நம்பினால் நம்புங்கள். நாலே நாலு இட்லி சாப்பிடுவதற்காகதான், ஐநூறு கிலோ மீட்டர் பயணித்து அந்த ஊருக்குப் போயிருந்தோம். தட்டு மீது வாழை இலை போடப்பட்டு, சுடச்சுட பரிமாறப்பட்டது இட்லி. ஒரு விள்ளலை பொடியில் தொட்டு வாயில் வைத்ததுமே, திருநெல்வேலி அல்வா மாதிரி தொண்டைக்குள் எந்த சிரமமுன்றி இறங்குகிறது. சுவையும் சூப்பர்.
இதுதான் ராமசேரி இட்லி.
மறைந்த தொழில் அதிபர் அம்பானிக்கு, நம்மூர் சரவணபவன் இட்லி-சாம்பார் என்றால் உயிராம். அவருக்கு இட்லி சாப்பிட வேண்டுமென்று தோன்றும் நாட்களில் எல்லாம், ரிலையன்ஸ் நிறுவனத்தின் சென்னை அதிகாரிகளின் ஏற்பாட்டில், ஒரு தனி விமானம் மூலமாக சென்னையிலிருந்து, மும்பைக்கு ஒரு பார்சல் இட்லி மட்டும் ‘ஸ்பெஷலாக’ செல்லுமாம். சென்னையில் சகஜமாக உணவுப்பிரியர்கள் வட்டாரத்தில் கூறப்படும் இந்தச் செய்தி உண்மையா, வதந்தியா என்று உறுதியாக தெரியவில்லை. ஆனாலும் ‘இட்லி’யை விரும்பாதோர் வட இந்தியரோ, வெளிநாட்டுக்காரரோ யாருமே இருக்க முடியாது.
இட்லி பயன்பாட்டின் ஒரே பிரச்சினை, அது சீக்கிரமே கெட்டுவிடும் உணவுப்பண்டம் என்பதுதான். அதை பதப்படுத்தி பயன்படுத்த முடியாது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு கண்டிருக்கிறது ராமசேரி.
பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு செல்லும் வழியில், சுமார் 28 கி.மீ. தூரத்தில் இருக்கும் குக்கிராமம் ராமசேரி (கோவையிலிருந்து பாலக்காடு செல்லும் வழியிலும் செல்லலாம்). தமிழக எல்லைக்கு வெகு அருகில் கேரளத்துக்குள் இருக்கிறது இக்கிராமம்.
இந்த ஊரைப் பற்றியும், இந்த ஊர் இட்லியைப் பற்றியும் கோவையிலும், பொள்ளாச்சியிலும் இருப்பவர்களுக்கு அவ்வளவாக தெரியவில்லை. ஆனால் வருடாவருடம் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற அயல்நாடுகளில் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா வரும் பயணிகள், இட்லி சாப்பிடுவதற்காகவே ராமசேரி வருகிறார்கள். டூரிஸ்ட்டு கைடுகள், வெளிநாட்டுப் பயணிகளுக்கு ராமசேரி இட்லியை பரிந்துரைத்தும் அழைத்து வருகிறார்கள். சாப்பிட்டவர்கள் சும்மா செல்வதில்லை. நாலு பொட்டலம் கட்டி, பார்சலும் வாங்கிச் செல்கிறார்கள். ஏனெனில் ஒருவாரம் வரை ராமசேரி இட்லி கெடுவதேயில்லை. எப்போது பொட்டலத்தைப் பிரித்தாலும் ‘ப்ரெஷ்’ஷாகவே இருப்பது, இந்த ஊர் இட்டிலியின் ஸ்பெஷாலிட்டி.
மலபார் பிரியாணி மாதிரி ராமசேரி இட்லியும் கேரளாவில் ரொம்ப பிரபலம். ஒரு காலத்தில் ராமசேரி கிராமம் முழுக்க ஏராளமானவர்கள் இட்லி வியாபாரத்தில் இறங்கியிருந்தார்கள். கூடையில் இட்லி சுமந்து, பாலக்காடு நகருக்கு சென்று வீடு வீடாக விற்பார்கள். பிற்பாடு இவர்களில் பலரும் கோயமுத்தூர், திருப்பூர் என்று டெக்ஸ்டைல் வேலைக்கு சென்று விட்டார்கள். தற்போது ஆறு குடும்பங்கள் முழுக்க முழுக்க இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
“பொடி தவிர சட்னி ஏதேனும் உண்டோ சேச்சி”
“தப்பும், தவறுமா மலையாளம் பேசவேணாம். எங்களுக்கு தமிழே நல்லா தெரியும். என் பேரு செல்வி” பரிமாறுபவர் புன்னகையோடு சொல்கிறார்.
அட தமிழர்கள்!
இட்லிக்கு பெயர்போன காஞ்சிபுரம்தான் ராமசேரி இட்லியின் ரிஷிமூலம். ஒரு நூறாண்டு வரலாறே இதற்கு உண்டு. காஞ்சிபுரத்தில் இருந்து பிழைப்பு தேடி ஒரு முதலியார் கேரளா பக்கமாக அந்த காலத்தில் ஒதுங்கினாராம். அவருடைய பரம்பரையில் வந்தவர்கள்தான் இப்போது ராமசேரியில் இட்லி வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் என்கிறார்கள். இருநூற்றி ஐம்பது ஆண்டு காலத்துக்கு முன்பே ராமசேரி இட்லி கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாகவும் சொல்கிறார்கள்.
மற்ற ஊர் இட்லிகளை மாதிரி இல்லாமல் சிறிய அளவு கல் தோசை வடிவில், ராமசேரி இட்லி இருக்கிறது. கேஸ் அடுப்பு மாதிரி நவீன வசதிகளை பயன்படுத்தினால், அச்சு அசலான ராமசேரி இட்லியின் சுவை கை கூடாது. விறகடுப்புதான் பயன்படுத்துகிறார்கள். அதுவும் புளிய மரத்து விறகுதான் எரிக்கிறார்கள் (இதற்கு பின்னிருக்கும் லாஜிக் என்னவென்று தெரியவில்லை). இட்லித்தட்டு, குக்கர் எதுவும் பயன்படுத்துவதில்லை.
