மேற்படி வருத்தமில்லா வாலிபர் சங்கத்துக்கு ஆதரவாக கூட்டத்தில் பேசியவன் என்ற முறையில் இப்போது வருந்துகிறேன். உண்மைத்தமிழன் என்ற பதிவர் தற்போது எழுதியிருக்கும் பதிவின் பாணியை வைத்துப் பார்த்தால் சங்கத்தை வைத்து உப்புமா வாங்கி சாப்பிடலாம் என்றுதான் தோன்றுகிறது.
நான் ஆதரித்துப் பேசிய குழுமம் வேறு. உருவாகப் போகும் குழுமம் வேறு என்று தெரிகிறது. அப்பதிவு மூலமாக வெளிப்பட்டிருக்கும் வக்கிர சிந்தனைகள் மிக மோசமானது. இப்படிப்பட்ட ஆட்களின் முன்முயற்சியால் ஏற்படுத்தப்படும் சங்கம் அல்லது குழுமம் என்பதின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பதை ஜோசியம் பார்க்காமலேயே உணர்ந்துவிடலாம்.
தனிப்பட்ட முறையில் நண்பர்கள் என்ற முறையில் பேசிக்கொள்ளும் பர்சனல் விஷயங்களை கூட பதிவுகளுக்கு எடுத்துவந்து பொதுவிவாதமாக எடுத்துச் செல்லும் போக்கு மிக மிக மோசமானது என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிக் கொள்கிறேன். அதிலும் ஒரு பதிவரின் பணிக்கு வேட்டு வைக்கும் எண்ணத்தோடு விஷமத்தனமான முறையில் அந்த கடைசி பத்திகள் எழுதப்பட்டிருக்கிறது.
இதன் காரணமாக எதிர்காலத்தில் பதிவர் சந்திப்புகளில் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக்கொள்வது கூட தடைபடும். சந்திப்புகளில் கலந்துகொள்ளவே பலரும் யோசிப்பார்கள்.
ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இவ்வளவு ஆடுபவர்கள், ஆரம்பித்த பின்பு எவ்வளவு ஆடுவார்களோ? :-(
சங்கம், கிங்கம் என்றில்லாமல் வழக்கம்போல பதிவராகவே செயல்பட விரும்புகிறேன். கூட்டத்தில் ‘சங்கம் தேவை' என்று நான் கொடுத்த ஆதரவை, இப்பதிவின் மூலமாக வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று மனவருத்தத்தோடு என்னை கூட்டத்துக்கு அழைத்து கருத்து சொல்லச் சொன்ன மற்ற நண்பர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.
30 மார்ச், 2010
29 மார்ச், 2010
வானிலை அதிகாரி விளக்கம்!
கடந்த அக்டோபர் மாதம் வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் அறிவிப்பினை கேட்டுவிட்டு ரெயின்கோட் போட்டு வந்து மழையே வராமல், கடுமையான வெயில் அடித்த ஒரு தினத்தில் எழுதிய பதிவு இது.
சென்னை வானிலை ஆய்வு நிலையத்தில் பணிபுரியும் அதிகாரியான திரு கே.வி.பாலசுப்பிரமணியம் அவர்கள் இப்பதிவினை வாசித்துவிட்டு, தனது விளக்கத்தினை நம்முடைய மின்மடல் முகவரிக்கு அனுப்பியிருக்கிறார்.
திரு. கே.வி.பி. அவர்களின் கடிதம் கீழே :
திரு யுவகிருஷ்ணா அவர்களுக்கு,
இது தங்களுடைய வானிலை ஆராய்ச்சிமையம் பற்றிய அக்டோபர் மாதம் பதிவு செய்துள்ள செய்தி பற்றிய மின்னஞ்சல், தாமதத்திற்கு மன்னிக்கவும், இடையில் நான் தங்களின் வலைப்பூவில் என்னுடைய கருத்துக்களைப் ஆங்கிலத்தில் பதிவு செய்தேன், ஆனால் அது உங்கள் வலைப்பூவில் பதிவாகவில்லை, எனவே இந்த மின்னஞ்சல்.
என் பெயர் கு,வை, பாலசுப்பிரமணியன், சென்னை நுங்கம்பாக்கம் மண்டல வானிலை ஆய்வு மையத்தில் உதவி வானிலையாளராகப் பணிபுரிகிறேன், முனைவர் எஸ்.ஆர்.இரமணன் வானிலை முன்னறிவிப்பு தொடர்பான பணிகளின் அதிகார பூர்வ ஊடகத் தொடர்பாளர். அவர் விடுமுறையில் சென்றாலோ அல்லது பணி நிமித்தம் வெளியில் சென்றாலோ அவருக்குப் பதிலாக முனைவர் எஸ், பாலச்சந்திரன் என்பவரும் திரு ஈ.குழந்தைவேலு என்பவரும் ஊடகத் தொடர்பாளர்களாகப் பணியாற்றுவர்.
