8 மே, 2014

தேர்தல் முடிவுகள்

நன்கு நினைவு தெரிந்தபிறகு முதலில் வந்த தேர்தல் முடிவுகள் எண்பத்தி ஒன்பதாம் ஆண்டு. தேதி கூட நினைவிருக்கிறது. ஜனவரி இருபத்தி இரண்டு. அன்று காலை சூளைமேட்டில் இருந்த பெரியப்பா ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்தோம். தீவிரமான திமுக எதிர்ப்பாளர். “காங்கிரஸ்தாண்டா வரப்போகுது” என்று வெறுப்பேற்றினார். “கடவுளே நினைச்சாலும் கலைஞர் வர்றதை தடுக்க முடியாது” என்று சவால் விட்டேன்.

சித்தி வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தோம். முன்னணிச் செய்திகள் வர ஆரம்பித்திருந்தன. ஆங்காங்கே இருவண்ணக் கொடியோடு திமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாக இனிப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள். ‘திமுக ஆட்சி அமைக்கிறது’ என்று மாலைமலரிலோ, மாலைமுரசிலோ தலைப்பிட்டு சிறப்பு பதிப்பு கடைகளில் தொங்கியது. தார் சாலைகளில் உதயசூரியன் சின்னத்தை பெயிண்டால் வரைந்து, திமுக அமோக வெற்றி என்று எழுதிக் கொண்டிருந்தார்கள்.

தொண்ணூற்றி ஒன்றாம் ஆண்டு முடிவுகள் தலைகீழ். ஒரு ஞாயிற்றுக்கிழமை ரிசல்ட் வந்ததாக நினைவு. அன்று நல்ல வெயில் அடித்தது. பதினோரு மணிக்கு மேலே வந்த தகவல்கள் சிலாக்கியமாக இல்லை. பானையில் இருந்து தண்ணீரை மொண்டு திரும்பத் திரும்ப குடித்துக்கொண்டே இருந்தேன். அவ்வளவு வயிற்றெரிச்சல். DMK LEADER M.KARUNANIDHI TRAILS IN HARBOUR CONSTITUENCY என்று தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தார்கள். “கட்சி காலி. இனிமே அவ்வளவுதான்” என்று கட்சிப்பெருசு ஒருவர் புலம்பிக் கொண்டே இருந்தார்.

தொண்ணூற்றி ஆறாம் ஆண்டு முடிவுகள் குறித்து பெரிய எதிர்ப்பார்ப்பு இல்லை. அதிமுக படுதோல்வி அடையுமென்று ஏற்கனவே தெரிந்திருந்தது. ஆனால் அக்கட்சியின் தலைவியே தோற்றுவிட்டார் என்பது திமுகவினருக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆனந்தம். மதியம் நண்பர்களோடு அறிவாலயத்தில் குழுமியிருந்தோம். பாராளுமன்றத் தேர்தலில் எல்லா தொகுதியுமே திமுக கூட்டணிக்கு. மைக்கில் ஒவ்வொரு தொகுதியாக அறிவித்துக் கொண்டிருந்தார்கள். ‘மதுரையில் மட்டும் சுப்பிரமணியசாமி கொஞ்சம் லீடிங்கில் இருக்கான்’ என்று மைக்கில் அறிவிப்பாளர் சொன்னதுமே, கூடியிருந்த தொண்டர்கள் கொந்தளித்தார்கள். சற்று நேரத்திலேயே அறிவிப்பு வந்தது. “தமாகாவோட ராம்பாபுதான் மதுரையில் லீடிங்”. ஆபிஸ் ரூமுக்கு போய் “தாம்பரம் என்ன நிலவரம்?” என்று திரும்பத் திரும்ப விசாரித்துக் கொண்டிருந்தேன். “இன்னும் செய்தி எதுவும் வரலைப்பா” என்று சலித்துக்கொண்டே சொன்னார்கள். எல்லா தொகுதி முடிவுகளும் தெரிந்து மறுநாள் விடிகாலைதான் தாம்பரம் முடிவு தெரிந்தது. அபாரமான வாக்கு வித்தியாசத்தில் (தொண்ணூறு ஆயிரம் என்று நினைவு) அண்ணன் மீ.அ.வைத்தியலிங்கம் வெற்றி கண்டிருந்தார். கண்டிப்பா மினிஸ்ட்ரி என்று ஆனந்தப்பட்டுக் கொண்டிருந்தோம். கலைஞர் ஏமாற்றி விட்டார்.

