23 டிசம்பர், 2008

சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் - புத்தக வெளியீடு!


கிழக்குப் பதிப்பகத்தின் மொட்டை மாடியில் 22-12-08 அன்று மாலை யுவகிருஷ்ணா எழுதிய 'சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்' நூலை எழுத்தாளர் சோம.வள்ளியப்பன் வெளியிட விளம்பரத்துறை வல்லுநர் நாராயணன் பெற்றுக் கொண்டார்.

முதல் நூல் மதிப்புரையினை சோம.வள்ளியப்பன் நிகழ்த்தினார். 'தான் கண்டிப்பானவன், விமர்சனமென்று வந்துவிட்டால் கத்தியை தூக்கிவிடுவேன்' என்ற ரேஞ்சுக்கு ஆரம்பித்து அந்நூலை எழுதிய எழுத்தாளரை பேதிக்குள்ளாக்கினார். ஸ்டிலெட்டோவால் அறுவைசிகிச்சை செய்துவிடுவாரோ என்று பீதியுற்ற நிலையில் இருந்தபோது, நல்லவேளையாக மயிலிறகால் தடவிக்கொடுத்தார்.

'ஒரு புத்தகம் என்பதை வாசகன் அணுகும்போது அவனை எழுத்தாளர் முதல் அத்தியாயத்திலிருந்து கையைப் பிடித்து கடைசி அத்தியாயம் வரை அழைத்துச் செல்லவேண்டும். இடையில் தம் அடிக்கலாமா, மூடிவைத்து விட்டு நாளைக்கு படிக்கலாமா என்று தோன்றக்கூடாது. இந்நூலாசிரியர் வாசகனை கையைப் பிடித்து அழைத்துச் செல்வதில் வெற்றியடைந்திருக்கிறார்' என்றவர், அவருக்குத் தோன்றிய ஓரிரு குறைபாடுகளை மட்டும் இறுதியாக சுட்டிக் காட்டினார். சோம. வள்ளியப்பன் நிகழ்த்தியது மதிப்புரையாக இல்லாமல் வாழ்த்துரையாகவே பட்டது. பேச்சின் இடையிடையே இயல்பாக நகைச்சுவையை நுழைக்கும் சாமர்த்தியம் அவருக்கு கைவந்த கலை.

அடுத்ததாக வாசகர்களோடு கலந்துரையாடல்.

விளம்பரங்கள் குறித்தே அதிகமான கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு நூலாசிரியர் சுமாராக பதில் சொல்லிக்கொண்டிருந்தார். நாராயணனும், பத்ரியும், சோம.வள்ளியப்பனும் அவ்வப்போது பதில் சொல்லி யுவகிருஷ்ணாவை காப்பாற்றினார்கள். "அரசியல்வாதிகளை ஏன் விளம்பரங்களுக்கு மாடல்களாக விளம்பர ஏஜென்ஸிகள் ஒப்பந்தம் செய்வதில்லை?" என்ற முத்துக்குமாரின் கேள்விக்கு பதில் சொல்வதற்குள் நூலாசிரியர் நொந்து நூடுஸ்லாகிப் போனார். விளம்பரங்களில் 'கருப்பு ஆகாது' என்ற பார்ஷியாலிட்டி இருப்பதாக முரளிகண்ணன் சொன்னார். இதற்குப் பின் அரசியல் இருப்பதாக பா.ராமச்சந்திரன் விமர்சித்தார்.

யுவகிருஷ்ணாவிடம் வாசகர்கள் சிலர் ஆட்டோகிராப் வாங்கியது தான் இரண்டாவது நாள் நிகழ்வில் நடந்த உச்சபட்ச காமெடி. வலைப்பதிவிலிருந்து ஒரு எழுத்தாளர் உருவாகியிருந்ததால் இரண்டாம் நாள் கூட்டத்துக்கு ஏராளமான வலைப்பதிவர்கள் வந்திருந்தார்கள்.

'எழுத்தாளர்கள் வலைபதிவது மிக சுலபம். ஆனால் ஒரு வலைப்பதிவாளர் புத்தகம் எழுதி எழுத்தாளராக உருமாறுவது மிக மிகக்கடினம்' என்பது என் சொந்த அனுபவம். வலைப்பதியும் போது ஒரு பதிவினை எழுதிக்கொண்டிருக்கும் போதே 300, 400 வார்த்தைகள் வந்து விழுந்துவிட்டால் மனசுக்குள் ஒரு மணி அடிக்கும், பஞ்ச் லைன் வைத்து முடித்துவிட்டு 100, 200 பின்னூட்டங்களை மிகச்சுலபமாக வாங்கிவிடலாம்.

150 பக்கங்களில் புத்தகம் எழுத 20,000 வார்த்தைகளும், குறைந்தது ஒரு மாத காலமாவது தேவைப்படுகிறது. இந்த ஒரு மாதக்காலத்திலும், எழுதி முடித்த சிறிது காலத்திற்குள்ளும் ஏற்படும் உளவியல்ரீதியான சிக்கல்களை எழுத்துக்களால் விவரிப்பது சிரமமானது. புத்தகம் எழுதுவதற்கு பின்னான உழைப்பு என்பது அசுரத்தனமான சாதகமாக இருக்கவேண்டியது. ஒற்றைக்காலில் நின்று செய்யவேண்டிய தவம். அடிவருடி, சொம்புதூக்கி ரீதியிலான விமர்சனங்கள் ஆரம்பத்தில் மன உறுதியை குலைக்கவும் கூடும். இதுபோன்ற மொள்ளமாறி விமர்சகர்களால் 40 வார்த்தைகளில் வசைபாட மட்டும் தான் முடியும், நம்மால் மட்டும் தான் எழுதமுடியும் என்ற மன உறுதி இருக்கவேண்டும்.

இந்தப் பிரச்சினைகளை எல்லாம் முரட்டு வைத்தியம் துணைகொண்டு சமாளிக்க முடியுமானால் நீங்களும் ஒரு வாசகருக்கு கையெழுத்து போடக்கூடிய அந்தஸ்தை பெறமுடியும். கையெழுத்து போடும்போது ஏற்படும் மகிழ்ச்சியின் அதிர்வுகளை என்னவென்று சொல்வது? ரிக்டர் ஸ்கேலில் கூட அளக்கமுடியாது. 2009ல் எழுத்தாளர்களாக பரிணாமம் பெறக்கூடிய நிஜமான தகுதியிருக்கும் வலைப்பதிவர்களை இப்போதே வாழ்த்துகிறேன்.

21 டிசம்பர், 2008

ஒரு கடிதம்!

பர்சனல் கேள்விகள் -

லக்கிலுக்,

இப்படி மாய்ந்து மாய்ந்து தமிழ்ப் படங்கள் பார்க்கிறீரே. உலக சினிமா எல்லாம் பார்ப்பதுண்டா? அதைப் பற்றியெல்லாம் எழுதுவதில்லையே!

அடல்ட் விஷயங்கள் எல்லாம் அழகாக எழுதுகிறீர்கள். உங்கள் உறவினர்கள் யாரும் இதையெல்லாம் படித்துக் கண்டனம் தெரிவிப்பதில்லையா?

அப்புறம் உங்க வெப்சைட்டை ஏன் நான் டெய்லி படிக்கிறேன்னு யோசிச்சுப் பார்த்தா உங்ககிட்ட குமுதம் டச் இருக்கு.

என்னமோ காலங்கார்த்தால் இதெல்லாம் உங்ககிட்ட சொல்லணும்னு தோணிச்சு. சொல்லிட்டேன்.

- பெயர் சொல்ல விரும்பாத பிரபல எழுத்தாளர் **************


* - * - * - * - * - * - * - * - * - * - * - * -

அன்பின் **************** சார்!


இதுபோல தனிமடலில் அணுகும் உங்கள் அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது.
இனிமேல் நானும் மற்ற வலைப்பதிவர்களை இம்முறையிலேயே அணுகலாமா என்று யோசிக்கிறேன்.

1) நான் சினிமா பார்ப்பது கொண்டாட்டத்துக்காக. உலக சினிமா பார்த்து நொந்துபோய் மூலையில் உட்கார்ந்த காலமும் உண்டு :-(

2) நான் பிலாக் எழுதுவது என் உறவினர்களுக்கு (குறிப்பாக குடும்பத்துக்கு)
தெரியாது என்பதால் அடிச்சி ஆடமுடிகிறது.

3) நான் குமுதம் வெறியன். தாய்ப்பாலோடு குமுதமும் ஊட்டப்பட்டிருக்கிறது (என்
அம்மா குமுதத்தின் தீவிர வாசகி)

4) நன்றி! :-)

19 டிசம்பர், 2008

திண்டுக்கல் சாரதி!


திண்டுக்கல் என்றதுமே எனக்கு தோழர் செந்திலை தான் இதுவரைக்கும் நினைவுபடுத்தி பார்க்க முடிந்தது. சுண்டக்கஞ்சியிலிருந்து டக்கீலா வரை ஒருவாய் பார்க்கும் வீராதிவீரர். செந்திலுக்கு அப்புறம் என்ன நினைவுக்கு வரும்? ம்ம்ம்... பூட்டு. இனிமேல் சாரதியும் நினைவுக்கு வருவார்.

தன்னம்பிக்கையை அஸ்திவாரமாக்கி பின்னட்டப்பட்ட கதை என்பதால் பில்டிங் ஸ்ட்ராங்காவே இருக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு தமிழில் கம்ப்ளீட் ஃபேமிலி எண்டெர்டெயினர். அந்தக் காலத்து பாக்யராஜ் படம் மாதிரி பளீரிடுகிறது. திண்டுக்கல் சாரதி குழு திடமாக ஜெயித்திருக்கிறது. குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கப் போவது உறுதி.

பிரிண்டிங் பிரஸ் வைத்திருக்கும் சாரதி கொஞ்சமென்ன நிறையவே கருப்பு. அண்டங்காக்கா நிறத்தில் இருக்கும் பெண்கள் கூட இவரைக் கட்டிக்கொள்ள சம்மதிப்பதில்லை. தரகர் வெயிட் கமிஷனுக்காக எப்படியோ சிவப்பான, அழகான ஒரு பெண்ணை காட்டுகிறார். யாரும் எதிர்பாராவண்ணம் அந்தப் பெண்ணும் சாரதியை கட்டிக்கொள்ள சம்மதிக்கிறார்.

தான் கருப்பாக, சுமாராக இருப்பதால் இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸில் அவதிப்படும் சாரதி சம்பந்தமேயில்லாதவற்றை கற்பனை செய்துகொண்டு மனைவி மீது சந்தேகப்படுகிறார். உளவியல் சிக்கலுக்கு ஆளாகிறார். க்ளைமேக்ஸ் சுபம்.

சாரதியாக கருணாஸ். வடிவேலுவுக்கு எப்படி இம்சை அரசனோ, அதுபோல கருணாஸுக்கு திண்டுக்கல் சாரதி. ஒரே படத்தில் ஒட்டுமொத்த திறமையையும் காட்டிவிட்டால் எப்படி? அடுத்தடுத்த படங்களுக்கும் மிச்சம் வைக்க வேண்டாமா? நடிப்பு, நடனம், பாட்டு என்று பட்டையைக் கிளப்பியிருக்கிறார் மனுஷன். பச்சைத்தமிழன் தோற்றம் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு மிகப்பெரிய ப்ளஸ். அதிலும் அந்த ‘சாமியோவ்வ்வ்...’ காமெடி. வயிறு வலிக்கிறது.

ஹீரோயின் கார்த்திகா. டிப்பிக்கல் ஃபேமிலி ஃபிகர். அழகாக சிரிக்கிறார்.

சீனுவாசன் நடித்த ’வடக்கு நோக்கி யந்த்ரம்’ என்ற மலையாளப் படத்தின் ரீமேக். முதல்பாதி காமெடியில் மலையாளம் அவ்வப்போது எட்டிப் பார்க்கிறது. இரண்டாம் பாதி முழுக்க முழுக்க தமிழ்தன்மைக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் டைரக்டரிடமே குசேலனையும் இயக்க கொடுத்திருக்கலாம். படத்தின் முதல்பாதியில் உண்டிக்கோல் வைத்து யூத்தை குறிவைக்கும் இயக்குனர், இரண்டாம் பாதியில் துப்பாக்கி வைத்து தாய்க்குலத்தை குறிவைக்கிறார். குறி கச்சிதம்!

நாசரின் க்ளைமேக்ஸ் எக்ஸ்ட்ரா போனஸ்.

“அறிஞர் அண்ணாவை தெரியுமா?”

“தெரியும் டாக்டர். அவரு மேடையிலே நல்லா பேசுவாரு. அவரோட சாவுக்கு வந்தாமாதிரி கூட்டம் உலகத்துலே வேற யாருக்குமே வந்ததில்லை”

“அப்படியா? எனக்குத் தெரிஞ்சு அவரு குள்ளமா, அழுக்கா ட்ரெஸ் பண்ணிக்கிட்டு எப்போ பார்த்தாலும் பொடி போட்டுக்கிட்டு...”

