11 டிசம்பர், 2008

மூன்று மொக்கைப் படங்கள்!

சூப்பர் ஸ்டார் நடித்த குசேலன் தான் சென்ற வருடத்தின் சிறந்த மொக்கைப்படம் என்றாலும், 2008ல் வெளிவந்த படங்கள் பெரும்பாலானவை மொக்கைப் படங்கள் என்பதால் இப்போது 'மொக்கைப் படங்கள்' என்ற ஒரு கேட்டகிரியே அழிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உப்புமா தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அஞ்சும் நிலையில், சமீபத்தில் வெளியான மூன்று மொக்கைப் படங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. யப்பா ஃபுல் ஸ்டாப் இல்லாம எவ்ளோ பெரிய வாக்கியம்?



மேகம்

தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸ் செய்ய தேறாத நிலையில் அஜித்தின் ஏகனோடும், பரத்தின் சேவலோடும் வெளியான சூப்பர் படம். தமிழரசன் என்பவருக்கு சினிமாவில் நடிக்க ஆசையிருந்தது. அவரை வைத்து யாரும் படமெடுக்க முன்வராத நிலையில் அவரே அதிரடியாக தயாரித்து ஹீரோவாக நடித்தப் படம். கிட்டத்தட்ட ஒரு மேட்டர் படம். படத்தை வெளியிடமுடியாத சூழல் ஏற்பட்டிருந்தால் 'பிட்' இணைத்து ஜோதியிலும், பல்லாவரம் லஷ்மியிலும் வெளியிடப்பட்டிருக்கும்.

இப்படத்தின் கதை உலகத் திரைப்படங்களுக்கெல்லாம் சவால் விடக்கூடியது. மெக்கானிக்கான ஹீரோ பேங்கில் வேலை செய்யும் ஒரு சுமார் ஃபிகரை லவ்வுகிறார். கல்யாணமும் செய்துக் கொள்கிறார். இந்நிலையில் முதலிரவில் முக்கியமான கட்டத்தில் நெஞ்சுவலி என்று சொல்லி ஹீரோயின் மயங்கி விழுகிறார். ஹார்ட்டில் ஏதோ பிரச்சினையாம். ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்டிடம் போகிறார்கள். ஹார்ட்டு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் ஹீரோயினின் கற்பை ஆட்டை போட்டு கொன்று விடுகிறார்.

அந்த டாக்டரின் மனைவியை பதிலுக்கு ஹீரோ வன்புணர்வு செய்து, அதை கேமிராவில் படமாக்கி டாக்டருக்கு போட்டு காட்டுவது தான் கதை. பழிக்குப் பழி! :-(

ஹீரோ தமிழரசனுக்கு 40 வயது இருக்கலாம். விக் வைத்து ஒப்பேற்றுகிறார். இவருக்கு இரண்டு டூயட்டும் உண்டு. ராஜ்கிரண் ரேஞ்சுக்கு இருக்கும் இவர் காதலிக்கும் காட்சிகள் படா கொடுமை. டாக்டரின் மனைவியாக வரும் ஃபிகர் நன்கு 'சீன்' காட்டுகிறார். ஃபேஸ் கட் கொஞ்சம் சுமாராக இருந்தாலும் மேற்படி மேற்படி மேட்டர்களில் இயக்குனருக்கு ரொம்பவும் ஒத்துழைப்பு 'காட்டி'யிருக்கிறார்.



எல்லாம் அவன் செயல்!

ஆர்.கே. என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஏதோ சில சினிமா கம்பெனிகளில் எடுபிடியாக இருந்தாராம். எப்படியோ அப்படி இப்படியென்று முன்னேறி கொஞ்சம் துட்டு சேர்த்துவிட்டாராம். ஆர்.கே.ஆர்ட்ஸின் 'எல்லாம் அவன் செயல்' படத்தில் ஹீரோவாகவும் நடித்துவிட்டார். கோயம்பேடு ரோகிணி வளாகத்தில் இவருக்கு வாழ்த்துப் பேனர்கள் நூற்றுக்கணக்கில் வைக்கப்பட்டிருக்கிறது. வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷே இவரிடம் தோற்றுவிடக் கூடிய லெவலுக்கு பிராண்ட் பில்டிங் செய்துக் கொண்டிருக்கிறார்.

மிகக்கொடூரமான குற்றவாளிகளின் கேஸ்களை எடுத்து சாமர்த்தியமாக வாதாடி விடுதலை வாங்கித் தருவது வழக்கறிஞர் எல்.கே.வின் வாடிக்கை. மகளையே வன்புணர்வு செய்தவன், டீச்சர் ஒருவரை கொடூரமாக வன்புணர்ந்து சாகடித்தவன் போன்ற கேப்மாறி, மொள்ளமாறி, முடிச்சவிக்கி, பொறம்போக்குகளுக்கெல்லாம் வாதாடி அவர்களை விடுதலை செய்ய வைக்கிறார் எல்.கே. விடுதலையான மொள்ளமாறிகளுக்கு அடுத்த சில நாட்களிலேயே உலகத்திலிருந்தும் விடுதலை வாங்கித் தருகிறார். "இந்த கேசுலே நீ மாட்டிக்கிட்டாலும், உயர்நீதி, உச்சநீதி மன்றங்களுக்கெல்லாம் அப்பீல் பண்ணி, ஜெயில்லே சுகவாழ்க்கை வாழ்வே. அதனாலே என் வழியிலே நான் நீதியை தருகிறேன்!" என்று தன் செயலுக்கு நியாயமும் கற்பிக்கிறார்.

சிந்தாமணி என்ற மருத்துவக் கல்லூரி மாணவி ராக்கிங் கொடுமையால் சில பணக்கார மாணவிகளால் கொல்லப்பட அந்த வழக்கிலும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராகிறார் எல்.கே. கேசை உடைத்து குற்றவாளிகளை காப்பாற்றுகிறார். வழக்கம்போல தான் காப்பாற்றியவர்களை தானே கொல்கிறாரா? என்பது தான் க்ளைமேக்ஸ்.

மொக்கையான ஹீரோ என்றாலும் வலுவான கதை, திறமையான இயக்குனரால் (ஷாஜி கைலாஸ்) இப்படம் மொக்கைப்படம் என்ற கேட்டகிரியில் இருந்து விலகி நிற்கிறது. இடைவேளைக்குப் பிறகு படம் நிஜமாலுமே சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனாலும் ஹீரோ டிராகுலா குரலில் அவ்வப்போது க்ளோசப்பில் மந்திரங்கள் சொல்லும்போது தியேட்டரில் திருட்டுத்தனமாக காதலனோடு படம் பார்க்க வந்த காதலிகள் பயந்துவிடுகிறார்கள்.

'சிந்தாமணி கொலை கேசு' என்ற மலையாளப் படத்தின் தழுவல் இது. வணிகத்துக்காக வடிவேலுவின் காமெடி ட்ராக் படத்தோடு ஒட்டாமல் தனியாக சேர்க்கப்பட்டிருக்கிறது. ஹீரோ ஆர்.கே. தான் படுத்துகிறார் என்றால் வடிவேலு அதைவிட படுத்துகிறார். சமீபகால வடிவேலுக்கு இப்படம் ஒரு திருஷ்டி படிகாரம்.

நல்லவேளையாக ஆர்.கே.வுக்கு ஹீரோயினோ, டூயட்டோ இல்லாததால் ரசிகர்கள் தப்பித்தார்கள். வீரத்தளபதி ஜே.கே.ஆர் மட்டும் இப்படத்தில் நடித்திருந்தால் இப்படம் ஒரு ஆண்டு ஓடியிருக்கும் என்பது உறுதி.
சாமிடா!
முழுக்க முழுக்க காசியில் எடுக்கப்பட்ட படம் என்று விளம்பரம் செய்யப்பட்டு பரப்பரப்பை ஏற்படுத்தியது விளம்பரங்களும், போஸ்டர்களும். விளம்பரங்களை கண்டவர்களுக்கு இது மொக்கைப்படம் என்பது விளங்கவே விளங்காத அளவுக்கு பக்கா பர்ஃபெக்‌ஷன். 'நான் கடவுள்' திரைப்படம் மூன்று ஆண்டுகளாக எடுக்கப்பட்டேஏஏ... கொண்டிருக்க, அந்த கதையை நைசாக உருவி, தழுவி இப்படத்தை அவசரகதியில் எடுத்துத் தள்ளிவிட்டார்கள் என்று திரையுலகில் கிசுகிசுக்கிறார்கள். நான் கடவுள் படத்தின் கதை என்னவென்று அப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பாலாவுக்கே தெரியாத நிலையில் 'சாமிடா' படக்குழுவுக்கு எப்படி தெரிந்தது என்பது தான் ஆச்சரியம்.
டிவி நடிகரும், சினிமாக்களில் அடியாள் மற்றும் துண்டு கேரக்டர்களில் நடித்து வருபவருமான ஒருவரை ஹீரோவாக்கி விஷப்பரிட்சை எழுதியிருக்கிறார்கள். ஹீரோ பெயர் செம்பியாம். சொம்பு என்றே வைத்திருக்கலாம். காதல் காட்சிகளில் சொம்பு மாதிரி இருக்கிறார். இத்தனைக்கும் ஹீரோயின் அந்த காலத்து ஷோபா மாதிரி செம ஃபிகர். ஹீரோயின் அழகாக இருந்தாலும் ரியாக்‌ஷன் கொடுமை. மேட்டர் படங்களில் பலான காட்சிகளில் கொடுக்கப்படும் ரியாக்‌ஷனையே காதல் காட்சிகளில் கொடுக்கிறார். பின்னணி இசையும் மேட்டர் பட லெவலுக்கே இருக்கிறது. ஒரு சில அஜால் குஜால் காட்சிகள் இணைக்கப்பட்டிருந்தால் ஓரளவுக்கு திருப்தியாக இருந்திருக்கும்.
மிக மிக சாதாரணமான தாதா கதை. சொர்ணாக்கா மாதிரி கேரக்டருக்கு பிந்துகோஷ் மாதிரி ஒரு நடிகையை நடிக்கவைத்து ரசிகர்களை கேலி செய்திருக்கிறார் இயக்குனர். படம் முடியும்போது 'அப்பாடா' என்று நிம்மதியோடு தியேட்டரை விட்டு தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று ஓடவேண்டியிருக்கிறது.
இந்தளவுக்கு கேணைத்தனமாக, மொக்கைத்தனமாக எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படத்திலும் கேமிரா மேஜிக்கை செய்திருக்கிறது. அனேகமாக டிஜிட்டலில் படமாக்கியிருப்பார்கள் என்று தெரிகிறது. இயல்பான வெளிச்சம் கண்ணுக்கு இதமென்றாலும், நிழல் அதிகமாக இருக்கும் காட்சிகள் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. காசியை கேமிரா ஒட்டுமொத்தமாக அள்ளிக்கொண்டு பிரமாதமாக காட்டுகிறது. இந்த கேமிராமேனுக்கு நல்ல இயக்குனர் யாராவது வாய்ப்பளித்தால் தேவலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக