5 செப்டம்பர், 2012

வாலிபன் சுற்றும் உலகம்


யார் யாரோ எம்.ஜி.ஆர் படம் எடுத்திருக்கிறேன் என்று பெருமை அடித்துக் கொள்ளும் காலம் இது. எம்.ஜி.ஆர் படத்தை எம்.ஜி.ஆரின் ரசிகனால் மட்டுமே எடுக்க முடியும். ஒரு ரசிகர் எடுத்திருக்கிறார். ‘புரட்சித்தலைவரின் பாணியில் எடுக்கப்பட்ட புதிய படம்’ என்று விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒரு ஊரில் ஒரு அப்பா, ஒரு அம்மா. அவர்களுக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள். ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்கிற பூவை செங்குட்டுவனின் பாட்டு அவர்களது குடும்பப்பாட்டு. அப்பாவாக நடிப்பவர் எம்.ஜி.ஆர் பாணி உடை அணிந்திருக்கிறார். முகம் மட்டும் ஓ.ஏ.கே தேவர் மாதிரியிருக்கிறது. கொஞ்சம் கருப்பு. அப்பாவின் பெயர் கோபாலன். அம்மா பெயர் சத்யா. மகன்களின் பெயர் ராமன், சந்திரன்.

‘நின்னுக்கோரீஈஈ வரண்ணும்’ என்று கவுண்டமணியிடம் பாட்டு கற்றுக் கொண்டவர் டாக்டராக நடித்திருக்கிறார். அவர் ஏதோ ஒரு ஃபார்முலாவை கண்டுபிடிக்கிறார். நம்பியார் அந்த ஃபார்முலாவை வெளிநாடுகளுக்கு விற்று கோடி, கோடியாய் சம்பாதிக்க திட்டமிடுகிறார்.
மாறாக கோபாலனோ அது இந்திய மக்களுக்கு உதவவேண்டும். இந்திய அரசிடம்தான் ஃபார்முலாவை ஒப்படைக்க வேண்டும் என்று போராடுகிறார். தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த டாக்டர், அந்த ஃபார்முலாவை மறைத்து வைத்திருக்கும் மேப்பை வரைந்து ஒரு நெக்லஸ் டாலரில் மறைத்து கோபாலனிடம் கொடுத்துவிடுகிறார். விஷயம் தெரியாத நம்பியார் ஆட்கள் டாக்டரை கொலை செய்துவிட்டு, ஃபார்முலாவை தேடி அலைகிறார்கள். டாக்டரை கொன்றது கோபாலன்தான் என்று போலிஸ் தேடுகிறது. ஃபார்முலா கோபாலனிடம்தான் இருக்கும் என்று நம்பியார் ஆட்களும் தேடுகிறார்கள். கோபாலன் தப்பிக்கும் போது அவரது குடும்பம் மூன்றாக பிரிகிறது.

இங்கேதான்டைட்டில்போடுகிறார்கள்.

டைட்டில் முடிந்ததுமே புரட்சித்தலைவர் மாதிரியே உடை, மேக்கப் போட்டிருக்கும் சந்திரன்வெற்றி, வெற்றி, வெற்றிஎன்று முழங்கிக்கொண்டே வந்து தன் தாயிடம் ஆசிபெறுகிறார். சந்திரன் தன் தாயோடு வளர்ந்துவாத்யார்ஆகிறார். கோபாலனுடன் அவரது மகள் மலேசியாவில் இருக்கிறார். ராமன், விசுவாசமான வேலைக்காரனுடன் வளர்ந்து டாக்டர் ஆகிறார். ஆனால் ராமனும், சந்திரனும் டபுள் ஆக்ஷன் புரட்சித்தலைவர் இல்லை என்பது பெரிய குறை. சந்திரன் மட்டும்தான் புரட்சித்தலைவராக நடித்திருக்கிறார். குடும்பம் எப்படி சேர்கிறது, ஃபார்முலாவின் கதி என்ன ஆனது என்று கதறக்கதற படமெடுத்து ராவடி செய்திருக்கிறார் இயக்குனர் .ஆர்.லலிதசாமி.

