முதலில் தமிழுக்கு ஏன் செம்மொழி அந்தஸ்து?
‘செம்மொழி’ என்ற பதத்துக்கான தகுதிகளாக பதினோரு விதிகள் தரப்பட்டிருக்கின்றன. தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, தாய்மைப் பண்பு, பண்பாட்டுக் கலை அறிவு மற்றும் பட்டறிவு வெளிப்பாடு, பிறமொழித் தாக்கமில்லா தன்மை, இலக்கிய வளம், உயர்சிந்தனை, கலை இலக்கியத் தனித்தன்மை, மொழிக்கோட்பாடு.
இவ்விதிகள் அனைத்தும் பொருந்தி வருவதாலேயே தமிழ் செம்மொழி எனும் தகுதிநிலையை அடைகிறது.
திராவிட மொழி குடும்பத்தில் இருக்கும் மொத்த மொழிகளின் எண்ணிக்கை 22. இதிலும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை மட்டுமே இலக்கியத் திறன் பெற்றவையாக அமைந்திருக்கின்றன. கொலமி, பார்ஜி, நாய்ன்னி, கோண்டி, குய், கூவி, கொண்டா, மால்ட்டா, ஒரயன், கோயா, போர்ரி உள்ளிட்ட மொழிகள் இலக்கியத்திறனற்று பேச்சு பயன்பாட்டில் இருக்கும் இதர மொழிகளாகும்.
இம்மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக தமிழ் இருக்கிறது. சீனம், ஹீப்ரூ, பெர்சியன், அரபி, லத்தீன், கிரீக், சமஸ்கிருதம் முதலானவை ஏற்கனவே இத்தகுதியைப் பெற்றவை. இன்று வழக்கில் இருக்கும் மொழிகளில் தமிழுக்கு போட்டியாக கருதப்படும் உயர்ந்த மொழிகளான பிரெஞ்சு (600 ஆண்டுகள்), மராத்தி (800 ஆண்டுகள்), வங்காள மொழி (1000 ஆண்டுகள்) ஆகியவற்றை ஒப்பிடும்போது, இவற்றைவிட 2000 ஆண்டுகள் கூடுதல் தொன்மை கொண்டதாக தமிழ் விளங்குகிறது.
தமிழின் தொன்மையையும், பெருமையையும் எடுத்துக்காட்ட நம் வசமிருப்பது சங்க இலக்கியங்கள். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைக்க இவ்விலக்கியங்களும் ஒருவகையில் காரணமாக இருக்கின்றன.
ஆனால் சங்க இலக்கியங்கள் எவை எவை என்ற தெளிவு நம் எல்லோருக்கும் இருக்கிறதா என்பது ஐயமே. ஐம்பெருங்காப்பியங்கள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு உள்ளிட்ட ஆகியவையே சங்க இலக்கியங்கள் என்று கூறப்படுகிறது. மொத்தமாக இவை மட்டும்தான் சங்க இலக்கியங்கள் என்று அறுதியிட்டு கூறிவிட முடியாது. சங்க காலத்தில் உருவாக்கப்பட்டவைகளில் இவை மட்டும்தான் நம்மிடம் இன்று எஞ்சி இருக்கிறது. ஐம்பெருங்காப்பியங்களில் வளையாபதி, குண்டலகேசி ஆகியவை நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
நமக்கு முழுமையாக கிடைத்திருக்கும் சங்கத்தமிழ் இலக்கியங்களின் பட்டியல் :
தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல்.
எட்டுத்தொகை : நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு
பத்துப்பாட்டு : திருமுருகாற்றுப்படை, பெருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்.
பதினெண் கீழ்க்கணக்கு : நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, பழமொழி, சிறுபஞ்சமூலம், திருக்குறள், திருகடுகம், ஆசாரக்கோவை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை.
கதைவளம், காவியச்சுவை மற்றும் கவித்துவ எழில் கொண்ட இலக்கியங்கள் இந்தளவுக்கு வேறேதேனும் மொழியில் இல்லவே இல்லை என்று அடித்துச் சொல்லலாம்.
இத்தகைய காரணங்களை சுட்டிக்காட்டி பல்லாண்டுகளாக பரிதிமாற்கலைஞர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் தமிழை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற போராட்டத்தை ஓர் இயக்கமாகவே தொடர்ச்சியாக நடத்தி வந்திருக்கிறார்கள். பரிதிமாற்கலைஞரால் முன்னெடுக்கப்பட்ட கோரிக்கை கலைஞரால் 2004ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைமுறைக்கு வந்தது. மத்திய அரசு ‘செம்மொழி’ என்றொரு தனி சிறப்புப் பிரிவை தோற்றுவித்து தமிழை செம்மொழி என்று அறிவித்தது.
இதையடுத்து விருதுகள், தமிழ்மொழி மேம்பாட்டு வாரியம், ஆய்வு உதவித் தொகைகள், செம்மொழி தமிழ் உயராய்வு மையம் ஆகிய உட்பிரிவுகளை கொண்ட மத்திய அரசின் செம்மொழித் தமிழ்த் திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட தமிழிலக்கியம், இலக்கணம், இசை, கல்வெட்டுகள் மற்றும் நாணங்கள் குறித்த ஆய்வுகளில் கவனம் செலுத்த முடிவெடுக்கப்பட்டது.
2007 ஆகஸ்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. முன்னதாக இதற்காக ரூ.76.32 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருந்தது.
செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் இதுவரை என்னென்ன செய்திருக்கிறது?
கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 41 செவ்வியல் நூல்களின் செம்பதிப்பு பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இவை தொடர்புடைய ஓலைச்சுவடிகள், தாள் சுவடிகள், பதிப்புகள் ஆகியவற்றை திரட்டுதல் ஆகிய பெரிய பணிகள் முழுமூச்சோடு நடந்துவருகிறது. தொல்காப்பியம், இறையனார் களவியல், அகநானூறு, ஐங்குறுநூறு, பத்துப்பாட்டு ஆகிய நூல்களின் பணி இவ்வாண்டு இறுதிக்குள் முடிவுக்கு வந்து, நூல்கள் வெளியிடப்பட்டு விடும்.
மணிப்பூரி, நேபாளி ஆகிய இருமொழிகளிலும் திருக்குறள் இப்போது மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. நற்றிணை, முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, சிலப்பதிகாரம், மணிமேகலை, நானாற்பது ஆகியவற்றின் மூன்று ஆங்கில மொழிபெயர்ப்புகள் அடங்கிய தொகுப்பு நூல்கள் முடிக்கப் பட்டிருக்கிறது.
பண்டைக்கால தமிழ் இலக்கியங்களை மரபுவழி ஓசை ஒழுங்கோடும், இசையோடும் கற்பிப்பதற்கு குறுந்தகடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. செம்மொழித் தமிழ் இலக்கியம், இலக்கணம், கல்வெட்டுகள், நாணயங்கள் தொடர்பான 18 காட்சிப்படங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் முதல் தொகுதி ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
தமிழகராதிகளில் இதுவரை இடம்பெறாத எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட சொற்கள் (அளவைகள், ஆடு மாடுகள், நெல் வகைகள், மீன்பிடிப்புத் தொழில், நெசவுத்தொழில், மண்பாண்ட்த் தொழில், வேளாண்மை தொடர்பானவை) தொகுக்கப்பட்டு ஆவணப் படுத்தப்பட்டிருக்கின்றன.
