3 மே, 2009

நியூட்டனின் 3ஆம் விதி!


இரட்டை அர்த்த வசனங்கள். ஹீரோயினிடம் காமக்குறும்பு - இவையெல்லாம் எப்போதுமே எஸ்.ஜே.சூர்யா படங்களில் பொதுவாக இருக்கும் அம்சம். ’நியூட்டனின் 3ஆம் விதி’யும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் தமிழ் சினிமாவில் முதன்முறையாக மொத்தப் படமுமே க்ளைமேக்ஸ் என்ற விதத்தில் மற்ற படங்களிலிருந்து வேறுபடுகிறது. கில்லிக்கு பிறகு இந்தப் படத்தில் தான் அனாயச வேகத்தை காணமுடிகிறது. கமல்ஹாசன் நடிக்க வேண்டிய கதாபாத்திரம். எஸ்.ஜே.சூர்யாவும் ‘நியூ’வுக்குப் பிறகு சொல்லிக்கொள்ளும்படி ஈர்க்கிறார்.

’வேட்டையாடு விளையாடு’ படத்தை டைட்டிலுக்காகவே பலமுறை பார்க்கலாம். உண்மையில் அந்த டைட்டிலுக்கு கவுதம் உழைத்த உழைப்பு ஒரு தனிப் படத்துக்கானது. நியூட்டனின் 3ஆம் விதி டைட்டில் அந்த அளவுக்கு இல்லையென்றாலும் ஏகப்பட்ட ஷாட்களோடு அசத்தலாக ஆரம்பமாகிறது. இப்படத்தின் டைட்டிலை தவறவிடுபவர்கள் நரகத்துக்குப் போவார்கள்.

காதலியைக் கொன்ற வில்லனை ஹீரோ டைம் சொல்லி இரண்டு மணி நேரத்தில் பழிவாங்க வேண்டும். அதே இரண்டு மணி நேரத்தில் ஹீரோவை காலி செய்ய வில்லனும் சதிராட்டம் ஆடுகிறார். இரண்டு மணி நேரமும் கிண்டி பூங்கா சீசா மாதிரி ஹீரோவும், வில்லனும் சுவாரஸ்யமாக ஏறி இறங்குகிறார்கள். ஜெயம் படத்தில் இடைவேளைக்குப் பிறகு முழுமையாகவே க்ளைமேக்ஸ் என்றால், இப்படத்தில் டைட்டிலிலிருந்தே க்ளைமேக்ஸ் தொடங்குகிறது.

காண்டம் மெஷின் காமெடி, பேண்ட் அவிழ்ப்பது என்று வழக்கமான எஸ்.ஜே.சூர்யா கலகல. சூர்யா சீரியஸ் ஆனதுமே ரோபோ மாதிரி ஆகிவிடுகிறார். க்ளைமேக்ஸில் குருதிப்புனல் கமலுக்கு சவால் விடும் நடிப்பு. மீசை வைத்த சூர்யா அழகாகவே இருக்கிறார். இடுப்பு சைஸ் 28 தான் இருக்கும் போலிருக்கிறது. தோற்றம் கல்லூரிப் பெண்கள் காதலிக்கக்கூடியதாகவே இருக்கிறது. மனுஷனுக்கு நாற்பது வயசு இருக்கும் இல்லை?

இந்தக் காட்சியில் சாயாலிபகத் ஏன் கையைக் கட்டிக் கொண்டிருக்கிறார் என்று புரிந்துகொள்ள முடியாதவர்கள் சன்னியாசியாகப் போகக் கடவது!


ஃப்ளாஷ்பேக் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் இவ்வளவு வேகமான ஸ்க்ரிப்டுக்கு அது தேவையே இல்லை. ஓரிரு ஷாட்களில் சுருக்கமாக காண்பித்திருக்கலாம். ஆங்கிலப்படத்துக்கு நிகராக இப்படத்தை எடுத்திருக்கும் இயக்குனர் ‘கமர்சியல் காம்ப்ரமைஸ்’ செய்துக்கொள்ள பாடல்களை தேவையின்றி ஸ்பீட்ப்ரேக்கராய் நுழைத்திருக்கிறார். ஹீரோயினின் அதீதக் கவர்ச்சி காது கிழிய விசில் அடிக்க வைக்கிறது. என்றாலும் இந்த ஒரு காரணத்துக்காகவே இவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தூக்கி உள்ளே போடலாம்.

ஹீரோயின் சாயாலி பகத். சில கோணங்களில் சூப்பர் ஃபிகர். பல கோணங்களில் அட்டு ஃபிகர். சுத்தமாக டைஸே இல்லை. கால் கையெல்லாம் முருங்கைக்காய் மாதிரி ஒல்லிக்குச்சியாய் இருக்கிறது. ஆரம்பக் காட்சிகளில் இவருக்கு தாராள மனதோ என்று நினைத்து ரசிகர்கள் உவகை அடைகிறார்கள். ஆனால் அடுத்தடுத்த காட்சிகளில் க்ளிவேஜ் காட்டும்போது ‘பேட்’ பல் இளித்து ஏமாற்றுகிறது. லென்ஸ் வியூவிலும், மானிட்டரிலும் இதைக்கூட பார்க்காமல் கேமிராமேன் புல் புடுங்கிக் கொண்டிருந்தாரா என்னவென்று தெரியவில்லை.

இயக்குனரின் பெயர் தாய்முத்துச்செல்வன். எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாத இந்தப் படத்தை இயக்குனரின் பெயருக்காகவே பார்த்தேன். சண்டை என்று சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. ஹீரோ பத்து பேரை வானில் பறக்கவிடும் ஹீரோயிஸம் இல்லை. ஆனால் இது அக்மார்க் ஐ.எஸ்.ஓ. 9001 ஆக்‌ஷன் படம். காட்சிக்கு காட்சி என்றில்லை. நொடிக்கு நொடி அசுரவேகம். இயக்குனர் குறைந்தபட்சம் 300 அயல்நாட்டுப்பட டிவிடியாவது ஸ்க்ரிப்ட் தயார் செய்வதற்கு முன்பாக பார்த்திருப்பார்.

கேமிரா, இசை, எடிட்டிங் என்று டெக்னிக்கல் விவகாரங்களும் அபாரம். குறிப்பாக பின்னணி இசை. அயன் படத்துக்கு மொக்கையாக பின்னணி அமைத்த இசையமைப்பாளர் ரெஃபரென்ஸுக்கு இந்தப் படத்தை நாற்பது முறை பார்க்கலாம். குறைகளே இல்லாத படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் நிறைகள் வெகுவாக நிறைந்தப் படம். ஆஹா ஹீரோ ராஜீவ்கிருஷ்ணா தான் வில்லன். ப்ரெஷ்ஷாக இருக்கிறார். என்னா வில்லத்தனம்? வாயை மட்டும் ஆஞ்சநேயர் மாதிரி எப்போதும் வைத்துக் கொள்வதை தவிர்த்திருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக