19 பிப்ரவரி, 2011

நடுநிசி நாய்கள்!

ஆபாசம் ஒரு பிரச்சினையா? நிச்சயமாக இல்லை. அடிப்படையில் ஒரு ஆபாச இலக்கிய ரசிகன் என்பதால் நிச்சயமாக நமக்கு அந்தப் பிரச்சினையே இல்லை. ஆபாசத் தொடர் எழுத்தாளன் என்று வினவுத் தோழர்களாலேயே பாராட்டப்பட்டோம் என்பதால் சர்வநிச்சயமாக நமக்கு அந்தப் பிரச்சினை இல்லவே இல்லை. 'பிட்டு' படங்களை பரங்கிமலை ஜோதி, போரூர் பானு, மவுண்ட்ரோடு கெயிட்டி, ஆலந்தூர் ராஜாவென்று தேடித்தேடிப் பார்த்திருக்கிறோம் என்கிற முறையில் 'ஆபாச எதிர்ப்பு' மனநிலை நமக்கு சுத்தமாக இல்லை.

ஆயினும் 'நடுநிசி நாய்களை' கடுமையாக எதிர்க்கிறோம். தெருநாய்களால் கூட புணரப்பட லாயக்கில்லாதவை இந்த நடுநிசி நாய்கள் என்று நம்புகிறோம். தயவுசெய்து இந்தப் படத்தை யாரும் திரையரங்குக்குச் சென்று பார்த்து ஆதரிக்க வேண்டாமென்று வேண்டுகோளும் விடுக்கிறோம். மீறி பார்ப்பவர்கள் திரையைப் பார்த்து – சரியாக கவுதம் மேனன் பெயர் டைட்டிலில் காட்டும்போது – பான்பராக், மாவா போட்டாவது எச்சிலைத் திரட்டி கொத்தாக காறித்துப்பி விட்டு வருமாறு (சத்யம், ஐனாக்ஸாக இருந்தாலும் பரவாயில்லை) கேட்டுக் கொள்கிறோம்.

ரஜினியை, ஷாருக்கை பார்த்து இளைஞர்கள் 'தம்' அடிக்கிறார்கள் என்கிற வாதத்தில் நமக்கு பெரிய நம்பிக்கையில்லை. ஆனால் கவுதம் மேனனின் நடுநிசி நாய்களை கண்டுகளிக்கும் விடலைப் பையன் ஒருவன் குறைந்தபட்சம் நாலு பாலியல் வன்புணர்வு, இரண்டு படுகொலைகளையாவது செய்யக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. 90களின் மத்தியில் கெயிட்டி திரையரங்கில் நாம் கண்டுகளித்த நேரடி நீலப்படமான 'மதன மர்ம மாளிகை', Content அடிப்படையில் இப்படத்தை விட ஆகச்சிறந்தது.

'ஆபாசம்' என்கிற நம்முடைய வழக்கமான அளவுகோலில் – அதாவது பெண்களின் பெருத்த மார்புகள், ஆழமான தொப்புள் சுழி, மதமதவென தொடைகள் – ஒரு காட்சியை கூட கவுதம் மேனன் காட்டவில்லை. இது எதுவுமே இல்லாமல் நடுநிசி நாய்களில் காட்டப்படக் கூடிய ஒரு வன்புணர்வு காட்சி குறைந்தது ஆயிரம் காமக்கொடூர சைக்கோக்களை உருவாக்கக்கூடிய வல்லமை கொண்டது. வயது வித்தியாசம், உறவுமுறை பாராமல் காணக்கிடைக்கிற பெண்களை எல்லாம் பாலியல் பண்டமாக நுகர்வுகொள்ள மோகம் கொள்ள வைக்கும் வலிமை வாய்ந்தது.

எவ்வளவோ இன்செஸ்ட் கதைகள் இணையத்தில் காணக்கிடைக்கிறது. அப்பா-மகன் இன்செஸ்ட் இதுவரை ஒன்றுகூட நாம் வாசித்ததில்லை. அதற்காக அப்படி ஒரு உறவே சாத்தியமில்லை என்று கருதக்கூடிய அளவுக்கு நாம் முட்டாள்களும் அல்ல. கவுதம் மேனனின் வக்கிரம் பிடித்த மூளை கூட்டு பாலியலோடு இணைத்து தந்தை-மகன் உறவை கொச்சைப்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரே ஒரு மகன், தன் அப்பாவைக் கண்டு தன்னை தவறாகப் பயன்படுத்திக் கொள்வாரோ என்று அஞ்சிவிட்டாலும் கூட, அந்த அப்பா நேராக இந்தப் படத்தின் படக்குழுவினரை தேடிப்பிடித்து செருப்பால் அடிக்க வேண்டும்.

'ஓத்தா, ங்கொம்மால..' போன்ற அருமையான சொற்பிரயோகங்களை எந்த எந்த இடங்களில் பயன்படுத்துவது என்கிற குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல், கண்ட இடங்களிலும் தேவையின்றி பயன்படுத்துகிறார் இந்த 'பீட்டர்' இயக்குனர். இவருக்கு இந்த வார்த்தைகளை திரையில் கொண்டு வருவதில் அப்படி ஒரு Passion என்பது இவருடைய முந்தையப் படங்களை காண்பதிலும் புரிந்துகொள்ள முடிகிறது. நடுநிசி நாய்களைப் பார்த்துவிட்டு ஒவ்வொரு ரசிகனும், இயக்குனரை தியேட்டரில் இதே வார்த்தைகளை சொல்லித் திட்டுகிறான் பாருங்கள். அதுதான் இவ்வார்த்தைகளை பிரயோகிப்பதற்கான சரியான தருணம்.

"என்னா கேமிரா? என்னா எடிட்டிங்? என்னா ஷாட்?" என்று கவுதமின் வழக்கமான மெட்ரோ மொக்கைகள் வேண்டுமானால் நடுநிசி நாய்களை கொஞ்சலாம். செங்கல்பட்டுக்கு அந்தப் பக்கமாக இப்படத்தின் போஸ்டர் மீது தமிழ் ரசிகன் நிச்சயமாக ஒண்ணுக்கு அடிப்பான்.

ஆர்.கே. செல்வமணி எடுத்த குற்றப்பத்திரிகை என்கிற மகா மொன்னைப் படத்தையே, 'வன்முறையை தூண்டும்' என்கிறமாதிரி ஏதோ சப்பைக் காரணம் காட்டி, இந்திய தணிக்கைக் குழு தடை செய்தது. தொழில்நுட்பரீதியிலாக உச்சபட்ச நேர்த்தியோடு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நேரடி விஷத்தை இந்தியப் பார்வையாளர்களுக்கு எப்படி தணிக்கைக்குழு சான்றிதழ் கொடுத்து பரிந்துரைத்திருக்கிறது என்று புரியவில்லை.

நமக்கு மரணதண்டனை மீது ஒப்புதல் இல்லை. ஆனால் நடுநிசி நாய்கள் ஒவ்வொன்றும் தூக்கிலிடப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். Fuck you Damn!

54 கருத்துகள்:

  1. நெத்தி அடி.

    படம் பார்த்துட்டு வரும்போது ஒரு பள்ளி மாணவன் அடித்த கமென்ட்: "உங்க அப்பா உன்னை மேட்டர் பண்ணதுக்கு எங்க அப்பா பணத்தை ஏண்டா வேஸ்ட் பண்ண வச்சே? ".


    கிங் விஸ்வா
    இரண்டு புத்தம் புதிய தமிழ் காமிக்ஸ்கள் - இரும்புக் கை மாயாவி + சிக்பில் குழுவினர்

    பதிலளிநீக்கு
  2. தமிழ் சமூகத்துக்கு எவ்வகையிலும் தேவை இல்லாத இந்த படத்தை எடுத்ததற்கு கெளதம் வெட்கப்படவேண்டும்.பல தீய, தெரியாத விசயங்களை படம் எடுக்கிறோம் என்ற பேரில் அவிழ்த்து கொட்டுவது இயக்குனரின் வக்கிர புத்தியையே காட்டுகிறது,.

    பதிலளிநீக்கு
  3. Very good reivew.. Very good Warning.




    //தமிழ்நாட்டில் ஒரே ஒரு மகன், தன் அப்பாவைக் கண்டு தன்னை தவறாகப் பயன்படுத்திக் கொள்வாரோ என்று அஞ்சிவிட்டாலும் கூட, அந்த அப்பா நேராக இந்தப் படத்தின் படக்குழுவினரை தேடிப்பிடித்து செருப்பால் அடிக்க வேண்டும்//

    பதிலளிநீக்கு
  4. ''நடுநிசி நாய்கள் ''கண்டிப்பாக சென்சாரின் கண்ணில் மண்ணை தூவியிருக்கவேண்டும் இந்த படம்,அல்லது தெரிந்தே சிபாரிசால் சென்சாரால் இந்த படத்தை விட்டுருக்கவேண்டும்...இந்த படத்தை மறு தணிக்கைக்கு உட்படுத்தவேண்டும்..நியூ போன்ற படங்களையெல்லாம் தடை செய்ய கோரும் மகளிர் அமைப்புகள் இந்த பட விசயத்தில் அமைதியாக இருப்பது ஏன்?என தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  5. அப்பா மகன் ஹோமோ செக்சுவல் கதையா.
    பணம் கிடைக்கிறது என்பதற்காக சமூகப் பொறுப்பற்று, இந்தப் பட விளம்பரத்திற்கு விஜய் டி வி துணை போனதும் வருத்தம் அளிக்கிறது

    பதிலளிநீக்கு
  6. உணர்ச்சிவசப்பட்டு எழுதினாற்போல இருக்கிறது..இவ்வளவு கோபம் தேவைதானா??

    பதிலளிநீக்கு
  7. Charu Nivedita

    ... கௌதம் வாசுதேவ் மேனனின் நடுநிசி நாய்களைப் பாருங்கள். யுத்தம் செய்யில் மிஷ்கின் எதைச் செய்ய கோட்டை விட்டாரோ அதை மிக அட்டகாசமாக செய்திருப்பார் கௌதம்.

    http://charuonline.com/blog/?p=1823

    பதிலளிநீக்கு
  8. தமிழில் பெயர்வைத்தமைக்காக, கேளிக்கை வரி ரத்து செய்த கலைஞருக்கு நன்றி!

    கலைஞருக்கு நன்றி!

    - சென்னைத்தமிழன்
    கழக மாவட்ட செயலாளர்,
    மட்ட களப்பு மாவட்டம்

    பதிலளிநீக்கு
  9. //'ஓத்தா, ங்கொம்மால..' போன்ற அருமையான சொற்பிரயோகங்களை எந்த எந்த இடங்களில் பயன்படுத்துவது என்கிற குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல், கண்ட இடங்களிலும் தேவையின்றி பயன்படுத்துகிறார் இந்த 'பீட்டர்' இயக்குனர். இவருக்கு இந்த வார்த்தைகளை திரையில் கொண்டு வருவதில் அப்படி ஒரு Passion என்பது இவருடைய முந்தையப் படங்களை காண்பதிலும் புரிந்துகொள்ள முடிகிறது.//



    ரொம்ப நல்ல புரிஞ்சு வச்சு இருக்கீங்க . இந்த லச்சணத்துல டிவில அவர் விட்ட 'பீட்டர்' வேற தாங்க முடியல . அந்த இயக்குனர்க்கு நான் தரும் மதிப்பு ,அந்த படத்தை திருட்டு DVD ல கூட பார்க்க மாட்டேன் என்பது தான்.



    //நடுநிசி நாய்களில் காட்டப்படக் கூடிய ஒரு வன்புணர்வு காட்சி குறைந்தது ஆயிரம் காமக்கொடூர சைக்கோக்களை உருவாக்கக்கூடிய வல்லமை கொண்டது..//

    அட ஆண்டவா...!

    //Fuck you Damn //

    ரொம்ப தகிரியமாய் இதை போட்டதில் இருந்தே உங்கள் கோபம் நன்றாக புரிகிறது. . Goutham Menan desrve for that word...



