ஒரு படைப்பாளிக்கு இருக்கும் மிகப்பெரிய சங்கடம் தன் படைப்பு சரியானதுதான் என்று நிரூபிக்க வேண்டிய நிலையே. யாரும், எதையும், யாருக்காகவும் நிரூபிக்க வேண்டியதில்லை. தன்னுடைய குறிப்பிட்ட ஒரு படைப்பின் நியாயத்தை, பரிணாமத்தை மற்றொருவருக்கு எடுத்துச் சொல்லிக் கொள்ளும் நிலையில் இருக்கும் படைப்பாளி, தனது அடுத்த படைப்புக்கான நேரத்தையும், உழைப்பையும் செலவழிக்கிறான், வீணடிக்கிறான்.
ஆசிரியன் செத்துவிடும் பின்நவீனத்துவ சூழலில் ஒரு படைப்பை வாசகனிடம் வைத்துவிட்டபின், அதை விமர்சிக்கும், நியாயப்படுத்தும் உரிமை வாசகனுக்கே உண்டு. ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டு படைப்பாளி வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். இல்லை நானும் வாசக மனோபாவத்தில் என் கருத்துகளை முன்வைக்கிறேன் என்று படைப்பாளி கிளம்பிவிட்டால், அவனது எதிர்கால படைப்புகளை எழுதுவது யார்?
எதையும் நிரூபிக்காமல் சும்மா இருப்பதே சுகம்.
ஒரு நெருங்கிய தோழருக்கு சொல்ல விரும்பிய அட்வைஸ். நேரில் சொல்ல தயக்கமாக இருப்பதால் பதிவு மூலம் சொல்கிறேன்.
9 செப்டம்பர், 2009
8 செப்டம்பர், 2009
“புதுவிசை” வாசகர் சந்திப்பு!

”புதுவிசை” காலாண்டிதழின் 25ஆவது இதழ் வெளியாகியுள்ளதையொட்டி “புதுவிசை” வாசகர் சந்திப்பு நிகழவிருக்கிறது.
இடம்: தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம், (எல்.எல்.ஏ கட்டிடம்), அண்ணா சாலை.
நாள் : 9 செப்டம்பர், 2009, புதன்கிழமை
பங்கேற்பு :
எழுத்தாளர் பிரபஞ்சன்
ஆய்வாளர் வ.கீதா
முனைவர் ஆம்ஸ்ட்ராங்
ஜி.செல்வா, இந்திய மாணவர் சங்கம்.
முனைவர் செ.ரவீந்திரன்
சுதிர் செந்தில், ’உயிர் எழுத்து’ ஆசிரியர்
கவிஞர் குட்டிரேவதி
ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச
“புதுவிசை” ஆசிரியர் குழுவிலிருந்து...
சம்பு
எஸ்.காமராஜ்
ந. பெரியசாமி
ஆதவன் தீட்சண்யா
வரவேற்பு
க.பிரகதீஸ்வரன்
தலைமை
பிரளயன்
நன்றியுரை
வா.அசோக் சிங்
அன்புடன் அழைக்கும்...
சென்னை கலைக்குழு - பூபாளம் புத்தகப் பண்ணை
அனைவரும் வருக!
7 செப்டம்பர், 2009
கர்ணன்!

சினிமா, சேட்டிலைட் தொலைக்காட்சி போன்ற வெகுஜன ஊடகங்களின் வீச்சு நாடகக்கலையின் தாக்கத்தை வெகுவாக குறைத்திருக்கும் சூழல் இன்று நிலவுகிறது. நாடக அரங்குகள் பெரும்பாலும் ஈ ஓட்டிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலையில் மீண்டும் நாடகக்கலையை மறுமலர்ச்சி அடையச்செய்ய பரவலான முயற்சிகள் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இத்தகைய ஒரு முயற்சிதான் அடவு அமைப்பு வழங்கும் ‘கர்ணன்’ ஒருநபர் நாடகம்.