வானிலை ஆய்வு மையம் பற்றிய தங்கள் கருத்துக்கள் தவறானவை. பல்வேறு விதமான தலைப்புக்கள் பற்றிய தங்களின் வலைப்பதிவுகளைப் பார்க்கும்போது தாங்கள் அறிவியல் படித்தவராக் இருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
வானிலை என்பது வளி மண்டலம் எவ்வாறு உள்ளது என்பதைத் தெரிவிக்கும் சொல்லாகும், அதாவது பூமியை ஓட்டியுள்ள காற்று அல்லது வளிமண்டலம் வெப்பமாக உள்ளதா? குளிராக உள்ளதா? ஈரமாக அல்லது உலர்ந்து உள்ளதா? காற்றே இல்லாமல் அமைதியாக உள்ளதா? அல்லது புயல் வீசுகிறதா? வானம் மேகமற்று உள்ளதா அல்லது மேகமூட்டமாக உள்ளதா? என்பதனையே வானிலை என்கிறோம்.
வெதர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ‘வானிலை மாற்றம். புயல். லேசான மழை. பெருந்துளி மழை. துன்பங்களைச் சமாளித்தல். காற்றோடு கப்பலைச் செலுத்துதல்’ போன்ற பிற விளக்கங்களும் உள்ளன.
‘வானிலை. தனி இடத் தனிவேளை வளிமண்டல நிலை. ஈர்ம்பதக் குளிர்வாடை நிலை. காற்றின் திசை. காற்று விசையாலையின் பாய்த்திரையின் சாய்கோண அளவு’ என்று பல விதமான பொருள் அளிக்கப்பட்டுள்ளது,
எனவே வானிலை என்பதனை ஓரு குறிப்பிட்ட இடத்தின் ஓரு குறிப்பிட்ட நேரத்தில் உள்ள வானிலைக்கூறுகளின் தொகுப்பு எனலாம். எடுத்துக்காட்டாக சென்னையில் காலை எட்டு மணிக்கு நிலவும் வெப்பநிலை, ஈரப்பதம், காற்றழுத்தம், காற்றின் திசைவேகம், பார்வைத்தூரம், மேகங்களின் வகைகள், அளவு, உயரம் ஆகியவை பற்றிய தகவல்கள் மற்றும் அந்நேரத்தில் மழை, இடி, பனி ஆகியவை உள்ளனவா? போன்ற வானிலைக் கூறுகளின் தொகுப்பே சென்னையின் அப்போதைய வானிலையாகும்.
எனவே வானிலையை அளவீட்டு முறையில் [Quantitative method] சொல்வதானால் இதனை பத்திற்கும் மேற்பட்ட மாறிகளால் [Variables] குறிப்பிடவேண்டும். இந்தியா முழுவதும் 559 தரைநிலைக் கண்காணிப்புக்கூடங்களிலிருந்து பெறப்படும் வானிலைத் தகவல்களை non linear equationஆக மாற்றி, கணினியில் கொடுத்து அடுத்தநாள் வானிலையின் சில கூறுகள் எவ்வாறு இருக்கும் என்று விடைகாண முயன்றால் தற்போது வானிலை ஆய்வு மையத்திற்கு வழங்கப்பட்டுள்ள கணினி வகைகள் 3 முதல் 12 மணி நேரத்தில் விடையளிக்கும். இவ்வகை கணினி வழி வானிலை முன் எச்செரிக்கைகளும் தவறாக இருக்கக்கூடும்.
இது தங்களின் குற்றச்சாட்டிற்கு ஓரு சிறிய விளக்கமே. தாங்கள் சென்னையில் வசிப்பவராக இருந்தால் எங்கள் அலுவலகத்திற்கு ஓரு நாள் வாருங்கள், மேலும் அதிக விளக்கங்ளைப் பெறலாம்.
இப்படிக்கு தங்கள்
கே.வி.பாலசுப்பிரமணியன்
M.Sc (Physics), M.A (Tami), M.A(History,) M. Phil
Assistant Meteorologist,
Regional Meteorological Centre,
Chennai – 600006
கே.வி.பி. சார்!
