‘உல்டா’ என்றொரு அழகிய தமிழ் சொல்லாடலை என்னுடைய பதின்ம வயதுகளில் அடிக்கடி கேட்டு சிலாகித்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதாவது வித்தியாசமான காட்சிகள் சினிமாத் திரையில் தெரிந்தால், அப்படியே இங்கிலீஷ்லேருந்து ‘உல்டா’ பண்ணிட்டாண்டா என்று ஸ்பாட்டிலேயே கண்டுபிடித்து ரசிகர்கள் நொங்கெடுத்து விடுவார்கள்.
இதுமாதிரியெல்லாம் நொங்கெடுக்க ‘உல்டா’ ஒன்றும் தீண்டாமை மாதிரி பாவச்செயல் அல்ல. ‘உல்டா’ என்றொரு தொழில்நுட்பம் இல்லாது போயிருந்தால் விஜயகாந்த் இங்கே புரட்சிக்கலைஞர் ஆகியிருக்கவே முடியாது. தென்னாட்டு மைக்கேல் ஜாக்சனாக பிரபுதேவா உயர்ந்திருக்க முடியாது. கமல்ஹாசன் காட்ஃபாதர் ஆகியிருக்க மாட்டார். ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆகியிருக்க வாய்ப்பிருந்திருக்காது.
90களில் இதுபோல ’உல்டா’க்களை கண்டறிந்து கட்டுரை எழுதுவது இதழியலின் அத்தியாவசியத் தேவையாகக்கூட இருந்ததுண்டு. ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ பாட்டு ஹிட் ஆனபோது, மெட்ரோப்ரியா கூட குமுதத்தில், அப்பாடல் எந்த ஆங்கிலப் படத்திலிருந்து பிட் அடிக்கப்பட்டது என்று எழுதியிருந்தார். ‘உல்டா’ காட்சிகளை அமைப்பதில் வல்லவரான இயக்குனர் வசந்தே கூட வெறுத்துப் போய் ‘உல்டா’ என்ற பெயரில் ஒரு அருமையான சிறுகதையை விகடனில் எழுதியிருந்ததாக ஞாபகம்.
அமெரிக்க லத்தீன் இலக்கிய ரசனை கொண்ட என்னுடைய வாசகர்களே! மேற்கண்ட மூன்று பாராகிராப்புகளின் மூலமாக நான் உங்கள் மனதுக்குள் புகுந்து, உங்கள் மனோவோட்டத்தை மாற்ற முயற்சிக்கிறேன் என்பதை இன்னேரம் புரிந்துகொண்டிருப்பீர்கள். நான் ஆயிரக்கணக்கான இலக்கியங்களை படைத்து சோர்வு அடைந்துவிட்டிருப்பது உங்களுக்கு தெரியும்.
சோர்வடைந்தும் தொடர்ச்சியாக பிரிண்டிங் மிஷின் மாதிரி நான் படைப்புகளை படைத்துக்கொண்டே போவதற்கு நான் காரணமல்ல என்பதை நீங்கள் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். என்னுள் மார்க்குவேஸும், டால்ஸ்டாயும், தஸ்தாவேஸ்கியும், இன்னும் ஏகப்பட்ட இலக்கிய அஸ்கு புஸ்குகளும் பேயாய் இறங்கி, புயலாய் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஏன் என்னால் மட்டும் உலகின் தலைச்சிறந்த எழுத்தாளன் ஆகமுடிந்திருக்கிறது, உங்களால் ஏன் முடியவில்லை என்று தீவிரமாக ரூம் போட்டோ, பாம் போட்டோ யோசித்துப் பாருங்கள். ஏனெனில் நீங்கள் நானில்லை. நான் நினைத்தாலும் அழித்துவிடமுடியாது என்னுடைய பிரபலத்துக்கு காரணமென்ன? ஏனெனில் நான் நீங்களில்லை.
தமிழின் முன்னணி பத்திரிகைகளும், தெலுங்கு பத்திரிகைகளும், கன்னட, மலையாள, அரபி, ஹீப்ரு, லத்தீன், ஜெர்மானிய, பிரெஞ்சு, அல்பேனிய, ஆப்ரகாமிய மற்றும் மூவாயிரத்து சொச்ச மொழிகளில் வெளிவந்துக் கொண்டிருக்கும் பத்திரிகைகளும், அம்மொழிகளில் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களும் என்னுடைய எழுத்துகளை ‘உல்டா’ அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவ்வப்போது கண்டறிந்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.
உல்டா தொடர்பான இதுபோன்ற மின்னஞ்சல்கள் எனக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சமாவது வருவதால், கூகிள் நிறுவனம் என்னுடைய மின்னஞ்சலுக்கான இடத்தை ஒரு லட்சம் ஜிகா பைட்டாக உயர்த்தியிருக்கிறார்கள். ஷேக்ஸ்பியர் கூட அடையமுடியாத உயரமிது.
இதைப்போலவே என்னைப்போன்ற நோபல்தன்மை கொண்ட மாற்றுமொழி சமகாலப் படைப்பாளிகளுக்கும் அவர்களது படைப்பை நான் உல்டா அடிப்பது தொடர்பாக, அவரவரது ரசிகர்கள் அவரவர்க்கு மின்னஞ்சல் மழை பொழிந்துக் கொண்டிருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அவர்கள் நானாக முடியாது என்றாலும் அவர்களும் எழுதுகிறார்கள் என்றவகையில் அவர்களை மதிக்கிறேன்.
இதுவரையில் இப்பதிவில் பதியப்பட்ட 280 வார்த்தைகளை வாசித்ததில் உங்களுக்கு ஒன்று புரிந்திருக்கும். இதுதான் உண்மை. பேருண்மை. இதை நேரிடையாக ஒப்புக்கொள்ள எனக்கு தயக்கமோ, வெட்கமோ, அருவருப்போ, ஆனந்தமோ, அகஞானமோ, புறத்தேடலோ, வேறு எந்த கருமாந்திரமோ தேவைப்படவில்லை. “உல்டா இன்றி அமையாது உலகு”
5 ஆகஸ்ட், 2010
4 ஆகஸ்ட், 2010
கிண்டியில் கண்டது!
காலில் செருப்பில்லை. கனவுகள் மிதக்கும் கண்கள். மகனையோ, மகளையோ கையில் பிடித்துக்கொண்டு தயக்கத்தோடு நுழையும் பெற்றோர். முகங்களில் எதிர்ப்பார்ப்பும், கவலையும் சரிவிகிதத்தில். அண்ணா பலகலைக்கழக கேம்பஸ் இன்ஜினியரிங் கவுன்சிலிங் திருவிழா. ஒவ்வொரு ஆண்டும் முகங்கள் மட்டுமே மாறுகிறது. காட்சிகளும், உணர்வுகளும் அதேதான்.
இம்முறை நுழையும்போதே கல்விக் கண்காட்சி கண்ணுக்குப் படுகிறது. கல்லூரிகள் வரிசையாக ‘ஸ்டால்’ அமைத்து மாணவர்களை அசத்துகிறார்கள். ‘தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கு வரும் மாணவ மணிகளே வருக வருக’வென ப்ளக்ஸ் பேனர்கள். ‘முன்பின் தெரியாதவர்கள் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டாம்’ என்று ஆங்காங்கே பல்கலைக்கழக நிர்வாகத்தின் எச்சரிக்கைப் பலகை.
மரத்தடிகளில் கையில் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அனாயசமாக விரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் பெற்றோர். நம்மூரில் பணம் புழங்கும் சீசன் இரண்டே இரண்டுதான். ஒன்று தீபாவளி. மற்றொன்று பள்ளி, கல்லூரி திறக்கும் ஜூன், ஜூலை. பணம் புழங்கும் இடமென்பதால் யாராவது சமூகவிரோதிகள் உள்ளே நுழைந்து யாரையும் ஏமாற்றிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையில் போலிஸார் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு ‘ரவுண்ட்ஸ்’ வருகிறார்கள்.
கோயமுத்தூர் மாவட்டம் சோமனூர் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி ஒரு விவசாயி. 1161 மதிப்பெண்கள் பெற்றிருக்கும் மகள் ஆனந்தியோடு வந்திருக்கிறார். “வங்கிக்கடன் வாங்கும் எண்ணம் எதுவுமில்லீங்க. வாங்கினாலும் நாமதான் திருப்பிக் கட்டியாவணும். பொண்ணு மேற்படிப்புக்குன்னு ஏற்கனவே திட்டமிட்டு கொஞ்சம் பணம் சேர்த்திருக்கேன். அதை வெச்சு சமாளிச்சுப்பேன்” என்று வங்கிக்கடன் பெற தயக்கம் காட்டுகிறார்.
இந்த தயக்கமே அவசியமற்றது. நான்கு லட்ச ரூபாய் வரை கடன்பெற பிணை (செக்யூரிட்டி) எதுவும் வங்கிகள் இப்போது கேட்பதில்லை. கடன்பெறுவதற்கான நடைமுறைகளை எளிமையாக்கி இருக்கிறார்கள். வளாகத்திலேயே ஸ்டால்கள் அமைத்திருக்கும் வங்கிகள் விவரங்களை கேட்பவர்களுக்கு விலாவரியாக முகம் சுளிக்காமல் திரும்ப திரும்ப விவரிக்கிறார்கள். இங்கே விவரங்களை கேட்பவர்கள், ஊருக்குத் திரும்பி வங்கியின் அந்த ஊர்கிளை நிர்வாகியை அணுகி கடன் பெற்றுக் கொள்ளலாம். அரசு, கல்விக்கடன் விஷயத்தில் கடந்த சில ஆண்டுகளாக தாராளமயக்கொள்கை காட்டிவருகிறது.
கவுன்சிலிங்குக்கு வரும் மாணவ-மாணவிகளில் (அவர்களின் பெற்றோரும் கூட) நிறைய பேர் பெரும்பாலும் முதன்முறையாக சென்னையைப் பார்க்கிறார்கள். கிராமப்புற வெள்ளந்தித்தனம் அசலாக வெளிப்படுகிறது. ‘அக்கம் பக்கத்துலே கடை கண்ணியே இல்லியே? பட்டணத்துலே இருக்கறவங்க ஆத்திர அவசரத்துக்கு ஒரு சோடா குடிக்கக்கூட பஸ் ஏறி ரொம்ப தூரம் போவணுமோ?’ என்று பட்டணக்காரர்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள். கிண்டி காட்டுக்கு நடுவில் அமைந்திருக்கும் அண்ணா பல்கலைக் கழகத்தின் அருகில் குடியிருக்கும் ஒரே நபர் மாட்சிமை தாங்கிய கவர்னர் பெருமகனார் மட்டும்தான். எனவேதான் இங்கே கடை, கண்ணிக்கு வாய்ப்பேயில்லை.
ஊரில் பஸ் ஏறி நேராக கோயம்பேடுக்கு வருபவர்கள், பஸ் நிலையத்திலேயே குளித்துவிட்டு பெட்டி, படுக்கையோடு கேம்பஸுக்கு வந்துவிடுகிறார்கள். காலையிலேயே அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்துவிடுவதால் எங்கும் தங்கவேண்டும் என்று யாருக்கும் தோன்றுவதில்லை. மாலைக்குள் குறைந்தது 3500 பேரின் எதிர்காலம் கவுன்சிலிங்கில் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. விரும்பிய கல்லூரியும், படிப்பும் கிடைத்தவர்கள் மகிழ்ச்சியாக இரவே ஊருக்கு கிளம்பிவிடுகிறார்கள்.
சிவகாமி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியிலிருந்து வந்திருக்கிறார். மகள் கிருத்திகா 1147 மதிப்பெண் எடுத்திருக்கிறார். “எந்த கோர்ஸூ கெடைச்சா என்ன? எம்பொண்ணு என்ஜினீரிங் படிக்கோணும். அவ்ளோதான்” என்று பெரிய எதிர்ப்பார்ப்பு ஏதுமின்றி சொல்கிறார். குரோம்பேட்டையில் உறவினர்கள் வீடு இருப்பதால், ஆண் துணை ஏதுமின்றி சென்னைக்கு ரயில் ஏறியிருக்கிறார்கள் அம்மாவும், மகளும். இரண்டு நாட்கள் தங்கியிருந்து சென்னையைச் சுற்றிப் பார்த்து ஊருக்கு திரும்புவதாக திட்டம்.