வெகுஜன சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தாலும் அவ்வப்போது கலைசினிமாவுக்காக கைக்காசை செலவழிக்கும் நடிகர் நாசர் கர்ணனாக நடிக்கிறார். ஆண்டாண்டு காலமாக நம் நாட்டில் புனிதமாக்கப்பட்டிருக்கும் மகாபாரதத்தை இன்னொரு பரிணாமத்தில் கேள்விகளுக்கு உள்ளாக்குகிறார் இந்த நவீன கர்ணன். தொடக்கத்தில் ஒலிக்கப்படும் தற்கால போர் ஓலம், மகாபாரத போர் ஒலியோடு இணைவது அவல அழகியல். போர்க்களத்தில் துண்டு துண்டாக சிதறிக்கிடக்கும் மனித உறுப்புகளை கண்டு மனம் வெறுத்து கர்ணன் பேச ஆரம்பிக்கிறார். மனிதநேயத்தின் அவசியம் அவருடைய பேச்சின் அடிநாதம்.
“தந்திரத்தில் சிறந்தவர் சகுனி என்கிறார்களே? அப்படியென்றால் கண்ணனை என்ன சொல்ல?” என்று கேள்வி எழுப்புகிறார். துரியோதனனுக்கு நண்பனாக விதிக்கப்பட்டது தன்னுடைய விதி என்று நொந்துப்போகிறார். பாண்டவர்களின் மேன்மையையும், கவுரவர்களின் நயவசஞ்சகத்தையும் எடுத்துக்காட்ட பகடைக்காய் நான் தானா? என்று வியாசரையே சங்கடத்துக்கு உள்ளாக்குகிறார். பீஷ்மரில் தொடங்கி, தன் தாய் குந்திதேவி வரைக்கும் யாரையும் விடவில்லை இந்த கர்ணன். தன்னைப் போலவே ஒடுக்கப்பட்டவனாக, சக தோழனாக இவர் கருதுவது அரவானை மட்டுமே.
சுமார் நாற்பத்தைந்து நிமிடம் தொடர்ச்சியாக மிக நீண்ட வசனங்களை ஏற்ற இறக்கத்தோடு நல்ல உணர்ச்சி பாவத்தில், தெளிவாக உச்சரிக்கிறார் நாசர். அவருக்கு நடிக்க வருகிறது என்று சொல்லுவது, தேன் தித்திக்கிறது என்று சொல்லுவதற்கு ஒப்பானது. நல்ல நாடகக் கலைஞன் மேடையின் ஒவ்வொரு அங்குலத்தையும் தனது நடிப்புக்குப் பயன்படுத்திக் கொள்வான். நாசர் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு நொடியும் ஓயாமல் மேடையில் இங்கும், அங்கும் சுழன்றுக்கொண்டே இருக்கிறார்.
வசனங்களுக்கு ஏற்ப மாறும் ஒளி வண்ணங்களை மாற்றி மாற்றி வழங்குவது நல்ல சிந்தனை. நாடகங்களில் நடிப்பவர்கள் கடைசி வரிசை பார்வையாளனுக்கு கேட்கவேண்டுமே என்ற அக்கறையில் உரக்க பேசுவார்கள். இதனால் அவர்களது நடிப்பு சற்று மிகையாகத் தெரியும். தொழில்நுட்ப வளர்ச்சி கார்ட்லெஸ் மைக் மூலமாக இக்குறையை நிவர்த்தி செய்கிறது. நாசர் நின்று நிதானமாக, பதட்டப்படாமல் வசனங்களை பேச வகை செய்கிறது. கர்ணனின் தோற்றமே பார்வையாளனுக்கு பிரதானமாக தெரியும் வகையில் மேடைப்பின்னணி எளிமையாக வசீகரிக்கிறது. மொத்தத்தில் இன்றைய தொழில்நுட்பத்தை மிகச்சரியாக மேடைநாடகத்துக்கு பொருத்தியிருக்கிறார்கள். இந்நாடகத்தை தொலைக்காட்சியில் கண்டாலோ, வானொலியில் கேட்டாலோ கூட, மேடையில் பார்க்கும் அனுபவமும், பரவசமும் கிஞ்சித்தும் கிடைக்காது.
