2 செப்டம்பர், 2010
கவிதை நடிகன்!
இளம் எழுத்தாளர் விஜயமகேந்திரனின் ’நகரத்திற்கு வெளியே’ சிறுகதைத் தொகுப்பு குறித்து சென்னையில் நடந்த இலக்கிய விமர்சன கூட்டம் அது. ‘அகநாழிகை’ பொன்.வாசுதேவன் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார். டிஸ்கவரி புக் பேலஸ் என்ற புத்தகக்கடையில் நடந்து கொண்டிருந்தது. நூல் விமர்சனத்தை கவிஞர்கள் சிலர் நிகழ்த்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இலக்கிய ஆர்வலர்கள் கூடிய இருந்த அந்த கூட்டத்துக்கு இடையே திடீரென ஒரு கோமாளி “கருப்பூ.. சிவப்பூ” என்று உரத்தக் சிரிப்புக்கிடையே சொல்லிக்கொண்டே நுழைந்தார். கையில் வண்ண வண்ண பலூன்கள். முகம் முழுக்க வெள்ளைப்பூச்சு அரிதாரம். கருப்பு மையில் பெரிய மீசை. பெரிய சிகப்பு மூக்கு.
பார்வையாளர்களுக்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. சட்டென்று விமர்சன நிகழ்விடத்தைக் கைப்பற்றிய அக்கோமாளி, கவிஞர் ரமேஷ் பிரேதனின் ‘பலூன் வியாபாரி’ என்ற கவிதையை உரக்க வாசித்தவாறே முன்வரிசையில் இருந்தவர்களுக்கு பலூனை விற்க ஆரம்பித்தார். கவிதைகளின் வரிகளுக்கேற்ப முகபாவனைகளும், உடல்மொழியும் சொல்லுக்கு சொல் மாறிக்கொண்டே இருந்தது. சீரியஸ் இலக்கியத்தை எதிர்ப்பார்த்து வந்தவர்களுக்கு, ‘சிரி’யஸ்ஸான நிகழ்வு ஒரு விதூஷகனால் நிகழ்த்தப்பட்டதில் இரட்டை மகிழ்ச்சி.
பலூன் வியாபாரி கவிதை முடிந்ததுமே, ஆன்-த-ஸ்பாட்டில் கோமாளி வில்லனாக மாறினார். பார்வையாளர்கள் எதிரிலேயே கருப்பு மையை முகம் முழுக்க பூசினார். இப்போது அவரது கண்கள் கலங்கி, சிவந்து, முகம் விகாரமடைந்து அச்சமூட்டும் தோற்றம் நிலை கொண்டது. ரமேஷ் பிரேதனின் ‘காந்தியை கொன்றது தவறுதான்!’ கவிதையை வாசிக்கத் தொடங்கினார். கவிதையில் வாசகர்களுக்கு வைக்கப்படும் கேள்விகளை, பார்வையாளர்களை நோக்கி இவர் கேட்கத் தொடங்கினார். அரங்கில் இங்குமங்குமாக குதியாட்டம் போட்டபடி ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டே போனார். திடீரென துப்பாக்கியை நீட்டுவதைப் போல கையை நீட்டி ‘டுமீல்’லென்று சத்தமிட்டபடியே பிணமாக விழுந்தார். பார்வையாளர் மத்தியில் புத்தகத்தின் பக்கங்களை லேசாக புரட்டினாலும் ஒலி கேட்குமளவுக்கு நிசப்தம்.
அடுத்து சி.மோகன் எழுதிய ஒரு தலைப்பில்லாத கவிதை. ‘இன்று எனக்கு தூக்கம் வருகிறது’ இம்முறை மேக்கப்போடு, உடையும் மாறுகிறது. எல்லாமே பார்வையாளர்கள் கண்ணெதிரிலேயே. முகம் முழுக்க சிகப்பு மை. கருப்பு பனியனை துறந்து காவி பனியன். மனிதர்களின் குண இயல்புகளை வேறுபடுத்திக் காட்ட ‘வண்ணங்களை’ குறியீடாக பயன்படுத்துகிறார் அந்த நடிகர்.
பதினைந்து நிமிடத்தில் நிகழ்த்தப்பட்ட மூன்று கவிதை நிகழ்த்துதல்கள் இவை. கவிதை நிகழ்த்துதல் என்ற சொல் உங்களுக்குப் புதிதாக இருக்கலாம். கவியரங்கங்களில் கவிதைகள் வாசிக்கப்படுவதுதான் மரபு. நவீன இலக்கியம் வாசிப்பையும், நடிப்பையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் இப்போது ஈடுபட்டு வருகிறது. கவிதைகள் நாட்டிய நாடகங்களாக நிகழ்த்தப்பட்ட காலம் மாறி, புதுக்கவிதைகளை ஒரு திறமையான நடிகர் மூலமாக வாசகர்களுக்கு கொண்டு செல்லும் புதிய யுக்தி இது. ஏற்கனவே ஞானக்கூத்தன் போன்ற பெரிய கவிஞர்களின் கவிதைகள் இதுபோல நடிகர்களால் நடித்துக் காட்டப்பட்டதுண்டு. பொதுவாக கவிதைகளை வாசிக்கும்போது கிடைக்கும் அனுபவங்களின் தாக்கத்தை, இம்மாதிரியான கவிதை நிகழ்த்துதல்கள் பன்மடங்காக பெருக்குகிறது என்கிறார்கள் இலக்கிய ஆர்வலர்கள்.
