒன்பதா வர்றதுனால உலகம் அழிஞ்சிடுமாம். எல்லாமே சாவப்போறோம். என்னென்ன ஆசை இருக்குதோ எல்லாத்தையும் நிறைவேத்திக்க வேண்டியது தான்”

‘ம்ம்ம்.. முன்ஸு சொல்றதிலேயும் மேட்டர் இருக்கு. கூட்டுதொகை ஒன்பதுன்னு வர்றமாதிரி லாரி வாங்கிதானே நம்ப அப்பனும் ஆக்ஸிடெண்டுலே செத்தான். நமக்கு இன்னும் கல்யாணம் கூட ஆவலை. நிறைவேறாத ஆசைகளோடு சாவப்போறேனா?' தனசேகர் மனதுக்குள் சுயபச்சாதாபம் எழுந்தது. யோசித்தவாறே நடந்தான். உயிர்வாழப்போகும் கடைசி நாள். ஆசைப்பட்டதை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். ‘ம்ம்ம்.. நெலைமையை சொல்லி பக்கத்து வீட்டு மிலிட்டரிகாரன் பொண்டாட்டியை மாந்தோப்புக்கு தள்ளிக்கிட்டு போயிட வேண்டியது தான்! இந்த ஆசை ஒண்ணாவது நிறைவேறட்டும்' இப்போது கொஞ்சம் தெம்பு வந்தது தனசேகருக்கு.


து ஒரு சிற்றூர். இன்னமும் நகரவாடை கொஞ்சம் கூட வீசவில்லை. எல்லாருமே வெள்ளந்தி மக்கள். உலகின் கடைசி நாள் என்று அறிவிக்கப் பட்டிருந்ததால் பரபரப்புக்கு ஆளாகியிருந்தது. ஊரில் இருந்த ஒரே ஒரு அம்மன் கோயிலில் பயங்கர கூட்டம். மிச்சமிருந்த நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்திக் கொண்டிருந்தார்கள். அர்ச்சனைத் தட்டில் போடப்பட்ட சில்லறைகள் குறித்து பூசாரிக்கு எந்த ஆர்வமும் இல்லை.

எல்லா வீட்டு சமையலிலும் உயர்தர அசைவ மசாலா வாசனை. சாகப்போகிற நாளிலாவது நல்ல சாப்பாடு சாப்பிடலாமே?

வாழாவெட்டிகளாக துரத்தி அடித்திருந்த மனைவிகளை தேடிப்போனார்கள் குடிக்கார கணவர்கள். கடைசி நாளிலாவது ஒற்றுமையாக வாழ்ந்து சாவோம் என்று முடிவெடுத்திருந்தார்கள். குடும்பம், குழந்தை, குட்டியென்று இந்த ஒருநாளை மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருந்தார்கள்.

பள்ளி மூடப்பட்டிருந்தது. குழந்தைகள் உல்லாசமாக ஆடிப்பாடினார்கள். பெரியவர்களும் குழந்தைகளுக்கு இணையாக கில்லி, நொண்டி, கண்ணாமூச்சி, கபடியெல்லாம் விளையாடினார்கள். குழந்தைகள் கேட்ட அனைத்துமே வழங்கப்பட்டது. மக்கள் எல்லோருமே தங்களுடைய சின்ன சின்ன ஆசைகளையெல்லாம் கூட நிறைவேற்றி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். இப்பவோ, அப்பவோ என்று இழுத்துக்கொண்டிருந்த ராமம்மா ஆயா கூட குச்சி ஐஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

முதலாளி, தொழிலாளி வர்க்க வேறுபாடில்லாத உண்மையான கம்யூனிஸம் மலர்ந்திருந்தது. இதுவரை தன் பண்ணையில் பணியாற்றிய விவசாயக் கூலிகளிடம் தன்னுடைய கடுமைக்கு மன்னிப்பு கேட்டார் நிலக்கிழார் சுந்தரம். நிலங்களைப் பிரித்து உழுதவர்களுக்கே உரிமையாக்கி எழுதி கொடுத்தார்.

காதலித்த காதலர்கள் எல்லோருக்குமே அவசர அவசரமாக சாதி, மதம் பாராமல் திருமணம் செய்துவைக்கப்பட்டது. முதல் இரவுக்கு நேரமிருக்காது என்பதால் முதல் பகலுக்கே நல்ல நேரம், எமகண்டம் பார்க்காமல் உடனடி அனுமதி வழங்கப்பட்டது. ஆலமரத்தடி சாமியார் தன்னுடைய சன்னியாசத்தையும், தாடியையும் துறந்து இல்வாழ்க்கைக்கு தயாரானார். மழ மழவென ஷேவிங் செய்துகொண்ட அவருக்கும் ஒரு இணை அவசர அவசரமாக ‘ஏற்பாடு' செய்யப்பட்டது.

மகாக்கஞ்சனான ஊர்த்தலைவர் தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் போவோர் வருவோருக்கு கொடுத்துக் கொண்டிருந்தார். போகிற வழிக்கு புண்ணியம். ஊர் பணக்காரர்களும் வாழும் கடைசி நாளான இன்று தான தருமத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அடுத்த தலைமுறையும் தங்களோடே அழியப் போவதால் சொத்திருந்து என்ன பயன்? என்று நினைத்தார்கள்.

சாராயக் கடைகளிலும் நல்ல கூட்டம். ஓசியிலேயே சாராயம் ஊத்தி, ஊத்தி வழங்கப்பட்டது. மளிகைக்கடை உள்ளிட்ட இதர வியாபார இடங்களிலும் அனைத்தும் மக்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டது.

உலகின் கடைசிநாள் என்பதால் பாலியல் சுதந்திரமும் தலைவிரித்தாடியது. மாந்தோப்பு சலசலத்துக் கொண்டேயிருந்தது. ஆத்தங்கரை புதர்கள் அவசர அவசரமாக ஆக்கிரமித்துக் கொள்ளப் பட்டன. ரொம்ப நாளாக தனசேகருக்கு மடியாத மிலிட்டரிக்காரன் பொண்டாட்டி அன்று ரொம்ப தாராளமாக நடந்துகொண்டாள். கண்காணாத ஊரிலிருக்கும் அவளது கணவன் நினைவே அன்று அவளுக்கு வரவில்லை.

எல்லோருமே புத்தாடை அணிந்திருந்தார்கள். சாகப்போகிறோம் என்ற பயம் அவர்களை விட்டு விலகி வாழ்வதற்கு இருக்கும் இந்த ஒரே ஒரு நாளை முழுமையாக அனுபவித்து வாழும் வெறி இருந்தது. சாதி, மத வேறுபாடுகள் அப்போது யார் மனதிலும் இல்லை. கொண்டாட்டம் ஒன்றே குறிக்கோளாக சாகும் வரை சந்தோஷம் மட்டுமே அப்போதைய ஒரே லட்சியம்.


ருக்கு ஒதுக்குப் புறமான அந்த பாழடைந்த வீட்டில் கிருஷ்ணன் துளசியோடு இருந்தான். ‘எல்லாம்' முடிந்துவிட்டிருந்தது. துளசி தாவணியை சரி செய்துக் கொண்டிருந்தாள். இருள் கவிழத் தொடங்கியிருந்ததால் ஊருக்கு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு முத்தம் கூட கொடுக்காமல், 'கல்யாணத்துக்கு அப்புறம், கல்யாணத்துக்கு அப்புறம்' என்று சிணுங்கிக் கொண்டிருந்தவள் துளசி. ஒரு முத்தமாவது வாங்கிவிட வேண்டும் என்ற ஆவலில் ”நாளைக்கு உலகம் அழியப்போவுது. அதுக்குள்ளே ஒரு முத்தம் கூட கொடுக்கமாட்டியா?” என்று நேற்று விளையாட்டுக்கு அவளிடம் கேட்டது ஊருக்குள் தீயாகப் பரவி அமளி, துமளிப்பட்டுக் கொண்டிருப்பது இந்த நிமிடம் வரை கிருஷ்ணனுக்கு தெரியாது.

அரசூர் வம்சம்!

