16 நவம்பர், 2013

கேன்சர் அகற்றப்பட்ட கதை

சமீபத்தில் குஜராத்தில் நடந்த வல்லபாய் படேல் சிலை அடிக்கல் நாட்டுவிழாவில் “சர்தார் வல்லபாய் படேல் மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். அவர் இருந்த கட்சியில் நானும் இருப்பதற்காக பெருமைப்படுகிறேன்” என்று பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.

ஆனால் இந்தியாவின் முதல் பிரதமரான நேரு அவரை ‘மதச்சார்பு கொண்டவர்’ என்று நேரடியாக குற்றம் சாட்டியதாக ஒரு புத்தகத்தை மேற்கோள் காட்டி அத்வானி குற்றம் சாட்டுகிறார். இதெல்லாம் காங்கிரஸ் – பாஜக இடையிலான அரசியல் சடுகுடு. யார் வெல்லுவார்கள் என்பதை காலம் முடிவு செய்துக்கொள்ளட்டும்.

அத்வானி குறிப்பிடுகிற புத்தகம் எம்.கே.கே. நாயர் என்கிற முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி எழுதிய மலையாளப் புத்தகம். அது ஆங்கிலத்தில் ‘The story of an era told without ill will’ என்று மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அப்புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு சுவாரஸ்யமான அத்தியாயத்தின் ஒரு பகுதி :

ஏப்ரல் 30, 1948. இந்திய ராணுவம் ஹைதராபாத்திலிருந்து முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. உடனடியாக ஹைதராபாத் நிஜாமின் ‘ரஜாக்கர்கள்’ எனப்படும் ஆயுதக்குழு நிஜாம் பிரதேசம் மொத்தத்தையும் தங்கள் ஆளுகைக்குள் எடுத்துக் கொண்டனர். மக்களை கடுமையாக சித்திரவதை செய்யத் தொடங்கினர் ரஜாக்கர்கள்.

மவுண்ட்பேட்டன் இடத்தை காலி செய்ததுமே கவர்னர் ஜெனரலாக இராஜாஜி பதவியேற்றுக் கொண்டார். ஹைதராபாத்தின் அபாயநிலையை இராஜாஜி, நேரு மற்றும் படேல் மூவரும் உணர்ந்திருந்தனர். எனவே இராணுவத்தை அனுப்பி நிஜாமின் கொட்டத்தை அடக்கவேண்டுமென்று படேல் துடித்துக் கொண்டிருந்தார்.

இதற்கிடையே நிஜாம் தன்னுடைய பிரதிநிதியை பாகிஸ்தானுக்கு அனுப்பி நல்லுறவு ஏற்படுத்த முயற்சித்தார். தன்னுடைய அரசுப் பணத்தில் கணிசமான தொகையை பாகிஸ்தானுக்கு கொடுத்தார். அமைச்சரவை சந்திப்பில் இந்த நிலவரத்தை படேல் விலாவரியாக எடுத்துரைத்தார். ஹைதராபாத்தில் நடக்கும் வன்முறை வெறியாட்டங்களை முடிவுக்கு கொண்டுவர இராணுவத்தை அனுப்பவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பொதுவாக கனிவாகவும், அமைதியாகவும் பேசக்கூடிய தன்மை கொண்ட நேரு திடீரென எரிச்சலடைந்தார். தன்னிலை இழந்த நிலையில் வல்லபாய் படேலை நோக்கி, “நீங்கள் ஒரு முழுமையான வகுப்புவாதி. உங்கள் கோரிக்கையை ஏற்கமாட்டேன்” என்று குரல் உயர்த்தி சொன்னார். படேல் ஆவேசப்படவில்லை. அமைதியாக அறையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

ஹைதராபாத்தில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்தது. கவர்னர் ஜெனரலான இராஜாஜி இந்த சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார். நேருவையும், பட்டேலையும் இணக்கமாக போகவைக்க முயற்சித்தார். அரசியல் ஆலோசனை அதிகாரியான வி.பி.மேனனை அழைத்துப் பேசினார். இராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும், எந்த நிமிடத்திலும் ஆணை கிடைத்தால் எல்லாவற்றையும் சரிக்கட்டிவிட முடியுமென்றும் இராஜாஜியிடம் மேனன் சொல்கிறார். அடுத்த நாளே நேருவையும், பட்டேலையும் சந்திப்புக்காக இராஷ்டிரபதி பவனுக்கு வரவழைத்தார் இராஜாஜி. வி.பி.மேனனும் சந்திப்புக்கு அழைக்கப்பட்டார்.