கே.எஸ்.கருணாபிரசாத் இயக்கியிருக்கும் இந்நாடகத்தின் முதல் நிகழ்வு சமீபத்தில் சென்னையில் நடந்தது. வித்தியாசமான, புதிய முயற்சியாக இருந்தாலும் அரங்கு நிறைந்தது ஆச்சரியமான மகிழ்ச்சி. இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்படும் பட்சத்தில் மீண்டும் மேடை நாடகம் மக்களிடையே வெற்றி வலம் வரக்கூடும்.
5 செப்டம்பர், 2009
உதிரத்துணி!
”இலங்கையில் தமிழர்களை சிங்களவர்கள் கொல்கிறார்கள்!” என்ற ஒற்றைவரியினை தவிர்த்து, ஈழப்பிரச்சினை குறித்த போதுமான அறிவும், தீவிரமான புரிதலும் இல்லாமலேயே முப்பது ஆண்டுகளாக உலகத் தமிழர்கள் உணர்ச்சிவசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சில வருடங்களாக இணையமும், புலம்பெயர் தமிழர்கள் எழுதும் சில புத்தகங்களும் ஓரளவுக்கு நடந்தவற்றையும், தற்போதைய நடப்பையும் தெளிவாக்கி வருகின்றன.
இலங்கையில் போலிசார் என்றாலே சிங்களவர்கள் மட்டுமே என்றுதான் இன்றுவரை கூட நினைத்துக் கொண்டிருக்கிறேன். பலாலி வங்கிக்கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்திய போலிசார் தமிழர்கள் என்றும், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களை அவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்தார்கள் என்பதை எல்லாம் வாசிக்கும்போது ஏற்படும் அதிர்ச்சிக்கு அளவேயில்லை.
புஷ்பராஜாவின் சகோதரி புஷ்பராணியை, ஷோபாசக்தி எடுத்திருக்கும் நேர்காணல் இச்சந்தர்ப்பத்தில் மிக முக்கியமானது.
“விசாரணை என்ற பெயரில் நான் உயிரோடு தூக்குக்கு அனுப்பப்பட்டேன். நான் பொதுவாக பாவாடை, சட்டை அணிவதுதான் வழக்கம். பொலிஸ் நிலையம் போவதற்காகத் தெரிந்த ஒருபெண்ணிடம் சேலை இரவல் வாங்கி உடுத்திப் போயிருந்தேன். விசாரணையின் ஆரம்பமே எனது சேலையை உரிந்தெடுத்ததில்தான் தொடங்கியது. மிருகத்தனமாக நான் தாக்கப்பட்டேன். தொடர்ந்து இருபத்துநான்கு மணிநேரம் வதைக்கப்பட்டேன். எனது அலறல் பொலிஸ் குவாட்டர்ஸ்வரை கேட்டதாகப் பிறகு சொன்னார்கள். கல்யாணியும் கைதுசெய்யப்பட்டுக் கொண்டுவரப்பட்டார். இரண்டு நாட்களில் தங்கமகேந்திரன், சந்திரமோகன் போன்றவர்களும் கைதுசெய்யப்பட்டார்கள்.
என்னை அடித்த தடிகள் என்கண் முன்னேயே தெறித்து விழுந்தன. நான் அரைநிர்வாணமாக அரைமயக்க நிலையில் கிடந்தேன். அடித்த அடியில் எனக்குத் உரிய நாளுக்கு முன்னமே மாதவிடாய் வந்துவிட்டது. வழிந்துகொண்டிருந்த உதிரத்தைத் தடுப்பதற்கு எந்த வழியுமில்லை. ஒரு பொலிஸ்காரர் அழுக்கால் தோய்ந்திருந்த ஒரு பழைய சாரத்தை என்னிடம் கொண்டுவந்து தந்தார். அதில் துண்டு கிழித்து நான் கட்டிக்கொண்டேன். கல்யாணி என்னிடம் அந்தத் துணியைப் பத்திரமாக வைத்திருக்குமாறும் தனக்கு மாதவிலக்கு வரும்போது அது தேவைப்படும் என்றும் கேட்டுக்கொண்டார். அந்தத் துணியைத் துவைத்துத்தான் பின்பு கல்யாணி உபயோகிக்க வேண்டியிருந்தது.”