இரண்டாயிரத்து ஒன்று தேர்தல் முடிவுகளைதான் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. தமிழக மக்களுக்கு என்னதான் வளைத்து வளைத்து நன்மை செய்தாலும் நன்றி மறப்பார்கள் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லிக் காட்டிய தேர்தல் முடிவுகள்.

இரண்டாயிரத்து ஆறு பற்றி பெருசாக சொல்லிக்கொள்ள ஏதுமில்லை. கட்சி மீதிருந்த தீவிரமான அபிமானத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்திருந்த தொடக்கக் காலம். ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்தி இரண்டுக்கு பிறகு, மெஜாரிட்டி இல்லாத முதல் ஆட்சி. இரண்டாயிரத்து பதினொன்று முடிவுகள் கிட்டத்தட்ட இரண்டாயிரத்து ஒன்றையே மீண்டும் பிரதிபலித்தது.

தொண்ணூற்றி ஆறுக்கு பிறகு தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் ஒன்றாக நடந்ததே இல்லை. எனவே இரண்டரை மூன்று வருடத்துக்கு ஒருமுறை இங்கே தேர்தல் திருவிழா. இடையில் போனஸாக உள்ளாட்சித் தேர்தல் வேறு.

எப்போதுமே தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட இருபது நாட்கள் முடிவுக்காக காத்திருந்ததாக நினைவேயில்லை. இந்த தேர்தலில்தான் இப்படியொரு நீண்ட டென்ஷன். இந்த இடைவெளியில் என்ன எழுதுவது என்று தெரியாமல் பத்திரிகைகள் குழம்பிப்போய் நாடி ஜோசியம் பார்த்து கவர் ஸ்டோரி எழுதுகிறார்கள். மத்தியில் யார் பிரதமர் என்று தமிழகத்தின் பிரபலமான ஜோதிடர்களை விட்டு கணிக்கவைத்து ஒரு பத்திரிகை போஸ்டர் ஒட்டுகிறது. என்ன செய்வது பொழைப்பை பார்க்கணுமில்லே?

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு ப்ளாக்கில் நாம் எழுதியிருந்த கணிப்பு அப்படியே உல்டா ஆனது. ஆனால் முன்பாக இரண்டாயிரத்து ஒன்பது, இரண்டாயிரத்து ஆறு தேர்தல்களில் நம்முடைய கணிப்பு துல்லியமாக இருந்தது.

இந்த தேர்தல் எளிதாக கணிக்க முடியாத தேர்தல். திமுக அதிமுகவுக்கு மாற்றாக எண்பத்தி ஒன்பது தவிர்த்து கடந்த நாற்பத்தியேழு ஆண்டுகளில் பலமான மூன்றாவது சக்தி எழுந்ததாக தெரியவில்லை.

பாராளுமன்றத் தேர்தல் அறிவிப்புக்கு சில மாதங்கள் முன்பாகவே ‘ஜெயலலிதாதான் பிரதமர்’ என்று அதிமுகவினர் ஆரம்பித்துவிட்ட பஜனைக்கு மக்களிடம் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. உண்மையில் அதிமுக முப்பத்தி ஐந்து இடங்களை மிக சுலபமாக வெல்லக்கூடிய நிலையும் இருந்தது. கொஞ்சம் மெனக்கெட்டால் நாற்பதுக்கு நாற்பதை அள்ளியிருக்கலாம். ஏனெனில் கடந்த சட்டமன்றத் தோல்வி அதிர்ச்சியிலிருந்து திமுக அப்போதும் மீண்டிருக்கவில்லை. இந்த நிலைமையை அதிமுக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றுதான் இப்போது தோன்றுகிறது.

இம்முறை திமுகவின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டாலின்தான். உழைப்புக்கு அஞ்சாத அவரது பிரச்சார அணுகுமுறையால் கட்சி தாண்டிய இமேஜை மக்களிடம் பெற்றிருக்கிறார். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் இவரை முதல்வர் பதவிக்கு திமுக முன்னிறுத்துமானால் பழைய பிரும்மாண்ட வெற்றிகளை மீண்டும் ருசிக்க முடியும். ஆனால் திமுகவின் பழைய தலைகள் சிலரின் முகத்தை பார்த்தாலே ‘கட் ப்ளாஷ்பேக்கில்’ மக்கள் டென்ஷன் ஆகிறார்கள். ஸ்டாலின் தன்னந்தனியராக கட்சியை மீண்டும் களத்தில் கம்பீரமாக நிறுத்தியிருப்பதுதான் இத்தேர்தலில் திமுகவுக்கு கிடைத்திருக்கும் போனஸ்.