ஹீரோ எம்.ஜி.ஆர்.சிவா லாங்ஷாட்டில் தலைவர் மாதிரிதான் இருக்கிறார். ஆனால் க்ளோஸப்பில் பார்க்கும்போது தாங்கமுடியவில்லை. படம் பார்க்கும் மக்கள் திலகத்தின் ரசிகன் ஒவ்வொருவனும் இந்தக் காட்சிகளில் ரத்தக் கண்ணீர் வடிக்கிறான். ‘லுக்தான் ஒருமாதிரி இருக்கிறதே தவிர நடனம், பாட்டு, மேனரிசம் ஆகியவற்றில் குறைவைக்கவில்லை ஹீரோ. குறிப்பாக ஒரு காட்சியில் கருப்பு பேண்ட், சிகப்புச் சட்டை, கூலிங் க்ளாஸ் அணிந்து வரும்போது நாமே சிலிர்ப்படைந்துவிட்டோம். பழைய எம்.ஜி.ஆருக்கும், புது எம்.ஜி.ஆருக்குமான வித்தியாசம் என்னவென்றால் புதியவர் செல்போன் உபயோகிக்கிறார்.

போஸ்டரில் லதா படத்தைப் பார்த்து அவர்தான் ஹீரோயினோ என்று கலவரமடைந்து இருந்தோம். நல்லவேளையாக அவர் புரட்சித்தலைவரின் அம்மாவாக நடித்திருக்கிறார். சீரியல் அம்மாக்களின் நடிப்பை விஞ்சும் வகையில் சிறந்த நடிப்பு.

படத்தின் ஆரம்பத்தில் வரும் நம்பியார் படம் முழுக்க வராமல், அவரது மகன் அசோகன்தான் மெயின் வில்லன். அசோகன் தோன்றும் காட்சியில் எல்லாம் ரெண்டு உருட்டுக் கட்டைகள் இடமும், வலதுமாக ஜெயமாலினி பாணி டிரெஸ்ஸிங்கில் கிளுகிளுப்பூட்டுகிறார்கள். அசோகனின் அடியாட்கள் அந்த காலத்திலிருந்தே இன்னமும் படு முட்டாள்களாகதான் இருக்கிறார்கள்.

கலைஞரை எதிர்த்துபஞ்ச்டயலாக்குகளும் உண்டு. “ஊருக்குப் பிரச்சினைன்னா மேலிடத்துக்கு கடிதம்தான் எழுதுவே. உன் பொண்ணுக்கு ஏதாவதுன்னா நேராவே போயிடுவியா?” என்று புரட்சித்தலைவரின் அண்ணன் டாக்டர் ராமன், சக டாக்டரிடம் கேட்கிறார். சக டாக்டருக்கு தலையில் முடி இல்லை. கருப்புக்கண்ணாடி போட்டிருக்கிறார்.

புரட்சித்தலைவர் படங்களுக்கேயான பிரத்யேக கச்சாப் பொருட்களான அம்மா பாசம், தங்கை பாசம், பெரியவர்களுக்கு மரியாதை, அநியாயத்தை கண்டு ஆக்ரோஷமாக கொந்தளிப்பது, ஊருக்கு உழைப்பது, காதல், செக்ஸ் என்று அனைத்தையுமே கனக்கச்சிதமாக கைக்கொண்டுள்ளார் இயக்குனர். சண்டைக்காட்சிகள் சிறப்பு.

குறிப்பாக தங்கையை புரட்சித்தலைவர் மலேசியாவில் கண்டுகொள்ளும் காட்சி அபாரம்.

நீ எந்த ஊரும்மா?”

தமிழ்நாடு

உன் அப்பா

கோபாலன்

உன் அம்மா

சத்யா

உன் அண்ணன்?”

ராமன், சந்திரன்

தங்கச்சீஈஈஈஈஈஈ

நீங்க?”

நான்தாம்மா உன்னோட ரெண்டாவது அண்ணன் சந்திரன்

அண்ணாஆஆஆஆ

தங்கச்சீஈஈஈஈஈஈ

இப்படியான உருக்கமான, புதுமையான காட்சிகள் படம்நெடுக ஏராளமாக உண்டு. அம்மாவைப் பிரிந்த மகனும், மகளும் நீண்டகாலம் கழித்து காணும் காட்சி. அப்பாவைப் பிரிந்த மகன் அவரை காணும் காட்சி. கணவனும், மனைவியும் இணையும் காட்சி என்று நிறைய சொல்லலாம்.