மேற்கண்ட கவிதைகளை நிகழ்த்திய நடிகர் தம்பிச்சோழன். தருமபுரி மாவட்டம் ஊத்துப்பள்ளி என்கிற கிராமத்தில் பிறந்த இவர் கூத்துப்பட்டறை அமைப்பில் நாடகம் எழுதுவதற்கும், நடிப்பிற்கும் பயிற்சி பெற்றவர். தேசிய நாடகப்பள்ளி நடத்திய நவீன நடிப்புப் பயிற்சிகளில் பங்கெடுத்துக் கொண்டவர்.
இப்போது பள்ளிகளிலும், கல்லூரி மற்றும் தொண்டு நிறுவனங்களிலும் நாடகப் பயிற்சிப் பட்டறைகள் நடத்திக் கொண்டிருக்கிறார். கிராமப்புற பள்ளிக் குழந்தைகளுக்கு நாடகப் பயிற்சி அளிப்பதில் பெரும் ஆர்வம் கொண்டவர். தற்போது நமது பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களை செயல்வழிக் கற்றலாக நடிப்பு முறையில் கற்பிப்பது குறித்த ஆய்வினை செய்துவருகிறார்.
“ஒரு நடிகன் என்பவனுக்கு சினிமாவில் மட்டும்தான் வேலை இருக்கும் என்று நமது மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். வரலாறு நெடுக நடிகர்கள் பிற மொழி இலக்கியங்களை தம் தாய் மொழி மக்களுக்கு கற்றுக் கொடுக்கும் இலக்கியத் தூதர்களாக இருந்திருக்கிறார்கள். தம் மொழி சிறப்புகளை அயல்மொழியாளர்களுக்கும் தங்கள் நடிப்பு மூலமாக வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள்.
நடிகனென்றால் சினிமாவில் மட்டும்தான் நடிக்க முடியும் என்ற மனோபாவத்தில் இருந்து நாம் வெளிவர வேண்டும். எனவேதான் சிறந்த கவிதைகளை மக்களிடம் நடிப்பு மூலமாக பரப்பவேண்டும் என்று திட்டமிட்டேன். மேடை வைத்து, டிக்கெட் வாங்கி பிரம்மாண்டமாக நிகழ்த்தி காட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. நடிகன் என்றால் கிடைத்த எந்த ஒரு இடத்திலும் அவனது திறமையை நிரூபித்துக் காட்ட வேண்டும். இந்த பதினைந்து நிமிட நிகழ்வுக்கு எனக்கு ரூபாய் நூற்றி ஐம்பது மட்டுமே செலவானது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
சி. மோகன், அய்யப்ப மாதவன் போன்ற கவிஞர்களின் இன்னும் சில நல்ல கவிதைகளை நிகழ்த்திக் காட்ட தயாராகி வருகிறேன். நல்ல இலக்கியத்தை அறியாத சமூகம் நற்சமூகமாக மலராது. எனவேதான் நான் வாசித்து பெற்ற இன்பத்தை, நம் மக்களும் பெற வேண்டுமென்று எனக்குத் தெரிந்த நடிப்பு மூலமாக வெளிப்படுத்துகிறேன்” என்கிறார் தம்பிச்சோழன்.
காலத்துக்கேற்ப எல்லாவற்றின் வடிவங்களும் மாறித்தான் வந்திருக்கின்றன. மாற்றம் மட்டுமே என்றும் மாற்றமில்லாததாக இருக்கிறது. எதிர்காலத்தில் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை எழுதி பத்திரிகைக்கு அனுப்பாமல், ஒரு நல்ல நடிகரைப் பிடித்து மக்கள் மத்தியில் நேரடியாக நிகழ்த்திக் காட்டும் ட்ரெண்ட் கூட வெகுவிரைவில் வரக்கூடும்.
(நன்றி : புதிய தலைமுறை)
1 செப்டம்பர், 2010
கிருஷ்ண கிருஷ்ணா! (Adults only, Strictly 18+)
பாவம். இந்த மாய கிருஷ்ணனுக்கு டிரெஸ் போட கூட வக்கில்லாத அளவுக்கு வறுமை. FULL LONG குழலையும் தொலைச்சிட்டதாலே அழுதுக்கிட்டு நிக்கிறான்!
’ஆபாசக் கடவுள்’ கிருஷ்ணருக்கு ஏதோ ஒரு ஜெயந்தி சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்!
’ஆபாசக் கடவுள்’ கிருஷ்ணருக்கு ஏதோ ஒரு ஜெயந்தி சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்!
31 ஆகஸ்ட், 2010
தூக்குத்தண்டனை - எதிர்வினைகள்!
கடந்த பதிவான ’தூக்குத்தண்டனை’ எக்கச்சக்கமாக கண்டனங்களையும், குறைந்தளவிலான பாராட்டுகளையும், எகனை மொகனையான எதிர்வினைகளையும் பெற்றிருக்கிறது. ஃபேஸ்புக்கிலும், வலைப்பூவிலும் பெற்ற எதிர்வினைகளையும் விட மின்னஞ்சல்களில் பெற்றிருக்கும் எதிர்வினைகள் மிக அதிகம். இது ஒரு உலகளாவியப் பிரச்சினை என்பதால் தனிநபர் தொடர்பான, அவரவர் சார்பு அரசியல் தொடர்பான எதிர்வினைகளை விடுத்துவிட்டு, தனிப்பட்ட என் தேர்வில் நியாயமாக தெரியும் சில எதிர்வினைகளை முன்வைத்து மேற்கொண்டு உரையாடலாம் என திட்டமிட்டிருக்கிறேன்.