ஏராளமான அதிர்வுகளையும், கேள்விப்பட்டிராத பல தகவல்களையும் ஒருங்கே கொண்டது அந்நேர்காணல். முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்!
இலங்கையில் போலிசார் என்றாலே சிங்களவர்கள் மட்டுமே என்றுதான் இன்றுவரை கூட நினைத்துக் கொண்டிருக்கிறேன். பலாலி வங்கிக்கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்திய போலிசார் தமிழர்கள் என்றும், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களை அவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்தார்கள் என்பதை எல்லாம் வாசிக்கும்போது ஏற்படும் அதிர்ச்சிக்கு அளவேயில்லை.
புஷ்பராஜாவின் சகோதரி புஷ்பராணியை, ஷோபாசக்தி எடுத்திருக்கும் நேர்காணல் இச்சந்தர்ப்பத்தில் மிக முக்கியமானது.
“விசாரணை என்ற பெயரில் நான் உயிரோடு தூக்குக்கு அனுப்பப்பட்டேன். நான் பொதுவாக பாவாடை, சட்டை அணிவதுதான் வழக்கம். பொலிஸ் நிலையம் போவதற்காகத் தெரிந்த ஒருபெண்ணிடம் சேலை இரவல் வாங்கி உடுத்திப் போயிருந்தேன். விசாரணையின் ஆரம்பமே எனது சேலையை உரிந்தெடுத்ததில்தான் தொடங்கியது. மிருகத்தனமாக நான் தாக்கப்பட்டேன். தொடர்ந்து இருபத்துநான்கு மணிநேரம் வதைக்கப்பட்டேன். எனது அலறல் பொலிஸ் குவாட்டர்ஸ்வரை கேட்டதாகப் பிறகு சொன்னார்கள். கல்யாணியும் கைதுசெய்யப்பட்டுக் கொண்டுவரப்பட்டார். இரண்டு நாட்களில் தங்கமகேந்திரன், சந்திரமோகன் போன்றவர்களும் கைதுசெய்யப்பட்டார்கள்.
என்னை அடித்த தடிகள் என்கண் முன்னேயே தெறித்து விழுந்தன. நான் அரைநிர்வாணமாக அரைமயக்க நிலையில் கிடந்தேன். அடித்த அடியில் எனக்குத் உரிய நாளுக்கு முன்னமே மாதவிடாய் வந்துவிட்டது. வழிந்துகொண்டிருந்த உதிரத்தைத் தடுப்பதற்கு எந்த வழியுமில்லை. ஒரு பொலிஸ்காரர் அழுக்கால் தோய்ந்திருந்த ஒரு பழைய சாரத்தை என்னிடம் கொண்டுவந்து தந்தார். அதில் துண்டு கிழித்து நான் கட்டிக்கொண்டேன். கல்யாணி என்னிடம் அந்தத் துணியைப் பத்திரமாக வைத்திருக்குமாறும் தனக்கு மாதவிலக்கு வரும்போது அது தேவைப்படும் என்றும் கேட்டுக்கொண்டார். அந்தத் துணியைத் துவைத்துத்தான் பின்பு கல்யாணி உபயோகிக்க வேண்டியிருந்தது.”
ஏராளமான அதிர்வுகளையும், கேள்விப்பட்டிராத பல தகவல்களையும் ஒருங்கே கொண்டது அந்நேர்காணல். முழுமையாக வாசிக்க இங்கே சொடுக்கவும்!
3 செப்டம்பர், 2009
சைபர் க்ரைம்!
வலைப்பதிவொன்றினில் சைபர் கிரிமினலான போலி டோண்டு என்பவருக்கும், எனக்கும் தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. போலி டோண்டுவோடு எனக்கு எந்த ஸ்நானப்ராப்தியும் இல்லையென்று எனது ஏழேமுக்கால் லட்சம் வாசகர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
யுவகிருஷ்ணா
அன்புடன்
யுவகிருஷ்ணா
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)