    நீங்கள் மட்டும் அல்ல , எல்லோரும் இதே மாதிரி தான் விமர்சனம் செய்து உள்ளார்கள். அந்த படத்தை பார்க்காமல் விலக்கி வைப்பதே நல்லது. நல்ல வேலை நான் இன்னும் பார்க்க வில்லை.

    பதிலளிநீக்கு
  10. //Fuck you Damn!//

    என்னாச்சு, கௌதம் தனது ஓரொரு படத்திலும் பயன்படுத்தத் தவறாத வார்த்தையை நீங்களும் பயன்படுத்தி இருக்கிறீர்கள்!?

    பதிலளிநீக்கு
  11. Thanx Yuva.

    Posted your link in face book.

    (Sorry. NHM is not working)

    பதிலளிநீக்கு
  12. என்னால் இந்த படத்தை பார்க்க இயலுமா எனத் தெரியவில்லை. ஆனால் உங்க்ள் விமர்சனம் படித்தபின் அப்படி ஒரு படத்தை பார்க்க வேண்டுமா என்று தோன்றிவிட்டது!

    பதிலளிநீக்கு
  13. எப்படி சென்சார்ல அனுமதி வாங்கினாங்கா லக்கி ? நல்ல வேலை இன்று போகும் எண்ணத்தில் இருந்தேன்

    பதிலளிநீக்கு
  14. கவுதம் மேனனின் சமீபத்திய பேட்டிகளை பார்த்தாலே, அவர் தன்னை தானே உயர்த்தி பேசிக் கொள்கிறார் என்பது புரியும்.காக்க காக்கவில் ஜோதிகாவை பார்த்து ஜீவன் பேசும் சில வசனங்களை அப்போதே விமர்சித்திருப்போமே எனில் இவருக்கு அப்போதே உரைத்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  15. //படம் பார்த்துட்டு வரும்போது ஒரு பள்ளி மாணவன் அடித்த கமென்ட்: "உங்க அப்பா உன்னை மேட்டர் பண்ணதுக்கு எங்க அப்பா பணத்தை ஏண்டா வேஸ்ட் பண்ண வச்சே? ".
    //

    படத்துக்கு A சான்றிதழ் கொடுத்திருந்தாங்களே. பள்ளி மாணவனை எப்படி படம் பார்க்க விட்டார்கள்?

    பதிலளிநீக்கு
  16. நல்ல விமர்சனம். திரையில் எச்சில் உமிழ்ந்தால் மட்டும் போதாது நேரிலும் பண்ண வேண்டும்.கொடியவன் இந்த டைரக்டர்

    பதிலளிநீக்கு
  17. go and die you piece of shit .
    watch kids or bully by larry clark these movies made 15 to 20 years ago in hollywood
    when are you going to let make movie that happens in real life enthiran i a hit movie do you think i will happen in your life time no just a movie watch movie as movie or go and jack off you f*cking as*hole blogger

    பதிலளிநீக்கு
  18. Such a Shameless movie really gowtam should be ashamed to take these kind of movies . For this .......... movie he gave such a build up , Why the Hell there is a censor board , ?

    பதிலளிநீக்கு
  19. "பரங்கிமலை ஜோதி, போரூர் பானு,
    மவுண்ட்ரோடு கெயிட்டி, ஆலந்தூர் ராஜா"

    சுஜாதாவுக்கு பிடித்த
    அனுராக்கை விட்டுட்டிங்களே . . .

    நன்றி நல்லபதிவு

    பதிலளிநீக்கு
  20. வாரணம் ஆயிரம் படம் அப்பாவுக்கு சமர்ப்பணம் என்ற ரீதியில் எடுத்ததாக கூறினார். கடைசியில் அப்பாவே இப்படி செஞ்சுட்டாரான்னு யோசிக்க வைத்துவிட்டாரா கெளதம் மேனன். எப்படியும் கோவா படத்தில் ஹோமோ செக்ஸை பாராட்டிய எழுத்துலக சூப்பர்ஸ்டார் சாரு இப்படத்தையும் பாராட்டுவார்.

