10 ஆகஸ்ட், 2010

ஸ்ரீமதி ஜூலியாராபர்ட்ஸ்!

மேலைநாட்டு மிஷனெரி மதத்தில் பிறந்தவர் ஸ்ரீமதி ஜூலியா ராபர்ட்ஸ். ஜார்ஜியா என்ற மிஷனெரி வெறி பிடித்த நாட்டில் பிறந்தவர். நேற்றுவரை நம் புண்ணிய பூமியாம் பாரதத்தின் புராதன புனித மதமாம் ஹிந்து மதம் பற்றி அறியாதவர். ஆனால் இன்றோ தங்கத்தாரகையை விடவும் சிறப்பாக மந்திரங்கள் சொல்கிறார். மனமுருகி பாடுகிறார். எப்படி நடந்தது இந்த அற்புதம்?

’சாப்பிடு, ஸ்ரீராமனை தொழு மற்றும் கண்ணனை காதல் செய்’ (Eat, Prey and Love) என்ற பெயரில் மிஷனெரி மொழித் திரைப்படம் ஒன்று தற்சமயம் மேலைநாட்டு ஆஞ்சநேயர் பக்தர்களால் எடுக்கப்பட்டு வருகிறது. கதைப்படி கதாநாயகி ஸ்ரீமதி ஜூலியாராபர்ட்ஸ் ஆன்மீக அனுபவம் நாடி புண்ணிய பாரதத்துக்கு வருகிறார். அங்கே புனிதமதமாம் நம் ஹிந்துமத்த்தின் அருமை பெருமைகளை உணர்கிறார். இறுதியாக கரசேவைக்கு ஊர் ஊராகச் சென்று பிச்சையெடுத்து செங்கல் சேர்த்து, ஸ்ரீராமருக்கு கோயில் கட்டுவதாக படம் முடிகிறது.

இந்தக் கதையைக் கேட்டு, உணர்ச்சிவசப்பட்டு கதறியழுத ஸ்ரீமதி ஜூலியாராபர்ட்ஸ், இத்தகைய தெய்வீக அனுபவங்களை தரும் புனிதமதமாம் ஹிந்துமதத்தில் இணைந்து ஏன் பக்தமீராவைப் போல கண்ணனுக்கு சேவை செய்யக்கூடாது என்று எண்ணினார். சீர்மிகு அரியானாவுக்கு வந்து அங்கே ஹர்மந்திர் என்ற புண்ணியஸ்தலத்தில் சுவாமிதர்மதேவ் என்பாரிடம் ஆசிபெற்றார். தன்னுடைய குழந்தைகளுக்கு கூட ஸ்ரீராமர், ஸ்ரீபலராமர் போன்ற கடவுளர்களின் பெயரை சூட்டிக் கொண்டார். முழுமையான ஹிந்துவாக மாறி சொர்க்கத்துக்கு செல்பவர்களின் பெயர் பட்டியலில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

சுவாமி தர்மதேவ் அவர்கள் ஸ்ரீமதி ஜூலியாவின் இந்த நல்மதமாற்றம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். படப்பிடிப்புக்காக கோயில் செட் போடப்பட்டிருந்ததாம். அங்கே உடுக்கை சிலம்பு அடித்தபோது ஸ்ரீமதி ஜூலியா ராபர்ட்ஸுக்கு சாமி வந்து ஆடியதாகவும், அதன்பின்னர் சாமியை மலையேற்றி, அவரது கையில் சிகப்புக் கயிறை கட்டி, நெற்றியில் திலகமிட்டதின் மூலமாக மிஷனெரி மதத்தில் அவர் பிறந்த பாவம் கழுவப்பட்டு, புண்ணிய கணக்கு கூடியிருப்பதாகவும் சுவாமி தர்மதேவ் அவர்கள் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

மிஷனெரி நாடுகளின் குகையான அமெரிக்காவிலேயே புண்ணிய ஹிந்துக்களுக்காக ’ஹிந்து சர்வதேச சங்கம்’ நடத்திவரும் ஸ்ரீமான் ராஜன்சேத், ஸ்ரீமதி ஜூலியாவின் இம்முடிவை வரவேற்றிருக்கிறார். ஸ்ரீமதி ஜூலியாவின் முடிவினைத் தொடர்ந்து ஸ்ரீமதி ஏஞ்சலினா ஜோலி, ஸ்ரீமதி கேட் வின்ஸ்லெட், ஸ்ரீமதி சாரா ஜெசிக்காபார்க்கர் ஆகியோரும் புண்ணிய மதத்தை தழுவிட வேண்டுமென்று 80 கோடி புனிதமக்களாம் ஹிந்துமக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறோம்.

ஸ்ரீமதி ஜூலியா ராபர்ட்ஸ் அவர்களை அண்டோமேனியாக்கள் முன்னுதாரணமாக கொண்டு செயல்பட்டால் புண்ணிய பாரதம் வளம்பெறும் என்பது கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பது மாதிரியான பகிரங்க உண்மை. விரைவில் ஸ்ரீமதி ஜூலியாராபர்ட்ஸ் காஞ்சிபுரம் கோயில்களுக்கு வந்து கருவறைகளில் செய்யப்படும் சிறப்புப்பூசைகளை கண்காணித்து, மேன்மேலும் ஹிந்து மதத்துக்கு சேவை செய்யவேண்டுமென்பதே நம்மூர் தேவ அர்ச்சர்களின் எதிர்ப்பார்ப்பு.

மொழிக்கு விழா எடுத்து நாட்டை அழிக்கும் கிருமிகளான திம்மிக்கள் கூட்டம் இனியாவது திருந்தி புண்ணிய மதச்சேவையில் தங்களையும் இணைத்துக்கொண்டு, திருப்பதிக்குச் சென்று மொட்டைபோட்டு ஸ்ரீராம நாமம் பாடவேண்டும். உலக செம்மத மாநாடு நடத்த முன்வரவேண்டும். மூத்த திம்மி செய்வாரா?

26 கருத்துகள்:

  1. ஹிந்து மத்த பின் பற்றது தப்புன்றின்களா ?தேவ அர்ச்சகர்கள் மட்டும் தான் அவங்கள கருவரைக்குள்ள அனுமதிப்பாங்க

    பதிலளிநீக்கு
  2. அப்படியே அகில உலக அம்மா கட்சியில் சேர்ந்து பாதசேவை செய்வாரா?

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா1:59 PM, ஆகஸ்ட் 10, 2010

    நீங்களும் ஹிந்துதானா?மகிழ்ச்சி.நல்ல பதிவு போட்டு ப்ரூவ் பண்னிட்டீங்க
    அருமையான பதிவு,திமுகல இருக்கும் கிருஸ்துவ,இஸ்லாமியரல்லாதோர் அனைவருமே பக்தி பழம் தான்.
    கருணாநிதி வீட்டு வாசலிலேயே பிள்ளையார் கோவில் உண்டு சார்.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா2:18 PM, ஆகஸ்ட் 10, 2010

    //உலக செம்மத மாநாடு நடத்த முன்வரவேண்டும்// என்று மக்கள் எதிர் பார்க்கிறார்கள்!!

    பதிலளிநீக்கு
  5. அருமை!!அருமை!!!.சூப்பர்

    பதிலளிநீக்கு
  6. //*
    விரைவில் ஸ்ரீமதி ஜூலியாராபர்ட்ஸ் காஞ்சிபுரம் கோயில்களுக்கு வந்து கருவறைகளில் செய்யப்படும் சிறப்புப்பூசைகளை கண்காணித்து, மேன்மேலும் ஹிந்து மதத்துக்கு சேவை செய்யவேண்டுமென்பதே நம்மூர் தேவ அர்ச்சர்களின் எதிர்ப்பார்ப்பு.
    *//

    ஹிந்து மதத்தின் லோக குரு சின்ன/பெரிய சங்கராச்சாரிகளுடன் சென்று மடத்தில் தங்கி இருந்து... ஹிந்து மத சேவை ஆற்ற வேண்டும்...

    சங்கராச்சாரிகள் எத்தனை காலம்... ஸ்வர்ணமால்யா போன்ற லோக்கல்களோடு வண்டு ஓட்டுவார்கள்...

    பதிலளிநீக்கு
  7. What is the religion written in your certificates????
    Don't act too smart, when your Thalivar holding a "Mangal saalvai". I am sure people at your home must be practicing the same stupid hinduism.

    பதிலளிநீக்கு
  8. //சங்கராச்சாரிகள் எத்தனை காலம்... ஸ்வர்ணமால்யா போன்ற லோக்கல்களோடு வண்டு ஓட்டுவார்கள்...///
    ஆமாமா நாட்டுச்சரக்கு சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்துப் போச்சுங்காணும்! கொஞ்சூண்டு சீமைச்சரக்கையும்தான் சீப்பிப் பாப்போமே!

    பதிலளிநீக்கு
  9. ஸ்ரீமதி ஜூலியாவுக்கும் வீடியோ வருமா???!!!

    பதிலளிநீக்கு
  10. ஸ்ரீமதி ஜூலியாவோட கண்கள் அப்படியே ஸ்ரீராமபாணம் மாதிரியே இருக்குய்யா! அவ நல்லா ஷேமமா இருக்கட்டும்! திம்மிகள் கூட்டம் திமிரெடுத்து தாம்யா அலையும்! சும்மா அம்மிக்கல்லு மாதிரி கும்முன்னு இருக்கா பாரு!

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. Good one lucky!!! Once Julia was the highly paid personality in the hollywood.

    Namma oorla athu maathiyellam nadakkuma.. Rajiniyai vida tamannavukku pay athigam koduththaal ingu enna nadakkum?