சதா சர்வகாலமும் கணநேர இடைவெளியுமின்றி சுழன்று கொண்டிருக்கும் பழக்காத்தட்டிலிருந்து ஒலித்துக்கொண்டிருக்கும் ஒப்பாரி சங்கீதம் ங்கொய்யென்று இன்னமும் ரீங்காரமிட சோம்பேறி ராஜா காலைக்கடமை சிக்கலுக்காக சமையல்காரனிடம் வல்லாரை லேகியத்தை அதட்டி கேட்டு வாங்கி கொண்டிருக்க குளத்தில் குளிக்கும் ராணியின் பெருத்த ஸ்தனங்களை புகையிலை பிராமண குடும்பத்தின் இளையவாரிசு சங்கரன் மொட்டை மாடியில் எட்டிப்பார்த்து சிலிர்த்து கொண்டிருக்க

குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ
பாதிமறைத்த ஸ்தனமும்
பாங்காய் இடுப்பில் ஒட்டியாணமும்
வாழைத் தொடையும்
வடிவான தோளுமாய்க்
குளிக்கும் பொண்டுகளைப் பார்க்கலாமோ
குனிந்து பார்க்கலாமோ

சுப்பம்மா கிழவியின் வாயில் மூத்த பெண்டுகள் இன்றென்னவோ தமிழில் பாட நேற்று பாடிய தெலுங்குக் கீர்த்தனையே மேல் என்று அகஸ்மாத்தாக சிரமப் பரிகாரத்துக்கு கிரகத்துக்கு வந்த சுப்பிரமணியர் நினைத்து நொந்து கொண்டிருக்க அவரது மூத்த வாரிசு எந்த நூற்றாண்டிலோ துர்மரணம் சம்பவித்துக் கொண்ட குருக்கள் பெண்ணோடு சம்போகம் சுகிக்க சேடிப்பெண்ணிடம் வாயுபச்சாரம் செய்ய சொல்லி புஸ்திமீசை கிழவன் வற்புறுத்த சிநேகாம்பாளுக்கும் மன்னி காமாட்சிக்கும் ஏழாம் பொருத்தம் என்றாலும் எப்போதுமா ஒருவரையொருவர் கடங்காரிகள் தூஷித்து கொண்டிருப்பார்கள் என கிட்டாவய்யன் வெறுத்துபோக பிரின்ஸ் ஜீவல்லரி லைட் வெயிட் கலெக்சன் வளையல் மாதிரி வயசன் காற்றில் பறந்துகொண்டிருக்க வடையும் சுவியமும் நெய்யப்பமும் யாரோ சுட்டுக்கொண்டிருக்கும் வாசனை வந்துக் கொண்டிருக்க நொங்கம்பாக்கம் வீட்டில் வைத்திக்கு தட்டில் நாலு இட்லி வைத்து லோட்டா லோட்டாவாக சாம்பார் ஊற்றி கொண்டிருக்கும் கோமதிக்கு தன் கூடப்பிறந்தாளை சங்கரனுக்கு கட்டிவைக்க வேணுமாய் எண்ணம் வந்திருக்க கருத்த ராவுத்தன் வாழைமட்டையில் பொடி அடைத்துகொண்டிருக்க பிராமண அனுசார அனுஷ்டானம் அனுமதிக்கலேன்னாலும் மாசாமாசம் புகையிலை பொடி வகையறாவில் வர்ற தட்சணை அசூயையை சுப்பிரமணிய அய்யருக்கு போக்கிவிட குப்புசாமி அய்யன் நெருப்பு அனலில் வேக வரப்போகும் ஆம்படையானுக்காக பகவதி குட்டி கண்ணில் மைத்தீட்ட அய்யங்கார் ஜோசியன் தேவதைகளை யந்திரத்தில் பிரதிஷ்டை செய்ய கொட்டக்குடி தாசி வெத்தலை சுண்ணாம்பு போட்டு சிவந்த வாயால் முத்தம் தர கிராம்பு ஏலக்காய் வாசனை தூக்கலில் மெய்மறக்க துரைமார்களும் துரைசானிகளும் துரைபாஷை பேசி குரிசு சங்கிலியை தூக்கிக் காட்ட புகையிலை நாற்றமும் கப்பலும் கட்டைவண்டியுமாய் மாறிமாறி பயணிக்க என்னென்னவோ எங்கெங்கோ யார் யாராலோ எது எதுவோ நடந்துகொண்டிருக்க நான் பாட்டுக்கு எதையோ எழுதி கிறுக்கி கசக்கி கிழித்துபோடும் வேளையில் மூன் ட்ராவல் பண்ணனுமா வாத்தியாரே எங்ககிட்டே 3000 பிசி ஆடி மாடல் ஸ்பேஸ்கார் சகாய வெலைக்கு இருக்கு வாங்கிக்கிறீயா ஒன்லி பிப்டி தவுசண்ட் ருபீஸ் என்று நெட்டையுமாய் ஒருவன் குட்டையுமாய் இருக்கும் இன்னொருவனுமாக பனியன் சகோதரர்கள் வியாபாரம் பேசுகிறார்கள்.

* - * - * - * - * - * - * - * -



நூலின் பெயர் : அரசூர் வம்சம்!

நூல் ஆசிரியர் : இரா.முருகன்

விலை : ரூ.175

பக்கங்கள் : 464

வெளியீடு : கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

* - * - * - * - * - * - * - * -

சாதாரணமாக ஐநூறு பக்கப் புத்தகத்தை என்னால் இரண்டு நாட்களில் வாசித்து விட முடியும். வேலை வெட்டி எதுவுமில்லையென்றால் தூங்காமல் கொள்ளாமல் கசாப்புக்கடை ஆடுகளின் தலையை எண்ணாமல் வெட்டுவது மாதிரி ஒரே நாளில் ஆயிரம் பக்கங்களை கூட போட்டுத் தள்ளிவிட்டு போய்க்கொண்டே இருக்க முடியும். இரா.முருகனின் அரசூர் வம்சத்தை முடிக்க இருபது நாட்கள் ஆகிவிட்டது. முருகனின் மொழி மிக எளியது, இக்காலக்கட்டத்திற்கு புதியது அல்லது ரொம்பவும் பழையது என்றாலும் புதினத்தில் ஏற்றியிருக்கும் கனத்தின் மீதான புரிதலுக்காக ஒவ்வொரு பக்கத்தையும் இருமுறையாவது மீள்வாசிப்பு செய்ய தூண்டுகிறது. எத்தனை முறை வாசித்தாலும் சுவாரஸ்யம் இம்மியளவும் குறைவதில்லை என்பதால் முருகனுக்கு அரோகரா.

காலத்தை முன்னும் பின்னும் ஓட்டிச்செல்ல கால இயந்திரம் விஞ்ஞானிகளால் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் எழுத்தாளனுக்கு இது மாந்திரிக யதார்த்தவாதம் மூலமாக சாத்தியமாகியிருக்கிறது. ஆசிரியர் எடுத்துக்கொண்ட காலக்கட்டம் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்றாலும் பனியன் சகோதரர்கள் அவ்வப்போது முன்னும் பின்னுமாக வினோத நாலுசக்கர கருப்பு வண்டியில் போய்வருகிறார்கள்.

என்றோ மரித்துப்போன அழகுப் பெண்களை மந்திரத்தால் வரவழைத்து கதாபாத்திரங்களை கூட விடுவதும், சுகிக்க விடுவதும் எழுத்தாளனுக்கு ஆகாத காரியமல்ல. தொங்கிப்போன ராணியோடு வம்சவிருத்திக்காக மட்டுமே கூடும் ராஜா, செத்துப்போன புஷ்டிமீசைக் கிழவன் சேடிப்பெண்ணை வாய் உபச்சாரத்துக்கு வற்புறுத்துதல், குருக்கள் பெண்ணோடு சாமிநாதனின் சம்போகம், அம்பலப்பழை சகோதரர்கள் அர்த்த ராத்திரியில் தத்தம் மனைவிகளை சரியாக கண்டறிந்து எழுப்பி தனியறைக்கு அழைத்துச்சென்று புணர்தல், கப்பலில் துரைசானிகள் மதுமயக்கத்தில் சாமிநாதனை கூட்டாக வன்புணர்தல் என்று இந்நவீனம் முழுக்க ஊடே தொடர்ந்து பரவியிருக்கிறது புணர்ச்சி வாசனை.. புகையிலை வாசனையையும், ஏலம் கிராம்பு வாசனையையும் தாண்டி.

நினைவுகளோடே நிம்மதியாய் பயணிக்கும் வேளையில் நனவு யதார்த்தத்தையும், இருத்தலுக்கான சமரசங்களையும் கடமையாக சுட்டிக்காட்டுகிறது நாவல். இறந்த காலத்தின் எச்சமாய் நிகழ்காலம் இருப்பதுபோல நிகழ்காலத்தின் எச்சமாய் எதிர்காலம் அமையும். ‘அந்த காலம் மாதிரி வருமா?’ என்று எந்த நூற்றாண்டிலும் எவனாவது ஒரு கிழவன் முனகிக் கொண்டிருக்கத்தான் போகிறான்.