“போங்க டாக்டர்”

“இப்போ தெரியுதா? ஒரு மனுஷனை பத்தி நெனைச்சிப் பாக்கணும்னா அவரோட தோற்றம் நினைவுக்கு வரக்கூடாது. அந்த மனுஷனோட புகழ் நினைவுக்கு வரணும்”

படம் பார்க்கும் ரசிகன் ஒவ்வொருவனுக்கு க்ளைமேக்ஸ் தன்னம்பிக்கை ஹார்லிக்ஸ். சுயபச்சாதாபம் எவ்வளவு மோசமானது என்பது அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு தான் தெரியும்.

சன் பிக்சர்ஸின் கை ஆங்காங்கே புகுந்து விளையாடியிருப்பதால் ‘ரிச்னஸ்’ தெரிகிறது. இல்லாவிட்டால் ராவாக இருந்திருக்கும். உதாரணம் : திண்டுக்கல்லு, திண்டுக்கல்லு பாடல். படம் முடிந்தும் யாரும் தியேட்டரை விட்டு எழுந்துப் போகாவண்ணம் ஒரு குத்து குத்தியிருப்பதில் படத்தின் அபாரவெற்றி தெளிவாகிறது.

திண்டுக்கல் சாரதி - ஐசியூவில் கிடக்கும் தமிழ் சினிமாவுக்கு ஆக்ஸிஜன்.

17 டிசம்பர், 2008

தமிழக அரசியல் நிலவரம்!

அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் !!!!!  - என்ற செந்தழல் ரவியின் பதிவை வாசிக்க நேர்ந்தது. அதிமுக தொண்டர் ஒருவரே திமுக ஆட்சியை பாராட்டும் அளவுக்கு நிர்வாகம் நடந்துவருவது மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது. ஆனால் இந்த புள்ளி விவரங்களால் திமுக கூட்டணி 2004ல் வென்றதைப் போல 40க்கு 40 வெல்ல வாய்ப்பேயில்லை என்பது தான் நடைமுறை யதார்த்தம். உண்மையில் சொல்லப் போனால் கடந்த மாதம் வரை 40க்கு 40லும் திமுக கூட்டணி தோற்பதற்கான வாய்ப்பு தான் பிரகாசமாக இருந்தது.
 
அதே பதிவில் கார்க்கி என்ற நண்பர் ஒரு அற்புதமான கேள்வியை எழுப்பியிருக்கிறார், மின்சாரம் குறித்து. கார்க்கியின் கடந்த சில பதிவுகளையும், பின்னூட்டங்களையும் கவனித்த வகையில் அவருக்கு கலைஞர் தலைமையிலான தமிழ்நாட்டின் முன்னேற்றம் மகிழ்ச்சிக்குப் பதிலாக அதிர்ச்சியையே அளித்திருக்கக் கூடும் என்பதை உணரமுடிகிறது. மின்சாரத்தை கையாளுவதில் தமிழ்நாடு பின்தங்கியிருப்பது உண்மைதான்.
 
இதற்காக நிச்சயமாக ஆற்காடு வீராசாமியின் பதவியையும் மாற்றியிருக்க வேண்டியது அவசியம். டேட்டா குவெஸ்ட் சர்வேயில் மின் ஆளுகையில் இரண்டாம் இடம் பிடித்திருக்கும் கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில் கூட அந்த நேரத்தில் தினமும் 7 மணிநேர மின்வெட்டு (சென்னையில் ஒரு மணிநேரம் தான்) இருந்ததை மறந்துவிடக் கூடாது. ஆனால் இதுவும் இப்போது பழைய கதையாகி விட்டது. மின்வெட்டை கண்டித்து அதிமுக கூட இப்போது கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இயலாத அளவிற்கு மின் ஆளுகை முன்பிருந்த நிலைக்கு வந்துவிட்டது. மின்வெட்டுப் பிரச்சினையிலும் கூட எந்த தமிழனும் 'கருணாநிதி ஒழிக!' என்று சொல்லாமல் 'ஆற்காடு வீராசாமி ஒழிக!' என்று சொல்லுமளவுக்கு கலைஞரின் செல்வாக்கு ஸ்டெடியாகவே இங்கிருக்கிறது.
 