இசை எம்.எஸ்.விஸ்வநாதன். டி.எம்.எஸ், எம்.எஸ்.வி., எஸ்.பி.பி.யெல்லாம் பாடியிருக்கிறார்கள். ‘உன்னை நான் சந்தித்தேன்பாட்டைத் தவிர்த்து மத்ததெல்லாம் டப்பா. பின்னணி இசை படு கோராமை. முத்தமிழ் பாடலின் லிரிக்ஸ் ஓக்கே. ‘உன் விழி முதல் தமிழ். உன் மொழி இரண்டாம் தமிழ். உன் இடை மூன்றாம் தமிழ். உன் நடை முத்தமிழ்என்று போகிறது. வாலி, காமகோடியான் இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய ஆறுதல் ஹீரோயின் மீனாட்சி. ஃபேஸ்கட் அடிப்படையில் சுமாரான ஃபிகர் என்றாலும், சரியான திம்சுக்கட்டை. முதுகு 70 எம்.எம்.மாக இருப்பதில் ஆச்சரியமில்லை. இவருக்கு தொப்பையும் சினிமாஸ்கோப். படத்தில் மொத்தமே மூன்றோ, நாலோ காட்சிகள்தான். ஆனால் பாடல்காட்சிகள் அதிகம். ஒரு அருவிப் பாடலில் முழங்காலுக்கு மேலே பாவாடையை தூக்குகிறார். இடுப்புக்கு மேலே கச்சிதமாக உடலைக் கவ்விய மேலாடை அணிந்து, பயங்கர ஆட்டு ஆட்டி நடனமாடுகிறார். இவரது கவர்ச்சியில் மயங்கி காதல்வசப்பட்ட தலைவரும் வாய்ப்பை பயன்படுத்தி செம தடவு தடவியிருக்கிறார்.

எம்.ஜி.ஆர் ஃபார்முலா எல்லாம் பக்காதான். ஆனால் சிரத்தையே இல்லாமல் சீரியஸாக எடுத்து ஸ்பூஃப் மாதிரி ஆக்கிவிட்டார்கள். பட்ஜெட் சிக்கனம் அநியாயம். மலேசியா காட்சிகளை எல்லாம் உள்ளூர் ஸ்டுடியோவில் படம் எடுத்துவிட்டு, மலேசியா என்று ஸ்லைட் போடுவதெல்லாம் கொடூரம். சீரியஸாகவே சந்தானம் மாதிரி ஹீரோவை வைத்து ஒரு எம்.ஜி.ஆர் ஃபார்முலா படமெடுத்தால் நிச்சயமாக சூப்பர்ஹிட் ஆகும். இந்தப்படம் படுமொக்கை என்றாலும், ஹார்ட்கோர் வாத்யார் ரசிகர்களுக்கு மட்டும் பரிந்துரைக்கிறோம்.

க்ளைமேக்ஸில் முதல்வராக புரட்சித்தலைவி வருகிறார். ஒரிஜினல் புரட்சித்தலைவி மட்டும் இந்தப் படத்தை பார்த்தாரென்றால் படமெடுத்த இயக்குனர், தயாரிப்பாளர், ஹீரோ, ஹீரோயின், கேமிராமேன், எடிட்டர், லைட் பாய்ஸ், ஆபிஸ் பாய்ஸ் என்று யூனிட்டில் இருந்த அத்தனை பேர்மீதும் அவதூறு வழக்கு தொடுத்துவிடுவார்.

1 செப்டம்பர், 2012

முகமூடி சோடாமூடி


பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மை பிலவ்ட் மிஷ்கின் சார்.

அடுத்த முறையிலிருந்து உங்கள் படங்கள் பேசட்டும்.

31 ஆகஸ்ட், 2012

ஸ்ரீதேவி விஜயம்


ஆர்.பாலகிருஷ்ணன் என்கிற சுத்தபத்தமான பெயரை சொன்னால் யாருக்கும் தெரியாது. பால்கி என்றால் போதும். விளம்பர ஏஜென்ஸிகளின் வட்டாரத்தில் அவ்வளவு பிரபலம். லிண்டாஸ் விளம்பர நிறுவனத்தின் தலைவர். ‘கறை நல்லது’ என்கிற கருத்துக்கு சொந்தக்காரர் என்றால்தான் இந்தியாவுக்கே இவரை தெரியும்.

இளையராஜாவின் வெறிபிடித்த ரசிகர். இளையராஜாவின் இசையால்தான் இவருக்கு சினிமா என்கிற துறையே பிடித்தது. சினிமாவில் எழுபதுகளை கட்டி ஆண்டவர்கள் அனைவரும் பால்கிக்கு ஆண்டவர்கள். அவ்வகையில்தான் அமிதாப். திடீரென்று ஒருநாள் இரவில் பால்கி இயக்குனர் ஆனார். அவரது ஆண்டவர்களில் ஒருவரான அமிதாப் பச்சன் ஹீரோ. படம் ‘சீனி கம்’. இரண்டு ஆண்டுகள் கழித்து இன்னொரு படம் எடுத்தார். இதிலும் அமிதாப்தான் ஹீரோ. படம் ‘பா’. இரண்டு படத்துக்குமே இளையராஜாதான் இசை.

அடுத்தது என்ன என்கிற கேள்வி எழுந்தபோது ஒரு படம் தயாரிக்கப் போகிறேன், நான் இயக்கப் போவதில்லை என்றார். சில நாட்கள் கழித்து தான் தயாரிக்கும் படத்தை இயக்கப் போகிறவர் கவுரி ஷிண்டே என்று அறிவித்தார். கவுரி யாருமில்லை பால்கியின் திருமதிதான்.

கவுரி படமெடுப்பது பெரிய சாதனையோ, உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் நிகழ்வோ இல்லை. அவரது படத்தில் ஸ்ரீதேவி கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்க நிகழ்வாக இதை மாற்றியிருக்கிறது. நம் விருதுநகரைச் சேர்ந்த ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என்று இந்திய மொழிகளை ஒரு கலக்கு கலக்கினார், இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் என்பதெல்லாம் ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். 96ல் அணில்கபூரின் அண்ணனை திருமணம் செய்துக் கொண்டார். 97ல் திரைப்படங்களில் நடிப்பதற்கு முழுக்கு போட்டார். கிட்டத்தட்ட பதினாறு வருடங்கள் கழித்து நடிக்க வருகிறார் என்பதால்தான் கவுரியின் திரையுலகப் பிரவேசம் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.
படத்தின் பெயர் இங்கிலீஷ் விங்கிலீஷ். அமெரிக்காவுக்கு ஒரு குடும்பம் குடிபெயர்கிறது. குடும்பத் தலைவியான ஸ்ரீதேவிக்கு இங்கிலீஷ் தெரியாது. குடும்பத்தில் குழந்தைகள், கணவர் எல்லோரும் இதற்காக அவரை கிண்டலடிப்பது வழக்கம். அமெரிக்க குடியுரிமை அதிகாரிகூட “தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசி, எங்கள் நாட்டில் என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்கிறார். ஸ்ரீதேவி எப்படி இங்கிலீஷ் கற்றுக் கொள்கிறார் என்பதுதான் மீதி கதை. முழுக்க முழுக்க நகைச்சுவையை இழைத்து, என்.ஆர்.ஐ குடும்பங்கள் காட்டும் பகட்டினைப் பற்றிய பகடிதான் இங்கிலீஷ் விங்கிலீஷ்.