1. மூன்று மாணவிகளின் உயிர் என்ன கிள்ளுக்கீரையா? அவர்கள் கொல்லப்பட்டதை ஆதரிக்கிறீர்களா? உன் தங்கையையோ, அக்காவையோ உயிரோடு கொளுத்தியிருந்தால் இப்படிதான் எழுதியிருப்பாயா?
2. கொலைகாரர்களுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்குதான் சரி. இல்லையேல் மீண்டும் மீண்டும் கொலைகள் தொடரும்.
3. தூக்குத்தண்டனை கொடுப்பதை விட்டு விட்டு சிறையில் வைத்து லெக்பீஸோடு பிரியாணி போடச் சொல்லுகிறீர்களா? அரசுக்கும் இவர்களால் வெட்டிச்செலவு.
4. மரணதண்டனை வேண்டாம் சரி. வேறு என்னமாதிரியான தண்டனையை பரிந்துரைக்கிறீர்கள்.
5. பஸ் எரிப்பு கொடூரத்தை நேரில் கண்ட தோழர் சஞ்சய்காந்தியின் வாக்குமூலம் : http://www.blog.sanjaigandhi.com/2010/08/blog-post_30.html
இன்னும் ஏராளமான எதிர்வினைகள் வந்திருந்தாலும், மிக முக்கியமான விவாதத்துக்கான அடிப்படைக் கூறுகளை இவை கொண்டிருப்பதாக கருதுவதால், இவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து விவாதிக்கலாம் என்றிருக்கிறேன். என்னுடைய அரசியல் சார்பினை சுட்டிக்காட்டி ஆதரவாகவோ, எதிராகவோ வந்த எதிர்வினைகளை கைவிடுகிறேன். அதுபோலவே நான் பணிபுரியும் ஊடகத்தினை தொடர்புபடுத்தி எழுப்பப்பட்ட வினாக்களை வருத்தத்தோடு புறந்தள்ளுகிறேன்.
ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதாலேயே சொந்தக்கருத்து எதுவும் அந்நிறுவனத்தின் ஊழியனுக்கு இருந்துவிடக்கூடாது என்று பலபேர் அக்கறையோடு கச்சைக்கட்டி அலைவதை காண வேடிக்கையாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரை என்னுடைய தனிப்பட்ட கருத்துகளைதான் நான் முன்வைக்கிறேன். இதற்கும், என்னுடைய தொழிலுக்கும் முடிச்சுப் போட்டு பேசுவது அயோக்கியத்தனம். அதுமாதிரி பேசும் நபர்களை தயவுதாட்சணியமின்றி ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் வலைத்தளங்களில் புறக்கணித்தும் வருகிறேன்.
மரணதண்டனைக்கு எதிரான மனநிலையை ஒரு கொள்கையாகவே கொண்டவன் என்றமுறையில் மட்டுமே என்னுடைய கருத்துகளை தோழர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகிறேன். மரணதண்டனை தீர்ப்பு எழுதும் நீதிபதிகளோ, வாதாடிய வழக்கறிஞர்களோ தண்டனை குறித்து மகிழ்வு அடைந்து விடுவதில்லை. இறுகிய முகத்தோடுதான் பலரும் இதுபோன்ற தீர்ப்பினை வரவேற்கிறார்கள்.
ஓக்கே, லெட் அஸ் மூவ் டூ தி பாயிண்ட்ஸ்...
1. மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட சம்பவம் மிக மிக மோசமானது. திரும்பவும் அப்படியொரு நிகழ்வு ஏற்பட்டுவிடவே கூடாது என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. அவர்கள் கொல்லப்பட்டதை மனநிதானத்தோடு இருப்பவர்கள் யாரும் ஆதரித்து விடமுடியாது. என்னுடைய சிறுவயதில் ராஜீவ் கொல்லப்பட்டபோது அதை மகிழ்ச்சியோடு வரவேற்ற நிமிடங்கள் எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதை பிற்பாடுதான் உணர்ந்தேன். உயிரிழப்பு என்பது மோசமானது, அது யாருடைய உயிராக இருந்தாலும். கொலை செய்தவர்களையே பதிலுக்கு கொலை செய்யக்கூடாது என்று சொல்லுபவன், எப்படி மூன்று உயிர்கள் கொல்லப்பட்டதை வரவேற்பான் என்று லாஜிக்காக பின்னூட்டம் இடுபவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதே கருத்தை மதுரை தினகரன் ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் பொறுத்திப் பார்த்துக் கொள்ளலாம்.
2. மரணம் என்பது தண்டனையல்ல என்பதுதான் நமது வாதமே. உலகம் என்பதே ஒரு சிறைக்கூடம் என்பது தத்துவவாதிகளின் சிந்தனைகளில் உதிக்கும் கருத்து. இந்த சிறைக்கூடத்திலிருந்து ஒருவருக்கு விடுதலை அளிப்பது எப்படி தண்டனையாக இருக்கக்கூடும்? கொலை செய்தவர்களை பதிலுக்கு கொலை செய்துவிட்டால், இனி கொலைகள் தொடராது என்பது மிக மிக அபத்தமான வாதம். நாகரிகம் தொடங்கிய 3000 ஆண்டுகளாக உலகில் இருக்கும் நடைமுறை மரணதண்டனை. கொலைகள் நின்றுவிட்டதா என்ன?
3. குற்றவாளிகளை சிறையில் அடைத்து, வேறு குற்றங்கள் செய்யாமல் தடுப்பதைவிட அரசுக்கு வேறென்ன பெரிய வேலை இருந்துவிடப் போகிறது? குற்றவாளிகளும் மனிதர்கள்தானே? அவர்களுக்கு வயிறு இல்லையா? பசி இல்லையா? சக மனிதர்களுக்கு வாரத்துக்கு ஒருமுறை லெக் பீஸ் பிரியாணி போடுவதைகூட ஆட்சேபிக்கும் அளவுக்கு நம் சமூகத்தின் மனப்பான்மை குறுகிவிட்டதா என்று எண்ணத் தோன்றுகிறது. அதிலும் விருந்தோம்பலுக்கு பெயர்போன தமிழர்கள் இவ்வாறெல்லாம் கருத்து கொண்டிருப்பது அதிர்ச்சிகரமானது.
4. மரணம் என்பது தண்டனையல்ல, விடுதலை என்று தத்துவார்த்தமாக 2வது பாயிண்டில் விவாதித்து விட்டதால், நடைமுறையிலிருக்கும் ஆயுள் தண்டனைகளை அதிகபட்சத் தண்டனைகளாக பரிந்துரைக்கிறேன். இரட்டை ஆயுள் தண்டனை போல சாகும் வரை ஆயுள் தண்டனை கூட கொடுக்கலாம். நம்முடைய சட்டத்தில் ஏற்கனவே இதற்கு இடமுண்டு. தர்மபுரி கொலை சம்பவ குற்றவாளிகளைப் போன்ற கொடூரமான குற்றவாளிகளுக்கு நன்னடத்தை அடிப்படையிலோ அல்லது அரசுகளின் மன்னிப்பு அடிப்படையிலோ சாகும்வரை விடுதலையே கிடையாது என்று சட்டத்திருத்தமும் கொண்டு வரலாம். வாழ்வு முழுக்க நான்கு சுவர்கள்தான் உலகம் என்பதை விட கொடுமையான தண்டனை வேறென்ன இருந்துவிட முடியும்? - சிறைவாழ்க்கை எவ்வளவு கொடூரமானது என்பதை உணர ஹென்றி ஷாரியரின் பாப்பிலோன் (தமிழில் ரா.கி.ரங்கராஜனின் பட்டாம்பூச்சி) நூலை பரிந்துரைக்கிறேன்.
5. தோழர் சஞ்சய்காந்தி நேரில் கண்ட நிகழ்வுகளின் அடிப்படையில் அவரது உணர்வுகளை சில தகவல் பிழைகளோடு கொட்டியிருக்கிறார். அன்று அவர் கேட்ட மரண ஓலம் அவரது வாழ்வின் எல்லா நாட்களையும் தொந்தரவு செய்துக்கொண்டே இருக்கும் என்பதை உணரமுடிகிறது. அதன் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை அவசியம் நிறைவேற்றியாக வேண்டும் என்று கட்டளையிடுகிறார். ஒருவேளை இம்மூவரும் தூக்கில் இடப்பட்டால் - அதன் விளைவாக சிறைவாசலில் இறந்தவர்களின் உற்றாரும், உறவினரும் எழுப்பிடப்போகும் மரண ஓலத்தையும் தோழர் நேரில் கேட்பாரேயானால் - மரணதண்டனை குறித்த தனது மனப்பான்மையை மாற்றிக் கொள்வார் என்று நம்புகிறேன்.
1. மூன்று மாணவிகளின் உயிர் என்ன கிள்ளுக்கீரையா? அவர்கள் கொல்லப்பட்டதை ஆதரிக்கிறீர்களா? உன் தங்கையையோ, அக்காவையோ உயிரோடு கொளுத்தியிருந்தால் இப்படிதான் எழுதியிருப்பாயா?
2. கொலைகாரர்களுக்கு அதிகபட்ச தண்டனையான தூக்குதான் சரி. இல்லையேல் மீண்டும் மீண்டும் கொலைகள் தொடரும்.
3. தூக்குத்தண்டனை கொடுப்பதை விட்டு விட்டு சிறையில் வைத்து லெக்பீஸோடு பிரியாணி போடச் சொல்லுகிறீர்களா? அரசுக்கும் இவர்களால் வெட்டிச்செலவு.
4. மரணதண்டனை வேண்டாம் சரி. வேறு என்னமாதிரியான தண்டனையை பரிந்துரைக்கிறீர்கள்.