கிட்டத்தட்ட பதினோராயிரம் நூல்களும், பல்வேறு ஓலைச்சுவடிகளின் மின்பதிப்புடன் கூடிய குறுந்தகடுகள் ஆய்வு செய்யும் மாணவர்களின் வசதிக்காக நூலகத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது.
சுமார் ஐம்பது கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகள் நடத்தப்பட்டு பல்துறை சார்ந்த அறிஞர்களின் சுமார் 1500 ஆய்வுக் கட்டுரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட 94 பிராமிக் கல்வெட்டுகளும் 37 வட்டெழுத்து கல்வெட்டுகளும் HD Video & High Resolution Still Image முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிறுவனத்தின் உதவியோடு பழனிக்கு அருகில் உள்ள பொருந்தல் எனும் ஊரில் நடத்தப்பட்ட அகழ்வாய்வின் மூலமாக பல்வேறு அரிய சங்க காலத் தொல்லியல் சான்றுகள் (காசுகள், சூது பவள மணிகள், பளிங்கு மணிகள், தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள், மண் பாண்டங்கள், கண்ணாடி மணிகள், சுடுமண் பொம்மைகள் போன்றவை) எடுக்கப்பட்டிருக்கின்றன.
இதுமட்டுமின்றி செம்மொழி விருதுகள், ஆய்வாளர்களுக்கு முனைவர் பட்ட மேலாய்விற்கு நிதியுதவி என்று ஏராளமான விஷயங்கள் கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இன்று செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கிறோம் என்று கிளம்பியிருக்கும் சிறுபான்மை கும்பலுக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.
இம்மாநாடு செம்மொழி தகுதி கிடைத்த மறுவருடமே நியாயமாக நடத்தப்பட்டிருக்க வேண்டும். இப்போது நடத்தப்படுவது என்பதே மிகவும் தாமதமானது. 1995ல் தஞ்சையில் நடத்தப்பட்ட உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பிறகான சர்வதேச மாநாடு கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடத்தப்படவேயில்லை. உலகத் தமிழ் ஆய்வுக் கழகமும் இதற்கான முன்னெடுப்பு எதையும் எடுத்ததாகவும் தெரியவில்லை.
கலைஞர் இம்மாநாட்டை அறிவித்தபோது, அது உலகத் தமிழ் ஆய்வுக் கழகம் மூலமாக அறிவிக்கப்படவில்லை என்றொரு சர்ச்சை எழுந்தது. முன்னதாக நடத்தப்பட்ட எட்டாம் உலகத் தமிழ் மாநாடு கூட தமிழக அரசால் – அதாவது அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் - அறிவிக்கப்பட்டது என்பதை இங்கே நினைவுகூற வேண்டும். இம்மாநாட்டை உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் தலைவர் நொபுரு கரஷிமா எதிர்ப்பதாக பரப்பப்படும் தகவலும் உண்மையல்ல. அவர் 2011ல் நடத்தவேண்டும் என்றே கேட்டுக் கொண்டார். இந்நிறுவனத்தின் பொறுப்புகளில் இருக்கும் 9 பேரில் 6 பேர் இம்மாநாட்டுக்கு இசைவு தெரிவித்திருக்கிறார்கள் என்பதும் முக்கியமானது.
2011ல் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால் அந்நேரத்தில் நடத்தப்படுவது உசிதமாக இருக்காது என்ற காரணத்தாலேயே 2010, சனவரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநாடு ஜூன் மாதம் ‘செம்மொழி மாநாடு’ என்ற பெயரில் நடத்தப்படுகிறது. அனேகமாக இந்த தலைப்பில் நடத்தப்படும் ஒரே மாநாடாக இதுதானிருக்கும் என்று தெரிகிறது. அடுத்து நடத்தப்பட்டால் அது 9வது உலகத் தமிழ் மாநாடாக இருக்கும். எனவே இப்போது நடைபெற இருக்கும் மாநாட்டுக்கான தனித்துவம் சிறப்பு வாய்ந்தது. ‘எங்கள் மொழியும் செம்மொழிதான்!’ என்று அழகுத்தமிழ் அரசாட்சி உலகுக்கு உரத்து தெரிவிக்கப் போகும் மாநாடு இது.
சங்க காலத்திலேயே உலகோடு பண்பாட்டு, வணிகத் தொடர்பு மையமாக விளங்கிய பகுதி கொங்குப் பகுதி என்பதால், அது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் இடமாகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
நாளைய வரலாறு தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைத்ததையும், அதற்காக ஒரு மாநாடு பிரம்மாண்டமாக கோவையில் நடந்ததையும்தான் பதிவு செய்யப் போகிறதே தவிர, சில்லறை எதிர்ப்புகளை அல்ல. வரலாற்றில் இடம்பெற போகும் மாநாட்டை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் தமிழராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இதனாலேயே இருக்கிறது.
அண்மைக்கால தொல்லியல், வரலாறு, மொழியியல் ஆய்வுகளின் முடிவுகளையொட்டி இலக்கிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், தமிழிலக்கிய பண்பாடு தொடர்பான புதிய ஆய்வாளர்களை இனம் கண்டு ஒருங்கிணைப்பதற்கும் இம்மாநாடு அவசியமாகிறது. குறிப்பாக கடந்த இருபது ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்திருக்கும் கணினி தொழில்நுட்பம், அதில் தமிழ் இடம்பெற வேண்டியதின் அவசியம் ஆகியவற்றை எடுத்துக்காட்டவும் தமிழ் கணினி தொடர்பான அரங்கு தனியாக நடைபெறுகிறது. தமிழைப் பொறுத்தவரை முக்கியமாக கருதப்படும் அறிஞர்கள் 95 சதவிகிதம் பேர் இம்மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பிக்க இசைவு தந்திருக்கிறார்கள்.
இம்மாநாட்டை எதிர்க்கும் ஓரிருவரும் ஏன் எதிர்க்கிறார்கள் என்று பார்த்தோமானால் அரசியல் மட்டுமே காரணமாகிறது. இது கலைஞரால் நடத்தப்படும் மாநாடு என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே எதிர்க்கிறார்கள். இல்லையென்று அவர்கள் மறுத்தாலும் அடிநாதமான காரணம் இது மட்டுமே. கடந்த காலங்களில் இவர்கள் இணையங்களில் செய்துவரும் பரப்புரைகளை தொடர்ச்சியாக கண்காணித்து வருவோர் இதை உணரலாம்.
“கடந்த ஆண்டு ஈழத்தில் பல்லாயிரம் பேர் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ள துயரச்சூழலில் இந்த கொண்டாட்டம் தேவையா?” என்பதைப் போன்ற செண்டிமெண்டலான கேள்விகளை முன்வைக்கிறார்கள். ஆனால் இதே கேள்வியை முன்வைப்பவர்கள் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை சார்பாக தமிழ்விழா கொண்டாடுவார்களாம். இவர்கள் மொழியிலேயே சொன்னால் இழவு வீட்டில் பிரியாணி செய்து சாப்பிடுவார்களாம்.