    பதிலளிநீக்கு
  21. i already watched kids and bully by larry clark...their making is so good thats why itz been appreciated despite of its platform and what about malena?...gautam's movie is content deformative..making was really pathetic..if a mentally disturbed person is explaining about his killings with great pleasure,then of course he cant be an insane person..for example in shawshank redemption,the reall killer in andy dufrene case will tell about all his murder in a really excited way..it does not allow him to plea for insanity..morever there hasnt been a clear screenplay to show his insanity..have you seen the movie high tension.that is the most gruesome movie but split personality will be dealt so good in that..have you watched primal fear in whic norton acts as if he got split personality....
    what about stanley kubrick's lolita..thats a masterpiece..are u saying that gautam vasudev menon equals kubrick or larry clark..im deeply diappointed...have you watched movies by lars von trier..there is a movie called festen,that is also taken without background score that also has similar theme which a father abuses his son sexually but the making made it more powerful

    பதிலளிநீக்கு
  22. பாஸ்... இப்படிலாம் எழுதாதிங்க அப்புறம் உங்க ஆதர்சன எழுத்தாளர் சாரு கோவுச்சுகுவாரு... அது எப்படி என்ன விட ஒரு ஆபாச படைப்பாளி தமிழ்நாட்டுல இருக்கலாமுன்னு .... அது என்ன சாரு பண்ணா மட்டும் தூக்கி வச்சு கொண்டாடுறிங்க... கெளதம் பண்ணா மட்டும் fcuk u dare a?

    பதிலளிநீக்கு
  23. Had I seen this review, I would have saved some time and would have avoided a massive headache.
    This movie just demonstrates how much of a Psycho Gowtham Menon is!

    Ippadi oru padam edukkalainu yarume alughala !

    Seriously how can film boards allow these movies...I have not seen such a gross movie in my entire life!

    பதிலளிநீக்கு
  24. இந்த படத்தில் வரும் positive விடயம் யார் கண்களுக்கும் தெரியவில்லை யா? இன்னும் எத்தனை நாட்கள் விளிம்பு நிலை மனிதர்களாய் வாழவும் இப்படி உத்தமபுத்திரன் போல் ...நடிக்கவும் போகிறீர்கள்.....இது நவீன காலம் சொல்லும் தகவலும் அதிலுள்ள.. நல்லது கெட்டது படித்த நாம் தான் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் எந்த ஒரு செய்திதாளை எடுத்தாலும் அதில் வரும் ..கள்ள காதல் கொலை .அதை செய்த முறை எல்லாம் விளக்கமாய் தெளிவாக போட்டிருகிறார்கள் கொலை காரன் அதை படித்து தான் கொலை செய்கிறான் என்று சொல்வீர்களா???

    பதிலளிநீக்கு
  25. ///நியூ போன்ற படங்களையெல்லாம் தடை செய்ய கோரும் மகளிர் அமைப்புகள் இந்த பட விசயத்தில் அமைதியாக இருப்பது ஏன்?என தெரியவில்லை.///

    வேண்டவே வேண்டாம்... அப்படியெல்லாம் செஞ்சு இந்த படத்துடைய பப்ப்ளிகுட்டிய ஏத்திவிடக்கூடாது

    பதிலளிநீக்கு
  26. Such a strong comment!!!! Is it negative approach to make people watch the movie and understand what's behind your anger? Your anger tells people you hate the director so badly rather than his movie.. Yes, you won...I would like to see the movie howsoever bad it was!!! appreciate Gautam's courage to create such a controversial piece who gave same movie "Vinnai thandi varuvayya? "

    பதிலளிநீக்கு
  27. I initially thought Yuvakrishna hates director too much than the movie, looking at his harsh comments, but looking at many people commenting the same.. I am surprised. Sorry that Gautam Menon tried something different which happened to be negative..

    பதிலளிநீக்கு
  28. எவ்வளவோ பாத்துட்டீங்க இதையும் பார்த்துற வேண்டியதுதானே. எதுக்கிந்த புலம்பல்?? ஃபேமிலியோட போய்ட்டீங்களா?

    பதிலளிநீக்கு
  29. ஏன் யுவகிருஷ்ணா பின்னூட்டங்களில் பகிரப்படும் கேள்விகளுக்குப் பதில் பின்னூட்டமே போடுவதில்லை??