திமுக கிடையாது. அதிமுக சேர்த்துக்கொள்ளவில்லை. எதிர்ப்பார்த்த மாதிரி கூட்டணி அமைக்க முடியவில்லை என்று பாஜக ஆரம்பத்தில் தடுமாறினாலும், தேர்தலுக்கு சில நாட்கள் முன்பாக வலுவான ஒரு கூட்டணியை அமைத்து அசத்தியது. கிளியும் பூனையுமாக இருந்த பாமகவையும், தேமுதிகவையும் ஒரே அணியில் நிறுத்தியது மாபெரும் சாதனை. நமோ அலை இருக்கிறதோ, இல்லையோ தமிழகத்தில் ஏதாவது ஒரு கட்சியோடு கூட்டணி அமைத்து வெற்றி காண்பதற்காகவே பிறப்பெடுத்த கட்சிகள் அத்தனையையும் ஓரணியில் சேர்த்ததின் மூலம் இத்தேர்தலில் குறிப்பிடத்தக்க அதிர்வுகளை பாஜக ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் காங்கிரஸைப் பொறுத்தவரை இத்தேர்தலில் பிளாக் ஹார்ஸ் என்றே கருதுகிறேன். திராவிடக் கட்சிகள் மீது சலிப்பு; பாஜக மீது வெறுப்பு என்றிருக்கும் கணிசமான தமிழக வாக்காளர்களுக்கு ‘கை’யே கலங்கரை விளக்கம். ஆம் ஆத்மி பற்றிய அறிதல் மிகக்குறைவாக இருக்கும் மாநிலத்தில் இதுவொன்றும் அதிசயமான நிகழ்வல்ல. சில அற்புதங்களையும், ஆச்சரியங்களையும் காங்கிரஸ் இங்கே நடத்திக்காட்ட வாய்ப்பிருக்கிறது. கை வராவிட்டால் ஆண்டுக்கு நூறு நாள் வேலை திட்டம் செயல்படுத்தப்படாது என்று கிராமங்களில் செய்யப்பட்ட அண்டர்கரெண்ட் பிரச்சாரத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ்.

இடதுசாரிகளுக்கு இந்திய அளவில் தமிழகம் இப்போது சரியான பாதையை காட்டுமென்று தோன்றுகிறது. ஆயிரத்தி தொள்ளாயிரத்தி அறுபத்தி இரண்டில் சீனப்போரின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சி உடைந்து பல துண்டுகளாக சிதறியது. ஐம்பத்தி இரண்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் இப்போது கொள்கையளவில் வேறுபாடுகள் இல்லாத நிலையில் ஏன் இத்தனை கட்சிகளாக பிரிந்திருக்க வேண்டும் என்றே தெரியவில்லை. அதிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக்கட்சி அந்தஸ்தை கூட இழந்துவிடும் என்கிற நிலையில் வெகுஜன பொதுவுடைமைக் கட்சிகள் ஒரே கட்சியாக வலுவாக உருவெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் அவர்கள் பெறப்போகும் வாக்கு எதிர்காலத்தில் இந்திய அளவில் பல்வேறு தாக்கத்தை பொதுவுடைமைக் கட்சிகளிடம் ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கலாம்.

தேர்தலுக்கு பிறகு பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் நண்பர்களிடம் பேசி உணர்ந்ததில், நாற்பது தொகுதிகளில்...

அதிமுக பதினெட்டிலிருந்து இருபத்தைந்து இடங்களுக்குள் பெறலாம்.

திமுக கூட்டணி பத்திலிருந்து பதினைந்து இடங்கள் பெறலாம்.

பாஜக கூட்டணி மூன்றிலிருந்து எட்டு இடங்கள் பெறலாம்.

காங்கிரஸ் ஒன்றிலிருந்து மூன்று தொகுதிகள் வெல்லலாம்.