கை நடுங்கிக் கொண்டே படிவங்களை பூர்த்திச் செய்கிறார்கள் மாணவர்கள். “ஒருவேளை தப்பாயிடுமோ?”. நகரங்களில் படித்தவர்களுக்கு இதுமாதிரி தயக்கமெல்லாம் ஏதுமில்லை. அவர்களுக்கு இந்த கவுன்சலிங் கலாச்சாரம் அன்னியமானதாகத் தெரியவில்லை. அண்ணனோ, பக்கத்து வீட்டு அக்காவோ ஏற்கனவே வந்திருப்பார்கள். கவுன்சலிங் என்றால் என்னவென்று அவர்களை விசாரித்து அறிந்து தெம்பாக வருகிறார்கள். பாவம், கிராமப்புற மாணவர்கள்தான் முதன்முதலாக பார்லிமெண்ட் கட்டடத்துக்குள் அடியெடுத்து வைக்கும் இளம் எம்.பி. மாதிரி தயக்கத்தோடு அஞ்சுகிறார்கள்.
கடந்த ஆண்டு பொருளாதார மந்தம் காரணமாக ஐ.டி.துறைக்கு மவுசு குறைந்து இருந்ததாக ஒரு பார்வை தென்பட்டது. இப்போது மீண்டும் சாஃப்ட்வேர் கம்பெனிகள் மீண்டு எழுந்திருப்பதால் மாணவர்கள் பலருக்கும் ஐ.டி.யே சரணம். அடுத்ததாக சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக் துறைகளுக்கு போட்டா போட்டி நடக்கிறது.
பல்லாயிரக் கணக்கில் திரண்டு வருபவர்களுக்கு வசதிகள் பரவாயில்லை. கேண்டீனில் தங்குதடையின்றி உணவு கிடைக்கிறது. ஆங்காங்கே சிண்டெக்ஸ் டேங்க் வைத்து குடிநீர்வசதி. வேறு என்ன வேண்டும்?
அஞ்சாதே!
கவுன்சலிங் என்பது என்ன?
மாணவர்கள் விருப்பப்பட்ட பாடப்பிரிவை, விரும்பும் கல்லூரிகள் தேர்ந்தெடுக்க வகை செய்வதே கவுன்சலிங்.
கவுன்சலிங் எப்படி நடக்கிறது?
• கவுன்சலிங்குக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்கென்று குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாக ரொக்கம் அல்லது வரைவோலையாக (டி.டி) கவுன்சலிங் கட்டணம் கட்ட வேண்டும். பல்கலைக்கழக வளாகத்திலேயே வங்கி இருப்பதால் டி.டி. எடுப்பது சுலபம். ஆனால் நீண்ட வரிசை நிற்கும். எனவே ஊரிலிருந்து கிளம்புவதற்கு முன்பாகவே டி.டி. எடுத்து வந்துவிடுவது நல்லது.
• பணம் கட்டிய வரிசையே உங்களை ஒரு கூடத்துக்கு அழைத்துச் செல்லும். கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை பிரிவு பிரிவாக பிரித்து வைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட பிரிவு மாணவர்களை கவுன்சலிங்குக்கு ஒலிபெருக்கியில் அழைப்பார்கள்.
• மிகப்பெரிய அரங்கம் ஒன்றில் கவுன்சலிங் நடைபெறும். உள்ளே மாணவரோடு, பெற்றோரில் ஒருவர் மட்டுமே உடன் செல்லலாம். கவுன்சலிங் கூடத்தில் நுழைந்ததும், உங்கள் வருகையைப் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பதிவு மற்றும் கவுன்சலிங் முடியும் வரை உள்ளே நுழைந்தவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதியில்லை.
• மிகப்பெரிய திரையில் காட்டப்படும் காலியிடங்களில் மூன்று பாடப்பிரிவுகள் மற்றும் மூன்று கல்லூரிகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். கலந்தாய்வின் போது மாணவர்கள் தெரிவு செய்த பாடப்பிரிவு மற்றும் கல்லூரி எக்காரணம் கொண்டும் மாற்றப்பட இயலாதது என்பதை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். தேர்ந்தெடுத்த பின்பு சான்றிதழ் சரிபார்க்கும் இடத்துக்கு செல்ல வேண்டும்.
• சான்றிதழ் சரிபார்க்கும் இடத்தில் உண்மையான சான்றிதழைக் காட்ட வேண்டும். ஜெராக்ஸ் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
• இறுதியாக நீங்கள் ஏற்கனவே தேர்வு செய்திருந்த கல்லூரி பாடப்பிரிவுகளில் ஒன்றை, கணினியின் முன் அமர்ந்திருக்கும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.
• கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கப்பட்டு நீங்கள் அழைக்கப்படுவீர்கள். அங்கே நீங்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிக்கான ஒதுக்கீட்டுப் படிவமும், மீதம் செலுத்த வேண்டியத் தொகைக்கான வங்கிப் படிவமும் வழங்கப்படும். பணத்தை அன்றே செலுத்தலாம். அல்லது கல்லூரிக்குச் சென்றும் செலுத்தலாம்.
• ஒரு சிறிய மருத்துவப் பரிசோதனையும் நடைபெறும்.
கவுன்சலிங்கில் வெற்றி பெற...
சில முன் தயாரிப்புகளோடு போனால் – அதாவது ஹோம்வொர்க் செய்தால் – கவுன்சலிங் மூலம் நல்ல பலனைப் பெறலாம்.
1. என்ன படிப்பு, எந்த கல்லூரியில் என்பதை முன்கூட்டியே எந்தவித குழப்பங்களுக்கும் இடம் தராமல் தீர்மானித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய திறமை, ஆர்வம், மனோபாவம், சக்தி ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் படிப்பினைத் தேர்ந்தெடுங்கள். எல்லோரும் என்ன படிக்கிறார்களோ அதையே நாமும் படிப்போம் என்றோ அல்லது வெறும் வேலை வாய்ப்பு அடிப்படையில் மட்டுமோ என்றோ தேர்ந்தெடுக்காதீர்கள். நான்கு வருடத்தில் வேலைச்சந்தை எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
2. கல்லூரியை தெரிவு செய்வதற்கு முன்பாக அக்கல்லூரியில் அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள், தொழிற்துறையோடு அக்கல்லூரி வைத்திருக்கும் உறவு, வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகள் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://www.annauniv.edu/ இணையத்தளத்தில் இவ்விவரங்களை விலாவரியாக காணலாம். உதாரணத்துக்கு, நீங்கள் படிக்க விரும்பும் துறையில் கடந்த செமஸ்டரில் எத்தனை பேர் வெற்றி கண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். அந்தத் துறையில் அக்கல்லூரி எப்படி என்பதை ஓரளவுக்கு புரிந்துக் கொள்ளலாம். உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கல்லூரியிலேயே படிக்க வேண்டும் என்று விரும்பினால், அங்கே உள்ள படிப்புகளில் எது சிறந்தது என்பதை கண்டுபிடியுங்கள்.
3. நீங்கள் விரும்பும் படிப்பு அல்லது கல்லூரி கண்டிப்பாக கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அதனால் உங்களது இரண்டாவது, மூன்றாவது விருப்பங்களை முன்னதாகவே தெரிவுசெய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ரேங்க், கட்-ஆஃப், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை உத்தேசமாக கண்டறிய முடியும். கடந்த ஆண்டின் ரேங்க் லிஸ்ட் கட்-ஆஃப் பட்டியலைக் கொண்டு ஒரு ஐடியா கிடைக்கும். ஆனால் இது 100 சதவிகிதம் துல்லியமாக இருக்குமென்று சொல்ல முடியாது. வருடத்திற்கேற்ப சிலபல காரணிகளால் மாறக்கூடும். இதைக் கண்டுபிடிக்க சில இணையத்தளங்கள் உதவும். உதாரணம் : http://collegesintamilnadu.com/Counseling/TNEA_Cutoff_Search.asp. உங்கள் மொத்த மதிப்பெண், விரும்பும் படிப்பு, இடஒதுக்கீட்டிற்கு தகுதியானவரா என்ற விபரங்களைக் கொடுத்தால் இந்த இணையதளங்கள் எந்தெந்தக் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உண்டு என்பதைச் சொல்லும். ஆனால் இதெல்லாம் உத்தேசமாக ஒரு ‘ஐடியா’வுக்குதான்.
4. கவுன்சலிங் தொடங்கிய பின்பு ஒவ்வொரு நாள் இரவும் http://www.annauniv.edu/tnea என்ற இணையத் தளத்தில் எந்தக் கல்லூரியில், எந்தப் பிரிவில் எவ்வளவு இடம் நிரம்பியிருக்கிறது போன்ற தகவல்களை உடனுக்குடன் ஏற்றி வைப்பார்கள். இதைத் தொடர்ந்துக் கவனித்து வந்தாலே, உங்கள் முறை வரும்போது என்ன நிலை இருக்கும் என்பதை ஓரளவு யூகித்து தெரிந்துக் கொள்ளலாம்.
இத்தனைக்குப் பிறகும் நீங்கள் விரும்பியது கிடைக்கவில்லை எனில்? சிம்பிள். கிடைத்ததை விரும்ப ஆரம்பியுங்கள்!
(நன்றி : புதிய தலைமுறை)
இம்முறை நுழையும்போதே கல்விக் கண்காட்சி கண்ணுக்குப் படுகிறது. கல்லூரிகள் வரிசையாக ‘ஸ்டால்’ அமைத்து மாணவர்களை அசத்துகிறார்கள். ‘தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கு வரும் மாணவ மணிகளே வருக வருக’வென ப்ளக்ஸ் பேனர்கள். ‘முன்பின் தெரியாதவர்கள் வழிகாட்டுதலைப் பின்பற்ற வேண்டாம்’ என்று ஆங்காங்கே பல்கலைக்கழக நிர்வாகத்தின் எச்சரிக்கைப் பலகை.
மரத்தடிகளில் கையில் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அனாயசமாக விரித்து சிரித்துப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் பெற்றோர். நம்மூரில் பணம் புழங்கும் சீசன் இரண்டே இரண்டுதான். ஒன்று தீபாவளி. மற்றொன்று பள்ளி, கல்லூரி திறக்கும் ஜூன், ஜூலை. பணம் புழங்கும் இடமென்பதால் யாராவது சமூகவிரோதிகள் உள்ளே நுழைந்து யாரையும் ஏமாற்றிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையில் போலிஸார் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு ‘ரவுண்ட்ஸ்’ வருகிறார்கள்.
கோயமுத்தூர் மாவட்டம் சோமனூர் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி ஒரு விவசாயி. 1161 மதிப்பெண்கள் பெற்றிருக்கும் மகள் ஆனந்தியோடு வந்திருக்கிறார். “வங்கிக்கடன் வாங்கும் எண்ணம் எதுவுமில்லீங்க. வாங்கினாலும் நாமதான் திருப்பிக் கட்டியாவணும். பொண்ணு மேற்படிப்புக்குன்னு ஏற்கனவே திட்டமிட்டு கொஞ்சம் பணம் சேர்த்திருக்கேன். அதை வெச்சு சமாளிச்சுப்பேன்” என்று வங்கிக்கடன் பெற தயக்கம் காட்டுகிறார்.
இந்த தயக்கமே அவசியமற்றது. நான்கு லட்ச ரூபாய் வரை கடன்பெற பிணை (செக்யூரிட்டி) எதுவும் வங்கிகள் இப்போது கேட்பதில்லை. கடன்பெறுவதற்கான நடைமுறைகளை எளிமையாக்கி இருக்கிறார்கள். வளாகத்திலேயே ஸ்டால்கள் அமைத்திருக்கும் வங்கிகள் விவரங்களை கேட்பவர்களுக்கு விலாவரியாக முகம் சுளிக்காமல் திரும்ப திரும்ப விவரிக்கிறார்கள். இங்கே விவரங்களை கேட்பவர்கள், ஊருக்குத் திரும்பி வங்கியின் அந்த ஊர்கிளை நிர்வாகியை அணுகி கடன் பெற்றுக் கொள்ளலாம். அரசு, கல்விக்கடன் விஷயத்தில் கடந்த சில ஆண்டுகளாக தாராளமயக்கொள்கை காட்டிவருகிறது.