    இந்தக் கேள்வியும் அந்த ரகத்தில் சேர்ந்து விடுமா? :-)

    பதிலளிநீக்கு
  30. GUYS,nobody is telling itz wrong to make movies on child abuse,fetish,incest..but the screenplay should be strong enough..have you seen the movie "old boy",a korean movie it also deals with incest.but the way in which it is taken,anybody can see it for themselves and decide..gautam's making is the biggest fault.he just focuses on telling the story in veera's perspective and expect the audience to see it in their perception which is totally wrong.im again saying screenplay is so pathetic and hence these kinda review's..just because a director attempts child abuse he cant be appreciated..how does he attempt it is what that matters..if gautam menon is appreciated for dealing child abuse then everyone should praise arun vaidyanathan 1000 times more for his movie "acchamundu acchamundu"..i really liked the movie..and another thing if this movie is taken in any foriegn country definitely it wont run.everyone are talking about hollywood..do you know how many craps are released in hollywood.in holly wood there is no drama nowadays.only sequel and comics

    பதிலளிநீக்கு
  31. வழக்கமாக தன் படங்களின் நாயகனின் குடும்பம் கேரளாவை சேர்ந்த ததாக கதை அமைக்கும் மேனணன் , இக் கதை இன் நாயகன் தமிழனாக காட்டி தன் கேரள பக்தியை வெளிபடுத்தி உள்ளாரா?

    பதிலளிநீக்கு
  32. கெளதம் மேனன் தன்னை மணிரத்னம், ஷங்கர் போன்ற டைரக்டர்களின் வரிசையில் நினைத்து பெருமித பட்டுக்கொள்கிறார்.
    அவரின் பெயர் மாற்றமே அதற்கு ஒரு உதாரணம். எல்லா டிவிக்களிலும் வேறு இவரை கூப்பிட்டு கும்மி அடிக்கிறார்கள்.
    உங்கள் பாணியில் மெட்ரோ மொக்கைகள் எல்லாம் புகழ்ந்து தள்ளுகிறார்கள் படத்தை மற்றும் அதை எடுத்த விதத்தை.
    இன்னும் சில பேர் அதற்கும் மேலே சென்று "உங்கள் ஹீரோவை விட நீங்கள் SMART (?) ஆக இருக்கிறிர்கள். நீங்களே ஏன் நடிக்க கூடாது என்று இவரை உசுப்பேத்தி விடுகிறார்கள்.
    காலக்கொடுமையடா சாமி..

    நண்பர்களே தயாராக இருங்கள்..விரைவில் இவர் நடித்தாலும் நடிக்கலாம்.
    அப்போது இன்னும் extreme ஆக கூட யோசித்து படம் எடுக்கலாம்.

    பதிலளிநீக்கு
  33. nadunisi naaygal
    a movie being copied from hitchcock's psycho, sounds good and better in tamil i don't know why you guys hate this movie, this movie may not fulfilled your expectations but it has some message for girls why can't you think in that way, this is a good movie without music this movie rocks, a must watchable for all girls ...
    what is happening now for
    gautam's nadunisi naaygal, has happened for bharathuraja's sivappu rojakkal..
    hope soon you guys will realise....

    பதிலளிநீக்கு
  34. //கெளதம் மேனன் தன்னை மணிரத்னம், ஷங்கர் போன்ற டைரக்டர்களின் வரிசையில் நினைத்து பெருமித பட்டுக்கொள்கிறார்.//
    I think what he is thinking is correct.

    பதிலளிநீக்கு
  35. Goutham Menon is just a beggar who has come with a begging bowl to Tamil Nadu. It is shame that he is given a superstar status, just for the matter he never respects the sentiments of Tamils. I strongly condemn him for making such a movie. I also wish him not to make such autobiographical movies.

    பதிலளிநீக்கு
  36. it is really a horrible movie & it is not good for our society. this incident may happen one in a million, but it rather creat number of more "auto shankar",& illegal guys.....

    பதிலளிநீக்கு
  37. உங்கள் விமர்சனத்தில் நீங்கள் காட்டியிருக்கும் கோபம் நியாயமானதே... இந்தக் கோபம் தமிழகம் முழுமைக்கும் பரவ வேண்டும்... இப்படம் பற்றி இதுவரை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்... பார்க்கும் நிலையில் நான் இல்லை.. அவரது படங்களை பார்த்ததும் இல்லை... காக்க காக்க திரைப்படத்தின் சிறப்பு காட்சி பிரபல தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்தது...
    எனது பதின் வயது தம்பி பார்த்துக் கொண்டிருந்தான்... நான் ஏதோ வேலையாக இருந்தேன். வில்லனாக நடிக்க ஜீவன் ‘’ ஹே போஸடிக்கே’’’ என்று கத்திக் கொண்டு வருகிறான் ( கிளம்புகிறான்) ’’போஸடிக்கே’’ என்றால் பு.....மவனே’’ அல்லது ‘’ பு.... பிறந்தவனே’’ என்று பொருள்... இந்த வார்த்தையை தமிழக தணிக்கைக் குழு கண்டு கொள்ளாமல் இருந்தது குறித்து வருத்தமில்லை ஆனால் இப்படியொரு வார்த்தையை தமிழுக்கு அறிமுகப் படுத்தி வைத்த கவுதம் மீதுதான் பொத்துக் கொண்டு வந்தது...

    போகட்டும் வக்கிர நாய்கள்.... புழுத்து சாகட்டும்....

    பதிலளிநீக்கு
  38. we should show him what will happen if he takes these kind of movies just for the sake of money and fame. We should kick him.

    பதிலளிநீக்கு
  39. //ஆர்.கே. செல்வமணி எடுத்த குற்றப்பத்திரிகை என்கிற மகா மொன்னைப் படத்தையே, 'வன்முறையை தூண்டும்' என்கிறமாதிரி ஏதோ சப்பைக் காரணம் காட்டி, இந்திய தணிக்கைக் குழு தடை செய்தது. // நடுநிசி நாய்கள் இருக்கட்டும் பாஸ்... 'குற்றப் பத்திரிகை' படம் 'மொன்னையானது' என்று உங்களுக்கு எப்படி தெரியும்? நீங்கள் 'தணிக்கை குழுவின்' உறுப்பினரா? அல்லது அந்த படம் தணிக்கை செய்வதற்கு முன்போ, பின்போ உங்களுக்கு எந்த வகையிலாவது பார்க்க கிடைத்ததா? அல்லது 'செல்வமணி' உங்களிடம் கதை சொன்னாரா?.... தெரிந்து கொள்ள ஆவல்...!!!

    பதிலளிநீக்கு
  40. செந்தில் குமரன்2:05 PM, பிப்ரவரி 27, 2011

    அருவருப்பின் மொத்த உருவம் கௌதம்மேனன்.அருவறுப்பு/ஆபாசத்தின் உச்ச கட்டம் "நடுநிசி நாய்கள்".

    பதிலளிநீக்கு
  41. நாம் காலா காலமாக பார்த்து வந்த விதமான படங்களை விட்டு மாற்று பார்வையோடு ஒரு படம் வரும் போது நம்மில் பலரால் ஜீரணிக்க முடியவில்லை என்பதை நடுநிசி நாய்கள் திரை விமர்சனம் சொல்கிறது. அதை படித்து விட்டு மந்தைகள் போல் தலையாட்டி ஜால்ரா பின்னோட்டம் விட்டே நம் சமுதாயம் சகதியில் வீழ்ந்து விட்டது. இங்கே காட்டப்படுவதை விட மோசமான நிகழ்வுகளை நாம் கேள்விப்பட்டுள்ளோம். படித்துள்ளோம். ஆனால் அவை திரையில் வரும் போது அதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இதுவும் ஒரு வித மனநோய்தான். அதாவது இங்கே வரும் சம்பவங்கள் போல இந்த விமர்சனங்களை எழுதுவோர் வாழ்விலும் சம்பவங்கள் பின்னிப் பிணைந்திருக்கலாம். அதுவே இப்படியான விமர்சனங்கள் வரக் காரணம். ஒரு கதாநாயகன் கனவில் பலரோடு பாடுவதை ஏற்றுக் கொள்கிறோம். அதுவும் கதாநாயகன் நினைப்பதாக அல்ல. கதாநாயகி நினைப்பதாகதான் ஏற்றுக் கொள்கிறோம். அது பாடலாக இல்லாமல் நிஜமாக பலரோடு படுக்கையில் இருப்பதாக காட்டியிருந்தால் இந்த படத்துக்கு வந்தது போன்ற விமர்சனமே வந்திருக்கும்?

    இங்கே ஒரு மனநோயாளி ஒருவன் குறித்த நிகழ்வு படமாகியுள்ளது. இது போன்ற உறவுகள் பெற்றோர் குழந்தைகளிடம் ஏற்பட்டுள்ளதை படித்து அல்லது கேட்டு வந்துள்ளோம். மகளுக்கு தந்தையால் குழந்தை கிடைத்த சம்பவங்களை நானே கண்டுள்ளேன். வைத்தியசாலைகளில் இம்மாதிரி நிகழ்வுகளை சகஜமாக காணலாம். இவை வெளியே வருவதில்லை. மருத்துவர்களிடம் சொல்கிறார்கள்.

    எனது பெரியப்பா டாக்டர் கோவுர் வாழ்வில் சந்தித்த பலரது குறிப்புகளை நான் படித்துள்ளேன். அவர் பெயர்களை விட்டு நிகழ்வுகளை எழுதியிருப்பார். அவற்றை படித்த எனக்கு இந்த கதை என்னவோ ஒரு சிறு துளிதான். மட்டமான படங்களை ரசிக்கும் நம்மால் உயர்ந்த ஒரு படத்தை ரசிக்க அல்ல அதன் மகத்துவத்தை புரிந்து கொள்ள முடியாமல் இருப்பது வருத்தமே?

    இந்த கதாபாத்திர நோயாளிகளை எப்படி அணுகுவது? இப்படியானவர்கள் உருவாகாமல் எப்படித் தடுப்பது என சற்று அகலக் கண் திறந்தால் இது போன்ற மட்டமான விமர்சனங்கள் வரவும் வராது. நாமும் மடத்தனமாக சிந்திக்க மாட்டோம்.

    இது போன்ற சினிமாக்கள் தமிழில் இன்னும் 10 - 20 வருடம் கழித்து வந்தால் தமிழ் சமுகம் ஏற்கும். இன்று படத்தில் காதலர்கள் முத்தமிடுவது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதுவே 20 வருடங்களுக்கு முன் பெரிய விவாதமாகவே இருந்தது. அந்த நிலைதான் இங்கும் ..................

    உண்மைகளை சிலருக்கு கசக்கும்.
    அஜீவன்
    www.ajeevan,com

    பதிலளிநீக்கு
  42. பெயரில்லா10:39 AM, மார்ச் 02, 2011

    Bus-le pengalai uyirodu erippavanai mannithu parivu kattum ungalluku, cinemavil kattum vakrangalal 100 psycho uruvagividuvargal endra samooga kavalai!!!.Bus erippavanai parthu 100 per adhe kodurathai seyya maatargala?

    surya

    பதிலளிநீக்கு
  43. This is so bad and by using these words, lucky you have really shown your frustration.
    Thanks for your honest opinion.

    பதிலளிநீக்கு
  44. பெயரில்லா9:22 AM, மார்ச் 03, 2011

    Its a pity that so much time and energy have to be wasted in discussing about a crap of a movie. Kalaignar Ji who advertises he is against using caste names as surnames had allowed this non-tamilian to direct the 'Tamil Semmozhi' song and use the caste name in title cards. The same Kalaignar Ji is responsible for giving tax exemption to such a third grade weird craft. Long live Kalaignar Ji...

    பதிலளிநீக்கு
  45. romba unarchi vasapatuteenga....
    doctor illana police ivangakitey poyi ketu paatha theriyum...
    nadakkaathatha sollidala...
    nadakkuratha ungalaala digest pannika mudiyala... avlothaan...

    பதிலளிநீக்கு
  46. பெயரில்லா8:01 AM, மார்ச் 05, 2011

    Hi,
    I don't know how you guys see English movies and tolerate everything but when it comes to Tamil, you simply cannot stand it..this is called double stand...hmmm..

    பதிலளிநீக்கு