இந்த இட்லியின் சுவை மாவு அடுப்பில் வேகும்போதே தொடங்குகிறது. அடுப்பு மீது நீர் நிரம்பிய ஒரு சாதாரண பாத்திரம். அதற்கு மேல் பானையின் கழுத்து மாதிரி தோற்றம் கொண்ட ஒரு மண் பாத்திரம். வாய்ப்பகுதி முழுக்க குறுக்கும் நெடுக்குமாக கயிறால் கட்டப்பட்டிருக்கிறது. அதற்கு மேல் ஒரு வெள்ளை துணி விரித்து, தோசை வார்ப்பதற்கு ஊற்றுவது மாதிரி இட்லிமாவை உள்ளங்கை அளவுக்கும் சற்று அதிகமான பரப்பளவில் ஊற்றுகிறார்கள். சூடாகும் பாத்திரத்தில் இருந்து மேலெழும்பும் நீராவியில்தான் இந்த இட்லி வேகுகிறது. ஒரு அடுப்பில் ஒரே நேரத்தில் நான்கு இட்லி மட்டுமே சுடமுடியும். இரண்டு மணி நேரத்தில் 100 இட்லிகளை உருவாக்கக்கூடிய கட்டமைப்புதான் இங்கே இருக்கிறது.
மாவு உருவாக்க அரிசி, உளுந்தினை கலக்கும் விகிதம் ரொம்பவும் முக்கியமானது. 10 கிலோ அரிசிக்கு ஒரு கிலோ உளுந்து பயன்படுத்துகிறார்கள். மாவு புளிக்க நான்கு மணிநேர இடைவெளி கொடுக்கிறார்கள்.
சென்னை நட்சத்திர ஓட்டல்களில் இட்லி சாப்பிட்டிருந்தால், ‘இளநீர் இட்லி’ என்றொரு வகையினை நீங்கள் சுவைத்திருக்க முடியும். ராமசேரி இட்லி, மிருதுத் தன்மையிலும், சுவையிலும் இளநீர் இட்லியை ஒத்திருக்கிறது. ஒரு இட்லி மூன்றே மூன்று ரூபாய்தான். நான்கு இட்லி சாப்பிட்டாலே ‘திம்’மென்றிருக்கிறது.
திருமணம் முதலான நிகழ்ச்சிகளுக்கு இங்கே ‘ஆர்டர்’ செய்து 5,000 மற்றும் 10,000 எண்ணிக்கையில் மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள். பாலக்காடு, வாளையார், திருப்பூர் ஆகிய ஊர்களில் இருக்கும் ஓட்டல்காரர்களும் இங்கே வந்து மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள்.
“எந்த ஊர்லே எல்லாம் எங்க இட்லியை சாப்பிடறாங்கன்னு எங்களுக்கு தெரியாது. ஆனா ஒரு முறை கேரளாவோட தன (நிதி) மினிஸ்டர் வந்து எங்க கடையில் இட்லி சாப்பிட்டார். எப்படி செய்யுறீங்கன்னு கேட்டு, அடுப்படி வரைக்கும் வந்து பார்த்தார். மலையாள சினிமா நட்சத்திரங்களும் கூட எங்க கடைக்கு வந்திருக்காங்க” என்கிறார் சரஸ்வதி டீ ஸ்டாலின் உரிமையாளர் பாக்கியலட்சுமி அம்மாள்.
கடையின் பெயரில் டீ ஸ்டால் இருந்தாலும், இட்லிதான் பிரதான வியாபாரம். அதிகாலையில் இங்கே பற்றவைக்கும் அடுப்பு, நள்ளிரவானாலும் அணைக்கப் படுவதில்லை. தங்கள் இட்லிக்கு வெளியூர்களில் இருக்கும் அசாத்தியமான செல்வாக்கும், வணிக வாய்ப்பும் துரதிருஷ்டவசமாக இதுவரை ராமசேரி ஆட்களுக்கு தெரியவேயில்லை.
சில காலத்துக்கு முன்பு தஞ்சையில் ‘இட்லி மேளா’ என்கிற பெயரில் ஒரு நிகழ்வினை மத்திய உணவுப்பதப்படுத்தும் அமைச்சகம் நிகழ்த்தியது. இட்லியை உலகத் தரத்தில் உருவாக்கி, பதப்படுத்தி ஏற்றுமதி செய்தால் அன்னிய செலாவணி அதிகரிக்கும் என்கிற கருத்தினை அவ்வமைச்சகத்தின் செயலர் முன்மொழிந்தார். இட்லி ஆராய்ச்சிக்காக ரூ.2 கோடியும் அமைச்சகத்தால் ஒதுக்கப்பட்டது. ராமசேரி இட்லியை, உணவுப் பதப்படுத்தும் அமைச்சகம் ஆராயும் பட்சத்தில் ‘இட்லி மேளா’வின் நோக்கம் நிறைவேறும்.
தமிழகமெங்கும் இருக்கும் பெரிய உணவு விடுதிகளும்கூட ராமசேரி இட்லியை வாங்கி தங்கள் வாடிக்கையாளர்களின் நாக்குக்கு சுவை சேர்க்கலாம். பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மிகப்பெரிய வணிக வாய்ப்பு ராமசேரி இட்லிக்கு உண்டு. உணவு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களும் கூட, ராமசேரி இட்லியை முன்வைத்து பெரியளவில் தொழில் திட்டங்களை தீட்டலாம். ஏனெனில் அயல்நாடுகளில் பீட்சா சாப்பிட்டு நொந்துப் போயிருப்பவர்கள், இட்லிக்காக தங்கள் ஆவியையும் கொடுக்க சித்தமாக இருக்கிறார்கள்.
திருநெல்வேலி அல்வாவை நெல்லை தவிர, வேறு ஊர்களில் செய்தால் அதன் சுவை கைகூடுவதில்லை. இதே லாஜிக் ராமசேரி இட்லிக்கும் பொருந்துகிறது. இங்கே செய்முறை அறிந்துக்கொண்டு, தங்கள் ஊர்களில் சென்று ராமசேரி ஃபார்முலாவை அப்படியே பயன்படுத்தி, ‘இட்லி’ சுட்டவர்கள், முயற்சியில் கையை சுட்டுக் கொண்டார்கள். “இதென்ன அதிசயம் என்று புரியாமலேயே இருக்கிறது” என்று நொந்துக் கொண்டார் நம்மோடு இட்லி சாப்பிட்டுக் கொண்டிருந்த திருப்பூர்க்காரர் ஒருவர்.
(நன்றி : புதிய தலைமுறை)
30 மே, 2011
28 மே, 2011
சிலுக்கு
"சிலுக்கு" - பெயரை கேட்டாலே சிலிர்த்து கொள்வார்கள் காதோரம் நரைத்தவர்கள். 1979ல் வண்டிச்சக்கரம் திரைப்படம் மூலமாக அறிமுகமான விஜயவாடா விஜயலஷ்மி என்ற சிலுக்கு சுமிதா பதினேழு ஆண்டுகள் தன் கவர்ச்சியால் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் திரையுலகை கட்டி ஆண்டவர். இருபது ஆண்டுகளுக்கு முன்னால் திரைப்படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் ஒரு நிபந்தனை போடுவார்களாம் தயாரிப்பாளர்களுக்கு. அதாவது கண்டிப்பாக சிலுக்குவின் நடனம் அந்தப் படத்தில் இடம்பெற வேண்டுமென்று. ரஜினி, கமல் தமிழ் திரையுலகை ஆண்டு வந்த சகாப்தத்திலும் கூட சிலுக்குவின் பெயருக்கு தனி மவுசு இருந்தது.
