24 மார்ச், 2009

ஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள்!


துப்பாக்கி - அழகிகள் - நவீன கார் - மிடுக்கான ரீட் அண்டு டெய்லர் ஷூட் - வில்லன்கள் - ஆக்சன் - சேஸிங் - உலகத்தில் எது மாறினாலும் மாறுமே தவிர ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கான இந்த விஷயங்கள் மாறவே மாறாது. என்ன தற்கால நவீன ஜேம்ஸ் பாண்ட் செல்போன் பயன்படுத்துகிறார்.

ஸ்டார் வார்ஸ் திரைப்பட தொடர்களுக்கு அடுத்ததாக உலகில் மிகப்பிரபலமான திரைத்தொடராக ஜேம்ஸ்பாண்டு 007 திரைப்படத் தொடர்களை குறிப்பிடலாம். இயான் பிளெமிங் என்ற இங்கிலாந்து எழுத்தாளர் 1950களில் எழுதிய நாவல்கள் மற்றும் குறுநாவல்களே ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்களாக பரிணமித்திருக்கின்றன. 1962ல் தொடங்கிய ஜேம்ஸ்பாண்டின் திரைப்பட சகாப்தம் 2008 வரை 22 பிரம்மாண்ட படங்களாக வளர்ந்து நிற்கிறது.

வசூல் ரீதியாக பார்க்கப் போனால் இதுவரை வந்த 22 படங்கள் மூலமாக நான்கு பில்லியன்களுக்கு மேல் டாலர்களாக வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஹாரிபாட்டர் திரைப்பட வரிசை மட்டுமே இதைவிட அதிக வருவாயை ஈட்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இயான் ப்ளெமிங் எழுத ஆரம்பித்து ஜேம்ஸ்பாண்டு பிரபலமான பின்னர் 1954ல் தொலைக்காட்சி வடிவமாக கடைசியாக வெளிவந்த ஜேம்ஸ்பாண்டு படமான காசினோ ராயல் வெளியாகியது. அதன் பின்னர் ஜேம்ஸ் பாண்டை திரைக்கு கொண்டுவர பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் மெனக்கெட்டு பல தடைகளால் தள்ளிப்போடப்பட்டது. 1962ஆம் ஆண்டு வெற்றிகரமாக முதல் ஜேம்ஸ்பாண்டு திரைப்படமான டாக்டர் நோ வெளியாகி வசூலை வாரி குவித்தது. அன்றிலிருந்து இன்றுவரை ஜேம்ஸ்பாண்டு திரைப்படங்கள் கிறிஸ்துமஸ் மற்றும் கோடைவிடுமுறை நேரங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதுவரை ஜேம்ஸ்பாண்டு கதாபாத்திரத்தில் ஆறு பேர் நடித்திருக்கிறார்கள். சான்கானரி, ஜார்ஜ் லேசன்பி, ரோஜர் மூர், டிமோதி டால்டன், பியர்ஸ் பிராஸ்னன், டேனியல் க்ரேக் ஆகியோர் அவர்கள்.

ஒலிப்பதிவு மற்றும் விஷூவல் எஃபெக்ட்ஸ்க்கான அகாடமி விருதுகளை ஜேம்ஸ் பாண்டு திரைப்படங்கள் பெற்றதுண்டு.

ஜேம்ஸ் பாண்டு படங்களுக்கென பல சிறப்பு அம்சங்கள் உண்டு.

ஜேம்ஸ் பாண்டு கலக்கல் ம்யூசிக்கில் ஸ்டைலாக நடந்துவந்து திரையை சுட்டதும் திரை முழுவதும் ரத்தமயமாகி டைட்டில் வரும். ஒரு சில படங்களில் மட்டும் இந்த பாரம்பரியம் மிஸ்ஸிங்.

கதாநாயகியை முத்தமிடுவது அல்லது காதல்செய்வது எல்லா ஜேம்ஸ் பாண்ட் படங்களின் கடைசி ரீலில் இடம்பெறும். ஆன் ஹெர் மெஜஸ்டி சர்வீஸ் மற்றும் காசினோ ராயல் படங்களின் இறுதியில் மட்டும் இந்த சம்பிரதாயம் இருக்காது. காரணம் இரண்டு படங்களிலும் ஜேம்ஸின் காதலி கடைசி காட்சியில் உயிரோடு இருக்கமாட்டார்.