அடுத்ததாக அதே பதிவில் அத்திரி என்ற நண்பரின் பின்னூட்டம் ஒன்றும் வெளியாகியிருக்கிறது. பாவம், மாறன் சகோதரர்கள் கலைஞர் குடும்பத்தோடு மீண்டும் இணைந்த அதிர்ச்சியில் இருந்தே இன்னமும் வெளிவராதவர் இவர். அவர் காழ்ப்புணர்வில் கூறிய சில பிரச்சினைகளை தவிர்த்து பார்க்கப் போனால் மீதிப் பிரச்சினைகள் அனைத்துமே இந்தியாவுக்கே பொதுவானவை. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் விலைவாசி உள்ளிட்ட பிரச்சினைகளின் பாதிப்பு அதிகம். மக்கள் நிராகரித்துவிட்ட குடும்ப அரசியல் கோஷத்தை அத்திரி போன்றவர்கள் இன்னமும் எவ்வளவு காலத்துக்கு கிளிப்பிள்ளை மாதிரி திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்களோ தெரியவில்லை.
 
ஓக்கே இவர்களை விட்டுத் தள்ளுவோம். எந்த காலத்திலும் கலைஞரால் இவர்களை திருப்திபடுத்தி விடவே முடியாது. இவர்களைப் போன்றவர்களுக்கு இருக்கும் பிரச்சினை ஆட்சியின் பேரில் அல்ல. கலைஞரின் பேரில். முதல் பத்தியில் நான் குறிப்பிட்டதைப் போல 40க்கு 40ம் தோல்வி என்ற நிலையில் தான் நவம்பர் மாதம் வரை நிலை இருந்தது. உண்மையை சொல்லப்போனால் காங்கிரஸ் - திமுக கட்சிகளின் கூட்டணி ஒன்றுக்கொன்று எந்த அளவுக்கு வலுவாக இருக்கும் என்பதை கணிக்க இயலாதவகையில் நிலை இருந்தது. காங்கிரஸ் நாடு முழுவதும் மக்களின் வெறுப்பை சம்பாதித்திருப்பதாக ஊடகங்கள் தொடர்ந்து போதித்து வந்தன. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் இந்த மாயையை தகர்த்தெறிந்திருக்கிறது. இந்த ட்ரெண்ட் பாராளுமன்றத் தேர்தலுக்கு பொருந்தாது என்று இப்போது அதே ஊடகங்கள் அவசர அவசரமாக ஊளையிட்டு வருகின்றன.
 
இந்த லாஜிக் தென்னிந்தியாவுக்கு தான் பொருந்தும். சட்டமன்ற தேர்தலிலோ அல்லது இடைத்தேர்தலிலோ வென்றவர்கள் அடுத்துவரும் பாராளுமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்வும் வகையில் மாற்றி ஓட்டளிப்பது தென்னிந்தியர்களின் இயல்பு. பொதுவாக வட இந்தியர்கள் கடைசியாக நடந்த தேர்தலில் யாருக்கு வாக்களித்தார்களோ, அடுத்த தேர்தலிலும் அதே அணிக்கு வாக்களிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். எனவே பாஜக மெஜாரிட்டி பெறும் என்றெல்லாம் வாயால் கணிப்பு சொல்லிக் கொண்டிருந்தவர்களின் வாய் தற்காலிகமாக அடைக்கப்பட்டிருக்கிறது. வட இந்தியாவில் காங்கிரஸ் பெற்ற இந்த எதிர்பாராத வெற்றி நாடு முழுமைக்குமே காங்கிரசுக்கு ஆதரவான ட்ரெண்டை உருவாக்கக் கூடும். ஆயினும் தென்னிந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் ட்ரெண்டை யாராலும் சுலபமாக கணித்துவிட இயலாத நிலை சிரஞ்சீவியால் உருவாக்கப்பட்டிருக்கிறது.
 
காங்கிரசுக்கு ஆதரவான இந்த ட்ரெண்ட் தமிழகத்தில் திமுகவை காப்பாற்ற உதவும். காங்கிரஸ் - திமுக கூட்டணிக்கு எதிரான வலுவான கூட்டணியாக பாஜக - அதிமுக கூட்டணி உருவாகி இருக்குமேயானால் அது ஆளும் கூட்டணிக்கு சிக்கலை தந்திருக்கும். ஆனால் ஜெயாவோ யாரும் எதிர்பாராத வகையில் இடதுசாரிகளை தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்க அணு ஒப்பந்தம் சரியா தவறா என்று மக்களுக்கு முழுமையாக புரியவைக்காத நிலையில் மன்மோகன்சிங்கை கவிழ்க்க நினைத்தனர் இடதுசாரிகள். மக்களிடையே கடும் அதிருப்தியை சம்பாதித்து வைத்திருந்த மன்மோகன் மீது அனுதாப அலையை வீசச்செய்த பெருமைக்கு சொந்தக்காரர்கள் இவர்கள். எந்த லாப-நஷ்ட அடிப்படையை கணக்கிட்டு ஜெ. இவர்களை சேர்த்துக்கொண்டார் என்பது புரியவில்லை. மதிமுக ஒட்டுமொத்தமாக ப்யூஸ் போன நிலையில் அதிமுக கூட்டணிக்கு அக்கட்சி சுமையாகவே இருக்கும். பாமகவை வளைத்துப் போடுவதின் மூலமாகவே அதிமுக கூட்டணியை ஜெ.வால் வலுவானதாக காட்ட இயலும். ஆனால் பாமகவோ காங்கிரஸ் மீது காதல் கொண்டிருக்கிறது.
 