ஒருமுறை படப்பிடிப்பின் போது ஒரு ஆப்பிள் பழத்தை ஒரு கடி கடித்துவிட்டு தூக்கிப் போட்டாராம் சிலுக்கு. அந்தப் பழம் ஒரு லட்சரூபாய் வரைக்கும் விலைபோனது என்பது உலக சினிமா சரித்திரத்தில் யாருக்குமே கிடைக்காத பெருமை. இன்னமும் பல திரை கதாநாயகிகள் சிலுக்குவின் கண்களுக்கு யார் கண்களுமே ஈடு இணை கிடையாது என்று பேட்டி தருகிறார்கள். சிலுக்குவின் கண்ணசைவு கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தை திருடியது என்றால் மிகையில்லை.
90களின் ஆரம்பத்தில் வெளிவந்த திரைப்படங்களில் கதாநாயகிகளே தாராளக்கவர்ச்சியை காட்டு காட்டுவென்று காட்ட தயாராக இருந்ததால் கவர்ச்சி நடிகைகளுக்கு வாய்ப்பு குறைந்தது. அவ்வகையில் சிலுக்கும் கவர்ச்சி நடனம் ஆடுவதை விட்டு விட்டு குணச்சித்திரப் பாத்திரங்களிலும், வில்லியாகவும் நடிக்க ஆரம்பித்தார்.
திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த, ஆயிரக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்த சிலுக்குவின் தனிப்பட்ட வாழ்க்கை மிக சோகமானது. 1996ஆம் ஆண்டு வடபழனியில் இருந்த தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டு மாண்டுபோனார். திரையுலகமும், ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ‘தாடிக்காரர்’ என்கிற சொல் இக்காலக்கட்டத்தில் தமிழ் பத்திரிகைகளில் அதிகம் பிரசுரமான சொல்.
சிலுக்குவின் திடீர் மரணத்தால் அவர் நடித்து வந்த பல திரைப்படங்கள் பாதித்தது. அவர் கடைசியாக இடம்பெற்று வெளிவந்த திரைப்படம் அர்ஜூன் நடித்த சுபாஷ். அப்படத்தில் வரும் பாடல் காட்சி ஒன்றில் அர்ஜூனுடன் நடனமாடியிருந்தார். அப்பாடலின் கடைசியில் கூட சிலுக்கு தீக்கிரையாவது போல கிராபிக்ஸ் அமைக்கப்பட்டிருந்தது பெரும் சோகம்.
பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அப்போது சிலுக்கு கதாநாயகியாக கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் ஒன்று ரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு தூசுதட்டப்பட்டது. திருப்பதி ராஜன் என்பவர் தயாரித்து இயக்கிய தங்கத்தாமரை என்கிற திரைப்படம் அது. தற்கால ட்ரெண்டுக்கு ஏற்றவகையில் படத்தில் சில மாற்றங்களை அமைத்து, பாடல் காட்சிகளை இணைத்து வெளியிட திருப்பதிராஜன் முன்வந்தார். விநியோகஸ்தர்கள் மத்தியில் இத்திரைப்படத்துக்கு பெரும் வரவேற்பும், எதிர்ப்பார்ப்பும் கூட இருந்தது.
பல ஆண்டுகள் கழித்து சிலுக்குவை திரையில் காணப்போகிறோம் என்று சிலுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் பெரும் ஆர்வத்துடன் தங்கத்தாமரையை எதிர்பார்த்து இன்னும் காத்திருக்கிறார்கள். தங்கத்தாமரையை சீக்கிரமா கண்ணுலே காட்டுங்க சாமீங்களா...

90களின் ஆரம்பத்தில் வெளிவந்த திரைப்படங்களில் கதாநாயகிகளே தாராளக்கவர்ச்சியை காட்டு காட்டுவென்று காட்ட தயாராக இருந்ததால் கவர்ச்சி நடிகைகளுக்கு வாய்ப்பு குறைந்தது. அவ்வகையில் சிலுக்கும் கவர்ச்சி நடனம் ஆடுவதை விட்டு விட்டு குணச்சித்திரப் பாத்திரங்களிலும், வில்லியாகவும் நடிக்க ஆரம்பித்தார்.
திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த, ஆயிரக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்த சிலுக்குவின் தனிப்பட்ட வாழ்க்கை மிக சோகமானது. 1996ஆம் ஆண்டு வடபழனியில் இருந்த தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டு மாண்டுபோனார். திரையுலகமும், ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ‘தாடிக்காரர்’ என்கிற சொல் இக்காலக்கட்டத்தில் தமிழ் பத்திரிகைகளில் அதிகம் பிரசுரமான சொல்.
சிலுக்குவின் திடீர் மரணத்தால் அவர் நடித்து வந்த பல திரைப்படங்கள் பாதித்தது. அவர் கடைசியாக இடம்பெற்று வெளிவந்த திரைப்படம் அர்ஜூன் நடித்த சுபாஷ். அப்படத்தில் வரும் பாடல் காட்சி ஒன்றில் அர்ஜூனுடன் நடனமாடியிருந்தார். அப்பாடலின் கடைசியில் கூட சிலுக்கு தீக்கிரையாவது போல கிராபிக்ஸ் அமைக்கப்பட்டிருந்தது பெரும் சோகம்.

பல ஆண்டுகள் கழித்து சிலுக்குவை திரையில் காணப்போகிறோம் என்று சிலுக்கு ரசிகர்களும், திரையுலகினரும் பெரும் ஆர்வத்துடன் தங்கத்தாமரையை எதிர்பார்த்து இன்னும் காத்திருக்கிறார்கள். தங்கத்தாமரையை சீக்கிரமா கண்ணுலே காட்டுங்க சாமீங்களா...
26 மே, 2011
ஜிரோநிமா
சிறுவயதிலிருந்தே காமிக்ஸ்களை விரும்பி படிப்பது வழக்கம். ஜேம்ஸ்பாண்டு போன்ற நாகரிக நாயகர்கள் தோன்றும் ஐரோப்பிய கதைகளை விட டெக்ஸ்வில்லர், லக்கிலுக் போன்ற அமெரிக்க கவுபாய்களின் கதைகள் நமக்கு உவப்பானவை. அவ்வாறு காமிக்ஸ்களை வாசிக்கும்போது தான் செவ்விந்தியர் என்ற ஒரு இனம் இருந்ததே நமக்கு தெரியவந்தது.
