இவர் சினிமா ரமணா இல்லை. சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர். இவர் பொறுப்பேற்றபின், மழைக்காலங்களில் இவரது பெயர் வானொலியிலும், தூரதர்ஷனிலும் உச்சரிக்கப்படாத நாளே இல்லை எனலாம். மழையை மழை என்று சொல்லலாம். இனி ரமணா என்றும் சொல்லலாம்.
புயல் வருமா மழை வருமா என்று மிகத்துல்லியமாக கணித்துச் சொல்லக்கூடியவர். இவரது கணிப்பு எல்லாம் சயண்டிஃபிக்காக கரெக்ட்டுதான். ஆனால் இவருக்கும் புயல் மழைத் துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் வருணபகவானுக்கும் ஏழாம் பொருத்தம். நம்மவரை ஏமாற்றி டகால்ட்டி காட்டுவதே வருணபகவானின் பொழைப்பாக போகிறது.
ரமணாவை ஏமாற்றுவதற்காகவே வங்கக்கடல் பகுதியில் கடுமையான மேகமூட்டத்தை வருணபகவான் அவ்வப்போது உருவாக்குவதுண்டு. அதைக்கண்டு உற்சாகமடைந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு இடைவிடாத மழை பொழியும் என்று ரமணா டிவியில் சொல்வார். உடனே ரமணாவுக்கு பழிப்பு காட்டும் விதமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு 108 டிகிரி வெய்யில் கொல்லு கொல்லுவென கொல்லும் விதமாக வெதரை வருணபகவான் மாற்றி வைத்து விடுவார். வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் கணிப்பு மாறுவதின் பின்னணி உண்மை இதுதான்.
வருணாவுக்கும், ரமணாவுக்கும் இது காலம் காலமாக நடந்து வரும் மரபுப்போர்.
இரண்டு நாட்களாக 'அழகிய லைலா' வங்கக் கடலோரமாக பிரேக் டான்ஸ் ஆடிக்கொண்டிருக்க, நம் ரமணாவை டிவியிலும், ரேடியோவிலும் காணலாம் என்று ஆவலோடு காத்திருந்த அவரது ரசிகர் மன்றத்தினருக்கு கடுமையான ஏமாற்றமும், மன உளைச்சலுமே பரிசாக கிடைத்தது. ரமணாவுக்கு பதிலாக ஒரு குழந்தை மழைச்செய்திகளை வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பாக சொல்லிக் கொண்டிருக்கிறார். குழந்தை என்றால் Child அல்ல. அந்த அதிகாரியின் பெயரே அதுதான்.
கத்தரி வெய்யில் சுட்டெரிக்க வேண்டிய இந்த மே மாதத்தில் அதிசயமாக கோடைமழை, லைலா பிராண்டிங்கில் வந்தது எப்படி என்று நாம் புலனாய்வு செய்து பார்த்ததில் அதிர்ச்சிகரமான பின்னணித் தகவல்கள் நிறைய கிடைத்திருக்கிறது.
மழைக்காலத்தில்தான் வருணா, ரமணாவைக் காய்ச்சிக் கொண்டிருக்கிறார் என்று நினைத்தால் கோடைக்காலத்திலும் தன்னுடைய திருவிளையாடலை காட்ட ஆரம்பித்திருக்கிறார். நல்ல வெயில் காலமாயிற்றே என்று ரமணன் அவர்கள் தன்னுடைய மகள் திருமணத்துக்கு நேற்று தேதி குறித்திருக்கிறார். இது பொறுக்கவில்லை அவரது பரமவைரியான வருணபகவானுக்கு.
விஸ்வாமித்ரனின் தவத்தை மேனகையை வைத்து கலைக்க இந்திரன் முற்பட்ட அதே டெக்னிக்கை வருணபகவான் கையில் எடுத்துக்கொண்டிருக்கிறார். ரமணா இல்லத் திருமணத்தை சொதப்ப லைலாவை அனுப்பி வைத்திருக்கிறார். ரம்பா வந்தால் கூட அசந்துவிடாத மனஉறுதி கொண்ட நம் ரமணா தன்னுடைய வானிலை நுண்ணறிவை பயன்படுத்தி லைலாவை சென்னைக்கு வரவிடாமல் மசூலிப்பட்டணத்துக்கு துரத்தி அனுப்பி விட்டதாக தெரிகிறது.
லைலா மசூலிப்பட்டணத்துக்கு பயணப்பட்டாலும் தன்னுடைய சைடு எஃபெக்ட்டை நேற்று சென்னையில் காட்ட தவறவில்லை. இருப்பினும் கொட்டும் மழைக்கு இடையே ரமணா அவர்களின் மகள் திருமணம் வெற்றிகரமாக நல்லமுறையில் நடந்திருக்கிறது. வருணபகவானின் சதியும் அதிரடியாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. மாமனாரான வானிலை ஆராய்ச்சி நிலைய அதிகாரி ரமணன் அவர்களுக்கும், புதுமணத் தம்பதிகளுக்கும் நேற்றைய தினம் கொட்டும் மழையில் நனைந்து ஜல்ப்பு பிடித்தோர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துகள்!