என்கிற கணிப்பு ஏற்பட்டிருக்கிறது.

நூற்றி நாற்பத்தி நான்கு உத்தரவு அதிமுகவுக்கு கடைசி இரண்டு நாட்களில் கை கொடுத்தது. பவர்ப்ளேவில் போடப்பட்ட எல்லா பந்துகளையும் சிக்ஸருக்கு விரட்டியிருக்கிறார் ஜெயலலிதா. இல்லாவிட்டால் திமுக கூட்டணி இன்னும் கூடுதலாக சில தொகுதிகள் வென்றிருக்க முடியும்.

பாஜக கூட்டணிக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் பட்சத்தில் அதிமுகவுக்கு எண்ணிக்கை குறையும்.

பாண்டிச்சேரி, கன்னியாகுமரி, தேனி ஆகிய தொகுதிகள் ‘கை’க்கு சாதகமாக இருக்கின்றன. தேனியில் திமுக, அதிமுக, மதிமுக என்று திராவிடக் கட்சிகள் மூன்றுமே சமபலத்தில் மோதுவதால் போட்டியின்றி காங்கிரஸ் முன்னணிக்கு வந்திருக்கிறது.

இத்தேர்தலில் குறிப்பிடத்தக்க லாபம் பெறப்போகும் கட்சிகள் பாமகவும், மதிமுகவும் என்று தோன்றுகிறது. அடித்துப் பிடித்து பதினான்கு தொகுதிகள் பெற்றிருந்தாலும், மாநிலம் முழுக்க அலைந்து திரிந்து பிரச்சாரம் செய்திருந்தாலும் கேப்டனுக்கு ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி தேறப்போவதில்லை.

டெல்லியில் ஆட்சியமைக்க தமிழகத்தை பிடித்து யாரும் தொங்கவேண்டிய கட்டாயம் தேர்தல் முடிவுகளில் தெரியாது என்று யூகிக்க தோன்றுகிறது.

அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின்தான் முதல்வர் என்கிற எண்ணம் திமுகவினரிடம் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் வலுவாக ஏற்பட்டிருக்கிறது.

மே பதினாறு வரை பொறுப்போம்.

17 கருத்துகள்:

  1. அதிமுக பதினெட்டிலிருந்து இருபத்தைந்து இடங்களுக்குள் பெறலாம்.

    திமுக கூட்டணி பத்திலிருந்து பதினைந்து இடங்கள் பெறலாம்.

    பாஜக கூட்டணி மூன்றிலிருந்து எட்டு இடங்கள் பெறலாம்.

    காங்கிரஸ் ஒன்றிலிருந்து மூன்று தொகுதிகள் வெல்லலாம்.

    என்கிற கணிப்பு ஏற்பட்டிருக்கிறது.- நிகழலாம்

    அடுத்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின்தான் முதல்வர் என்கிற எண்ணம் திமுகவினரிடம் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் வலுவாக ஏற்பட்டிருக்கிறது.
    - உண்மை

    பதிலளிநீக்கு
  2. நண்பரே திமுக கட்டாயமாக இருபத்து ஐந்து இடங்களில் வெல்லும்,
    அடுத்தது ஸ்டாலின் தான் முதல்வர்

    பதிலளிநீக்கு
  3. அப்பாடி இப்ப தான் உங்க கிட்ட இருந்து முதல் நடுநிலையான ஒரு கட்டுரை . வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  4. //தமிழகத்தில் காங்கிரஸைப் பொறுத்தவரை இத்தேர்தலில் பிளாக் ஹார்ஸ் என்றே கருதுகிறேன்// உங்க கருத்துல தீய வைக்க..

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா1:10 PM, மே 09, 2014

    ADMK used women to distribute money to families in villages. 80% of women who received money must have voted for ADMK. The minority votes in constituencies such as Theni and Ramnad are going to swing the balance in favor of congress. In Ramnad, in the five cornered contest, DMK seem to have lost the plot. They didn't appoint booth agents in many of the booths in Aranthangi. Thiruvadanai constituency has also voted significantly for congress. The result is going to be quite tight. Stalin has been accepted by DMK cadres as their leader. However, if DMK wins less than 10 seats, there will be a split in DMK. Whoever comes to power in center will help ADMK to carry out the operation. Stalin has an extremely challenging time ahead.