    பதிலளிநீக்கு
  13. If periyar(?)dasan follows islam this guy will keep quite, because he is secular. He will support the mancha-thundu thalaivar, because this guy is secular. May Allah help this pseudo secular guy. Why call Allah and not perumal, hehe, because I am also secular you know.

    What is the meaning of secularism in the dictionary of these people. A movement against Hinduism. Also a movement that supports Islam and Christianity.

    பதிலளிநீக்கு
  14. படமே இந்த வெள்ளிக்கிழமை தான் வருது. அதுக்குள்ள இப்படி ஒரு கும்மாங்குத்தா?

    பதிலளிநீக்கு
  15. இது, ஸ்ரீமதி ஜூலியாவின் புதுப் படத்துக்கான உட்டாலக்கடி பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்பதை விட வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை.

    இந்தப் படம் ஓடும்வரை, இவர் இந்து மதத்தில் நீடிப்பார் என்பது சர்வ நிச்சயம்.

    பதிலளிநீக்கு
  16. @ அப்படி என்றால் குஷ்பு, நமீதா போன்றவர்களின் இடம் பறி போய் விடுமா என்ன, அந்த இடத்தை ஜுலியா ராபர்ட்ஸ்கைபற்றி விடுவாரா என்ன ஒரே அச்சமாக உள்ளது

    பதிலளிநீக்கு
  17. கொஞ்சம் தம்மாதூண்டு பிரபலம் ஆகிடக்கூடாதே, இந்த பதிவங்களுக்கு உள்ள லொள்ளப் பாரு எகத்தாளத்த பாரு பேச்சப்பாறு திமிரப்பாரு

    பதிலளிநீக்கு
  18. பெயரில்லா1:40 AM, ஆகஸ்ட் 13, 2010

    Psuedo seculars like you are spoiling this country - you idiot..

    பதிலளிநீக்கு
  19. இப்ப அந்தம்மாளை இந்து மதத்தின் எந்த சாதியில் சேர்ப்பாங்க, தோல் வெள்ளையாக இருப்பதால் பார்பனராக மாறினாலும் மாறுவார்ன்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  20. பெயரில்லா10:02 PM, ஆகஸ்ட் 13, 2010

    Dont worry about caste. we will check whether she is Catolic, Jesuit, Lutheran , baptist, Pirtism, evangecalism, pentacostalism, prelutheran, methodist,presbytarianism, congregratinalist charismatics.. Could not finish fully. If we could not from her.. we will ask periyardasan whether he is currently sunny, shia, bahi, sufi, mirzai, pasthun, wahabi, Ahamadiya... and use their algorithm..

    Regards
    S baskar

    பதிலளிநீக்கு
  21. விடாதுகருப்பு ஜ படிச்ச எபக்டு ஸ்யப்ப்ப்ப்ப்ப்ப்பா...

    பதிலளிநீக்கு
  22. எல்லாம் அம்மாவின் மகிமை!!
    வாழ்க தங்கத்தாரகை! வாழ்க இளய தாரகை ஸ்ரீமதி ஜூலியாராபர்ட்ஸ்!
    -இலைக்காரன் சார்பாக.

    பதிலளிநீக்கு
  23. //இது, ஸ்ரீமதி ஜூலியாவின் புதுப் படத்துக்கான உட்டாலக்கடி பப்ளிசிட்டி ஸ்டண்ட் என்பதை விட வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை//

    அவர் மதம் மாறியது இந்தியர்களுக்கு மட்டும்தானே பிடிக்கும். இந்தியாவில் இது போன்ற கதையம்சம் உள்ள கதைகள் ஓடாதே? அப்புறம் எதற்கு இந்த பப்ளிசிட்டி. அமெரிக்காவில் வாழ்ந்தால் உங்களுக்கு அந்த நாடே அத்துபடியா?

    பதிலளிநீக்கு
  24. பெயரில்லா12:26 PM, ஆகஸ்ட் 16, 2010

    //களவாணிக்குப் பிறகு வரவேற்கப்பட வேண்டிய இன்னொரு மீடியம் பட்ஜெட் படம்.//

    சரியான காமெடி லைன், இன்னும் எத்தனை நாளைக்குதான் கதாநாயகி கதாபாத்திரத கேணச்சி மாதிரி காட்டுவானுன்களோ...

    பதிலளிநீக்கு
  25. பெயரில்லா9:25 PM, ஆகஸ்ட் 18, 2010

    Mr, Ykrisshna, Can u list in what way the islma is better than Hindu religion. It looks u r simply blabbering something without khaving much indepth inhow about both the religions. When it takes 10 + years for Periyardasan to understand the basics of Islam, how much time did u spend in reading quran. You should explain this before writing further on Hindu muslim religions or u should stop this. dont use ur popularity in a wrongway. just b neutral wothout cheating the people whom read ur blog

    பதிலளிநீக்கு