புலனாய்வு செய்திக்கு உதவி : தட்ஸ்தமிழ்.காம்
20 மே, 2010
19 மே, 2010
மில்லியன் டாலர் வெப்சைட்!
அலெக்ஸ் ட்யூ என்றொரு இருபத்தோரு வயது இளைஞன் இங்கிலாந்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தான். தனது கல்வித்தேவைகளுக்காக கொஞ்சம் பணம் சம்பாதிக்க அவன் விரும்பினான். அவனிடம் ஒரே ஒரு வெப்சைட் மட்டுமே இருந்தது. ஒரு மில்லியன் டாலரை இந்த வெப்சைட்டை வைத்து சம்பாதிக்க முடியுமா? என்று திட்டம் தீட்டினான்.
என்னுடைய வெப்சைட்டில் இருக்கும் ஒவ்வொரு பிக்ஸெலையும் (அளவை குறிக்கும் கணினி தொடர்பான சொல்) விற்கப்போகிறேன். என்னிடம் பத்து லட்சம் பிக்ஸல் இருக்கிறது. ஒவ்வொரு பிக்ஸலும் ஒரு டாலர் என்று அறிவித்தான். குறைந்தபட்சமாக ஒருவர் 10 x 10 பிக்ஸல் அளவே வாங்கமுடியும் என்றும் அறிவித்தான். இந்த 10 x 10 பிக்ஸெல் அளவுக்கு ஒரு நிறுவனம் 100 டாலரை செலுத்தினால் அவனது வெப்சைட்டில் நிறுவனம் தங்கள் விளம்பரத்தை வெளியிட்டுக் கொள்ளலாம். அவ்விளம்பரம் ஐந்து ஆண்டுகளுக்கு வெப்சைட்டில் இடம்பெற்றிருக்கும். அவ்விளம்பரத்தின் மூலமாக நிச்சயமாக விளம்பரம் செய்த நிறுவனத்தின் இணையத்தளத்துக்கு நிறைய பார்வையாளர்கள் வருவார்கள் என்று வாக்குறுதி கொடுத்தான்.
பொதுவாக பார்க்கப் போனால் இப்படி ஒரு திட்டமே பைத்தியக்காரத்தனமான திட்டம் என்று நாம் சொல்லிவிடுவோம். அலெக்ஸின் நண்பர்கள் பலரும் கூட அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் எல்லோரின் எதிர்பார்ப்பும் தவிடுபொடியானது. ஒரு ஆண்டுக்குள்ளாகவே தன் வெப்சைட்டில் (http://www.milliondollarhomepage.com) இருந்த பத்து லட்சம் பிக்ஸல்களையும் அலெக்ஸால் விற்றுவிட முடிந்தது. அலெக்ஸின் தளத்தில் விளம்பரம் செய்தவர்கள் அத்தனை பேருமே ஒட்டுமொத்த குரலில் எங்களுக்கு இது உபயோகமான முதலீடு என்றார்கள்.
அலெக்ஸின் தளத்தில் டி.எஸ். லேபரட்டரீஸ் என்ற நிறுவனம் 800 பிக்ஸல்களை வாங்கியிருந்தது. “அலெக்ஸின் தளத்தில் எங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்தியவுடனே எங்களது இணையத்தளத்துக்கு பல லட்சம் பார்வையாளர்கள் வந்தவண்ணம் இருந்தார்கள். எங்கள் நிறுவனத்தின் விற்பனை ஒருவாரத்துக்குள்ளாகவே நாற்பது முதல் ஐம்பது சதவிகிதம் வரை உயர்ந்தது. இன்றளவுக்கும் அதே விற்பனையை நாங்கள் தக்கவைத்துக் கொண்டிருக்கிறோம். இன்றும் கூட பலபேர் அலெக்ஸின் தளம் மூலமாக எங்கள் இணையத்தளத்துக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள்” என்று அந்த நிறுவனத்தின் தலைவர் ஜேம்ஸ் கேலோ சொன்னார்.
அவரிடம் விளம்பரம் செய்தவர்கள் மட்டுமல்ல, உலகளவில் இருக்கும் பல மீடியாக்களும் அலெக்ஸின் இந்த புதுமையான முயற்சியை பாராட்டினார்கள். பல விளம்பர ஜாம்பவான்கள் எப்படி இந்த திட்டம் வெற்றியடைந்தது? உட்கார்ந்த இடத்திலிருந்தே பத்து லட்சம் டாலரை அந்த பையன் எப்படி சம்பாதித்தான்? என்று மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். விளம்பரம் குறித்த எந்த பொதுவான நுணுக்கங்களும் தெரியாத அலெக்ஸ் ஜெயித்துக் காட்டியது இன்றைக்கும் கூட புதிராகவே இருக்கிறது.