நான் அறிவியல் படித்தவனல்ல. ஒரு சராசரி மனிதனுக்கு வானிலை ஆய்வு மையம் மீது இருக்கும் அசட்டு கோபமே அப்பதிவில் வெளிபட்டது. அது எவ்வளவு அபத்தமானது என்பதை தங்களது கடிதம் மூலமாக உணர்கிறேன். மத்திய அரசுப் பணிகளில் பணிபுரியும் அதிகாரிகள் இதுபோன்ற அசட்டுக் கோபங்களை கூட சீரியஸாக எடுத்துக் கொண்டு விளக்கம் அளிப்பது என்பது அரசுத்துறை மீதான என்னுடைய மதிப்பினையும், நம்பகத்தன்மையையும் மேலும் மேலும் கூட்டிக்கொண்டே செல்கிறது. தங்களைப் போன்ற அதிகாரிகளால் தேசம் பெருமையடையும். நன்றி!
சென்னையில்தான் வசிக்கிறேன். வாய்ப்பு கிடைக்கும்போது தங்களை அலுவலகத்தில் வந்து சந்திக்கிறேன்.
அன்புடன்
யுவகிருஷ்ணா
27 மார்ச், 2010
இணையக் கவிஞன்!

வண்ண வண்ண
சுடிதார்களில்
செல்லம்மாள் கல்லூரி
மாணவிகள்
பட்டாம்பூச்சிகளாய்
சிறகடித்துப் பறக்கிறார்கள்
ஒரு இரட்டைசக்கர ஓட்டுனர்
அவர்களை சைட் அடித்தபடியே
சிக்னலை கவனிக்காமல்
தடுத்த போலிஸ்காரனை
இடித்துவிட்டான்
சத்தம் கேட்டு திரும்பிய
வண்ணத்துப் பூச்சிகள்
சத்தம் வராமல் சிரித்தன
அப்போது நான்
பெட்ரோல் பங்குக்கு
பக்கத்தில் இருந்த
பொட்டிக்கடையில்
சிகரெட்டு
பிடித்துக் கொண்டிருந்தேன்!
26 மார்ச், 2010
நீச்சல் கற்றுக் கொள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், என்.ஐ.எஸ். தகுதிபெற்ற அனுபவம் வாய்ந்த நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு சென்னையில் கீழ்க்கண்ட நீச்சல் குளங்களில் ‘நீச்சல் கற்றுக் கொள்' வகுப்பினை நடத்தி வருகிறது.
1. அண்ணா நீச்சல்குளம், மெரீனா
2. வேளச்சேரி நீச்சல்குளம்
3. ஷெனாய் நகர் நீச்சல்குளம்
'நீச்சல் கற்றுக்கொள்' தினமும் ஒருமணிநேர வகுப்பாக காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை 12 நாட்கள் கொண்ட தொகுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விவரங்களுக்கு நீச்சல்குள பொறுப்பாளர்களை அணுகலாம்.
அண்ணா நீச்சல் குளம். போன் : 2901250. கைப்பேசி : 9940341476
வேளச்சேரி நீச்சல் குளம். போன் : 22354381. கைப்பேசி : 9940341473
ஷெனாய் நகர் நீச்சல் குளம். போன் : 26474794. கைப்பேசி : 9940341480
முந்தையப் பதிவின் பின்னூட்டத்தில் உலக பிரபல எழுத்தாளர் ரைட்டர் சி.எஸ்.கே. அவர்கள் வலைப்பதிவுகளில் சிட்டிசன் ஜர்னலிசம் இல்லவே இல்லையென்றும், குறிப்பாக அதுகுறித்துப் பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டிருப்பதாலும் சமூகநலன் நோக்கில் இப்பதிவை இட்டே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது!
:-(
1. அண்ணா நீச்சல்குளம், மெரீனா
2. வேளச்சேரி நீச்சல்குளம்
3. ஷெனாய் நகர் நீச்சல்குளம்
'நீச்சல் கற்றுக்கொள்' தினமும் ஒருமணிநேர வகுப்பாக காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை 12 நாட்கள் கொண்ட தொகுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விவரங்களுக்கு நீச்சல்குள பொறுப்பாளர்களை அணுகலாம்.
அண்ணா நீச்சல் குளம். போன் : 2901250. கைப்பேசி : 9940341476
வேளச்சேரி நீச்சல் குளம். போன் : 22354381. கைப்பேசி : 9940341473
ஷெனாய் நகர் நீச்சல் குளம். போன் : 26474794. கைப்பேசி : 9940341480
முந்தையப் பதிவின் பின்னூட்டத்தில் உலக பிரபல எழுத்தாளர் ரைட்டர் சி.எஸ்.கே. அவர்கள் வலைப்பதிவுகளில் சிட்டிசன் ஜர்னலிசம் இல்லவே இல்லையென்றும், குறிப்பாக அதுகுறித்துப் பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டிருப்பதாலும் சமூகநலன் நோக்கில் இப்பதிவை இட்டே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது!
:-(
25 மார்ச், 2010
சென்னை பதிவர் சந்திப்பு 27-03-09 - சில எண்ணங்கள்!
27-03-09, சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் சென்னையில் பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கிறது. இது குறித்த தோழர்களின் பதிவுகள் :
தண்டோரா
கேபிள்சங்கர்
பதிவர் சந்திப்புகள் பரவலாக நடைபெறுவது மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயமே.
ஆயினும் இப்பதிவர் சந்திப்பைப் பொறுத்தவரை, அதன் நோக்கம் எனக்கு ஏற்புடையதாக இல்லை. குறிப்பாக இரண்டு விஷயங்களில்.
1. இணைய எழுத்தாளர்
2. சென்னை இணைய எழுத்தாளர் குழுமம்.
ஒன்று.
ஏன் இணைய எழுத்தாளர் என்ற புதிய சொல்லாடல் முன்வைக்கப் படுகிறது என்றே எனக்குப் புரியவில்லை. வலைப்பதிவர் என்ற சொல் எழுத்தாளர் என்பதை விட பன்முகத்தன்மை கொண்டது. எழுத்தை விட பதிவு தொழில்நுட்பரீதியாக அட்வான்ஸ்ட் ஸ்டேஜ் என்பதை நண்பர்கள் உணரவேண்டும். ஒரு வலைப்பதிவரால் தன் வலைப்பக்கத்தில் ஆடியோ மற்றும் வீடியோ ஆகிய தொழில்நுட்பங்களையும் மிகச்சுலபமாக பயன்படுத்த இயலும். முன்பு ஜெர்மனியில் இருந்து ஒரு பெண் பதிவர் தனது கவிதைகளை, அட்டகாசமான பின்னணி இசையோடு ஆடியோ பிளாக்கிங் செய்து வந்தது இப்போது நினைவுக்கு வருகிறது.
அதுவுமின்றி வலைப்பதிவர் என்பவர் எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் ஆகிய இரண்டு பணிகளை ஒருங்கே செய்துவருகிறார். எழுத்தாளர் வெறும் எழுத்தாளர் மட்டுமே. லாயிட்ஸ் ரோடு கோயில் இடிப்பு பற்றிய பத்ரியின் பதிவு நல்ல உதாரணம். எந்த ஊடகத்திலும் இச்செய்தி வெளிவருவதற்கு முன்பாக வரி மற்றும் ஒளி ஒலி வசதியோடு ப்ரிண்ட், டிவி மீடியாக்களை மிஞ்சும் பிரேக்கிங் நியூஸ். ஒவ்வொரு வலைப்பதிவரும் ஒரு சிட்டிசன் ஜர்னலிஸ்ட். எழுத்தாளர்களுக்கு இத்தகைய வாய்ப்புகள் இல்லை. அவர்கள் அதிகபட்சம் செலிபிரிட்டீஸ் ஆகமுடியும். அவ்வளவுதான்!
தமிழ் வலைப்பதிவுகள் தொடங்கப்பட்ட காலக்கட்டத்தில் எழுத்தாளர்களுக்கும், அச்சு ஊடகங்களும் மாற்றாகவே வலைப்பதிவுகள் என்ற கருத்தாக்கம் ஆழமாக முன்வைக்கப்பட்டது. அதற்கேற்ப எழுத்தில் செய்ய முடியாத சில மேஜிக்குகளை வலைப்பதிவுகளில் செய்யமுடியும் என்பதும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றே. நிலைமை இப்படி இருக்கையில், ஏற்கனவே நாம் பதினாறு அடிதூரம் பாய்ந்துவிட்ட நிலையில் மீண்டும் ஏன் எட்டு அடி தூரத்தை கடப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்க வேண்டும்?
அதுவுமின்றி, இந்த ‘இணைய எழுத்தாளர்' என்ற சொல்லாடலை பிரபல எழுத்தாளர்கள் முன்மொழிகிறார்கள் என்பதில்தான் எனக்கு சந்தேகம் கொஞ்சம் அதிகமாகவே வருகிறது. அச்சு எழுத்தாளர்களிடமிருந்து (அவர்கள் இணையத்தில் இயங்கினாலும் கூட), இணையத்தில் எழுதுபவர்களை தரம்பிரிக்க தந்திரமாக சொல்லப்படும் வார்த்தையாகவும் இதை பார்க்கிறேன்.