5. பஸ் எரிப்பு கொடூரத்தை நேரில் கண்ட தோழர் சஞ்சய்காந்தியின் வாக்குமூலம் : http://www.blog.sanjaigandhi.com/2010/08/blog-post_30.html
இன்னும் ஏராளமான எதிர்வினைகள் வந்திருந்தாலும், மிக முக்கியமான விவாதத்துக்கான அடிப்படைக் கூறுகளை இவை கொண்டிருப்பதாக கருதுவதால், இவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து விவாதிக்கலாம் என்றிருக்கிறேன். என்னுடைய அரசியல் சார்பினை சுட்டிக்காட்டி ஆதரவாகவோ, எதிராகவோ வந்த எதிர்வினைகளை கைவிடுகிறேன். அதுபோலவே நான் பணிபுரியும் ஊடகத்தினை தொடர்புபடுத்தி எழுப்பப்பட்ட வினாக்களை வருத்தத்தோடு புறந்தள்ளுகிறேன்.
ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதாலேயே சொந்தக்கருத்து எதுவும் அந்நிறுவனத்தின் ஊழியனுக்கு இருந்துவிடக்கூடாது என்று பலபேர் அக்கறையோடு கச்சைக்கட்டி அலைவதை காண வேடிக்கையாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரை என்னுடைய தனிப்பட்ட கருத்துகளைதான் நான் முன்வைக்கிறேன். இதற்கும், என்னுடைய தொழிலுக்கும் முடிச்சுப் போட்டு பேசுவது அயோக்கியத்தனம். அதுமாதிரி பேசும் நபர்களை தயவுதாட்சணியமின்றி ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் வலைத்தளங்களில் புறக்கணித்தும் வருகிறேன்.
மரணதண்டனைக்கு எதிரான மனநிலையை ஒரு கொள்கையாகவே கொண்டவன் என்றமுறையில் மட்டுமே என்னுடைய கருத்துகளை தோழர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகிறேன். மரணதண்டனை தீர்ப்பு எழுதும் நீதிபதிகளோ, வாதாடிய வழக்கறிஞர்களோ தண்டனை குறித்து மகிழ்வு அடைந்து விடுவதில்லை. இறுகிய முகத்தோடுதான் பலரும் இதுபோன்ற தீர்ப்பினை வரவேற்கிறார்கள்.
ஓக்கே, லெட் அஸ் மூவ் டூ தி பாயிண்ட்ஸ்...
1. மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட சம்பவம் மிக மிக மோசமானது. திரும்பவும் அப்படியொரு நிகழ்வு ஏற்பட்டுவிடவே கூடாது என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. அவர்கள் கொல்லப்பட்டதை மனநிதானத்தோடு இருப்பவர்கள் யாரும் ஆதரித்து விடமுடியாது. என்னுடைய சிறுவயதில் ராஜீவ் கொல்லப்பட்டபோது அதை மகிழ்ச்சியோடு வரவேற்ற நிமிடங்கள் எவ்வளவு அயோக்கியத்தனமானது என்பதை பிற்பாடுதான் உணர்ந்தேன். உயிரிழப்பு என்பது மோசமானது, அது யாருடைய உயிராக இருந்தாலும். கொலை செய்தவர்களையே பதிலுக்கு கொலை செய்யக்கூடாது என்று சொல்லுபவன், எப்படி மூன்று உயிர்கள் கொல்லப்பட்டதை வரவேற்பான் என்று லாஜிக்காக பின்னூட்டம் இடுபவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதே கருத்தை மதுரை தினகரன் ஊழியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் பொறுத்திப் பார்த்துக் கொள்ளலாம்.
2. மரணம் என்பது தண்டனையல்ல என்பதுதான் நமது வாதமே. உலகம் என்பதே ஒரு சிறைக்கூடம் என்பது தத்துவவாதிகளின் சிந்தனைகளில் உதிக்கும் கருத்து. இந்த சிறைக்கூடத்திலிருந்து ஒருவருக்கு விடுதலை அளிப்பது எப்படி தண்டனையாக இருக்கக்கூடும்? கொலை செய்தவர்களை பதிலுக்கு கொலை செய்துவிட்டால், இனி கொலைகள் தொடராது என்பது மிக மிக அபத்தமான வாதம். நாகரிகம் தொடங்கிய 3000 ஆண்டுகளாக உலகில் இருக்கும் நடைமுறை மரணதண்டனை. கொலைகள் நின்றுவிட்டதா என்ன?
3. குற்றவாளிகளை சிறையில் அடைத்து, வேறு குற்றங்கள் செய்யாமல் தடுப்பதைவிட அரசுக்கு வேறென்ன பெரிய வேலை இருந்துவிடப் போகிறது? குற்றவாளிகளும் மனிதர்கள்தானே? அவர்களுக்கு வயிறு இல்லையா? பசி இல்லையா? சக மனிதர்களுக்கு வாரத்துக்கு ஒருமுறை லெக் பீஸ் பிரியாணி போடுவதைகூட ஆட்சேபிக்கும் அளவுக்கு நம் சமூகத்தின் மனப்பான்மை குறுகிவிட்டதா என்று எண்ணத் தோன்றுகிறது. அதிலும் விருந்தோம்பலுக்கு பெயர்போன தமிழர்கள் இவ்வாறெல்லாம் கருத்து கொண்டிருப்பது அதிர்ச்சிகரமானது.
