6 ஜனவரி, 2012

தினகரன் வெள்ளி மலர்

எண்பதுகளின் இறுதியும், தொண்ணூறுகளின் தொடக்கமும் கலந்த காலக்கட்டம் வெகுஜன வாசகர்களுக்கு பொற்காலமாக இருந்திருக்க வேண்டும். குமுதம், விகடன் இதழ்கள் முழுவீச்சோடு இயங்கிக் கொண்டிருந்த அக்காலக் கட்டத்தில் புதிய வார இதழ்கள் பலவும், புதுப்புது கான்செப்டுகளில் நல்ல சர்க்குலேஷனோடு சக்கைப்போடு போட்டுக் கொண்டிருந்தது.

எங்கள் வீட்டில் குமுதம்தான் மெயின் பத்திரிகை என்றாலும், வேறு சில பத்திரிகைகளையும் அவ்வப்போது அப்பா வாங்குவார். ‘கலைப்பூங்கா’ மாதிரி முழுமையான சினிமாப் பத்திரிகைகளை அப்போது வாசித்திருக்கிறேன். மாத இதழ் என்றாலும் ஒரு மாதம் ரஜினி ஸ்பெஷல், அடுத்த மாதம் கமல் ஸ்பெஷல் என்று கலக்கல் கட்டுரைகள், துல்லிய தகவல்களோடு நல்ல மிக்ஸிங்கில் எடிட் செய்யப்பட்ட புத்தகம் அது. குறிப்பாக அட்டைப்படம் கண்ணில் ஒத்திக் கொள்ளலாம் போல இருக்கும். அதே காலக்கட்டத்தில் ‘கலைப்பூங்கா’ மாதிரி ஒரு குறைந்தது ஒரு டஜன் சினிமாப் பத்திரிகைகளாவது நல்ல தரத்தோடு வந்துக் கொண்டிருந்ததாக நினைவு.

போகியை ஒட்டி பரணை சுத்தம் செய்யும்போது பழைய ‘பேசும்படம்’, ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழ்களை காணமுடியும். பெரும்பாலும் அவை எண்பதுகளின் துவக்கத்தில் வந்த இதழ்களாக இருக்கும். அட்டைப்படத்திலேயே ஏதோ வெளிவரவிருக்கும் சினிமாப் படத்தின் விளம்பரம்தான் இடம்பெறும் (முத்து எங்கள் சொத்து என்கிற சொத்தைப்படத்தின் விளம்பரம் இடம்பெற்ற இதழ் இன்னும் நினைவில் மிச்சமிருக்கிறது).

யோசித்துப் பார்த்தால் வெகுஜன சினிமாப் பத்திரிகைகள் தரத்திலும், விற்பனை அடிப்படையிலும் 90களின் துவக்கத்தில் உச்சத்தில் இருந்திருக்கின்றன என்று புரிகிறது. ஆனால் இன்றைய நிலையில் நார்மல் பத்திரிகையே சினிமாப் பத்திரிகை லெவலுக்கு மாறிவிட்டதால், ‘பேசும் படம்’ மாதிரி ஒரு பத்திரிகைக்கு வாய்ப்பில்லையோ என்றும் நினைக்கத் தோன்றும். ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ வருகிறதுதான். ஆனால் பழைய தரம் இருப்பதாக தோன்றவில்லை. சினிக்கூத்து, வண்ணத்திரையெல்லாம் ’திரைச்சித்ரா’ லெவலுக்கு இறங்கிவிட்டதால் போட்டியில் சேர்த்துக்கொள்ள விருப்பமில்லை. காட்சிப்பிழை, படப்பெட்டி என்று புதியதாக சில மாத இதழ்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. அவை ‘ஒலக’ சினிமாவைப் பேசுவது என்பதால், தமிழ்நாட்டின் முன்னூத்தி சொச்சத்துக்கும் குறைவான அறிவுஜீவிகளுக்கான இதழ்களாக ஆகிப்போயிருக்கிறது.

என்னைப் போன்ற வெகுஜன சினிமா ரசிகனுக்கு என்று பிரத்யேகமாக சொல்லிக் கொள்ளும்படியாக ஒரு சினிமாப் பத்திரிகை கூட இல்லையென்பது சோகம்தான். முன்பெல்லாம் தினமலர் வாரமலரின் இருபக்க ‘துணுக்கு மூட்டை’ ஓரளவு திருப்திபடுத்தும். இப்போது து.மூ.வும் கச்சடாவாகி விட்டது.

சினிமாக்காரர்களுக்கு ஜால்ரா தட்டாமல் சினிமா குறித்த செய்திகள் மற்றும் அலசலோடு ஏதேனும் பத்திரிகை கிடைக்குமாவென்று தேடிக்கொண்டிருந்தவனுக்கு யதேச்சையாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமானது தினகரன் வெள்ளிமலர். நாளிதழோடு வரும் இணைப்புகள் பொதுவாக ’தலையெழுத்தே’ என்று தற்போது வந்துக்கொண்டிருக்க, வெள்ளி மலரில் மட்டும் ஏதோ சிரத்தையாக நடந்து வருவதை அறிய முடிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தனக்கான வடிவத்தை தானே உருவாக்கி, இன்று ஒரு முழுமையான சினிமாப் பத்திரிகையாக உருவெடுத்திருக்கிறது வெள்ளி மலர். இதுதான் இப்போது தமிழின் நெ.1 சினிமா பத்திரிகை என்று தயங்காமல் சொல்லலாம். சந்தேகமிருப்பவர்கள் இன்றைய தினகரனை வாங்கி வெள்ளிமலர் வாசித்துப் பார்த்துக் கொள்ளலாம். இன்றைய வெள்ளிமலர் ஒரு பென்ச்மார்க் இஷ்யூ (2011 புத்தாண்டு இதழும் இதேமாதிரி ஒரு கிளாசிக்). வெள்ளிமலர் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!


வெள்ளிமலரின் சிறப்பு என்னவென்றால் தமிழ் சினிமாவையும் தாண்டி மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் சினிமாக்களையும், அங்கு பணியாற்றும் நடிகர்-நடிகைகள் மட்டுமின்றி இயக்குனர்கள் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களையும் எளிய முறையில் தமிழுக்கு அறிமுகப்படுத்துவதுதான். தொடர்ச்சியாக இதை வாசித்து வருவதால், இன்று கன்னடத்தில் சுதீப்தான் சக்கைப்போடு போடும் ஹீரோ என்று தெரிகிறது. சிரஞ்சீவி குடும்பத்தில் பிரச்சினை, தில்லாலங்கடியை ரீமேக் செய்து சல்மான் நடிப்பது, மம்மூட்டியும் மோகன்லாலும் தொடர்ச்சியாக பல்பு வாங்குவது என்று எல்லா விஷயமுமே அத்துப்படியாகிறது. வெள்ளிமலர் தருவது வெறும் தகவல்களை மட்டுமல்ல. அத்தகவல்களின் பின்னணி, ஃப்ளாஷ்பேக் உள்ளிட்ட விஸ்தாரமான அலசல்களையும் கூட.

வெள்ளி மலரின் ஒரே குறையாக நான் கருதுவது, அதில் வாராவாரம் மூன்று பக்கங்களுக்கு வெளிவரும் ‘மேஷராசி நேயர்களே!’ டைப் ஜோசியம்தான். முழுமையான சினிமாப் பத்திரிகையாக மலர்ந்திருக்கும் மலருக்கு ‘ஜோசியம்’ சற்றும் பொருந்தவில்லை. சன் குழுமத்திலிருந்து அடுத்தடுத்து பக்தி, மகளிர் பத்திரிகைகள் வரவிருப்பதாக தெரிகிறது. வெள்ளி மலரை தனிப் பத்திரிகையாக கொண்டுவந்தால் ‘பேசும்பட’ காலத்திய பொற்காலம் மீண்டும் மலரும்.

5 ஜனவரி, 2012

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்!

கம்மி பட்ஜெட்டில் மொக்கைப்படம் எடுத்துவிட்டு ரிலீஸ் செய்யமுடியாத இயக்குனரின் அவஸ்தையான மனநிலையில் இருந்து ஒருவழியாக நேற்று கேபிள்சங்கர், உலகநாதன் போன்ற சன்பிக்சர்ஸ், ரெட்ஜயண்ட் மாதிரி ஆட்களால் விடுதலை பெற்றிருக்கிறேன்.

“ரொம்ப மொக்கை-ன்னு காறித்துப்பி விடுவார்களோ?” என்கிற அடுத்த அவஸ்தை நேற்று இரவிலிருந்து... நல்லவேளையாக வாசித்த நண்பர்கள் பலரும் காலையில் இருந்து தொலைபேசி, கூகிள் ப்ளஸ், ட்விட்டர், ஃபேஸ்புக், லொட்டு லொசுக்குகளையெல்லாம் பயன்படுத்தி ஆறுதல் அளித்து வருகிறார்கள். மங்காத்தா லெவலுக்கு இல்லையென்றாலும், ‘அழிக்கப் பிறந்தவன்’ குறைந்தபட்சம் ‘காஞ்சனா’ அளவுக்கு ஹிட்டு என்பது நண்பர்களின் கருத்துகளில் இருந்து தெரிகிறது. நானே வாசித்தபோது கூட ‘ஓக்கே’ என்று தோன்றிவிட்டதை வெட்கத்தோடு ஒப்புக் கொள்கிறேன். இருந்தாலும் ‘ஆபாச நாவல்’ என்பதால், மதிப்பிற்குரியவர்களிடம் இதை பெருமையாக “என் முதல் நாவல்” என்று தெகிரியமாக சொல்லிக் கொடுக்க முடியவில்லையே என்கிற ஆதங்கமும் ஒருபுறம் இருக்கிறது.

எது எப்படியோ, ‘கமர்சியல் ஹிட்’ கொடுத்த புதுமுக இயக்குனர் மாதிரி மகிழ்ச்சியான ஒரு மனநிலைக்கு இப்போதுதான் வந்து சேர்ந்திருக்கிறேன். விலை, பக்கம் உள்ளிட்ட விவரங்கள் நேற்று மாலை புத்தகத்தை வெளியிடுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்புதான் தெரிந்தது.

‘அழிக்கப் பிறந்தவன்’ - இன்று முதல் சென்னை புத்தகக் காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் விற்பனைக்கு கிடைக்கும். ஸ்டால் எண் : 334.  தொடர்பு எண் : 9940446650.
விலை ரூ.50/- மட்டுமே (தள்ளுபடி 10% போக ரூ.45/-). பக்கங்கள் : 96.

இது மட்டுமல்ல. ‘உ’ பதிப்பகத்தின் மற்ற இரண்டு புதுவெளியீடுகளான கேபிள்சங்கரின் ‘தெர்மக்கோல் தேவதைகள்’ (தெர்ம-வா தெர்மா-வா?), உலகநாதனின் ‘நான் கெட்டவன்’ (எப்படித்தான் டைட்டில் புடிக்கிறாங்களோ?) ஆகியவற்றின் விற்பனை உரிமையையும் ‘டிஸ்கவரி புக் பேலஸ்’ நிறுவனமே எடுத்திருக்கிறது. ‘அழிக்கப் பிறந்தவன்’ விரைவில் இணையம் மூலமாகவும் விற்பனைக்கு கிடைக்குமென நம்புகிறேன்.

நான் எழுதிய நூல் என்பதால் வாங்கியே ஆகவேண்டுமென யாரையும் வற்புறுத்த மாட்டேன். முதல் அத்தியாயத்தை வாசித்துவிட்டு, பிடித்தவர்கள் வாங்கிக் கொள்ளலாம், மொக்கையென்று நினைப்பவர்கள் காறித்துப்பிவிட்டு கிளம்பிக்கொண்டே இருக்கலாம். ஆனால் கேபிள்சங்கர் மற்றும் உலகநாதனின் புத்தகங்களை கண்டிப்பாக வாங்கிவிடுங்கள் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். எனக்காக பொருள் முதலீட்டையும், கடுமையான உடலுழைப்பையும் செலுத்திய நண்பர்கள் அவர்கள்.

ஹேப்பி ரீடிங் ஃபோல்க்ஸ்!

4 ஜனவரி, 2012

அனைவரும் வருக!


இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
நாள் : 04/01/12

நேரம் : மாலை 6 மணி

விலாசம்: 6, முனுசாமி சாலை, கே.கே.நகர்



வெளியிடப்படும் புத்தகங்கள் :


சங்கர் நாராயண்
தெர்மக்கோல் தேவதைகள் (சிறுகதை தொகுப்பு)

என். உலகநாதனின்நான் கெட்டவன் (இரண்டு குறுநாவல்களும், பத்து சிறுகதைகளும்)

யுவகிருஷ்ணா
அழிக்கப்பிறந்தவன் (நாவல்)


சிறப்பு அழைப்பாளர்கள் :


இயக்குனர் மீரா கதிரவன்


இயக்குனர் கே.பிபி நவீன்


இயக்குனர் தனபாலன்


இயக்குனர் ஹரீஷ்



மற்றும் பிரபல எழுத்தாளர்கள் , கவிஞர்கள், பதிவர்கள், வாசக அன்பர்கள் என்று அனைவரும் வந்திருந்து விழாவினை சிறப்பிக்க உள்ளார்கள்.

தோழர் உலகநாதனின் பதிப்பகமான “உ” பதிப்பகம் இந்த மூன்று புத்தக வெளியீட்டின் மூலமாய்  பதிப்பகத்துறையில் தன் காலடியை எடுத்து வைக்கிறது.  உங்கள் ஆதரவை தாரீர்.

3 ஜனவரி, 2012

அழிக்கப் பிறந்தவனின் கதை!

போன வருடம் புத்தகக் காட்சியின் போது கிழக்கு முட்டுச் சந்தில் பாரா சொன்னார். “இந்த வருஷம் ஒரு கதை எழுதுடா! கதைப் புஸ்தகம் இப்போ நல்லா சேல்ஸ் ஆவுது”. நான் ஒரு மோசமான கதை சொல்லி என்று எனக்கே தெரியும். எனவே நழுவப் பார்த்தேன்.

பிப்ரவரி முதல் வாரத்தில் ஒரு நாள் கூப்பிட்டார். “கதை எழுத சொன்னேனே? என்ன டாபிக்குன்னு முடிவு பண்ணிட்டியா?”

“இல்லை சார். எனக்கு கதையெல்லாம் எழுத வராது”

“எல்லாம் வரும். ஒன்லைனர் சொல்றேன். அப்படியே நூல் புடிச்சி போய், ஒரு இருவத்தி ரெண்டாயிரம் வார்த்தைலே எழுதிடு”

அவர் சொன்ன ஒன்லைன் தான் அழிக்கப் பிறந்தவன். “2012 பொங்கலுக்கு ‘நண்பன்’ ரிலீஸ் ஆவுது. ஆனா டிசம்பர் 31-ஆம் தேதியே திருட்டு டிவிடி பர்மா பஜாருக்கு வந்துடுது”

இதை எழுதி முடிக்க பாரா கொடுத்த டெட்லைன் சரியாக ஒரு மாதம். ஆனால் இரண்டு மாதத்துக்குப் பிறகுதான் அவரிடம் கதையை முடித்து கொடுக்க முடிந்தது.

முதல் மூன்று, நான்கு அத்தியாயங்களை எழுதுவதில் பெரியதாக சிரமம் இருக்கவில்லை. க்ரைம், செக்ஸ் என்று பிடித்த ஏரியாவை பிடித்துக்கொண்டு கும்மியடிக்க முடிந்தது. அதற்குப் பிறகு நான் உருவாக்கிய பாத்திரங்கள் என்னையே அலைக்கழிக்கத் தொடங்கின. இஷ்டத்துக்கும் முடிச்சு போட்டுவிட்டு, எந்த முடிச்சை எங்கே போட்டோம் என்பது மறந்துவிட்டது. ஒவ்வொன்றாக பாதி கதைக்கு மேல் லாஜிக் இடிக்காமல் அவிழ்த்தாக வேண்டும். இது மாதிரி மசாலா நாவல் எழுதுவது ஆகக்கடினமான வேலை என்பது புரிந்தது. தேவையில்லாமல் சேர்த்துவிட்ட சில கேரக்டர்களை, சம்பவங்களை தணிக்கை செய்துக்கொண்டே வந்தேன். இறுதியாக மூன்று, நான்கு பாத்திரங்களை வைத்துக்கொண்டு மற்ற அனைவரையும் அழித்துவிட்டேன். ‘சிக்’கென்று நறுக்காக பிறந்தான் அழிக்கப் பிறந்தவன்.

ஜெயமோகனின் ‘உலோகம்’ இரண்டாம் முறையாக கிழக்கு த்ரில்லரில் அச்சிடப்பட்டபோது பின்னட்டையில் ‘அழிக்கப் பிறந்தவன்’ குறித்த விளம்பரம் வந்திருந்தது. ‘கிழக்கு த்ரில்லர்’ உடனடியாக அழிக்கப் பிறந்தவனை வெளியிடமுடியாததால், வலைப்பூவில் தொடராக பதிவிட்டு வந்தேன். ஏனெனில் 2012ன் தொடக்கத்தில் நண்பன் வெளியாகிறது. மேலும் திருட்டு டிவிடி என்கிற சந்தையே இவ்வாண்டின் இறுதியில் இருக்குமா என்கிற சந்தேகமும் எனக்கு இருக்கிறது. ‘டாபிக்கல்’ ஸ்டோரி என்பதால் ஆறப்போடுவதில் விருப்பமில்லை.

இதை பதிவாக வாசித்த கேபிள்சங்கர், கே.ஆர்.பி.செந்தில் போன்ற நண்பர்கள் புத்தகமாக கொண்டுவர முடிவெடுத்திருக்கிறார்கள். புதியதாக “உ” பதிப்பகம் துவங்கும் நண்பர் உலகநாதனிடம் இதுபற்றி பேசியிருக்கிறார்கள். கடைசியாக “புத்தகமாகப் போட முடிவெடுத்திருக்கிறோம். ஃபைலை அனுப்பி வைங்க” என்று கேபிள் கேட்டார். எனக்கே அப்போதுதான் இது புத்தகமாகப் போகிறது என்கிற தகவல் தெரியும். இதனால் நண்பர் உலகநாதனுக்கு நஷ்டம் எதுவும் வந்துவிடக்கூடாது என்கிற ஒரே கண்டிஷனின் பெயரில் ஃபைலை அனுப்பி வைத்தேன். மார்க்கெட்டிங், விற்பனை பற்றியெல்லாம் ஏற்கனவே ‘பக்கா’வாக பிளான் போட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. எழுதியதைத் தவிர்த்து, அழிக்கப் பிறந்தவன் புத்தகத்தில் வேறு எந்தப் பெருமையுமே எனக்கில்லை. எல்லாவற்றையுமே நண்பர்கள்தான் பார்த்துக் கொள்கிறார்கள். உலகநாதன் நாவலை வாசித்ததோடு மட்டுமில்லாமல், வெளிவருவதற்கு முன்பே விமர்சனமும் எழுதிவிட்டார்.

’உ’ பதிப்பக நூல்களின் விற்பனை உரிமையை டிஸ்கவரி புக் பேலஸ் எடுத்திருக்கிறது. எனவே ‘அழிக்கப் பிறந்தவன்’ டிஸ்கவரி புக் பேலஸில் கிடைக்கும். சென்னை புத்தகக் காட்சியிலும் டிஸ்கவரி ஸ்டாலில் விற்பனைக்கு கிடைக்கும். விலை, பக்கங்கள் உள்ளிட்ட எந்த விவரமும் இந்த நிமிடம் வரை எனக்கு தெரியாது. இணையத்திலும் விற்பனைக்கு கிடைக்குமென நினைக்கிறேன். நாளை ‘புத்தக வெளியீடு’ அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இலக்கியமென்று யாரும் ஈஸியாக அவதூறு செய்துவிட முடியாத மொழிநடையிலேயே எழுதியிருக்கிறேன். ஒரு கதையை எழுத என்னென்ன மலினமான யுக்திகளை கடைப்பிடிக்க முடியுமோ அத்தனையையும் கடைப்பிடித்திருக்கிறேன். இதை யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். அழிக்கப் பிறந்தவனுக்கு என்னால் தர முடிந்த உத்தரவாதம் முதல் வரியிலிருந்து கடைசிவரி வரை நூறு சதவிகித சுவாரஸ்யம் மட்டுமே.

பாரா, பைத்தியக்காரன், தோழர் அதிஷா (நாவலின் ஒரு அத்தியாயத்தை இவர் எழுதியிருக்கிறார்) ஆகியோருக்கும், நூலை வெளியிடும் உலகநாதன் மற்றும் கேபிள்சங்கர், கே.ஆர்.பி.செந்தில் ஆகிய நண்பர்களுக்கும் நன்றி!

2 ஜனவரி, 2012

போட்டுத் தாக்கு!

‘நல்ல வார்த்தை, கெட்ட வார்த்தை’ என்கிற இந்த இரண்டு நேரெதிர் மதிப்பீடுகளில் நமக்கு நம்பிக்கை எதுவும் கிடையாது. இந்த ‘நல்ல, கெட்ட’ விஷயங்களை யார் வரையறுக்கிறார்கள் என்பது தெரியாதது முதல் காரணம். ‘கெட்ட வார்த்தை’ என்று சொல்லப்படும் வார்த்தைகள் நமக்கு இயல்பானவை என்பது இரண்டாம் காரணம். ஒரு காலத்தில் ‘ஓத்தா’ இல்லாமல் எந்த விவாதமுமே சாத்தியமில்லை என்கிற காலக்கட்டமும் இருந்தது. இனிஷியல் மாதிரி எந்த வாக்கியத்துக்கும் முன்பாக ‘ஓத்தா’ போடுவது ஒரு நோயாகவே இருந்தது. குடும்பத்தினரிடம் பேசும்போதுகூட ‘ஓத்தா’ போட்டுப் பேசி பேஜாராக்கியிருக்கிறேன். கொஞ்சம் டீசண்டான கம்பெனிகளில் வேலைக்குச் சேர்ந்தபிறகு, அங்கிருந்த பீட்டர்களோடும், ஸ்டெல்லாக்களோடும் பேசும்போது இந்த ஓத்தா வந்துவிடுமோவென மிக கவனமாகத் தவிர்த்து, இப்போது பேசும் இந்த அடாசு மொழிநடைக்கு வந்துத் தொலைத்திருக்கிறேன். ஆனால் பீட்டர்களோடு இஷ்டத்துக்கும் ‘பஃக்’கலாம் என்பது வேறு விஷயம். ‘ஓத்தா’ மாதிரி சொற்களுக்கு விபரீதமான அர்த்தம் உண்டென்றாலும், இம்மாதிரி இயல்பாக பேசும்போது வரும் கெட்டச் சொற்களுக்கு நேரடி அர்த்தம் எதுவும் கிடையாது என்பதுதான் இங்கே முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது. படவா, ராஸ்கோலு, திருட்டுப்பையா மாதிரியான சொற்களால் கொஞ்சுவது மாதிரி, தன் குழந்தையை ‘தெவ்டியா பையா/தெவ்டியா’ என்று கொஞ்சும் அப்பாக்களை கூட சென்னையில் பார்க்க முடியும்.

சரி, இந்த வார்த்தைகளை சமூகம் எப்படியோ ‘கெட்ட’’ வார்த்தைகள் என்று கண்டறிந்து, இவற்றை உச்சரிப்பவனை கெட்டவன்(!) என்று மிகச்சரியாக அடையாளம் கண்டிருக்கிறது. இதையெல்லாம் விட்டுத் தொலைத்துவிடுவோம். மாண்புமிகு சமூகம் ‘நல்ல’ வார்த்தைகள் என்று கருதும் சில வார்த்தைகள்கூட எப்படி ஆபாச/கெட்ட நோக்கத்துக்கு மாறியது என்பது குறித்த ஒரு வெளிச்சத்தை எதிர்நோக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

உதாரணத்துக்கு ‘போடுவது’. கண்ணாடியை கீழே போட்டு உடைத்தான். நாடகத்தின் ராஜா வேஷம் போட்டான். படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை வெறிதாங்காமல் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டான். இப்படி ஏராளமான வாக்கியங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களில் நாம் போடுபோடுவென இந்தச் சொல்லை போடலாம். ஆனால் சாமானிய சமூகத்தில் ‘போடுவது’ என்பது பாலியல் உறவினை குறிப்பதாக எப்படி மாறியது என்று தெரியவில்லை. ’அவன்தான் அவளைப் போடுறானாமே?’ என்று சர்வசாதாரணமாக க்ளிண்டன் –மோனிகா விவகாரம் மாதிரி ஏதோ கிசுகிசுவை நம் காதில் யாரோ போட்டுவிட்டுச் செல்லும்போது எவ்வளவு மோசமான அர்த்தத்தை தருகிறது?

“கவலையே படாதீங்க. ரெண்டு நாளுலே நானே போட்டுர்றேன்“ என்று கடந்துப்போகும் யாரோ ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டுச் செல்ல, ‘பக்’கென்று ஆகிறது. கெட்டப் பொருளைத் தரும் இந்த நல்ல வார்த்தைகளின் பிரச்சினையே இதுதான். சமயசந்தர்ப்பம் புரியாமல் ஏதாவது கெட்ட அர்த்தத்தை தந்துத் தொலைக்கும். இந்தப் ‘போடு’, எந்தப் ‘போடு’ என்று புரியாமல் தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டியிருக்கும்.

‘போடுவது’ என்பதாவது வினைச்சொல். நல்ல பெயர்ச்சொற்களும் கூட இந்த ஆபாச உருமாறுதலுக்கு தவறுவதில்லை. சாமான், சொம்பு மாதிரியான சொற்கள் பயன்படுத்தப்படுவது பாலுறுப்புகளை குறிப்பிடுவதற்காக. மளிகைக் கடைக்குப் போய் சாமான் லிஸ்ட்டு கொடுக்கும்போது இதனால் சிறு உறுத்தல் ஏற்படுகிறது. அதையடுத்து சாமானை ஏத்தியாச்சி, சாமானை எறக்கியாச்சி என்று தொடர்வினைகளில் உச்சரிக்கப்படும் சொற்கள் தரும் மன உளைச்சல்களுக்கு அளவேயில்லை.

காமவெறி புத்தகங்களில் முயல், பாம்பு மாதிரியான உயிரினங்களை கூட காமகொடூர எழுத்தாளர்கள் விட்டு வைப்பதில்லை. அவற்றை அவர்கள் உவமானமாகப் பயன்படுத்தும் இடங்கள் படு கொச்சையானவை. அடப்பாவிகளா.. பாம்பையே நல்ல பாம்பு என்கிறார்கள். அதைக்கூட ‘கெட்ட’ அர்த்தத்துக்கு உபயோகித்துக் கொள்கிறார்களே? பாம்பை விடுங்கள். அது வாழும் புற்றைக்கூட ஆபாசக்’குறி’யாக்கி விட்டார்களே இந்த காமவெறியர்கள்?

மாங்காய், வாழைக்காய், கேரட் என்று காய்கறிகள் படும்பாடு அநியாயம். எலுமிச்சைப் பழத்தைக் கூட விட்டு வைப்பதில்லை. நல்லவேளையாக பூசணிக்காய், தர்ப்பூசணியெல்லாம் அளவில் பெரியதாக இருப்பதால் தப்பியது. புடலங்காய்க்கு எப்படி ஆபாச நிழல் விழுகிறது என்பது கொஞ்சம் ஆச்சரியம்தான்.

மாமா என்கிற அற்புதமான உறவையே கொச்சைப்படுத்துகிறது இந்த ஆபாசக் கலாச்சாரம். தாய்மாமன் என்கிற உறவின் அருமை பெருமைகளை நாம் பாசமலர் மற்றும் கிழக்குச் சீமையிலே ஆகிய திரைப்படங்களைப் பார்த்து உணர்ந்திருக்கிறோம். ஆனால் இன்று ‘மாமா’ என்கிற சொல்லே கூட்டிக் கொடுப்பவர் என்கிற அர்த்தத்தில் வழங்கப்படுகிறது. பாருங்கள். பேசிக்கொண்டேப் போகிறோம், எவ்வளவு ‘நல்ல வார்த்தைகள்’ கெட்ட அர்த்தத்தில் வருகின்றன? கூட்டிக் கொடுப்பது, அதாவது ஏற்கனவே கொடுத்த தொகையிலிருந்து அதிகமாக்கிக் கொடுப்பது என்கிற நல்ல விஷயம் கூட எப்படி திரிகிறது பாருங்கள். ‘சம்பளத்தைக் கொஞ்சம் கூட்டிக் கொடுங்க’ என்று எங்கேயாவது கேட்டோமானால், அது எப்படிப்பட்ட பொருளைத் தரும்?

இப்படியே எழுதிக்கொண்டே போனால் ‘நல்ல’ வார்த்தைகளில் எவ்வளவு ‘கெட்ட’ அர்த்தங்கள் இருக்குமென ஒரு புத்தகமே ‘போடலாம்’. ஆனால் அளவில் ‘சிறிய’’ கட்டுரைகளைதான் இணைய வாசகர்கள் விரும்புகிறார்கள். அதுதான் அவர்களை ‘எழுச்சி’ பெறச் செய்கிறது என்பதாலும், இப்பிரச்சினை குறித்த விவாதத்தை தொடங்கும் புள்ளியாக இந்த கட்டுரையை ‘போட்டு’ வைக்கிறேன்.

இருந்தாலும் மனம் ஆற மாட்டேன் என்கிறது. தமிழர்கள் மங்கல நிகழ்வுகளாக இருந்தாலும் சரி. அமங்கல நிகழ்வுகளாக இருந்தாலும் சரி. விளக்குக்கு முதன்மையான இடத்தை தங்கள் அன்றாட வாழ்வில் சங்கக் காலத்தில் இருந்து தந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட ‘விளக்கு’ கூட கொச்சையானப் பொருளில் இந்நூற்றாண்டில் இருந்து புரிந்துக்கொள்ளப் படுகிறது. ‘விளக்கு புடிப்பது’ என்கிற சொல் ‘மாமா’க்களைதான் குறிக்கிறது என்றாலும், மின்தடை காரணமாக வேறு வழியின்றி, இரவுகளில் நாம் கூட கையில் விளக்கைப் பிடித்தாக வேண்டியிருக்கிறது.

முன்பெல்லாம் மாலை ஆறு மணி ஆனால், ஒவ்வொரு வீட்டிலும் “விளக்கேத்தியாச்சா?” என்கிற குரல் ஒலிக்கும். இனி இம்மாதிரி யாரேனும் சொன்னால், அது எப்படி புரிந்துக்கொள்ளப்படும் என்கிற சமூகக்கவலை நமக்கு ஏற்படுகிறது. ஆனால் அதைவிட முக்கியமான கவலை ஒன்று உண்டு. இலக்கியவாதிகளுக்கு ‘விளக்கு விருது’ என்று ஒன்று தருகிறார்கள். வேறு ஏதாவது பெயரில் விருது கொடுத்துத் தொலைக்கக் கூடாதா? அந்த விருதை கையில் பிடித்திருக்கும் இலக்கியவாதியை ஊரென்ன பேசும்... இந்தப் பெயரிலான விருதை வாங்கும்போது சம்பந்தப்பட்டவருக்கு உடலும், மனமும் கூசுமே?

இந்த வலைத்தளத்தை ‘வாசிப்பவர்களுக்கு’ (இந்தச் சொல் கூட ஆபாச அர்த்தம் தந்து தொலைக்கிறதே) புத்தாண்டு வாழ்த்துகள்!

கடந்த ஆண்டு புத்தாண்டுப் பதிவு : சரோஜா தேவி!