30 ஜூலை, 2009

எலுமிச்சை மரம்!


உலகப்பட ஆர்வலர்களுக்காக'மாதம் ஒரு உலக சினிமா' திட்டத்தின் கீழ் வரும் ஞாயிறு அன்று திரையிடப்பட இருக்கும் திரைப்படம் லெமன் ட்ரீ. கிழக்கு டூரிங் டாக்கிஸ் பக்காவாக டெண்டு கொட்டாய் ரேஞ்சுக்கு புதுப்பிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் பெயர்: Lemon Tree (106 நிமிடங்கள்)

நாடு : இஸ்ரேல்

இயக்குநர் : Eran Riklis

நாள் : ஆகஸ்ட் 2ம் தேதி

நேரம் : மாலை 5.30 மணி

இடம் : கிழக்கு மொட்டை மாடி
எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை
சென்னை.

இப்படம் குறித்து சாரு எதுவும் எழுதவில்லை என்பதால், எஸ்.ராமகிருஷ்ணனின் லிங்க் இங்கே!

அனுமதி இலவசம்! வாய்ப்புள்ளோர் அனைவரும் வருக!!

28 ஜூலை, 2009

ஆபாசத்துக்கு எதிரான எதிர்வினை!


ச்சே.. கடுப்பாக இருக்கிறது. எங்கே பார்த்தாலும் ஆபாசம்! ரோட்டில் நடந்தால், பஸ்ஸில் பயணித்தால், டிவியை போட்டால், பேப்பரைப் பிரித்தால், சைபர்க்ரைமை வாசித்தால்..

டென்ஷன் ஆகிவிட மாட்டாரா தோழர் வினவு?

புரட்சிகர செயல்பாடுகள் இந்த ஆபாசத்தொல்லைகளால் அமுங்கிப் போய்விடாதா? அதனால் தான் 'ஆடுறா ராமா, ஆடுறா ராமா' என்று ஆட்டித் தள்ளியிருக்கிறார்.

புதியஜனநாயகமும், புதிய கலாச்சாரமும் வாசித்து, புரட்சிப் பட்டு தீப்பொறியாய் தெறித்து, வீங்கிப்போக வேண்டிய தோழரின் புரட்சி விழிகள், ஆபாசம் குடம் குடமாக பொங்கி வழியும் அஜால் குஜால் தொடரான சைபர் கிரைமை வாசிக்கலாமா? பு.ஜ.வையும், பு.க.வையும் தோழர்கள் கூட வாசிக்காவிட்டால் வேறு யார்தான் வாசிப்பது? இல்லையேல் அஜால் குஜால் தொடரைத்தான் வாசிப்பேன், வாசித்துவிட்டு கண்டனப் பதிவு போடுவேன் என்று தோழர்கள் சங்கல்பம் கட்டிக் கொண்டிருந்தால், புரட்சியை வேறு யார் கட்டமைப்பது?

தோழர்களுக்கு ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன். “நான் அவ்வளவு ஒர்த் இல்லே தோழர்!”

ஆபாசத்தைக் கண்டிக்கும் தோழர் வினவின் புனிதப்பதிவில் கண்ட சில வாசகங்கள் மெய்சிலிர்க்க வைத்தது. உதாரணத்துக்கு ”நீலப்படத்தில் எல்லாம் அவுத்துப் போட்டு சட்டுனு ஜோலியை முடிப்பதால் கிக் இல்லையாம். கிக் குறித்து வாத்ஸ்யானர் கூட இப்படி யோசித்திருக்க முடியாது. படக்கதையில் சபீதா முதல் ஷாட்டில் முழுசாக முக்காடு போட்டுத்தான் அறிமுகமாம். அப்புறம் உணர்ச்சிகளின் ஏற்றத்தாழ்வுகளுக்கேற்ப உடையும் குறையுமாம். நீலப்படத்தில் காமார பார்க்காத கோணங்களையும் வாளிப்புகளையும் இந்த படத்தில் ஓவியர் த்தரூபமாக வரைவதால் இக்கதை பல்லாயிரம் ஹிட்ஸாக வெற்றி பெற்றதாம்.” தோழர்களே! இதையே தானய்யா நானும் எழுதினேன். நான் எழுதினால் ஆபாசம். நீங்கள் எழுதினால் புரட்சி புண்ணாக்கு சிந்தனைகளோ?

தோழர் வினவு என்னவோ புற்றெடுத்து புரட்சித்தவம் செய்துகொண்டிருந்தது போலவும், ஆபாச சைபர் கிரைம் லக்கிலுக்கு மேனகையாய் வந்து புரட்சித்தவத்தை கலைத்துவிட்டதைப் போலவும் கழிசடைத் தோழர்கள் சிலர், வினவு தளத்தை கக்கூசுப் பொட்டியாக நினைத்து பின்னூட்டங்களை தனிநபர் தாக்குதல்களாக கழிந்து கொண்டிருக்கிறார்கள்.

தனிப்பட்ட முறையில் பேசிய விவரங்களை பொதுவில் வைப்பது எனக்கு ஏற்பில்லாத ஒன்று. இருந்தாலும் சில நேரங்களில் வைக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. லக்கியை தனிப்பட்ட முறையில் தாக்கும் விதமான போக்கு வினவு தளத்துக்கு இல்லையென்று தோழர் வினவு தொலைபேசி உரையாடலில் வாக்களித்திருந்த போதிலும், கண்கொத்திப் பாம்பாக காத்திருந்து, மோசமான வார்த்தைகளில் சாடும் தனிநபர் பின்னூட்டங்களை வெளியிட்டுவிட்டு, சம்பிரதாயத்துக்கு ஆட்சேபித்து மகிழும் போக்கு புரட்சியோ புரட்சி!

தோழர்களின் பார்வையில் ஆபாச எழுத்தாளனாக மாறிவிட்ட எனக்கிருக்கும் அறமும், நேர்மையும், தார்மீகமும், நாகரிகமும் கூட புரட்சியைக் கட்டமைக்க மார்க்சியப் போர்வையில் மாங்காய் அடித்துக் கொண்டிருக்கும் தோழர்களிடம் இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம். எப்படியிருப்பினும் தோழர்களின் தியாகம், உழைப்பு போன்றவைக்கு என் நெஞ்சில் என்றுமே நல்லிடம் உண்டு!

* - * - * - * - * - * - * - * - * - *

நண்பர் பரிசல்காரன் சில நாட்களாக கவிதைகளாக எழுதித்தள்ளிக் கொண்டிருக்கிறார். ஓரிரண்டு கவிதை மாதிரிதான் இருக்கிறது. தினத்தந்தியில் வரும் சிங்கிள் காலம் மேட்டரை மடக்கி, மடக்கி எழுதிவிட்டால் கவிதையாகி விடும் என்ற சூட்சுமம் இப்போதுதான் விளங்குகிறது. ஆனால் அனுஜன்யா போன்றவர்கள் பரிசலின் கவிதைகளுக்கு(?) போடும் பின்னூட்டம்.. சூச்சூ.. மாரி... இதுமாதிரி எல்லாம் ஓவராக கும்மியடித்தால், ஏன் முந்தாநாள் மழையில் முளைத்த காளான்கள் எல்லாம் பிரபல/மூத்த பதிவர்கள் மீது ஒண்ணுக்கு அடிக்கமாட்டார்கள்?

நல்லா இருந்தா நல்லா இருக்குன்னு சொல்லுங்கப்பூ. சும்மானாக்காச்சும் தெரிந்தவர் என்பதால் ஷேக்ஸ்பியர், வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் ரேஞ்சுக்கு புகழ்ந்து பின்னூட்டம் போட்டால் திருவிழாவில் காணாமல் போன குழந்தைகள் மாதிரி திரியும் புதுசுகள் வயிறெரிவது நியாயம்தானே?

பரிசல் மிக நல்ல உரையாடல் ஆசிரியன். அவர் கவிதை, கிவிதை என்று கெட்டு சீரழிந்துப்போய் அருமையான சிறுகதைகளையும், கட்டுரைகளையும் கவிதையாக்கி கொலைசெய்வது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று!

* - * - * - * - * - * - * - * - * - *

சர்ச்சை நாயகன் நர்சிம் என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என்று எட்டிப்பார்த்தேன். 'என்'ணங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார். அரசியல், பதிவுலகம், இத்யாதிகள் கலந்த கலக்கல் காக்டெயில். திரட்டிகளில் இருந்து விலகியபிறகு அரசியல் கூட எழுத ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது. ரொம்ப தைரியம்தான்!

* - * - * - * - * - * - * - * - * - *

அவ்வப்போது திட்டரில் (இதை ட்விட்டர் என்றும் சொல்கிறார்கள்) உலவ ஆரம்பித்திருக்கிறேன். வாழைப்பள ப்ளேவர் குறித்து நான் போட்ட ஒரு திட்டருக்கு, டோண்டு சாரின் பதில் திட்டரைக் கண்டு பேஜாராகிப் போனேன். அவருக்கு வயது அறுபத்து நான்கா, பதினான்கா என்ற சந்தேகம் வந்துவிட்டது. திட்டர் நேரத்தை தின்கிறது. ஆனாலும் டீக்கடையில் கூடி வெட்டியாகப் பேசுவதைப் போல சுவாரஸ்யமாக தானிருக்கிறது. 140 எழுத்துகளில் திட்டுவதற்கு வசதியான களமாக இருப்பதால் நான் திட்டர் என்றே சொல்கிறேன்.

* - * - * - * - * - * - * - * - * - *

வால்பையனின் வாய்க்குள் - சர்க்கரை கூட பத்தாது - சர்க்கரை கொடவுனையே கொட்டலாம். போனவார ஞாயிறு மதிய தூக்கத்தை போன் போட்டு கெடுத்தவர், “என்ன மாம்ஸூ. நீங்களும் பரிசல் மாதிரி ஆயிட்டீங்க. ஒரு சண்டை சச்சரவையே காணோம்!” என்றார். இதோ தோழர்கள் கும்மாளம் அடித்துவிட்டார்கள்.

* - * - * - * - * - * - * - * - * - *

இன்னும் தலைப்புக்கே வராமல், மொக்கை போட்டுக் கொண்டிருப்பதாக நினைப்பவர்களுக்கு...

ஆபாசத்துக்கு எதிரான எதிர்வினை ஒன்று!

27 ஜூலை, 2009

லக்கிலுக்கும், ஆபாசமும்!


இணையத்தில் சைபர்கிரைம் பற்றி தேடு பொறியில் வலைவிரித்தால் இலட்சக்கணக்கில் பக்கங்களும் படங்களும் கிடைக்கும். தமிழகத்தில் நடக்கும் குற்றங்களில் பீரோ புல்லிங், போலீசு-இன்கம்டாக்ஸ் வேடத்தில் வழிப்பறி, காக்காய் எச்சத்தை போட்டு குனியவைத்து பையை பறிப்பது, 500 நூறூரூபாய் தாளை போட்டு உங்களுடையதா என கவனத்தை திசைதிருப்பி வங்கியில் எடுத்த பணத்தை அபேஸ் பண்ணுவது, கவரிங் நகை மோசடி, ரியல் எஸ்டேட் மோசடி, ஓடும் லாரியில் திருவது என எண்ணற்ற திருட்டு சாதனைகள் உள்ளன. இத்துடன் விபச்சாரம் என்பதும் செல்போன், மாருதி கார் வரை விரிந்திருக்கிறது. மற்றபடி செல்காமராவில் பாலியல் மோசடிகள் என்று தொழில்நுட்பம் உதவிய வகையில் வக்கிரங்கள் வகைதொகையில்லாமல் வளர்ந்திருக்கின்றன.

ஆக மண்ணில் நடக்கும் சாதாக் குற்றங்கள், பாலியல் வக்கிரங்களை மானிடரின் இணையத்தில் செய்தால் அதற்கென்று தனி மவுசா வந்து விடப்போகிறது? அப்படி ஒரு மவுசை உருவாக்குவதற்காக குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகை, பதிவுலகில் நொறுக்குத்தீனி எழுத்தில் கொடிகொட்டிப்பறக்கும் லக்கிலுக்கை, யுவகிருஷ்ணா என்ற பெயரில் மவுசின் உதவியால் சைபர் கிரைம் என்ற தொடரை எழுதப் பணித்திருக்கிறது. இதற்கு பதிவுலகில் பல அப்பாவிகள் வாழ்த்து வேறு தெரிவித்திருந்தார்கள். எல்லாம் நம்ம லக்கி சுஜாதா, சாருநிவேதிதா மாதிரி ஆகட்டும் என்ற நல்லெண்ணம்தான். நம்மைப் பொறுத்தவரை இதற்கு அனுதாபம் கூட தெரிவிப்பதற்கு லாயக்கானதில்லை.

முதல் இரண்டு தொடரை படிக்கும்போதே லக்கியை கவனிக்க வேண்டுமென்று நினைத்து அப்புறம் சரி விட்டுத் தொலைப்போம் என்று மறந்த நேரத்தில் தனது பதினோராவது பாகத்தில் மீண்டும் பலான விசயத்தை லக்கி தொட்டிருப்பதால் அதைப் பற்றி எழுதவில்லையென்றால் அந்த மகரகுழத்தாள் கூட மன்னிக்கமாட்டாள்!

லக்கியை வைத்து சைபர் கிரைமை எழுதுவதற்கு குமுதம் ஆசிரியர்களும், பின்னாளில் இந்த தொடரை நூலாக வெளியிட வாய்ப்புள்ள பதிப்பக ஓனரும் பாடத்திட்டத்தை தயார் செய்திருப்பார்கள் போலும். அதன்படி செக்ஸ் மேட்டரை தூக்கலாக காண்பித்து அதற்கு ஒரு ரிலீஃபாக பொருளாதார மோசடிகளையும் வைத்து எழுத தீர்மானித்திருப்பார்கள் என்று தெரிகிறது. இரண்டு தொடர்களுக்கு பின்னர் நைஜீரியா மோசடிகள் எல்லாம் எழுதப்பட்டாலும் அது வாசகர்களிடம் எடுபடவில்லையோ தெரியாது. பின்னே இலட்சத்திலும் கோடியிலும் நைஜீரியா பிளேடு கும்பலிடம் ஏமாறுவதற்கு கே.ஆர்.அதியமானது நண்பர்களாக இருக்கும் முதலாளிகளுக்குத்தானே வழியிருக்கிறது. எட்டு ரூபாய் ரிப்போர்ட்டரை வாங்கி மேயும் சாதரணர்களுக்கு அந்த போர்ஜரி வேலைகள் அவ்வளவு ருசிக்காது என்பதே அவர்களது பொருளாதார யதார்த்தம்.

ஆனால் இந்த சாதரணர்களை சுண்டி இழுக்கும் மகிமை சிட்டுகுருவி லேகிய சமாச்சாரங்களில்தானே இருக்கிறது? முதல் தொடரில் குற்றவாளிகள் என்றால் பிளேடு பக்கிரி போன்று இருக்கத் தேவையில்லை கோட்டு சூட்டு போட்டுக்கூட குற்றங்கள் செய்வார்கள் என்று ஆரம்பித்து அப்புறம் இணையத்தில் தொழில்நுட்பத்தின் உதவியால் நடக்கும் மோசடிகளைப் பற்றி ஒரு பில்டப் கொடுத்துவிட்டு பிறகு சரியாக ‘மேட்டருக்கு’ வருகிறார் லக்கி.
திரிஷா குளியலறை சி.டி முதல் விசயம்.

ஒரு வரியில் சொல்ல வேண்டிய விசயத்தை முழு நீள நீலப்படமாக வருணிக்கிறார் லக்கி. வந்தாள், ஆடையைத் துறந்தாள், காமரா அலைகிறது என்று அந்த பொழிப்புரை படிப்பவர்களின் நாக்கில் அஜினோமோட்டோ கணக்காய் எச்சிலை ஊறவைத்து அப்புறம் திரிஷாவின் அம்மாவின் மறுப்பு அதுவும் அந்த வருண்ணைகளுக்கு பொருத்தமாய் திரிஷா அப்படி ஆடைகளை வீசமாட்டார், பாத்டப்பில்தான் குளிப்பார், அவரது பாடி லாங்குவேஜ் எனக்கு தெரியும் என வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சங்கதிகளை கூறி எல்லாம் முடிந்த பிறகு இந்த சைபர் குற்றங்களை தடை செய்யமுடியாது, மார்ஃபிங் தொழில் நுட்பத்தில் தலையை வெட்டி மாற்றலாம் என எல்லாம் அட்சுரசுத்தமாய் காயத்ரி மந்திரம் போல ஓதப்படுகிறது. அப்புறம் இந்த சி.டி, மொபைல் வழியாக எப்படியெல்லாம் பரவியது என விளக்கி விட்டு அடுத்த மேட்டருக்கு போகிறார்.

அது சிம்பு, நயன்தாராவின் உதடைக் கவ்விய படமாம். அதையும் விலாவாரியாக விவரித்துவிட்டு நயன்தாரா இதைப் பற்றி சைபர் கிரைமில் புகார் தெரிவிக்கவில்லை என்று வருத்தப்பட்டு முடித்து விட்டு மச்சான் சி.டிக்கு வருகிறார்.

இதில் நமீதா உடலமைப்பு கொண்ட பெண் இரு இளைஞர்களிடம் உறவு கொள்வது அரைமணி நேரம் ஓடுகிறதாம். நமீதா உடலமைப்பு ரசிகர்களுக்கு மனப்பாடமென்பதால் இந்த பெண்ணை நமீதா என்றே நம்புவார்கள் என கண்டுபிடிக்கிறார் லக்கி. இதைப்படித்து விட்டு உசிலம்பட்டியிலோ, மடிப்பாக்கத்திலோ மச்சான் சி.டி தேடி நூற்றுக்கணக்கான இளைஞர்கள் படையெடுத்திருப்பார்கள் என்பது நிச்சயம். இத்தனைக்கும் பிறகும் இந்த படங்களை வெறிப்பதற்கு நாக்கை தொங்கப்போட்டு அலையும் ஆண்களின் வக்கிரத்தை மருந்துக்கு கூட லக்கி கண்டிக்கவில்லை. அவரது நோக்கமே இவற்றை அறியாதவருக்கு அறிமுகம் செய்வதுதான், போர்னோ கிரைமை அறிமுகம் செய்கிறோம் என்ற பெயரில் ஆவலை உண்டுபண்ணுவதுதான் எனும்போது என்ன செய்வது? மற்றபடி இதெல்லம் சைபர் குற்றங்கள் என அவர் பொத்தாம் பொதுவாக கண்டிக்காமல் இல்லை. தலைப்பில் ஒழுக்கம் குறித்த எச்சரிக்கை, உடலில் ஒழுக்க மீறலை ஆவலுடன் கற்றுக் கொடுக்கும் சாமர்த்தியம். லக்கயின் இரட்டை வேடம் நன்றாகத்தான் பொருந்துகிறது!

இரண்டாவது தொடரில் செக்ஸ் ஆசைக்காக அலையும் மேட்டுகுடி ஆன்டிகள் என்று தூண்டில்போட்டு பணத்தை கறக்கும் கும்பலைப் பற்றி ஸ்டெப் பை ஸ்டெப்பாக விவரித்து வாசகர்களை எச்சரிக்கிறார். படிப்பவர்கள் இது போன்ற தூண்டில் புழுக்களிடம் சிக்கக்கூடாது என்ற நல்லெண்ணம்தான். ஐயா லக்கி அவர்களே இந்த மேட்டுக்குடி நடுத்தர வயது பெண்களை பிரச்சினை இல்லாமல் அனுபவிக்கத் துடிக்கும் ஆண் மனதின் அலைபாயும் எண்ணங்களை பற்றி இலேசாகக் கூட இடித்துரைக்க தோணவில்லையே ஏன்? பாலியல் ஒழுக்கத்தில் தனிப்பட்ட வாழ்வில் கற்பையும், பொதுவாழ்வில் விபச்சாரத்தையும் போற்றும் பார்ப்பனியத்தின் போலித்தனமான சமூக மதிப்பீடுகளை வைத்து காமத்தை இரகசிய உலகில் முடிவில்லாமல் ருசிக்க நினைக்கும் ஆண்களைப் பற்றியும் அவர்களது இரட்டை வேடத்தைப் பற்றியும் நோக்கினால்தானே இதில் பார்க்கும் குற்றவாளிகளை குறைந்த பட்சம் தமது பலவீனங்களை பரிசீலிக்க வைக்க முடியும்.

அதனால்தான் சொல்கிறோம் இந்த தொடர் சமூக ஆய்வல்ல, அதன் பெயரில் அறிமுகப்படுத்தப்படும் போர்னோதான் இதன் ஆன்மா. படிப்பவர்களின் மலிவான இச்சையை தொட்டுச் சொறிந்து பத்திரிகையின் எண்ணிக்கையை தக்கவைத்துக் கொள்ளும் சீப்பான தந்திரம்தான் இந்த சைபர் கிரைம்.

இதன்பிறகு பொருளாதார மோசடிகள் பக்கம் திரும்பிய லக்கி திரும்பிய வேகத்திலேயே யூ டார்ன் அடித்து மீண்டும் போர்னோ பக்கம் வந்தரா, வரவழைக்கப்பட்டாரா என்பது தெரியாது. ஆனால் லக்கி என்ற சூப்பர் மார்க்கெட்டில் எது வேண்டுமென்று கோரினாலும் அந்த சூப்பர் மார்க்கட் திருப்தி செய்யும் என்ற உண்மை நமக்கு தெரியவேண்டும்.

பதினோராவது தொடரில் சபிதா பாபியின் படக்கதையை படம் பார்ப்பவர்களுக்குக் கூட போரடிக்காத விதத்தில் எழுதுகிறார் லக்கி. பாபி என்றால் இந்தியில் அண்ணியாம். இந்த இந்தி அண்ணி செக்சுக்காக ஏங்கி வீட்டுக்கு வரும் சேல்ஸ்மேன் முதலான இளைஞர்களை அனுபவிக்கும் உணர்ச்சிப் போராட்டத்தை காமிக்ஸ் படக்கதையாக வெளியிடப்பட்டு இந்தியாவில் பெரும் வெற்றி பெற்றதாம். உயிருள்ள போர்னோ படங்கள் மவுசைக் கிளிக்கினால் கொட்டும் நெட்டில் இந்த உயிரற்ற ஓவியங்கள் வெற்றி பெற்றது எப்படி என்ற ‘சமூக ஆய்வை’ லக்கி அருவருப்பின்றி விளக்குகிறார்.

நீலப்படத்தில் எல்லாம் அவுத்துப் போட்டு சட்டுனு ஜோலியை முடிப்பதால் கிக் இல்லையாம். கிக் குறித்து வாத்ஸ்யானர் கூட இப்படி யோசித்திருக்க முடியாது. படக்கதையில் சபீதா முதல் ஷாட்டில் முழுசாக முக்காடு போட்டுத்தான் அறிமுகமாம். அப்புறம் உணர்ச்சிகளின் ஏற்றத்தாழ்வுகளுக்கேற்ப உடையும் குறையுமாம். நீலப்படத்தில் காமார பார்க்காத கோணங்களையும் வாளிப்புகளையும் இந்த படத்தில் ஓவியர் த்தரூபமாக வரைவதால் இக்கதை பல்லாயிரம் ஹிட்ஸாக வெற்றி பெற்றதாம்.

போர்னோ தளங்கள் இந்தியாவில் இயங்குவதற்கு தடை இருப்பதால் வெளிநாடுகளில் வைத்து நடத்தப்படுகிறதாம். டாக்டர் பிரகாஷ் புழலில் இருந்தாலும் அவரது படங்கள் இன்னும் உயிர்வாழ்கிறது என ஒரு போனஸ் செய்தியையும் லக்கி வாசகருக்கு தருகிறார். அப்போதுதானே பிரகாஷ் தளத்தின் படங்கள வாசகர்கள் ஆவலுடன் தேட முடியும். பிறகு சபிதா தளம் தடை செய்யப்பட்ட பிறகு அதன் உரிமையாளர் வெளிஉலகிற்கு தெரியவர என எல்லா சங்கதிகளையும் மர்மங்களை கட்டவிழ்க்கும் சுவாரசியத்துடன் தருகிறார். ஆகா பாலுணர்வு காமிக்ஸ் படக்கதை கூட கிக்கைத் தரும் போல என இந்நேரம் லக்கியின் புண்ணியத்தில் பல நூறு கைகள் கூகிலில் சபிதாபாபியைத் தேடிக் கொண்டிருக்கும். அந்தக் காலத்தில் சாண்டில்யனின் வாழத்தண்டு தொடை கதாநாயகிகளை வேறு வழியின்றி ருசித்த பெரிசுகளைப்போல இன்றைய இளசுகளுக்கு சபிதா அண்ணி. இரண்டும் ஓவியம்தான் என்றாலும் ரசனை மாறவேயில்லையே.

மற்றபடி தானும் போர்னோவை கண்டிப்பதாக பதிவு செய்யும் சடங்கிற்காக அரபு நாடுகளில் போர்னோ சைட்டுக்களை தடை செய்திருப்பதை ஆச்சரியத்துடன் முன்மாதிரியாக குறிப்பிடுகிறார். ஆனால் மக்களுக்கு மட்டும் காமத்தடை விதித்த ஷேக்குகளின் மாளிகைககளில் உள்ள டிஷ் ஆண்டாடனாக்கள் டிரிபிள் எக்ஸ் சானல்களை 24 மணிநேரமும் வழிய விட்டுக்கொண்டுதானே இருக்கிறது. இதே அரபுஷேக்குகள்தான் தமது பணத்திமிரினால் சிறுமிகளை மணப்பது முதல் எல்லா வக்கிரங்களையும் அரங்கேற்றுவதில் முன்னணி வகிக்கிறார்கள். பணக்காரர்களுக்கு வக்கிரத்தின் எல்லா வகையும் அனுபவிக்கலாம், ஏழைகள் செய்தால் அவை குற்றமென்பதுதான் அரபு நாடுகளின் விதிமுறை. இதையும் தவறாக குறிப்பிடும் அளவுக்கு லக்கியின் சமூக அறிவு போர்னோ படத்திற்கு மேலே வரமாட்டேன் என்கிறது.

இப்படி இன்றைய இளையோர் உலகம் இன்பத்தில் நீடித்திருப்பதைத் தவிர வேறு நோக்கமில்லை என்று இந்த தொடரைப் பார்த்து இன்னும் என்னவெல்லாம் அறிமுகம் செய்வார் என்று காத்திருக்கும் இதயங்களை வைத்து ரிப்போர்ட்டரின் பிரதிகள் சில ஆயிரம் கூடியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இதற்கிணையாக ஜூனியர் விகடனில் நிருபரின் டயரிக் குறிப்பு என்ற பெயரில் சினிமா போர்னோ கிசுகிசு நடையில் பிளந்து கட்டிக் கொண்டிருக்கிறது. இப்படி நீயா, நானா என்ற போட்டியில் லக்கி ரிப்போர்ட்டரின் பங்கை வெட்கமின்றி நிறைவேற்றி வருகிறார்.
நண்பர்களே, பாலியல் மோசடிகள் அன்றாடம் கொலைகளிலும், அவலத்திலும் நடக்கும் நாட்டில் இந்த பிரச்சினைகளைப் பேசுவோர் உண்மையில் எதைப் பற்றி பேச வேண்டும்? கள்ள உறவுக்காக ஆத்திரத்தில் ஒரு ஆண் ஒரு பெண்ணையோ, ஆணையோ கொலை செய்வது கூட பிரச்சினை இல்லை. அதை கள்ளக்காதலுக்காக கொலை என்ற தலைப்பில் கதையை கொலை செய்ய முடியாத கோழை கள்ளக்காதல் ஆர்வலர்களிடம் கேவலமாக படிக்க வைக்கிறார்களே அந்த தினசரிகள்தான் குற்றவாளிகள். சினிமாவில் சதையைக் காட்டி, தொலைக்காட்சியில் கள்ளக்காதல் ஒன்றும் கடினமல்ல என்று நெடுந்தொடரில் கற்பித்து, இப்படி ஊடகங்கள் எல்லாம் இயல்பான காமத்தை பிரம்மாண்டமாக வெறியூட்டி அலைய வைக்கின்றன.

இதுவே மேற்கத்திய நாடுகளில் இன்னும் பல்வேறு வகைகளில் நடந்து வருகிறது. ஆக பாலியல் பிரச்சினை பற்றி அதில் கணத்தில் தடுமாறி பிரச்சினைகளை வரவழைத்துக் கொள்ளும் மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கு ஒரு நியாயமான முயற்சி என்பதே இந்த ஊடகங்களை அம்பலப்படுத்துவதில்தான் ஆரம்பிக்க முடியும். மாறாக அந்த கயமைத்தனத்தில் இணைந்து கொண்டு சைபர் கிரைம் என்ற பெயரில் அதைப் பற்றி தெரியாதவர்களுக்கு இணைய போர்னோக்களை கா(ர்)ம சிரத்தையுடன் கற்றுக் கொடுக்கும் வேலையைத்தான் லக்கி, ரிப்போர்ட்டரின் ஆணைக்கிணங்க ஊதியம் வாங்கிக்கொண்டு செய்கிறார். பெண்ணுடலை குதறி தின்னும் பண்டமாக கருதும் ஆணின் மனசாட்சியை இந்த தொடர் ஒருபோதும் உலுக்கப் போவதில்லை. மாறாக அப்படி வெறியுடன் தின்னுவதற்கு நூற்றுக்கணக்கான புதிய முறைகளை லக்கி பக்திப் பரவசத்துடன் அறிமுகம் செய்கிறார்.

சும்மா வெட்கப்படாதீங்க சார் என்று நடிகைகளின் அங்கங்களை தெரிவிக்கும் படங்கள் லக்கியின் பிரபலத்திற்கு ஒரு முக்கியமான காரணமென்றால் யாராவது அதை மறுக்க முடியுமா? அதை வெறும் நகைச்சுவை என்றே பலரும் கருதுகிறார்கள். இப்போது ரிப்போர்ட்டரில் லக்கியின் கைங்கரியத்தை பார்க்கும் போது இனிமேலும் அதை வெறும் நகைச்சுவை என்று கருத முடியாது. ஆனால் லக்கி அவர்களே! இப்படி ஒரு பெண்ணுடலை ஆணின் வக்கிரத்திற்கு இரையாக்குவதன் மூலம் நீங்கள் முழு பெண்ணினத்தையும் கேவலப்படுத்துகிறீர்கள். உங்களுக்கு தமிழ்மொழி எனும் அழகான பெண் குழந்தை பிறந்ததற்கு பல வாசகிகள் பாசத்துடன் அண்ணாவிற்கு வாழ்த்து தெரிவித்ததையும் பதிவு செய்திருக்கிறீர்கள். அத்தகைய பெண்களுக்கு நீங்கள் எழுதும் போர்னோ கிரைமை சமர்ப்பணம் செய்யுங்கள் லக்கி! SHAME ON YOU !!

(நன்றி : வினவு.காம்)




ஒரு வாழ்த்து வெண்பா!

(தன் வலைப்பதிவில் கவர்ச்சிப் படங்களாக இடும் பதிவர் லக்கிலுக், பலான புத்தகங்களின் மார்க்கெட் விழுந்துவிட்டது என்று டிவிட்டரில் கவலைப்பட்டபோது பதிலாக எழுதியது)

படம்போட்டு மனதைப் பிடித்தார் இவர்
இடம்தேடி தேனியாய் மொய்த்தார்பலர் - தடம்
புரண்டு தன்மார்க்கெட் தேயுதே லக்கியாலென
மிரண்டுஅழு தாரேசரோசா தேவி

-இவன்சிவன்
(July 22, 2009)

யோகா டீச்சர்!


’யோகா டீச்சர்!’ - மலையாளப் பிட்டு படத்தின் டைட்டில் மாதிரி இருக்குதில்லே?

நான்கைந்து வருஷங்களுக்கு முன்னால் நடிகர் நாகார்ஜூனனின் மகன் நாகசைதன்யாவுக்கு யோகா கற்றுக் கொடுக்க ஒரு டீச்சர் பெங்களூரில் இருந்து வந்தார். யோகா டீச்சர் என்றால் சந்நியாசினி மாதிரி மஞ்சள், காவி ட்ரெஸ்ஸில் அழுது வடிந்துகொண்டு இல்லாமல் ப்ரெஷ்ஷாக மாடர்ன் ட்ரெஸ்ஸில் இருந்தார். ஃபிகரும் சூப்பராக இருக்க ஸ்டூடண்டின் அப்பா ரொம்ப இம்ப்ரஸ் ஆகிவிட்டார். விளைவு அவர் நடித்த ‘சூப்பர்’ படத்தில் துண்டு வேடத்தில் துண்டு கட்டிக்கொண்டு அனுஷ்கா அறிமுகம் ஆனார்.

ஏனோ அனுஷ்காவின் கவர்ச்சி அப்போது யாரையும் கவரவில்லை. அடுத்து ஒரு படம் இழுத்துப் போர்த்துக் கொண்டு நடித்தார். நடிப்பு சுமாராக இருந்ததாக பேசிக்கொண்டார்கள். இதே நேரத்தில் மெகாஸ்டாரின் ஸ்டாலின் படத்தின் ஒரு சூப்பர் டபுக்கு டபான் டேன்ஸ் ஆட அனுஷ்காவுக்கு வாய்ப்பு வந்தது. அம்மணி சூப்பர்ஹிட் ஆனார். அடுத்து ரவிதேஜாவோடு நடித்த விக்ரமகடு அனுஷ்காவின் சதைக்காட்சிக்காகவே சக்கைப்போடு போட்டது.

தென்னிந்தியாவுக்கு வெற்றிகரமான க்ளாமர் குயின் ரெடி! இன்றைய தெலுங்கு பில்லா வரை அனுஷ்காவின் கவர்ச்சிக்கு எல்லோரும் அடிமை. மாதவனின் ‘ரெண்டு’ மூலமாக தமிழுக்கும் வந்தார். சிலுக்கு ஸ்மிதா, டிஸ்கோ சாந்திகளை மிஞ்சும் வகையில் அம்மணி ‘திறமை’ காட்டியும், அப்போது மாதவனுக்கு இருந்த ராசி படத்தை பப்படமாக்கி விட்டது. திரும்ப தமிழுக்கு வரக்கூடிய வாய்ப்பே அவருக்கு அதனால் அமையாமல் போய்விட்டது.

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக இரட்டை வேடத்தில் நடிக்க இவரை கோடிராமகிருஷ்ணா ஒப்பந்தம் செய்திருந்தார். “அந்தப் பொண்ணையா நடிக்க வெக்கிறீங்க? மூஞ்சியிலே ரியாக்‌ஷனே வராதே?” என்று இயக்குனரை பலரும் பயமுறுத்தினார்கள். மிகக்குறைந்த சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டு அனுஷ்கா நடித்தார். கிளாமர் குயினான அனுஷ்கா அப்படத்தில் விஜயசாந்தி கெத்துக்கு ஃபிட் ஆகும் கேரக்டரில் சிரமப்பட்டு நடிக்க வேண்டியதாயிற்று. நன்றாக வந்த டேக்குகளையே திரும்ப திரும்ப எடுக்கும் ராமகிருஷ்ணா அனுஷ்காவின் பெண்டினை நிமிர்த்தினார்.

பல தடைகளுக்குப் பிறகு வெளிவந்த ‘அருந்ததீ!’ இன்று தென்னிந்தியாவின் நெ.1 நடிகையாக அனுஷ்காவை மாற்றியிருக்கிறது. தெலுங்கு பட கலர்ஃபுல் வசூல் ரெகார்டுகளை அனாயசமாக ஒரு ஹீரோயின் ஓரியண்டட் படம் உடைத்து தெரித்திருக்கிறது. கால்ஷீட் டயரி அடுத்த ரெண்டு வருடத்துக்கு ஃபுல். தமிழில் டப் செய்யப்பட்டும் சக்கைப்போடு போட, இப்போது தமிழ், தெலுங்கு இருமொழிகளிலுமே இவர் தான் டாப். அம்மணியின் சம்பளம் இப்போது அருந்ததிக்கு வாங்கியதை விட இருபது மடங்கு என்று ஹைதராபாத்வாலாக்கள் கிசுகிசுக்கிறார்கள். அதாவது கிட்டத்தட்ட ஒன் சி.

அழகான ஹீரோயின்களுக்கு குரல் எப்போதுமே திருஷ்டி படிகாரம். ஆனால் அனுஷ்கா பேசினால் உண்மையிலேயே குயில் கூவுவது போல இருக்கும். சூப்பர் மற்றும் ரெண்டு படங்களில் சொந்தக்குரலில் பாடியிருக்கிறார் என்பது நிறைய பேருக்கு தெரியாது.

படப்பிடிப்பு இடைவேளைகளில் கொஞ்ச நேரம் கிடைத்ததுமே யோகா செய்ய கிளம்பிவிடுவார் இந்த யோகா டீச்சர். சும்மா இருக்கும் நேரங்களில் அக்கம்பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கு இன்னமும் யோகா சொல்லிக் கொடுக்கிறாராம். வித்தியாசமான ஹாபி ஒன்று இவருக்கு உண்டு. இயற்கை சீற்றங்கள் குறித்த படங்களையும், செய்தித் துண்டுகளையும் சேகரித்து ஆல்பம் உருவாக்குவது.

நிறையபேர் நினைப்பது போல இவர் மும்பை இறக்குமதியல்ல. கர்நாடகாவின் மங்களூரில் பிறந்தவர். துளு தாய்மொழி. முழுப்பெயர் அனுஷ்கா ஷெட்டி. பார்ப்பதற்கு ஸ்வீட்டாக இருப்பதால் இவருக்கு ஸ்வீட்டி என்று செல்லப்பெயர் உண்டு. வயசு என்ன இருக்கும் என்று யாராலேயாவது யூகிக்க முடிகிறதா? 1981ல் பிறந்தவர். கணக்குப் பண்ண தெரிந்தவர்கள் கணக்குப் பண்ணிக் கொள்ளுங்கள். இவருடைய யோகா குரு பரத் தாக்கூர், பூமிகாவின் ஹஸ்பெண்ட்.

அனுஷ்கா மாதிரி யோகாடீச்சர் சென்னையில் இருந்தால் சொல்லுங்கள். யோகாவும், மற்றவையும் கற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறது!

26 ஜூலை, 2009

புதுப்பேட்டை!


செல்வராகவன் இயக்கிய படமல்ல. சென்னையின் டெட்ராய்ட். அண்ணாசாலையிலிருந்து தாராப்பூர் டவர்ஸ் அருகே லெஃப்ட் அடித்து நேராக போனால் சிந்தாதிரிப்பேட்டை. பாலத்தில் இடதுபக்கமாக திரும்பினால் புதுப்பேட்டை. இருசக்கர வாகன நட்டு போல்ட்டிலிருந்து மெர்சிடிஸ் பென்ஸ் காரின் ஸ்பேர் பார்ட்ஸ் வரை கிடைக்குமிடம்.

கிட்டத்தட்ட அறுபதாண்டுகள் பழமை வாய்ந்த மோட்டார் மார்க்கெட் இது என்கிறார்கள். ஆயிரம் கடைகள் இருக்கிறது. எல்லாக் கடைகளுமே இரும்புக் குப்பைகளால் நிரப்பப் பட்டிருக்கிறது. இந்த பகுதிக்கு ‘ஆட்டோ நகர்' என்று பெயர் வைக்க வேண்டுமென்பது இப்பகுதி வியாபாரிகளின் நீண்டநாள் கோரிக்கை. கடை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் ‘பாய்'கள். ஆங்காங்கே ‘இன்ஷா அல்லா' அதிகமாக கேட்கமுடிகிறது.

பொதுவாக இந்த இரண்டு பத்திகளையும் வாசிப்பவர்களுக்கு விவகாரமாக எதுவும் தெரிந்திருக்காது. பொல்லாதவன் படத்தில் தனுஷின் பைக் தொலைந்துவிடும் அல்லவா? உடனே தனுஷ் போய் தேடும் இடம் புதுப்பேட்டை. மண்ணில் புதைக்கப்பட்ட பல்சர் ஒன்றை காட்டுவார்களே? அந்த இடம் தான் புதுப்பேட்டை. சென்னையிலும், புறநகரிலும் எந்த பைக் தொலைந்தாலும் எல்லோரும் ஓடிப்போய் தேடுவது புதுப்பேட்டையில் தான். தேடிய எவருக்குமே இதுவரை பைக் திரும்ப கிடைத்ததாக சரித்திரமில்லை. பத்தே நிமிடத்தில் ஒரு பைக்கை பார்ட் பார்ட்டாக பிரித்து போடக்கூடிய வல்லுநர்கள் நிறைந்த இடம் இது.

சீப்பாக காருக்கும், டூவீலருக்கும் ஸ்பேர் பார்ட்ஸ் ஏதாவது வேண்டுமென்றால் தாராளமாக புதுப்பேட்டைக்கு போகலாம். செகண்ட் ஹேண்டில் நீங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விலைக்கு எதுவேண்டுமானாலும் கிடைக்கும். அந்த காலத்து பேபி ஸ்கூட்டருக்கான ஸ்பேர் பார்ட்ஸ் கூட இன்னமும் இங்கே கிடைக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிற்கான கார் ஆடியோ செட்டை நம் நண்பர் ஒருவர் இங்கே இருபதாயிரத்துக்கு முடித்துக்கொண்டு வந்தார் என்றால் நம்ப கடினமாக தானிருக்கும்.

இங்கே ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொன்று ஸ்பெஷல். டூவீலர் ஸ்பேர் பார்ட்ஸ் வாங்க வெங்கடாச்சல நாயக்கன் தெரு. லைட், இண்டிகேட்டர், மீட்டர் போன்ற எலக்ட்ரிக்கல் சமாச்சாரங்களுக்கு வெங்கடாச்சல ஆசாரி தெரு. கார், வேன் ஸ்பேர்களுக்கு ஆதித்தனார் சாலை. ஒட்டுமொத்தமாக பாடியே (சேஸிங் வகையறாக்கள்) வேண்டுமானால் கூவம் சாலை.

புதுப்பேட்டைக்குள் நுழைந்ததுமே ‘இன்னா சார் வோணும்? சொல்லு சார். எதா இருந்தாலும் கொடுத்துடலாம்' என்று எதிர்படும் எல்லா கடைக்காரர்களுமே சொல்லி வைத்தாற்போல கேட்பார்கள். நான் போன அன்று இன் செய்த சட்டையை எடுத்து விட்டேன், தலையை கலைத்து விட்டுக் கொண்டேன். வாயில் ஒரு மாணிக்சந்த் போட்டு, இல்லாத கடுமையை ஒரு ‘கெத்'துக்காக முகத்தில் வைத்துக்கொண்டேன். மூஞ்சை பார்த்து ஏமாளி என்று முடிவுகட்டிவிடக்கூடாது இல்லையா?

“சிடி டான் டேங்க் வேணும்ணா. இருக்கா?”

”நேரா போய் ரெண்டாவது ரைட் அடி”

ரெண்டாவது ரைட்டு ரொம்ப குறுகலானது. டூவீலர் போவதே கடினம். இருபக்கமும் ஏராளமான வண்டிகள் கடைகள் முன்பாக நிறுத்தப்பட்டிருக்கும். தெரியாத்தனமாக ஒரு ஆட்டோக்காரர் உள்ளே நுழைந்துவிட்டாலும் போதும். செம்மொழியில் அர்ச்சனை கிடைக்கும். “த்தா.. பிஸ்னஸ் அவர்லே எவண்டா மயிரு மாதிரி வண்டியை உள்ளே எட்தாந்தது?” என்பார்கள்.

ரெண்டாவது ரைட்டு அடித்தால் இருபுறமும் பெட்ரோல் டேங்குகள் தோரணமாக கட்டிவிடப்பட்டிருந்தன. பல்சர், யூனிகார்ன் என்று லேட்டஸ்ட் ப்ரீமியர் பைக்குகளின் டேங்குகளும் கிடைக்கிறது. அப்படியே புத்தம்புதுசாக ஒரிஜினல் பெயிண்டின் கருக்குலையாமல். ஒவ்வொரு கடையாக ”டாங்க் இருக்கா?” என்று கேட்டால் “எண்ணாண்டே டான் டேங்க் இல்லை, ஆனா ஆறாவது கடையிலே இருக்கும்” என்று தன் சகப்போட்டியாளர்களுக்கே பிஸினஸ் பிடித்துக் கொடுக்கிறார்கள். ஆறாவது கடையில் ஒரு பாய் உட்கார்ந்திருந்தார்.

”சிடி டான் டேங்க் வேணும்னா. இருக்கா?”

“இருக்குண்ணா”

வண்டியை விட்டு இறங்கவே கொஞ்சம் பயமாகதானிருக்கிறது.

“டேங்கு காட்டுண்ணா”

“எறங்கி வாண்ணா. மேல இருக்கு. மாடிக்கு போ எடுத்து கொடுப்பாங்க”

வண்டியை ஓரமாக நிறுத்தி, சைட் லாக் போட்டால், ”சைட் லாக் போடாதே” என்கிறார். கொஞ்சம் தயங்கியதுமே புரிந்துகொண்டவராக “புதுப்பேட்டைலே மட்டும் எவன் வண்டியும் திருடுபோவாது!” என்றார்.

தயங்கியபடியே வண்டியை திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே மாடிக்கு சென்றேன். தரையே தெரியாத அளவுக்கு வண்டிகளின் ஸ்பேர் பார்ட்ஸ். மேலேயும் ஒரு பாய்.

“சிடி டான் டேங்க் வேணும்னே”

“இன்னா கலரு”

“பிளாக்”

ஒரு பையனை அனுப்பி “சாருக்கு ஒரு டாங்க் எடுத்துக் கொடு!” என்றார்.

பையன் உள்ளே எங்கேயோ அழைத்துப் போனான். சில படிக்கட்டுகள் ஏறி, சில படிக்கட்டுகள் இறங்கி சந்து மாதிரி போய்க்கொண்டே இருக்கிறது. கீழே விட்ட வண்டி என்னாகுமோ என்ற பயம் வேறு. ஒரு அறைக்கதவை திறந்து லைட் போட்டான். உள்ளே குறைந்தபட்சம் நூறு, நூற்றி ஐம்பது பெட்ரோல் டேங்குகளாவது இருந்திருக்கும். கவரில் சுற்றிவைக்கப்பட்ட ஒரு டாங்கை கொடுத்து “போய் அண்ணன் கிட்டே ரேட் பேசிக்கோ!” என்றான் அந்தப் பையன்.

“என் வண்டிலே வயலட் ஸ்டிக்கரு. இது பிரவுனா இருக்கே?”

“இங்கல்லாம் அப்படித்தான். கிடைக்கிறதை (?) தான் கொடுக்க முடியும்”

வேறு வழியின்றி அண்ணனிடம் போய் ரேட் பேசினேன்.

“எவ்ளோண்ணா”

“கொடுக்குறதை கொடு”

“பரவால்லை ரேட்டு சொல்லிக்கொடுண்ணா” - வெளியே நின்ற வண்டி என்ன கதியோ?

“ரெண்டாயிரம் கொடு”

“புதுசே அவ்ளோ தாண்ணா”

“புதுசு மூவாயிரத்து இருநூறு இன்னிக்கு ரேட்டு. எங்களாண்டியேவா தம்பி?”

நான் ஐநூறில் ஆரம்பித்து ஆயிரத்து நூறுக்கு வந்தேன். அவர் நூறு, இருநூறாக குறைத்துக் கொண்டே வர நான் இருபத்தைந்து, ஐம்பதாக ஏறிக்கொண்டே வந்தேன். கடைசியாக ஆயிரத்து இருநூறில் முடிந்தது. அச்சு அசலாக புது டேங்க். ஷோருமில் வாங்கியிருந்தால் எனக்கு இரண்டாயிரம் ரூபாய் கூடுதல் ஆகியிருக்கும்.

டேங்கை எடுத்துக்கொண்டு வேகவேகமாக தாவிக்குதித்து என் வண்டிக்கு ஓடினால்.. நல்லவேளை எதுவும் ஆகவில்லை. கீழே கடையில் இருந்த பாய் புன்னகைத்தார்.

”வேறு எது வேணும்னாலும் வாங்க. ஊடு எங்கேருக்கு?”

“நந்தனம்னே, நன்றி. கெளம்புறேன்”

வண்டியை வெளியே எடுத்துக் கொண்டுவரும்போது தெருமுனையில் ஒரு புது ஸ்பெளண்டரை அக்கு அக்காக பிரித்துக் கொண்டிருந்தார்கள். எதிர்காலத்தில் எவருக்காவது ஸ்பெளண்டர் டேங்க் வேண்டுமென்றால் பாய் கடையில் சகாய விலைக்கு கிடைக்கும்.