ஜேம்ஸின் பாஸான மிஸ் எம்மின் செக்ரட்டரி மனிபென்னி ஜேம்ஸ்பாண்டை ஒரு தலையாக காதலிப்பது எல்லா படங்களிலும் வரும் காட்சி. ஜேம்ஸ் ஏனோ அவரது காதலை நிராகரித்தே வருவார். முதல் படமான டாக்டர் நோ மற்றும் கடைசியாக வெளிவந்த காசினோ ராயல் இருபடங்களிலும் மனிபென்னி கதாபாத்திரம் இல்லவே இல்லை. மற்ற அனைத்துப் படங்களிலும் அந்த கதாபாத்திரம் கண்டிப்பாக ஜேம்ஸை காதலிக்கும்.

ஒவ்வொரு படத்துக்கும் ஜேம்ஸ் பாண்டுக்கு க்யூ பிராஞ்ச் வினோத அழிவு ஆயுதங்கள் உருவாக்கித் தருவது வாடிக்கை. அவற்றை வைத்து தான் தலைவர் க்ளைமேக்ஸில் எதிரிகளை ஒற்றை ஆளாய் அழித்தொழிப்பார்.

இன்று தமிழ்படங்களில் உச்சரிக்கப்படும் பஞ்ச் டயலாக்குகளுக்கெல்லாம் ஜேம்ஸ் படங்கள் தான் முன்னோடி. ஒவ்வொரு படத்துக்கும் ஒரு ஸ்பெஷல் பஞ்ச் டயலாக் இருக்கும். தலைவரின் அறிமுகக் காட்சியிலேயே அனாயசமாக ஒரு சாகஸத்தை நிகழ்த்திவிட்டு ஒரு பஞ்ச் டயலாக் அடிப்பார். ஜேம்ஸ்பாண்டு திரைப்பட வரிசையில் இரண்டே இரண்டு படங்கள் மட்டும் இந்த சம்பிரதாயத்துக்கு விதிவிலக்கு.

ஜேம்ஸ்பாண்டு பார்களுக்கு சென்றால் வோட்கா மார்டினி விரும்பி குடிப்பார். பார் டெண்டரிடம் "Shaken, not stirred" என்றும் சொல்வார். கோல்டன் ஐ திரைப்படத்தில் இது கொஞ்சமாக மாற்றப்பட்டு "Shaken, but not stirred" ஆனது. காசினோ ராயல் திரைப்படத்தில் பார்டெண்டர் ஜேம்ஸ்பாண்டை பார்த்து "Shaken or stirred?" என்று கேட்பதாக காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

ஜேம்ஸ் பாண்டு படங்கள் என்றாலே பெண்கள் வெகுபிரசித்தம். இவர் காப்பாற்றும் பெண்கள் இவரை காதலிப்பார்கள் அல்லது சக பெண் ஏஜெண்டுகள் இவரை காதலிப்பார்கள். அதுவும் இல்லையென்றால் வில்லனின் ஆசைநாயகிகளுக்கு ஜேம்ஸ் மீது காதல் வந்துவிடும். பெண்களே இல்லாமல் ஒரு ஜேம்ஸ் பாண்ட் படத்தை எடுப்பது நடக்காத காரியம்.

ஜேம்ஸ் பாண்டு படங்களில் அவருக்கு வழங்கப்படும் கார்கள் வெகுபிரசித்தம். நவீனவசதிகளோடு கூடிய அதிவேக கார்களை ஜேம்ஸ் பயன்படுத்துவார். படப்பிடிப்பு முடிந்ததும் அந்த கார்கள் பல மில்லியன் டாலர்களுக்கு ஏலத்துக்கு விடப்படும்.

எல்லா ஜேம்ஸ் படங்களிலும் அந்த படப் பெயர் ஒரு வசனத்திலாவது இடம் பெறும். உதாரணமாக சில....
Mr.Bond, You Only live Twice
You lived to Die Another Die.

மூவி டைட்டிலில் ஒரு பிரபலமான பாப் பாடகரின் பாடல் இடம் பெறும். அந்த பாடல் வரியிலும் பட பெயர் இடம் பெற்றிருக்கும். மடோனாவின் பாடல் Die Another Die படத்தை சிறப்பித்தது.

ஒரு சூதாட்ட காட்சியாவது 007 படங்களில் கண்டிப்பாக இடம் பெறும். அது என்ன ராசியோ தெரியவில்லை. பனி சறுக்கு காட்சிகளும் நிறைய படங்களில் வருவதுண்டு.

ஜேம்ஸாக நடிக்கும் நடிகர்களை எடுத்து கொண்டால், ஒருவரை விட்டு ஒருவர் தான் நிலையாக இருகின்றனர். கானரிக்கு பிறகு வந்த லெஸன்பி ஒரு படத்திலும், மூருக்கு பிறகு வந்த டிமோத்தி டால்டன் இரு படங்கள் மட்டுமே நடித்தனர். டானியல் கெரெக் தொடர்ந்து நிலைப்பாரா என்று பொறுத்து பார்ப்போம்

ஜேம்ஸின் உதவியாளராக, Money Penny என்று ஒரு பெண்மணி தோன்றுவார். பாண்டு தன் அலுவலகத்தில் நுழைந்த்தும், தன் தோப்பியை கழற்றி Stand-டை நோக்கி வீசுவது வாடிக்கை.


இதுவரை வெளிவந்த ஜேம்ஸ்பாண்ட் 007 திரைப்படங்கள் :


டாக்டர் நோ (1962)



ஃப்ரம் ருஷ்யா வித் லவ் (1963)



கோல்டுஃபிங்கர் (1964)



தண்டர்பால் (1965)



யூ ஒன்லி லைவ் ட்வைஸ் (1967)



ஆன் ஹெர் மெஜஸ்டிஸ் சீக்ரட் சர்வீஸ் (1969)



டயமண்ட்ஸ் ஆர் ஃபாரெவெர் (1971)



லைவ் அண்ட் லெட் டை (1973)



தி மேன் வித் தி கோல்டன் கன் (1974)



தி ஸ்பை ஹூ லவ்ட் மீ (1977)



மூன்ரேக்கர் (1979)



ஃபார் யுவர் ஐஸ் ஒன்லி (1981)



ஆக்டோபுஸ்ஸி (1983)



எ வ்யூ டூ கில் (1985)



தி லிவிங் டேலைட்ஸ் (1987)



லைசென்ஸ் டூ கில் (1989)



கோல்டன் ஐ (1995)



டுமாரோ நெவர் டைஸ் (1997)



தி வேர்டு இஸ் நாட் எனஃப் (1999)



டை அனதர் டே (2002)



கேசினோ ராயல் (2006)



குவாண்டம் ஆஃப் சோலஸ் (2008)
Font size



அடுத்து வர இருப்பது

பாண்ட் 23 (2011)

18 மார்ச், 2009

யாவரும் நலம்!


பிரசாந்த், மீனா நடித்த ‘ஷாக்’ என்ற திகில் படத்தை பார்த்தபோது முடிவுசெய்தேன். இனி தமிழில் தயாரிக்கப்படும் திகில் படங்களை பார்ப்பதில்லையென்று. நன்றாக இருக்கிறது, பயமாக இருக்கிறது என்றெல்லாம் நண்பர்கள் ஹைப் கொடுத்து தொலைத்ததால் யாவரும் நலம் பார்த்தே தீரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பேசாமல் பதினைந்து ரூபாய் கொடுத்து ‘ஆவிகளின் அலறல்’ டிவிடி வாங்கிப் பார்த்திருக்கலாம்.

மாதவன் குடும்பம் 13-பி என்ற பிளாட்டில் குடியேறுகிறது. அங்கே சில அமானுஷ்ய விவகாரங்களை மாதவன் மட்டும் உணர்கிறார். உதாரணத்துக்கு அங்கே இருக்கும் லிஃப்ட் மாதவனுக்கு மட்டும் வேலை செய்வதில்லை. பி.சி.ஸ்ரீராமின் கேமிரா ஒரு நூறுமுறையாவது லிஃப்ட் கேபிளை வெவ்வேறு ஆங்கிள்களில் காட்டியிருக்கும். இசை கூட பயமுறுத்த மறுக்கிறது என்பதுதான் கொடுமை.

