15 அக்டோபர், 2012

NO BRA DAY

ட்விட்டரில் எப்போதும் எலியும், பூனையுமாக அடித்துக் கொள்ளும் செக்ஸ் குயீன்களான பூனம் பாண்டேவும், ஷெர்லின் சோப்ராவும், இரு நாட்களுக்கு முன்பாக ‘கேப்டன் அம்மா’ மாதிரி திடீர் கூட்டணி அமைத்து ஆச்சரியப் படுத்தினார்கள். விஷயம் என்னவென்றால் அக்டோபர் 13, ‘மார்புக்கச்சை இல்லாத நாளாம்’. அதாவது தமிழில் மொழிபெயர்த்தால்நோ ப்ரா டே’. இருவரும் மார்புக்கச்சை அணியாமல் ஏகப்பட்ட போட்டோக்கள் எடுத்து, ட்விட்டரில் பகிர்ந்து தங்களது ஃபாலோயர்களை ஏகத்துக்கும் குஷிப்படுத்தினார்கள். எலிசபெத் மகாராணி கூடநோ ப்ரா டேகுறித்து ஏதோ ட்விட் போட்டிருக்கிறார்களாம்.

இணையத்தில் மேலதிகமாக இதுகுறித்து தேடி வாசித்தபோது, நிறைய பெண்கள் ‘ப்ரா’ என்பதை அடிமைச் சின்னமாக பார்க்கிறார்கள் என்கிற அவசியத் தகவலை அறிந்துகொள்ள முடிந்தது. அது எவ்வாறு அவர்களை அடிமைப்படுத்துகிறது என்பதை ஒரு ஆணாக உணரமுடியவில்லை. கடந்த அக்.13 அன்று பெண்கள் பலரும் விடுதலையாக ஃபீல் செய்திருக்கிறார்கள். இந்த நாளை சுதந்திரத் திருநாளாக கொண்டாடிய பெண்களைப் பார்த்து வேறொரு பெண் கேலியாகச் சொன்னார், For me every day is No Bra day

நான் பதிமூன்று வயதில் பேண்ட் போட ஆரம்பித்ததில் இருந்தே மேல் உள்ளாடையாக ‘கட் பனியன்’ (கை வைக்காத பனியன்) அணிந்து வருகிறேன். டீஷர்ட் அணியும்போது மட்டும் கட்பனியனுக்கு டாட்டா. என்றாவது பனியன் ஸ்டாக் இல்லாதபோதோ அல்லது மறந்தோ அணியாவிடில், ஆடையே அணியாதது போன்ற ஓர் உணர்வு நாள் முழுக்க uneasyயாக உணரவைக்கும்.

மேற்கத்திய நாடுகளில் 75 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை பெண்கள் ‘பிரா’ அணிவதாக சொல்கிறார்கள். சமீப ஆண்டுகளாக பெண் என்றால் இந்த உடையை அணிந்தே ஆகவேண்டும் என்பதாக ட்ரெஸ்-கோட் கலாச்சாரம் உருவாகியிருக்கிறது. இருப்பினும் நம் நாட்டில் நகர்ப்புறம் தவிர்த்துப் பார்த்தால், ‘பிரா’ இன்னமும் ஓர் ஆடம்பர உடைதான்.

ஓக்கே, நாம் தலைப்புக்கு வருவோம்.

அக்டோபர் மாதம் முழுக்கவே மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப் படுகிறது. இந்த விழிப்புணர்வுக்கு சொல்லப்பட்ட வித்தியாசமான ஐடியாக்களில் ஒன்றுதான் ’நோ ப்ரா டே’. அதாவது “ஏன் இன்று பெண்கள் பிரா அணியவில்லை?” என்கிற சந்தேகம் யாருக்கோ ஏற்பட்டு, என்னை மாதிரி மேலதிகமாக விசாரித்து மார்பகப் புற்றுநோய் பற்றி வாசித்தோ, கேட்டோ விழிப்புணர்வு பெறுவார்கள் என்பதுதான் ஐடியா. இந்த ‘புத்திசாலித்தனமான’ ஐடியாவின் காரணமாகதான் இரண்டு நாட்களுக்கு முன்பாக அந்த ‘டே’ கொண்டாடப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே அமெரிக்காவில் ‘தேசிய மார்புக்கச்சை அணியா தினம்’ வெகுசிறப்பாக ஜூலை 9 அன்று வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் அந்தந்த ஊர் செலப்ரிட்டீஸ்களை போட்டோ எடுக்க அமெரிக்க போட்டோகிராபர்களிடையே வெட்டுக்குத்து கூட நிகழ்வதுண்டு. இவ்வருடம் விழிப்புணர்வுக்காக உலகளாவிய அளவில் களமிறங்கியிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து இந்தியாவில் ஷெர்லின் சோப்ரா, பூனம் பாண்டே ஆகிய இருவரும் ஆதாரப்பூர்வமாக இத்திருநாளை வெகுவிமரிசையாக கொண்டாடியிருக்கிறார்கள். 
ப்ராவுக்கும், மார்பகப் புற்றுநோய்க்கும் மருத்துவரீதியாக, நேரடியாக என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. ஆனால் ப்ரா அணிவதால் மார்பகப் புற்றுநோய் வரக்கூடிய சாத்தியங்கள் கூடுதலாக இருப்பதாக கூறி பதினேழு ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு அமெரிக்கத் தம்பதியர் புத்தகம் எழுதி பரபரப்பு ஏற்படுத்தினார்கள். அந்தப் புத்தகத்தின் பெயரே கொஞ்சம் டெர்ரர் ஆக இருக்கிறது, ‘Dressed to kill’

ப்ரா அணிவதால் இயல்பான இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, அதுவே புற்றுநோய்க்கும் காரணமாகிறது என்று வாதிடுகிறது அந்த புத்தகம். எழுபது சதவிகித மார்பகப் புற்றுநோய், காரணம் சொல்லவியலா காரணங்களால் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அந்த காரணம் ‘பிரா’ தான் என்று அடித்துப் பேசுகிறார்கள் இப்புத்தகத்தின் ஆசிரியர்கள்.

இருபத்தி நான்கு மணி நேரமும் ப்ரா அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு, பிராவே அணியாத பெண்ணுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதை விட நூற்றி இருபத்தி ஐந்து சதவிகிதம் கூடுதல் வாய்ப்பு இருப்பதாக அணுகுண்டை தூக்கிப் போடுகிறார்கள்.

இந்தப் புத்தகம் எழுதப்படுவதற்கு முன்பாக மார்பகப் புற்றுநோய் பாதித்த பெண்களிடம் அவர்கள் ஒரு கணக்கெடுப்பு எடுத்தார்களாம். அதில்,

- மார்பகப் புற்றுநோய் பாதித்த பெண்களில் நான்கில் மூவர் நாள் முழுக்க பிரா அணியும் பழக்கம் கொண்டவர்கள்.

- ஏழில் ஒருவர் ஒரு நாளைக்கு பன்னிரெண்டு மணி நேரமாவது ப்ரா அணிபவர்கள். தூங்கும்போது மட்டும் ஃப்ரீயாக இருப்பவர்கள்.

என்று ஒரு புள்ளிவிவரத்தை அளிக்கிறார்கள்.

இந்த புத்தகத்துக்கு உலகளாவிய ப்ரா ஆதரவாளர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. வருடா வருடம் பல்லாயிரம் கோடி லாபம் பெற்றுத்தரும் ப்ரா விற்பனையை முடக்க நடக்கும் சதியே இந்தப் புத்தகம் என்று ப்ரா விற்பனையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கம் போர்க்கொடி தூக்கினார்கள். போதுமான உண்மையோ, ஆதாரங்களோ, கணக்கெடுப்புகளோ இல்லாத அர்த்தமற்ற புத்தகம் என்று மருத்துவ உலகமும் இந்த புத்தகத்தை முற்றிலுமாக நிராகரித்திருக்கிறது. இருந்தாலும் கொஞ்சம் அச்சமாகதான் இருக்கிறது. கட் பனியன் அணிவதால் இதுமாதிரி ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்படுமா என்று யாரேனும் ஒரு நல்ல மருத்துவரை முதலில் கலந்தாலோசிக்க வேண்டும்.

No Panty Day கூட மேலைநாடுகளில் கொண்டாடப்படுவது உண்டாம். மே மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை இந்த நாளாக கொண்டாடப்படுகிறதாம். அன்றைய நாளில் ஷெர்லினும், பூனமும் என்னென்ன போட்டோக்களை பகிரப்போகிறார்களோ என்று இப்போதே கற்பனை செய்துப் பார்த்து, அதன் விளைவாக கிளுகிளுப்பு கலந்த அச்சம் ஏற்பட்டிருப்பதால் லேசாக டெங்கு காய்ச்சல் அடிக்கிறது.

5 கருத்துகள்:

  1. பிர(ரா)மாதம் யுவா...எது எதுக்கெல்லாம் டே கொண்டாடுராங்க....:(

    பதிலளிநீக்கு
  2. ‘மார்புக்கச்சை இல்லாத நாளாம்’. அதாவது தமிழில் மொழிபெயர்த்தால் ‘நோ ப்ரா டே’//// டே..டே.. ஒரே லொள்ளுதான் போங்கோள்..

    பதிலளிநீக்கு
  3. ’’ நோ ஜாக்கெட் டே ‘’ எப்போ??

    ***

    எல்லா காய்ச்சலும் டெங்கு அல்ல !!
    ;-)

    பதிலளிநீக்கு