    பதிலளிநீக்கு
  6. நல்ல நடுநிலையான பதிவு (கொஞ்சம் இடைசெருகல்கள்களோடு).

    மிக முக்கியமாக எடுத்து கொள்ள வேண்டியது "டெல்லியில் ஆட்சியமைக்க தமிழகத்தை பிடித்து யாரும் தொங்கவேண்டிய கட்டாயம் தேர்தல் முடிவுகளில் தெரியாது என்று யூகிக்க தோன்றுகிறது."
    இது பிர மாநிலங்களிலும் நேருமானால் நன்று .

    பதிலளிநீக்கு
  7. தேனி தொகுதியில் ஆரூண்....டெபாசிட் வாங்கி சாதனை படைப்பார்....இதுதான் எதார்த்தம்...அ.இ.அ.தி.மு.க [ஸ் அப்பா எத்தனை எழுத்து] வெற்றிக்கனி பறிக்கும்...யுவா எங்க பய புள்ளங்கள பத்தி உங்களுக்கு தெரியாது,,எம்ஜி ஆர் வந்து சொன்னாகூட ரெட்ட எலைய தவிர வேர எதுக்கும் போடமாட்டான்...வாக்குகள் பிரிவது அ.இ.அ.தி.மு.க வுக்குதான் சாதகம்....பணப்பட்டுவாடா...சயண்டிஃபிக்காக நடந்தது

    பதிலளிநீக்கு
  8. when elections were nearing tide turned in favor of DMK , but i got shocked about money play . First news maid who comes to our house lives 3 streets near by said they got 200 from admk for eligible voters . I thought its normal , then 2 days back my friend who lives in an apartment @ sholinganallur told me that they got 200 . Money has played a lot during the final day and i feel it will change the result . Pravin kumar tells he knows which party has given money but he wont tell , this is like captains statement i have idea but i wont tell now .
    wrt congress they have good chances in sivaganga and ramnad . Where ever i saw wall paintings in sivaganga its mostly karti vs dmk , karti vs admk , i dint see h raja anywhere . As you said in village side they strongly projected MNREGA schema and stated like this "Symbol which gave 100 days employment is Hand , vote for it " . Congress is going to win atleast 2 seats and shock all parties in TN

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா6:19 PM, மே 09, 2014

    Stalin need to work really hard to keep the party big guns with him. He will miss Azhagiri. Azhagiri kept the DMK alive in the southern districts during the Vaiko split. Stalin is no match to Azhagiri in organization. Anyways, we need to wait and watch. As you have mentioned in this article, MDMK is possibly the major gainer in this election. Vaiko's master stroke was to use his Delhi contacts efficiently. His tireless campaign covering almost all villages in his constituency and his colleagues'. He also did something that he didn't do earlier. He requested his son, Tamilaruvi manian and team of educated youngsters to continuously campaign for him to keep the TOP spinning everywhere in his constituency. Where ever and when ever you go to Virudhunagar, some one was talking about MDMK and Vaiko. In addition, the caste equation is in his favour too. Overall, as I commented in one of your previous articles, ADMK will win maximum seats and the rest will be shared between DMK, BJP, MDMK and PMK. Congress might get a couple of seats. They will surely get good percentage of votes in Theni, Ramnad, Sivaganga, Tanjore and Kanyakumari. Most of the people predict a wash out for DMDK.

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா6:45 PM, மே 09, 2014

    DMK - 12 -16
    ADMK - 16 - 18
    BJP - 1 - 2
    TOUGH to decide - 4

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா11:22 AM, மே 10, 2014

    Tiruppiril kandipaaga murasu kottum since new face in Dmk, no support for Admk candidate from local heads like KAS, communist took away votes in Tiruppur 2 MLA constituencies.

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா9:00 AM, மே 11, 2014

    ELECTION RESULT

    DMK-3 (chennai central, tanjore)
    BJP-2 (dharmapuri,virudu nagar)
    CONG-1 (kanyakumari)
    ADMK-33

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா8:04 PM, மே 15, 2014

    அதிமுக 26
    திமுக 7
    பாஜக 4
    காங்கிரஸ் 2

    -Sekar-
    Others 1

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா1:28 AM, மே 17, 2014

    Expecting your response to election results

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லா11:40 PM, மே 20, 2014

    Great Predictions

    பதிலளிநீக்கு