அலெக்ஸ் செய்ததைப் போலவே, கிட்டத்தட்ட அதே முயற்சி ஒன்று தமிழ் வலைப்பதிவர்களுக்காக பிரத்யேககமாக நடந்து வருகிறது. கலையழகன் என்ற நண்பர் நடத்தும் http://minmini.com/ இணையத்தளம். ஒரு வகையில் இது ஒரு வித்தியாசமான தமிழ் வலைப்பதிவு திரட்டியாகவும் செயல்படும். 1111 பதிவர்களின் பதிவுகளை திரட்டும் முயற்சியில் மின்மினி களமிறங்கி இருப்பதாக தெரிகிறது. முதற்கட்டமாக 50 பிரபல(எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை) பதிவர்களின் பதிவுகள் இப்போதைக்கு அவர்களை கேட்காமலேயே இலவச அடிப்படையில் திரட்டப்படுகிறது. இன்னும் 51 பேர் தங்களுடைய புகைப்படமும் இடம்பெற இலவசமாக விண்ணப்பிக்கலாம் என்று நினைக்கிறேன். பின்னர் பத்துக்கு பத்து என்ற அடிப்படையில் 100 பிக்ஸல் அடங்கிய ஒரு பெட்டிக்கு ஒரு டாலர் என்று வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
மின்மினியில் ஏன் இணைய வேண்டும் என்ற கேள்விக்கு என்னிடம் தெளிவான பதில் ஏதுமில்லை. கேபிள் சங்கர் போல குறுகிய காலத்தில் பத்து லட்சம் ஹிட்ஸ்களை விரைவில் பெற விரும்பும் வலைப்பதிவர்களுக்கு இத்தளத்தை பரிந்துரைக்கிறேன். இதனால் வலைப்பதிவர்களுக்கு ஹிட்ஸ் தவிர்த்து வேறு எந்த பெரிய பலனையும் எதிர்ப்பார்த்து விட முடியாது என்று நினைக்கிறேன். வணிக நிறுவனங்கள் ஏதேனும் வலைப்பதிவு நடத்தினால் மின்மினி மூலமாக வணிகத்தை ஓரளவு வளரவைக்கலாம். எனினும் தமிழில் வலைப்பதிவர்களை வைத்து வித்தியாசமான விளையாட்டு ஆட வந்திருக்கும் நண்பர் கலையழகன் அவர்களை பாராட்டுகிறேன்.
மேலதிக தகவல்களைப் பெற http://minminicom.wordpress.com/ என்ற தளத்தை பாவிக்கலாம்.
17 மே, 2010
நட்சத்திர சன்னலில் வானம் எட்டிப் பார்க்குதே!
முன்பெல்லாம் தமிழ்மணம் நட்சத்திரம் என்று சொன்னால் ஒரு கெத்து இருந்தது என்பது உண்மைதான். நானெல்லாம் கூட தமிழ்மணத்தில் நட்சத்திரப் பதிவராக அங்கீகரிக்கப்பட்ட பின்னரே கொஞ்சம் பரவலாக தெரிந்தேன். அப்போதெல்லாம் பதிவர்கள் தமிழ்மணத்தில் இருந்து நட்சத்திர அழைப்பு கடிதம் வராதா என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள். குசும்பன் போன்ற பதிவர்கள் சும்மானாச்சுக்கும் யாருக்காவது தமிழ்மணத்தில் இருந்து அஞ்சல் போடுவதைப் போல போட்டு ஃபேக் நட்சத்திர அழைப்பு அனுப்பி கலாய்ப்பார்கள். அதெல்லாம் கனாக்காலம்.
நர்சிம், கேபிள்சங்கர், அகநாழிகை, வால்பையன், அதிஷா, தண்டோரா போன்ற நிறைய நிஜமான ‘ஸ்டார்' பதிவர்கள் நட்சத்திரங்கள் ஆனதே இல்லை எனும்போது பாமரன், க.சீ.சிவக்குமார் போன்றவர்கள் நட்சத்திரங்களாகக்கப்பட்டு ஒரு வாரத்துக்கு பதிவே போடாமல் நட்சத்திர சாதனை நிகழ்த்தியதுகூட உண்டு. சிலர் இருமுறை கூட நட்சத்திரத்தமான அதிர்ஷ்டமும் நடந்ததுண்டு. நட்சத்திரப் பதிவர் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்ற விஷயம் இன்னமும் சிதம்பர ரகசியமாகதான் இருக்கிறது.
