3 ஜூன், 2013

வரலாறே வாழ்க

அஞ்சுகம்மாள் ஈன்ற திருமகன்
அசுரர்குல தலைவன்
ஆரிய கொட்டம்
அடக்கப் பிறந்தவன்
அண்ணாவின் தம்பி
அன்புத்தம்பிகளுக்கு அண்ணன்
திராவிட தங்கம்
தினவெடுத்த சிங்கம்
கன்னித் தமிழ்த்தாய்க்கு
செம்மொழி ஆடை போர்த்தியவன்
ஏழைகளின் ஏந்தல்
அவன் தமிழ் காந்தல்
சாதி இழிவுக்கு
சாவுமணி அடிப்பவன்
உழைப்பாளரின் உடன்பிறப்பே
வஞ்சகத்தை வீழ்த்தி
வசவாளவர் வயிறெரிய
வரலாறே இன்னுமொரு நூற்றாண்டு
வாழ்க... வாழ்க...

6 கருத்துகள்:

  1. வாழ்க... வாழ்க...
    வாழ்தப்பட்டவரும் வாழ்தியவரும் வாழ்க

    பதிலளிநீக்கு
  2. நம்மை, தமிழினத்தை வாழ வைத்துக்கொண்டிருக்கும் கலைஞரை வாழ்த்தியதின் வாயிலாக ஒரு எழுத்தாளர் நல்ல கவிஞராகி உள்ளார். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. உலகமறிய நெஞ்சுக்கு நீதி தந்து உன்னிலை அறிய வைத்தாய்
    " தமிழில் தேன் நீ"

    உயிரோவியக் கவிதைத் தந்தாய்
    உணர்வால் கட்டிப்போட்டாய்
    உள்ளத்தால் உன்னை தொடரச் செய்தாய்

    கலைஞரின் மருமகன் செல்வத்திடம் எனக்கு நெருங்கிய பழக்கம் (கல்லூரியில் முதல் ஆண்டிலிருந்து (புதுக் கல்லூரி, லயோலாகல்லூரி,சட்டக்கல்லூரி) சட்டப் படிப்பு வரை தொடர்ந்து என்னோடு படித்தவர் ) நானும் அவரோடு முரசொலி அலுவலகம் செல்வதுண்டு . கலைஞரின் நேரம் போதாமையால் முரசொலி பத்திரிக்கையில் வர தினமும் தம்பிக்கு எழுதும் உடன்பிறப்புக்குக் கடிதமும் கட்டுரையும் கடைசி நேரத்தில் வரும் .அதில் ஒரு அடித்தல் ,திருத்தல் இருக்காது .அதே நிலை இப்பொழுதும்.இதைக் காண வியக்காதவர்கள் யாருமில்லை
    - முகம்மது அலி

    பதிலளிநீக்கு
  4. அருமையான கவிதை, வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. ஆரிய கொட்டம்
    அடக்கப் பிறந்தவன் --- Yuva sir, I liked these lines........Very True

    பதிலளிநீக்கு