மேலும், தனிப்பட்ட அளவில் என்னுடைய கருத்து என்னவென்றால், என்னை இதுவரை நான் எங்கும் எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதில்லை. நான்கு புத்தகங்கள் அச்சில் வெளிவந்திருந்தாலும் கூட 'எழுத்தாளர்' எனும் தகுதியை அடைந்துவிட்டதாக கருதவில்லை. இணையத்திலும் இயங்கும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, இரா.முருகன், பா.ராகவன் போன்றோரும் எழுத்தாளர், நானும் எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதில் இருக்கும் அபத்தம் எனக்கு தெளிவாகவே புரிகிறது. இதனால் மற்ற நண்பர்கள் தங்களை எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்வதை நான் நையாண்டி செய்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது என்னளவில் எனக்கான மதிப்பீடு.
எழுத்தளவில் என்னால் அவர்களை நிச்சயம் அடுத்த இரண்டு வருடங்களில் நெருங்க முடியாது என்று எனக்கு நன்கு தெரியும். கடுமையான பயிற்சியும், முயற்சியும் மட்டுமே இக்கனவை சாத்தியமாக்கும்.
இருப்பினும் இணையம் வேறு தளம். இங்கு ஒரு வலைப்பதிவராக என்னால் இறுமாப்பாக சொல்லிக் கொள்ளமுடியும். மேற்கண்ட எழுத்தாளர்கள் இங்கு எனக்கு வெறும் போட்டியாளர்கள் மட்டுமே. இவர்களில் சிலரை விட இங்கே நான் பிரபலமானவன். நான்தான் ராஜா. ஆகவே ‘இணைய எழுத்தாளர்கள்' என்றொரு சொல்லாடல் அறிமுகப்படுத்தப்படுமேயானால் என்னுடைய ராஜா பதவி பறிக்கப்பட்டு, சேவகனுக்கு கீழான செவிலியன் ஆகிவிடுவேன் என்ற இருத்தலியல் குறித்த பயமும் கூட இப்பதிவை எழுதுவதற்கு ஒரு நியாயமான காரணமாகிறது.
இரண்டு.
சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் என்ற பெயரில் பிராந்தியரீதியாக அடையாளப்படுத்துவதை, இணையம் என்ற அற்புதமான - உலகின் எம்மூலையையும் ஓரிரு வினாடிகளில் கடக்க சாத்தியப்படுத்தியுள்ள - தொழில்நுட்பத்தை கேவலப்படுத்தும் ஒரு செயலாகவே என்னால் பார்க்க முடிகிறது.
2007ஆம் ஆண்டில் வலைப்பதிவர் பட்டறை சென்னையில் நடந்தபோதே இதுபோன்ற விவாதங்கள் நடந்தது. இணையத்தில் பிராந்திய அடையாளங்கள் தேவையில்லை என்று அப்போது ஒருமனதாக முடிவெடுக்கப்பட்ட பின்பே ‘தமிழ் வலைப்பதிவர் பட்டறை' என்ற பெயரில் சென்னையில் இருந்த வலைப்பதிவர்களால் அந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நன்றாக படியுங்கள். சென்னை வலைப்பதிவர் பட்டறை அல்ல, தமிழ் வலைப்பதிவர் பட்டறை. பாலபாரதி, மா.சிவக்குமார், விக்கி போன்ற பதிவர்களை கேட்டால் இதுகுறித்து நடந்த உள்வட்ட, வெளிவட்ட விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளை குறித்து தெளிவாக விளக்கிக் கூறக்கூடும்.
தமிழ் வலைப்பதிவு சூழலில் பாண்டிச்சேரி பதிவர்கள் பிராந்திய அடையாளத்தை முதன்முதலாக முன்வைத்தவர்கள் என்று நினைக்கிறேன். அதைத் தொடர்ந்தே திருப்பூர், ஈரோடு என்று தினந்தோறும் புதிய புதிய வலைப்பதிவர் சங்கங்கள் திடீர் திடீரென முளைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போது சென்னைப் பதிவர்களின் முறை போலும்.
கடந்த வாரம், இண்டிபிளாக்கர் சந்திப்புக்கு சில தமிழ்ப் பதிவர்கள் சென்றிருந்தோம். அங்கே வந்திருந்த வலைப்பதிவர்களும், விவாதிக்கப்படும் விஷயங்களும் வாய்பிளக்க வைத்தன. இந்திய வலைப்பதிவர்களை ஒன்றிணைக்க இண்டிபிளாக்கர் என்ற ஒரே குடை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தனித்தனியாக பிராந்தியரீதியாக பிரிந்திருந்தால் இண்டிபிளாக்கர் சாத்தியமாகி இருக்காது. நம் பதிவர்கள் அவ்வப்போது நடத்தும் சந்திப்பு மற்றும் நிகழ்ச்சிகளைதான் அவர்களும் நடத்துகிறார்கள். ஆனால் முறைப்படுத்தப்பட்ட, தரமான முறையில் ‘யுனிவர்செல்' போன்ற பெரிய ஸ்பான்சர்களை பிடித்து அவர்களால் நடத்தப்படுகிறது.
