3 நவம்பர், 2008

சுண்டக்கஞ்சி வித் பானு!

இன்று பிற்பகல் மூன்று மணியளவில் மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலைக்கு எதிரே அஞ்சப்பருக்கு அருகில் இருந்த பாடாவதி பாரில் ஓல்டுமாங்க் கட்டிங் விட்டுக்கொண்டிருந்தபோது, பக்கத்தில் ராவாக கல்ப் அடித்தவர் என்னிடமிருந்த ஊறுகாயை ஒரு நக்கு நக்கிக்கட்டுமா என்று கேட்டார். நக்கிக்கொள்ள அனுமதித்தேன். அதற்கு நன்றிக்கடனாக நீலாங்கரை பானு கடையில் இன்று இரவு 9.30 மணிக்கு சுண்டக்கஞ்சி பார்ட்டி நடப்பதாகவும் திருவாளர் தூ சரக்கடித்து போதையேற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடப்பதாகவும் தெரியப்படுத்தினார். நான் பானு கடைக்கு சாதாரணமாக செல்வதில்லை. பானு கடை சரக்கில் சல்பேட்டா குறைவாக இருப்பதால் போதை ஏறாது. இருப்பினும் தூ கலந்துகொண்டு மப்பு ஏத்துவதால் சல்பேட்டா தூக்கலாக இருக்கும் என்று நானும் நீலாங்கரைக்கு சென்று போதையேற்றிக் கொள்ள முடிவு செய்தேன். குடிகாரனாக, முடிச்சவிக்கியாக, மொள்ளமாறியாக, பிக்பாக்கெட் திருடனாக பல அவதாரங்கள் எடுத்துள்ள தூ அவர்கள் எவ்வாறு சரக்கடித்து மட்டையாவார் என்ற எதிர்பார்ப்போடு பானு அவர்கள் ஒரு சொம்பு சரக்கை எடுத்துக் கொடுத்தார். தொட்டுக்கொள்ள கடம்பா தொக்கு. தூ அவர்கள் அந்த சொம்பை ஒரே மூச்சில் கல்ப்பாக அடித்து தான் பரம்பரை குடிகாரன் என்று தன்னை வகைப்படுத்தினார். குடிகாரர்கள் மத்தியில் இவரை பேட்டை பிஸ்தாவாக பார்த்திருக்கிறார்கள். பேட்டைக்காரர்கள் இவரை பிக்பாக்கெட் திருடனாக பார்த்திருக்கிறார்கள். பிக்பாக்கெட் ஆட்களோ இவரை முடிச்சவிக்கியாக பார்த்திருக்கிறார்கள். ஆக இவர் ஒரு ஒட்டுமொத்த கம்முனாட்டி என்று பானு கூற அது தான் தனது தனித்தன்மை என்று தூ கூறினார். தூ அவர்கள் மேலும் சரக்கு அடிக்கையில் போதை தலைக்கேறி தன்னுடைய தந்தை சாராயம் குடிப்பதில் செய்த சாதனைகளுக்காக பெற்ற சிறந்த குடிகாரன் விருதைப் பற்றி உளறினார். அந்த விருது இந்தியாவிலேயே இதுவரை இருவருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது என்று சொன்னார். அவரை பேர் சொல்லி யாரும் அழைத்ததில்லை. கட்டிங் கபாலி என்றுதான் அவரை குறிப்பிடுவார்கள் என கூறினார். அவருடைய நெருங்கிய குடிகாரர்கள் வீட்டுக்கு வந்தால் கூட "கட்டிங் கபாலி நிதானத்தில் இருக்கானா" என்றுதான் கேட்பார்கள் என்பதையும் தெரிவித்தார். நிதானத்தில் அவர் இருந்தால் வந்த நண்பர்கள் கட்டிங் ஊற்றி மீண்டும் போதை ஏற்றுவார்கள் என்பதையும் தெரிவித்தார். மொத்தத்தில் அவர் ஒரு நடமாடும் சாராயக்கடை என்று முத்தாய்ப்பு வைத்தார். தூ அவர்கள் தான் முதலில் என்னவாக வரவேண்டும் என்ற லட்சியம் வைத்திருந்தார் என சரக்கு ஊற்றியவாறே பானு வினவ, அவர் தனது வாழ்க்கையே ஒரு இலக்கில்லாத சரக்கு தேடல் என்று கூறினார். குடிகாரன், மொள்ளமாறி, முடிச்சவிக்கி என்று எல்லா அவதாரங்களும் சரக்கு அடித்த போதையின் பயனாக வந்தன என்று குறிப்பிட்டார். எல்லாவற்றையும் சரக்கு ஏற்றிக்கொண்டு போதையோடு அணுகுவது பற்றி பேசும்போது பல தருணங்களில் இந்த போதையால் தான் செருப்படிப்பட்ட சங்கடமான தருணங்களையும் நினைவுகூறினார். ஒரு குடம் சுண்டக்கஞ்சியை லைட் அவுஸுக்கு அருகில் பீச்சு மணலில் புதைத்து வைத்திருப்பதாகவும் அது சில நூற்றாண்டுகள் கழித்து வெளியே வரும்போது செம கப்பையும், போதையையும் (பிரெஞ்சுக்காரர்கள் வைன் பதப்படுத்தி வைத்திருப்பதை போல) தருமென்றும் கூறினார். 300, 400 ஆண்டுகளுக்கு பிறகு சுண்டக்கஞ்சியை எல்லாம் தயார் செய்ய யாரால் இயலும் என்று போதை தலைக்கேறி குறிப்பிட்டார். பிறகு தான் சரக்கு உலகுக்கு வந்தது பற்றியும் குறிப்பிட்டார். பனைமரத்தில் இறக்கி பதினைந்து நாளான கள்ளை யாரும் குடிக்க முன்வராத நிலையில் தான் குடித்ததாகவும் கூறினார். பின்னர் அதனால் போதை தலைக்கேறி ஒவ்வொரு பனைமரமாக ஏறி கள்பானையை ஆட்டை போட்டதையும் குறிப்பிட்டார். தூ பார்களில் சரக்கு அடிக்க ஆரம்பிக்கும் சில நிமிடங்களுக்கு முன்னால் வரை பாருக்கு வெளியே நின்று கேஷூவலாக கஞ்சா அடிப்பார் என்றும் கடம்பா மற்றும் நெத்திலி தொக்கு வாசனை பாருக்கு வெளியே வந்ததும் தானே உள்ளே போவார் என்றும் அங்கே சரக்கு அடித்துக் கொண்டிருந்த காவாலி குறிப்பிட்டார். தூ குறுக்கிட்டு தன்னுடைய இந்த சைட் டிஷ் வெறியே தன்னை பல பார்களில் சரக்கு அடிக்க விடாமல் செய்தது என குறிப்பிட்டார். தன்னுடைய ஆயா மண்டையைப் போட்ட சோகமான சந்தர்ப்பத்திலும் சரக்கு அடித்துவிட்டு மட்டையாகி, மீண்டும் போதை தெளிந்து தப்பாங்குத்து ஆடியது பற்றியும் குறிப்பிட்டார். இப்போது பானு அவர்கள் Sundakanji Award என்பதை பற்றி கூறினார். இந்த அவார்டு வழங்கப்படுபவருக்கு பானு கடையில் வாராவாரம் ஓசியில் சுண்டக்கஞ்சி குடிக்கலாம். தூ அவர்கள் அழுத்தம் திருத்தனமாக அந்த அவார்டை தனக்கே வழங்கிக் கொள்வேன் எனக் கூறினார். இந்த விஷயத்தில் தானே வாங்கி தானே சரக்கடிப்பது என்ற குடிகாரர்களின் கலாச்சாரத்தை பின்பற்றி, ஊரோடு ஒத்து குடித்து வாந்தியெடுப்பது கோட்பாட்டின்படி அவ்வாறு செய்வதாக கூறினார். தான் மட்டுமன்றி தன்னுடைய குடும்பமே குடிகார குடும்பம் என்பதையும் பெருமிதமாக குறிப்பிட்டார். இப்போது சுண்டக்கஞ்சி அவார்ட் தரும் நேரமும் வந்தது. பானு சுண்டக்கஞ்சி நிரம்பிய ஒரு குடத்தை எடுத்துவர, அதைப் பறித்துக்கொண்டு வீட்டுக்கு தூ ஓடினார். அவர் அன்றைய இரவு முழுவதும் சுண்டக்கஞ்சி அடித்தே சுருண்டு படுத்துக் கொள்வார் என்பதை அறிந்து அனைவரும் தள்ளாடியபடியே நடந்து சென்றனர். இந்த சரக்கடிக்கும் நிகழ்ச்சி பற்றி எனக்கு தகவல் அளித்த ஊறுகாய் நக்கிக்கு (ஏம்பா, சரக்கடிக்க வரும்போது ஊறுகாய் கொண்டுவரமாட்டீங்களா என்பது புரளி மனோஹர்). சரக்கடிக்கும் பார்ட்டியின் நடுவில் என்றென்றும் போதையுடன் மாலாவிடமிருந்து ஃபோன். அவரும் என்னைப் போலவே காசிமேட்டில் சரக்கு அடித்துக் கொண்டிருப்பதாகவும், போதை பத்தவில்லை. ஒரு ஃபுல்லோடு சைட் டிஷ் கொண்டு வர இயலுமா என்று கேட்பதற்காக போன் செய்துள்ளார். அவரிடம் ஏற்கனவே நான் சரக்கு தான் அடித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினேன். அவரும் அயோத்தியாக் குப்பத்துக்குப் போய் சுண்டக்கஞ்சி அடிக்கப் போவதாய் சொன்னார். அளவில்லாத போதையுடன் காண்டு கஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக