மசாலா மிக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மசாலா மிக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3 ஆகஸ்ட், 2011

சொர்க்கம்!

இணையத்தில் இயங்குபவர்களுக்கு ரொம்ப நாளாகவே நன்கு அறிமுகமான படம். கேபிள் சங்கர் என்கிற பெயரில் இப்படத்தின் இயக்குனர் ஷங்கர் நாராயண் வலைப்பதிவு எழுதுபவர் என்பதால் வலைப்பதிவர்களிடையே பெருத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம். புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.ஆர்.பி. செந்திலும், ஓ.ஆர்.பி.ராஜாவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

பாடல்கள் ஏற்கனவே இணையத்தில் ஹிட். எல்லா பாடல்களையுமே அப்துல்லா பாடியிருக்கிறார். “கிழிப்பேண்டா. உன் தொண்டையை கிழிப்பேண்டாஎன்று ஓபனிங் பாடலிலேயே எக்குத்தப்பான வாய்ஸில் எகிறியிருக்கிறார். பாடல்களை எழுதியவர் மணிஜி. பாடல்களில் சாராய நெடி அதிகமா காமநெடி அதிகமா என்று லியோனி பட்டிமன்றம் வைக்கலாம்.

இயக்குனர்கள் வழக்கமாக தொடமறுக்கும் கதைக்களன் இது. பிட்டு பட இயக்குனர்கள் மட்டுமே இம்மாதிரி ஃப்ளாட்டை யோசிக்க முடியும். சொர்க்கம் என்பது ஹீரோயினின் பெயர். ஹீரோ எதிர்த்த ஃப்ளாட் இளைஞன். ஹீரோயினை விட பத்து வயது குறைந்தவன். கட்டழகன். எப்படியாவது ஆண்டியை கவிழ்த்து விட வேண்டும் என்று ஏகப்பட்ட தகிடுதத்தம் செய்கிறான். ஒரு கட்டத்தில் ஹீரோயினும் ஹீரோவுக்கு மசிகிறமாதிரி சூழல் அமைகிறது. இதற்கு ஹீரோயினின் கணவன் முட்டுக்கட்டை போடுகிறான். கடைசியிலாவது ஹீரோவுக்கு சொர்க்கம் கிட்டியதா என்பதே கதை.

இந்தப் பாத்திரத்தில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் மறுத்துவிட்டதால், கேபிள் சங்கரே ஹீரோவாக நடித்திருக்கிறார். 55 வயதாகும் கேபிள் சங்கர், 20 வயது இளைஞனின் பாத்திரத்தை அனாயசமாக அடித்து நொறுக்கியிருக்கிறார். 55 வயதில் உலகம் சுற்றும் வாலிபனாக நடித்த எம்.ஜி.ஆரே செய்யமுடியாத சாதனை இது. பாடிலேங்குவேஜில் பின்னி பெடலெடுத்திருக்கிறார் கேபிள் சங்கர். குறிப்பாக “நான் யூத்துடா.. மத்தவெனெல்லாம் ங்கொய்ய்ய்..என்று பஞ்ச் வசனம் பேசும் காட்சியில் அவரது கைகள் கரகாட்டம் ஆடியிருக்கிறது. கால்கள் கம்பு சுத்துகிறது.

14 வயதான ஹீரோயின் நிரிஷா, 30 வயது கதாபாத்திரத்தில் தைரியமாக ஆண்டியாக நடித்திருக்கிறார். ஆனால் ஹீரோவுக்கும், ஹீரோயினுக்குமான ஜோடி பொருத்தம்தான் இடிக்கிறது. சிங்கம் எலியோடு ஜோடி போட்டுப் போவதைபோல. பாடல் காட்சிகளில் ஹீரோவின் ரொமாண்டிக் குளோஷப் ஷாட்டுகள் ரசிகர்களை கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.

பட பூஜையின் போது வசனகர்த்தாவாக ஊன்னாதான்னா என்கிற உண்மைத்தமிழன் பெயர் போட்டு விளம்பரம் வந்தது. அவர் எழுதிக் கொடுத்த வசனங்களின் படி படமெடுத்தால், அது ஏழு வருடத்துக்கு தொடர்ச்சியாக சன் டிவியில் மெகா தொடராக வருமென்ற கட்டாயத்தால் வசனகர்த்தா மாற்றப்பட்டார். ஜாக்கிசேகர் வசனம் எழுதியிருக்கிறார். வசனங்கள் எதுவுமே முழுமையாக புரியாத வண்ணம் அடிக்கடி ங்கொய்ய்ய்.. சவுண்டு வந்து எரிச்சலூட்டுகிறது. ராட்டினத்தில் சுற்றப்போகும் ஹீரோயினிடம், காதலோடு சொல்கிறார் கேபிள் சங்கர் ‘சுத்து பத்திரம்’. இந்த வசனத்தில் வசனகர்த்தா ஏதேனும் எழுத்துப் பிழை செய்துவிட்டாரா அல்லது பத்திரமாக சுற்றச் சொல்கிறாரா என்ற குழப்பம் ஏற்படுகிறது. ஹீரோயின் ஹீரோவைப் பார்த்து ‘ஒத்துப்போஎன்று சொல்லும்போது விடலைகள் விசில் அடிக்கிறார்கள். இங்கேயும் ஜாக்கிசேகர் ஏதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்திருப்பார் போலிருக்கிறது. க்ளைமேக்ஸில் வில்லனைப் பார்த்து ஹீரோ மனோகரா பாணியில் ஐந்து நிமிட வசனத்தை ஒரே ஷாட்டில் பேசியிருக்கிறார். துரதிருஷ்டவசமாக சர்ச்சைக்குரிய வசனங்களை ங்கொய்ய்ய்..செய்யச் சொல்லி சென்ஸார் வற்புறுத்தியதால், அந்த ஐந்து நிமிட வசனங்கள் மொத்தமும் ங்கொய்ய்ய்..ஆகிவிட்டது.

ஆதிதாமிராவின் கேமிராவுக்கு நல்ல சதையுணர்ச்சி. ஹீரோவின் தொப்பையையும், ஹீரோயின் தொப்புளையும் அழகுற படமெடுத்திருக்கிறார்.

படத்தின் பெரிய மைனஸ் என்னவென்றால் ஹீரோ ஹீரோயின் நெருக்கம்தான். நாயக்கர் மகால் தூண் மாதிரியிருக்கும் ஹீரோவை ஹீரோயினால் முழுமையாக கட்டியணைக்க முடியவில்லை. அதுபோலவே திரைக்கதை அங்கங்கே முட்டிக்கொண்டு நிற்கிறது. ஜாக்கிசேகரின் வசனங்களை முழுமையாக சென்ஸார் இடம்பெறச் செய்யாததாலும் படத்தின் கதை என்னவென்றே புரியாமலும் முன்சீட்டில் தலையை முட்டிக்க வேண்டியிருக்கிறது.

சொர்க்கம் – சுகிக்கவில்லை, சகிக்கவுமில்லை

5 மே, 2011

உலகின் முதல் அஜால்-குஜால் 3டி படம்!

ஒரு காலத்தில் தமிழ்ப்புத்தாண்டாக இருந்த தினம் ஏப்ரல் 14. அபூர்வ சகோதரர்கள் மாதிரியான படங்கள் கோடைவிடுமுறையை குறிவைத்து கச்சிதமாக வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்களை குஷிப்படுத்தியது. அந்த காலம் எல்லாம் போயே போச்சு. போன வருடம் சுறா, இந்த வருடம் மாப்பிள்ளை. இப்படியாகத்தான் இருக்கிறது தமிழக சினிமாவின் ஏப்ரல் 14 நிலைமை.

இந்த ஏப்ரல் 14 அன்று, விடுமுறை தினக் கொண்டாட்டம் ஹாங்காங், தென்கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் களை கட்டியது. ‘பெருசுகள்’ பலரும் ஒரு வாரமாக ஊன், உறக்கமின்றி திரையரங்கு வாசல்களில், தேருக்கு வடம் பிடித்து நின்றது மாதிரி உலக்கைகளாக தவமிருந்தார்கள். இளசுகளுக்கும் உற்சாகம்தான். பின்னே? காணாத காட்சியெல்லாம் காணப்போகிறார்களே? உலகின் முதல் அஜால் குஜால் 3டி படம் வெளியாகிறதே? காமவெறியோடு கூட்டம் கும்பலாக கும்மியது. படத்தின் ‘உச்சக்கட்ட’ காட்சி முடிந்துவிட்ட பின்னரும் கூட, தியேட்டரில் அமர்ந்திருந்த பெருசுகள் சிலையாய் சமைந்திருந்தார்களாம். அடுத்தக் காட்சிக்கும் இவர்களே போய் டிக்கெட் வாங்க வரிசையில் நிற்க, முதன்முறையாய் தரிசனத்துக்கு வந்தவர்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் போக, மூன்றாவது உலகப்போரையே ஏற்படுத்திவிடக் கூடிய கலவர உணர்வு, இந்த ஏரியாக்களில் பரவியிருக்கிறது.

அந்தப் படம் ‘செக்ஸ் அண்ட் ஸென் : எக்ஸ்ட்ரீம் எக்ஸ்டஸி’. ஸ்டீபன் ஷியூ என்பவர் 1991ல் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிய திரைப்படம் ‘செக்ஸ் அண்ட் ஸென்’. ஹாங்காங் குஜால் படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய திரைப்படமாக அந்தப் படம் சாதனையை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதையே 20 ஆண்டுகள் கழித்து 3டி வடிவில் தயாரித்து, வயோதிக வாலிப அன்பர்களை குஷிப்படுத்த நினைத்தார் ஷியூ. ‘தி கார்நர் ப்ரேயர் மேட்’ என்கிற சீன செவ்விலக்கியத்தை (நம்ம வாத்ஸ்யாயனரின் காமசூத்ரா மாதிரி என்று தோன்றுகிறது) தழுவி இதன் திரைச்சதை எழுதப்பட்டிருக்கிறது. திரை முழுக்க பிட்டு என்பதால் படம் சூப்பர் ஹிட்டு. ஹாங்காங்கில் அவதார் திரைப்படம் செய்த வசூல்சாதனையை இப்படம் அனாயசமாக சுக்குநூறாக்கியிருக்கிறது.

ஒரு சாமானிய பிட்டு பட ரசிகன், பானு தியேட்டரில் காட்டப்படும்.. வீடியோவிலிருந்து ஃபிலிமுக்கு மாற்றிய தேய்ந்த பிட்டிலேயே ஜென்மசாபல்யம் அடைந்துவிடுகிறான். தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்தே இந்த சமூகத்தின் தலைவிதி இதுதான். இவனைப்போன்ற ரசிகனின் ரசிப்புத்தன்மையை மேம்படுத்தும் பொருட்டே, அதிசமீப தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 3டியில் கிட்டத்தட்ட நிஜ அனுபவத்தையும், உயர்வகை கிளர்ச்சியையும் தந்தாக வேண்டும் என்கிற உயரிய லட்சியத்தில் இருந்திருக்கிறார் ஷியூ. இப்படியொரு ‘ஐடியா’ தோன்றியதற்காகவே ஷியூவின் காலைப்பிடித்தாவது, அவரை இந்தியாவுக்கு வரவழைத்து படம் எடுக்கச் சொல்லலாம்.

பிட்டுபட பிதாமகனான இத்தாலிய இயக்குனர் டிண்டோபிராஸ், நடக்கும் நடப்புகளை உன்னிப்பாக கவனித்து வருகிறார். 1979ல் அவர் இயக்கிய ‘கேலிகுலா’ உலகின் தலைசிறந்த மேட்டர் படங்களில் ஒன்றாக இன்றுவரை அஜால்குஜால் ரசிகர்களால் மதிப்பிடப்படுகிறது. அத்திரைப்படத்தை 3டியில் மறு உருவாக்கம் செய்து கல்லா கட்ட நினைப்பதாக தன்னுடைய விருப்பத்தை டிண்டோபிராஸ் வெளிப்படுத்தியிருக்கிறார்.

சீனாவில் ஏற்கனவே ஜனத்தொகை அதிகம். இப்படத்தை வெளியிட்டுவிட்டால், அடுத்த பத்து மாதங்களில் ஜனத்தொகை இரட்டிப்பு ஆகிவிடக்கூடிய வாய்ப்பும், ஆபத்தும் ஏற்பட்டது. எனவே சீன அரசாங்கம் மெயிண்லேண்ட் சைனாவில் தடை விதித்து விட்டது.

வெறும் பிட்டுப்படம் இத்தகைய வரலாற்றுச் சாதனைகளை செய்யுமா என்று கேட்டால், வேறு ஒரு வெயிட்டான ‘மேட்டரும்’ படத்தில் இருப்பதாக செப்புகிறார்கள். ‘டைட்டானிக்’ காதலையே, ஓர் இஞ்ச் கேப்பில் முந்தியடித்துவிட்டதாம் இப்படத்தின் காதல். ‘காதலுக்கு காமமே தேவையில்லை’ என்பதுதான் படம் சொல்ல வரும் மெசேஜ். இந்த மெசேஜைதான் படம் முழுக்க காமத்தைக் கொட்டோ கொட்டுவென்று கொட்டி சொல்லியிருக்கிறார்கள், முள்ளை முள்ளால் எடுப்பது மாதிரி.

நாயகன் அரசகுலத்தைச் சார்ந்தவன். வாழ்க்கை என்பது மிகக்குறுகியது. இந்த குறுகியக் காலக்கட்டத்துக்குள் உடல் ஆசையின் உன்னத நிலையை அடைந்துவிட வேண்டும் என்கிற வேட்கையில் வாழ்ந்து வருபவன். ஒரு சாமியாரின் பெண்ணை கண்டவுடனேயே காதல்வசப்படுகிறான் (கவனிக்கவும், காமவசமல்ல). சாமியாரின் பெண் வாரத்துக்கு ஏழு நாளும் ராகவேந்திரருக்கு விரதம் இருப்பாள் போலிருக்கிறது. எனவே நாயகனின் அந்தரங்கத் தேவைகளை ஈடு செய்ய அவளால் இயலாது. காதல் வென்றதா, காமம் வென்றதா என்பதை 3டி கண்ணாடி போட்டுக்கொண்டு, துட்டு இருப்பவர்கள் ஐமேக்ஸிலும், துட்டில்லாதவர்கள் ஜோதி தியேட்டரிலும் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

