28 ஆகஸ்ட், 2009

தியாகம்?


“ஏன் அந்த தாத்தா வித்தியாசமா டிரெஸ் பண்ணியிருக்காரு?” டிவியில் ஏதோ செய்திகளுக்கு இடையில் காட்டப்பட்ட அந்த தேசத்தலைவரை பார்த்ததும் கேள்வி கேட்டான் நவீனன். பத்து வயது தான் ஆகிறது. பதினாறு வயதுக்கான அறிவு அவனுக்கு. கண்டது, கேட்டது எதையுமே கேள்விக்குள்ளாக்குவான்.

“அது ஒரு பெரிய கதை நவீனா!” மஜூம்தார் பதிலளித்தார். சமகால புரட்சி தமிழ் எழுத்துக்களை வாசித்தவர்கள் யாரும் மஜூம்தாரை புறக்கணிக்க முடியாது. மிகப்பிரபலமான மாற்று சிந்தனை எழுத்தாளர்.

“கதை கேட்பது எனக்கு பிடிக்கும் என்பது உனக்கு தெரியாதா? சொல்லு.. சொல்லு!” பேரன் கேட்கும் எல்லா கேள்விகளுக்குமே விடையளிப்பது மஜூம்தாருக்கு பிடித்தமான விஷயம். எழுதிக் கொண்டிருந்தவர் பேனாவை மூடிவிட்டு, கண்ணாடியை சரிசெய்து கொண்டு சொல்ல ஆரம்பித்தார்.

“நம் நாடு சுதந்திரம் வாங்குவதற்கு 25 ஆண்டுகள் முன்பாக நடந்த விஷயம் அது. நீ பார்த்த தேசத்தலைவர் அப்போதெல்லாம் முழுமையான உடையை தான் அணிந்து கொண்டிருந்தார். ஒருமுறை அவர் நம்முடைய மதுரைக்கு வந்திருந்தார். மதுரை தெரியுமில்லையா உனக்கு? ஒரு கோயிலுக்கு கூட கூட்டிச் சென்றிருக்கிறேனே?”

“தெரியும். மேலே சொல்லு!”

“மதுரையில் அப்போது நிறைய பேர் இப்போது நீ பார்த்தாயே அந்த தலைவரை போல தான் உடையணிந்திருந்தார்கள். அவர்களை பார்த்ததுமே அவருக்கு மனம் உடைந்துப் போனது. எனது நாட்டில் உடலை முழுமையாக மறைக்க உடை கூட இல்லாமல் மனிதர்கள் இருக்கிறார்களே? என்று நொந்துப் போனவர், நானும் இனி இவர்களை போல தான் உடையணியப் போகிறேன் என்று தனது வழக்கமான உடைகளை துறந்தார்”

“சாகும் வரை இப்படித்தான் உடையணிந்திருந்தாரா?”

“ஆம். அரசியல் பேச்சுவார்த்தை நிமித்தமாக அயல்நாடுகளுக்கு சென்றபோது கூட இதே உடையோடு தான் சென்றார். எப்பேர்ப்பட்ட தியாகம் பார்!”

“இதிலென்ன தியாகம் இருக்கிறது? அவரது உடையை அவர் துறந்து விட்டதால் நாட்டில் எல்லோருக்கும் முழுமையான உடை கிடைத்து விட்டதா என்ன? அவர் உடையை துறந்து எண்பத்தி ஐந்து ஆண்டுகள் கழித்தும் நிலைமையில் பெரிய மாற்றம் எதுவும் வந்துவிடவில்லையே? சென்ற வாரம் கூட ஒரு கட்டைவண்டி கிழவர் வெறும் கோவணத்துடன் வண்டி இழுத்துச் சென்றதை நீயும் தானே பார்த்தாய்?”

“மாற்றம் வந்துவிடவில்லை என்று ஒப்புக் கொள்கிறேன். ஆனாலும் அவரது தியாகம் மெச்சக்கூடியது தானே? இந்த நாட்டின் கடைக்கோடி குடிமகனின் நிலையை தன் உடையில் கூட அவர் பிரதிநிதித்துவப் படுத்தினாரே?”