கடந்தவார நட்சத்திரம் தமிழ்சசி. கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக பதிவுகளில் இருந்து விலகியிருந்தவர். தமிழ்மணத்தின் அட்மின்களில் ஒருவர் நட்சத்திர வாரத்தில் வந்ததுமே கொஞ்சம் இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. அந்த இன்ப அதிர்ச்சி இந்த வாரமும் தொடர்கிறது. சித்தார்த்த 'சே' க்வாடா என்ற பதிவர் நட்சத்திரமாகியிருக்கிறார். மெத்த மகிழ்ச்சி. இவரும் தமிழ்மண அட்மின்களின் ஒருவரா என்று தெரியவில்லை. அப்படி இருந்தாலும் ஒன்றும் பிரச்சினையில்லை.
என்னுடைய ஆச்சரியம் என்னவென்றால் நட்சத்திர அன்பர் 2009 அக்டோபரில் இந்த வலைப்பூவை தொடங்கி ஒரே ஒரு பதிவிட்டிருக்கிறார். இதையடுத்து ஐந்து நாட்களுக்கு முன்பாக ஒரு கவிதை எழுதியிருக்கிறார். மூன்றாவது பதிவை நட்சத்திர வாரத்தில் இடுகிறார். நல்ல வேகம்தான். இவரிட்ட இரண்டே பதிவுகளின் தரத்தில் நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது ஒரு நல்ல முன்னுதாரணம். ஆனால், ஒரு சின்ன சந்தேகம். ஒரு பதிவர் புதியதாக வலைப்பூ தொடங்கி தமிழ்மணத்தில் இணைக்க வேண்டுமானால் குறைந்தது மூன்று பதிவுகளாவது தமிழில் எழுதியிருக்க வேண்டும் என்றொரு விதி இருப்பதாக நினைவு. ஆனால் இரண்டே இரண்டு பதிவுகளை மட்டுமே எழுதியவர் எப்படி தமிழ்மண நட்சத்திரம் ஆக முடியும்? சரி. விதியை விடுங்கள். விதிகள் எல்லாமே உடைக்கப்படுவதற்காக ஏற்படுத்தப்படுபவைதானே?
எனக்கு ஒரு ‘ஸ்டார்' வலைப்பதிவரை தெரியும். ஆங்காங்கே அடர்த்தியாக பின்னூட்டமிடுவார். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பின்னூட்ட சுனாமியாக இருந்தவர். அமெரிக்காவில் இருந்து வந்த அவரை ஒருமுறை நேரில் சந்தித்து குசலம் விசாரித்துக் கொண்டிருந்தபோது, சம்பிரதாயத்துக்காக எல்லா பதிவர்களிடமும் சொல்வது மாதிரி, “அண்ணே உங்க பதிவையெல்லாம் படிச்சிருக்கேன். அட்டகாசம்” என்று அப்பாவித்தனமாக சொன்னேன். “அடப்போய்யா. எனக்கெங்கே வலைப்பூ இருக்கு? சும்மா ஒரு அக்கவுண்ட் ஸ்டார்ட் பண்ணி வெறுமனே பின்னூட்டம் மட்டும்தானே போட்டுக்கிட்டிருக்கேன்!” என்றார். அப்போதுதான் அவருக்கென்று ஒரு வலைப்பூவே இல்லாதது தெரிந்து என்னை நானே நொந்துகொண்டேன். இப்போதும் கூட அவருக்கென்று வலைப்பூ எதுவும் இல்லையென்று தெரிகிறது.
அடுத்தவார நட்சத்திரமாக அவரைத் தேர்ந்தெடுக்கலாம். நட்சத்திரமாவதற்கு வலைப்பூவெல்லாம் இருப்பது ஒரு முக்கியமா என்ன? நாம் நட்சத்திரம் என்று யாரையாவது நினைத்தால் நட்சத்திரமாக்கி அழகு பார்த்துவிட வேண்டியதுதான். சொல்ல மறந்துவிட்டேனே. இந்த வலைப்பூ இல்லாத பின்னூட்ட சுனாமியின் பெயர் சுடலைமாடன். அவரும் கூட அட்மினாகதான் இருக்கிறார். ஹாட்ரிக் அடிக்க அருமையான வாய்ப்பு.