இவர்கள் வீட்டு டிவியில் மட்டும் எடக்குமடக்கான ஒரு மெகாசீரியல். அந்த சீரியலில் வரும் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் இவர்கள் குடும்பத்தில் அப்பட்டமாக நடக்கிறது. டிவிக்கு ஆவி பிடித்திருக்கிறதாம். இண்டர்வெல் வரை இப்படியே ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். மாதவனுக்கு ஜோடி நீதுசந்திரா. படத்தில் எனக்கு இருந்த ஒரே எண்டெர்டெயிண்மெண்ட் இவர்தான். ஹோம்லி ஃபிகர். வாத்ஸ்யாயனர் எழுதிய சமையல் புத்தகம் ஒன்றை மனைவிக்கு பரிசளிக்கிறார் மாதவன். புத்தகத்தில் இருப்பது மாதிரி சிக்கன் சிக்ஸ்டி நைன் செய்யச்சொல்லி இரவுகளில் வற்புறுத்துகிறார். அடுத்த கமல்ஹாசன். மாதவன் ஜோடியின் அன்னியோநியத்தை இன்னும் நெருக்கமாக காட்டியிருக்கலாம். கொஞ்சம் ‘சீன்’ சேர்த்திருந்தால் மஜாவாக இருந்திருக்கக் கூடும்.

இண்டர்வெலுக்குப் பிறகு படம் கொஞ்சம் வேகம் எடுக்கிறது. 1977ல் நடந்த எட்டு கொலைகள். கொலையாளி யாரென்ற மர்ம முடிச்சு. கொலை செய்யப்பட்ட பெண் டிவி ஆவியாக வந்து கொலையாளியை பழிவாங்குவது என்று இரண்டாம் பாதியின் பரபரப்பு ஓக்கே. ஒரு ஆவி தன்னைக் கொல்லவந்தவனை 32 ஆண்டுகள் கழித்துதான் பழிவாங்க வேண்டுமா என்று லாஜிக்கலாக கேள்வி கேட்டுவிடக்கூடாது என்றே தியேட்டரில் டிக்கெட் கிழிப்பவர் படம் பார்க்க வருபவர்கள் காதில் வைத்துக்கொள்ள இரண்டு ரோஜாப்பூக்களை இலவசமாக கொடுக்கிறார். பிளாக் & ஒயிட் டோனிங்கில் அந்த 1977 பிளாஷ்ஃபேக் படமாக்கப்பட்ட விதம் அபாரம். இந்தப் படத்துக்கு 1977 நடந்தது என்ன? என்று பெயர் வைத்திருக்கலாம்.

பேயையே காட்டாத பேய் படம் என்பது ஒன்றுதான் இப்படத்தின் சிறப்பு. டீசண்டான மெகாசீரியல் என்று சொல்லலாம். விஜய் டிவியின் ’நடந்தது என்ன?’ கூட இப்படத்தை விட சிறப்பாக எடுக்கப்படும் தொடர். மைடியர் லிசா, ஆடிவெள்ளி படங்கள் கூட இதைவிட அதிக திகிலை தரும். இது பகுத்தறிவுக்கு எதிரான படம் என்று சொல்லி என் டவுசரை நானே கிழித்துக் கொள்ள விரும்பவில்லை. ஏனெனில் நாளை பகுத்தறிவு இயக்கத்தைச் சார்ந்தவரான இராம.நாராயணன் ‘அருந்ததி’ ரிலீஸ் செய்கிறார்.

யாவரும் நலம் - ஒரே ஒருமுறை பார்ப்பது நலம்!

17 மார்ச், 2009

தேர்தல் நிலவரம்!

தேர்தலில் எந்தெந்த கட்சி தேறும் என்பது இன்றுவரை தமிழகத்தில் தெளிவில்லாமல் இருக்கிறது. இப்போதைக்கு திமுக - காங்கிரஸ், அதிமுக - மதிமுக - கம்யூனிஸ்டுகள் என்ற அளவுக்கே கூட்டணி அமைந்திருக்கிறது. பாஜகவோடு, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, விஜய டி.ராஜேந்தரின் லட்சிய திமுக உள்ளிட்ட பெரிய கட்சிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை. தேமுதிக திமுக அணிக்கு வருவதற்கே வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது. எந்த அணி வெற்றிவாகை சூடும் என்று தெரியாததால் திரிசங்கு சொர்க்கத்தில் அள்ளாடுகிறது பாமக.

தேர்தல் ஓராண்டுக்கு முன்பாக நடந்திருக்குமேயானால் மிகத்தெளிவாக சொல்லிவிட்டிருக்கலாம் ரிசல்ட்டை. நாற்பதுக்கு ஜீரோ என்றளவில் திமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்திருக்கும். மின்வெட்டுப் பிரச்சினையை தட்டுத் தடுமாறி சமாளித்தது, வெள்ளமெனப் பாய்ந்த வெள்ள நிவாரணம், ஒரு ரூபாய்க்கு அரிசி, பெரியளவிலான இலவசடிவி, கேஸ் கனெக்‌ஷன் வினியோகம், ஐம்பது ரூபாய் மளிகைப்பொருட்கள், பொங்கலுக்கு பொங்கல் வைக்க இலவசப் பொருட்கள் என்று ஓட்டுக்களை குறிப்பார்த்து வீசப்பட்ட திட்டங்கள் திமுகவை கரையேற்றி இருக்கிறது. இன்றைய நிலையில் இருபதுக்கு இருபது என்றே இரு அணிகளுக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது.

பாமக, தேமுதிக கட்சிகள் சேரும் அணிகளைப் பொறுத்து ஐந்து முதல் பத்து தொகுதிகளில் ரிசல்ட் மாறலாம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெல்லும் என்பது போன்ற தோற்றம் இருந்தது. இப்போது அதே பிம்பம் திமுக மீது இருக்கிறது. சுலபமாக வெற்றியடைந்து விடுவோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் கோட்டை விட்டால் திமுகவின் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையே ஆட்டம் கண்டுவிடக்கூடிய சூழல் இருக்கிறது. பிரச்சாரத்தின் போது வழக்கமாக ஏதாவது மேஜிக் செய்வார் கலைஞர். இம்முறை என்ன செய்யப்போகிறார் என்று ஜெயலலிதா ஆவலாக காத்திருக்கிறார்.

பாமகவுக்கு கிட்டத்தட்ட பதிமூன்று தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கக்கூடிய சக்தி இருக்கிறது. ஆயினும் தனியாக நின்றால் நாற்பதில் நான்கில் கூட டெபாசிட்டை வாங்க முடியாது. பதிமூன்று தொகுதிகளில் பாமகவுக்கு இருக்கும் செல்வாக்கைப் போலவே விஜயகாந்துக்கு கிட்டத்தட்ட முப்பது தொகுதிகளில் செல்வாக்கு இருக்கிறது. எனவே இந்த இரண்டு கட்சிகளும் எடுக்கப்போகும் கூட்டணி நிலை தேர்தல் முடிவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். கூட்டணி பலமின்றி வெற்றிக்கனி பறிக்கும் நிலையை திமுகவும், அதிமுகவும் பத்தாண்டுகளுக்கு முன்பாகவே இழந்துவிட்டன.

கலைஞர் இரு நாட்களுக்கு முன்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறித்து கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஷயம். கொள்கை அடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகளுக்கும், திமுகவுக்கும் பெரியளவில் வேறுபாடு இல்லையென்று சொல்லியிருக்கிறார். சிறுத்தைகளுக்கு அரசியல் அரங்கில் கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக இதை எடுத்துக் கொள்ளலாம். தாங்கள் மட்டுமே கொள்கைக்குன்றுகள் என்று இதுவரை திமுகவினர் சொல்லிவந்த நிலை மாறியிருக்கிறது. சிறுத்தைகளுக்கு பலமான எதிர்காலம் இருப்பதை ஒருவேளை கலைஞர் கணித்திருக்கலாம். அதே நேரத்தில் காங்கிரஸின் எதிர்ப்பையும் மீறி சிறுத்தைகள் தங்கள் பக்கம் தான் என்பதை அழுத்தம் திருத்தமாக அவர் சொல்லியிருப்பதும் குறிப்பிடத் தகுந்தது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாக ஈழப்பிரச்சினை இத்தேர்தலில் பெரிய அலையாக இருக்கக்கூடும் என்று தமிழுணர்வாளர்கள் பேசிவந்தனர். தேதி அறிவிக்கப்பட்டதற்கு பின்பாக பார்க்கப்போனால் ஈழ உணர்வு எழுச்சியில் தேக்கம் ஏற்பட்டிருப்பதாகவே உணரமுடிகிறது. ஈழப்பிரச்சினையை அடிப்படையாக வைத்து போராட்டங்கள் நடத்திய இயக்கங்கள் மதிமுக, பாமக, சிறுத்தைகள் உள்ளிட்டவர்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டதுமே திமுக - அதிமுக என்று தேர்தல் கூட்டணிகளுக்கு முக்கியத்துவம் தந்து ஈழப்பிரச்சினையை பின்னுக்கு தள்ளியது இதற்கு ஒரு முக்கியக் காரணம்.

அதே நேரத்தில் தமிழிணையங்களில் ஈழம் தொடர்பாக கூறப்படும் அதீத எழுச்சியின் அளவினை என்னால் இங்கிருக்கும் மக்கள் மனங்களில் காண முடியவில்லை. காசிஆனந்தன் விகடன் பேட்டியில் சொல்லியிருப்பதைப் போன்று 83ஐ விட அதிகமான ஈழ ஆதரவு அலை இங்கே நிச்சயமாக இல்லை. இப்போதிருப்பது அனுதாபம் மட்டுமே. கடந்த சிலமாதங்களாக நேரடியான களப் போராட்டங்களிலும், கூட்டங்களிலும் கலந்துகொண்ட அனுபவத்தின் அடிப்படையிலேயே இதை தெளிவாக என்னால் உணரமுடிகிறது.

தமிழன் வாக்களிக்கும்போது தன்னுடைய வாய்க்கால், வரப்பு பிரச்சினைக்கு தான் முன்னுரிமை அளிக்கிறானே தவிர, வன்னிக்கு அல்ல. ஈழத்தமிழர் மீதான அனுதாபத்தை தாண்டி காங்கிரஸை புறக்கணிக்கிறோம், அதிமுகவை புறக்கணிக்கிறோம், திமுகவை புறக்கணிக்கிறோம் என்று தங்கள் கட்சி அபிமானங்களை விட்டுத்தர யாரும் தயாராக இல்லை. எனவே இத்தேர்தலிலும் ஈழம் ஓட்டுக்கான அரசியலாக இங்கே முன்னெடுத்துச் செல்லப்படவில்லை. ஒருவேளை பாமக, வி.சிறுத்தைகள், மதிமுக கட்சிகள் அணி அமைத்துப் போட்டிருந்தால் இது வாக்குக்கான பிரச்சினையாக முன்வைக்கப்பட்டிருக்கக் கூடிய சூழல் இருந்திருக்கும்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் ஐம்பது சதவிகிதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று வெல்ல முடிந்தது. இத்தேர்தலில் அப்படிப்பட்ட வெற்றியை பெறுவது அசாத்தியமானது. மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே எந்த அணியும் வெல்ல முடியும் என்ற நிலை இருக்கிறது. எந்த அலையோ, எந்தப் பிரச்சினையோ இல்லாமல் விளக்கெண்ணெய் மாதிரி வழ வழா கொழ கொழா என்று நடைபெறப் போகிற தேர்தல் இது. தேர்தல் பிரச்சாரம் தொடங்கியப் பிறகாவது நிலைமை சூடு பிடிக்கிறதா என்று பார்க்கலாம்.

நமீதா! - குளோஸ் அப் ஷாட்!




மும்பையில் பிறந்து வளர்ந்த கவர்ச்சி சுனாமி மீதாவின் பிறந்தநாள் மே 10 (வயது 26?). நமீதாவின் தந்தை பிரபல தொழிலதிபர். மீதாவின் பூர்விகம் மலையாளம் என்பது நிறைய பேருக்கு தெரியாது. ஸ்பெஷல் சேச்சி ட்ரேட்மார்க் அவரிடம் இருப்பதை கூர்ந்து பார்க்காமலேயே உணரலாம். குஜராத்தில் வளர்ந்தவர் அவர். தமிழில் ப்ரண்ட்ஸ் படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் சித்திக்கால் தென்னிந்தியாவில் பிரபலமானார். தமிழிலும் எங்கள் அண்ணா திரைப்படம் மூலமாக சித்திக்கே அவரை அறிமுகப்படுத்தினார்.


2001 மிஸ் இந்தியா போட்டியில் கலந்துகொண்டபோது மீதாவின் உயரம் 5'8", வயது 18, பலான பலான அளவு 32:24:35, எடை : 55 கிலோ. அந்தப் போட்டியில் அதிகபுள்ளிகளுடன் முதலிடம் பெற்றிருந்தபோதிலும், இறுதிச் சுற்றில் நடுவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க மொழிபெயர்ப்பாளரை பயன்படுத்தியதால் வெற்றிவாய்ப்பினை இழந்தார்.