அதுவும் எப்படி?
பிரியாமணி, லட்சுமிராய் போன்ற தமிழறிஞர்களை வைத்து எங்கள் விழாவுக்கு வாருங்கள் என்று இணையம் முழுக்க வீடியோ ஏற்றி பரப்புரை செய்வார்களாம். செம்மொழி மாநாட்டுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையா என்று கிண்டல் அடிப்பவர்கள் தங்கள் விழாவுக்கு ஹாரிஸ் ஜெயராஜையும், சாதனாசார்க்கத்தையும் சிறப்பு விருந்தினர்களாக அழைப்பார்களாம். விக்ரம், திரிஷாவென்று இன்னும் கூடுதல் கவர்ச்சியும் உண்டு.
அதாவது பொருளாதார மேன்மையை எட்டிவிட்ட அமெரிக்கத் தமிழர்கள் ஈழப்படுகொலைத் துயரத்தை மறக்க(?) சினிமா நட்சத்திரங்களோடு கொண்டாட்டம் போடலாமாம். போராடி பெற்ற செம்மொழித் தகுதியை கொண்டாட நினைக்கும் தமிழகத்தில் இருக்கும் சாமானியத் தமிழன் செம்மொழி மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமாம்.
நல்லா இருக்கய்யா இவங்க நாயகம்!
புறக்கணிக்கப்பட வேண்டியது மாநாடல்ல. தமிழ் மீது பற்று கொண்டவர்களாக தம்மைத் தாமே அறிவித்துக் கொண்டு, அரசியல் காழ்ப்புணர்வோடு போலியாக செயல்படும் இதுபோன்ற கபடவேடதாரிகள்தாம்!
11 ஜூன், 2010
10 ஜூன், 2010
தமிழில் குழந்தைகளுக்கான சினிமா?
கடந்த பத்தாண்டுகளில் தமிழில் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் என்று நீங்கள் நினைக்கும் படங்களை நினைவுபடுத்தி விரல்விட்டு எண்ணிக் கொண்டே வாருங்கள். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆர்ர்றூஊ, ஏழ்... முடியலை இல்லையா? விடுங்கள். இதே காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கான ஆங்கிலப்படங்கள் என்னென்ன என்று நீங்கள் நினைவுப்படுத்தி எண்ண ஆரம்பித்தால் உங்கள் தெருவிலிருக்கும் மொத்தப்பேரின் கைவிரல்களும் போதாது.
இப்போது மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமாவில் வெளிவந்த நாலாயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் குழந்தைகளை கவரும் வகையில் வெளியான படங்களின் எண்ணிக்கை வெறும் நூறுகளில்தான் இருக்கிறது.
சினிமாவின் சொர்க்கமான ஹாலிவுட்டில் இந்த நிலைமை இல்லை. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு ஒரு சுற்று, குளிர் விடுமுறைக்கு மற்றொரு சுற்று என்று நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் குழந்தைகளுக்காக தொடர்ச்சியாக வெளியாகிக்கொண்டே இருக்கிறது.
குழந்தைகளுக்கான படம் எது என்பதை உணர்வதிலேயே நமக்கு கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. திரை ஆய்வாளரான விஸ்வாமித்ரன் இதை எளிமையாக வரையறுக்கிறார். “ஒவ்வொரு குழந்தை திரைப்படமும் முதலில் பெற்றோருக்கானது, வயது முதிர்ந்தவர்களுக்கானது. அவர்களது பார்வையை விசாலப்படுத்துவதற்கானது.”
ஹாலிவுட்டில் இந்த பேருண்மையை படைப்பாளிகள் உணர்ந்திருக்கிறார்கள். உதாரணமாக கடந்த ஆண்டு வெளியான அப் (Up) திரைப்படத்தைக் குறிப்பிடலாம். இத்திரைப்படம் குழந்தைகளை விட பெரியவர்களை அதிகமாக கவர்ந்தது. பெற்றோரும் தங்களை குழந்தைகளாக உணரும் இதுமாதிரியான தருணங்கள் எவ்வளவு அற்புதமானவை. ஆஸ்கர் விருதுக்கான சிறந்த படங்கள் பட்டியலில் இடம்பெற்ற கடைசி ஐந்து படங்களில் ‘அப்’பும் இடம்பெற்றது. உலகின் தலைசிறந்த இயக்குனராக இன்று அனைவராலும் ஒப்புக்கொள்ளப்படும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் சொல்கிறார். “என்னுடைய படங்கள் குழந்தைகளை குறிவைத்து எடுக்கப்படுகின்றன”
ஏன் குழந்தைகளுக்காக சினிமா எடுக்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். நாம் விரும்புகிறோமோ இல்லையோ, சினிமா நம் எல்லோருடைய வாழ்க்கையையும் ஏதாவது ஒரு வகையில் பாதிப்புக்குள்ளாக்கியே வருகிறது. சினிமா ஒரு வணிகம் என்பதை தாண்டிப் பார்த்தோமானால் இசை, இலக்கியம், ஓவியம் என்று கலையின் எல்லா பரிமாணங்களையும் ஒருபுள்ளியில் நிறுத்தி பார்வையாளனுக்கு சாத்தியப்படுத்தும் தொழில்நுட்ப வளர்ச்சியாக இருக்கிறது. இதனால்தான் ரஷ்யப் புரட்சியாளர் லெனின் கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, “எல்லாக் கலைகளை விடவும் சினிமா முக்கியத்துவம் வாய்ந்த கலை” என்பதாக குறிப்பிட்டார்.
இன்று ஒரு நாட்டின் சமூகம், பண்பாடு, கலை உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி அந்நாடுகளில் இருந்து வெளிவரும் சினிமாக்கள் மூலமாக அயல்நாட்டவர்களால் அளவிடப்படுகிறது. நம் நாட்டு குழந்தைகளின் ரசனைத்தன்மையின் வெளிப்பாடாக குழந்தைகள் திரைப்படம் நிச்சயமாக அமையும்.
சினிமா என்றில்லை. குழந்தைகளுக்கான பத்திரிகைகள் கூட இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தளவில் இப்போது இல்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். பாலரத்னா, பூந்தளிர் மற்றும் எண்ணற்ற காமிக்ஸ் புத்தகங்கள் எல்லாம் இப்போது பெட்டிக்கடைகளில் தொங்குவதில்லை. பெரியவர்களுக்கான பத்திரிகைகளாக பார்த்து குழந்தைகளுக்கு என்று சில பக்கங்களை இடஒதுக்கீடு செய்தாலே பெரியவிஷயம்.
கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் கோடைவிடுமுறை குழந்தைகளை குறிவைத்து தமிழில் மூன்று படங்கள் வெளியாகியிருக்கின்றன. ரெட்டச்சுழி, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், குட்டிப்பிசாசு. இன்னும் சில படங்கள் தயாரிப்பிலும் இருக்கின்றன. தமிழ் சினிமா தனக்கான நுகர்வோராய் குழந்தைகளை அடையாளம் காணத் தொடங்கியிருக்கிறது என்பதாக இருந்தால் இம்மாற்றத்தை மகிழ்ச்சியோடு வரவேற்கலாம் இல்லையா?
நெடிய தமிழ் சினிமா வரலாற்றில் குழந்தை நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகம். ஆனால் குழந்தைகளுக்கான படங்கள் கொஞ்சம் குறைவுதான். பெரியவர்களையும் கவரும் படங்கள் வணிகரீதியாக பெரும் வெற்றி பெற்றிருக்கின்றன. வெறுமனே குழந்தைகளை மட்டும் குறிவைத்து எடுக்கப்படும் பல படங்கள் ஆவணப்படங்கள் மாதிரியான வறட்சித்தன்மையோடு வெகுஜன வரவேற்பை பெறத் தவறியிருக்கின்றன.
ஐம்பதை கடந்தவர்களிடம் கேட்டால் சட்டென்று ‘பாமா விஜயம்’, ‘குழந்தையும் தெய்வமும்’, ‘சாந்தி நிலையம்’, ‘எங்க மாமா’என்று ஒரு பெரிய பட்டியலை தரக்கூடும். இவையெல்லாம் முழுமையான குழந்தைகள் படமல்ல. ஆனால் குழந்தைகளை கவர்ந்த படங்கள்.
எழுபதுகளில் கவுபாய்கள் குதிரைகளில் வந்து துப்பாக்கியால் சுட்டு சுட்டீஸ்களை கவர்ந்தார்கள். அது ஆக்சன் யுகம். புரூஸ்லீ போன்ற அதிரடி நாயகர்களின் படங்கள் இங்கே சக்கைப்போடு போட்ட பாதிப்பில் ஆக்சன் படங்கள் நிறைய சிவப்பெறும்புகளாய் வரிசைகட்டி படமெடுத்தன. குழந்தைகளுக்கு ஆக்சன் பிடிக்கும் என்பதை படைப்பாளிகள் உணர்ந்தார்கள்.
எண்பதுகளின் தொடக்கத்தில் குழந்தைகள் சினிமா முயற்சி கொஞ்சம் சீரியஸாகவே சிந்திக்கப்பட்டது. 1984ல் வெளிவந்த இந்தியாவின் முதல் 3டி படமான ‘மைடியர் குட்டிச்சாத்தான்’ ஒரு மைல்கல் எனலாம். நவோதயா ஸ்டுடியோ அப்பச்சன் தயாரித்த இப்படத்தை அவரது மகன் ஜிஜோ இயக்கினார். இயக்குனரின் வயது அப்போது 21 மட்டுமே. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே இப்படத்தின் பட்ஜெட் 22 கோடி என்று பரபரப்பாக பேசப்பட்டது. வசூலிலும் குறைவைக்கவில்லை. இந்திய மொழிகள் பலவற்றிலும் டப்பிங் செய்யப்பட்டு சக்கைப்போடு போட்டது. 3டி தந்த விசித்திர அனுபவத்தால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் மீண்டும் மீண்டும் பார்த்தார்கள். 1997ல் இதே படம் டி.டி.எஸ். ஒலி சேர்க்கப்பட்டு வெளியாகி செகண்ட் இன்னிங்ஸிலும் செஞ்சுரி அடித்தது.
ஒரு திரைப்படம் வணிகரீதியான வெற்றியை அடைய குழந்தைகளையும் கவர்ந்தாகவேண்டும் என்ற சூழல் உருவானது. ரஜினிகாந்த் (ராஜா சின்ன ரோஜா), கமல்ஹாசன் (அபூர்வசகோதரர்கள்) போன்ற உச்சநடிகர்கள் கூட தங்களது இமேஜை குழந்தைகளுக்குப் பிடித்தமாதிரியாக கட்டமைக்கத் தொடங்கினார்கள்.
இந்தியாவின் தலைசிறந்த இயக்குனராக இன்றளவும் போற்றப்படும் மணிரத்னம் அஞ்சலி (1990) திரைப்படம் எடுத்தார். பிறப்பிலேயே மனநிலை பிறழ்ந்த ஒன்றரை வயது குழந்தையை பற்றிய உருக்கமான கதை. அக்குழந்தை வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் மற்ற வாண்டுகளின் கலாட்டாவென்று மணிரத்னத்துக்கு உரிய கமர்சியல் டச்சும் இருந்தது. குழந்தைகளின் உலகத்துக்குள் புகுந்து அவர்களது உளவியலை மணி அலசி ஆராய்ந்திருந்தார். படத்தில் நடித்த ஷாம்லிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது கிடைத்தது.
ம்.. இதெல்லாம் பழங்கதை!
தொண்ணூறுகளின் மத்தியில் தமிழ் சினிமாவில் ‘பேண்டஸி’ரத்தம் பாய்ச்சப்பட்டது. குழந்தைகளை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இளைஞர்களை கவரும் விதமாக கதை பண்ண ஆரம்பித்தார்கள். வசூலும் ஐப்பசிமாத அடைமழை மாதிரி கொட்டத் தொடங்கியது. சினிமா கலைவடிவமாக இன்னமும் முழு பரிமாணத்தை எட்டாத வகையில் வணிகமே பிரதானமானதாக இருக்கிறது. இதனால்தான் எங்குமே இல்லாத வகையில் சினிமாவை வணிகப்படம், கலைப்படம் என்று தரம்பிரித்து வைத்திருக்கிறார்கள்.
பெற்றோரும் குழந்தைகளை சினிமாவுக்கு அழைத்துவருவது குறித்த அச்சத்தில் இருக்கிறார்கள். ‘படம் பார்த்து கெட்டுப்போய்விடக் கூடாது’என்பது அவர்கள் எண்ணம். ‘குழந்தைகளுக்கு படமெடுத்துவிட்டு குழந்தைகளை பெற்றோர் அழைத்துவரவில்லை என்றால் நாங்கள் எப்படி படமெடுக்க முடியும்?’ என்பது சினிமாக்காரர்களின் ஆதங்கம். ‘படம் பார்த்தால் கெட்டுப்போகும் வகையில் சினிமா வந்தால் எப்படி குழந்தைகளோடு பார்க்கமுடியும்?’என்று பெற்றோர்கள் பதிலுக்கு எகிற.. கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததா மாதிரியான விவாதம்தான் நடக்கிறது.
படத்தில் வரும் குழந்தைகள் குழந்தைகளாக சித்தரிக்கப்படுவதில்லை என்பது சினிமா மீது வைக்கப்படும் இன்னொரு பெரிய குற்றச்சாட்டு. அஞ்சலி திரைப்படத்தில் குழந்தைகள் செய்யும் சேட்டையை நிஜத்தில் நான் கண்டதேயில்லை. வயதுக்கு மீறிய பேச்சும், நடத்தையும் எரிச்சலை தருகிறது.