தேமுதிகவின் விஜயகாந்த் இன்றுவரைக்கும் தனியாக நிற்பேன். எனது தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளோடு தான் கூட்டணி என்று சொல்லிவருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக - அதிமுக இருதரப்புக்கும் பலமான அதிர்ச்சியை அளித்தவர் என்ற அடிப்படையில் விஜயகாந்தை நிராகரித்து இனி தமிழக அரசியல் பேசமுடியாது. 2016ல் கேப்டன் ஆட்சியைப் பிடித்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கூட்டணிக்கு ஆள் கிடைக்காத பாஜக இவரோடு சேரக்கூடும். அப்படி சேரும் பட்சத்தில் அது அதிமுக கூட்டணிக்கு இடியாப்பச் சிக்கலை ஏற்படுத்தும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கலைஞர் ஆதரவு, கலைஞர் எதிர்ப்பு என்ற இரண்டுரக ஓட்டுக்களை தான் கடந்த தேர்தல்களில் பார்த்து வருகிறோம். கேப்டன் குறிவைத்து அடிப்பது கலைஞர் எதிர்ப்பு ஓட்டுக்களை. ஏற்கனவே இந்த ரக ஓட்டுக்களை கைக்குள் வைத்திருந்த ஜெயலலிதாவுக்கு எதிரான அம்சம் இது. இதனாலேயே விஜயகாந்தை கலைஞர் உள்ளூர ரசித்து வருகிறார். திருமாவளவனும் இப்போதைக்கு கலைஞரை விட்டு நகர்வதாக இல்லை.
 
மின்வெட்டு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை இம்மாத வெள்ளம் அடித்துக் கொண்டு சென்றிருக்கிறது. பத்து கிலோ அரிசியும், இரண்டாயிரம் ரூபாய் பணமும் சாமானிய மக்களை மெகாசீரியலை கூட மறக்கச்செய்யும் என்பது கடந்தகாலம் உணர்த்திய பாடம். தமிழகமெங்கும் பாகுபாடின்றி வழங்கப்படும் வெள்ள நிவாரணம் திமுக பக்கமாக காற்றடிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. வரவிருக்கும் திருமங்கலம் இடைத்தேர்தல் முடிவும் திமுகவுக்கு சாதகமாகவே இருக்க வாய்ப்புகள் அதிகம். அதைவிட முக்கியமான பிரச்சினையாக தமிழகத்தில் திமுகவுக்கு இருந்த சன்குழுமத்துடனான மோதலும் முடிவுக்கு வந்திருக்கிறது. சன்குழுமத்தின் ஊடகப்பலம் திமுகவுக்கு தேர்தல் நேரத்தில் வலுசேர்க்கும். இன்றைய நிலவரப்படி 40ல் 25 தொகுதிகளை சிரமமின்றி திமுக கூட்டணி வெல்லமுடியும்.

16 டிசம்பர், 2008

பாவி ஆசிரியர் குழுவின் கும்தலக்கடி கும்மாங்குத்து!


ஒவ்வொரு இஷ்யூ முடிக்கறதுக்குள்ளேயும் தாவூ தீர்ந்து டவுசர் கிழிந்துவிடுகிறது மன்னனுக்கு. மன்னன் பாவியின் ஆசிரியர். தமிழ் சமூகத்தின் முழுசாக ஃபில் அப் ஆகாத முகவரி பாவி. குவளவிழா கண்ட வார இதழ். வாராவாரம் யாரையாவது வாரும் ஒரு வார இஷ்யூவை தயார் செய்ய மன்னன் குழு குத்தாட்டம் போடும் நாக்க முக்கா...