மிஸ் இந்தியா போட்டியில் பங்குபெற்றதன் விளைவாக தெலுங்கு திரையுலகில் அதிரடியாக நுழைந்தார். அவர் நடித்த சொந்தம், ஜெமினி திரைப்படங்கள் வணிகரீதியிலாக பெரிய வெற்றி பெறாதபோதிலும் வசீகரிக்கவைக்கும் அவரது தோற்றத்தால் தெலுங்கு சினிமா ரசிகர்களை சுண்டி இழுத்தார். "ஏய்" படத்தின் "அர்ஜூனா, அர்ஜூனா" பாடல் மூலமாக தமிழ் ரசிகர்களையும் கிறங்கடித்தார். கன்னடத் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

மீதாவுக்கு பிடித்த வண்ணங்கள் கறுப்பு வெள்ளை. மீதாவை காதலிக்க விரும்புபவர்கள் ஒரு வெள்ளை ரோஜாவுடன் Propose செய்யலாம். வெள்ளை ரோஜா என்றால் அவருக்கு உயிர். ஓய்வு நேரங்களில் நீந்துவதும், பேட்மிண்டன் ஆடுவதும் அவரது பொழுதுபோக்கு. குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளிப்பதில் அலாதி விருப்பம் கொண்டவர் மீதா. சிட்னி ஷெல்டன் நாவல்களை வாசிப்பதில் அலாதி பிரியம் கொண்ட நமீதாவுக்கு ரொம்ப பிடித்தது படங்களோடு வரும் காமிக்ஸ் புத்தகங்கள். நந்திதா தாஸ், தபு போன்றவர்களின் நடிப்பை ரொம்பவும் ரசிப்பார். விலங்குகள் மற்றும் பறவைகள் மீது அன்பு செலுத்துவதில் அவர் இன்னொரு மேனகா காந்தி.

14 மார்ச், 2009

நமீதா செய்த மோசம்!


ச்சே.. வர வர நமீதாவைக் கூட நம்பமுடியவில்லை. ‘எங்கள் அண்ணா’விலிருந்து நமீதாவைக் காட்டிய ஒரு படத்தைக் கூட மிஸ் செய்ததில்லை. நமீதாவை சுற்றிக் காட்டவே டைரக்டருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் மூன்று, நான்கு மணி நேரங்கள் குறைந்தது ஆகுமென்றாலும் இரண்டரை மணி நேரத்தில் எப்படியோ சுருக்கி, அடக்கிக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் சில காலமாக நமீதா தோன்றும் படங்கள் படுமொக்கையாகவும், அப்படங்களில் இவருக்கு கோவணத்துண்டு அளவுக்கான வேடங்களும் மட்டுமே வழங்கப்பட்டு வருவது வேதனைக்குரியதாக இருக்கிறது. இப்படிப்பட்ட படங்களை (ஒரிஜினல்) புரட்சித்தலைவி நமீதாவும் ஒப்புக்கொள்வது வரலாற்று சோகம்.

சமீபத்தில் நமீதா வரிசையாக நடித்த அல்லது தெறமை காட்டிய மூன்று படங்கள் பெருமாள், தீ, 1977. நமீதாவின் ஹாட்ரிக் ஃபெய்லியர். மொக்கைப் படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்படுமேயானால் இந்த மூன்றுப் படங்களுமே கடுமையான போட்டியில் குதிக்கும். கடைசியாக 1977 படத்தின் டைரக்டர் தினேஷ்குமாருக்கே விருது கிடைக்கும்.


பெருமாள்

ஏற்கனவே இந்தப் படத்தை விமர்சித்திருப்பதாக நினைவு. பேரைப்போலவே படமும் படுமொக்கை. நமீதா என்ற கொட்டிக் கிடக்கும் அழகை நம்பாமல் ஒரு மொக்கை ஃபிகரை ஹீரோயினாக்கி இருக்கிறார்கள். சுந்தர் சி டைரக்ட் செய்தாலும் சரி, நடித்தாலும் சரி. படம் சூப்பர்ஹிட் தான் என்ற கோடம்பாக்கத்து செண்டிமெண்டை தகர்த்தெறிய வந்திருக்கும் படம்.

இந்தப் படத்தை பார்த்து இரண்டு வாரங்கள் கூட ஆகவில்லையென்றாலும் அதற்குள்ளாகவே கதையும், சதையும் சுத்தமாக மறந்துவிட்டது. படத்தின் டைரக்டர் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளக்கூட விரும்பவில்லை. பாடல்கள் மட்டும் சூப்பர்.