4. மரணம் என்பது தண்டனையல்ல, விடுதலை என்று தத்துவார்த்தமாக 2வது பாயிண்டில் விவாதித்து விட்டதால், நடைமுறையிலிருக்கும் ஆயுள் தண்டனைகளை அதிகபட்சத் தண்டனைகளாக பரிந்துரைக்கிறேன். இரட்டை ஆயுள் தண்டனை போல சாகும் வரை ஆயுள் தண்டனை கூட கொடுக்கலாம். நம்முடைய சட்டத்தில் ஏற்கனவே இதற்கு இடமுண்டு. தர்மபுரி கொலை சம்பவ குற்றவாளிகளைப் போன்ற கொடூரமான குற்றவாளிகளுக்கு நன்னடத்தை அடிப்படையிலோ அல்லது அரசுகளின் மன்னிப்பு அடிப்படையிலோ சாகும்வரை விடுதலையே கிடையாது என்று சட்டத்திருத்தமும் கொண்டு வரலாம். வாழ்வு முழுக்க நான்கு சுவர்கள்தான் உலகம் என்பதை விட கொடுமையான தண்டனை வேறென்ன இருந்துவிட முடியும்? - சிறைவாழ்க்கை எவ்வளவு கொடூரமானது என்பதை உணர ஹென்றி ஷாரியரின் பாப்பிலோன் (தமிழில் ரா.கி.ரங்கராஜனின் பட்டாம்பூச்சி) நூலை பரிந்துரைக்கிறேன்.
5. தோழர் சஞ்சய்காந்தி நேரில் கண்ட நிகழ்வுகளின் அடிப்படையில் அவரது உணர்வுகளை சில தகவல் பிழைகளோடு கொட்டியிருக்கிறார். அன்று அவர் கேட்ட மரண ஓலம் அவரது வாழ்வின் எல்லா நாட்களையும் தொந்தரவு செய்துக்கொண்டே இருக்கும் என்பதை உணரமுடிகிறது. அதன் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை அவசியம் நிறைவேற்றியாக வேண்டும் என்று கட்டளையிடுகிறார். ஒருவேளை இம்மூவரும் தூக்கில் இடப்பட்டால் - அதன் விளைவாக சிறைவாசலில் இறந்தவர்களின் உற்றாரும், உறவினரும் எழுப்பிடப்போகும் மரண ஓலத்தையும் தோழர் நேரில் கேட்பாரேயானால் - மரணதண்டனை குறித்த தனது மனப்பான்மையை மாற்றிக் கொள்வார் என்று நம்புகிறேன்.
30 ஆகஸ்ட், 2010
தூக்குத்தண்டனை!
தர்மபுரி பஸ் எரிப்பும், அதைத் தொடர்ந்து மாணவிகள் உயிரிழப்பும் நிச்சயமாக மன்னிக்க முடியாத குற்றமே. சேலம் நீதிமன்றம் அவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் மூவருக்கு தூக்குத் தண்டனையை தீர்ப்பாக விதித்தது. சென்னை உயர்நீதிமன்றமும் இவர்களது மரணதண்டனையை உறுதி செய்துவிட்ட நிலையில் உச்சநீதிமன்றமும் இப்போது கைவிரித்து விட்டதாக தெரிகிறது.
மரணதண்டனைக்கு எதிரான மனநிலை கொண்டவன் என்ற முறையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எனக்கு கடுமையான மன உளைச்சலைத் தருகிறது. கொலை செய்வது என்பதை எப்படி காட்டுமிராண்டித் தனமாக நினைக்கிறோமோ, அதுபோலவே கொலை செய்தவனை சட்டப்படி அரசு பதிலுக்கு கொலை செய்வதையும் காட்டுமிராண்டித்தனமாகவே நினைத்தாக வேண்டும். பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்று தண்டனை விதிக்கக்கூடிய அளவில்தான் இன்னமும் நம் சட்டம் பணியாற்றுகிறதா என்பதை சட்டத்தை உருவாக்குகிறவர்களும், பயன்படுத்துபவர்களும் பரிசீலனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
"நீதிமன்றம் விதிக்கிற தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படுகின்ற ஒவ்வொரு அதிகாலையிலும் மனித உரிமையின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது" என்று நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் ஒரு தீர்ப்பில் கூறியிருப்பதை இங்கே நினைவுகூர வேண்டும். "கடவுள் தந்த உயிரைப் பறிக்க எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது" என்பது இந்தியா தனது தேசப்பிதாவாக கொண்டாடும் உத்தமர் காந்தியின் வாக்கு.
பணத்தின் மீது காந்திப் படத்தை அச்சடிக்கும் இந்தியா, காந்தியின் சிந்தனைகளுக்கு ஓரளவுக்காவது மதிப்பு கொடுக்குமாயின், மரணதண்டனை என்ற காட்டுமிராண்டித்தனத்தினை சட்டத்திருத்தம் மூலமாக ஒழித்திட முன்வந்திட வேண்டும். மூன்றாம் உலக நாடுகள் பலவும் தங்களது நாடுகளில் இந்த காட்டுமிராண்டித்தனத்தினை ஏற்கனவே ஒழித்துவிட்டன. காந்தியால் சுதந்திரம் பெற்ற அகிம்சை நாடு, புத்தன் பிறந்த மண் என்றெல்லாம் உலகில் அறியப்படும் இந்தியா இன்னமும் இதை ஒழிக்காதது வெட்கக்கேடு. மவுண்ட் பேட்டனை கொடூரமாக கொன்ற கொலைகாரனுக்கு கூட பிரிட்டிஷ் அரசாங்கம் மரணத்தண்டனை விதிக்கவில்லை.