எந்த நாட்டில் இருந்தாலும் ‘தமிழ் வலைப்பதிவர்கள்' என்ற ஒரே குடையின் கீழ் நாம் இணையாவிட்டால் எந்த காலத்திலும் இண்டிபிளாக்கர் சந்திப்பு போன்ற ஒரு சந்திப்பு நமக்கு சாத்தியமாகவே ஆகாது.
வேண்டுமென்றால் நிர்வாக வசதிக்காக 'தமிழ் வலைப்பதிவர் குழுமம், சென்னை', ‘தமிழ் வலைப்பதிவர் குழுமம், பாண்டி' என்று கிளையாக செயல்படலாம். எப்படியும் ஒரு ‘தலை' தமிழ்பதிவர்களுக்கு அவசியம். தமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டி நிர்வாகங்கள், முன்னோடிகள் மற்றும் மூத்த பதிவர்களை கலந்தாலோசித்து விட்டு இப்படியொரு அமைப்பினை உருவாக்க நண்பர்கள் ஆலோசிக்கலாம்.
எதையுமே 'எடுத்தேன், கவிழ்த்தேன்' என்று ஓரிரு நண்பர்கள் கூடி, விவாதித்து செயல்படுத்தி விட முடியாது. பரவலான ஆலோசனைகளுக்கும், யோசனைகளுக்கும் பின்னரே செயல்படுத்தி பார்க்கப்பட வேண்டியது என்பது என் தாழ்மையான கருத்து.
எழுதிக்கொண்டே போனால் மிக நீண்டப் பதிவாக வரும் ஆபத்து இருப்பதால், வரும் 27ந்தேதி நடைபெறும் சென்னை பதிவர் சந்திப்பில் எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தால் இன்னும் விரிவாக பேசுவேன்.
தேதி : 27.03.10/சனிக்கிழமை
நேரம் : மாலை 5.30
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6, முனுசாமி சாலை முதல் மாடி,
மஹாவீர் காம்ப்ளெக்ஸ் பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்,
மேற்கு கே.கே.நகர் சென்னை –78
தண்டோரா
கேபிள்சங்கர்
பதிவர் சந்திப்புகள் பரவலாக நடைபெறுவது மகிழ்ச்சிக்குரிய ஒரு விஷயமே.
ஆயினும் இப்பதிவர் சந்திப்பைப் பொறுத்தவரை, அதன் நோக்கம் எனக்கு ஏற்புடையதாக இல்லை. குறிப்பாக இரண்டு விஷயங்களில்.
1. இணைய எழுத்தாளர்
2. சென்னை இணைய எழுத்தாளர் குழுமம்.
ஒன்று.
ஏன் இணைய எழுத்தாளர் என்ற புதிய சொல்லாடல் முன்வைக்கப் படுகிறது என்றே எனக்குப் புரியவில்லை. வலைப்பதிவர் என்ற சொல் எழுத்தாளர் என்பதை விட பன்முகத்தன்மை கொண்டது. எழுத்தை விட பதிவு தொழில்நுட்பரீதியாக அட்வான்ஸ்ட் ஸ்டேஜ் என்பதை நண்பர்கள் உணரவேண்டும். ஒரு வலைப்பதிவரால் தன் வலைப்பக்கத்தில் ஆடியோ மற்றும் வீடியோ ஆகிய தொழில்நுட்பங்களையும் மிகச்சுலபமாக பயன்படுத்த இயலும். முன்பு ஜெர்மனியில் இருந்து ஒரு பெண் பதிவர் தனது கவிதைகளை, அட்டகாசமான பின்னணி இசையோடு ஆடியோ பிளாக்கிங் செய்து வந்தது இப்போது நினைவுக்கு வருகிறது.
அதுவுமின்றி வலைப்பதிவர் என்பவர் எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் ஆகிய இரண்டு பணிகளை ஒருங்கே செய்துவருகிறார். எழுத்தாளர் வெறும் எழுத்தாளர் மட்டுமே. லாயிட்ஸ் ரோடு கோயில் இடிப்பு பற்றிய பத்ரியின் பதிவு நல்ல உதாரணம். எந்த ஊடகத்திலும் இச்செய்தி வெளிவருவதற்கு முன்பாக வரி மற்றும் ஒளி ஒலி வசதியோடு ப்ரிண்ட், டிவி மீடியாக்களை மிஞ்சும் பிரேக்கிங் நியூஸ். ஒவ்வொரு வலைப்பதிவரும் ஒரு சிட்டிசன் ஜர்னலிஸ்ட். எழுத்தாளர்களுக்கு இத்தகைய வாய்ப்புகள் இல்லை. அவர்கள் அதிகபட்சம் செலிபிரிட்டீஸ் ஆகமுடியும். அவ்வளவுதான்!