ஒன்றரை நூற்றாண்டுக்கு முந்தைய பிராமணர்களையும், அவர்களது அச்சுப்பிச்சு அசட்டு நடைமுறைகளையும் கேலியும், கிண்டலுமாக அணுகுகிறார் நூலாசிரியர். இருத்தலைக் காத்துக்கொள்ள செய்துகொண்ட சமரசங்களான புகையிலை வியாபாரம், மதம் மாறுதல் ஆகியவற்றை ஆசிரியர் ஆதரிக்கிறாரா, மறுதலிக்கிறாரா, கேலி செய்கிறாரா என்பதை அவரது தொனியில் அறிய கடினமாவும் இருக்கிறது.

இத்தனைக்கும் சங்கரனும், சாமிநாதனும் அவருடைய கொள்ளுத் தாத்தாக்களாக கூட இருக்கலாம் என்பதை அவரது முன்னுரையில் அறியமுடிகிறது. காரைக்குடிக்கு ரொம்ப பக்கம் என்பதாலும், நூலாசிரியர் கொடுக்கும் சுலப க்ளூக்கள் சிலவற்றாலும் சிவகங்கைச்சீமை தான் அரசூர் என்று சுலபமாக கணிக்க தோன்றுகிறது. சாமிநாதனை தீவைத்து யாராவது கொன்றார்களா (ராணியின் வேலையா) அல்லது யதேச்சையாக பிடித்த தீயா என்பதை வாசகர்களின் யூகத்துக்கு விட்டுவிடுகிறார் முருகன். ஆதித்த கரிகாலனை போட்டுத் தள்ளியது யாரென்றே இன்னமும் யூகிக்க சோம்பேறித்தனம் படும் என்னை மாதிரி வாசகர்களுக்கு இது பெருத்த சோதனை. கருடகர்வ பங்கம்.

இந்நூலை வாசித்தபிறகு தான் தன்னுடைய இடத்தை தமிழில் நிரப்பப் போகும் எழுத்தாளராக இரா.முருகனை சுஜாதா கணித்தாரா என்று சரியாகத் தெரியவில்லை. எதிர்காலத்தில் தமிழின் அதிமுக்கிய நாவல்கள் குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படுமேயானால், அப்பட்டியலில் இடம்பெறத் தகுதியானதே ‘அரசூர் வம்சம்’. தீவிரவாசிப்புக்கு பழக்கப்படாதவர்கள் மறுபேச்சின்றி இந்நூலை தவிர்த்து விடலாம். இந்நாவலின் கனமும், நடையும், லாஜிக்கும் புரிபடாதவர்களுக்கு இது மொக்கையாகவும் தோன்றக்கூடும்.

நாவல் முடியும்போது எல்லாம் சுபம் தான். ஆனாலும் எங்கோ ஏதோ நிரப்பப்படாமல் வெறுமை சூழ்கிறது. நாவலாசிரியர் தன் வாசகனுக்கு முன்வைக்க விரும்பியது இந்த வெறுமை தானென்றால் அரசூர் வம்சத்தின் மன்னனாக அவருக்கே க்ரீடம் சூட்டி விடலாம்.

அரசூர் வம்சம் - அமானுஷ்ய அனுபவம்!

18 ஜூலை, 2009

திருவிளையாடல்


வெங்கடேசுக்கும் எனக்கும் ஏழாம் பொருத்தம் என்பது பள்ளியின் புல் பூண்டுக்கு கூடத்தெரியும். இருந்தும் இரண்டு பேரும் எப்போதும் ஒரே ஜமாவில் கும்மியடிப்பது பலருக்கு ஆச்சரியம். என்னைப் பொறுத்தவரை கருத்து வேறு, நட்பு வேறு. அவனுக்கும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.

எங்கள் பள்ளியையும், பக்கத்தில் இருக்கும் மகளிர் மேல்நிலைப் பள்ளியையும் பிரிப்பது ஒரு ஐந்தடி உயர சுவர் மட்டுமே. சுவற்றுக்கு கீழே நான்கைந்து செங்கல்களை போட்டு உயரம் கூட்டி பக்கத்து கிரவுண்டில் விளையாடும் சிட்டுக்குருவிகளை பார்த்து ரசிப்பது எங்கள் பொழுதுபோக்கு. நீலநிற தாவணி, வெள்ளை ஜாக்கெட், இரட்டைப் பின்னல் என்று Auspicious ஆக அந்த காலத்தில் இருந்த மாதிரியான பிகர்களை இப்போதெல்லாம் காணமுடியாது.

நான் ஒன்பதாம் வகுப்பு அனுவை சைட்டு அடித்துக் கொண்டிருந்தாலும் (அது என் மாமா பொண்ணாக்கும்) அவ்வப்போது +1 படிக்கும் தேன்மொழியையும் ஜூட்டு விட்டுக் கொண்டிருந்தேன். காரணம் தேனு வெங்கடேசின் ஆளு. அவனை வெறுப்பேற்றவே பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு செல்லும் தேனுவை வேண்டுமென்றே சைக்கிளில் பாலோ செய்வேன். அனுவைப் பொறுத்தவரை என்னுடைய மாமா பெண் என்பதால் மட்டுமே எனக்கு ஈர்ப்பு இருந்தது என்று நினைக்கிறேன். அவளுக்கும் என் மீது பெரிய ஈர்ப்பு எதுவும் இருந்ததாக தெரியவில்லை. எனக்கும் ஒரு பிகர் இருக்கிறது என்று சொல்லிக் கொள்ளவே “அனு என்னோட ஆளு” என்று ஜமாவில் சொல்லி வைத்திருந்தேன்.

அது ஒரு சுபயோகத் திருநாளாக இருந்திருக்கக் கூடும். வழக்கம்போல செங்கல் போட்டு பக்கத்து கிரவுண்டில் ஸ்கிப்பிங் விளையாடும் பிகர்களின் அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தோம். எதற்கெடுத்தாலும் “என்ன பெட்டு” என்று கேட்பதை வழக்கமாகக் கொண்ட வெங்கடேசுக்கு தான் அந்த யோசனை வந்தது.

“தில்லு இருக்கிற எவனாவது ஸ்கூல் டைம்லே பக்கத்து கிரவுண்டை ஒரு சுத்து சுத்தி வரணும். எவனாவது அதை சாதிச்சி காட்டினா, அவனை நான் பீராலேயே குளிப்பாட்டுறண்டா. பெட்டு ஓகேவா?”

அவன் கீரி என்றால், நான் பாம்பு. மசால் வடையை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால் எலி மாட்டும் என்றும் அவனுக்கு தெரியும். அவன் பெட் கட்டினால் சும்மாவாச்சுக்கும் அவனை வெறுப்பேற்றவாவது நான் சிலிர்த்துக் கொண்டு வருவது வழக்கம். ஆனால் இந்த முறை அவன் வைத்திருப்பது அக்னிப் பரிட்சை. கரணம் தப்பினாலும் கருகிவிடுவோம். இருந்தாலும் சவால் விட்டிருப்பது என் பிரியத்துக்குரிய எதிரி ஆயிற்றே? ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். லேடிஸ் ஸ்கூல் ஹெட்மாஸ்டரை நினைத்தால் தான் கொஞ்சம் பயமாக இருந்தது. காதலன் படத்தில் வரும் பெண் போலிஸ் அதிகாரி மாதிரி இருப்பார். எங்கள் ஹெட் மாஸ்டரிடம் போட்டுக் கொடுத்து விட்டால் முதுகுத்தோல் உறிந்துவிடும்.

சிவா உசுப்பி விட்டான். “கிச்சா இருக்கறப்பவே பெட்டு கட்டறியா வெங்கடேசு? திருப்பதிக்கே லட்டா, சிவகாசிக்கே பட்டாசா?”

“டேய்.. டேய்.. நிறுத்துரா. தில்லு இருக்கறவன், ஆம்பளைன்னு சொல்லிக்குறவன் எவனா இருந்தாலும் என் பந்தயத்தை ஒத்துக்கலாம். முடியலன்னா சொல்லிடுங்க. எனக்கொண்ணும் நஷ்டம் இல்லே. நீங்க ஓடினாலும் சரி, ஓடாம பாதியிலே திரும்பிட்டாலும் சரி. எனக்கெதுவும் கொடுக்க வேண்டியதில்ல. ஜெயிச்சுட்டா மட்டும் ஜெயிச்சவனுக்கு மட்டுமில்லே, நம்ம ஜமா மொத்தத்துக்கும் பீரோட பிரியாணி!” லேடிஸ் ஸ்கூல் க்ரவுண்டை சுற்றி வருவது ஏதோ உலகத்தை சுற்றி வருவது மாதிரியான பில்டப் கொடுத்து வெங்கடேஷ் பேசினான்.