கவுன்சிலிங்குக்கு வரும் மாணவ-மாணவிகளில் (அவர்களின் பெற்றோரும் கூட) நிறைய பேர் பெரும்பாலும் முதன்முறையாக சென்னையைப் பார்க்கிறார்கள். கிராமப்புற வெள்ளந்தித்தனம் அசலாக வெளிப்படுகிறது. ‘அக்கம் பக்கத்துலே கடை கண்ணியே இல்லியே? பட்டணத்துலே இருக்கறவங்க ஆத்திர அவசரத்துக்கு ஒரு சோடா குடிக்கக்கூட பஸ் ஏறி ரொம்ப தூரம் போவணுமோ?’ என்று பட்டணக்காரர்களைப் பற்றி கவலைப்படுகிறார்கள். கிண்டி காட்டுக்கு நடுவில் அமைந்திருக்கும் அண்ணா பல்கலைக் கழகத்தின் அருகில் குடியிருக்கும் ஒரே நபர் மாட்சிமை தாங்கிய கவர்னர் பெருமகனார் மட்டும்தான். எனவேதான் இங்கே கடை, கண்ணிக்கு வாய்ப்பேயில்லை.
ஊரில் பஸ் ஏறி நேராக கோயம்பேடுக்கு வருபவர்கள், பஸ் நிலையத்திலேயே குளித்துவிட்டு பெட்டி, படுக்கையோடு கேம்பஸுக்கு வந்துவிடுகிறார்கள். காலையிலேயே அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்துவிடுவதால் எங்கும் தங்கவேண்டும் என்று யாருக்கும் தோன்றுவதில்லை. மாலைக்குள் குறைந்தது 3500 பேரின் எதிர்காலம் கவுன்சிலிங்கில் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. விரும்பிய கல்லூரியும், படிப்பும் கிடைத்தவர்கள் மகிழ்ச்சியாக இரவே ஊருக்கு கிளம்பிவிடுகிறார்கள்.
சிவகாமி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியிலிருந்து வந்திருக்கிறார். மகள் கிருத்திகா 1147 மதிப்பெண் எடுத்திருக்கிறார். “எந்த கோர்ஸூ கெடைச்சா என்ன? எம்பொண்ணு என்ஜினீரிங் படிக்கோணும். அவ்ளோதான்” என்று பெரிய எதிர்ப்பார்ப்பு ஏதுமின்றி சொல்கிறார். குரோம்பேட்டையில் உறவினர்கள் வீடு இருப்பதால், ஆண் துணை ஏதுமின்றி சென்னைக்கு ரயில் ஏறியிருக்கிறார்கள் அம்மாவும், மகளும். இரண்டு நாட்கள் தங்கியிருந்து சென்னையைச் சுற்றிப் பார்த்து ஊருக்கு திரும்புவதாக திட்டம்.
கை நடுங்கிக் கொண்டே படிவங்களை பூர்த்திச் செய்கிறார்கள் மாணவர்கள். “ஒருவேளை தப்பாயிடுமோ?”. நகரங்களில் படித்தவர்களுக்கு இதுமாதிரி தயக்கமெல்லாம் ஏதுமில்லை. அவர்களுக்கு இந்த கவுன்சலிங் கலாச்சாரம் அன்னியமானதாகத் தெரியவில்லை. அண்ணனோ, பக்கத்து வீட்டு அக்காவோ ஏற்கனவே வந்திருப்பார்கள். கவுன்சலிங் என்றால் என்னவென்று அவர்களை விசாரித்து அறிந்து தெம்பாக வருகிறார்கள். பாவம், கிராமப்புற மாணவர்கள்தான் முதன்முதலாக பார்லிமெண்ட் கட்டடத்துக்குள் அடியெடுத்து வைக்கும் இளம் எம்.பி. மாதிரி தயக்கத்தோடு அஞ்சுகிறார்கள்.
கடந்த ஆண்டு பொருளாதார மந்தம் காரணமாக ஐ.டி.துறைக்கு மவுசு குறைந்து இருந்ததாக ஒரு பார்வை தென்பட்டது. இப்போது மீண்டும் சாஃப்ட்வேர் கம்பெனிகள் மீண்டு எழுந்திருப்பதால் மாணவர்கள் பலருக்கும் ஐ.டி.யே சரணம். அடுத்ததாக சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக் துறைகளுக்கு போட்டா போட்டி நடக்கிறது.
பல்லாயிரக் கணக்கில் திரண்டு வருபவர்களுக்கு வசதிகள் பரவாயில்லை. கேண்டீனில் தங்குதடையின்றி உணவு கிடைக்கிறது. ஆங்காங்கே சிண்டெக்ஸ் டேங்க் வைத்து குடிநீர்வசதி. வேறு என்ன வேண்டும்?
அஞ்சாதே!
கவுன்சலிங் என்பது என்ன?
மாணவர்கள் விருப்பப்பட்ட பாடப்பிரிவை, விரும்பும் கல்லூரிகள் தேர்ந்தெடுக்க வகை செய்வதே கவுன்சலிங்.
கவுன்சலிங் எப்படி நடக்கிறது?
• கவுன்சலிங்குக்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்கென்று குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பாக ரொக்கம் அல்லது வரைவோலையாக (டி.டி) கவுன்சலிங் கட்டணம் கட்ட வேண்டும். பல்கலைக்கழக வளாகத்திலேயே வங்கி இருப்பதால் டி.டி. எடுப்பது சுலபம். ஆனால் நீண்ட வரிசை நிற்கும். எனவே ஊரிலிருந்து கிளம்புவதற்கு முன்பாகவே டி.டி. எடுத்து வந்துவிடுவது நல்லது.
• பணம் கட்டிய வரிசையே உங்களை ஒரு கூடத்துக்கு அழைத்துச் செல்லும். கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை பிரிவு பிரிவாக பிரித்து வைத்திருக்கிறார்கள். குறிப்பிட்ட பிரிவு மாணவர்களை கவுன்சலிங்குக்கு ஒலிபெருக்கியில் அழைப்பார்கள்.
• மிகப்பெரிய அரங்கம் ஒன்றில் கவுன்சலிங் நடைபெறும். உள்ளே மாணவரோடு, பெற்றோரில் ஒருவர் மட்டுமே உடன் செல்லலாம். கவுன்சலிங் கூடத்தில் நுழைந்ததும், உங்கள் வருகையைப் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பதிவு மற்றும் கவுன்சலிங் முடியும் வரை உள்ளே நுழைந்தவர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதியில்லை.
• மிகப்பெரிய திரையில் காட்டப்படும் காலியிடங்களில் மூன்று பாடப்பிரிவுகள் மற்றும் மூன்று கல்லூரிகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். கலந்தாய்வின் போது மாணவர்கள் தெரிவு செய்த பாடப்பிரிவு மற்றும் கல்லூரி எக்காரணம் கொண்டும் மாற்றப்பட இயலாதது என்பதை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்ய வேண்டும். தேர்ந்தெடுத்த பின்பு சான்றிதழ் சரிபார்க்கும் இடத்துக்கு செல்ல வேண்டும்.
• சான்றிதழ் சரிபார்க்கும் இடத்தில் உண்மையான சான்றிதழைக் காட்ட வேண்டும். ஜெராக்ஸ் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
• இறுதியாக நீங்கள் ஏற்கனவே தேர்வு செய்திருந்த கல்லூரி பாடப்பிரிவுகளில் ஒன்றை, கணினியின் முன் அமர்ந்திருக்கும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.
• கல்லூரி மற்றும் பாடப்பிரிவு ஒதுக்கப்பட்டு நீங்கள் அழைக்கப்படுவீர்கள். அங்கே நீங்கள் தேர்ந்தெடுத்த கல்லூரிக்கான ஒதுக்கீட்டுப் படிவமும், மீதம் செலுத்த வேண்டியத் தொகைக்கான வங்கிப் படிவமும் வழங்கப்படும். பணத்தை அன்றே செலுத்தலாம். அல்லது கல்லூரிக்குச் சென்றும் செலுத்தலாம்.
• ஒரு சிறிய மருத்துவப் பரிசோதனையும் நடைபெறும்.
கவுன்சலிங்கில் வெற்றி பெற...
சில முன் தயாரிப்புகளோடு போனால் – அதாவது ஹோம்வொர்க் செய்தால் – கவுன்சலிங் மூலம் நல்ல பலனைப் பெறலாம்.
1. என்ன படிப்பு, எந்த கல்லூரியில் என்பதை முன்கூட்டியே எந்தவித குழப்பங்களுக்கும் இடம் தராமல் தீர்மானித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய திறமை, ஆர்வம், மனோபாவம், சக்தி ஆகியவற்றின் அடிப்படையில் உங்கள் படிப்பினைத் தேர்ந்தெடுங்கள். எல்லோரும் என்ன படிக்கிறார்களோ அதையே நாமும் படிப்போம் என்றோ அல்லது வெறும் வேலை வாய்ப்பு அடிப்படையில் மட்டுமோ என்றோ தேர்ந்தெடுக்காதீர்கள். நான்கு வருடத்தில் வேலைச்சந்தை எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
2. கல்லூரியை தெரிவு செய்வதற்கு முன்பாக அக்கல்லூரியில் அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள், தொழிற்துறையோடு அக்கல்லூரி வைத்திருக்கும் உறவு, வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகள் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். http://www.annauniv.edu/ இணையத்தளத்தில் இவ்விவரங்களை விலாவரியாக காணலாம். உதாரணத்துக்கு, நீங்கள் படிக்க விரும்பும் துறையில் கடந்த செமஸ்டரில் எத்தனை பேர் வெற்றி கண்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். அந்தத் துறையில் அக்கல்லூரி எப்படி என்பதை ஓரளவுக்கு புரிந்துக் கொள்ளலாம். உங்கள் ஊருக்கு அருகில் உள்ள கல்லூரியிலேயே படிக்க வேண்டும் என்று விரும்பினால், அங்கே உள்ள படிப்புகளில் எது சிறந்தது என்பதை கண்டுபிடியுங்கள்.
3. நீங்கள் விரும்பும் படிப்பு அல்லது கல்லூரி கண்டிப்பாக கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அதனால் உங்களது இரண்டாவது, மூன்றாவது விருப்பங்களை முன்னதாகவே தெரிவுசெய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ரேங்க், கட்-ஆஃப், இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை உத்தேசமாக கண்டறிய முடியும். கடந்த ஆண்டின் ரேங்க் லிஸ்ட் கட்-ஆஃப் பட்டியலைக் கொண்டு ஒரு ஐடியா கிடைக்கும். ஆனால் இது 100 சதவிகிதம் துல்லியமாக இருக்குமென்று சொல்ல முடியாது. வருடத்திற்கேற்ப சிலபல காரணிகளால் மாறக்கூடும். இதைக் கண்டுபிடிக்க சில இணையத்தளங்கள் உதவும். உதாரணம் : http://collegesintamilnadu.com/Counseling/TNEA_Cutoff_Search.asp. உங்கள் மொத்த மதிப்பெண், விரும்பும் படிப்பு, இடஒதுக்கீட்டிற்கு தகுதியானவரா என்ற விபரங்களைக் கொடுத்தால் இந்த இணையதளங்கள் எந்தெந்தக் கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு உண்டு என்பதைச் சொல்லும். ஆனால் இதெல்லாம் உத்தேசமாக ஒரு ‘ஐடியா’வுக்குதான்.
4. கவுன்சலிங் தொடங்கிய பின்பு ஒவ்வொரு நாள் இரவும் http://www.annauniv.edu/tnea என்ற இணையத் தளத்தில் எந்தக் கல்லூரியில், எந்தப் பிரிவில் எவ்வளவு இடம் நிரம்பியிருக்கிறது போன்ற தகவல்களை உடனுக்குடன் ஏற்றி வைப்பார்கள். இதைத் தொடர்ந்துக் கவனித்து வந்தாலே, உங்கள் முறை வரும்போது என்ன நிலை இருக்கும் என்பதை ஓரளவு யூகித்து தெரிந்துக் கொள்ளலாம்.
இத்தனைக்குப் பிறகும் நீங்கள் விரும்பியது கிடைக்கவில்லை எனில்? சிம்பிள். கிடைத்ததை விரும்ப ஆரம்பியுங்கள்!
(நன்றி : புதிய தலைமுறை)
3 ஆகஸ்ட், 2010
வாய்தாராணியா நம் தங்கத்தாரகை?
சிங்காரச் சென்னை என்று அறிவிக்கப்பட்டு திராவிடத் திம்மிகளின் கொடுங்கோல் கோர ஆட்சியில் சீரழிக்கப்பட்டு வரும் பாவப்பட்ட சென்னைநகர வாசிகளாக நீங்களிருக்கும் பட்சத்தில் இந்த ஃப்லெக்சு பேனர்களை கண்டிருக்கலாம். “வாய்தாராணி ஜெயலலிதாவை கண்டித்து திமுக இளைஞரணி ஆர்ப்பாட்டம்!”.
உலகமே போற்றும் உத்தம அம்மாவின் பெயரை அமெரிக்காவே தனது வீதிகளுக்கு சூட்டி பெருமைப்பட்டு வருகிறது. ஆனால், கொடநாடு தவிர்த்து வசிக்கும் உள்ளூர் திம்மிகளுக்குதான் அம்மாவின் பெருமையும், அருமையும் தெரியவில்லை. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று சும்மாவா சொன்னார்கள்?
முதலில் அம்மா ஏன் வாய்தா வாங்குகிறார் என்று விளக்கிவிடுகிறோம்.
எந்த சட்டத்தையும் (மதமாற்ற தடை சட்டம் உட்பட) ஒழுங்காக நடைமுறைப்படுத்த துப்பில்லா திம்மியின் ஆட்சியில் வழக்காடுமன்றங்களில் நீதி கேலிக்கூத்தாக ஆகிவருகிறது என்பதை அம்மா பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறார். நமது எம்.ஜி.ஆரில் கட்டுரைகள் தீட்டியிருக்கிறார். ஆர்ப்பாட்டங்களில் மக்களுக்கு விளக்கியிருக்கிறார்.
அப்படிப்பட்ட திம்மியின் ஆட்சியில் அம்மா மீது நடைபெறும் வழக்கு எப்படி நியாயமானதாக இருக்கும். அம்மாவே ஒருவேளை அவருக்கு தெரியாமல் குற்றம் செய்திருந்தாலும் கூட அந்த குற்றத்தை எடுத்துக்காட்டி திறமையாக வழக்காட திம்மியின் வக்கீல்களுக்கு யோக்கியதை இருக்குமா என்ற சந்தேகம் மக்கள் மனதில் பல நூற்றாண்டுகளாக நிலவி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் அப்படியேதேனும் குற்றம் நடைபெற்றிருந்தால் அம்மாவின் திறமையான வழக்கறிஞர்கள் திறம்பட வாதாடி அம்மாவுக்கே தண்டனை வாங்கித்தரும் ஆற்றல் பெற்றவர்கள். இதுபோல நியாயமாக, நேர்மையாக வழக்கு நடைபெறுவதுதான் ஜனநாயகத்துக்கும், நீதிபரிபாலனத்துக்கும் அழகு.
அம்மா ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல்கள் என்று திம்மி அரசால் போடப்பட்ட கலர் டிவி வழக்கு, சுடுகாட்டு ஊழல் வழக்கு என்று பலவழக்குகளில் திம்மியின் திக்கை வக்கீல்களின் திறமைக் குறைவால் அம்மா கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எல்லோருமே வெளிவந்துவிட்டனர். வெளிவந்தவர்கள் அதற்கு நன்றிக்கடனாக நேராகப் போய் திம்மியின் கட்சியிலேயே சேர்ந்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட கேவலம் இடிஅமீன் ஆட்சியில் நடந்ததாககூட உகாண்டு நாட்டின் வரலாற்றில் சான்று இல்லை.
இப்போது அம்மாவின் மீது சொத்துக்குவிப்பு வழக்கு நடந்துவருகிறது. இந்த வழக்கிலும் திம்மியின் வக்கீல்கள் கோட்டைவிட்டால், அம்மாவே போய் திம்மி கட்சியில் சேர்ந்துவிடவேண்டிய கொடூரச்சூழல் உருவாகிவிடாதா? அவ்வாறு நடந்துவிட்டால் இந்த நானிலம் தாங்குமா? மக்கள் நாண்டுக்கிட்டு மாண்டுவிட மாட்டார்களா? வாய்தாராணி என்று புரட்சித்தாயை, அல்குவைதா ராஜாக்கள் ஏசுவது நியாயம்தானா?
எனவேதான் இந்த திம்மியின் ஆட்சியில் நீதி கேலிக்குரிய பண்டமாகிவிடக்கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில் அம்மா வாய்தாக்களுக்கு மேல் வாய்தாவாக வாங்கிவருகிறார். இவ்வாறு வாய்தா வாங்கி தாமதப்படுத்துவதின் மூலமாக விரைவில் மலர இருக்கும் அம்மா ஆட்சியில் வழக்கினை திறம்பட நடத்தி நீதித்தேவதையின் கண்களில் கட்டப்பட்டிருக்கும் கருப்புத்துணியை அவிழ்க்க அம்மா திட்டமிட்டிருக்கிறார். உலகமே போற்றும் உத்தம அம்மா இப்படியெல்லாம் வாய்தா வாங்கி நீதியைக் காக்கவில்லை என்றால்தான் அது ஆச்சரியம்.
மாறாக அவசரக்கொடுக்குத்தனமாக திம்மியின் இளையமகனான தளபதித்திம்மி ஒரு ஆர்ப்பாட்டத்தை சட்டவிரோதமாக நடத்த முன்வந்திருப்பதாக ப்ளெக்ஸ் பேனர்களை தீயசக்திகள் ஆங்காங்கே மாட்டி அழகு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு என்ன பின்னணி என்னவென்று அம்மாவின் விசுவாசியான ஸ்ரீமான் ராமசாமி அய்யங்கார் அவர்கள் விரிவான விசாரணையை மேற்கொண்டு, எண்பது கோடி ஹிந்து பெருமக்களின் ஒரே புனிதப் பத்திரிகையாம் ஸ்ரீதுக்ளக்கில் விரைவில் கட்டுரை எழுதுவார்.
நாம் சந்தேகப்படும் பின்னணியும் ஒன்று இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக தலைமையே தாங்க துப்பில்லாத ஒருவர் எப்படி தளபதி ஆவார் என்று நம் சமூகநீதி காத்த வீராங்கனை போர்க்குரல் எழுப்பியிருந்தார். ஏனெனில் திம்மி கட்சியின் ஆர்ப்பாட்டமோ, பாராட்டுக் கூட்டமோ எது நடந்தாலும் ‘தலைமை : உதவிப்பேராசிரியர்’ என்று அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. தளபதி என்று அவர்களால் விதந்தோதப்படும் நபரோ டம்மிபீஸாக ஒரு ஓரம் உட்கார்ந்து நகத்தை கடித்துக் கொண்டிருப்பார். இந்த அடிப்படையில்தான் நம் தெய்வத்தாய் அப்படியொரு போர்க்குரலை எழுப்பவேண்டிய அவசியமேற்பட்டது.
தெய்வத்தாயின் போர்க்குரல் கண்டு அஞ்சிய கூட்டம் அவசர அவசரமாக தாங்கள் தளபதி என்று சொல்லக்கூடியவர் தலைமை தாங்கும் ஆற்றல் பெற்றவர் என்று பொய்யான மாயைத் தோற்றத்தை மக்கள் மனதில் கட்டியெழுப்பவே இந்த சட்டவிரோத, மக்கள்விரோத, தேசவிரோத ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது.
மைனாரிட்டி திம்மிகள் அரசு செய்துவரும் இந்த அநியாயங்களை எல்லாம் அடுத்த ஆண்டு வரை நாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அடுத்த ஆண்டும் மைனாரிட்டி திம்மிகள் அரசு அமைந்துவிட்டால், அதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளும் பொறுத்துக் கொள்ளவேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்தும் மீண்டும் மைனாரிட்டி திம்மிகள் அரசு அமைந்துவிட்டால், அதற்கடுத்த ஐந்து ஆண்டுகளும்....
திம்மிகளின் இந்த அராஜகங்களை எல்லாம் எதிர்த்து இணையத்தில் பதிவுபோட்டு பதிவர்களான நாம் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்த வேண்டும். இதற்கு இணைய அம்மா பேரவை தலைவரான கோவி.கண்ணனார் தலைமை தாங்க வேண்டும். இடதுசாரித் தோழர்களும், தமிழ்த்தேசிய சொந்தங்களும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு வலுச்சேர்க்க வேண்டும்.
அண்ணா நாமம் வாழ்க. அம்மா நாமம் வாழ்க. தம்பி நாமம் வாழ்க. தங்கச்சி நாமம் வாழ்க.
உலகமே போற்றும் உத்தம அம்மாவின் பெயரை அமெரிக்காவே தனது வீதிகளுக்கு சூட்டி பெருமைப்பட்டு வருகிறது. ஆனால், கொடநாடு தவிர்த்து வசிக்கும் உள்ளூர் திம்மிகளுக்குதான் அம்மாவின் பெருமையும், அருமையும் தெரியவில்லை. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று சும்மாவா சொன்னார்கள்?
முதலில் அம்மா ஏன் வாய்தா வாங்குகிறார் என்று விளக்கிவிடுகிறோம்.
எந்த சட்டத்தையும் (மதமாற்ற தடை சட்டம் உட்பட) ஒழுங்காக நடைமுறைப்படுத்த துப்பில்லா திம்மியின் ஆட்சியில் வழக்காடுமன்றங்களில் நீதி கேலிக்கூத்தாக ஆகிவருகிறது என்பதை அம்மா பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறார். நமது எம்.ஜி.ஆரில் கட்டுரைகள் தீட்டியிருக்கிறார். ஆர்ப்பாட்டங்களில் மக்களுக்கு விளக்கியிருக்கிறார்.
அப்படிப்பட்ட திம்மியின் ஆட்சியில் அம்மா மீது நடைபெறும் வழக்கு எப்படி நியாயமானதாக இருக்கும். அம்மாவே ஒருவேளை அவருக்கு தெரியாமல் குற்றம் செய்திருந்தாலும் கூட அந்த குற்றத்தை எடுத்துக்காட்டி திறமையாக வழக்காட திம்மியின் வக்கீல்களுக்கு யோக்கியதை இருக்குமா என்ற சந்தேகம் மக்கள் மனதில் பல நூற்றாண்டுகளாக நிலவி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் அப்படியேதேனும் குற்றம் நடைபெற்றிருந்தால் அம்மாவின் திறமையான வழக்கறிஞர்கள் திறம்பட வாதாடி அம்மாவுக்கே தண்டனை வாங்கித்தரும் ஆற்றல் பெற்றவர்கள். இதுபோல நியாயமாக, நேர்மையாக வழக்கு நடைபெறுவதுதான் ஜனநாயகத்துக்கும், நீதிபரிபாலனத்துக்கும் அழகு.
அம்மா ஆட்சியின் போது நடைபெற்ற ஊழல்கள் என்று திம்மி அரசால் போடப்பட்ட கலர் டிவி வழக்கு, சுடுகாட்டு ஊழல் வழக்கு என்று பலவழக்குகளில் திம்மியின் திக்கை வக்கீல்களின் திறமைக் குறைவால் அம்மா கழகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எல்லோருமே வெளிவந்துவிட்டனர். வெளிவந்தவர்கள் அதற்கு நன்றிக்கடனாக நேராகப் போய் திம்மியின் கட்சியிலேயே சேர்ந்துவிடுகிறார்கள். இப்படிப்பட்ட கேவலம் இடிஅமீன் ஆட்சியில் நடந்ததாககூட உகாண்டு நாட்டின் வரலாற்றில் சான்று இல்லை.
இப்போது அம்மாவின் மீது சொத்துக்குவிப்பு வழக்கு நடந்துவருகிறது. இந்த வழக்கிலும் திம்மியின் வக்கீல்கள் கோட்டைவிட்டால், அம்மாவே போய் திம்மி கட்சியில் சேர்ந்துவிடவேண்டிய கொடூரச்சூழல் உருவாகிவிடாதா? அவ்வாறு நடந்துவிட்டால் இந்த நானிலம் தாங்குமா? மக்கள் நாண்டுக்கிட்டு மாண்டுவிட மாட்டார்களா? வாய்தாராணி என்று புரட்சித்தாயை, அல்குவைதா ராஜாக்கள் ஏசுவது நியாயம்தானா?
எனவேதான் இந்த திம்மியின் ஆட்சியில் நீதி கேலிக்குரிய பண்டமாகிவிடக்கூடாது என்ற நல்லெண்ண அடிப்படையில் அம்மா வாய்தாக்களுக்கு மேல் வாய்தாவாக வாங்கிவருகிறார். இவ்வாறு வாய்தா வாங்கி தாமதப்படுத்துவதின் மூலமாக விரைவில் மலர இருக்கும் அம்மா ஆட்சியில் வழக்கினை திறம்பட நடத்தி நீதித்தேவதையின் கண்களில் கட்டப்பட்டிருக்கும் கருப்புத்துணியை அவிழ்க்க அம்மா திட்டமிட்டிருக்கிறார். உலகமே போற்றும் உத்தம அம்மா இப்படியெல்லாம் வாய்தா வாங்கி நீதியைக் காக்கவில்லை என்றால்தான் அது ஆச்சரியம்.
மாறாக அவசரக்கொடுக்குத்தனமாக திம்மியின் இளையமகனான தளபதித்திம்மி ஒரு ஆர்ப்பாட்டத்தை சட்டவிரோதமாக நடத்த முன்வந்திருப்பதாக ப்ளெக்ஸ் பேனர்களை தீயசக்திகள் ஆங்காங்கே மாட்டி அழகு பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு என்ன பின்னணி என்னவென்று அம்மாவின் விசுவாசியான ஸ்ரீமான் ராமசாமி அய்யங்கார் அவர்கள் விரிவான விசாரணையை மேற்கொண்டு, எண்பது கோடி ஹிந்து பெருமக்களின் ஒரே புனிதப் பத்திரிகையாம் ஸ்ரீதுக்ளக்கில் விரைவில் கட்டுரை எழுதுவார்.
நாம் சந்தேகப்படும் பின்னணியும் ஒன்று இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பாக தலைமையே தாங்க துப்பில்லாத ஒருவர் எப்படி தளபதி ஆவார் என்று நம் சமூகநீதி காத்த வீராங்கனை போர்க்குரல் எழுப்பியிருந்தார். ஏனெனில் திம்மி கட்சியின் ஆர்ப்பாட்டமோ, பாராட்டுக் கூட்டமோ எது நடந்தாலும் ‘தலைமை : உதவிப்பேராசிரியர்’ என்று அறிவிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. தளபதி என்று அவர்களால் விதந்தோதப்படும் நபரோ டம்மிபீஸாக ஒரு ஓரம் உட்கார்ந்து நகத்தை கடித்துக் கொண்டிருப்பார். இந்த அடிப்படையில்தான் நம் தெய்வத்தாய் அப்படியொரு போர்க்குரலை எழுப்பவேண்டிய அவசியமேற்பட்டது.
தெய்வத்தாயின் போர்க்குரல் கண்டு அஞ்சிய கூட்டம் அவசர அவசரமாக தாங்கள் தளபதி என்று சொல்லக்கூடியவர் தலைமை தாங்கும் ஆற்றல் பெற்றவர் என்று பொய்யான மாயைத் தோற்றத்தை மக்கள் மனதில் கட்டியெழுப்பவே இந்த சட்டவிரோத, மக்கள்விரோத, தேசவிரோத ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது.
மைனாரிட்டி திம்மிகள் அரசு செய்துவரும் இந்த அநியாயங்களை எல்லாம் அடுத்த ஆண்டு வரை நாம் பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். அடுத்த ஆண்டும் மைனாரிட்டி திம்மிகள் அரசு அமைந்துவிட்டால், அதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகளும் பொறுத்துக் கொள்ளவேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகள் கழித்தும் மீண்டும் மைனாரிட்டி திம்மிகள் அரசு அமைந்துவிட்டால், அதற்கடுத்த ஐந்து ஆண்டுகளும்....
திம்மிகளின் இந்த அராஜகங்களை எல்லாம் எதிர்த்து இணையத்தில் பதிவுபோட்டு பதிவர்களான நாம் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்த வேண்டும். இதற்கு இணைய அம்மா பேரவை தலைவரான கோவி.கண்ணனார் தலைமை தாங்க வேண்டும். இடதுசாரித் தோழர்களும், தமிழ்த்தேசிய சொந்தங்களும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு வலுச்சேர்க்க வேண்டும்.
அண்ணா நாமம் வாழ்க. அம்மா நாமம் வாழ்க. தம்பி நாமம் வாழ்க. தங்கச்சி நாமம் வாழ்க.
2 ஆகஸ்ட், 2010
மொழி!
விமான அறிவியலின் பிரபலமான கோட்பாடு ஒன்று உண்டு. ‘கனமான உடம்பும், மிக லேசான இறக்கைகளும் கொண்ட கருவண்டால் இயந்திரவியல் தர்க்கத்தின்படி பறக்கவே இயலாது’. இந்த கோட்பாடு அறிவியலாளர்களுக்கு தெரியும். ஆனால் கருவண்டுகளுக்கு தெரியாது. எனவே அவை எப்படியோ பறந்துகொண்டுதான் இருக்கிறது.
பாலவித்யாலயா குழந்தைகளும் அப்படித்தான். அறிவியல் கருத்துபடி பிறவியிலேயே செவிக்குறைபாடு கொண்ட குழந்தைகள் வாய்பேச இயலாது. இந்தக் கருத்து அக்குழந்தைகளுக்கு தெரிவதற்கு முன்னரே பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இக்கருத்தை பாடத்தில் பயிலும்போது “நிஜமாவா?” என்ற கேள்வியோடு சிரித்துக்கொண்டே ஆச்சரியப்படுகிறார்கள்.
குழந்தை இயற்கை தரும் வரம். என்ன கோபமோ தெரியவில்லை. சிலருக்கு மட்டும் முழுமையான வரத்தை இயற்கை நமக்கு வழங்கிவிடுவதில்லை. செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பது இவ்வகையில்தான். ‘மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான்’ என்று நாம் வாளாவிருந்துவிட்டால், குழந்தைகளின் எதிர்காலம் அதோகதிதான்.
’மொழி’ திரைப்படம் பார்த்திருப்பீர்கள். கதாநாயகி ஜோதிகா வாய்பேச இயலாதவராக மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அக்கதாபாத்திரத்தின்படி பார்த்தோமானால் அவர் வாய்பேச இயலாதவர் அல்ல. பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு கொண்டவர் என்பதால், ‘மொழி’யை பேசிப்பழக வாய்ப்பில்லாமல் ‘சாடை’ மொழி பேசுபவராக மாறிவிடுகிறார். இதுதான் எல்லோருக்குமே நடக்கிறது. வாய்பேச இயலக்கூடிய ஒருவர், செவித்திறன் குறைபாட்டால் வாழ்க்கை முழுக்க பேசாமலேயே வாழ்வது எவ்வளவு பெரிய அவலம்? பேச்சுமொழியற்றவர்கள் கல்வி கற்க இயலாமல் வாழ்வை தொலைப்பது சகிக்க இயலாத துயரம் இல்லையா?
2002ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் படி செவித்திறன் குறைபாடுள்ளோர்களில் 68 சதவிகிதம் பேர், மொழித்திறன் இல்லாததால் பள்ளிக்கே சென்றதில்லை. இவர்களில் 19.5 சதவிகிதம் பேர் மட்டுமே ஆரம்பப்பள்ளிக்கு செல்கிறார்கள். 7.6 சதவிகிதம் பேர் மட்டுமே நடுநிலைக்கும், 2.5 சதவிகிதம் பேர் மட்டுமே உயர்நிலைக்கும், 1.1 சதவிகிதம் பேர் மட்டுமே மேல்நிலைக்கும் போகிறார்கள். பட்டம் பெறுபவர்கள் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே.
பாலவித்யாலயா இந்த துயரத்தையும், அவலத்தையும் போக்குகிறது. அ, ஆ, இ, ஈ-யும், ஏ, பி, சி, டி-யும் கற்றுத்தரும் வழக்கமான பள்ளியல்ல இது. செவித்திறன் குறைந்த குழந்தைகளுக்கு மொழியை சொல்லித்தரும் பள்ளி. குழந்தை தமிழ் படிக்க வேண்டுமா அல்லது ஆங்கிலம் படிக்க வேண்டுமா என்று பெற்றோர் தேர்வு செய்துக் கொள்ளலாம். செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் ஒரே ஒரு மொழியில் கல்வியை பட்டம் வரை பெறலாம் என்று அரசு சலுகை தந்திருக்கிறது. மொழி மற்றும் பேச்சுத்திறனை கற்றுக்கொண்டால் மற்ற குழந்தைகளைப் போல கல்வியில் இவர்கள் எத்தகைய உயரத்தையும் எட்டலாம்.
பாலவித்யாலயாவின் நாற்பதாண்டு சேவையின் மூலமாக இன்று டாக்டரேட் முடித்தவர்கள், பொறியியல் படித்தவர்கள், நிர்வாகத்தில் உயர்கல்வி பெற்றவர்கள், ஆர்க்கிடெக்டுகள் மற்றும் ஏராளமான பட்டதாரிகள் உருவாகியிருக்கிறார்கள்.
பிறந்த குழந்தையிலிருந்து, இரண்டரை வயதுக்குள் இருக்கும் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் மொழிகற்க பாலவித்யாலயாவில் சேரலாம். பிறந்து 52 நாட்களே ஆன குழந்தை கூட இங்கே சேர்த்துக்கொள்ளப் பட்டிருக்கிறது. இங்கே கற்றுக்கொள்ள வேண்டியது குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றோர்களும்தான். இதுபோன்ற சிறப்புக் குழந்தைகளுக்கு எப்படி பால் கொடுப்பது, அவர்களோடு எவ்வகையில் தகவல்களை பரிமாறிக் கொள்வது போன்ற விஷயங்களை அம்மா, அப்பாவுக்கு ‘கவுன்சிலிங்’ கொடுக்கிறார்கள். அதிகபட்சமாக ஐந்து வயது வரை ஒரு குழந்தை இங்கே மொழியை கற்கும். பின்னர் மற்ற குழந்தைகள் படிக்கும் பள்ளியிலேயே சேர்ந்து கல்வி கற்கலாம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலவித்யாலயாவுக்கு வந்த மூன்று வயது ஹரிணி இப்போது நன்றாக வாயாடுகிறாள். ’ஹாய்’ சொல்கிறாள். காலையில் இரண்டு இட்லி சாப்பிட்டதையும், அம்மா சட்னியில் கொஞ்சம் உப்பு குறைவாக போட்டுவிட்டதையும் பற்றி சளசளவென சலம்புகிறாள். அவளோடு பேசிவிட்டு விட்டு விடைபெறும்போது தெரியாத்தனமாக ‘சாடை’ மொழியில் டாட்டா காட்டுகிறோம். “இங்கிருக்கும் குழந்தைகளோடு தயவுசெய்து சைகை மொழி பேசாதீர்கள். ஹியரிங் எய்டு போன்ற கருவிகளின் துணையோடு இப்போது அவர்களுக்கு ஓரளவு ஒலியை உணர்ந்துக் கொள்ள முடியும். உங்கள் உதட்டசைவை அவதானித்து, லிப் ரீடிங் முறையில் நீங்கள் பேசுவதையும் அவர்கள் புரிந்துக் கொள்வார்கள்” என்கிறார் பள்ளியின் முதல்வர் வள்ளி அண்ணாமலை.
முதலில், இங்கே சேர்க்கப்படும் குழந்தைகளின் செவித்திறன் பரிசோதனைக் கூடத்தில் சோதிக்கப்பட்டு, தகுந்த ‘ஹியரிங் எய்ட்’ பரிந்துரைக்கப்படுகிறது. அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டு ஹியரிங் எய்டின் முழுப்பலனையும் குழந்தை பெற வல்லுனர்கள் வழி செய்கிறார்கள்.
பின்னர் முன்பே சொன்ன பெற்றோருக்கான பயிற்சி. குழந்தை பள்ளிப் பருவத்தை முடிக்கும்வரை பெற்றோர்தான் குழந்தைக்கேற்ற உதவிப் பணியாளராக மாறியாக வேண்டும்.
இதற்குப் பின்னரே குழந்தைக்கு கேட்கும் திறன், மொழி, பேச்சு மற்றும் அறிவுத்திறன் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இவற்றை கற்றுத்தேறும் குழந்தைகள் ப்ரீ-கேஜி (பள்ளி முன்பருவக் கல்வி) நிலைக்கு உயர்கிறார்கள். இங்கே மற்ற திறன்களோடு மொழியை படிப்பது, எழுதுவது மற்றும் கணக்கு போடுவது ஆகியவற்றை சொல்லிக் கொடுக்கிறார்கள்.
மொத்தமே அவ்வளவுதான். பாலவித்யாலயாவில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள், அதிகபட்சம் 5 ஆண்டுகள் பயிற்சி பெறும் குழந்தைகள் நேரடியாக சாதாரணப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்துவிடலாம். மற்ற குழந்தைகளோடு சாதாரணமாகப் பேசவும், பழகவும், விளையாடவும் ஏற்றமுறையில் ஏற்கனவே அவர்கள் தயாராகி விட்டிருப்பார்கள். அவர்களது எதிர்காலத்தைப் பற்றி பெற்றோர் இனி கவலைப்பட வேண்டியதில்லை.
இதற்கெல்லாம் எவ்வளவு செலவு ஆகும் என்பதை சொல்ல மறந்துவிட்டோமே? “முழுக்க இலவசம். ஐந்து பைசா செலவழிக்க வேண்டாம். ஹியரிங் எய்ட் வாங்குவது மற்றும் பராமரிப்பதை மட்டும் பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு பேச்சுத்திறனையும், மொழித்திறனையும் வளரச்செய்து அவர்களை சாதாரணக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சேர்த்து ஒருங்கிணைய தகுதியுள்ளவர்களாக ஆக்கும் நோக்கத்தில் பாலவித்யாலயா டிரஸ்ட் இப்பள்ளியை நடத்துகிறது” என்கிறார் டாக்டர் மீரா சுரேஷ். இவர் இப்பள்ளியின் கவுரவ துணை முதல்வர்.
இப்போது எல்லா மாவட்டங்களிலும் இதுபோன்ற சிறப்புப் பள்ளிகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. ஆயினும் நாற்பதாண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்ட பாலவித்யாலயாதான் அனைத்துக்கும் முன்னோடி. அரசு தொடங்கும் பள்ளிகள் சரியான முறையில் இயங்குகின்றனவா என்பதை கண்காணிக்கும் அந்தஸ்தில் பாலவித்யாலயா இருக்கிறது.
சென்னையில் இருப்பவர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் எந்தப் பகுதியில் இருப்பவர்களும் இங்கே தங்கள் குழந்தைகளைச் சேர்க்கலாம். ஆலோசனை பெறலாம். வெளியூரில் இருந்து வந்து சென்னையிலேயே தங்கி, தங்கள் குழந்தைகளுக்கு இங்கே மொழியைக் கற்றுத் தரும் பெற்றோர்களும் உண்டு. அதிகபட்சமாக 200 குழந்தைகள் வரை இங்கே படிக்கலாம். குழந்தைகளை சேர்க்க குறிப்பிட்ட காலமெல்லாம் கிடையாது. வருடம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் சேர்க்கலாம்.
இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். இத்துறையில் ஆசிரியப் பணியில் ஈடுபட விரும்புபவர்களுக்கு ஒரு டிப்ளமோ பயிற்சியையும் பாலவித்யாலயா நடத்துகிறது. 12ஆம் வகுப்பு தேறியவர்கள் இந்த டிப்ளமோவை படிக்கலாம். ஒரு வருட படிப்புக்கு தோராயமாக ஏழாயிரம் ரூபாய் வரை செலவாகும். ஆங்காங்கே அரசு ஆதரவோடு இதுபோன்ற பள்ளிகள் ஏற்படுத்தப் பட்டிருப்பதால் வேலைவாய்ப்புக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
பாலவித்யாலயா அலுவலகத்தில் பேசிவிட்டு வெளியே வரும்போது சில குழந்தைகள் வாசலில் இருக்கும் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நான்கு வயது ரித்திகா நமது புகைப்பட கலைஞரைப் பார்த்து, “Uncle want me to take photograph?” என்று ஆங்கிலத்தில் கேட்டவாறே அட்டகாசமாக போஸ் கொடுக்கிறாள். ரோஜா என்றால் ரோஜாதான் என்பதைப் போல குழந்தைகள் என்றால் குழந்தைகள்தான்!
தொடர்புக்கு :
செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளை மவுனச்சிறைகளில் அடைக்காதீர்கள். உங்களுக்கு தெரிந்த குழந்தைகள் யாருக்காவது செவித்திறன் குறைபாடு இருப்பதாக தெரிந்தால் உடனே பாலவித்யாலயாவை தொடர்பு கொள்ளுங்கள்.
பாலவித்யாலயா
18, 1வது குறுக்கு தெரு, சாஸ்திரி நகர், சென்னை-20.
தொலைபேசி : 044-24917199 ஃபேக்ஸ் : 044-24982598
மின்னஞ்சல் : hear@balavidyalaschool.org
இணையத்தளம் : www.balavidyalaschool.org
(நன்றி : புதிய தலைமுறை)
பாலவித்யாலயா குழந்தைகளும் அப்படித்தான். அறிவியல் கருத்துபடி பிறவியிலேயே செவிக்குறைபாடு கொண்ட குழந்தைகள் வாய்பேச இயலாது. இந்தக் கருத்து அக்குழந்தைகளுக்கு தெரிவதற்கு முன்னரே பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இக்கருத்தை பாடத்தில் பயிலும்போது “நிஜமாவா?” என்ற கேள்வியோடு சிரித்துக்கொண்டே ஆச்சரியப்படுகிறார்கள்.
குழந்தை இயற்கை தரும் வரம். என்ன கோபமோ தெரியவில்லை. சிலருக்கு மட்டும் முழுமையான வரத்தை இயற்கை நமக்கு வழங்கிவிடுவதில்லை. செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பது இவ்வகையில்தான். ‘மரத்தை வெச்சவன் தண்ணி ஊத்துவான்’ என்று நாம் வாளாவிருந்துவிட்டால், குழந்தைகளின் எதிர்காலம் அதோகதிதான்.
’மொழி’ திரைப்படம் பார்த்திருப்பீர்கள். கதாநாயகி ஜோதிகா வாய்பேச இயலாதவராக மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அக்கதாபாத்திரத்தின்படி பார்த்தோமானால் அவர் வாய்பேச இயலாதவர் அல்ல. பிறவியிலேயே செவித்திறன் குறைபாடு கொண்டவர் என்பதால், ‘மொழி’யை பேசிப்பழக வாய்ப்பில்லாமல் ‘சாடை’ மொழி பேசுபவராக மாறிவிடுகிறார். இதுதான் எல்லோருக்குமே நடக்கிறது. வாய்பேச இயலக்கூடிய ஒருவர், செவித்திறன் குறைபாட்டால் வாழ்க்கை முழுக்க பேசாமலேயே வாழ்வது எவ்வளவு பெரிய அவலம்? பேச்சுமொழியற்றவர்கள் கல்வி கற்க இயலாமல் வாழ்வை தொலைப்பது சகிக்க இயலாத துயரம் இல்லையா?
2002ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் படி செவித்திறன் குறைபாடுள்ளோர்களில் 68 சதவிகிதம் பேர், மொழித்திறன் இல்லாததால் பள்ளிக்கே சென்றதில்லை. இவர்களில் 19.5 சதவிகிதம் பேர் மட்டுமே ஆரம்பப்பள்ளிக்கு செல்கிறார்கள். 7.6 சதவிகிதம் பேர் மட்டுமே நடுநிலைக்கும், 2.5 சதவிகிதம் பேர் மட்டுமே உயர்நிலைக்கும், 1.1 சதவிகிதம் பேர் மட்டுமே மேல்நிலைக்கும் போகிறார்கள். பட்டம் பெறுபவர்கள் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே.
பாலவித்யாலயா இந்த துயரத்தையும், அவலத்தையும் போக்குகிறது. அ, ஆ, இ, ஈ-யும், ஏ, பி, சி, டி-யும் கற்றுத்தரும் வழக்கமான பள்ளியல்ல இது. செவித்திறன் குறைந்த குழந்தைகளுக்கு மொழியை சொல்லித்தரும் பள்ளி. குழந்தை தமிழ் படிக்க வேண்டுமா அல்லது ஆங்கிலம் படிக்க வேண்டுமா என்று பெற்றோர் தேர்வு செய்துக் கொள்ளலாம். செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் ஒரே ஒரு மொழியில் கல்வியை பட்டம் வரை பெறலாம் என்று அரசு சலுகை தந்திருக்கிறது. மொழி மற்றும் பேச்சுத்திறனை கற்றுக்கொண்டால் மற்ற குழந்தைகளைப் போல கல்வியில் இவர்கள் எத்தகைய உயரத்தையும் எட்டலாம்.
பாலவித்யாலயாவின் நாற்பதாண்டு சேவையின் மூலமாக இன்று டாக்டரேட் முடித்தவர்கள், பொறியியல் படித்தவர்கள், நிர்வாகத்தில் உயர்கல்வி பெற்றவர்கள், ஆர்க்கிடெக்டுகள் மற்றும் ஏராளமான பட்டதாரிகள் உருவாகியிருக்கிறார்கள்.
பிறந்த குழந்தையிலிருந்து, இரண்டரை வயதுக்குள் இருக்கும் செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகள் மொழிகற்க பாலவித்யாலயாவில் சேரலாம். பிறந்து 52 நாட்களே ஆன குழந்தை கூட இங்கே சேர்த்துக்கொள்ளப் பட்டிருக்கிறது. இங்கே கற்றுக்கொள்ள வேண்டியது குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றோர்களும்தான். இதுபோன்ற சிறப்புக் குழந்தைகளுக்கு எப்படி பால் கொடுப்பது, அவர்களோடு எவ்வகையில் தகவல்களை பரிமாறிக் கொள்வது போன்ற விஷயங்களை அம்மா, அப்பாவுக்கு ‘கவுன்சிலிங்’ கொடுக்கிறார்கள். அதிகபட்சமாக ஐந்து வயது வரை ஒரு குழந்தை இங்கே மொழியை கற்கும். பின்னர் மற்ற குழந்தைகள் படிக்கும் பள்ளியிலேயே சேர்ந்து கல்வி கற்கலாம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலவித்யாலயாவுக்கு வந்த மூன்று வயது ஹரிணி இப்போது நன்றாக வாயாடுகிறாள். ’ஹாய்’ சொல்கிறாள். காலையில் இரண்டு இட்லி சாப்பிட்டதையும், அம்மா சட்னியில் கொஞ்சம் உப்பு குறைவாக போட்டுவிட்டதையும் பற்றி சளசளவென சலம்புகிறாள். அவளோடு பேசிவிட்டு விட்டு விடைபெறும்போது தெரியாத்தனமாக ‘சாடை’ மொழியில் டாட்டா காட்டுகிறோம். “இங்கிருக்கும் குழந்தைகளோடு தயவுசெய்து சைகை மொழி பேசாதீர்கள். ஹியரிங் எய்டு போன்ற கருவிகளின் துணையோடு இப்போது அவர்களுக்கு ஓரளவு ஒலியை உணர்ந்துக் கொள்ள முடியும். உங்கள் உதட்டசைவை அவதானித்து, லிப் ரீடிங் முறையில் நீங்கள் பேசுவதையும் அவர்கள் புரிந்துக் கொள்வார்கள்” என்கிறார் பள்ளியின் முதல்வர் வள்ளி அண்ணாமலை.
முதலில், இங்கே சேர்க்கப்படும் குழந்தைகளின் செவித்திறன் பரிசோதனைக் கூடத்தில் சோதிக்கப்பட்டு, தகுந்த ‘ஹியரிங் எய்ட்’ பரிந்துரைக்கப்படுகிறது. அவ்வப்போது பரிசோதிக்கப்பட்டு ஹியரிங் எய்டின் முழுப்பலனையும் குழந்தை பெற வல்லுனர்கள் வழி செய்கிறார்கள்.
பின்னர் முன்பே சொன்ன பெற்றோருக்கான பயிற்சி. குழந்தை பள்ளிப் பருவத்தை முடிக்கும்வரை பெற்றோர்தான் குழந்தைக்கேற்ற உதவிப் பணியாளராக மாறியாக வேண்டும்.