தமிழ் வலைப்பதிவுகள் தொடங்கப்பட்ட காலக்கட்டத்தில் எழுத்தாளர்களுக்கும், அச்சு ஊடகங்களும் மாற்றாகவே வலைப்பதிவுகள் என்ற கருத்தாக்கம் ஆழமாக முன்வைக்கப்பட்டது. அதற்கேற்ப எழுத்தில் செய்ய முடியாத சில மேஜிக்குகளை வலைப்பதிவுகளில் செய்யமுடியும் என்பதும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றே. நிலைமை இப்படி இருக்கையில், ஏற்கனவே நாம் பதினாறு அடிதூரம் பாய்ந்துவிட்ட நிலையில் மீண்டும் ஏன் எட்டு அடி தூரத்தை கடப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருக்க வேண்டும்?
அதுவுமின்றி, இந்த ‘இணைய எழுத்தாளர்' என்ற சொல்லாடலை பிரபல எழுத்தாளர்கள் முன்மொழிகிறார்கள் என்பதில்தான் எனக்கு சந்தேகம் கொஞ்சம் அதிகமாகவே வருகிறது. அச்சு எழுத்தாளர்களிடமிருந்து (அவர்கள் இணையத்தில் இயங்கினாலும் கூட), இணையத்தில் எழுதுபவர்களை தரம்பிரிக்க தந்திரமாக சொல்லப்படும் வார்த்தையாகவும் இதை பார்க்கிறேன்.
மேலும், தனிப்பட்ட அளவில் என்னுடைய கருத்து என்னவென்றால், என்னை இதுவரை நான் எங்கும் எழுத்தாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதில்லை. நான்கு புத்தகங்கள் அச்சில் வெளிவந்திருந்தாலும் கூட 'எழுத்தாளர்' எனும் தகுதியை அடைந்துவிட்டதாக கருதவில்லை. இணையத்திலும் இயங்கும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா, இரா.முருகன், பா.ராகவன் போன்றோரும் எழுத்தாளர், நானும் எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்வதில் இருக்கும் அபத்தம் எனக்கு தெளிவாகவே புரிகிறது. இதனால் மற்ற நண்பர்கள் தங்களை எழுத்தாளர்கள் என்று சொல்லிக் கொள்வதை நான் நையாண்டி செய்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது என்னளவில் எனக்கான மதிப்பீடு.
எழுத்தளவில் என்னால் அவர்களை நிச்சயம் அடுத்த இரண்டு வருடங்களில் நெருங்க முடியாது என்று எனக்கு நன்கு தெரியும். கடுமையான பயிற்சியும், முயற்சியும் மட்டுமே இக்கனவை சாத்தியமாக்கும்.
இருப்பினும் இணையம் வேறு தளம். இங்கு ஒரு வலைப்பதிவராக என்னால் இறுமாப்பாக சொல்லிக் கொள்ளமுடியும். மேற்கண்ட எழுத்தாளர்கள் இங்கு எனக்கு வெறும் போட்டியாளர்கள் மட்டுமே. இவர்களில் சிலரை விட இங்கே நான் பிரபலமானவன். நான்தான் ராஜா. ஆகவே ‘இணைய எழுத்தாளர்கள்' என்றொரு சொல்லாடல் அறிமுகப்படுத்தப்படுமேயானால் என்னுடைய ராஜா பதவி பறிக்கப்பட்டு, சேவகனுக்கு கீழான செவிலியன் ஆகிவிடுவேன் என்ற இருத்தலியல் குறித்த பயமும் கூட இப்பதிவை எழுதுவதற்கு ஒரு நியாயமான காரணமாகிறது.
இரண்டு.
சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் என்ற பெயரில் பிராந்தியரீதியாக அடையாளப்படுத்துவதை, இணையம் என்ற அற்புதமான - உலகின் எம்மூலையையும் ஓரிரு வினாடிகளில் கடக்க சாத்தியப்படுத்தியுள்ள - தொழில்நுட்பத்தை கேவலப்படுத்தும் ஒரு செயலாகவே என்னால் பார்க்க முடிகிறது.