ஒரு மனிதனுக்கு மரணம் என்பதுதான் இறுதிநாள். லாஜிக்கலாக யோசித்துப் பார்த்தால் நீதிமன்ற ஆணையின் பேரில் தூக்குத்தண்டனை ஒருவனுக்கு இறுதிநாளாக அமைந்துவிட்டால் அது எப்படி தண்டனை ஆகுமென்று தெரியவில்லை. மரணத்தண்டனை விதிக்கப்பட்டு மரணமடையும் ஒருவனின் குடும்பம்தான் தண்டனையை அனுபவிக்கிறதே தவிர, உலகை விட்டு விடைபெற்றுவிடும் குற்றவாளி அல்ல.
ராஜிவ்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை பெற்ற பேரறிவாளன் - சாந்தன் - முருகன், அப்சல் குரு, இப்போது தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவ குற்றவாளிகள் நெடுஞ்செழியன் - ரவீந்திரன் - முனியப்பன் உள்ளிட்டோரில் யார் ஒருவர் தூக்கில் போடப்பட்டாலும், இந்தியாவின் அகிம்சை முகமூடி உலகநாடுகள் மத்தியில் சந்திசிரிக்கும் என்பது உறுதி.
சர்வதேச நாடுகள் மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என்று ஐ.நா. பல்லாண்டுகளாக கரடியாக கத்தி வருகிறது. உலகில் கிட்டத்தட்ட 135 நாடுகள் ஒட்டுமொத்தமாக இந்த காட்டுமிராண்டித் தண்டனையை ஒழித்துவிட்டன. சுமார் 30 நாடுகளில் மரணதண்டனை வழக்கத்தில் இருந்தாலும் கடந்த பத்தாண்டுகளாக யாருக்கும் இத்தண்டனையை விதிக்கவில்லை. சுமார் 60 நாடுகளில் தான் இக்கொடுமை வழக்கத்தில் இருக்கிறது. இதில் இந்தியாவும் ஒன்று.
நீதிமன்றங்களால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் பிற்பாடு கருணையளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதெல்லாம் ஏற்கனவே நடந்திருக்கும் முன்னுதாரணங்கள்தான். தமிழக அளவில் ஏற்கனவே தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தோழர் தியாகு, புலவர் கலியபெருமாள் போன்றவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ததில் முதல்வர் கலைஞருக்கு முக்கியப் பங்குண்டு. மனிதநேய அடிப்படையில் முதல்வர் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு ராஜீவ்காந்தி கொலைவழக்கு மற்றும் தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவங்களில் மரணத்தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிட ஆவன செய்திட வேண்டும். கொள்கையளவில் மரணத்தண்டனையை எதிர்ப்பது என்பது பகுத்தறிவாளர்களின் கடமையும் கூட என்பது கலைஞருக்கு நன்றாகவே தெரியும். இந்திய அளவில் முடியாவிட்டாலும் தமிழக அளவிலாவது மரணத்தண்டனை என்ற அரச பயங்கரவாதம் முற்றிலும் கலைஞரால் ஒழிக்கப்படுமேயானால் மனிதம் இருக்கும் வரை அவரது பெயரும் வரலாற்றில் நிலைத்திருக்கும்.
மரணதண்டனைக்கு எதிரான மனநிலை கொண்டவன் என்ற முறையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு எனக்கு கடுமையான மன உளைச்சலைத் தருகிறது. கொலை செய்வது என்பதை எப்படி காட்டுமிராண்டித் தனமாக நினைக்கிறோமோ, அதுபோலவே கொலை செய்தவனை சட்டப்படி அரசு பதிலுக்கு கொலை செய்வதையும் காட்டுமிராண்டித்தனமாகவே நினைத்தாக வேண்டும். பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்று தண்டனை விதிக்கக்கூடிய அளவில்தான் இன்னமும் நம் சட்டம் பணியாற்றுகிறதா என்பதை சட்டத்தை உருவாக்குகிறவர்களும், பயன்படுத்துபவர்களும் பரிசீலனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
"நீதிமன்றம் விதிக்கிற தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படுகின்ற ஒவ்வொரு அதிகாலையிலும் மனித உரிமையின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது" என்று நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் ஒரு தீர்ப்பில் கூறியிருப்பதை இங்கே நினைவுகூர வேண்டும். "கடவுள் தந்த உயிரைப் பறிக்க எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது" என்பது இந்தியா தனது தேசப்பிதாவாக கொண்டாடும் உத்தமர் காந்தியின் வாக்கு.
பணத்தின் மீது காந்திப் படத்தை அச்சடிக்கும் இந்தியா, காந்தியின் சிந்தனைகளுக்கு ஓரளவுக்காவது மதிப்பு கொடுக்குமாயின், மரணதண்டனை என்ற காட்டுமிராண்டித்தனத்தினை சட்டத்திருத்தம் மூலமாக ஒழித்திட முன்வந்திட வேண்டும். மூன்றாம் உலக நாடுகள் பலவும் தங்களது நாடுகளில் இந்த காட்டுமிராண்டித்தனத்தினை ஏற்கனவே ஒழித்துவிட்டன. காந்தியால் சுதந்திரம் பெற்ற அகிம்சை நாடு, புத்தன் பிறந்த மண் என்றெல்லாம் உலகில் அறியப்படும் இந்தியா இன்னமும் இதை ஒழிக்காதது வெட்கக்கேடு. மவுண்ட் பேட்டனை கொடூரமாக கொன்ற கொலைகாரனுக்கு கூட பிரிட்டிஷ் அரசாங்கம் மரணத்தண்டனை விதிக்கவில்லை.