தீ

சன்பிக்சர்ஸின் அடாவடி டிரைலர்களைப் பார்த்ததுமே படம் பார்க்கவேண்டும் என்கிற தாகம் எல்லோருக்குமே ஏற்படுகிறது. ஜி.கிச்சா என்றொரு மேதாவி எடுத்திருக்கிறார். சத்தியமாகச் சொல்லுகிறேன். எனக்கெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பிளாக் எழுதித் தொலைத்துக் கொண்டிருக்கிறேன். மொக்கை பிளாக் எழுதுபவர்களை விட படுமொக்கையானவர் இந்த இயக்குனர்.

படத்தின் தீம் ஓக்கே. விஜயகாந்த் நடித்து ஷங்கர் இயக்கியிருந்தால் சக்கைப்போடு போட்டிருக்கக் கூடிய கதை. துரதிருஷ்டவசமாக கிச்சா இயக்கியிருக்கிறார். நமீதாவின் தொடைகளையும், இடுப்புக்கும் மேலும் கழுத்துக்கு கீழும் இருக்கும் பகுதிகளையும் நம்பியே படத்தின் முன்பாதி நகருகிறது. கா.. கா. கா.. பாட்டு மட்டும் விஷூவல் ட்ரீட். நமீதா ரொம்பவும் கஷ்டப்பட்டு வளைந்து, நெளிந்து, வளைத்து, குலுக்கி அசத்தியிருக்கிறார்.


1977

இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முதல்நாள் வேலைவிஷயமாக ஆல்பர்ட் தியேட்டர் போயிருந்தேன். தியேட்டர் நிர்வாகிகள் செம பிஸியாக இருந்தார்கள். விவரம் கேட்டபோது நாளைக்கு 1977 ரிலீஸ் ஆகிறது. படம் சூப்பர்ஹிட் ஆகும். ரிசர்வேஷன்லேயே பட்டையக் கெளப்புது என்றெல்லாம் சொன்னது படம் பார்க்கும் ஆவலைத் தூண்டியது.

மறுநாள் காலையில் ராஜ் டிவி பார்த்தபோது இப்படத்தின் இயக்குனர் தினேஷ்குமார் பேசிக்கொண்டிருந்தார். எம்.பி.ஏ படித்தவராம். ஹாலிவுட்டில் எப்படியெல்லாம் படமெடுக்கிறார்கள், நாம் ஏன் அதுபோலவெல்லாம் எடுக்கமுடியவில்லை என்றெல்லாம் நன்றாகவே பேசினார்.

இயக்குனருக்கு பேசமட்டுமே தெரியும் என்பது படம் பார்த்தால் தெரிகிறது. சரத்குமார் நடித்தப் படங்கள் 90 சதவிகிதமும் மொக்கை தானென்றாலும் அந்த மொக்கைகளுக்கெல்லாம் சிகரம் வைத்ததுபோல இப்படம் எவரெஸ்ட் மொக்கையாக அமைந்திருக்கிறது.

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் ஜேம்ஸ்பாண்டு ஹீரோவாக இருந்திருந்தால் எப்படியிருக்கும் என்று இயக்குனர் சிந்தித்து புளகாங்கிதப்பட்டு இப்படத்தை எடுத்திருக்கிறார். இயக்குனருக்கு இருந்த புல்லரிப்பும், புளகாங்கிதமும் ரசிகர்களுக்கு ஒரு காட்சியில் கூட ஏற்படுவது இல்லை. சில பேருக்கு வாந்தி தான் வந்தது.

சும்மா தொட்டுக்க நமீதா. வக்கீல் வேடமென்றதுமே ஏதோ கில்மாவாக இருக்கப் போகிறது என்று ஆவலோடு நிமிர்ந்து உட்கார்ந்தால் முதுகுவலி தான் மிச்சம். இப்படத்தின் ஒரே ஒரு ஆறுதல் படத்தின் நாயகியும் நமீதா ரேஞ்சுக்கு பப்ளிமாஸாக, ஃப்ரீக்காக இருப்பதுதான். 1977 படத்தை தினேஷ்குமார் எடுத்திருப்பதால் எம்.பி.ஏ. படித்தவர்களெல்லாம் படமே எடுக்கக் கூடாது என்று சட்டமே போடலாம்.