இணையத்தில் இயங்குபவர்களுக்கு ரொம்ப நாளாகவே நன்கு அறிமுகமான படம். கேபிள் சங்கர் என்கிற பெயரில் இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் நாராயண் வலைப்பதிவு எழுதுபவர் என்பதால் வலைப்பதிவர்களிடையே பெருத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம். ‘ழ’ புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.ஆர்.பி. செந்திலும், ஓ.ஆர்.பி.ராஜாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
பாடல்கள் ஏற்கனவே இணையத்தில் ஹிட். எல்லா பாடல்களையுமே அப்துல்லா பாடியிருக்கிறார். “கிழிப்பேண்டா. உன் தொண்டையை கிழிப்பேண்டா” என்று ஓபனிங் பாடலிலேயே எக்குத்தப்பான வாய்ஸில் எகிறியிருக்கிறார். பாடல்களை எழுதியவர் மணிஜி. பாடல்களில் சாராய நெடி அதிகமா காமநெடி அதிகமா என்று லியோனி பட்டிமன்றம் வைக்கலாம்.
இயக்குனர்கள் வழக்கமாக தொடமறுக்கும் கதைக்களன் இது. பிட்டு பட இயக்குனர்கள் மட்டுமே இம்மாதிரி ஃப்ளாட்டை யோசிக்க முடியும். சொர்க்கம் என்பது ஹீரோயினின் பெயர். ஹீரோ எதிர்த்த ஃப்ளாட் இளைஞன். ஹீரோயினை விட பத்து வயது குறைந்தவன். கட்டழகன். எப்படியாவது ஆண்டியை கவிழ்த்து விட வேண்டும் என்று ஏகப்பட்ட தகிடுதத்தம் செய்கிறான். ஒரு கட்டத்தில் ஹீரோயினும் ஹீரோவுக்கு மசிகிறமாதிரி சூழல் அமைகிறது. இதற்கு ஹீரோயினின் கணவன் முட்டுக்கட்டை போடுகிறான். கடைசியிலாவது ஹீரோவுக்கு சொர்க்கம் கிட்டியதா என்பதே கதை.
இந்தப் பாத்திரத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் மறுத்துவிட்டதால், கேபிள் சங்கரே ஹீரோவாக நடித்திருக்கிறார். 55 வயதாகும் கேபிள் சங்கர், 20 வயது இளைஞனின் பாத்திரத்தை அனாயசமாக அடித்து நொறுக்கியிருக்கிறார். 55 வயதில் உலகம் சுற்றும் வாலிபனாக நடித்த எம்.ஜி.ஆரே செய்யமுடியாத சாதனை இது. பாடிலேங்குவேஜில் பின்னி பெடலெடுத்திருக்கிறார் கேபிள் சங்கர். குறிப்பாக “நான் யூத்துடா.. மத்தவெனெல்லாம் ங்கொய்ய்ய்..” என்று பஞ்ச் வசனம் பேசும் காட்சியில் அவரது கைகள் கரகாட்டம் ஆடியிருக்கிறது. கால்கள் கம்பு சுத்துகிறது.
14 வயதான ஹீரோயின் நிரிஷா, 30 வயது கதாபாத்திரத்தில் தைரியமாக ஆண்டியாக நடித்திருக்கிறார். ஆனால் ஹீரோவுக்கும், ஹீரோயினுக்குமான ஜோடி பொருத்தம்தான் இடிக்கிறது. சிங்கம் எலியோடு ஜோடி போட்டுப் போவதைபோல. பாடல் காட்சிகளில் ஹீரோவின் ரொமாண்டிக் குளோஷப் ஷாட்டுகள் ரசிகர்களை கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.
பட பூஜையின் போது வசனகர்த்தாவாக ஊன்னாதான்னா என்கிற உண்மைத்தமிழன் பெயர் போட்டு விளம்பரம் வந்தது. அவர் எழுதிக் கொடுத்த வசனங்களின் படி படமெடுத்தால், அது ஏழு வருடத்துக்கு தொடர்ச்சியாக சன் டிவியில் மெகா தொடராக வருமென்ற கட்டாயத்தால் வசனகர்த்தா மாற்றப்பட்டார். ஜாக்கிசேகர் வசனம் எழுதியிருக்கிறார். வசனங்கள் எதுவுமே முழுமையாக புரியாத வண்ணம் அடிக்கடி ங்கொய்ய்ய்.. சவுண்டு வந்து எரிச்சலூட்டுகிறது. ராட்டினத்தில் சுற்றப்போகும் ஹீரோயினிடம், காதலோடு சொல்கிறார் கேபிள் சங்கர் ‘சுத்து பத்திரம்’. இந்த வசனத்தில் வசனகர்த்தா ஏதேனும் எழுத்துப் பிழை செய்துவிட்டாரா அல்லது பத்திரமாக சுற்றச் சொல்கிறாரா என்ற குழப்பம் ஏற்படுகிறது. ஹீரோயின் ஹீரோவைப் பார்த்து ‘ஒத்துப்போ’ என்று சொல்லும்போது விடலைகள் விசில் அடிக்கிறார்கள். இங்கேயும் ஜாக்கிசேகர் ஏதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்திருப்பார் போலிருக்கிறது. க்ளைமேக்ஸில் வில்லனைப் பார்த்து ஹீரோ மனோகரா பாணியில் ஐந்து நிமிட வசனத்தை ஒரே ஷாட்டில் பேசியிருக்கிறார். துரதிருஷ்டவசமாக சர்ச்சைக்குரிய வசனங்களை ‘ங்கொய்ய்ய்..’ செய்யச் சொல்லி சென்ஸார் வற்புறுத்தியதால், அந்த ஐந்து நிமிட வசனங்கள் மொத்தமும் ‘ங்கொய்ய்ய்..’ ஆகிவிட்டது.
ஆதிதாமிராவின் கேமிராவுக்கு நல்ல சதையுணர்ச்சி. ஹீரோவின் தொப்பையையும், ஹீரோயின் தொப்புளையும் அழகுற படமெடுத்திருக்கிறார்.
படத்தின் பெரிய மைனஸ் என்னவென்றால் ஹீரோ ஹீரோயின் நெருக்கம்தான். நாயக்கர் மகால் தூண் மாதிரியிருக்கும் ஹீரோவை ஹீரோயினால் முழுமையாக கட்டியணைக்க முடியவில்லை. அதுபோலவே திரைக்கதை அங்கங்கே முட்டிக்கொண்டு நிற்கிறது. ஜாக்கிசேகரின் வசனங்களை முழுமையாக சென்ஸார் இடம்பெறச் செய்யாததாலும் படத்தின் கதை என்னவென்றே புரியாமலும் முன்சீட்டில் தலையை முட்டிக்க வேண்டியிருக்கிறது.
சொர்க்கம் – சுகிக்கவில்லை, சகிக்கவுமில்லை