கடந்த ஆகஸ்ட் 13 அன்று இப்படத்தின் ட்ரைலர் மும்பையில் வெளியிடப்பட்டது. அன்றுதான் ஸ்ரீதேவியின் 50வது பிறந்தநாளும் கூட. ஒரே வாரத்தில் யூட்யூப் தளத்தில் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் ட்ரைலரை பார்த்து ரசித்திருக்கிறார்கள். படம் ஷ்யூர் ஹிட், குறிப்பாக வெளிநாடுகளில் வசூல் அள்ளோ அள்ளுவென்று அள்ளும் என்று பேசிக்கொள்கிறார்கள். ஸ்ரீதேவிக்காகவும், பால்கிக்காகவும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க அமிதாப் ஒப்புக் கொண்டாராம். இந்திப்படவுலகில் அமிதாப்பின் cameo role, படங்களுக்கு பெரிய ஓபனிங்கை பெற்றுத் தருவதாக ஒரு செண்டிமெண்ட். சமீபத்தில் கூட போல் பச்சன், நூறு கோடி அள்ளியதற்கு அவர் ஒரு பாடலில் தோன்றியதும் ஒரு காரணம் என்கிறார்கள்.
படம் தமிழ் மற்றும் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் என்று தெரிகிறது. தமிழ், தெலுங்கு ரசிகர்கள் தங்கள் மொழியில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீதேவியை ரசிக்கப் போகிறார்கள். குறிப்பாக இப்படத்தின் தமிழ் வெர்ஷன் அக்டோபரிலோ, நவம்பரிலோ (அனேகமாக தீபாவளிக்கு கூட இருக்கலாம்) வெளியாகும்போது பரபரப்பு பற்றிக்கொள்ளப் போகிறது. ஏனெனில் இந்தியில் அமிதாப் நடிக்கும் ரோலில் தமிழில் தோன்றப் போகிறவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார். இதற்காக தயாரிப்பாளர் அளிக்க முன்வந்த சம்பளப் பணம் வேண்டாமென்று மறுத்திருக்கிறார் தல. மேலும் போக்குவரத்து, உடை, உதவியாளர் பேட்டா, என்று அவருக்கான இதரச் செலவுகள் அனைத்தையும் தன்னுடைய சொந்த செலவிலேயே செய்துக் கொண்டிருக்கிறார். மூத்த கலைஞரான ஸ்ரீதேவிக்கு செய்யும் மரியாதையாக இதை ‘தல’ எடுத்துக் கொண்டாராம்.


துக்கடா (மொழி அரசியல் ஆர்வமில்லாதவர்கள் வாசிக்க வேண்டாம்) :

படத்தின் ட்ரைலரைப் பார்த்தேன். அமெரிக்க குடியுரிமை அதிகாரியிடம் ஸ்ரீதேவி சொல்கிறார். “எனக்கு ஆங்கிலம் சரியாக வராது”

அதிகாரி கேட்கிறார் “ஆங்கிலம் தெரியாமல் எங்கள் நாட்டில் எப்படி இருப்பாய்?”


அதிகாரியோடு பணியாற்றும் இந்தியர் ஒருவர் உடனே சொல்கிறார். “இந்தி தெரியாமலேயே நீ எங்கள் நாட்டுக்கு வரலாம்”


இந்த காட்சி ட்ரைலரில் ஓடும்போது வட இந்திய திரையரங்குகளில் க்ளாப்ஸ் எகிறுகிறதாம். வட இந்தியர்களின் மொழிப்பற்றை நாம் பாராட்டுகிறோம். அதே நேரம் இதே கருத்தை எழுபது/எண்பது வருடங்களாக தம் மொழிக்காக திராவிட இயக்கம் இங்கே முன்வைத்துப் போராடிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு மொழிக்காக போராடியவர்களை ரவுடிகள் என்று இந்தியாவின் பிரதமரே கூட விமர்சித்திருக்கிறார். “இந்தி தெரியாதா? நீ எப்படி இந்தியன் ஆவாய்?” என்கிற வட இந்தியர்களின் அகம்பாவமான கேள்வியை இதுவரை கோடிமுறையாவது தென்னிந்தியர்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள்.


இந்திக்காரர்கள் தங்களை பெருந்தன்மையான இந்தியர்களாக இன்று உலக அரங்கில் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். அந்த குடியுரிமை அலுவலகக் காட்சி ‘இந்தி’யப் பெருந்தன்மையைதான் வலியுறுத்துகிறது. உண்மையில் நாம்தான் பெருந்தன்மையாளர்கள். தமிழ் தெரியாமலேயே தமிழ்நாட்டில் தொழில்நடத்தி, பரம்பரை பரம்பரையாக பிழைப்பு நடத்த இந்திக்காரர்களை அனுமதித்திருக்கிறோம்.
இங்கே வாழ்பவர்கள் தமிழ்தான் கற்கவேண்டும், தமிழ்தான் பேசவேண்டும் என்று நாம் நம் மொழியை திணித்ததில்லை. இந்தியாவின் பிராந்திய மக்களுக்கு இருக்கும் இந்த பெருந்தன்மையை, இந்தி பேசும் மெஜாரிட்டியினர் மதிக்கவேண்டும். கற்றுக்கொள்ள வேண்டும்.