நாம் வாசிக்கும் கதைகளில் 99.99% வெள்ளையர்கள் தங்கள் மதியூகத்தால் செவ்விந்தியர்களை வெல்வதே முடிவாக இருக்கும். வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட கதைகள் என்பதால் இயல்பாகவே அப்படி அமைந்துவிடுகிறதா, இல்லையென்றால் வரலாற்றைத் திரித்து கதைகளாக உருவாக்குகிறார்களா என்கிற கேள்வி எழும். 'ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்' என்கிற மனநோய் நமக்கு இருக்கிறதா தெரியவில்லை, அக்கதைகளில் வில்லன்களாக சித்தரிக்கப்பட்ட செவ்விந்தியர்கள் ஒரு கதையிலாவது வெல்லவேண்டும் என்றே சிறுவயதில் விரும்பியிருக்கிறேன். செவ்விந்தியர்களை வெறும் முரடர்களாகவும், மூளையில்லாத முட்டாள்களாகவும் கதை எழுதிய கதாசிரியனையும், கேலிச்சித்திரம் போல செவ்விந்தியர்களை வரையும் ஓவியனையும் மனதுக்குள் சபிப்பேன்.
அதே நேரத்தில் வெள்ளையர்களிடமிருந்த ஆயுதங்கள் பீரங்கி, துப்பாக்கி போன்றவையையும், செவ்விந்தியர்களிடமிருந்த கோடாரி, வில்-அம்பு போன்றவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒருவேளை அக்கதைகள் உண்மையாகவும் இருந்திருக்கலாம். ஓய்வாக இணையத்தில் அவ்வப்போது நாம் படித்த கதைகளில் வந்த செவ்விந்திய இனங்கள், வீரர்களின் பெயரை கூகிளில் தேடி வாசித்து பார்ப்பது வழக்கம்.
அவ்வாறாக இணையங்களில் தேடியபோது தான் பல புதிய விவரங்களை அறியமுடிந்தது. நாம் வாசித்த கதைகளில் வந்ததைப் போல வெள்ளையர்கள் மதியூகத்தாலும், வீரத்தாலும் செவ்விந்திய இனத்தை வீழ்த்திடவில்லை, கேவலமான தந்திரங்களை பயன்படுத்தி கோழைத்தனமான முறையிலேயே செவ்விந்திய கலாச்சாரத்தை அழித்தொழித்திருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. தங்கள் குடியேற்றத்தை விரிவுபடுத்திக்கொள்ள பயங்கர இனப்படுகொலைகளை பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளையர்கள் நடத்திக் காட்டியிருக்கிறார்கள். இன்றைய நிலையில் இருப்பதைப் போன்ற தகவல் தொடர்பு அப்போதிருந்தால் உலகம் அன்றே அமெரிக்காவை காறித்துப்பியிருக்கும்.
என்னதான் புத்திசாலிகளாக இருந்தாலும், நவீன ஆயுதங்களை தம் கைவசம் வைத்திருந்தாலும் வெள்ளையர்களுக்கு உள்ளுக்குள் இருந்த கோழைத்தனம் செவ்விந்தியர்களுக்கு எதிரான மகத்தான வீரவெற்றியை போர்முறையில் பெறும் வாய்ப்பை அளிக்கவில்லை. செவ்விந்தியர்கள் ஒரே இடத்தில் வசிக்கும் இனமல்ல, நாடோடி இனம். தங்கள் குடியிருப்பை காலநிலைக்கு ஏற்றவாறும், தங்கள் முக்கிய உணவான காட்டெருமைகள் வசிக்கும் காடுகளுக்கு அருகாக அமைவதைப் போல மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.
அவ்வாறான குடியிருப்புகளில் ஆண்கள் வேட்டைக்கு செல்லும் நேரத்தில் கோழைகளான வெள்ளையர்கள் தாக்குதல் நடத்துவார்கள். குடியிருப்புகளில் வசிக்கும் பெண்கள், குழந்தைகளை கொன்று அந்த கூட்டத்தையே அழித்ததைப் போல தலைநகருக்கு தகவல் சொல்லுவார்கள். செவ்விந்தியர்கள் தனித்தனியான கூட்டமாக வாழ்ந்ததால் அவர்களால் வெள்ளையர்களுக்கு எதிரான ஒரு பெரிய போர்ப்படையை உருவாக்க இயலாமல் போய்விட்டது. பொதுவாக ஒரு செவ்விந்திய கூட்டம் அறுபது முதல் நூறு வீரர்கள் வரையே கொண்டிருக்கும். மாறாக வெள்ளையர்களோ தங்களது ஒரு படைப்பிரியில் ஐநூறு முதல் ஐயாயிரம் பேர் வரை வைத்திருப்பர்.
வெள்ளையர்களின் குடியேற்றத்துக்கு செவ்விந்தியர்கள் அதிக அளவில் எதிர்ப்பு தெரிவித்தது இருப்புப் பாதைகள் போடப்பட்டபோது தான். தங்களது மேய்ச்சல் நிலங்களை அழித்து வெள்ளையர் அதிக சத்தம் போடும் 'இரும்புக் குதிரையை' (ரயிலை செவ்விந்தியர் அவ்வாறு தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்) கொண்டு வந்ததை இவர்கள் விரும்பவில்லை. தொடர்ச்சியாக சிறுசிறு போர்க்குழுக்களாக வெள்ளையர்களின் நகரங்களை அவ்வப்போது தாக்கி சிறியளவில் வெற்றி பெற்று வந்துள்ளனர். போர் மூலமாக செவ்விந்தியர்களை அடக்க துப்புக்கெட்ட அமெரிக்க அரசாங்கம் அம்மை நோய் போன்ற தொற்றுநோய்களை செவ்விந்திய கிராமங்களில் 'மிஷினரிகள்' மூலமாக பரப்பி செவ்விந்திய இனத்தை அழித்தனர். வெள்ளையர்களுக்கு எதிரான போரில் இறந்த செவ்விந்தியர்களை காட்டிலும், மருத்துவவசதி கிடைக்காது தொற்றுநோயால் கிராமம், கிராமமாக இறந்த செவ்விந்தியர்களே அதிகம்.
ஆயினும் பல தடைகளை தாண்டி, சொந்தம், பந்தம், தோழமைகளை இழந்து வெள்ளையர் குடியேற்றத்துக்கு எதிராக போராடி வெள்ளையரின் கண்களில் விரல்விட்டு ஆட்டிய மாவீரர்கள் அவ்வப்போது செவ்விந்திய இனங்களில் தோன்றினார்கள். அவர்களில் ஒருவர் மாவீரன் ஜிரோநிமா. இன்றைக்கும் இந்தப் பெயரை கேட்டாலே அமெரிக்கர்களின் காதில் இன்னமும் ஈயம் காய்ச்சி ஊற்றப்படுகிறதாம்.