“ரெட்டைமலை சீனிவாசன் என்பவரை பற்றி உங்களுக்கு தெரியும் தானே? இதே தலைவர் சென்ற அயல்நாடுகளுக்கு அவர் கோட்டும், சூட்டும் அணிந்து சென்றாரே? அம்பேத்கர் என்றதுமே நீலக்கலர் கோட், சிகப்பு கலர் டை அணிந்த உருவம் தானே நமக்கு நினைவு வருகிறது? இவர்களெல்லாம் அவர்கள் சார்ந்த மக்களை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்கிறீர்களா?”

“உன்னிடம் பேசி என்னால் கூட ஜெயிக்க முடியாது. அந்த தலைவர் இந்த உடையில் இருந்ததில் உனக்கு என்ன பிரச்சினை?”

“எனக்கு எந்தப் பிரச்சினையும் கிடையாது. நல்லவேளையாக நான் இப்போது இருக்கும் கோலத்தை கண்டு எந்தத் தலைவராவது உணர்ச்சிவசப்பட்டு விடக்கூடாது என்று விரும்புகிறேன்”

நவீனன் அப்போது ஜட்டி மட்டுமே அணிந்திருந்தான். ஒரு நாளைக்கு அறுபது முறை மின்சாரம் தடைபடும் நாட்டில் அவனுக்கு இந்த உடையோடு வீட்டில் இருப்பதுதான் வசதியாக இருக்கிறது.

17 கருத்துகள்:

  1. //“ஏன் அந்த தாத்தா வித்தியாசமா டிரெஸ் பண்ணியிருக்காரு?” //

    ரெட்டைமலை சீனிவாசன், அம்பேத்கர் பத்தியெல்லாம் தெரிஞ்ச பத்து வயது நவீனனுக்கு காந்தியை தெரியலையா?
    லாஜிக் ஒதைக்குதே!

    பதிலளிநீக்கு
  2. காந்தி தாத்தாவைப் பற்றி நவீனனுக்கும் தெரியும். இருந்தாலும் தன்னுடைய தாத்தாவை நோண்டும் விதமாக கேட்கிறான். - இப்போ லாஜிக் ஓக்கேங்களா? :-)

    பதிலளிநீக்கு
  3. //ஜிக் ஓக்கே//

    இல்லை. லுக்கிலக் உங்கள் பதிவில் அப்படி இல்லை. ஆமாம் தினம் ஒரு பதிவு போடுகிறீர்களே. உங்கள் அலுவலகத்தில் எப்படி வேலை செய்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  4. //தினம் ஒரு பதிவு போடுகிறீர்களே. உங்கள் அலுவலகத்தில் எப்படி வேலை செய்கிறீர்கள்//

    நான் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். பதிவு போடுவதுதான் என் வேலையே! :-)

    பதிலளிநீக்கு
  5. சரி சரி... சமாளிஃபிகேசன் லாஜிக் ஓக்கே!

    இப்ப இருக்கும் சின்னப் பசங்க எல்லாம் நாம சின்னப் பசங்களா இருக்கும் போது தெரிஞ்சதை விட அதிகமா தான் தெரிஞ்சி வச்சிருக்காங்க.

    அந்த வகையில லாஜிக் ஓக்கே தான்!

    சொன்னா நம்புவீங்களா? சமீபத்துல (டோண்டுவின் சமீபத்தில் அல்ல) ஒரு இணைய உலாவியகத்தில உலாவிட்டு வெளிய வரும்போது தற்செயலா பக்கத்துல உலாவிட்டு இருந்த ஒரு சின்ன பையனின் கணினித் திரையை பார்த்துட்டு சூப்பர்ஸ்டார் அண்ணாமலை படத்துல சொன்ன மாதிரி "கடவுளே! கடவுளே! கடவுளே!..."ன்னு சொல்லிகிட்டே வெளியில வந்தேன்.

    ஹூம்... மிஞ்சிப் போனா அந்த பயலுக்கு 10-11 வயசு தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. லக்கிண்ணா! நல்ல வேளை! காந்தி மதுரையோட நின்னுட்டாரு, மதுரையத் தாண்டி கொடக்கானலு மலப்பக்கம் போயிருந்தாருன்னா, அங்க இருந்த ஆதிவாசிகளப் பாத்துப்புட்டு இன்னும் பெரிய தியாகத்த செஞ்சுருப்பாரு.....