“நீதான் இப்போது தமிழ்மணத்திலேயே இல்லையே? தமிழ்மணப்பட்டையைக் கூட தூக்கிவிட்டாயே? நீ ஏன் இதையெல்லாம் பேசுகிறாய்?” என்று பராசக்திபட க்ளைமேக்ஸில் வக்கீல் சிவாஜியை பார்த்து கேட்டதுமாதிரி நீங்கள் யாராவது பின்னூட்டத்தில் கேட்கலாம். நானும் சிவாஜி மாதிரிதான் பதில் சொல்லவேண்டும். “நான் தமிழ்மணத்தில் இல்லையென்று நினைத்துக் கொண்டிருந்தாலும் என் பதிவுகள் ‘எப்படியோ' தமிழ்மணத்தில் கொஞ்சநாளாக வந்து தொலைத்துக் கொண்டிருக்கிறது. இது பெரிய தொல்லையாக போகிறது. இப்படியெல்லாம் பேசினால் 'அது' மாதிரி வராமல் சுத்தபத்தமாக செய்துவிடுவார்கள் இல்லையா?”
நர்சிம், கேபிள்சங்கர், அகநாழிகை, வால்பையன், அதிஷா, தண்டோரா போன்ற நிறைய நிஜமான ‘ஸ்டார்' பதிவர்கள் நட்சத்திரங்கள் ஆனதே இல்லை எனும்போது பாமரன், க.சீ.சிவக்குமார் போன்றவர்கள் நட்சத்திரங்களாகக்கப்பட்டு ஒரு வாரத்துக்கு பதிவே போடாமல் நட்சத்திர சாதனை நிகழ்த்தியதுகூட உண்டு. சிலர் இருமுறை கூட நட்சத்திரத்தமான அதிர்ஷ்டமும் நடந்ததுண்டு. நட்சத்திரப் பதிவர் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்ற விஷயம் இன்னமும் சிதம்பர ரகசியமாகதான் இருக்கிறது.
கடந்தவார நட்சத்திரம் தமிழ்சசி. கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக பதிவுகளில் இருந்து விலகியிருந்தவர். தமிழ்மணத்தின் அட்மின்களில் ஒருவர் நட்சத்திர வாரத்தில் வந்ததுமே கொஞ்சம் இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது. அந்த இன்ப அதிர்ச்சி இந்த வாரமும் தொடர்கிறது. சித்தார்த்த 'சே' க்வாடா என்ற பதிவர் நட்சத்திரமாகியிருக்கிறார். மெத்த மகிழ்ச்சி. இவரும் தமிழ்மண அட்மின்களின் ஒருவரா என்று தெரியவில்லை. அப்படி இருந்தாலும் ஒன்றும் பிரச்சினையில்லை.
என்னுடைய ஆச்சரியம் என்னவென்றால் நட்சத்திர அன்பர் 2009 அக்டோபரில் இந்த வலைப்பூவை தொடங்கி ஒரே ஒரு பதிவிட்டிருக்கிறார். இதையடுத்து ஐந்து நாட்களுக்கு முன்பாக ஒரு கவிதை எழுதியிருக்கிறார். மூன்றாவது பதிவை நட்சத்திர வாரத்தில் இடுகிறார். நல்ல வேகம்தான். இவரிட்ட இரண்டே பதிவுகளின் தரத்தில் நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பது ஒரு நல்ல முன்னுதாரணம். ஆனால், ஒரு சின்ன சந்தேகம். ஒரு பதிவர் புதியதாக வலைப்பூ தொடங்கி தமிழ்மணத்தில் இணைக்க வேண்டுமானால் குறைந்தது மூன்று பதிவுகளாவது தமிழில் எழுதியிருக்க வேண்டும் என்றொரு விதி இருப்பதாக நினைவு. ஆனால் இரண்டே இரண்டு பதிவுகளை மட்டுமே எழுதியவர் எப்படி தமிழ்மண நட்சத்திரம் ஆக முடியும்? சரி. விதியை விடுங்கள். விதிகள் எல்லாமே உடைக்கப்படுவதற்காக ஏற்படுத்தப்படுபவைதானே?
எனக்கு ஒரு ‘ஸ்டார்' வலைப்பதிவரை தெரியும். ஆங்காங்கே அடர்த்தியாக பின்னூட்டமிடுவார். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பின்னூட்ட சுனாமியாக இருந்தவர். அமெரிக்காவில் இருந்து வந்த அவரை ஒருமுறை நேரில் சந்தித்து குசலம் விசாரித்துக் கொண்டிருந்தபோது, சம்பிரதாயத்துக்காக எல்லா பதிவர்களிடமும் சொல்வது மாதிரி, “அண்ணே உங்க பதிவையெல்லாம் படிச்சிருக்கேன். அட்டகாசம்” என்று அப்பாவித்தனமாக சொன்னேன். “அடப்போய்யா. எனக்கெங்கே வலைப்பூ இருக்கு? சும்மா ஒரு அக்கவுண்ட் ஸ்டார்ட் பண்ணி வெறுமனே பின்னூட்டம் மட்டும்தானே போட்டுக்கிட்டிருக்கேன்!” என்றார். அப்போதுதான் அவருக்கென்று ஒரு வலைப்பூவே இல்லாதது தெரிந்து என்னை நானே நொந்துகொண்டேன். இப்போதும் கூட அவருக்கென்று வலைப்பூ எதுவும் இல்லையென்று தெரிகிறது.