1829ல் பாரம்பரியமிக்க அபாச்சே இனத்தில் பிறந்த ஜிரோநிமாவின் இயற்பெயர் கோய்ல்த்லே. செவ்விந்தியர்களின் பெயர்களை உச்சரிக்க சிரமப்பட்ட வெள்ளையர்கள் அவர்களுக்கு தங்கள் வாயில் நுழையும் பெயர் வைத்து அழைப்பது வழக்கம். அவ்வழக்கத்தின் படியே கோய்ல்தே, ஜிரொநிமா ஆனார். எல்லா செவ்விந்தியர்களைப் போலவும் வேட்டை, மேய்ச்சல் போன்றவற்றில் கைதேர்ந்த ஜிரோநிமா செவ்விந்திய மருத்துவ முறையையும் கற்று மருத்துவர் ஆனார். திருமணம் முடிந்து மூன்று பிள்ளைகளை பெற்று வழக்கமான இல்லறத்தில் வாழ்ந்து வந்தார்.
1851ல் தன் முகாமை விட்டு சகாக்களோடு ஜிரோநிமா வேட்டைக்கு சென்றிருந்தார். அப்போது சுமார் நானூறு வீரர்களோடு வந்த ஸ்பானியப் படை அம்முகாமை தீக்கிரையாக்கி அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் ஆகியோரை ஈவிரக்கமின்றி இனப்படுகொலை செய்தது. அச்சம்பவத்தில் தன் மனைவியையும், மூன்று குழந்தைகளையும் இழந்த ஜிரோநிமா வெள்ளையர்களை வேரறுக்க உறுதி பூண்டார்.
பதினாறு தேர்ந்த வீரர்களை மட்டுமே தன் கைவசம் வைத்திருந்தவர் 1858ஆம் ஆண்டிலிருந்து மெக்ஸிகோ இராணுவ வீரர்கள் மீதும், மெக்ஸிகோ குடியிருப்புகள் மீதும், அதிரடி தாக்குதல் நடத்தத் தொடங்கினார். பெரும் படைப்பிரிவுகளை கூட கொரில்லா முறையில் அனாயசமாக திடீர் தாக்குதல் நடத்தி வெற்றி கொண்டார். மெக்ஸிகோவில் ஜிரோநிமாவின் புகழ் பெருகுவதை கண்ட அமெரிக்க அரசாங்கம் மெக்ஸிகோவுக்கு உதவியாக தன்னுடைய படைப்பிரிவுகளை (நம்ம அமைதிப்படை மாதிரி) அனுப்பி வைத்தது. அவற்றையும் தொடர்ந்து ஜிரோநிமா சுளுக்கெடுத்து வந்தார்.
நம் வீரப்பன் தண்ணி காட்டிய ரேஞ்சுக்கு ஜிரோநிமாவும் தன் சிறிய படைப்பிரிவை வைத்து இரண்டு ஏகாதிபத்திய அரசுகளுக்கும் அள்ளு கொடுத்தது எத்தனை ஆண்டுகள் தெரியுமா? இருபத்தெட்டு ஆண்டுகள்! கடைசியாக உதைவாங்கியே அலுத்துப் போன அமெரிக்க அரசாங்கம் 1886ஆம் ஆண்டு ஐயாயிரம் பேர் கொண்ட பெரிய படை ஒன்றினை ஜிரோநிமாவை கைது செய்ய அனுப்பி வைத்தது.
ஐயாயிரம் பேரும் முற்றுகையிட்டபோதும் ஜிரோநிமாவை அவ்வளவு சுலபமாக நெருங்கமுடியவில்லை. கடைசியாக பொதுமன்னிப்பு உள்ளிட்ட சில நிபந்தனைகளோடு ஜிரோநிமா சரணடைய முன்வந்தார். ஜிரோநிமா சரணடையும் போது அவரது பெரும்படையும் சரணடைய வேண்டும் என்று அமெரிக்க அரசு கேட்டுக் கொண்டது. ஜிரோநிமாவுடன் சரணடைந்த பெரும்படையில் இருந்தவர்கள் மொத்தமே (குழந்தைகள், பெண்கள் உட்பட) முப்பத்தெட்டு பேர் தான்.
அதன் பின்னர் 23 ஆண்டுகள் அமைதியாக உயிர்வாழ்ந்த ஜிரோநிமா 1909ல் தன்னுடைய எழுபத்தி ஒன்பதாவது வயதில் இயற்கையான முறையில் மரணமடைந்தார். தன் கலாச்சாரத்தையும், பழக்கவழக்கங்களையும் என்றுமே விட்டுக் கொடுக்காத ஜிரோநிமா கடைசிக் காலத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது தான் ஆச்சரியம். பின்னர் ஜிரோநிமாவை கதாநாயகனாகவும், வில்லனாகவும் சித்தரித்து ஏராளமான திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் அமெரிக்காவில் உருவாக்கப்பட்டது.
இன்றைக்கும் செவ்விந்தியர்கள் அமெரிக்க கிராமங்களில் சிறுபான்மையினராக வசிக்கிறார்கள், தங்கள் கலாச்சார வேர்களை இழந்து...

அதே நேரத்தில் வெள்ளையர்களிடமிருந்த ஆயுதங்கள் பீரங்கி, துப்பாக்கி போன்றவையையும், செவ்விந்தியர்களிடமிருந்த கோடாரி, வில்-அம்பு போன்றவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒருவேளை அக்கதைகள் உண்மையாகவும் இருந்திருக்கலாம். ஓய்வாக இணையத்தில் அவ்வப்போது நாம் படித்த கதைகளில் வந்த செவ்விந்திய இனங்கள், வீரர்களின் பெயரை கூகிளில் தேடி வாசித்து பார்ப்பது வழக்கம்.