எனக்கு சுர்ரென்று ஏறியது. ”நாளைக்கு ஈவ்னிங் மூணரை மணிக்கு நான் சுத்தறேண்டா. ஈவ்னிங் ஏழு மணிக்கு ரம்பா ஒயின்ஸ்லே பீரு, எட்டரை மணிக்கு பாய் கடையிலே பிரியாணி. ஓகேவா மச்சி?”

எலி கரெக்டாக மசால் வடைக்கு மாட்டியதை நினைத்து சந்தோஷப்பட்ட வெங்கடேஷ், “ஆல் த பெஸ்ட் மச்சான்!” என்று சொல்லிவிட்டு சபையை களைத்தான்.

சிவாவோடு சேர்ந்து ப்ளான் போட்டேன். மூணரை மணிக்கு எங்களுக்கு பி.டி. பீரியடு. கிரிக்கெட் விளையாடுவது போல பாவ்லா காட்டி பந்தை பக்கத்து கிரவுண்டில் எறிந்துவிட்டு, பந்தெடுக்கப் போவது போல போய் க்ரவுண்டை ஒரு முறை சுற்றி வந்துவிடலாம். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் பந்தெடுக்க வந்தேன் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளலாம்.

மூன்றரை மணி என்பதால் ரெண்டு ஸ்கூல் ஹெட்மாஸ்டர்களும் சாப்பிட்டு விட்டு லைட்டாக கிரக்கத்தில் இருப்பார்கள். சரியான நேரம். ஹெட்மாஸ்டர் ரூமுக்கு அருகில் ஒரு ஸ்பையை தற்காலிகமாக நிறுத்தி மாஸ்டர் ரவுண்ட்ஸுக்கு வருகிறாரா என்று கண்காணிப்பதாக ஏற்பாடு. செந்தில் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

மூன்று மணிக்கெல்லாம் எங்கள் செட் க்ரவுண்டை முற்றுகையிட ஆரம்பித்தது. ஸ்டெம்பு நட்டு பவுலிங் செய்து கொண்டிருந்தேன். சிவா பேட்டிங், வெங்கடேஷை காணவில்லை. பெட்டு கட்டிவிட்டு இந்த நாய் எங்கே போய்விட்டான்?

அவன் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. சாட்சிகளின் முன்னிலையில் இன்று சாதித்தே தீருவது என்று முடிவெடுத்துவிட்டேன். பெட்டுக்காக மட்டுமில்லாமல் எல்லோரது கவனத்தையும் கவரும் அட்வென்ச்சர் ஆகவும் அது இருக்கும் என்று என் மனதுக்கு பட்டது. க்ரவுண்டை சுற்றி வருகையில் ஒருவேளை தேன்மொழியோ, அனுவோ என்னை கவனிக்கக்கூடும். “ஹீரோ” அந்தஸ்தை மிக சுலபமாக பெரும் வழியாகவும் அந்த திட்டத்தை நினைத்தேன்.

மற்ற பசங்க கொஞ்சம் சுரத்து குறைந்துபோயே இருந்தார்கள். எப்போதும் காட்டான் போல ஆடும் சிவா கூட டொக்கு வைத்து ஆடிக் கொண்டிருந்தான். மாட்டினால் மொத்த டீமுக்கும் ஆப்பு என்று அவர்கள் பயந்ததாக பட்டது. ”அப்படியே மாட்டிக்கிட்டாலும் ஒரு பய பேரை கூட சொல்லமாட்டேன். நீங்க என் கூட விளையாடினதா கூட சொல்லமாட்டேன். போதுமா?” என்று சொல்லி தைரியப் படுத்தினேன்.

மூன்றரை மணியாக இன்னமும் ஐந்து நிமிஷங்கள் என்று மணியின் வாட்சில் நேரம் பார்த்தோம். அப்போது மணி மட்டும் தான் கைக்கடிகாரம் அணிவான். எங்கேயோ இருந்து வெங்கடேஷும் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டான். பந்தை கையில் எடுத்தவன் சுற்றும் முற்றும் பார்த்தேன். மாஸ்டர்கள் யாரும் கண்ணில் படவில்லை. ஹெட்மாஸ்டர் நாலு மணிக்கு மேல் தான் ரவுண்ட்ஸுக்கு வருவார். அவர் அப்படியே சீக்கிரம் கிளம்பிவிட்டால் கூட நம்ம கண்காணி செந்தில் ஓடிவந்து சொல்லிவிடுவான்.

ஹய்ட் த்ரோவாக இல்லாமல் ஸ்லோப்பாக லேடீஸ் க்ரவுண்ட் நோக்கி முழுபலத்தையும் திரட்டி பந்தை வீசினேன். அப்போது தான் பந்து மைதானத்தின் அந்த முனைக்கு போய் சேரும். ஒரு ரவுண்ட் அடிக்க வாகாக நேரம் கிடைக்கும். பந்தை எறிந்தவுடன் எந்த திசையில் போய் விழுந்தது என்று கூட பார்க்கவில்லை. சுவரை நோக்கி ஓட ஆரம்பித்தேன். ஓடிவந்த வேகத்தை பயன்படுத்தி கையை சுவர் மீது அழுத்தி ஒரே ஜம்ப்...

பின்னால் பசங்க ஓடிவரும் சத்தம் கேட்டது. நான் நினைத்ததற்கு மாறாக மறுபுறம் மைதானம் மேடாக இல்லாமல் கொஞ்சம் பள்ளமாக இருந்ததால் பேலன்ஸ் செய்யமுடியாமல் குப்புற விழுந்தேன். கை முட்டி இரண்டிலும் சிராய்ப்பு. இரத்தம் எட்டிப் பார்த்தது. கால் கொஞ்சம் சுளுக்கிக் கொண்டதைப் போல வலி. நிமிர்ந்து மைதானத்தைப் பார்த்தேன். நூற்றுக்கும் மேற்பட்ட நீலநிற பட்டாம்பூச்சிகள் ஸ்கிப்பிங், கோகோ, ரிங்க் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இந்த மைதானத்தை சுற்றி ஓடிவர குறைந்தது மூன்று நிமிடங்கள் ஆகும். அதற்குள்ளாக ஆசிரியர்கள் யாரும் பார்த்துவிடக்கூடாது. முதல்முறையாக பயம்...

காக்கி பேண்டும், வெள்ளைச் சட்டையுமாக திடீரென்று ஒருவன் தங்கள் மத்தியில் ஓடுவதை கண்டதுமே சில பெண்கள் அவசரமாக ஒதுங்கினார்கள். சில பேர் கூச்சலிட்டார்கள். மைதானத்தின் இடதுப்பக்கமாக ஓட ஆரம்பித்தேன். திரும்பிப் பார்த்தேன், கண்களில் உற்சாகமும், ஆச்சரியமுமாக என் நண்பர்கள்.. சத்தமாக கத்தி என்னை உற்சாகப்படுத்துவதாக நினைத்து எல்லோர் கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருந்தார்கள். வெங்கடேஷின் முகத்தில் மட்டும் குரோதம்!

ஓடு.. ஓடு.. ஓடிக்கொண்டேயிரு என்று உள்மனசு சொல்ல மாராத்தான் வீரனின் மன உறுதியோடு பாதி மைதானத்தை தாண்டி ஓடிக்கொண்டிருந்தேன். பந்து எங்கே போய் விழுந்தது என்று தெரியவில்லை. பந்தை விட்டு விட்டு ஓடவேண்டியது தான். தேடிக்கொண்டிருந்தால் மாட்டிக் கொள்வோம். இன்னும் கொஞ்ச தூரத்தில் பள்ளிக் கட்டடம் வந்துவிடும். உள்ளே வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் யாரும் பார்த்துவிடக்கூடாது என்று மனசுக்குள் வேண்டியபடி ஓட...

அய்யகோ! ஆண்டி க்ளைமேக்ஸ் ஆகிவிட்டதே?

பள்ளிக் கட்டடத்துக்கு அருகில் வந்தபோது ரெண்டு பள்ளியின் ஹெட்மாஸ்டர்களும் என் வருகையை எதிர்பார்த்து நிற்பது போல நின்று கொண்டிருந்தார்கள். ”இந்த ஆளு எப்படி இங்கே வந்தான்? இந்த ஆளு வெளியே வந்திருந்தாலே செந்தில் ஓடிவந்து சொல்லியிருப்பானே? அவனுக்கு என்ன ஆச்சி?” என்று நினைத்தேன்.

“சார் பந்து விழுந்திடிச்சி.. எடுக்க வந்தேன்!”