மன்னன் : என்னத்தை தலையங்கம் எழுதி.. என்னத்தை கிழிக்கிறது? போனவாரம் வரைக்கும் தலைவரை காய்ச்சிக்கினு இருந்தோம். இந்த வாரம் யூ டர்ன் அடிக்கச் சொல்லி மேலிடத்து ஆர்டர்...

கவிப்ரகாஷ் : பேசாம வழுக்கைத் தலையர்கள் திருப்பதியில் மொட்டை அடிப்பது சம்பந்தமா தலையங்கம் எழுதிருவோமா? ஜாவியில் இருந்தப்போ இப்படித்தான் ஒரு தடவை வழுக்கை ஸ்பெஷல் போட்டோம். கலைஞர், சோன்னு எல்லாரோட இண்டர்வ்யூம் நைண்டீன் எய்ட்டி நைனிலே நான் தான் எடுத்தேன்.

சதன் : சூப்பர் ஐடியா. சோ சுருள் சுருள் முடியோட மொட்டை அடிக்க சலூன்லே உட்கார்ந்திருக்கிறா மாதிரி ஒரு கார்ட்டூன் போட்டு தந்துடறேன். (வெத்தலையை குதப்பிக்கொண்டு கிஜய் டிவி ஆபிஸுக்கு கெளம்புகிறார்)

(சதன் கிளம்பியதை உறுதி செய்து கொண்டு) கரன் : அவுரு ஏற்கனவே மொட்டை தான் சார். வேணுமின்னா கலைஞருக்கு மொட்டை போட்டு நான் வரைஞ்சி தள்ளிடறேன்.

சூச்சூப்பையன் : ஓக்கே. ஒரு சலூன்கடைக்கு கலைஞர், ஜெயலலிதா, பாரதிராஜா, வைகோ, மணிரத்னம், முடிவெட்டிக்க வர்றாங்க. சலூன்லே ரண்டக்கா.. ரண்டக்கா தான். அவசரமா கெளம்பணும். அம்பத்தூர்லே ஒரு ப்ரொடியூசரை பார்க்கணும்.

மன்னன் (டென்ஷனாகி) : எதையாவது சென்சேஷனலா பண்ணனும்யா. ஜல்லியடிச்சி, ஜல்லியடிச்சி ஜன்னி வந்துடும் போலிருக்கே. எவ்ளோ நாளைக்கிய்யா படத்தை போட்டு பைசா பண்ணுறது?

சீ.ரிவக்குமார் : கீழ்ப்பாக்கத்துலே நரிக்குறவர்கள் கேம்ப் போட்டிருக்காங்க. அவங்களோட ஒருநாள் வாழ்க்கையை பதிவு செய்வோமா?

உ.ஆ.க்களில் ஒருவர் : பதிவு செய்யறதுக்கு இதென்ன வாரணம் ஆயிரம் பாட்டா?

சாரதிதம்பி : மீனவர்கள் அவலத்தை படம் புடிச்சி காட்டுவோம்.

காஜசேகரன் : ஆமா. அந்தமான் போயி அட்டகாசமா துள்ளிக் குதிக்கிற மீனையெல்லாம் படம் புடிச்சிட்டு வந்துடறேன். அலவுன்ஸ் கொடுங்க பாஸூ.

சுமேஷ் சைத்யா : திண்டுக்கல் சாரதி ஆடியோ சிடி ஓசியிலே அனுப்பியிருக்கானுங்க. எவ்ளோ நாளைக்கு தான் ஆடியோவையே கேட்டு கேட்டு ஆய் போறது. உருப்படாத பய புள்ளைங்க எழுதற ப்ளாக்குங்களை ஒருநாளைக்கு நானூறு வாட்டி பார்க்குறேன். ஏதாவது அஜக்கு மஜக்கா வேலை கொடுங்கய்யா. அசத்திப்புடறேன்.

”ஆளாளுக்கு வூடு கட்டுறானுங்களே?” மன்னன் நொந்துப்போய் யோசனையில் ஆழ்கிறார்.

கா.நதிர்வேலன் : புதுசா ஒரு பொண்ணை ஆனந்தம் ஆரம்பமிலே இண்ட்ரட்யூஸ் பண்ணுறாங்க. நேர்லே போய் பார்த்து ஜொள்ளிட்டு 'டக்கரு ஃபிகரு, டிக்கரு ஷாட்'னு கலர் கலரா கட்டுரை போட்டுடலாமா பாஸ்?