லாபம் வருமென்றால் குழந்தைகளுக்கான படங்களை எடுக்க தமிழ் சினிமாக்காரர்களுக்கு அவர்களுக்கு மனத்தடை ஏதுமில்லை. வணிகத்துக்கு முதலிடம், மற்ற விஷயங்களுக்கெல்லாம் அடுத்தடுத்த இடம் என்பது சினிமாக்காரர்களின் எண்ணமாக இருக்கிறது. இப்போது ஏற்பட்டிருக்கும் குழந்தைகள் பட டிரெண்ட் தொடரவேண்டுமானால் பெற்றோர்கள் குழந்தைகளை தியேட்டருக்கு அழைத்து வரவேண்டும். படம் குழந்தைகளை திருப்தி படுத்தும் முன்னர் அவர்களது பெற்றோர்களை திருப்தி படுத்த வேண்டும்.
இந்தியில் வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற திரைப்படம் ‘தாரே ஜமீன் பர்’. பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான் ஒரு குழந்தை முக்கிய பாத்திரத்தில் நடித்த படத்தில் தனது இமேஜை விட்டுக்கொடுத்து நடித்து இயக்கினார். இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் இது. இதைப்போன்ற முயற்சிகள் தமிழில் செய்யப்பட்டால் மட்டுமே குழந்தைகள் படத்துக்கான தனியிடம் தமிழில் உருவாகும்.
முயற்சிப்பார்களா நம் படைப்பாளிகள்?
8 ஜூன், 2010
ஈழம் - ஆன்மாவின் மரணம்!
இனப்படுகொலை வரலாற்றில் தமிழன் பெயரும் இடம்பெறும் என எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. சம உரிமையும், சக வாழ்வும் கேட்டுப் போராடிய ஈழத் தமிழினத்துக்கு ஆயுதவழிப் போராட்டம் என்பது வேறு வழியற்ற இறுதித் தேர்வு. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் காரணம் அல்ல, அவர்கள் விளைவுகள். ஒடுக்குமுறைக்கு எதிரான விளைவுகள். அந்த உரிமைச் சமரின் பின்னுள்ள நியாயங்களை உலகம் புரிந்துகொள்ளும் முன்னரே நந்திக்கடலோரம் போராட்டம் முடித்து வைக்கப்பட்டுவிட்டது.
பொருளாதார அதிகாரத்தை மைய அச்சாகக் கொண்டு கட்டமைக்கப்படும் நவீன பொருளாதாரத்தில் அனைத்துமே சந்தையாகத்தான் பார்க்கப்படுகின்றது. சந்தை வியாபாரத்துக்கு எப்போதுமே கூச்சல்கள் பிடிப்பது இல்லை. எதிர்ப்பியக்கங்களின் போராட்டங்கள் அற்ற சந்தைதான் நிறுவனங்களுக்குத் தேவை. தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டப் பின்னரான இலங்கை இப்போது எதிர்ப்புகளும், கூச்சல்களும் அற்ற அமைதியான சந்தையாக இருக்கிறது. அதனால்தான் இந்திய பெரு முதலாளிகள் இலங்கையை நோக்கி படை எடுக்கின்றனர்.
ஈழ யுத்தத்தை நடத்தியதில் இந்தியாவின் பங்கு பிரதானமாக இருந்தது என்றால், அதை தடுத்து நிறுத்தியிருக்கக் கூடிய சாத்தியம் தமிழ்நாட்டுக்கே இருந்தது. குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகளுக்கு இத்தகைய அரசியல் மற்றும் மக்கள் செல்வாக்கு இருந்தது. ஆனால் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளுமே ஈழத்தின் இன அழிப்பை தங்களின் சுய லாபங்களுக்கு மடைமாற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். இத்தகைய கையாலாகத்தனத்தை அம்பலப்படுத்துவதில் தொடங்குகின்றன பாலாவின் கார்ட்டூன்கள். தமிழக அரசியல்வாதிகளின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் இருந்த பச்சை சந்தர்ப்பவாதத்தையும், பிழைப்புவாதத்தையும் இந்த கார்ட்டூன் கோடுகள் தோலுரிக்கின்றன.
'ஈழம் என்னும் ஆன்மாவை மரணமடைய வைத்தது இவர்தான்’ என்று சொல்ல முடியாத அளவுக்கு இந்த மக்கள் படுகொலையில் அரசியல் கட்சிகள், ஊடகங்கள், எழுத்தாளர்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் கை நனைத்துள்ளனர். மக்களின் மறதியால் யாவற்றையும் கடந்து சென்றுவிடலாம் என நினைக்கும் இந்த நேர்மையற்றவர்களை மக்களின் முன்பு அம்பலப்படுத்த இத்தைய தொகுப்புகள் உதவக் கூடியவை. எழுத்துக்களால் அல்லாது கோடுகளால் ஒரு குறிப்பான பிரச்னையை அணுகும் முதல் தமிழ் தொகுப்பு என்ற அடிப்படையில் இது கூடுதல் கவனம் பெறக் கூடியது.
பாலாவின் ‘ஈழம்: ஆன்மாவின் மரணம்’ என்ற இந்த தொகுப்பின் அறிமுக மற்றும் விமர்சனக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை 11 -6-10 அன்று, மாலை 6 மணிக்கு, இக்ஸா மையத்தில் (கன்னிமரா நூலகம் எதிரே, 107 பாந்தியன் சாலை, சென்னை-8) நடைபெறவிருக்கிறது. அனைவரும் பங்கேற்கும்படி அன்போடு அழைக்கிறோம்!
(எழுத்து : பாரதிதம்பி)
பாலாவின் முந்தைய நூலான நாட்டு நடப்பு குறித்த சிறு அறிமுகம்!
’ஈழம் - ஆன்மாவின் மரணம்’ நூலில் இருந்து சில தூரிகைத் துளிகள் :
பொருளாதார அதிகாரத்தை மைய அச்சாகக் கொண்டு கட்டமைக்கப்படும் நவீன பொருளாதாரத்தில் அனைத்துமே சந்தையாகத்தான் பார்க்கப்படுகின்றது. சந்தை வியாபாரத்துக்கு எப்போதுமே கூச்சல்கள் பிடிப்பது இல்லை. எதிர்ப்பியக்கங்களின் போராட்டங்கள் அற்ற சந்தைதான் நிறுவனங்களுக்குத் தேவை. தமிழர்கள் அழித்தொழிக்கப்பட்டப் பின்னரான இலங்கை இப்போது எதிர்ப்புகளும், கூச்சல்களும் அற்ற அமைதியான சந்தையாக இருக்கிறது. அதனால்தான் இந்திய பெரு முதலாளிகள் இலங்கையை நோக்கி படை எடுக்கின்றனர்.