அடுத்தவார நட்சத்திரமாக அவரைத் தேர்ந்தெடுக்கலாம். நட்சத்திரமாவதற்கு வலைப்பூவெல்லாம் இருப்பது ஒரு முக்கியமா என்ன? நாம் நட்சத்திரம் என்று யாரையாவது நினைத்தால் நட்சத்திரமாக்கி அழகு பார்த்துவிட வேண்டியதுதான். சொல்ல மறந்துவிட்டேனே. இந்த வலைப்பூ இல்லாத பின்னூட்ட சுனாமியின் பெயர் சுடலைமாடன். அவரும் கூட அட்மினாகதான் இருக்கிறார். ஹாட்ரிக் அடிக்க அருமையான வாய்ப்பு.
“நீதான் இப்போது தமிழ்மணத்திலேயே இல்லையே? தமிழ்மணப்பட்டையைக் கூட தூக்கிவிட்டாயே? நீ ஏன் இதையெல்லாம் பேசுகிறாய்?” என்று பராசக்திபட க்ளைமேக்ஸில் வக்கீல் சிவாஜியை பார்த்து கேட்டதுமாதிரி நீங்கள் யாராவது பின்னூட்டத்தில் கேட்கலாம். நானும் சிவாஜி மாதிரிதான் பதில் சொல்லவேண்டும். “நான் தமிழ்மணத்தில் இல்லையென்று நினைத்துக் கொண்டிருந்தாலும் என் பதிவுகள் ‘எப்படியோ' தமிழ்மணத்தில் கொஞ்சநாளாக வந்து தொலைத்துக் கொண்டிருக்கிறது. இது பெரிய தொல்லையாக போகிறது. இப்படியெல்லாம் பேசினால் 'அது' மாதிரி வராமல் சுத்தபத்தமாக செய்துவிடுவார்கள் இல்லையா?”
15 மே, 2010
Raavanan (alias) Raavan Exclusive Film Stills - First time in Blog
14 மே, 2010
சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?
“சமீபத்தில் என்னுடைய சொந்த ஊருக்கு குடும்பத்தோடு சென்றிருந்தேன். மாடி அறையில் இரு பக்கங்களிலும் ஒரு அடி விட்ட்த்தில் ஒரு வட்டமான துளை. அதிலிருந்து ஒரு குருவி வெளியே ‘கிச் கிச்’ என சத்தமிட்டுக்கொண்டே பறந்துவந்தது. அதைக் கண்ட என்னுடைய பேத்தி ‘தாத்தா இது என்ன பறவை?’ என்று கேட்டாள்.
திகைத்துப் போனேன். சென்னையில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக நிறைய குருவிகளை கண்டிருக்கிறேன். ஆனால் இப்பொழுது எங்குமே காணப்படவில்லை. நகரில் வளர்ந்த என்னுடைய பேத்திக்கு, அந்தப் பறவையின் பெயர் கூட தெரியவில்லை. என் நினைவுக்கு தெரிந்தவரையில் பத்தாண்டுகளாக, குருவிகளை கண்டதாக நினைவில்லை. சிட்டுக்குருவிகள் எல்லாம் எங்கே போனது? ஏன் போனது? யாராவது எனக்கு பதில் கூறுவார்களா?” என்று புதிய தலைமுறைக்கு கடிதம் எழுதியிருந்தார் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வாசகர் கே.திரவியம்.
கடிதத்தை கண்டதும் நமக்குள்ளும் ‘சிட்டுக்குருவிகள் எங்கே போச்சு?’ என்ற கேள்வியே எழுந்தது. சுற்றுச்சூழல் ஆர்வலரும், இயற்கை உலக நிதியகத்துக்கான (WWF-India) அறங்காவலருமான தியடோர் பாஸ்கரனிடம் வாசகரின் கடிதத்தைக் காட்டினோம். அவர் விரிவாகவும், வேதனையோடும் பேச ஆரம்பித்தார்.
“பறவைகளைப்பற்றி என்னிடம் பேசுபவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி 'சிட்டுக்குருவிகளை இப்போது ஏன் காண முடிவதில்லை? மனிதருக்கு மிக அருகில் உரிமையுடன் வாழும் பறவை. புள்ளினத்தைப்பற்றி ஒன்றும் அறியாதவரும் சிட்டுகுருவியை இனங் கண்டுகொள்ள முடியும்.
சிறிது எண்ணிப் பார்த்தோமானால் சிட்டுக்குருவிகள் மட்டுமல்ல.. முன்பு நாம் எளிதில் கண்ட பல பறவைகளையும் கூட இப்போது அரிதாகத்தான் பார்க்க முடிகின்றது. அறுபதுகளில் சென்னை மவுண்ட் ரோடில் இருந்த ஒரு அரசு விடுதியில் நான் தங்கும் போதெல்லாம் காலையில் மெரினாவிற்கு நடந்து போவதுண்டு. அப்போது வாலாஜா சாலையில், அரசு விருந்தினர் விடுதிக்கு அடுத்த ராஜதானி கல்லூரி மகளிர் விடுதியின் முன் ஒரு பெரிய புளிய மரம் இருந்தது. அதனடியில் பலர் நின்று கொண்டு கூப்பிய கைகளுடன் மரத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கும் காட்சியை தினமும் பார்த்ததுண்டு. அந்த புளியமரத்தில் அடைந்திருந்த பல செம்பருந்துகள் காலையில் மரத்தை விட்டு பறந்து செல்லும் போது அவைகளைத் தரிசிக்கத்தான் அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.
இன்று சென்னையில் செம்பருந்தை யாராவது உங்களால் காண முடிகின்றதா? வெண்கொக்குகள் மாலையில் கூட்டம் கூட்டமாக வடதிசை நோக்கிப் பறப்பதை இன்று நாம் காணமுடிகின்றதா? கிளிகளின் கூட்டம் இன்று எங்கே போனது?
சுற்றுப்புற சூழலின் இயல்பு கெடாமலிருப்பதற்கு பறவைகள் ஒரு குறியீடு. ஒரு வயல்வெளியிலோ அல்லது ஏரியிலோ பறவைகளே இல்லாதிருந்தால் அங்கு சுற்றுச்சூழல் மாசுபட்டிருக்கிறது என்றும், அதனால் நீரில் வேதியல் பாதிப்பு இருக்கிறது என்றும் யூகிக்கலாம். ரசாயன பூச்சிமருந்துகளாலும் வேதியல் உரங்களாலும் நீரும் நிலமும் மாசுபடுத்தப்பட்டுவிட்டன. பறவைகளின் வாழ்விடங்கள் மாசுபடுவதற்கு முக்கிய காரணியான DDT என்ற நச்சு மருந்து 1942இல் பால் முல்லர் என்ற அறிவியலாளர் உருவாக்கி அதற்காக நோபல் பரிசும் பெற்றார்.
நமது நாட்டில் 1949இல் அறிமுகம் செய்யபட்ட DDT சார்ந்த இம்மருந்துகளை ஐம்பதுகளில் வேளாண்மையில் பெருமளவில் பயன்படுத்த ஆரம்பித்தனர். பறவைகளுக்கு பிடித்தது கேடுகாலம். பூச்சிக்கொல்லி மருந்துகள் பல அவதாரங்கள் எடுத்து பல பெயர்களுடன் வெளிவந்தன. இன்று நம்நாட்டில் பூச்சிக்கொல்லி மருந்துத் தொழிலில் மட்டும் 5000 கோடி ரூபாய் புரள்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு ஆண்டிற்கு 60,000 டன் நச்சுமருந்துகள் பயன்படுத்தப்படுகின்றது என்கிறது ஒரு கணிப்பு.
பயன்படுத்த ஆரம்பித்து இருபது வருடம் கழித்தே இதன் தீயவிளைவுகளை உணர முடிந்தது. இந்த நச்சு மருந்துகளின் - அவைகளில் பெயர்களை விட்டுவிடுவோம் - வேதியல் கூற்றின் அடிப்படை இயல்பு அவைகளின் அழியாத்தன்மை (persistence). எந்த இடத்திலும், எந்த உடலிலும் அது வீரியம் குறையாமல் இருக்கும். நீரிலிருந்து, தவளையில் உடலின் சென்று, பின் அதை இரையாகக்கொள்ளும் செம்பருந்துவின் உடலின் தங்கி அதை அழித்து விடுகின்றது. பருந்துகள் இடும் முட்டையிலிருந்து குஞ்சுகள் பொரிக்காது. சிட்டுகுருவிக்கும் இதே கதிதான். அது உண்ணும் சிறு தானியங்களிலிருக்கும் நச்சுப்பொருள் அதன் இனப்பெருக்கத்தை தடுக்கின்றது.