பை.மாரதிராஜா : மொக்கைப்பட ஹீரோ ஒருத்தன் மாட்டியிருக்கான். காஜசேகரன் அண்ணன் கூட வந்தாருன்னா ‘மொக்கைப்பட ஹீரோ ஆல்பம்'னு நாலு பக்கத்தை ரொப்பிடுவேன்.

உ.ஆ.க்களில் மற்றொருவர் : ரொப்புறதுக்கு இதென்னா பக்கெட்டா?

குருமாவேலன் : கேப்டனோட தமிழ்நாட்டை சுத்தி போரடிக்குது. ராகுல்காந்தியோட அமேதிக்கு போவட்டுமா?

மன்னன் : அடுத்த வாரம் சுமுதம் என்னா எக்ஸ்க்ளூசிவ் போடுறான்னா யாராவது விசாரிச்சீங்களாய்யா?

சீனியர் ரிப்போர்ட்டர் ஒருவர் : அவங்களுக்கின்னா கே செக்ஸு, லெஸ்பியன் செக்ஸு, அனிமல் செக்ஸுன்னு ஏகப்பட்ட எக்ஸ்க்ளூசிவ் இருக்கு. மூஞ்சை மட்டும் மறைச்சி போட்டோ போட்டு.. போட்டு தாக்கிடுவாங்க..

மார்க்கெட்டிங்கில் இருந்து மன்னன் சாருக்கு போன் : சார் தங்கம் விலை உசந்துடிச்சி. பளிச் கமெண்டுக்கெல்லாம் இனிமே தங்கக்காசு கட்டுப்படி ஆவாது. பித்தளைக் காசு தான்னு அறிவிச்சிடுங்க.

மன்னன் : அதெல்லாம் பிரச்சினையில்லை. அலுமினியக் காசுன்னு சொன்னாக்கூட ஆயிரம் எஸ்.எம்.எஸ். வந்துரும்.

டென்ஷனோடு டீமை நோக்கி திரும்ப, ஏரியாவில் டென்ஷன் எக்கு தப்பாகிறது.

சுமேஷ் சைத்யா : புள்ளிகள் மாதிரி ஜல்லிகள் ஆரம்பிக்கலாம். எங்க வீட்டு முன்னாடி கார்ப்பரேஷன் நிறைய ஜல்லி கொட்டியிருக்கான்.

குருமாவேலன் : திராவிடம் நீர்த்தது, திராவகம் இனித்ததுன்னு எட்டு பக்கத்துக்கு எடக்கு மடக்கா எழுதறேன்.

பா.வி. விமர்சனக் குழு : தேவி தியேட்டருலே புதுசா இண்ட்ரடியூஸ் பண்ணியிருக்கிற பெப்பர் கார்ன் சூப்பர். விலைதான் கொஞ்சம் அதிகம்.

கவிப்ரகாஷ் : மெலட்டூர் நடராசன் முப்பது பக்கத்திலே ஒரு சிறுகதை அனுப்பியிருக்காரு..

சீ.ரிவக்குமார் : பழங்குடி மக்களின் வாழ்வியல் தொடர்பா...

கந்தினி : எங்க ஊர்லே ஒரு வேப்பமரம் இருந்தது. அய்யோ.. அதோட இலையெல்லாம் பச்சையா இருக்கும்...

உ.ஆ.க்களில் இன்னொருவர் : சருதனோட பாஸ்போர்ட் வந்துருக்கு.

மன்னன் : வெரிகுட். இந்த வாரம் என்ன மேட்டர் எழுதியிருக்காரு?

அதே உ.ஆ. : நாசமாப் போச்சி. மனுஷன் ஏதோ ஞாபகத்துலே போனவருஷம் பாஸ்போர்ட் ஆபிஸில் அவரெடுத்த பாஸ்போர்ட்டையே அனுப்பி வெச்சிருக்காரு.

மன்னன் கொஞ்ச கொஞ்சமாக டர்ராகிக் கொண்டிருக்கும் போது எம்.டி. ரீனிவாசனிடமிருந்து போன் : ஜாநிக்கு சுமுதத்துலே லீசு முடிஞ்சிருச்சாம். மறுபடியும் நம்மகிட்டே லீசு எடுத்து 'சோ' பக்கங்கள் எழுதட்டுமான்னு கேட்குறாரு...

'க்ரீம்ஸ் ரோடு ஆத்தா என்னை காப்பாத்து!' என்று கதறியபடியே ஆளுக்கொரு திசையாய் தெரிக்கிறார்கள்.


அருஞ்சொற்பொருள் விளக்கம் : உ.ஆ = உதவி ஆசிரியர் என அறிக.