இதற்குப் பின்னரே குழந்தைக்கு கேட்கும் திறன், மொழி, பேச்சு மற்றும் அறிவுத்திறன் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இவற்றை கற்றுத்தேறும் குழந்தைகள் ப்ரீ-கேஜி (பள்ளி முன்பருவக் கல்வி) நிலைக்கு உயர்கிறார்கள். இங்கே மற்ற திறன்களோடு மொழியை படிப்பது, எழுதுவது மற்றும் கணக்கு போடுவது ஆகியவற்றை சொல்லிக் கொடுக்கிறார்கள்.
மொத்தமே அவ்வளவுதான். பாலவித்யாலயாவில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள், அதிகபட்சம் 5 ஆண்டுகள் பயிற்சி பெறும் குழந்தைகள் நேரடியாக சாதாரணப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்துவிடலாம். மற்ற குழந்தைகளோடு சாதாரணமாகப் பேசவும், பழகவும், விளையாடவும் ஏற்றமுறையில் ஏற்கனவே அவர்கள் தயாராகி விட்டிருப்பார்கள். அவர்களது எதிர்காலத்தைப் பற்றி பெற்றோர் இனி கவலைப்பட வேண்டியதில்லை.
இதற்கெல்லாம் எவ்வளவு செலவு ஆகும் என்பதை சொல்ல மறந்துவிட்டோமே? “முழுக்க இலவசம். ஐந்து பைசா செலவழிக்க வேண்டாம். ஹியரிங் எய்ட் வாங்குவது மற்றும் பராமரிப்பதை மட்டும் பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு பேச்சுத்திறனையும், மொழித்திறனையும் வளரச்செய்து அவர்களை சாதாரணக் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சேர்த்து ஒருங்கிணைய தகுதியுள்ளவர்களாக ஆக்கும் நோக்கத்தில் பாலவித்யாலயா டிரஸ்ட் இப்பள்ளியை நடத்துகிறது” என்கிறார் டாக்டர் மீரா சுரேஷ். இவர் இப்பள்ளியின் கவுரவ துணை முதல்வர்.
இப்போது எல்லா மாவட்டங்களிலும் இதுபோன்ற சிறப்புப் பள்ளிகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. ஆயினும் நாற்பதாண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்ட பாலவித்யாலயாதான் அனைத்துக்கும் முன்னோடி. அரசு தொடங்கும் பள்ளிகள் சரியான முறையில் இயங்குகின்றனவா என்பதை கண்காணிக்கும் அந்தஸ்தில் பாலவித்யாலயா இருக்கிறது.
சென்னையில் இருப்பவர்கள் மட்டுமல்ல, இந்தியாவின் எந்தப் பகுதியில் இருப்பவர்களும் இங்கே தங்கள் குழந்தைகளைச் சேர்க்கலாம். ஆலோசனை பெறலாம். வெளியூரில் இருந்து வந்து சென்னையிலேயே தங்கி, தங்கள் குழந்தைகளுக்கு இங்கே மொழியைக் கற்றுத் தரும் பெற்றோர்களும் உண்டு. அதிகபட்சமாக 200 குழந்தைகள் வரை இங்கே படிக்கலாம். குழந்தைகளை சேர்க்க குறிப்பிட்ட காலமெல்லாம் கிடையாது. வருடம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் சேர்க்கலாம்.
இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். இத்துறையில் ஆசிரியப் பணியில் ஈடுபட விரும்புபவர்களுக்கு ஒரு டிப்ளமோ பயிற்சியையும் பாலவித்யாலயா நடத்துகிறது. 12ஆம் வகுப்பு தேறியவர்கள் இந்த டிப்ளமோவை படிக்கலாம். ஒரு வருட படிப்புக்கு தோராயமாக ஏழாயிரம் ரூபாய் வரை செலவாகும். ஆங்காங்கே அரசு ஆதரவோடு இதுபோன்ற பள்ளிகள் ஏற்படுத்தப் பட்டிருப்பதால் வேலைவாய்ப்புக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
பாலவித்யாலயா அலுவலகத்தில் பேசிவிட்டு வெளியே வரும்போது சில குழந்தைகள் வாசலில் இருக்கும் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். நான்கு வயது ரித்திகா நமது புகைப்பட கலைஞரைப் பார்த்து, “Uncle want me to take photograph?” என்று ஆங்கிலத்தில் கேட்டவாறே அட்டகாசமாக போஸ் கொடுக்கிறாள். ரோஜா என்றால் ரோஜாதான் என்பதைப் போல குழந்தைகள் என்றால் குழந்தைகள்தான்!
தொடர்புக்கு :
செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளை மவுனச்சிறைகளில் அடைக்காதீர்கள். உங்களுக்கு தெரிந்த குழந்தைகள் யாருக்காவது செவித்திறன் குறைபாடு இருப்பதாக தெரிந்தால் உடனே பாலவித்யாலயாவை தொடர்பு கொள்ளுங்கள்.
பாலவித்யாலயா
18, 1வது குறுக்கு தெரு, சாஸ்திரி நகர், சென்னை-20.
தொலைபேசி : 044-24917199 ஃபேக்ஸ் : 044-24982598
மின்னஞ்சல் : hear@balavidyalaschool.org
இணையத்தளம் : www.balavidyalaschool.org
(நன்றி : புதிய தலைமுறை)
30 ஜூலை, 2010
’ஓ’ ஞாநி!
குமுதத்தின் நிறுவனர் அமரர் எஸ்.ஏ.பி.க்கு மிகவும் பிடித்தமான தலைவர் ராஜாஜி. அவர் மீது மிகுந்த மரியாதையும், மதிப்பும் எஸ்.ஏ.பி.க்கு உண்டு. குமுதம் வளர்ந்து வந்த நேரத்தில் பெரும்பாலான தலையங்கங்கள் தனது சவுக்கடியை தொடர்ச்சியாக முதல்வர் ராஜாஜி மீது வீசி வந்தது.
ஓர் உதவியாசிரியர் எஸ்.ஏ.பி.யிடம் கேட்டாராம். “நீங்கள் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் ஒருவரை, அவரது ஆட்சியை இப்படியெல்லாம் விளாசலாமா?”
எஸ்.ஏ.பி. சொல்லியிருக்கிறார். “பெரிய பத்திரிகையான நாம் யானையிடம்தான் மோதவேண்டும். திமுக போன்ற கொசுக்களிடம் மோதுவதில் நமக்கென்ன பெருமை?”
திமுக பின்னாளில் புலியாக வளர்ந்து பாய்ச்சல் நிகழ்த்தியபோது எஸ்.ஏ.பி. துப்பாக்கி கொண்டு தலையங்கம் தீட்டவேண்டியிருந்ததாம்.
- எஸ்.ஏ.பி. மறைந்தபோது, ஏதோ ஒரு பத்திரிகையில் (ஆ.வி. என்பதாக நினைவு) ரா.கி.ரங்கராஜன் எழுதியது இது. என் நினைவிலிருந்து எழுதியிருக்கிறேன். வார்த்தைகள் மட்டும் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம்.
இந்தப் பதிவில் நான் சொல்லவிரும்பியது இதை மட்டும்தான். ஏன் சொல்ல விரும்பினேன் என்பதை இங்கே வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஞாநி மீது பலருக்கும் பல்வேறு குறைபாடுகள் உண்டு. குற்றச்சாட்டுகள் இருக்க வாய்ப்பில்லை. குறைபாடுக்கும், குற்றச்சாட்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. அவர் எழுதுவது எல்லோருக்கும் பிடிக்காது. அதுபோலவே எல்லோருக்கும் பிடிக்கும்படிதான் அவர் எழுதவேண்டும் என்று அவசியமும் கிடையாது.
முப்பதாண்டுகளுக்கு முன்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் பணியாற்றியவர். அந்நிறுவனம் இவரை ஏதோ காரணத்தால் – என்ன காரணமென்று தெரியவில்லை – நீக்கியதால், தொழிலாளர் உரிமை என்ற அடிப்படையில் கோர்ட்டுக்குச் சென்று வழக்கில் வென்றவர். இந்த மனத்திடம் இப்போது பத்திரிகைகளில் பணிபுரிபவர்களில் எத்தனைப் பேருக்கு இருக்கும் என்பது சந்தேகமே. நிச்சயமாக எனக்கு இல்லை.
பிற்பாடு அவர் தமிழ் பத்திரிகைகளுக்கு வந்தபின்னர்தான் ‘டேபிள் ஒர்க்’ என்ற ஒரு பணி, தமிழ்ப் பத்திரிகையுலகில் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று சொல்வார்கள். டேபிள் ஒர்க் என்பது இன்றைய பத்திரிகையுலகில் மிகவும் அத்தியாவசியமானப் பணியாக இருக்கிறது. வேறொன்றுமில்லை. பிறர் எழுதும் கட்டுரைகளையும், கதைகளையும் மெருகேற்றி, தேவையான திருத்தங்கள் செய்து அச்சுக்கு அனுப்புவது. மாவட்டங்களில் பல்வேறு நிருபர்கள் தரும் தகவல்களை அலசி, ஆராய்ந்து, தொகுத்து முழுமையான கட்டுரையாக எழுதுதல் போன்றவையே டேபிள் ஒர்க். இதில் வேறு சில பணிகளும் உண்டு. அவை இங்கே அவசியமில்லை.
ஆங்கிலப் பத்திரிகைகளில் இருந்த இந்தமுறையை தமிழ்ப் பத்திரிகையுலகில் பரவலாக்கிய முன்னோடி என்பதாக ஞாநி பத்திரிகை வட்டாரங்களில் அறியப்படுகிறார். அனேகமாக தொண்ணூறுகளின் தொடக்கத்தில்தான் இந்தப் பாணியில் தமிழ்ப் பத்திரிகைகளின் எடிட்டோரியல் இயங்கத் தொடங்கியது. அதற்கு முன்பாக வரும் கட்டுரைகளையோ கவிதைகளையோ கதைகளையோ – கிட்டத்தட்ட அப்படியே – வெறுமனே பிழைத்திருத்தி அனுப்புவதுதான் வழக்கமாம்.
ஆனந்த விகடனில் ஞாநியின் பங்கு இருந்த காலக்கட்டத்தில் அவர் எப்படி எழுதுவார் என்று சுவாரஸ்யமாக சொல்வார்கள். ஒரே ஒரு பிரச்சினையையோ அல்லது சம்பவத்தையோ நான்கைந்து நிருபர்கள் எழுதி அனுப்புவது வழக்கம். நிறைய ஃப்ரீலான்ஸர்கள் அப்போது இருந்தார்கள். எழுத்து மற்றும் பிரச்சினையைப் பார்க்கும் விதத்தில் ஒவ்வொருவரும் வேறுபடுவார்கள். ஒருவர் சார்புநிலையெடுத்து எழுதியிருப்பார். இன்னொருவர் எதிர்ப்புநிலையை கறாராக கைக்கொண்டிருப்பார். இன்னுமொருவர் நடுநிலை என்ற பெயரில் கத்திமீது நடக்க முயன்றிருப்பார்.
எடிட்டோரியலில் இருப்பவர் இந்த நான்கு கட்டுரைகளையும் வாசித்ததும் நிச்சயமாக குழம்பிப் போய்விடுவது என்பது இயல்புதான். ஞாநி நான்கையும் எடுத்து பொறுமையாக வாசிக்க ஆரம்பிப்பாராம். வாசித்து முடித்ததும் மூடிவைத்துவிடுவாராம் (என்னிடம் சொன்னவர் கிழித்து எறிந்துவிடுவார் என்று சொன்னார்). பிறகு வெள்ளைத்தாளை எடுத்து எந்தவித ரெஃபரென்ஸுமின்றி மடமடவென்று நறுக்குத் தெறித்தாற்போல எழுதிமுடிப்பாராம். கட்டுரையை வாசித்தவர்கள் அது நேரடி ரிப்போர்ட்தான் என்று கையில் அடித்து சத்தியம் செய்யக்கூடிய நேர்த்தி அவரது எழுத்தில் இருக்குமாம்.
கடந்த ஐந்தாண்டு தமிழ்ப்பத்திரிகையுலக வரலாற்றில் ஞாநியின் ‘ஓ’ பக்கங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க இடமுண்டு. பெரும்பாலும் திமுகமீதான – குறிப்பாக கலைஞர் – கொலைவெறி எதிர்ப்புதான். பலநேரங்களில் கலைஞர்மீது இவருக்கு சொந்தப் பகை ஏதோ உண்டோவென்று ஐயம் வரும் வகையில்தான் எழுதியிருக்கிறார் (சாருநிவேதிதா தொடர்ச்சியாக ஜெயமோகனை எழுதிவருவதைப் போல).
ஆனால் இதையும் மீறி, தொடர்ச்சியாக நான் ‘ஓ’ பக்கங்களை வாசித்து வந்தேன். ஒரு பிரச்சினையை ஒரு பத்திரிகையாளன் எத்தனை விதமான கோணங்களில் பார்க்கலாம் என்பதை ‘ஓ’ பக்கங்கள் பாடமாகவே நடத்தி வந்தது.
இனி ‘ஓ’ பக்கங்கள் குமுதத்தில் வராது என்று அறிவித்திருக்கிறார். சமீபக்கால விகடனின் எழுத்துகளை வாசிக்கும்போது, மீண்டும் விகடனில் வர வாய்ப்பிருக்கும் என்றே நம்புகிறேன். ஆனால் விகடன் டூ குமுதம் டூ விகடன் என்று ஊஞ்சலாட ஞாநி விரும்புவாரா என்று தெரியவில்லை.
தமிழகத்தைப் பொறுத்தவரை குமுதமும், விகடனும்தான் இன்றையத் தேதியில் மிகச்சிறந்த பிளாட்ஃபார்ம்கள். இந்த இரு பத்திரிகைகளைத் தவிர்த்து வேறெதிலாவது எழுதினால் எந்தளவுக்கு மக்களிடம் ‘ரீச்’ ஆகுமென்று கணிக்க முடியவில்லை. அப்படியே ஞாநிக்காக ஒரு சிலர் படித்தாலும், விகடன் – குமுதத்தில் அப்பகுதிக்கு கிடைத்த பாப்புலாரிட்டி புதிய பத்திரிகையில் கிடைக்குமென்பது உறுதியில்லை.
தனிப்பட்ட முறையில் ’ஓ’ பக்கங்கள் இல்லாததால் எனக்கு என்ன இழப்பென்று யோசித்துப் பார்க்கிறேன். கடந்த ஒரு வாரமாக சென்னையை மையம் கொண்டிருக்கும் ‘கள்ளக்காதல்’ புயல் பற்றிய ஒரு திட்டவட்டமான தீர்மானத்துக்கு வர இயலாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். ஞாநி ‘ஓ’ பக்கங்களில் இச்சம்பவங்களை அலசி ஆராய்ந்து, பின்னணியை நோண்டி நொங்கெடுத்து தெளிய வைத்திருப்பார்.
அதே வேளையில் விகடன் மற்றும் குமுதம் இப்பக்கங்களை இழக்க வேண்டிய சூழலையையும் புரிந்துகொள்ள முடிகிறது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும்!
ஓர் உதவியாசிரியர் எஸ்.ஏ.பி.யிடம் கேட்டாராம். “நீங்கள் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் ஒருவரை, அவரது ஆட்சியை இப்படியெல்லாம் விளாசலாமா?”
எஸ்.ஏ.பி. சொல்லியிருக்கிறார். “பெரிய பத்திரிகையான நாம் யானையிடம்தான் மோதவேண்டும். திமுக போன்ற கொசுக்களிடம் மோதுவதில் நமக்கென்ன பெருமை?”
திமுக பின்னாளில் புலியாக வளர்ந்து பாய்ச்சல் நிகழ்த்தியபோது எஸ்.ஏ.பி. துப்பாக்கி கொண்டு தலையங்கம் தீட்டவேண்டியிருந்ததாம்.
- எஸ்.ஏ.பி. மறைந்தபோது, ஏதோ ஒரு பத்திரிகையில் (ஆ.வி. என்பதாக நினைவு) ரா.கி.ரங்கராஜன் எழுதியது இது. என் நினைவிலிருந்து எழுதியிருக்கிறேன். வார்த்தைகள் மட்டும் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கலாம்.
இந்தப் பதிவில் நான் சொல்லவிரும்பியது இதை மட்டும்தான். ஏன் சொல்ல விரும்பினேன் என்பதை இங்கே வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
ஞாநி மீது பலருக்கும் பல்வேறு குறைபாடுகள் உண்டு. குற்றச்சாட்டுகள் இருக்க வாய்ப்பில்லை. குறைபாடுக்கும், குற்றச்சாட்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. அவர் எழுதுவது எல்லோருக்கும் பிடிக்காது. அதுபோலவே எல்லோருக்கும் பிடிக்கும்படிதான் அவர் எழுதவேண்டும் என்று அவசியமும் கிடையாது.
முப்பதாண்டுகளுக்கு முன்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் பணியாற்றியவர். அந்நிறுவனம் இவரை ஏதோ காரணத்தால் – என்ன காரணமென்று தெரியவில்லை – நீக்கியதால், தொழிலாளர் உரிமை என்ற அடிப்படையில் கோர்ட்டுக்குச் சென்று வழக்கில் வென்றவர். இந்த மனத்திடம் இப்போது பத்திரிகைகளில் பணிபுரிபவர்களில் எத்தனைப் பேருக்கு இருக்கும் என்பது சந்தேகமே. நிச்சயமாக எனக்கு இல்லை.
பிற்பாடு அவர் தமிழ் பத்திரிகைகளுக்கு வந்தபின்னர்தான் ‘டேபிள் ஒர்க்’ என்ற ஒரு பணி, தமிழ்ப் பத்திரிகையுலகில் அறிமுகப்படுத்தப்படுகிறது என்று சொல்வார்கள். டேபிள் ஒர்க் என்பது இன்றைய பத்திரிகையுலகில் மிகவும் அத்தியாவசியமானப் பணியாக இருக்கிறது. வேறொன்றுமில்லை. பிறர் எழுதும் கட்டுரைகளையும், கதைகளையும் மெருகேற்றி, தேவையான திருத்தங்கள் செய்து அச்சுக்கு அனுப்புவது. மாவட்டங்களில் பல்வேறு நிருபர்கள் தரும் தகவல்களை அலசி, ஆராய்ந்து, தொகுத்து முழுமையான கட்டுரையாக எழுதுதல் போன்றவையே டேபிள் ஒர்க். இதில் வேறு சில பணிகளும் உண்டு. அவை இங்கே அவசியமில்லை.
ஆங்கிலப் பத்திரிகைகளில் இருந்த இந்தமுறையை தமிழ்ப் பத்திரிகையுலகில் பரவலாக்கிய முன்னோடி என்பதாக ஞாநி பத்திரிகை வட்டாரங்களில் அறியப்படுகிறார். அனேகமாக தொண்ணூறுகளின் தொடக்கத்தில்தான் இந்தப் பாணியில் தமிழ்ப் பத்திரிகைகளின் எடிட்டோரியல் இயங்கத் தொடங்கியது. அதற்கு முன்பாக வரும் கட்டுரைகளையோ கவிதைகளையோ கதைகளையோ – கிட்டத்தட்ட அப்படியே – வெறுமனே பிழைத்திருத்தி அனுப்புவதுதான் வழக்கமாம்.
ஆனந்த விகடனில் ஞாநியின் பங்கு இருந்த காலக்கட்டத்தில் அவர் எப்படி எழுதுவார் என்று சுவாரஸ்யமாக சொல்வார்கள். ஒரே ஒரு பிரச்சினையையோ அல்லது சம்பவத்தையோ நான்கைந்து நிருபர்கள் எழுதி அனுப்புவது வழக்கம். நிறைய ஃப்ரீலான்ஸர்கள் அப்போது இருந்தார்கள். எழுத்து மற்றும் பிரச்சினையைப் பார்க்கும் விதத்தில் ஒவ்வொருவரும் வேறுபடுவார்கள். ஒருவர் சார்புநிலையெடுத்து எழுதியிருப்பார். இன்னொருவர் எதிர்ப்புநிலையை கறாராக கைக்கொண்டிருப்பார். இன்னுமொருவர் நடுநிலை என்ற பெயரில் கத்திமீது நடக்க முயன்றிருப்பார்.
எடிட்டோரியலில் இருப்பவர் இந்த நான்கு கட்டுரைகளையும் வாசித்ததும் நிச்சயமாக குழம்பிப் போய்விடுவது என்பது இயல்புதான். ஞாநி நான்கையும் எடுத்து பொறுமையாக வாசிக்க ஆரம்பிப்பாராம். வாசித்து முடித்ததும் மூடிவைத்துவிடுவாராம் (என்னிடம் சொன்னவர் கிழித்து எறிந்துவிடுவார் என்று சொன்னார்). பிறகு வெள்ளைத்தாளை எடுத்து எந்தவித ரெஃபரென்ஸுமின்றி மடமடவென்று நறுக்குத் தெறித்தாற்போல எழுதிமுடிப்பாராம். கட்டுரையை வாசித்தவர்கள் அது நேரடி ரிப்போர்ட்தான் என்று கையில் அடித்து சத்தியம் செய்யக்கூடிய நேர்த்தி அவரது எழுத்தில் இருக்குமாம்.
கடந்த ஐந்தாண்டு தமிழ்ப்பத்திரிகையுலக வரலாற்றில் ஞாநியின் ‘ஓ’ பக்கங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க இடமுண்டு. பெரும்பாலும் திமுகமீதான – குறிப்பாக கலைஞர் – கொலைவெறி எதிர்ப்புதான். பலநேரங்களில் கலைஞர்மீது இவருக்கு சொந்தப் பகை ஏதோ உண்டோவென்று ஐயம் வரும் வகையில்தான் எழுதியிருக்கிறார் (சாருநிவேதிதா தொடர்ச்சியாக ஜெயமோகனை எழுதிவருவதைப் போல).
ஆனால் இதையும் மீறி, தொடர்ச்சியாக நான் ‘ஓ’ பக்கங்களை வாசித்து வந்தேன். ஒரு பிரச்சினையை ஒரு பத்திரிகையாளன் எத்தனை விதமான கோணங்களில் பார்க்கலாம் என்பதை ‘ஓ’ பக்கங்கள் பாடமாகவே நடத்தி வந்தது.
இனி ‘ஓ’ பக்கங்கள் குமுதத்தில் வராது என்று அறிவித்திருக்கிறார். சமீபக்கால விகடனின் எழுத்துகளை வாசிக்கும்போது, மீண்டும் விகடனில் வர வாய்ப்பிருக்கும் என்றே நம்புகிறேன். ஆனால் விகடன் டூ குமுதம் டூ விகடன் என்று ஊஞ்சலாட ஞாநி விரும்புவாரா என்று தெரியவில்லை.
தமிழகத்தைப் பொறுத்தவரை குமுதமும், விகடனும்தான் இன்றையத் தேதியில் மிகச்சிறந்த பிளாட்ஃபார்ம்கள். இந்த இரு பத்திரிகைகளைத் தவிர்த்து வேறெதிலாவது எழுதினால் எந்தளவுக்கு மக்களிடம் ‘ரீச்’ ஆகுமென்று கணிக்க முடியவில்லை. அப்படியே ஞாநிக்காக ஒரு சிலர் படித்தாலும், விகடன் – குமுதத்தில் அப்பகுதிக்கு கிடைத்த பாப்புலாரிட்டி புதிய பத்திரிகையில் கிடைக்குமென்பது உறுதியில்லை.
தனிப்பட்ட முறையில் ’ஓ’ பக்கங்கள் இல்லாததால் எனக்கு என்ன இழப்பென்று யோசித்துப் பார்க்கிறேன். கடந்த ஒரு வாரமாக சென்னையை மையம் கொண்டிருக்கும் ‘கள்ளக்காதல்’ புயல் பற்றிய ஒரு திட்டவட்டமான தீர்மானத்துக்கு வர இயலாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். ஞாநி ‘ஓ’ பக்கங்களில் இச்சம்பவங்களை அலசி ஆராய்ந்து, பின்னணியை நோண்டி நொங்கெடுத்து தெளிய வைத்திருப்பார்.
அதே வேளையில் விகடன் மற்றும் குமுதம் இப்பக்கங்களை இழக்க வேண்டிய சூழலையையும் புரிந்துகொள்ள முடிகிறது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)