2007ஆம் ஆண்டில் வலைப்பதிவர் பட்டறை சென்னையில் நடந்தபோதே இதுபோன்ற விவாதங்கள் நடந்தது. இணையத்தில் பிராந்திய அடையாளங்கள் தேவையில்லை என்று அப்போது ஒருமனதாக முடிவெடுக்கப்பட்ட பின்பே ‘தமிழ் வலைப்பதிவர் பட்டறை' என்ற பெயரில் சென்னையில் இருந்த வலைப்பதிவர்களால் அந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நன்றாக படியுங்கள். சென்னை வலைப்பதிவர் பட்டறை அல்ல, தமிழ் வலைப்பதிவர் பட்டறை. பாலபாரதி, மா.சிவக்குமார், விக்கி போன்ற பதிவர்களை கேட்டால் இதுகுறித்து நடந்த உள்வட்ட, வெளிவட்ட விவாதங்கள் மற்றும் ஆலோசனைகளை குறித்து தெளிவாக விளக்கிக் கூறக்கூடும்.
தமிழ் வலைப்பதிவு சூழலில் பாண்டிச்சேரி பதிவர்கள் பிராந்திய அடையாளத்தை முதன்முதலாக முன்வைத்தவர்கள் என்று நினைக்கிறேன். அதைத் தொடர்ந்தே திருப்பூர், ஈரோடு என்று தினந்தோறும் புதிய புதிய வலைப்பதிவர் சங்கங்கள் திடீர் திடீரென முளைத்துக் கொண்டிருக்கின்றன. இப்போது சென்னைப் பதிவர்களின் முறை போலும்.
கடந்த வாரம், இண்டிபிளாக்கர் சந்திப்புக்கு சில தமிழ்ப் பதிவர்கள் சென்றிருந்தோம். அங்கே வந்திருந்த வலைப்பதிவர்களும், விவாதிக்கப்படும் விஷயங்களும் வாய்பிளக்க வைத்தன. இந்திய வலைப்பதிவர்களை ஒன்றிணைக்க இண்டிபிளாக்கர் என்ற ஒரே குடை. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தனித்தனியாக பிராந்தியரீதியாக பிரிந்திருந்தால் இண்டிபிளாக்கர் சாத்தியமாகி இருக்காது. நம் பதிவர்கள் அவ்வப்போது நடத்தும் சந்திப்பு மற்றும் நிகழ்ச்சிகளைதான் அவர்களும் நடத்துகிறார்கள். ஆனால் முறைப்படுத்தப்பட்ட, தரமான முறையில் ‘யுனிவர்செல்' போன்ற பெரிய ஸ்பான்சர்களை பிடித்து அவர்களால் நடத்தப்படுகிறது.
எந்த நாட்டில் இருந்தாலும் ‘தமிழ் வலைப்பதிவர்கள்' என்ற ஒரே குடையின் கீழ் நாம் இணையாவிட்டால் எந்த காலத்திலும் இண்டிபிளாக்கர் சந்திப்பு போன்ற ஒரு சந்திப்பு நமக்கு சாத்தியமாகவே ஆகாது.
வேண்டுமென்றால் நிர்வாக வசதிக்காக 'தமிழ் வலைப்பதிவர் குழுமம், சென்னை', ‘தமிழ் வலைப்பதிவர் குழுமம், பாண்டி' என்று கிளையாக செயல்படலாம். எப்படியும் ஒரு ‘தலை' தமிழ்பதிவர்களுக்கு அவசியம். தமிழ்மணம், தமிழிஷ் போன்ற திரட்டி நிர்வாகங்கள், முன்னோடிகள் மற்றும் மூத்த பதிவர்களை கலந்தாலோசித்து விட்டு இப்படியொரு அமைப்பினை உருவாக்க நண்பர்கள் ஆலோசிக்கலாம்.
எதையுமே 'எடுத்தேன், கவிழ்த்தேன்' என்று ஓரிரு நண்பர்கள் கூடி, விவாதித்து செயல்படுத்தி விட முடியாது. பரவலான ஆலோசனைகளுக்கும், யோசனைகளுக்கும் பின்னரே செயல்படுத்தி பார்க்கப்பட வேண்டியது என்பது என் தாழ்மையான கருத்து.
எழுதிக்கொண்டே போனால் மிக நீண்டப் பதிவாக வரும் ஆபத்து இருப்பதால், வரும் 27ந்தேதி நடைபெறும் சென்னை பதிவர் சந்திப்பில் எனக்கு பேச வாய்ப்பு கிடைத்தால் இன்னும் விரிவாக பேசுவேன்.
தேதி : 27.03.10/சனிக்கிழமை
நேரம் : மாலை 5.30
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6, முனுசாமி சாலை முதல் மாடி,
மஹாவீர் காம்ப்ளெக்ஸ் பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்,
மேற்கு கே.கே.நகர் சென்னை –78
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)