என்னதான் புத்திசாலிகளாக இருந்தாலும், நவீன ஆயுதங்களை தம் கைவசம் வைத்திருந்தாலும் வெள்ளையர்களுக்கு உள்ளுக்குள் இருந்த கோழைத்தனம் செவ்விந்தியர்களுக்கு எதிரான மகத்தான வீரவெற்றியை போர்முறையில் பெறும் வாய்ப்பை அளிக்கவில்லை. செவ்விந்தியர்கள் ஒரே இடத்தில் வசிக்கும் இனமல்ல, நாடோடி இனம். தங்கள் குடியிருப்பை காலநிலைக்கு ஏற்றவாறும், தங்கள் முக்கிய உணவான காட்டெருமைகள் வசிக்கும் காடுகளுக்கு அருகாக அமைவதைப் போல மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

வெள்ளையர்களின் குடியேற்றத்துக்கு செவ்விந்தியர்கள் அதிக அளவில் எதிர்ப்பு தெரிவித்தது இருப்புப் பாதைகள் போடப்பட்டபோது தான். தங்களது மேய்ச்சல் நிலங்களை அழித்து வெள்ளையர் அதிக சத்தம் போடும் 'இரும்புக் குதிரையை' (ரயிலை செவ்விந்தியர் அவ்வாறு தான் குறிப்பிட்டிருக்கிறார்கள்) கொண்டு வந்ததை இவர்கள் விரும்பவில்லை. தொடர்ச்சியாக சிறுசிறு போர்க்குழுக்களாக வெள்ளையர்களின் நகரங்களை அவ்வப்போது தாக்கி சிறியளவில் வெற்றி பெற்று வந்துள்ளனர். போர் மூலமாக செவ்விந்தியர்களை அடக்க துப்புக்கெட்ட அமெரிக்க அரசாங்கம் அம்மை நோய் போன்ற தொற்றுநோய்களை செவ்விந்திய கிராமங்களில் 'மிஷினரிகள்' மூலமாக பரப்பி செவ்விந்திய இனத்தை அழித்தனர். வெள்ளையர்களுக்கு எதிரான போரில் இறந்த செவ்விந்தியர்களை காட்டிலும், மருத்துவவசதி கிடைக்காது தொற்றுநோயால் கிராமம், கிராமமாக இறந்த செவ்விந்தியர்களே அதிகம்.
ஆயினும் பல தடைகளை தாண்டி, சொந்தம், பந்தம், தோழமைகளை இழந்து வெள்ளையர் குடியேற்றத்துக்கு எதிராக போராடி வெள்ளையரின் கண்களில் விரல்விட்டு ஆட்டிய மாவீரர்கள் அவ்வப்போது செவ்விந்திய இனங்களில் தோன்றினார்கள். அவர்களில் ஒருவர் மாவீரன் ஜிரோநிமா. இன்றைக்கும் இந்தப் பெயரை கேட்டாலே அமெரிக்கர்களின் காதில் இன்னமும் ஈயம் காய்ச்சி ஊற்றப்படுகிறதாம்.

1851ல் தன் முகாமை விட்டு சகாக்களோடு ஜிரோநிமா வேட்டைக்கு சென்றிருந்தார். அப்போது சுமார் நானூறு வீரர்களோடு வந்த ஸ்பானியப் படை அம்முகாமை தீக்கிரையாக்கி அங்கிருந்த பெண்கள், குழந்தைகள் ஆகியோரை ஈவிரக்கமின்றி இனப்படுகொலை செய்தது. அச்சம்பவத்தில் தன் மனைவியையும், மூன்று குழந்தைகளையும் இழந்த ஜிரோநிமா வெள்ளையர்களை வேரறுக்க உறுதி பூண்டார்.

நம் வீரப்பன் தண்ணி காட்டிய ரேஞ்சுக்கு ஜிரோநிமாவும் தன் சிறிய படைப்பிரிவை வைத்து இரண்டு ஏகாதிபத்திய அரசுகளுக்கும் அள்ளு கொடுத்தது எத்தனை ஆண்டுகள் தெரியுமா? இருபத்தெட்டு ஆண்டுகள்! கடைசியாக உதைவாங்கியே அலுத்துப் போன அமெரிக்க அரசாங்கம் 1886ஆம் ஆண்டு ஐயாயிரம் பேர் கொண்ட பெரிய படை ஒன்றினை ஜிரோநிமாவை கைது செய்ய அனுப்பி வைத்தது.


இன்றைக்கும் செவ்விந்தியர்கள் அமெரிக்க கிராமங்களில் சிறுபான்மையினராக வசிக்கிறார்கள், தங்கள் கலாச்சார வேர்களை இழந்து...
23 மே, 2011
திராவிட இயக்கத்தின் என்சைக்ளோபீடியா
தந்தை பெரியாரின் அணுக்கமான தொண்டராக இருந்தவர் குத்தூசி குருசாமி. இவரது அந்நாளைய கட்டுரைகளுக்கு அரசு அபராதம் விதிக்கும். விதிக்கப்பட்ட அபராதங்களை வாசகர்களிடமே வசூலித்து கட்டுவார். அபராதம் விதிக்கப்படும் கட்டுரைகளையே குத்தூசியார் தரவேண்டுமென்று மேலும், மேலும் வாசகர்கள் வசூல் மழை பொழிவார்கள்.
அவரது எழுத்துப் பாணி அச்சுஅசலாக நாத்திகச் செம்மல் இரா.தியாகராசன் அவர்களுக்கும் இருந்ததால், சின்னக்குத்தூசியார் என்கிற பெயரே இவருக்கு நிலைபெற்றது. படிக்கும் காலத்திலேயே திராவிட இயக்க சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர். ஆசிரியராக தனது வாழ்வினை தொடங்கியவர், பின்னர் பத்திரிகைத்துறையிலும் முத்திரை பதித்தார்.
கலைஞரை எதிர்த்து கட்சி கண்ட ஈ.வெ.கி.சம்பத்தின் நெருங்கிய நண்பர் இவர் என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். தமிழ் தேசியக்கட்சி காங்கிரஸில் ஐக்கியமானபோது, காமராசரின் நவசக்தியில் சின்னக்குத்தூசியார் காரசாரமான தலையங்கங்கங்களை தீட்டிவந்தார். எத்தனையோ பத்திரிகைகளை இவரது எழுத்து அலங்கரித்து வந்தாலும், என்றுமே எதிலுமே கொள்கை சமரசம் செய்துக் கொண்டதேயில்லை.
திராவிட இயக்கத்தின் என்சைக்ளோபீடியாவாக வாழ்ந்துவந்த சின்னக்குத்தூசியார் நேற்றுடன் அழியாப்புகழ் பெற்று இயற்கையோடு கலந்திருக்கிறார். தமிழ் பத்திரிகையாளர்களுக்கு திராவிட இயக்கம் குறித்த எந்த ஐயம் ஏற்பட்டாலும், சின்னக்குத்தூசியாரை தொடர்பு கொள்ளலாம். இதைப்பற்றி அவருக்கு தெரியாததே இல்லை எனலாம். பகுத்தறிவு, சுயமரியாதை ஆகிய கொள்கைகளுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்தார். காலமெல்லாம் பார்ப்பனீயத்தை தீரத்தோடு எதிர்த்து வாழ்ந்த சின்னக்குத்தூசியார் பிறப்பால் பார்ப்பனர் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்.
அவரது இறுதிக்கால வாழ்வு பெரும்பாலும் நக்கீரன் ஆசிரியர் அண்ணாச்சியையே சார்ந்திருந்திருக்கிறது. தனக்கென குடும்பம் ஏற்படுத்திக் கொள்ளாத சின்னக்குத்தூசியாருக்கு சொந்த மகனாகவே அண்ணாச்சி செயல்பட்டிருக்கிறார். அவரது பூவுடல் கூட பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது அண்ணாச்சியின் நக்கீரன் அலுவலகத்தில்தான். அந்திமக் காரியங்களையும் அண்ணாச்சியே முன்நின்று செய்திருக்கிறார்.
“கலைஞர் என்ன செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்துப் பேசுவார்” என்று பா.ராகவன் அவரது அஞ்சலிக்குறிப்பில் எழுதியிருக்கிறார். முழுக்க முழுக்க இக்கருத்தில் இருந்து முரண்படுகிறேன்.
1992 பாபர் மசூடி இடிப்புக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக முரசொலியில் எதிர்த்து எழுதிவந்தார் சின்னக்குத்தூசியார். 1998 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., நான்கு எம்.பி.க்களோடு தமிழகத்தில் வலுவாக காலூன்றியது. அப்போதைய அரசியல் சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய அரசியலுக்காக பா.ஜ.க.வோடு சமரசம் செய்து, கூட்டணி வைத்துக்கொள்ளும் நிலையிலும் இருந்தது.
சின்னக்குத்தூசியாரை அழைத்த கலைஞர், இனி பா.ஜ.க. எதிர்ப்பு விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்கும்படி கேட்டுக் கொண்டார். அரசியல் கூட்டணிக்காக கொள்கைக்கு எதிராக செயல்படுவதில் தனக்கு விருப்பமில்லை என்று இவர் மறுப்பு தெரிவிக்க, கலைஞரின் குரலில் கடுமை கூடியது.
“உங்களுக்கு மட்டும்தான் தலையங்கம் எழுத வரும்னு இல்லே. நானே நல்லா எழுதுவேன். தெரியுமில்லே?”
“நான் எழுதறதைவிட நீங்க நல்லா எழுதுவீங்க, நிறைய பேர் படிப்பாங்கன்னும் எனக்கு தெரியும்” என்று சொல்லிவிட்டு, முரசொலியில் இருந்து மூட்டை கட்டியவர் சின்னக்குத்தூசியார். கழகம், பாஜகவோடு கூட்டணியில் இருந்தவரை திமுகவோடு, தனக்கு பெரிய இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டார்.
கொள்கைக்காக வாழ்வை தியாகம் செய்த இந்த மகத்தானவரை, திராவிட இயக்கத்தவன் ஒவ்வொருவனும் தன் நெஞ்சில் ஏற்றி வைத்து சுமக்க வேண்டும்.
அவரது எழுத்துப் பாணி அச்சுஅசலாக நாத்திகச் செம்மல் இரா.தியாகராசன் அவர்களுக்கும் இருந்ததால், சின்னக்குத்தூசியார் என்கிற பெயரே இவருக்கு நிலைபெற்றது. படிக்கும் காலத்திலேயே திராவிட இயக்க சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர். ஆசிரியராக தனது வாழ்வினை தொடங்கியவர், பின்னர் பத்திரிகைத்துறையிலும் முத்திரை பதித்தார்.
கலைஞரை எதிர்த்து கட்சி கண்ட ஈ.வெ.கி.சம்பத்தின் நெருங்கிய நண்பர் இவர் என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். தமிழ் தேசியக்கட்சி காங்கிரஸில் ஐக்கியமானபோது, காமராசரின் நவசக்தியில் சின்னக்குத்தூசியார் காரசாரமான தலையங்கங்கங்களை தீட்டிவந்தார். எத்தனையோ பத்திரிகைகளை இவரது எழுத்து அலங்கரித்து வந்தாலும், என்றுமே எதிலுமே கொள்கை சமரசம் செய்துக் கொண்டதேயில்லை.
திராவிட இயக்கத்தின் என்சைக்ளோபீடியாவாக வாழ்ந்துவந்த சின்னக்குத்தூசியார் நேற்றுடன் அழியாப்புகழ் பெற்று இயற்கையோடு கலந்திருக்கிறார். தமிழ் பத்திரிகையாளர்களுக்கு திராவிட இயக்கம் குறித்த எந்த ஐயம் ஏற்பட்டாலும், சின்னக்குத்தூசியாரை தொடர்பு கொள்ளலாம். இதைப்பற்றி அவருக்கு தெரியாததே இல்லை எனலாம். பகுத்தறிவு, சுயமரியாதை ஆகிய கொள்கைகளுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்தார். காலமெல்லாம் பார்ப்பனீயத்தை தீரத்தோடு எதிர்த்து வாழ்ந்த சின்னக்குத்தூசியார் பிறப்பால் பார்ப்பனர் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்.
அவரது இறுதிக்கால வாழ்வு பெரும்பாலும் நக்கீரன் ஆசிரியர் அண்ணாச்சியையே சார்ந்திருந்திருக்கிறது. தனக்கென குடும்பம் ஏற்படுத்திக் கொள்ளாத சின்னக்குத்தூசியாருக்கு சொந்த மகனாகவே அண்ணாச்சி செயல்பட்டிருக்கிறார். அவரது பூவுடல் கூட பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது அண்ணாச்சியின் நக்கீரன் அலுவலகத்தில்தான். அந்திமக் காரியங்களையும் அண்ணாச்சியே முன்நின்று செய்திருக்கிறார்.
“கலைஞர் என்ன செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்துப் பேசுவார்” என்று பா.ராகவன் அவரது அஞ்சலிக்குறிப்பில் எழுதியிருக்கிறார். முழுக்க முழுக்க இக்கருத்தில் இருந்து முரண்படுகிறேன்.
1992 பாபர் மசூடி இடிப்புக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக முரசொலியில் எதிர்த்து எழுதிவந்தார் சின்னக்குத்தூசியார். 1998 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., நான்கு எம்.பி.க்களோடு தமிழகத்தில் வலுவாக காலூன்றியது. அப்போதைய அரசியல் சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய அரசியலுக்காக பா.ஜ.க.வோடு சமரசம் செய்து, கூட்டணி வைத்துக்கொள்ளும் நிலையிலும் இருந்தது.
சின்னக்குத்தூசியாரை அழைத்த கலைஞர், இனி பா.ஜ.க. எதிர்ப்பு விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்கும்படி கேட்டுக் கொண்டார். அரசியல் கூட்டணிக்காக கொள்கைக்கு எதிராக செயல்படுவதில் தனக்கு விருப்பமில்லை என்று இவர் மறுப்பு தெரிவிக்க, கலைஞரின் குரலில் கடுமை கூடியது.
“உங்களுக்கு மட்டும்தான் தலையங்கம் எழுத வரும்னு இல்லே. நானே நல்லா எழுதுவேன். தெரியுமில்லே?”
“நான் எழுதறதைவிட நீங்க நல்லா எழுதுவீங்க, நிறைய பேர் படிப்பாங்கன்னும் எனக்கு தெரியும்” என்று சொல்லிவிட்டு, முரசொலியில் இருந்து மூட்டை கட்டியவர் சின்னக்குத்தூசியார். கழகம், பாஜகவோடு கூட்டணியில் இருந்தவரை திமுகவோடு, தனக்கு பெரிய இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டார்.
கொள்கைக்காக வாழ்வை தியாகம் செய்த இந்த மகத்தானவரை, திராவிட இயக்கத்தவன் ஒவ்வொருவனும் தன் நெஞ்சில் ஏற்றி வைத்து சுமக்க வேண்டும்.
21 மே, 2011
துரோகிகளும், தியாகிகளும்
1991 மே 22. அதிகாலை. ராஜீவ் கொல்லப்பட்ட செய்தி கிடைத்தது. பள்ளி விடுமுறை. குட்டிப்பையன் நான். மேல்சட்டையுடன், ஜட்டியை விட மேலான ஒரு டவுசர் மட்டுமே அணிந்திருந்த நான் ’ஆபத்து’ புரியாமல் குதூகலித்தேன். தேர்தல் நேரம். டீக்கடை வாசலில் அதிமுக-காங்கிரஸார் குவிந்து சோகமாகவும், விஷமமாகவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களை கண்டதுமே எனக்கு ஒருமாதிரியான வெறி. தூரத்தில் அவர்களைப் பார்த்து மோதிர விரலை நீட்டி, “போட்டுட்டோம் பார்த்தீங்கள்லே” என்று வெறுப்பேற்றி விட்டு வீட்டுக்கு ஓடினேன்.
பின் தொடர்ந்து ஓடி வந்த தொண்டர்களும், குண்டர்களும் வீட்டை சூறையாடி விட்டார்கள். எனது பெரியப்பாவின் மண்டை உடைந்தது. நல்ல வேளையாக எவருடைய உயிருக்கும் சேதாரமில்லை. தொடர்ந்த கலவரத்தால் எங்கள் ஊரிலிருந்த திமுகவினர் உடைமைகள் பறிபோயின. உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல். திமுகவினர் அதிகம் பேர் இருந்த பெரிய காய்கறி மார்க்கெட் ஒன்று எரிக்கப்பட்டது. பிரச்சாரத்துக்கு வைத்திருந்த அலங்கார வளைவுகள் தீவைக்கப்பட்டன. சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.
இது என்னுடைய சொந்த அனுபவம். தமிழகம் முழுக்க இதுதான் நிலைமை.
வட மாவட்டம் ஒன்றில் கட்சிக்கொடி கம்பத்தை வெட்ட வந்தவர்களிடம் இருந்து, கம்பத்தை காப்பாற்ற கட்டிப்பிடித்த தொண்டரின் கை வெட்டப்பட்டது. இதுமாதிரி நிறைய. எம்.ஜி.ஆர் மரணத்தின் போது ஏற்பட்ட வன்முறையை விடவும், மிக அதிகமான கொடூரமான வன்முறையை திமுகவினர் சந்தித்த தருணம் அது.
ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் என்பதாலேயே ஒரே நாளில் கொலைகாரர்கள் ஆனோம். கொலைப்பழியின் காரணமாக எங்கள் இயக்கம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அடுத்து வந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. திரும்பவும் ஐந்து ஆண்டுகள் கழிந்து ஆட்சிக்கு வந்தும் கொலைப்பழி தீரவில்லை. ஜெயின் கமிஷன் நெருப்பாற்றில் நீந்தி சமீபத்தில்தான் கரை சேர்ந்தோம்.
ஆனாலும் நாங்கள் துரோகிகள். 2009 மே மாதத்துக்குப் பிறகு அரசியல் பேச வந்து விட்டவர்கள் எல்லாம் தியாகிகள்.
இருபதாண்டுகளுக்கு முன்பு இதே நாளில், அதிமுக மற்றும் காங்கிரஸ் குண்டர்களால் வெறித்தனமாக தாக்கப்பட்டு உயிரையும், உடமையையும் இழந்த கழகத் தோழர்களுக்கு வீரவணக்கம்!
பின் தொடர்ந்து ஓடி வந்த தொண்டர்களும், குண்டர்களும் வீட்டை சூறையாடி விட்டார்கள். எனது பெரியப்பாவின் மண்டை உடைந்தது. நல்ல வேளையாக எவருடைய உயிருக்கும் சேதாரமில்லை. தொடர்ந்த கலவரத்தால் எங்கள் ஊரிலிருந்த திமுகவினர் உடைமைகள் பறிபோயின. உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல். திமுகவினர் அதிகம் பேர் இருந்த பெரிய காய்கறி மார்க்கெட் ஒன்று எரிக்கப்பட்டது. பிரச்சாரத்துக்கு வைத்திருந்த அலங்கார வளைவுகள் தீவைக்கப்பட்டன. சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.
இது என்னுடைய சொந்த அனுபவம். தமிழகம் முழுக்க இதுதான் நிலைமை.
வட மாவட்டம் ஒன்றில் கட்சிக்கொடி கம்பத்தை வெட்ட வந்தவர்களிடம் இருந்து, கம்பத்தை காப்பாற்ற கட்டிப்பிடித்த தொண்டரின் கை வெட்டப்பட்டது. இதுமாதிரி நிறைய. எம்.ஜி.ஆர் மரணத்தின் போது ஏற்பட்ட வன்முறையை விடவும், மிக அதிகமான கொடூரமான வன்முறையை திமுகவினர் சந்தித்த தருணம் அது.
ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் என்பதாலேயே ஒரே நாளில் கொலைகாரர்கள் ஆனோம். கொலைப்பழியின் காரணமாக எங்கள் இயக்கம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு அடுத்து வந்த தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. திரும்பவும் ஐந்து ஆண்டுகள் கழிந்து ஆட்சிக்கு வந்தும் கொலைப்பழி தீரவில்லை. ஜெயின் கமிஷன் நெருப்பாற்றில் நீந்தி சமீபத்தில்தான் கரை சேர்ந்தோம்.
ஆனாலும் நாங்கள் துரோகிகள். 2009 மே மாதத்துக்குப் பிறகு அரசியல் பேச வந்து விட்டவர்கள் எல்லாம் தியாகிகள்.
இருபதாண்டுகளுக்கு முன்பு இதே நாளில், அதிமுக மற்றும் காங்கிரஸ் குண்டர்களால் வெறித்தனமாக தாக்கப்பட்டு உயிரையும், உடமையையும் இழந்த கழகத் தோழர்களுக்கு வீரவணக்கம்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)