காதைப் பிடித்து திருகி, “மானத்தை வாங்குறதுக்குன்னே மடிப்பாக்கத்துலே இருந்து வந்து சேர்ந்திருக்கானுங்க! சாரி மேடம்! ஐ அபாலஜைஸ் ஃபார் தி இன்கண்வீனியன்ஸ்” என்று அந்த ஹெ.எம்.மிடம் சொல்லிவிட்டு “என் பின்னாலேயே வாடா!” என்று சொல்லிவிட்டு முன்னால் போனார்.

மாலை போட்ட ஆடு மாதிரி அவர் பின்னாலேயே போனேன். என் கெட்ட நேரம். என் மாமா பொண்ணு அனு வேறு எதிரில் வந்தாள். நேராக என்னை நோக்கி வந்தவள் என் காதில் கிசுகிசுத்துவிட்டு ஹெட்மாஸ்டரிடம் சென்று ஏதோ சொன்னாள். தூரத்தில் திரும்பிப் பார்த்தேன். ஏற்கனவே நம்பியார் மாதிரி என்னைப் பார்த்துக் கொண்டிருந்த வெங்கடேஷ் பாதி நம்பியாராகவும், பாதி வீரப்பாவாகவும் மாறி கொடூர புன்னகை புரிந்து கொண்டிருந்தது போல தெரிந்தது.

ஹெட்மாஸ்டர் ரூமுக்கு வெளியே செந்தில் வேறு முட்டிப் போட்டுக் கொண்டிருந்தான். அவனருகில் சென்று முட்டி போடுமாறு சொன்ன ஹெச்.எம். ரூமுக்குள் போய்விட்டார். இன்னமும் ஒரு மணி நேரத்துக்கு முட்டி போட்ட பின்னர் “பூஜை” வேறு செய்வார். நினைக்கும் போதே முட்டியும், முதுகும் வலித்தது போல இருந்தது.

“மச்சான்! வெங்கடேஷ் துரோகம் பண்ணிட்டாண்டா!” - செந்தில்

“என்னடா ஆச்சி?”

“மேத்ஸ் மாஸ்டர் கிட்டே மேட்டரை சொல்லி ஹெச்.எம். வரைக்கும் பிரச்சினையை எடுத்து வந்துட்டான். நாயி என்னை வேற போட்டுக் கொடுத்துட்டான்”

மேத்ஸ் மாஸ்டருக்கும், எனக்கும் ஆகவே ஆகாது. அந்த ஆளு நடத்தும் ட்யூஷனில் வீராப்பாக நான் சேராமல் இருந்தேன். ”சந்தர்ப்பம் பார்த்து போட்டு கொடுத்துட்டானே அந்தாளு?” என்று உறுமினேன்.

“செந்திலு நாம ரெண்டு பேரும் அடிபடப்போறது உறுதி. அதே நேரத்துலே நம்ம அக்ரிமெண்டை மீறுன வெங்கடேஷையும் போட்டுடணும்” சொல்லிவிட்டு எழுந்து நேராக ஹெச்.எம். ரூமுக்கு போனேன். நடந்ததெல்லாம் தப்பு என்று சொல்லி, வெங்கடேஷ் தான் என்னை அதுபோல லேடிஸ் க்ரவுண்டில் ஓட சொன்னான் என்றும் உண்மையை ஒப்புக் கொண்டேன். ப்யூனை விட்டு வெங்கடேஷை பிடித்து வரச் சொன்னார் ஹெச்.எம்.

சிறிது நேரத்திலேயே காட்சி மாறியது.

நானும், செந்திலும் மாட்டிக் கொண்டதை பார்த்து கொக்கரித்து சிரித்துக் கொண்டிருந்த வெங்கடேசும் இப்போது எங்களோடு சேர்ந்து முட்டிப் போட்டுக் கொண்டிருந்தான்.

“வெங்கடேசு! ஆனாலும் உன்னை லைப்லே மறக்க மாட்டேண்டா!”

“எதுக்குடா?” வெறுப்போடு கேட்டான்.

“உன்னால தாண்டா அனு எனக்கு கிடைச்சா!”

”!!!!???????”

“எப்படின்னு கேளேன். நான் மாட்டிக்கிட்டதுமே நேரா என் காதுலே வந்து ‘இவ்ளோ தைரியசாலியா நீ இருப்பேன்னு நினைக்கலை. ஐ லவ் யூ!'ன்னு சொல்லிட்டுப் போயிட்டா மச்சான். நீ மட்டும் ஹெச்.எம். கிட்டே போட்டு கொடுக்கலைன்னு வெச்சிக்கோ, அனு எனக்கு கிடைச்சிருக்க மாட்டாடா.”

ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த நெருப்பில் எண்ணையை ஊற்ற வெங்கடேஷின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. நான் சொன்னதை கேட்டதுமே செந்திலுக்கு மகிழ்ச்சி பொங்கியது.

“எப்படியோ வெங்கடேஷ் புண்ணியத்துலே கிச்சா செட்டில் ஆகிட்டான். ஃபிகரு ஒர்க் அவுட் ஆயிடிச்சி. நடக்குறதெல்லாம் நல்லதுக்கு தாண்டா!”

“டேய் பந்தயத்துலே ஜெயிச்சிருந்தா தானேடா வெங்கடேஷ் பீர் வாங்கி கொடுத்திருப்பான். இதோ இப்போ தோத்தவன் சொல்றேன். இன்னைக்கு எல்லாருக்கும் பார்ட்டிடா! நான் பந்தயத்துலே தோத்திருந்தாலும் லைஃப்லே ஜெயிச்சுடேண்டா! ஐ யாம் வெரி ஹாப்பியஸ்ட் மேன் இன் த வோர்ல்ட்”

(சுபம்)




கதையை அப்படியே சுபம் போட்டு விட்டுவிட ஆசை தான். ஆனாலும் உண்மையில் நடந்தது என்னவென்று சொல்லுவது தானே தர்மம்! ஒரு சின்ன ப்ளாஷ்பேக்!

காதைப் பிடித்து திருகி, “மானத்தை வாங்குறதுக்குன்னே மடிப்பாக்கத்துலே இருந்து வந்து சேர்ந்திருக்கானுங்க! சாரி மேடம்! ஐ அபாலஜைஸ் ஃபார் தி இன்கண்வீனியன்ஸ்” என்று அந்த எச்.எம்.மிடம் சொல்லிவிட்டு “என் பின்னாலேயே வாடா!” என்று சொல்லிவிட்டு முன்னால் போனார்.

மாலை போட்ட ஆடு மாதிரி அவர் பின்னாலேயே போனேன். என் கெட்ட நேரம். என் மாமா பொண்ணு அனு வேறு எதிரில் வந்தாள். நேராக என்னை நோக்கி வந்தவள் என்னிடம் மெதுவாக,

“பொறுக்கி, நல்லா மாட்டிக்கிட்டியா? ஸ்கூல் விட்டு போறப்போ சைக்கிள்லே வந்து கட் அடிச்சி தொல்லை கொடுக்குறே இல்லே, உங்க ஹெச்.எம். கிட்டே நல்லா போட்டு விடறேன்”

ஹெட்மாஸ்டரிடம் சென்று, “சார் இந்த பொறுக்கி அடிக்கடி எங்களையெல்லாம் டிஸ்டர்ப் பண்றான் சார். ஸ்கூல் விட்டு போறப்போ ரோட்ல வந்து லவ் லெட்டர் கொடுக்கிறான் சார்!”

“அவனை தோலை உரிச்சி தான் இன்னிக்கு வீட்டுக்கு அனுப்பப் போறேன். நீங்க பயப்படாதீங்கம்மா. இனிமேல உங்களையெல்லாம் டிஸ்டர்ப் பண்ணமாட்டான்” ஹெச்.எம்.

தூரத்தில் திரும்பிப் பார்த்தேன். ஏற்கனவே நம்பியார் மாதிரி என்னைப் பார்த்துக் கொண்டிருந்த வெங்கடேஷ் பாதி நம்பியாராகவும், பாதி வீரப்பாவாகவும் மாறி கொடூர புன்னகை புரிந்து கொண்டிருந்தது போல தெரிந்தது.

பிரபாகரன் - பா.ராகவன்!

மே 19-ஆம் தேதி பிரபாகரனின் உடல் நந்திக்கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்திருந்தது. மே 26-ஆம் தேதி ‘பிரபாகரன் - வாழ்வும், மரணமும்!’ என்ற தலைப்பில் கிழக்கு பதிப்பகம் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. பிரபாகரனின் மரணத்தை உலகப் புத்தக வரலாற்றில் முதன்முறையாக பதிவு செய்திருக்கிறது கிழக்கு. இந்த வேகம் அசாத்தியமானது. மாவீரர் தினத்தின் போது பிரபாகரன் தோன்றி ஈழமக்களுக்கு தன்னுடைய செய்தியை அறிவிப்பாரேயானால் கதீட்ரல் சர்ச்சில் கிழக்கு பதிப்பகம், நூலாசிரியர் பா.ராகவனும் பாவமனிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளோடு இந்த விமர்சனத்தை தொடங்குகிறேன்.