    பதிலளிநீக்கு
  7. \\நான் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். பதிவு போடுவதுதான் என் வேலையே! :-)
    \\

    பத்திரப்பதிவு அலுவலகங்களில் இப்போ ரெய்டாமே.

    தப்பிச்சுட்டீங்களா?

    பதிலளிநீக்கு
  8. //நான் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். பதிவு போடுவதுதான் என் வேலையே! :-)
    //
    நான் சிவப்பு விளக்கு பகுதியில் வேல பாக்க போறேன்

    பதிலளிநீக்கு
  9. இதுவும் ஒரு மீள்பதிவுதானே யுவகிருஷ்ணா? இதற்கு வந்த பின்னூட்டங்களை மீள்பதிவு செய்யவில்லையா? நானும் ஒரு பின்னூட்டமிட்டிருந்தேன் (முதன் முறை பதிவு வெளியாகி இருந்த போது) அதைக் காணோமே என்றுதான்....

    பதிலளிநீக்கு
  10. //“ஏன் அந்த தாத்தா வித்தியாசமா டிரெஸ் பண்ணியிருக்காரு?” //

    ரெட்டைமலை சீனிவாசன், அம்பேத்கர் பத்தியெல்லாம் தெரிஞ்ச பத்து வயது நவீனனுக்கு காந்தியை தெரியலையா?
    லாஜிக் ஒதைக்குதே!



    வழி மொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. புவனா! அந்தப் பதிவுகளையும், பின்னூட்டங்களையும் காக்கா தூக்கிட்டுப் போயிடிச்சி :-( இரண்டரை வருஷப் பதிவுகள் மொத்தமா காலி!!

    அதனால் தான் ஜிமெயில் ஆர்க்கீவ்ஸில் மிஞ்சியிருக்கும் பதிவுகளை எடுத்து அவ்வப்போது மறுபடியும் வலைப்பதிவை புதுசாக அப்டேட் செய்து வருகிறேன்!

    பதிலளிநீக்கு
  12. //அதனால் தான் ஜிமெயில் ஆர்க்கீவ்ஸில் மிஞ்சியிருக்கும் பதிவுகளை எடுத்து அவ்வப்போது மறுபடியும் வலைப்பதிவை புதுசாக அப்டேட் செய்து வருகிறேன்!
    //

    புதுசு புதுசா சிந்திங்க தல

    பதிலளிநீக்கு
  13. சிரிக்கவும் சிந்திக்கவும்..

    பதிலளிநீக்கு
  14. //
    யுவகிருஷ்ணா 12:29 PM, August 28, 2009
    //தினம் ஒரு பதிவு போடுகிறீர்களே. உங்கள் அலுவலகத்தில் எப்படி வேலை செய்கிறீர்கள்//

    நான் பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். பதிவு போடுவதுதான் என் வேலையே! :-)
    //

    ஆஹா....செம டைமிங் :0))))

    பதிலளிநீக்கு
  15. //
    “ரெட்டைமலை சீனிவாசன் என்பவரை பற்றி உங்களுக்கு தெரியும் தானே? இதே தலைவர் சென்ற அயல்நாடுகளுக்கு அவர் கோட்டும், சூட்டும் அணிந்து சென்றாரே? அம்பேத்கர் என்றதுமே நீலக்கலர் கோட், சிகப்பு கலர் டை அணிந்த உருவம் தானே நமக்கு நினைவு வருகிறது? இவர்களெல்லாம் அவர்கள் சார்ந்த மக்களை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை என்கிறீர்களா?”
    //

    ரெட்டைமலை சீனிவாசன், அம்பேத்கர்...இவர்களின் கோட் பற்றி பேசும் போது சாரு (நிவேதிதா) சொன்ன ஒரு காரணம் ஞாபகம் வருகிறது...

    அந்த வகையில் காந்தியின் உடையை விட, அம்பேத்கரின் உடை ஏற்படுத்திய தாக்கங்கள், அது சொல்லும் செய்திகள் மிக அதிகம்...

    பதிலளிநீக்கு
  16. ///புவனா! அந்தப் பதிவுகளையும், பின்னூட்டங்களையும் காக்கா தூக்கிட்டுப் போயிடிச்சி :-( ///
    அந்த காக்கா யாருன்னு கண்டுபிடிச்சியா லக்கி
    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்
    bostonsriram.blogspot.com

    பதிலளிநீக்கு