ஈழ யுத்தத்தை நடத்தியதில் இந்தியாவின் பங்கு பிரதானமாக இருந்தது என்றால், அதை தடுத்து நிறுத்தியிருக்கக் கூடிய சாத்தியம் தமிழ்நாட்டுக்கே இருந்தது. குறிப்பாக தமிழக அரசியல் கட்சிகளுக்கு இத்தகைய அரசியல் மற்றும் மக்கள் செல்வாக்கு இருந்தது. ஆனால் கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளுமே ஈழத்தின் இன அழிப்பை தங்களின் சுய லாபங்களுக்கு மடைமாற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள். இத்தகைய கையாலாகத்தனத்தை அம்பலப்படுத்துவதில் தொடங்குகின்றன பாலாவின் கார்ட்டூன்கள். தமிழக அரசியல்வாதிகளின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் இருந்த பச்சை சந்தர்ப்பவாதத்தையும், பிழைப்புவாதத்தையும் இந்த கார்ட்டூன் கோடுகள் தோலுரிக்கின்றன.
'ஈழம் என்னும் ஆன்மாவை மரணமடைய வைத்தது இவர்தான்’ என்று சொல்ல முடியாத அளவுக்கு இந்த மக்கள் படுகொலையில் அரசியல் கட்சிகள், ஊடகங்கள், எழுத்தாளர்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் கை நனைத்துள்ளனர். மக்களின் மறதியால் யாவற்றையும் கடந்து சென்றுவிடலாம் என நினைக்கும் இந்த நேர்மையற்றவர்களை மக்களின் முன்பு அம்பலப்படுத்த இத்தைய தொகுப்புகள் உதவக் கூடியவை. எழுத்துக்களால் அல்லாது கோடுகளால் ஒரு குறிப்பான பிரச்னையை அணுகும் முதல் தமிழ் தொகுப்பு என்ற அடிப்படையில் இது கூடுதல் கவனம் பெறக் கூடியது.
பாலாவின் ‘ஈழம்: ஆன்மாவின் மரணம்’ என்ற இந்த தொகுப்பின் அறிமுக மற்றும் விமர்சனக் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை 11 -6-10 அன்று, மாலை 6 மணிக்கு, இக்ஸா மையத்தில் (கன்னிமரா நூலகம் எதிரே, 107 பாந்தியன் சாலை, சென்னை-8) நடைபெறவிருக்கிறது. அனைவரும் பங்கேற்கும்படி அன்போடு அழைக்கிறோம்!
(எழுத்து : பாரதிதம்பி)
பாலாவின் முந்தைய நூலான நாட்டு நடப்பு குறித்த சிறு அறிமுகம்!
’ஈழம் - ஆன்மாவின் மரணம்’ நூலில் இருந்து சில தூரிகைத் துளிகள் :
பெண் சிங்கம்!
அரைடவுசர் போட்டுக் கொண்டிருந்த வயது அது. குடும்பத்தோடு கலைஞரின் ‘தென்றல் சுடும்’ போயிருந்தோம். நங்கநல்லூர் ரங்கா, இன்றைய வெற்றிவேல் ஏ/சி, டி.டி.எஸ். நல்ல கூட்டம். “டோரி டோரி டொமக்க டோரி” என்ற செம்மொழிப்பாடல் இடம்பெற்றிருந்த படமது. ஆர்வத்தோடு படம் பார்க்க வந்தவர்கள், படத்தின் மொக்கையான போக்கைக் கண்டு நெளிந்து கொண்டிருந்தார்கள். க்ளைமேக்ஸில் மனோகரா கண்ணாம்பா ஸ்டைலில் நீளமான வசனத்தை ராதிகா ஏற்ற இறக்கத்தோடு பேசி நடிக்க, அப்பா உள்ளிட்ட ஓரிருவர் மட்டும் சவுண்டாக கைத்தட்டினார்கள்.
அந்த வயதில் முடிவெடுத்தேன். இனி கலைஞர் எழுதும் எந்தப் படத்தையும் வாழ்க்கையில் பார்க்கவே கூடாது. துரதிருஷ்டவசமாக என்னுடைய இரு தசாப்த சபதம் நேற்று ஒரு சங்கடமான தருணத்தில், மறுக்கவே இயலாத சூழலில் கைவிடப்பட வேண்டியதாயிற்று.
ஒரு ஊர்லே ஒரு ஃபாரஸ்ட் ஆபிஸர். இவர்தான் ஹீரோவென்றால் வில்லன் காட்டில் திருட்டுத்தனமாக மரம் வெட்டும் கடத்தல்காரன் என்பதை யூகித்து விட்டிருப்பீர்கள். ஹீரோயின் ஹீரோவின் ஆபிஸில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர். ஐ.பி.எஸ். படிக்கிறார். வில்லனின் சூழ்ச்சியில் கொலைக்கைதியாக ஹீரோ மாற, ஐ.பி.எஸ். ஹீரோயின் அந்த வழக்கை கையில் எடுத்து உண்மையான குற்றவாளி யாரென்று கண்டறிந்து நிரூபிக்கிறார்.
அனேகமாக கலைஞர் கடந்த முப்பதாண்டுகளில் வந்த தமிழ் சினிமா எதையும் பார்த்திருக்க மாட்டாரென்றுதான் இந்த படத்தை கண்டதும் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. சமகால தமிழ் சினிமாவென்ன, சமகால மெகாசீரியல்கள் கூட இதைவிட உள்ளடக்கத் தரத்தில் உயர்ந்தவை.
படா திராபையான கதை, திரைக்கதை, வசனத்தை கொண்டு பாவம் இயக்குனர் படாத பாடு பட்டிருக்கிறார். ’ட்ரெண்ட் கேப்’ தெரியக்கூடாது என்ற பதட்டம் அவருக்கு இருந்திருக்கும். எனவே பாடல் காட்சிகளை ஃபாரினில் படமாக்கியிருக்கிறார். ஆங்கிலம் கலக்காத தூயத்தமிழ் பாடல்களை ஃபாரின் லொக்கேஷன்களில் பார்க்கவே சகிக்கவில்லை. படத்தின் முதல் பாதியில் மட்டும் நான்கு பாடல்கள். படம் பார்க்கும் ரசிகன் கிழிந்த நாராகிறான்.
படத்துக்கு நடுவில் ‘நாடகம்’ காட்டும் பாணி எல்லாம் 70களிலேயே காலாவதியாகி விட்டது. கலைஞரின் வேலுநாச்சியார் நாடகம். பின்னணிக்குரல் வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன். வேலுநாச்சியாராக மீராஜாஸ்மினை பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. ஹீரோ அவரைவிட பாவம். தெலுங்குக்காரரான அவரை அழைத்து வந்து அடுக்கடுக்காக செந்தமிழ் வசனங்கள் பேசவைத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் “பொண்ணு பொறந்ததுன்னு கலங்கலாமா?” என்று ஆரம்பித்து, வரலாற்று கீர்த்தி மிக்க பெண்களின் பட்டியலை வாசித்து, கடைசியாக “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஒரு பொண்ணுதானே?” என்று முடிக்கும்போது ஆலந்தூர் நகர எட்டாவது வார்டு அன்னை சோனியா மன்ற செயலாளர் மட்டும் தியேட்டரில் கைத்தட்டுகிறார்.
கலைஞரின் வசனம் எப்படியிருக்கிறது?
ஒரு காட்சி. வன அலுவலகத்தைச் சேர்ந்த ஓட்டுனரான விவேக் ஜீப்போடு டீக்கடையில் நிற்கிறார்.
அப்போது அங்கே வரும் ஒருவர், “அண்ணே கட்டையை தூக்கிட்டுப் போகணும். வண்டியிலே ஏத்திக்கிட்டு வர்றீங்களா?”
“டேய் இது ஜீப்புடா. கட்டைய எல்லாம் லாரிலேதான் கொண்டு போகணும். சைஸ் சின்னதா இருந்தா ஏத்திக்கலாம். கட்டைய கண்ணுலே காட்டு!”
அந்த நபர் ஒரு நாட்டுக்கட்டையை அழைத்து வருகிறார்.
“டேய். இதுவாடா கட்டை?”
“ஆமாண்ணே. வைரம் பாய்ஞ்ச நாட்டுக்கட்டை. எம்பேருதான் வைரம்!”
இப்படியாக இளைஞர்களுக்காக டபுள்மீனிங் சமகால டயலாக்குகளை எழுத கலைஞர் முயற்சித்திருக்கிறார். நல்ல வசனம். நன்றி பத்ரி. “மாடசாமி. உனக்கு கால் எடுத்துட்டா நீ மடசாமி ஆயிடுவே!” மாதிரியான ‘நர்சிம் டச்’ வசனங்களும் உண்டு.
ஜே.கே.ரித்தீஷ், எம்.பி., ரம்பா, லாரன்ஸ் ராகவேந்திரா, லட்சுமிராய் என்று கவுரவ நட்சத்திரப் பட்டாளம் ஏராளம். எல்லாம் இருந்து என்ன பிரயோசனம்?
ஐ.பி.எஸ். ஆபிஸரான பெண்சிங்கம் சண்டை போடுவார், இரண்டாம் பாதியை தலையில் தூக்கி சுமப்பார் என்று நினைத்தால்.. ம்ஹூம்.. ஒரு டூயட் பாடுகிறார். போலிஸ் யூனிபார்ம் போட்ட சோளக்கொல்லை பொம்மை மாதிரி அங்கும் இங்கும் நடக்கிறார். க்ளைமேக்ஸில் மட்டும் ஒப்புக்குச் சப்பாணியாய் எல்லாம் முடிந்தபிறகு வந்து வில்லனை சுடுகிறார். டைட்டிலுக்கு இருக்கும் முக்கியத்துவம் கொஞ்சம் கூட கேரக்டருக்கு இல்லையே? திமுக தொண்டனுக்கு அந்த காலத்து கலைஞரின் ‘பூ ஒன்று புயலானது’ எல்லாம் நினைவுக்கு வந்து கண்ணில் நீர் கசிகிறது.
படம் முழுக்க தேவையில்லாமல் அள்ளித் தெளிக்கப்பட்ட கவர்ச்சி. சமகாலத்து சண்டை போடும் ஹீரோயிஸம் என்று பல கூறுகள் இது பெண்ணுரிமைக்கான படமல்ல என்று கட்டியம் கூறுகிறது. எந்த காட்சியிலுமே பெண்ணினத்தின் தனித்துவம் எடுத்து காட்டப்படவில்லை. சும்மா வெட்கப்படாமல் நேரடியாகவே சொல்லிவிடுகிறேன்.
பெண்சிங்கம் - போலி பெண்ணியம் பேசும் அக்மார்க் ஆணாதிக்கவாதிகளின் இத்துப்போன பழைய ரீல்!
அந்த வயதில் முடிவெடுத்தேன். இனி கலைஞர் எழுதும் எந்தப் படத்தையும் வாழ்க்கையில் பார்க்கவே கூடாது. துரதிருஷ்டவசமாக என்னுடைய இரு தசாப்த சபதம் நேற்று ஒரு சங்கடமான தருணத்தில், மறுக்கவே இயலாத சூழலில் கைவிடப்பட வேண்டியதாயிற்று.
ஒரு ஊர்லே ஒரு ஃபாரஸ்ட் ஆபிஸர். இவர்தான் ஹீரோவென்றால் வில்லன் காட்டில் திருட்டுத்தனமாக மரம் வெட்டும் கடத்தல்காரன் என்பதை யூகித்து விட்டிருப்பீர்கள். ஹீரோயின் ஹீரோவின் ஆபிஸில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர். ஐ.பி.எஸ். படிக்கிறார். வில்லனின் சூழ்ச்சியில் கொலைக்கைதியாக ஹீரோ மாற, ஐ.பி.எஸ். ஹீரோயின் அந்த வழக்கை கையில் எடுத்து உண்மையான குற்றவாளி யாரென்று கண்டறிந்து நிரூபிக்கிறார்.
அனேகமாக கலைஞர் கடந்த முப்பதாண்டுகளில் வந்த தமிழ் சினிமா எதையும் பார்த்திருக்க மாட்டாரென்றுதான் இந்த படத்தை கண்டதும் முடிவெடுக்க வேண்டியிருக்கிறது. சமகால தமிழ் சினிமாவென்ன, சமகால மெகாசீரியல்கள் கூட இதைவிட உள்ளடக்கத் தரத்தில் உயர்ந்தவை.
படா திராபையான கதை, திரைக்கதை, வசனத்தை கொண்டு பாவம் இயக்குனர் படாத பாடு பட்டிருக்கிறார். ’ட்ரெண்ட் கேப்’ தெரியக்கூடாது என்ற பதட்டம் அவருக்கு இருந்திருக்கும். எனவே பாடல் காட்சிகளை ஃபாரினில் படமாக்கியிருக்கிறார். ஆங்கிலம் கலக்காத தூயத்தமிழ் பாடல்களை ஃபாரின் லொக்கேஷன்களில் பார்க்கவே சகிக்கவில்லை. படத்தின் முதல் பாதியில் மட்டும் நான்கு பாடல்கள். படம் பார்க்கும் ரசிகன் கிழிந்த நாராகிறான்.
படத்துக்கு நடுவில் ‘நாடகம்’ காட்டும் பாணி எல்லாம் 70களிலேயே காலாவதியாகி விட்டது. கலைஞரின் வேலுநாச்சியார் நாடகம். பின்னணிக்குரல் வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன். வேலுநாச்சியாராக மீராஜாஸ்மினை பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. ஹீரோ அவரைவிட பாவம். தெலுங்குக்காரரான அவரை அழைத்து வந்து அடுக்கடுக்காக செந்தமிழ் வசனங்கள் பேசவைத்திருக்கிறார்கள். ஒரு காட்சியில் “பொண்ணு பொறந்ததுன்னு கலங்கலாமா?” என்று ஆரம்பித்து, வரலாற்று கீர்த்தி மிக்க பெண்களின் பட்டியலை வாசித்து, கடைசியாக “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஒரு பொண்ணுதானே?” என்று முடிக்கும்போது ஆலந்தூர் நகர எட்டாவது வார்டு அன்னை சோனியா மன்ற செயலாளர் மட்டும் தியேட்டரில் கைத்தட்டுகிறார்.
கலைஞரின் வசனம் எப்படியிருக்கிறது?
ஒரு காட்சி. வன அலுவலகத்தைச் சேர்ந்த ஓட்டுனரான விவேக் ஜீப்போடு டீக்கடையில் நிற்கிறார்.
அப்போது அங்கே வரும் ஒருவர், “அண்ணே கட்டையை தூக்கிட்டுப் போகணும். வண்டியிலே ஏத்திக்கிட்டு வர்றீங்களா?”
“டேய் இது ஜீப்புடா. கட்டைய எல்லாம் லாரிலேதான் கொண்டு போகணும். சைஸ் சின்னதா இருந்தா ஏத்திக்கலாம். கட்டைய கண்ணுலே காட்டு!”
அந்த நபர் ஒரு நாட்டுக்கட்டையை அழைத்து வருகிறார்.
“டேய். இதுவாடா கட்டை?”
“ஆமாண்ணே. வைரம் பாய்ஞ்ச நாட்டுக்கட்டை. எம்பேருதான் வைரம்!”
இப்படியாக இளைஞர்களுக்காக டபுள்மீனிங் சமகால டயலாக்குகளை எழுத கலைஞர் முயற்சித்திருக்கிறார். நல்ல வசனம். நன்றி பத்ரி. “மாடசாமி. உனக்கு கால் எடுத்துட்டா நீ மடசாமி ஆயிடுவே!” மாதிரியான ‘நர்சிம் டச்’ வசனங்களும் உண்டு.
ஜே.கே.ரித்தீஷ், எம்.பி., ரம்பா, லாரன்ஸ் ராகவேந்திரா, லட்சுமிராய் என்று கவுரவ நட்சத்திரப் பட்டாளம் ஏராளம். எல்லாம் இருந்து என்ன பிரயோசனம்?
ஐ.பி.எஸ். ஆபிஸரான பெண்சிங்கம் சண்டை போடுவார், இரண்டாம் பாதியை தலையில் தூக்கி சுமப்பார் என்று நினைத்தால்.. ம்ஹூம்.. ஒரு டூயட் பாடுகிறார். போலிஸ் யூனிபார்ம் போட்ட சோளக்கொல்லை பொம்மை மாதிரி அங்கும் இங்கும் நடக்கிறார். க்ளைமேக்ஸில் மட்டும் ஒப்புக்குச் சப்பாணியாய் எல்லாம் முடிந்தபிறகு வந்து வில்லனை சுடுகிறார். டைட்டிலுக்கு இருக்கும் முக்கியத்துவம் கொஞ்சம் கூட கேரக்டருக்கு இல்லையே? திமுக தொண்டனுக்கு அந்த காலத்து கலைஞரின் ‘பூ ஒன்று புயலானது’ எல்லாம் நினைவுக்கு வந்து கண்ணில் நீர் கசிகிறது.
படம் முழுக்க தேவையில்லாமல் அள்ளித் தெளிக்கப்பட்ட கவர்ச்சி. சமகாலத்து சண்டை போடும் ஹீரோயிஸம் என்று பல கூறுகள் இது பெண்ணுரிமைக்கான படமல்ல என்று கட்டியம் கூறுகிறது. எந்த காட்சியிலுமே பெண்ணினத்தின் தனித்துவம் எடுத்து காட்டப்படவில்லை. சும்மா வெட்கப்படாமல் நேரடியாகவே சொல்லிவிடுகிறேன்.
பெண்சிங்கம் - போலி பெண்ணியம் பேசும் அக்மார்க் ஆணாதிக்கவாதிகளின் இத்துப்போன பழைய ரீல்!
7 ஜூன், 2010
மனிதம் மிச்சமிருக்கிறது : ஹமீதே சாட்சி!
அவருக்கு சர்வநிச்சயமாக தெரியாது. இறந்தவர்கள் எந்த சாதி, மொழி, என்ன மதம், நம் மாநிலமா வெளிமாநிலமா? எதுவுமே தெரியாது. ஆனாலும் இரண்டு நாட்களாக இரவு பகல் பாராமல் வென்லாக் அரசு மருத்துவமனையின் பிணவறை அருகில் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்துக் கொண்டிருந்தார். மங்களூர் விமான விபத்தில் இறந்தவர்களின் உடல்கள் அங்குதான் ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்டுக் கொண்டிருந்தது.
தேசமே சோகத்தில் மூழ்கிக் கிடக்க, இறந்தவர்களின் உடல்களை உரியவர்களிடம் ஒப்படைக்கவும், அவர்களுக்கு ஆறுதல் கூறவும் செய்தியைக் கேள்விப்பட்டதுமே, தன்னார்வலராக ஓடிவந்த அவரின் பெயர் அப்துல் ஹமீத் அலி. வயது 60.
விபத்தில் இறந்தவர்களில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். மொழி புரியாமல், என்ன செய்வதென்று அறியாமல் பிணவறை வாசலில் விக்கித்து நின்ற உறவினர்களை ஆசுவாசப்படுத்தி, குடிக்க நீர் கொடுத்து, தகவல்களை அவர்களிடம் பெற்று அதிகாரிகளுக்கு உதவினார் ஹமீத். மரணமடைந்தவர்களின் உடல் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவதற்கு ஹமீதின் இந்த சேவை மிக்க உதவியாக இருந்திருக்கிறது.
ஊடகவியலாளர்கள் அவரை படம் எடுக்க முனைந்தபோது, “நிறைய வேலை இருக்குப்பா” என்று அன்போடு மறுத்தார். மங்களூருக்கு அருகில் மஞ்சேஸ்வர் நகரைச் சேர்ந்த ஹமீதுக்கு ஆறு குழந்தைகள். “எல்லோருக்கும் ஆண்டவன் புண்ணியத்தில் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்துவிட்டேன். சும்மாதானே இருக்கிறேன். ஒரு அவசர ஆபத்துக்கு உதவுவதில் என்ன குறைந்துவிடப் போகிறேன்!” என்று படபடப்பாக பேசிக்கொண்டே, ஸ்ட்ரெச்சரோடு ஓடுகிறார். அடுத்த ஆம்புலன்ஸ் வந்து கொண்டிருக்கிறது.
இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட அறுபது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க ஹமீது வேலை பார்த்ததாக பணியில் இருந்த மருத்துவர் ஒருவர் சொல்கிறார். அவராகவே வந்தார். யாரும் எதுவும் சொல்லாமல் அவராகவே புயல் மாதிரி எங்களோடு வேலை பார்க்கிறார் என்று மருத்துவமனை சிப்பந்திகள் ஆச்சரியப்படுகிறார்கள்.
“ஊரே ஓலமிட்டுக் கொண்டிருக்க, வீட்டில் ஓய்வெடுக்க என் மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை” – இந்த மீட்புப் பணிக்கு தாமாகவே முன்வந்த்தற்கு ஹமீத் சொல்லும் காரணம் இது.
சாதி சண்டைகள், மதக்கலவரங்கள், பிரிவினை கோஷங்கள் அவ்வப்போது அச்சமூட்டும்போது ஹமீத் போன்றவர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள். இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்றால் என்னவென்று கேட்பவர்களுக்கு விடையாக, இவரை நோக்கி நாம் கைகாட்டலாம்.
(நன்றி : புதிய தலைமுறை)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)