பிரபாகரனைத் தவிர்த்து ஈழவரலாற்றை யாரும் எழுதிவிட முடியாது. உலகத் தமிழர்களுக்கு ஒரிஜினல் ஹீரோ. ஈழமக்களுக்கு கடவுளைப் போன்றவர். அவரது சிந்தனைகளை, குணாதிசயங்களை, செயல்பாடுகளை ஈழத்தமிழர்கள் உட்பட யாரும் இதுவரை மிகையின்றி, சார்பின்றி சொன்னதில்லை. தமிழர் மனதில் கட்டப்பட்டிருக்கும் பிரபாகரன் பிம்பமும் அத்தனை துல்லியமானதல்ல. இந்நிலையில் பிரபாகரனுக்கு டயரி எழுதியிருக்கும் பழக்கம் இருக்குமேயானால், அந்த டயரியை வாங்கிப் பார்த்து எழுதியதைப் போல நுணுக்கமாக எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.

இதே பதிப்பகம் ஆறுமாதக் காலத்துக்கு முன்பாக ‘பிரபாகரன்’ என்ற புத்தகத்தை வேறொரு எழுத்தாளர் எழுதி வெளியிட்டிருக்கிறது. அதே மனிதரின் வாழ்க்கையை இன்னொருமுறையும் புத்தகமாக பதிவு செய்திருப்பதில் இருந்தே பிரபாகரனுக்கான அசைக்க முடியாத இடத்தின் அவசியத்தை உணரலாம். முதல் புத்தகத்துக்கும், இப்புத்தகத்துக்கும் கூட நிறைய வேறுபாடுகளை நடை அடிப்படையில் உணரலாம். இந்நூல் குமுதம் வார இதழில் தொடராக வெளிவந்ததால் வாரத்துக்கு வாரம் அத்தியாயத்தின் முடிவில் ஏற்றப்படும் டெம்போவை நூல்முழுக்க காணமுடிகிறது. கிழக்கின் பாணியான வழக்கமான ஓப்பனிங் பில்டப், ஆல்பிரட் துரையப்பா படுகொலையோடு தொடங்குகிறது.

இந்நூலில் இரண்டு ஆச்சரியங்கள். ஒன்று பிரபாகரன். மற்றொன்று பா.ராகவன். பிரபாகரன் ஆச்சரியப்படுத்துவதில் அதிசயம் ஒன்றுமில்லை. யாரும் இதுவரை அறிந்திடாத நுணுக்கமான விவரங்களை திரட்டியிருப்பதில் பாரா நூல்முழுக்க ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறார். ஆல்பிரட் துரையப்பாவை போட்டுவிட்டு நேரே சுன்னாகம் போய், பஸ் ஸ்டாண்டில் இறங்கி, 769ஆம் நம்பர் பஸ்ஸுக்காக காத்திருந்து ஏறி.. இவ்வாறாக பிரபாகரன் ஏறிச்சென்ற பஸ்ஸின் ரூட் நம்பரைக் கூட பதிவு செய்திருக்கும் லாவகம்.

சில இடங்களில் இந்த நுணுக்கம் எழுத்தாளரின் வேகத்தில் சறுக்கியிருப்பதாகவும் வாசகனாக உணரமுடிகிறது. 70களின் தொடக்கத்தில் ஏராளமான இளைஞர்கள் தமிழக அரசியல் தலைவர்களிடம் ஆதரவு திரட்ட தமிழகத்துக்கு படையெடுக்கிறார்கள். அவர்கள் முக்கியமாக சந்திக்க விரும்பியது பெரியாரை, குறிப்பாக அண்ணாதுரையை என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அண்ணாதுரை காலமான நிலையில் கலைஞரை என்று குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். (பார்வை : பக்கம் 34)

சுயம்புவாக பிரபாகரன் உருவான வரலாறு எளிமையான, ஆனால் கவரக்கூடிய மொழியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவரே அவர் இயக்கத்துக்கான பயிற்சிமுறைகளை ஏற்படுத்தியது. வெளிநாடுகளில் வற்புறுத்தி பயிற்சிபெற்ற சிலரும் ‘தலைவரோட பாடங்களுக்கு ஈடாகாது’ என்று ஒப்புக்கொண்ட அழகும், அழகோ அழகு.

80களின் தொடக்கத்தில் வல்லரசுகளுக்கான பனிப்போர் மாதிரி நடந்த கலைஞர் - எம்.ஜி.ஆர் ஈழ ஆதரவுப் போரை பதிவு செய்திருப்பதில் நூலாசிரியரின் சார்புத்தன்மை வெளிப்படுகிறது. கிட்டத்தட்ட புலம்பெயர் ஈழத்தமிழர்கள் பேசுவதையே நூலாசிரியரும் பேசுகிறார். எம்.ஜி.ஆருக்கு இவ்விவகாரத்தில் புனிதத்தன்மையை ஏற்படுத்தும் விதமான சிந்தனை. கலைஞர் அப்போதுதான் முதன்முறையாக, அதுவும் எம்.ஜி.ஆர் ஆர்வம் காட்டியதால் இவ்விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டார் என்பது போன்ற தொனி தெரிகிறது. கலைஞர் அதற்கு முன்பாகவே பலமுறை ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து தமிழக பொதுமேடைகளில் பேசியிருக்கிறார். இலங்கைக்கு செல்ல கலைஞருக்கு மட்டும் விசா கொடுக்கக்கூடாது என்று சிங்கள ஆட்சியாளர்கள் அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு போட்டிருந்ததாகவே கூட அக்காலத்தில் பேசிக்கொள்வார்கள்.

இந்தியாவில் ஈழம் குறித்து பரவலாகப் பேசப்பட காரணமாக இருந்த மதுரை டெசோ மாநாட்டைப் பற்றி நூலில் பெரியதாக ஏதும் காணக்கிடைக்கவில்லை. வாஜ்பாய், பகுகுணா உள்ளிட்ட தேசிய அளவிலான எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு ஈழத்தமிழருக்கு ஆதரவாக குரல் எழுப்பிய நிகழ்வு அது. டெசோவில் புலிகள் பங்கேற்க மறுத்ததற்கு பிரபாகரனின் நியாயம் என்னவென்றும் பதிவு செய்யப்பட்டிருக்கலாம்.

550971231 - இந்த எண் என்னவென்று யாருக்காவது தெரியுமா? உலகம் சுற்றும் மர்ம வாலிபன் கே.பி. என்கிற குட்டி என்கிற குமரன் பத்மநாதன் என்கிற செல்வராஜா குமரனின் தாய்லாந்து நாட்டு குடியுரிமை எண். 1984ல் புலிகள் இயக்கத்தில் இணைந்த இவரது நடவடிக்கைகள் இருட்டானவை. இவர் யார்? என்ன செய்துக்கொண்டிருக்கிறார்? என்பது கடந்த சிலமாதங்களாக மட்டுமே ஒவ்வொன்றாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அவரது குடியுரிமை எண் உள்ளிட்ட பல விவரங்களை தேடி தேடி எழுதியிருக்கிறார் பா.ராகவன்.

1983 ஜூலைக்கலவரத்தின் கொடூரத்தை சில பத்திகளிலேயே உணரவைத்து, அதிரடியாக அதற்கு பதிலடி தந்த புலிகளின் வீரத்தை வர்ணிக்கிறார். கமாண்டர் செல்லக்கிளி தலைமையிலான அந்த மோதலில் பிரபாகரன், புலேந்திரன், கிட்டு உள்ளிட்டோரும் நேரடியாக பங்கேற்கிறார்கள். இயக்கத்தின் தலைவரே கமாண்டர் ஒருவரின் தலைமையை ஏற்று போரிடும் பாங்கு அற்புதம். பதிமூன்று சிங்கள ராணுவத்தினர் கொல்லப்பட்ட அத்தாக்குதலில் தான் பிரபாகரனின் களமாடும் திறமை வெளிப்பட்டது. ஒன்பது பேரை வீழ்த்தியிருந்தார் பிரபாகரன். ஜி3 ரக துப்பாக்கியப் பயன்படுத்திய பிரபாகரன் அதற்காக செலவிட்டது ஒன்பது குண்டுகள். ஒரு துப்பாக்கி ரவையின் விலை இருபத்தி ஐந்து ரூபாய். இப்பகுதியை வாசிக்கும்போது உடலெல்லாம் சிலிர்க்கிறது. சந்தேகமே வேண்டாம். இதுவரை உலகம் கண்ட மாவீரர்களில் பிரபாகரனுக்கு நாம் முதலிடம் தயங்காமல் கொடுக்கலாம்.