ஒரு மனிதனுக்கு மரணம் என்பதுதான் இறுதிநாள். லாஜிக்கலாக யோசித்துப் பார்த்தால் நீதிமன்ற ஆணையின் பேரில் தூக்குத்தண்டனை ஒருவனுக்கு இறுதிநாளாக அமைந்துவிட்டால் அது எப்படி தண்டனை ஆகுமென்று தெரியவில்லை. மரணத்தண்டனை விதிக்கப்பட்டு மரணமடையும் ஒருவனின் குடும்பம்தான் தண்டனையை அனுபவிக்கிறதே தவிர, உலகை விட்டு விடைபெற்றுவிடும் குற்றவாளி அல்ல.
ராஜிவ்காந்தி கொலைவழக்கில் மரணதண்டனை பெற்ற பேரறிவாளன் - சாந்தன் - முருகன், அப்சல் குரு, இப்போது தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவ குற்றவாளிகள் நெடுஞ்செழியன் - ரவீந்திரன் - முனியப்பன் உள்ளிட்டோரில் யார் ஒருவர் தூக்கில் போடப்பட்டாலும், இந்தியாவின் அகிம்சை முகமூடி உலகநாடுகள் மத்தியில் சந்திசிரிக்கும் என்பது உறுதி.
சர்வதேச நாடுகள் மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என்று ஐ.நா. பல்லாண்டுகளாக கரடியாக கத்தி வருகிறது. உலகில் கிட்டத்தட்ட 135 நாடுகள் ஒட்டுமொத்தமாக இந்த காட்டுமிராண்டித் தண்டனையை ஒழித்துவிட்டன. சுமார் 30 நாடுகளில் மரணதண்டனை வழக்கத்தில் இருந்தாலும் கடந்த பத்தாண்டுகளாக யாருக்கும் இத்தண்டனையை விதிக்கவில்லை. சுமார் 60 நாடுகளில் தான் இக்கொடுமை வழக்கத்தில் இருக்கிறது. இதில் இந்தியாவும் ஒன்று.
நீதிமன்றங்களால் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் பிற்பாடு கருணையளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதெல்லாம் ஏற்கனவே நடந்திருக்கும் முன்னுதாரணங்கள்தான். தமிழக அளவில் ஏற்கனவே தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட தோழர் தியாகு, புலவர் கலியபெருமாள் போன்றவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ததில் முதல்வர் கலைஞருக்கு முக்கியப் பங்குண்டு. மனிதநேய அடிப்படையில் முதல்வர் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு ராஜீவ்காந்தி கொலைவழக்கு மற்றும் தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவங்களில் மரணத்தண்டனை விதிக்கப்பட்டவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றிட ஆவன செய்திட வேண்டும். கொள்கையளவில் மரணத்தண்டனையை எதிர்ப்பது என்பது பகுத்தறிவாளர்களின் கடமையும் கூட என்பது கலைஞருக்கு நன்றாகவே தெரியும். இந்திய அளவில் முடியாவிட்டாலும் தமிழக அளவிலாவது மரணத்தண்டனை என்ற அரச பயங்கரவாதம் முற்றிலும் கலைஞரால் ஒழிக்கப்படுமேயானால் மனிதம் இருக்கும் வரை அவரது பெயரும் வரலாற்றில் நிலைத்திருக்கும்.
28 ஆகஸ்ட், 2010
ஏ.டி.எம். ஏக்கம்!
ச்சே.. நம்மூரிலும்தான் ஏ.டி.எம். இருக்கிறது..
நம்மிடமும்தான் கார்டு இருக்கிறது..
நாமும்தான் அவ்வப்போது நூறோ, இருநூறோ எடுக்கிறோம்..
நம்பள்க்கி எல்லாம் ஏன் இதுமாதிரி நடக்கமாட்டேங்குது? :-(
தமிழக இளைஞர்களை ஏக்கம் கொள்ளவைக்கும் இனிய செய்தி தினமலரில் வந்திருக்கிறது : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=63041
அழகிகளிடம் ஏமாந்த சோணகிரி ஒரு தமிழராம்.
ம்.. பிரான்சுக்கு போனாலும் தமிழன் சிங்கத்தமிழன்தான்!
நம்மிடமும்தான் கார்டு இருக்கிறது..
நாமும்தான் அவ்வப்போது நூறோ, இருநூறோ எடுக்கிறோம்..
நம்பள்க்கி எல்லாம் ஏன் இதுமாதிரி நடக்கமாட்டேங்குது? :-(
தமிழக இளைஞர்களை ஏக்கம் கொள்ளவைக்கும் இனிய செய்தி தினமலரில் வந்திருக்கிறது : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=63041
அழகிகளிடம் ஏமாந்த சோணகிரி ஒரு தமிழராம்.
ம்.. பிரான்சுக்கு போனாலும் தமிழன் சிங்கத்தமிழன்தான்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)