27 மார்ச், 2010

இணையக் கவிஞன்!


வண்ண வண்ண
சுடிதார்களில்
செல்லம்மாள் கல்லூரி
மாணவிகள்
பட்டாம்பூச்சிகளாய்
சிறகடித்துப் பறக்கிறார்கள்
ஒரு இரட்டைசக்கர ஓட்டுனர்
அவர்களை சைட் அடித்தபடியே
சிக்னலை கவனிக்காமல்
தடுத்த போலிஸ்காரனை
இடித்துவிட்டான்
சத்தம் கேட்டு திரும்பிய
வண்ணத்துப் பூச்சிகள்
சத்தம் வராமல் சிரித்தன
அப்போது நான்
பெட்ரோல் பங்குக்கு
பக்கத்தில் இருந்த
பொட்டிக்கடையில்
சிகரெட்டு
பிடித்துக் கொண்டிருந்தேன்!

22 கருத்துகள்:

  1. BOSS, நல்லா இருக்கு....

    மனோ

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா5:07 PM, மார்ச் 27, 2010

    இது நக்கலா இல்லை பின் நவீனத்துவமா? lol

    பதிலளிநீக்கு
  3. அருமையான, உலக இலக்கியம் படைச்சு இருக்கீங்க ... இந்த தமிழர்கள், இதை ரசிக்காம,
    டி வீ ல , குடும்பத்தோட ப்ளூ பிலிம் பாக்குறாங்க...
    கேரளால இந்த நிலை இல்லை...
    ரொம்ப கஷ்டமா இருக்கு...

    இதை யாராச்சும், இங்க்லீஷ்ல, மொழி பெயர்த்தா , உங்களுக்கு தான் அடுத்த நோபல் பரிசு

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா6:29 PM, மார்ச் 27, 2010

    என்ன சொல்ல வர்றீக...
    - arulmurugan

    பதிலளிநீக்கு
  5. விடுங்க பாஸ். தினத்தந்தி குடும்பமலர்ல எழுதிதான் மேலவரணுமா? அதுக்குத்தான் இப்ப ப்லாக் இருக்குதே?எல்லாருக்குமே ஆரம்பத்துல அப்படித்தானே.

    பதிலளிநீக்கு
  6. அற்புதமான ஹய் கூ (சற்று நீளமான)

    பதிலளிநீக்கு
  7. என் அதிஅற்புத கவிதைகளுக்கு நீங்கள் பின்னூட்டம் அளிக்காததால்.. இந்த கவிதைக்கு(?) பின்னூட்டம் இடமாட்டேன் என்பதை சங்கத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்

    இப்படிக்கு
    செயலாளர்
    தமிழ் ப்ளாகர் சங்கம்

    பதிலளிநீக்கு
  8. //இணையக் கவிஞன்!
    வகை கட்டுரை/

    சம்திங் மஸ்ட் பீ ஹியர்..?

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா12:53 AM, மார்ச் 28, 2010

    இது கவிதை இல்லை, பதிகை! இவர் எழுதுவது எழுத்து அல்ல பழுத்து. ஏனென்றால் இவர் எழுத்தாளர் அல்ல பதிவர்!
    -கார்த்திக்

    பதிலளிநீக்கு
  10. ithula enna irukku boss, ellorum panrathuthaane??!!

    பதிலளிநீக்கு
  11. //வண்ண வண்ண
    சுடிதார்களில்
    செல்லம்மாள் கல்லூரி ///

    நீங்கள் கிண்டியில் இந்த கவிதையை அவதானித்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏபிடி பங்க்கா? அல்லது அருகில் உள்ள இன்னொரு பங்க்கா? இந்த கவிதையில் உள்ள நுண்ணரசியல் எனக்கு பிடித்திருக்கிறது.கவிதை எழுத தெரியாது என்று அநியாயத்திற்கு பொய் சொன்னீர்களே.

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா11:42 AM, மார்ச் 28, 2010

    this will be read in the next "almost island" dialogues program in delhi..what a kavithai?..superb lucky

    பதிலளிநீக்கு
  13. என்னது கம்பர் செத்துடாரா ?

    பதிலளிநீக்கு
  14. உபரி தகவல்:

    காலேஜ் படிக்க சொல்லொ நாங்க செல்லமாள் கல்லூரியை ராக்காயி கோயில் என அழைப்போம்.

    பதிலளிநீக்கு
  15. இணைய எழுத்தாளர் மாதிரி இணைய கவிஞர்-ஆ? ஏதோ உள்குத்து இருக்கிறமாதிரி இருக்கே?

    பதிலளிநீக்கு
  16. neraya paer itha oru hicoo vaaa paakureenga but really ithula oru periya visayam irukum athuvum ovvoru kannotathula..

    En paarvail ithu Ilaingar halin porupatra pokkai sutti kaati ullar...

    for ex: Bike a otti sight adikurathu..

    petrol bunk pakathula cigrate....

    Intha maathiri.. just put up in your life, and think, Everything is understandable

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லா9:01 PM, மார்ச் 28, 2010

    சுஜாதாவின் லாண்டிரிக் கணக்கும் இலக்கியம் ஆவது போல் போல் உங்கள் டயரிக் குறிப்பும் கவிதையாகி விட்டதா...

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா10:52 PM, மார்ச் 28, 2010

    சரி விடுங்க அவர் என்ன பண்ணுவார்...ஏதோ அவருக்கு தோனறத எழுதறார் ..

    பதிலளிநீக்கு
  19. ரிப்பீட்டு தானே சகா இது? கே.ஆர்.எஸ் கொடுத்த ஊக்கத்தால் எழுதியது என்று எப்போதோ சொன்ன ஞாபகம். சரியா?

    பதிலளிநீக்கு