பிரபாகரன் அற்புதமாக சமைப்பார். கோழியடித்துக் குழம்பு வைப்பார். மீன் சமைப்பதில் பாலசிங்கம் கில்லாடி. பிரபாகரனின் தோழர்கள் துணி துவைப்பார்கள். வீடு பெருக்கி சுத்தம் செய்வார்கள். ஹாஸ்டல் வார்டன் மாதிரி அடேல் பாலசிங்கம் அத்தனை பேரையும் கட்டி மேய்ப்பார். சென்னை திருவான்மியூரில் பிரபாகரன் வாழ்ந்த தினங்களை ஒரு மேன்ஷன் வாசனையோடு விவரிக்கிறார் பாரா.

பிரபாகரனின் காதல் கூட ஒருமாதிரி முரட்டுத்தனமாகவே சொல்லப்படுகிறது. அதாவது விஜயகாந்த் பாணி காதல். செயல்வெறி வீரரை, நாட்டுக்காக தன்னைத்தானே நேர்ந்துக் கொண்டவரை காதலித்து மணந்தவர் மதிவதனி. பிரபாகரன் செய்த தியாகங்களில் சரிபாதியை இவருக்கும் விட்டுத்தருவதே நியாயம். இந்திய வரலாற்றில் நாடிழந்து காடும், பாலைவனமுமாக அலைந்த ஹூமாயுன் உடனேயே திரிந்த அவரது மனைவி நினைவுக்கு வருகிறார். ஹூமாயுனின் மனைவி மொகலாயரின் வீர வரலாற்றுக்குப் பரிசாக பெற்றெடுத்த அக்பரைப் போலவே மாவீரன் சார்லஸ் ஆண்டனியை ஈழத்துக்காக பெற்றுத் தந்தார் மதிவதனி.

ஈழத்தில் ஆயுதம் ஏந்திய போராளி இயக்கங்கள் கிட்டத்தட்ட முப்பதி ஒன்பது இருந்திருக்கின்றன. புலிகள் இயக்கம் தவிர்த்து ஏனைய இயக்கங்கள் இந்தியாவின் உளவுத்துறையான ரா அமைப்புக்கு அடிவருடிகளாக மாறிவிட்டன. புலிகள் இயக்கம் மட்டுமே என்றுமே ’ரா’வைச் சார்ந்து ஒத்து செயல்பட்டதில்லை. இந்நூலை வாசிப்பவர்கள் ஈழத்துக்கு வில்லன் சிங்களவனா இந்தியாவா என்று யோசிப்பார்கள். இந்திராகாந்திக்குப் பிறகு ராஜீவ் காலத்திலான இந்தியச் செயல்பாடுகளை விறுப்பு வெறுப்பின்றி பாரா எழுதியிருக்கிறார் என்று சொல்லலாம். குறிப்பாக தீக்‌ஷித்தின் கை. புலிகள் இயக்கத்தில் துரோகிகள் களையெடுக்கப்பட்டதையும் (மாத்தையா போன்றவர்கள்) விறுவிறுப்பாக பேசிக்கொண்டே போகிறார்.

ஆனாலும் சகோதரப் படுகொலைகள் குறித்து புலிகளை மாதிரியே நூலாசிரியரும் ‘ஆமாய்யா. ராவுக்கு அடிவருடி ஆனாங்க. போட்டுத் தள்ளினோம்’ என்பது மாதிரி மிக லைட்டாக பேசுவது வருத்தத்தை தருகிறது. சிறீசபாரத்தினம் கிட்டுவால் கொடூரமாக போட்டுத்தள்ளப்பட்டதை ரொம்பவும் லேசான வார்த்தைகளில் நிரப்புகிறார். பிரபாகரனுக்கு இணையாக தமிழகத்தில் நேசிக்கப்பட்ட ஆளுமைகளில் சபாரத்தினமும் ஒருவர். அவர் படுகொலை செய்யப்பட்ட செய்தியை செய்தித்தாளில் வாசித்து கண்ணீர் விட்டவர்களை நான் நேரில் கண்டிருக்கிறேன்.

யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமியர் வெளியேற்றம், இயக்கத்திலிருந்த இஸ்லாமியர்கள் கதி, மலையகத் தமிழர்கள் - இவர்களையெல்லாம் பாரா கண்டுகொள்ளவேயில்லை. அதுபோலவே கருணா வெளியேறிய சந்தர்ப்பம் பற்றிய தகவல்களும் மிகக்குறைவு. அமைதிப்படைச் செயல்பாடுகள், இந்தியாவோடு புலிகள் மோதவேண்டிய சூழலை விவரிக்கும்போது, புலிகள் இலங்கையோடு சேர்ந்து செயல்பட்டதையும் குறிப்பிட்டதாக தெரியவில்லை. இந்தியாவோடு பிரபாகரன் மோதவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்திய திலீபனின் மரணம் பற்றியும் விரிவாகச் சொல்லியிருக்கலாம். அதே நேரத்தில் துணி வியாபாரிகளாகவும், குறி சொல்பவர்களாகவும் வேடமணிந்து ரா செயல்பட்டதை விலாவரியாக புன்னகைத்துக்கொண்டே எழுதிக்கொண்டு போகிறார் பாரா.

சகோதரப்படுகொலைகளை லேசாக எடுத்துக்கொண்ட நூலாசிரியர் ராஜீவ் படுகொலையை மிக சீரியஸாக எடுத்துக்கொண்டு புலிகள் செய்த மிகப்பெரியத் தவறு என்பதாக சாடுகிறார். அதற்கு முன்பாக ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் பற்றி கோடிட்டு மட்டுமே காட்டுகிறார். அசோகா ஓட்டலில் பிரபாகரன் சிறைவைக்கப்பட்டாரா என்பது பற்றி பளிச்சென்று எழுதவில்லை. அதே நேரத்தில் சென்னையில் பிரபாகரன் மனைவி சிறைவைக்கப்பட்டதாக சொல்லப்படுவது பற்றியும் குறிப்புகள் எதுவுமில்லை. அந்த ஒப்பந்தத்தில் எம்.ஜி.ஆரின் பிரதிநிதியான பண்ரூட்டி ராமச்சந்திரனின் ரோலையும் சொல்லியிருக்கலாம்.

1991, திருப்பெரும்பெரும்புதூர் துன்பியல் சம்பவத்துக்குப் பிறகான பிரபாகரனின் வாழ்க்கை அவசர அவசரமாக நூலாசிரியரால் எழுதப்பட்டிருப்பதாக உணரமுடிகிறது. பிரபாகரன் சிந்தித்து, பொட்டு அம்மான் செயல்பட்டு, ரகு என்கிற ரகுவரன் என்கிற பாக்கியச் சந்திரன் என்கிற சிவராசன் நடத்தியதே அத்துன்பியல் சம்பவம் என்று தீர்ப்பு தருகிறார் நூலாசிரியர். இதே சிவராசன் இதற்கு முன்பாக வெற்றிகரமாக செயல்பட்டது கோடம்பாக்கம் பத்மநாபா படுகொலை என்பதையும் மறக்காமல் சொல்கிறார்.

“ஒரு காலத்தில் இலங்கைத் தீவின் மூன்றிலொரு பகுதி நிலப்பரப்பையும், மூன்றில் இரண்டு பகுதி கடற்பரப்பையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஆண்டு கொண்டிருந்த பிரபாகரனையும், அவரது இயக்கத்தவர்களையும் வன்னிப்பகுதியில் ஐந்து சதுர கிலோ மீட்டர் பரப்புக்குள் சுருக்கிவிட்டோம்; மொத்தமாகப் பிடித்துவிடுவோம் என்று இலங்கை ராணுவம் அறுதியிட்டு சொல்லுமளவு நிலைமை படிப்படியாக மாறிப்போனதன் தொடக்கக் கண்ணி ராஜீவ் படுகொலையில் தான் இருக்கிறது” - இவ்வாறாக நூலாசிரியர் எழுதுவதில் எனக்கு ஒப்புதல் இல்லை.

இன்னும் மிகச்சரியாக சொல்லவேண்டுமானால் பிரபாகரனுக்கு மூன்றிலொரு பகுதி நிலப்பரப்பு, மூன்றில் இருபகுதி கடற்பரப்பு கிடைத்ததெல்லாம் ராஜீவ் படுகொலைக்குப் பிறகே. அடுத்த பத்தாண்டுகளில் பிரபாகரனும், அவரது இயக்கமும் அடைந்த வளர்ச்சி அலாதியானது. 91க்கும் 2006க்கும் இடையிலான சம்பவங்கள் இந்நூலில் விலாவரியாக காணக்கிடைக்கவில்லை. இலங்கையை சுருளவைத்த காட்டுநாயக்கா தாக்குதல் போன்றவற்றையாவது குறிப்பிட்டிருக்கலாம்.