இந்தியாவுக்கு இப்படம் வரும் மார்க்கமே கண்ணுக்கு எட்டிய தூரம் வரை புலப்படவில்லை. இப்படியொரு உயர்ந்த முயற்சி நம் அண்டை நாட்டில் நடந்திருக்கிறது. அங்கிருக்கும் திரை ரசிகர்கள் இதனால் பன்மடங்கு உத்வேகம் அடைந்திருக்கிறார்கள். இந்தியர்கள் மட்டும் இப்படிப்பட்ட அற்புத அனுபவத்தை இழக்கலாமா? எப்படிப்பட்ட ஓரவஞ்சனை இது. ஊழலுக்கெல்லாம் உண்ணாவிரதம் இருப்பவர்கள், நமது அடிப்படை உரிமைகளுக்கும் போராட்டம் நடத்த முன்வர வேண்டும். ‘செக்ஸ் அண்ட் ஸென் : எக்ஸ்ட்ரீம் எக்ஸ்டஸி’ என்கிற செவ்வியல் காவியத்தை இந்திய ரசிகர்களுக்கு வழங்கக்கோரி, மெழுகுவர்த்தி ஏந்தி தணிக்கத்துறை அலுவலகங்கள் முன்பு மாபெரும் அறப்போராட்டம் நடத்தவேணுமாய், சக பிட்டுப்பட ரசிகர்களை கோருகிறேன். இப்போராட்டம் நம்முடைய சுயநலம் சார்ந்ததல்ல. நூற்றி பத்து கோடி இந்தியர்களின் அடிப்படை உரிமை அடிப்படையிலானது என்றும் சுட்டிக் காட்டுகிறேன்.

குறைந்தபட்சம், நம்முடைய தலைவர் சாருநிவேதிதா அவர்களையாவது ஹாங்காங்குக்கு அரசு செலவில் அனுப்பிவைத்து, பார்த்து ரசிக்கவைத்து, இப்படத்தைப் பற்றி உயிர்மையில் விமர்சனமாவது எழுதவைக்க மன்மோகன்சிங் அரசாங்கம் முயற்சிகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.

ஒருவேளை அரசு இப்படத்தை இந்தியாவில் அனுமதித்து விட்டாலும், ஒரு சிறு அச்சம். ‘மை டியர் குட்டிச்சாத்தானை’ 3டியில் பார்த்தே, கோன் ஐஸை பிடுங்க திரைக்கு முன்னால் கைநீட்டிய பிக்காரி கூட்டம் நம் கூட்டம். எக்கச்சக்கமான நாட்டுக்கட்டை சதைகளை 3டியில் பார்த்துவிட்டால், திரையரங்குகளின் திரை என்ன கதிக்கு ஆளாகுமோ என்றும் யோசிக்க வேண்டியிருக்கிறது.


இப்போதைக்கு கீழே இருக்கும் படத்தை, 3டியாக நினைத்துக்கொண்டு, உற்று உற்றுப் பார்த்து நம்மை நாமே தேற்றிக் கொள்ள வேண்டியதுதான்!



27 செப்டம்பர், 2010

தளபதி - பர்ஸ்ட் டே, பர்ஸ்ட் ஷோ!

அரைடவுசர் போட்டுக் கொண்டிருந்த காலமது. கமல் ரசிகன் என்று வெளிப்படையாக அறிவித்துக் கொண்டு, ரஜினி ரசிகர்களோடு மூர்க்கமாக மோதிக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த தீபாவளிக்கு என்னுடைய பர்ஸ்ட் சாய்ஸாக 'தளபதி' தானிருந்தது என்பதை பத்தொன்பது ஆண்டு கழித்து இப்போது வெளிப்படையாக லஜ்ஜையின்றி தெரிவிக்கிறேன். இப்போது எந்திரனுக்கு இருக்கும் ஹைப்பையும், அப்போதைய தளபதிக்கு இருந்த ஹைப்பையும் ஒப்பீடு செய்துப் பார்க்கும்போது, ஏனோ எந்திரனை 'தளபதி'யே வெல்கிறார்.

பி.பி.எல். சான்யோவில் 'ராக்கம்மா கையத் தட்டுவை' எத்தனைமுறை ரீவைண்ட் செய்து கேட்டிருப்பேன் என்பதற்கு கணக்கேயில்லை. தளபதியோடு வெளியான 'குணா'வில் துரதிருஷ்டவசமாக 'கண்மனி' மட்டும்தான் சூப்பர்ஹிட்டு. மாறாக தளபதியில் ஒவ்வொரு பாட்டும் மெகாஹிட்டு. இளையராஜா கமலுக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்று நொந்துகொண்டேன். அப்போதெல்லாம் தீபாவளிக்கு தீபாவளி ரஜினி-கமல் அட்டகாசம் நிச்சயம். நாயகன் - மனிதன், வெற்றிவிழா - மாப்பிள்ளை, தளபதி - குணா, பாண்டியன் - தேவர்மகன்,  குருதிப்புனல் - முத்து என்று சிலவருட போட்டிகள் நினைவில் நிற்கிறது. போதாதற்கு விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக் படங்களும் ரேஸூக்கு உண்டு.

அபூர்வசகோதரர்கள், மைக்கேல் மதனகாமராஜன் என்று காமெடி கமர்ஷியல் ரூட்டில் போய்க்கொண்டிருந்த கமலுக்கு, பழைய குருடி கதவைத் திறடியென, 91ஆம் ஆண்டு திடீரென்று 'வித்தியாச' மோகம் பொத்துக்கொண்டு வந்துவிட்டிருக்க வேண்டும். 'குணா' படத்தின் ஸ்டில்கள் அவ்வளவாக கவரவில்லை. மாறாக 'தளபதி' கலக்கிக் கொண்டிருந்தார். கேசட் கவரில் (லஹரி கேசட்?) அச்சடிக்கப்பட்டிருந்த ரஜினியின் 'சைட் போஸ்' ஸ்டில் இன்றும் மறக்க முடியாதது. கிளாஸ் ரூமில் செந்தில்தான் கமலை காரணம் காட்டி என்னை வெறுப்பேற்றிக் கொண்டிருப்பான். கமல் ஏன் தான் போயும் போயும் பைத்தியக்காரனாக நடிக்கிறாரோ என்று நொந்துப் போயிருந்தேன்.

எப்படியும் செந்தில் முதல்நாளே தளபதியை பார்த்துவிட்டு, கிளாஸுக்கு வந்து திரைக்கதை சொல்லிக் கொண்டிருப்பான். நாம் 'குணா'வைப் பார்க்காவிட்டால் தலைவருக்கு எவ்வளவு கேவலம் என்று மனச்சாட்சி உறுத்தியது. துரதிருஷ்டவசமாக அந்தக் காலத்தில் என்னைச் சுற்றி இருந்த எல்லோரும் ரஜினி ரசிகர்களாக இருந்து தொலைத்தார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 'ஒலியும், ஒளியும்' பார்க்கும்போது நான் பட்டபாடு இருக்கிறதே? உஸ்ஸப்பா...

பாடல்காட்சிகளில் கமல் கொஞ்சம் தாராளம், ஏதோ ஒரு பாட்டில் ஜட்டி போட்டுக் கொண்டு நீச்சல் குளத்தில் குளிப்பார். ரஜினியோ உடைவிஷயத்திலும் சரி, ஹீரோயினை காதலிக்கும் விஷயத்திலும் சரி. அநியாயத்துக்கு மிலிட்டரி கண்ணியம். இந்த 'பெண்' சகவாசத்தாலேயே கமலுக்கு கெட்டவன் என்ற இமேஜ் பெண்களிடமும் ஏறிவிட்டிருந்தது. இந்த இமேஜ் லாஜிக்படி பார்த்தால் கமலின் ரசிகனும் கெட்டவனாக, ஆம்பளை லோலாயியாக, இந்த எழவெடுத்த சமூகத்தில் பார்க்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. 

இந்த ரசிகமனோபாவ லாஜிக்கில் இன்னொரு குளறுபடி ஒன்றினையும் நான் அப்போது கண்டுபிடித்திருந்தேன். எம்.ஜி.ஆரை ரசித்தவர்கள் நிறையபேர் கமலை ரசித்தார்கள். சிவாஜியை ரசித்தவர்கள் ரஜினி ரசிகர்களாக இருந்தார்கள். ஆக்சுவலாக, இது உல்டாவாக இருந்திருக்க வேண்டும். ஆனால் ஏனோ தலைகீழாக இருந்ததை பெரும்பாலான ரசிகர்களிடம் அறிவியல்பூர்வமாக இல்லாமல் வாய்வழியாக எடுத்த ஒரு கணக்கெடுப்பில் உணரமுடிந்தது.

எங்கள் வீட்டிலேயே எனக்கு ஒரு ஜென்மவிரோதி இருந்தாள். என்னுடைய தங்கை. ஜோதி தியேட்டரில் வெளியான எல்லா ரஜினி படத்தையும் வெளியான ரெண்டு நாளிலேயே அப்பா அவளை அழைத்துப்போய் காட்டிவிடுவார். நான் மட்டும்தான் அனாதை. நானாகவே முயற்சி எடுத்துப் போய் கமலை திரையில் பார்த்தால்தான் உண்டு. (அப்பா எம்.ஜி.ஆர். வெறியர் என்றாலும், அரசியல் காரணங்களால் சிவாஜி ரசிகராக கன்வெர்ட் ஆகி பத்தாண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தது. எனவே சிவாஜி - ரஜினி என்ற தொடர்ச்சியான ரசிக மனோபாவம்). பிற்பாடு தளபதி பார்த்துவிட்டு அப்பா அடித்த கமெண்ட் "ஒவ்வொரு ஃபிரேமுக்கும் கலக்கியிருக்காண்டா. சிவாஜியை மிஞ்சிட்டான்!"

ஆன்லைன் புக்கிங்கெல்லாம் எதிர்காலத்தில் நடக்குமென்ற சாத்தியத்தையே திரையரங்குகள் அறியாத தீபாவளி அது. மூன்று நாட்களுக்கு முன்பாக ரிசர்வேஷன் தொடங்கும். என் பிரெண்டு (கம்) பங்காளி ஒருவனோடு உதயம் காம்ப்ளக்ஸுக்கு சைக்கிளில் போயிருந்தேன். அவனுக்கு தளபதி, எனக்கு குணாவென்று ஒப்பந்தம். கையில் தாராளமாக 50 ரூபாய் இருந்தது. பால்கனி டிக்கெட்டே பண்ணிரண்டோ, பதினைந்தோ என்பதாக நினைவு (உதயத்தில் அப்போது பால்கனி இருந்தது).

வளாகம் முழுக்க மனிதத்தலைகள். 'தளபதி' ஸ்டில் அச்சடிக்கப்பட்ட டி-ஷர்ட்டுகளில் ரஜினி ரசிகர்கள் வளைய வந்து கொண்டிருந்தார்கள். 'குணா' டிஷர்ட் எங்கேயாவது கிடைக்குமாவென்று விசாரிக்க வேண்டுமென முடிவெடுத்துக் கொண்டேன். இடதுபுறம் (பெட்ரோல் பங்கையொட்டி) ரஜினியின் கம்பீர மெகா கட்டவுட். வலதுபுறம் சன்னியாசி வேடத்தில் கமல் கட்டவுட், அய்யகோ. முகப்பில் ஆங்காங்கே கிடைத்த இடத்தில் சிறிய அளவுகளில் விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக்குக்கு எல்லாம் குட்டி குட்டி கட்டவுட். ரிலீஸ் தேதியன்று ரஜினி-கமல் கட்டவுட் இருதரப்பு ரசிகர்கள் மோதலால் இங்கேதான் எரிந்தது.

மடிப்பாக்கம் தவிர்த்த வெளியுலகில் ரஜினியின் நிஜமான மாஸை நான் நேரில் பார்த்த நாள் அதுதான். பத்து மணி ரிசர்வேஷனுக்கு எட்டு மணிக்கு போயிருந்தோம். எங்களுக்கு முன்பாக வரிசையில் குறைந்தபட்சம் 750 பேராவது நின்றிருந்தார்கள். ரிசர்வேஷன் கவுண்டரையே திறக்காமல், ரிசர்வேஷன் சார்ட்டில் முதல் நான்கு நாட்களுக்கு அனைத்து காட்சிகளும் 'ஹவுஸ்ஃபுல்' போட்டிருந்தார்கள். சந்திரனில் வெளியாகிய 'குணா'வுக்கு பெரிய வரவேற்பில்லை. அந்த கவுண்டர் ஓரளவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான கூட்டம்தான். தளபதி டிக்கெட் கிடைக்க வாய்ப்பேயில்லை என்று தெரிந்ததும் பங்காளி நொந்துப்போனான். இதனால் எனக்கும் 'குணா'வை ரிசர்வ் செய்யும் எண்ணம் போய்விட்டது. ஏற்கனவே பெரியதாக ஆர்வம் இல்லை என்பதும் வேறொரு காரணம்.

தீபாவளி அன்று காலையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தேன். செந்தில் அண்ணா ப்ரெஷ்ஷாக சைக்கிளில் வந்தார். "குமாரு காலையில் 9 மணி ஷோ ஆல்பட்லே தளபதி இருக்கு. வர்றியா?" மனசுக்குள் சந்தோஷம். இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், "குணா இருந்தா சொல்லுண்ணா" என்று பிகு செய்தேன். செந்தில் அண்ணா கொஞ்சம் வித்தியாசமானவர். இன்றுவரை நான் பார்த்த மனிதர்களில் அவர் ஒருவர்தான் ஜெய்சங்கருக்கு தீவிர ரசிகராக இருந்தவர். "வர்றதுன்னா வா. வராங்காட்டிப் போய்க்கோ" என்று சட்டென்று அவர் சலித்துக்கொள்ள, 'பக்'கென்று ஆனது. ஓடிப்போய் அப்பாவிடம் பர்மிஷன் வாங்கிக்கொண்டு செந்தில் அண்ணாவின் சைக்கிளில் ஏறினேன்.

ஆல்பட்டில் ரசிகர்மன்ற சிறப்புக் காட்சி. திருவிழாக் கோலம் என்று சொல்லமுடியாது. உண்மையில் அங்கிருந்த ரசிகர்கள் பூண்டிருந்தது போர்க்கோலம். தினேஷை புரட்டியெடுத்துக் கொண்டு ரஜினி அறிமுகமாகும் காட்சியில்... நம்பினால் நம்புங்கள்... தியேட்டருக்குள் தவுசண்ட்வாலா சரம் நிஜமாகவே வெடிக்கப்பட்டது. ரஜினி பேசும் ஒவ்வொரு டயலாக்குக்கும் தொடர்ச்சியான விசில் சத்தம். படத்தின் 75 சதவிகித வசனங்கள் புரியாமலேயே படம் பார்க்க நேரிட்டது. படம் முடிந்ததும் "என் தலைவன் ஜெயிச்சிட்டாண்டோய்...!" என்று கத்திக்கொண்டே வெளியேறிய வெறிக்கூட்டம். எனக்கு 'குணா'வின் வெற்றி குறித்து பெருத்த கவலை உண்டாயிற்று. எதிர்ப்பார்த்தபடியே குணா பப்படமாக, தளபதி வெள்ளிவிழா.

தீபாவளி லீவெல்லாம் முடிந்து பள்ளிக்கு போனபோது, செந்தில் வழக்கம்போல கேப்பே விடாமல் தளபதி புகழ் ஓதிக் கொண்டிருந்தான். அவனும் முதல்நாள் முதல் காட்சி பார்த்திருக்கிறான். அடுத்த ஒரு மாதத்துக்கு தினமும் தளபதி கதையை திகட்டாமல், ஒவ்வொரு முறையும் புதியதாக சில காட்சிகள் சேர்த்து சொல்லிக்கொண்டேயிருந்தான். மாணவர்கள் மத்தியில் மட்டுமன்றி மாணவிகள் மத்தியிலும் அவனுக்கு ஹீரோ அந்தஸ்து. எல்லோர் மத்தியிலும் 'தோத்தாங்குளி' ஆகிவிட்ட அவமானம். (ஆனால் ஓராண்டு கழித்து வந்த அடுத்த தீபாவளியில் நல்லவேளையாக தேவர்மகன் வெளியாகி, அதே ஹீரோ அந்தஸ்தை வெற்றிகரமாக என்னால் கைப்பற்ற முடிந்தது என்பது தனி வரலாறு)

சுதாகர் என்னிடம் சோகமாக கேட்டான். அவன் பார்ட்-டைம் கமல் ரசிகன். "குணா பார்த்தியாடா"

"பார்த்துட்டேண்டா. பர்ஸ்ட் டே, பர்ஸ்ட் ஷோ. ஆக்டிங்குலே நம்ம தலைவருகிட்டே ரஜினியெல்லாம் வெறும் பச்சாடா!"

சுதாகரிடம் அப்பட்டமாக மனதறிந்தே பொய் சொன்னேன். அன்று மட்டுமில்லை. இன்றுவரை நான் முழுமையாக "குணா"வை பார்த்ததே இல்லை.

1 செப்டம்பர், 2010

கிருஷ்ண கிருஷ்ணா! (Adults only, Strictly 18+)

பாவம். இந்த மாய கிருஷ்ணனுக்கு டிரெஸ் போட கூட வக்கில்லாத அளவுக்கு வறுமை. FULL LONG குழலையும் தொலைச்சிட்டதாலே அழுதுக்கிட்டு நிக்கிறான்!

’ஆபாசக் கடவுள்’ கிருஷ்ணருக்கு ஏதோ ஒரு ஜெயந்தி சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்!

28 ஆகஸ்ட், 2010

ஏ.டி.எம். ஏக்கம்!

ச்சே.. நம்மூரிலும்தான் ஏ.டி.எம். இருக்கிறது..

நம்மிடமும்தான் கார்டு இருக்கிறது..

நாமும்தான் அவ்வப்போது நூறோ, இருநூறோ எடுக்கிறோம்..

நம்பள்க்கி எல்லாம் ஏன் இதுமாதிரி நடக்கமாட்டேங்குது? :-(

தமிழக இளைஞர்களை ஏக்கம் கொள்ளவைக்கும் இனிய செய்தி தினமலரில் வந்திருக்கிறது : http://www.dinamalar.com/News_Detail.asp?Id=63041

அழகிகளிடம் ஏமாந்த சோணகிரி ஒரு தமிழராம்.

ம்.. பிரான்சுக்கு போனாலும் தமிழன் சிங்கத்தமிழன்தான்!

29 மே, 2010

ஸ்டைலு.. மயிலு..

ஸ்டைலு ஸ்டைலுதான்
இது சூப்பர் ஸ்டைலுதான்
இந்த ஸ்டைலுக்கேத்த
மயிலு நானுதான்!

28 மே, 2010

கே.எஃப்.சி. சிக்கன்!

“ப்ரெட் பீஸ் மாதிரி சாஃப்ட். செம டேஸ்ட்” என்று இந்திய நகர்ப்புற மேல்தட்டு இளசுகளின் நாக்குக்கு மோகம் கூட்டுவது கே.எஃப்.சி. சிக்கன். நவீன வேலைப்பாடுகளோடு வடிவமைக்கப்பட்ட ரெஸ்டாரண்டுகள், பரிமாற சுறுசுறுப்பான இளைஞர்கள், உச்சஸ்தாயியில் ஒலிக்கப்படும் மேற்கத்திய இசை, டேபிள் முழுக்க இளசுகளின் ஆக்கிரமிப்பு என்று ஒவ்வொரு கே.எஃப்.சி. ரெஸ்டாரண்டுமே பார்ட்டி மூடில் பரவசமாக இருக்கின்றன. சாப்பிட வருபவர்களை சத்தம் போட்டு அதிரவைத்து வரவேற்பதிலேயே கே.எஃப்.சி.யின் கஸ்டமர் கேர் தொடங்கிவிடுகிறது.

அப்படி என்னதான் இருக்கிறது கே.எஃப்.சி. சிக்கனில்?

“அது மட்டும் சீக்ரட்!” என்று சிரிக்கிறார்கள் ரெஸ்டாரண்ட் ஊழியர்கள். கே.எஃப்.சி. சிக்கன் உடம்புக்கு நல்லதாம். பதினோரு விதமான மசாலா சேர்மானம் டேஸ்ட்டுக்கு உதவுவதுடன், உடல்நலத்துக்கும் கேரண்டி தருகிறது என்கிறார்கள். இந்த சேர்மான விகித பார்முலா வேறு யாருக்குமே தெரியாதாம். கே.எஃப்.சி.யின் சீக்ரட் எக்ஸ்க்யூடிவ்களுக்கு மட்டுமே தெரியுமாம். எனவே, சிக்கன் சமைக்கும் அந்த பார்முலாதான் கே.எஃப்.சி.யின் ஸ்பெஷல்.

“இதெல்லாம் சும்மா. பொதுவாக சிக்கனை பொறிக்கும் எண்ணெய் அளவுக்கும், கே.எஃப்.சி.யில் பொறிக்கும் எண்ணெய் அளவுக்கும் சற்று வேறுபாடு உண்டு. அதுவுமில்லாமல் 200 டிகிரி செல்ஸியஸ் வெப்ப அளவில் ஒரு நிமிடம் பொறிக்க வைத்து, பிறகு 120 டிகிரி செல்ஸியசுக்கு வெப்பநிலையை குறைப்பார்கள். சர்க்கரை, மாவு, மிளகு, உப்பு – இதுதான் இவங்க சொல்ற சீக்ரட் பார்முலா” என்று வில்லியம் பவுண்ட்ஸ்டோன் என்பவர் பிக் சீக்ரட்ஸ் என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

1930ல் சாண்டர்ஸ் என்பவரால் அமெரிக்காவில் சிறியளவில் துவக்கப்பட்டது இந்த தொழில். மடமடவென்று வளர்ந்து முப்பது வருடங்களில் அமெரிக்காவிலும், கனடாவிலும் 600 கிளைகளாக பெருகியது கே.எஃப்.சி. இன்றைய தேதியில் கிட்டத்தட்ட நூறு நாடுகளில் ஆயிரக்கணக்கான கிளைகளோடு ஆலமரம் மாதிரி வளர்ந்து நிற்கிறது. உலகின் பெரிய உணவு நிறுவனங்களில் கே.எஃப்.சி.க்கு தனியிடம் உண்டு. ஓராண்டுக்கு சராசரியாக நூறு கோடி கோழிகள் கே.எஃப்.சி. கடைகளில் உயிரிழப்பதாக சொல்கிறார்கள்.

கே.எஃப்.சி.யில் பிரதானம் வறுத்த சிக்கன் தானென்றாலும், கிளைகள் அமைந்திருக்கும் நாடுகளுக்கேற்ப அந்தந்த பகுதியின் ஸ்பெஷல் உணவுகளையும், தங்களது டிரேட் மார்க் சுவையில் தருகிறார்கள். சாண்டர்ஸ் ஆரம்பித்த காலத்தில் வறுத்த கறியும், உருளை ப்ரெஞ்ச் சிப்ஸும் மட்டும்தான் ஸ்பெஷல்.

இந்தியாவிலும் பத்துக்கும் மேற்பட்ட நகரங்களில் கே.எஃப்.சி. ரெஸ்டாரண்டுகள் திறக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக பிஸ்ஸாஹட் ரெஸ்டாரண்டுகள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அதற்கு எதிரில் அமையுமாறு கே.எஃப்.சி. ரெஸ்டாரண்டுக்கு இடம் பார்க்கிறார்கள். இதென்ன லாஜிக் என்றே புரியவில்லை.