இராஷ்டிரபதி பவனுக்கு வந்துக் கொண்டிருந்த நேரத்தில் மேனனிடம் ஒரு கடிதம் கையளிக்கப்பட்டது. திருவாங்கூர் மற்றும் கொச்சியை இந்தியாவில் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்திய ஐ.சி.எஸ். அதிகாரி பட்ச் என்பவர் இந்த கடிதத்தை அவரிடம் கொடுத்தார். பிரிட்டிஷ் ஹைகமிஷனரிடம் இருந்து வந்த அந்த கடிதம், ஹைதராபாத்தில் கன்னியாஸ்திரிகள் சிலர் ரஜாக்கர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளானதை கண்டித்து வந்திருந்தது. மேனன் இந்த கடிதத்தை அப்படியே இராஜாஜியிடம் கொடுத்தார்.

நேரு, படேல் வருகைக்குப் பிறகு சந்திப்பு தொடங்கியது. இராஜாஜி தனக்கேயுரிய பாணியில் ஹைதராபாத் நிலைமையை கவலையோடு பேசினார். இந்தியாவின் இறையாண்மையை காக்கும் வகையில் நடவடிக்கை வேகமாக இருக்கவேண்டுமென்கிற தொனி இராஜாஜியின் பேச்சில் இருந்தது. நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் சர்வதேச அளவில் இந்தியா எதிர்கொள்ளக்கூடிய அழுத்தங்களை நேரு வலியுறுத்தி பதில் சொல்லிக் கொண்டிருந்தார். நேருவின் பேச்சை முழுமையாக கேட்ட இராஜாஜி, பொறுமையாக தன்னிடம் மேனன் கொடுத்த பிரிட்டிஷ் ஹைகமிஷனரின் கண்டனக் கடிதத்தை தருகிறார்.

கடிதத்தை வாசித்ததுமே நேருவின் முகம் மாறுகிறது. கோபத்தில் சிவக்கிறார். கன்னியாஸ்திரிகளை கூட விட்டுவைக்காத ரஜாக்கர்களின் கொடுஞ்செயல் அவரது உறுதியான இதயத்தை அசைத்துவிட்டது. கைகளால் வேகமாக மேசை மீது குத்தியபடியே குரலுயர்த்தி சொன்னார்.

“இனியும் நாம் பொறுக்க முடியாது. அவர்களுக்கு பாடம் கற்பித்தே தீரவேண்டும்”

நேருவிடமிருந்து இராஜாஜி எதிர்ப்பார்த்தது இதைதான். வி.பி.மேனனை பார்த்து இராஜாஜி சொல்கிறார்.

“மேனன், இராணுவ தலைமை அதிகாரியை களமிறங்கச் சொல்லுங்கள்”

ஆணை கிடைத்ததுமே மேனன் செயல்படத் தொடங்கினார். இராணுவ ஜெனரலுக்கு செய்தி பறந்தது. கவலையோடு தன்னுடைய தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார் நேரு. தன் நிலையை ஆசுவாசப்படுத்திக்கொள்ள தேனீர் அருந்தினார். நேருவின் நிலையை கண்ட இராஜாஜி புன்னகையோடு அவரிடம் சொல்கிறார்.

“கொடுமையான வலி ஏற்படுமென்றாலும் வேறு வழியில்லை. அறுவைச் சிகிச்சை செய்து, கேன்சர் கட்டியை நாம் அகற்றித்தான் ஆகவேண்டும்”

2 கருத்துகள்:

  1. Wherever Muslims are in majority, rape of other religious women and murder of other religious men is common.
    This is what happened in Nizam Hyderabad - at that time Patel was there to help Hindus.
    But in Jammu Kashmir even Patel could not stop Nehru's Muslim appeasement. Whatever happened to Kashmiri Pandits who were in majority at the time of Independence.
    Hindu's population in Pakistan (Not including East) was 23% in 1947. Now it is < 2%.
    Our history books are cleaned of the atrocities of mughal emperors.
    No one to write about the danger of muslim majority in India.

    பதிலளிநீக்கு