நூலின் கடைசி அத்தியாயங்கள் வாரப்பத்திரிகை கவர்ஸ்டோரி பரபரப்பைக் கொண்டிருக்கிறது. நிஜமாகவே அவை வாரப்பத்திரிகையில் கவர்ஸ்டோரியாக வந்தவைதான் என்பதை நூலின் முன்னுரையில் அறிந்துகொள்ளவும் முடிகிறது. பிரபாகரன் மரணமடைந்துவிட்டார் என்று இந்த அத்தியாயங்களில் அடித்துப் பேசுகிறார் நூலாசிரியர். இதற்காக தான் சேகரித்த தரவுகளைப் பட்டியலிடுகிறார். அதே நேரத்தில் பிரபாகரன் மரணமடையவில்லை என்று நம்புபவர்கள் சொல்லும் காரணங்களையும் நேர்மையாக பத்தி பத்தியாக எழுதியிருக்கிறார்.

பிரபாகரன் இல்லாத நிலையில் அடுத்தது என்ன? என்று கேள்வி எழுப்பும் பா.ராகவன் தமிழருக்கான எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையை அச்சத்தோடு பேசுகிறார். முத்தாய்ப்பாக அவர் எழுதியிருப்பது : “ஓரினம் உரத்து அழக்கூடத் தெம்பில்லாமல் தேங்கிக் கிடக்கிறது. இன்னொரு இனமோ இனிப்பு வழங்கி, ஆடிப்பாடிக் கொண்டாடுகிறது. எப்படி இந்த இருவரும் ஒன்றாக வாழமுடியும்?”

நூலின் பெயர் : பிரபாகரன் - வாழ்வும், மரணமும்!

நூல் ஆசிரியர் : பா.ராகவன்

விலை : ரூ.100/-

பக்கங்கள் : 208

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்,
33/15, எல்டாம்ஸ் சாலை,
ஆழ்வார்ப்பேட்டை, சென்னை - 600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

நூலினை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்.

ஒவ்வொரு தமிழர் இல்ல நூலகத்திலும் கட்டாயம் இடம்பெற வேண்டிய நூல். பா.ராகவனின் மாஸ்டர் பீஸ் என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. மிக முக்கியமான இந்நூலின் அட்டைப்படம் மட்டும் என்னை அவ்வளவாக கவரவில்லை. விஜயகாந்த் படத்தின் ஓப்பனிங் சீன் மாதிரி ஃபயராக இருக்கவேண்டாமா பிரபாகரன் புத்தகத்தின் அட்டைப்படம்?

வேலுபிரபாகரனின் காமக்கதை!


காதல் என்ற சொல்லுக்கு எந்த பொருளுமில்லை. பெண்ணின் உடல் மீதான ஈர்ப்பும், காமமுமே நம் சமூகத்தில் காதல் என்று சொல்லப்படுகிறது. இந்த காதல் என்ற கருமாந்திரம் இல்லாவிட்டால் இந்தியர்கள் தாமஸ் ஆல்வா எடிசனுக்கு முன்பே பல்பை கண்டுபிடித்து ஆட்டு ஆட்டுவென்று ஆட்டியிருப்பார்கள் என்ற சிந்தனையை உரக்கச் சொல்லவே காதல் கதை என்ற செல்லுலாய்டு குப்பையை கொட்டியிருக்கிறார் வேலுபிரபாகரன்.

சென்சார் இப்படத்தைப் போட்டுக் குதறியதில் எந்த தப்புமேயில்லை. பாடாவதி படத்தை திரும்ப திரும்ப சோர்வடையாமல் போட்டுப் பார்த்து வெட்டித்தள்ளிய சென்சார் அதிகாரிகளுக்கு கலாச்சார அமைச்சகம் சம்பள உயர்வு கொடுக்கலாம். பாடல் காட்சிகளிலும், ஏனைய காட்சிகளிலும் தாராளமாக செமி நியூட். படத்தில் நடித்த நடிகைகளுக்கு மார்பகம் குறித்த பிரக்ஞையே சற்றும் இல்லை என்பதால் தமிழ் சினிமா ஹாலிவுட் அளவுக்கு சைஸில் பெருத்து விட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.

காதல் மற்றும் காமம் குறித்த வேலுபிரபாகரனின் உளறல்களுக்கு இடையே பகுத்தறிவுப் பிரச்சாரக் கொடுமை. ஒரு காட்சியில் வேலுபிரபாகரன் பெரியார் வேடத்தில் தோன்றிப் படுத்துகிறார். பெரியார் திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கிறது? கொஞ்சமும் சரக்கில்லாத மூன்றாந்தர இந்த பிட்டுப் படத்தை எடுத்துவிட்டு இத்தனை நாளாக ஊடகங்களில் வேலு பிலிம் காட்டிக் கொண்டிருந்தது ரொம்பவும் ஓவர். ரஜினிகாந்த் இப்படத்துக்கு பொருளாதார ரீதியாக உதவியிருந்தால் அதைவிட நகைச்சுவை வேறெதுவுமில்லை.

ஹீரோயின் ஷெர்லினின் கண்கள் மட்டும் ஆறுதல். முதல் படமென்றாலும் திறந்த மனதோடே கேமிராவை அணுகியிருக்கிறார். பாபிலோனா உள்ளிட்ட மற்ற கட்டைகளும் தங்கள் திறமையை சிறப்பாகவே வெளிக்காட்டியிருக்கிறார்கள். இவர்களின் இடுப்புக்கும், மார்புக்கும் ஸ்பெஷல் லைட்டிங் அமைப்பதிலேயே கேமிராமேனின் மொத்தக் கவனமும் இருந்திருக்கிறது.

பெண் உடல் மீதான கிளர்ச்சி இளைஞர்களுக்கு இருப்பதாலேயே நாட்டில் நடைபெறுகிற குற்றங்களில் எண்பது சதவிகிதம் பாலியல் குற்றமாக இருக்கிறது என்று முதல் காட்சியிலேயே பாடம் போதிக்கும் வேலுபிரபாகரன் இப்படம் மூலமாக தீர்வு எதையும் முன்வைக்கவில்லை. மாறாக மேலும் பாலியல் குற்றங்கள் முன்பைவிட தீர்க்கமாக நடைபெற உந்துசக்தியாக இப்படத்தின் காட்சிகளை அமைத்திருக்கிறார். வரைமுறையற்ற காமத்துக்கு சுதந்திரம் கோருகிறார். இந்த கண்ணறாவியைப் பார்த்துவிட்டு எந்த மாதிரியான விவாதம் சமூகத்தில் கிளம்பும் என்று அவர் எதிர்பார்க்கிறாரோ புரியவில்லை.

பிரபல கவர்ச்சி நடிகையை வேலுபிரபாகரன் திருமணம் செய்துகொண்டு சில நாட்கள் வாழ்ந்திருக்கிறார். அவர் மீது கொண்டது காதலல்ல, வெறும் காமம் என்றுணர்ந்து விலகியிருக்கிறார். பிறகு வேறொரு பெண்ணிடம் காதல்வசப்பட்டு.. மன்னிக்கவும் காமவசப்பட்டு, பின்னர் ஏமாற்றப்பட்டிருக்கிறார். எனவே காதல் என்பது பொய், காமம் என்பதே மெய் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். இப்படியாக சொந்தவாழ்வில் ஏற்பட்ட சில காம, காதல் குளறுபடிகளால் மனம் குழம்பி ‘வேலுபிரபாகரனின் காதல் கதை' என்று படமெடுத்து மக்களையும் குழப்ப கிளம்பியிருக்கிறார்.

ஆர்ட் டைரக்‌ஷன் தவிர்த்து தொழில்நுட்பரீதியாகவும், உள்ளடக்க ரீதியாகவும் மகா மகா மட்டமான படைப்பு இது. ஒரு மேட்டர் படத்துக்கு எப்படி இசையமைக்க வேண்டுமோ, அப்படியே கச்சிதமாக இசையமைத்திருக்கிறார் இசைஞானி. தியேட்டரில் எக்ஸ்ட்ரா பிட் ஓட்டாதது ஒன்றுதான் பாக்கி. மற்றபடி முழுநீல வண்ணப்படம். அரங்கு நிறைந்து ஓடுகிறது. இதுபோதாதா வேலுபிரபாகரனுக்கு?