பூச்சிமருந்துகள் தீமை இழைக்கும் சிறு உயிரினங்களை மட்டுமல்லாமல் மருந்து தெளிக்கப்படும் இடத்திலுள்ள எல்லா பூச்சி புழுக்களையும் அழிக்கின்றன. மழைக்காலத்தில் இந்த மருந்துகள் நீரில் கரைந்து ஏரிகளையும் குளங்களையும் அடைந்து அங்கு வாழும் சிற்றுயிர்களையும் நாசம் செய்கின்றது. இந்த உயிரினங்களை இரையாகக்கொண்டு வாழும் புள்ளினங்கள் மறைய ஆரம்பிக்கின்றன.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன், எந்த சமயத்தில் வானத்தைப் பார்த்தாலும் ஏதாவது பறவைகளைக் காண முடியும். இப்போது நிலைமை வேறு. சில வாரங்களுக்கு முன், சித்தாலப்பாக்கம் அருகே ஒரு மாலையில், ஒரு பாறையின் மீது இருந்து சூரியன் மறைவதைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அரைமணி நேரம் இருந்திருப்போம். அந்தப் பரந்த வானத்தில் அந்த மாலையில் நாங்கள் எந்தப்பறவையையும் பார்க்கவில்லை. இரு வாலாட்டி குருவிகளைத்தவிர. புள்ளினம் எவ்வளவு அரிதாகிவிட்டது என்று புலப்பட்டது. சிட்டுக்குருவியும் இதுபோலத்தான் சுற்றுச்சூழல் மாசுவிற்கு பலியாகி விட்டது.
அதுமட்டுமல்ல. பழைய காலத்தில் ஓட்டு வீடுகள் அதிகம் இருந்த போது அந்த ஓட்டின் இடைவெளியில் கூடிகட்டி பல்கி பெருகிக் கொண்டிருந்தது. ஓட்டு வீடுகள் மறைந்து கான்கிரீட் கட்டடங்கள் வந்த பின் குருவிக்கு கூடு கட்ட இடமில்லை. மூன்றாவது காரணம் செல் தொலைபேசி டவர்கள் என்று சில அறிவியலாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த டவர்களிருந்து உருவாகும் கதிரியக்கம் பறவைகளை இனப்பெருக்கத்தை சீரழிக்கின்றது என்று சென்னையிலுள்ள உயிரியிலாளர் ரஞ்சித் டேனியல் கூறுகின்றார். சென்னை நகரிலிருந்த சிட்டுக்குருவிகள் மட்டுமல்ல, புல்புல், மணிப்புறா, செம்பருந்து போன்ற அன்றாடம் எளிதாகக் காணக்கூடிய புள்ளினங்களும் அரிதாகி விட்டன என்கிறார் டேனியல்.
கோவையிலுள்ள சலிம் அலி பறவையியல், இயற்கை வரலாறு மையத்திலுள்ள உயிரியலாளர்கள் ஒரு பரிசோதனை செய்து இதை அறிந்துள்ளனர். ஐம்பது முட்டைகளை செல் டவர் கதிரியக்கத்தின் தாக்கத்தில் முப்பது நிமடம் வைத்து பின் பரிசோதித்தில் எல்லா முட்டைகளில் கருக்களும் சிதைக்கப்பட்டிருந்ததை பதிவு செய்திருக்கின்றன.
சிட்டுக்குருவிகளில் ஆண்குருவிக்கும் பெண்குருவிக்கும் தோற்றத்தில் வித்தியாசம் உண்டு. ஆண்குருவியின் இறக்கைகளில் சிறிது செங்கல் நிறமிருக்கும். கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும் காலத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்தே கூடுகட்டும். குஞ்சுகள் பொரித்தவுடன் இரண்டும் இரைதேடிக்கொண்டு வந்து குஞ்சுகளுக்கு ஊட்டி விடும். சிட்டுக்குருவிகள் தானியங்களை உண்டு வாழ்ந்தாலும், குஞ்சுகளுக்கு புழு, பூச்சிகளைத்தான் இரையாகக் கொடுக்கின்றன.
இப்படி ஒன்றாக, ஆணும் பெண்ணும் சேர்ந்து குஞ்சுகளை பராமரிப்பதை சில பறவை இனங்களே செய்கின்றன. மயிலினத்தில் பெண்மயில் மட்டுமே குஞ்சுகளை பராமரிக்கும். மனிதருடன் மிக நெருக்கமாக இருந்த பறவை சிட்டுக்குருவி. வீடுகளிலும் பொது இடங்களிலும் அதன் குரல் கேட்டுக்கொண்டேயிருக்கும். இன்று நம்மை விட்டு விலகிப்போய் விட்டது. பறவை ஆர்வலர் யாரவது சிட்டுகுருவி ஒன்றைக் கண்டால் உடனே மின்னஞ்சலில் tamilbirds என்ற யாஹ¥ குழுவிற்கு செய்தி அனுப்பி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள்!” என்று முடித்தார் தியோடர் பாஸ்கரன்.
மனித இனம் எது எதையோ தேடி, தம்மிடம் இருப்பதை இழந்து வருகிறது என்பது மட்டும் அவரது பேச்சில் புரிகிறது.
(நன்றி : புதிய தலைமுறை)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)