16 மார்ச், 2013

புலிகளுக்கே பெயர் சூட்டிய புரட்சித்தலைவி

ஈழத்தமிழரின் இன்னலை தீர்க்க புரட்சித்தலைவி அறிக்கை விடும்போதெல்லாம் மூத்த திம்மி ஒரு தந்திரம் செய்வார். “1989ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் அம்மையார் விடுத்த அறிக்கை” என்று ஓர் அறிக்கையை காப்பி & பேஸ்ட் செய்வார். ராஜீவ் கொலைவழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து தூக்குத்தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று எந்த காலத்திலேயோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மறுபடியும் சொல்லிக் காட்டுவார். மூத்த திம்மிக்கு மட்டுமல்ல, அண்டோமேனியா அரசின் அல்லக்கைகளான இன்றைய திம்மிகளுக்கும் சேர்த்து சொல்லிக் கொள்கிறோம். ‘அது போன நூற்றாண்டு. இது இந்த நூற்றாண்டு’

இந்த நூற்றாண்டில் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமின்றி செவ்வாய் கிரகம், புதன் கிரகம் ஆகியவற்றில் வசிக்கும் தமிழர்களுக்கு எல்லாம் உரிமைக்குரல் கொடுக்கும் தமிழின சுனாமி நெடுமாறன் அய்யா, பொடாவை போடா என்று புறந்தள்ளிய இனமான புரட்சிப்புயல் வைகோ, தமிழை டம்ப்ளரில் ஊற்றி தமிழனுக்கு இன உணர்வை ஊட்டி வளர்க்கும் ‘வீ டம்ப்ளர்ஸ்’ ஸ்ரீமான் சீமான், வாழும் காரல்மார்க்ஸாகவும் புரட்சித்தலைவியை வசைபாடுபவர்களுக்கு காராசேவாகவும் திகழும் அய்யா தான்னா பான்னா போன்றோர் ஈழத்தாயாக-தமிழினத்தின் ஒப்பற்ற ஒரே தலைவியாக ஒப்புக்கொள்ளும் நம் புரட்சித்தலைவியை, இவர்கள் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் சங்கத்தமிழ் மறவர்கள் மட்டுமின்றி சொர்க்கம், நரகம் உள்ளிட்ட ஈரேழு உலகிங்கிலும் வாழும் தமிழர்களும் ஏற்றுக்கொண்ட ஐ.எஸ்.ஐ, ஐ.எஸ்.ஓ, க்யூசி ஓக்கே உள்ளிட்ட ஏராளமான தரச்சான்றுகள் பெற்ற ஒரே தலைவி புரட்சித்தலைவி பொன்னியின் செல்வி காவிரி தந்த கலைத்தாய் தங்கத்தாரகை மட்டுமே.

புலிகளின் மீது பாசமின்றியா புலிகளுக்கு பெயர் சூட்டுவார் புரட்சித்தலைவி என்று நாம் கேட்கவில்லை. திராவிட திம்மிகளை நோக்கி மக்கள் கேட்கிறார்கள். நியாயமாகப் பார்க்கப் போனால் ஓ.பன்னீர்செல்வம், பா.வளர்மதி லெவலுக்கு பத்திரிகைகளில் எழுதும் ஊடகத் தோழர்களின் பெயரைதான் புலிகளுக்கு சூட்டியிருக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் மக்கள் மனதில் இருக்கிறது. இருந்தாலும் அவர்கள் இன்னமும் அமரர் எஸ்.எஸ்.சந்திரன் அளவுக்கு புனிதமடையாத காரணத்தால்தான் புலிகளுக்கு தற்காலிகமாக வேறு பெயர்களை சூட்டியிருக்கிறார் புரட்சித்தலைவி. இந்த நெருக்கடியை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழினத் தலைவர்கள், ஊடகங்கள் மட்டுமின்றி இணையத்தளப் போராளிகளும் கூட எந்த ஜென்மத்தில் புண்ணியம் செய்தோமோ இந்த ஜென்மத்தில் நமக்குக் கிடைத்த புரட்சித்தலைவியின் பஜனைமட பக்தகோடிகளாகவே இருக்கிறார்கள். சாவுக்கு டாட்டு நொட்டில் தொடங்கி, முந்தாநாள் ட்விட்டர் அக்கவுண்ட் ஓபன் செய்தவர் வரை வலது கையில் ரெட்டை குதுர றெக்கை பச்சை குத்தியவராகவே வாய்த்திருப்பது இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க புரட்சிகளுள் ஒன்றாக உலகத் தமிழின வரலாற்றில் பொறிக்கப்படும்.

புலிகளுக்கே பெயர் சூட்டிய புரட்சித்தலைவிக்கு விரைவில் பாராட்டு விழா நடத்தி புண்ணியம் கட்டிக்கொள்ளும் வாய்ப்பு நாம் டம்பளர்களுக்கா, மட்டையடி திமுகவின் வைகோவுக்கா, தமிழர் டான் நெடுமாறனுக்கா, கலக்கல் காம்ரேட் தாபாவுக்கா, அல்லது பத்திரிகைகளில் பாமாலை பாடப்போகும் ஊடகத்தோழர்களுக்கா என்பதுதான் இப்போது மக்களுக்கு சஸ்பென்ஸாக இருக்கிறது.

புண்ணியப் பூமியாம் பாரதம் புரட்சித்தலைவி அம்மாவின் கருணைப் பார்வையில் புனிதம் அடைகிறது. அம்மாவின் வழிகாட்டுதலில் பாரதம் வல்லரசாகி, உலகின் நெம்பர் ஒன் நாடாக ஆகப்போகும் காலம் வெகுவிரைவில். பாவ உலகில் பிறந்த பாவத்தைக் கழுவிக்கொள்ள நாமும் பாடுவோம் புரட்சித்தலைவியின் புனித கோவிந்தத்தை.

ஜெயஜெய தேவி ஜெய ஜெய தேவி புரட்சித்தலைவி சரணம்
ஜெயஜெய தேவி ஜெய ஜெய தேவி புரட்சித்தலைவி சரணம்
புரட்சி அம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்
கர்ம வினைகளும் போகும் சர்வ மங்களம் கூடும்


(இந்த பாடலை தினமும் 1008 முறை பாராயணம் செய்பவர்களுக்கு அல்லது ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸாக போட்டு நூற்றியெட்டு லைக்கு வாங்குபவர்களுக்கு அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சராகும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று வேதமார்க சன்மார்க்க போஷித நீடாமங்கல சோதிடர் வ.சுப்பிரமணிய அய்யர் கணிக்கிறார்)

11 கருத்துகள்:

  1. புலிக்கு பேரு வைச்ச‌ பொன்னியின் செல‌வி.
    யானை சீச‌ன் போயி பூனை சீச‌ன் போல‌.

    பதிலளிநீக்கு
  2. சிந்திப்பவன்12:43 PM, மார்ச் 16, 2013

    பாவம் அந்த புலிகுட்டிகள் செய்த புண்ணியம் அவ்வளவுதான்..

    ஒரு இரண்டு,மூன்று, ஆண்டுகளுக்கு முன் பிறந்திருந்தால்,

    தனக்குநிகரில்லா தமிழினத்தலைவர்,

    தள்ளினால்தான் எதுவும் நகரும் என்ற பொன்னான கொள்கையை

    தமிழகத்தில் உருவாக்கி வளர்த்து, தானும் வளர்ந்து,

    இப்போ தள்ளினால்தான் தானே நகரமுடியும் என்ற நிலையில்,

    வாழும் வள்ளுவரால்

    ,நெடுஞ்சேரன்,தொடைகிள்ளி,பொன்னி,வாசுகி,முத்தழகி,மாவீரன்

    என்றெல்லாம் பெயரிடப்பட்டு,அவருக்கும் ஓரிரு பத்துகோடிகள்

    சம்பாதித்து கொடுத்திருக்கும்.

    வட போச்சே!

    பதிலளிநீக்கு
  3. பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா நடத்தும் போது இந்த இளைய திம்மி எங்கே போனது? இப்போது நடக்கும் 'டெசோ' நாடகத்தைப் பற்றியும் எழுதலாமே?

    பதிலளிநீக்கு
  4. Wowwwwwwwww...Yuva Rocks always.....what a "NAKKAL" Writing sir.? Super...We all love you...

    பதிலளிநீக்கு
  5. ...""இந்த நூற்றாண்டில் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமின்றி செவ்வாய் கிரகம், புதன் கிரகம் ஆகியவற்றில் வசிக்கும் தமிழர்களுக்கு எல்லாம் உரிமைக்குரல் கொடுக்கும் தமிழின சுனாமி நெடுமாறன் அய்யா, பொடாவை போடா என்று புறந்தள்ளிய இனமான புரட்சிப்புயல் வைகோ, தமிழை டம்ப்ளரில் ஊற்றி தமிழனுக்கு இன உணர்வை ஊட்டி வளர்க்கும் ‘வீ டம்ப்ளர்ஸ்’ ஸ்ரீமான் சீமான், வாழும் காரல்மார்க்ஸாகவும் புரட்சித்தலைவியை வசைபாடுபவர்களுக்கு காராசேவாகவும் திகழும் அய்யா தான்னா பான்னா போன்றோர்.."" Not able to control laugh while reading these lines yuva sir......Thank you.

    பதிலளிநீக்கு
  6. யுவா,
    காலம் போன காலத்தில் அடுத்த தேர்தலுக்கு கூட்டணி குறித்து பெசுகள் ஆரம்பித்த நிலையில் மதிய அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என்று வீரமான அறிக்கை விடுத்த தனிகரில்லாத தானை தலைவரை பற்றி பாராட்டி பதிவுகள் எதுவும் வரவில்லையே.
    அடித்ததெல்லாம் அடித்தாயிற்று
    நடித்து எல்லாம் முடித்தாயிற்று என்றாலும்
    நான் இன்னும் நன்றாக நடிப்பேன்
    நடித்து கொண்டேதான் இருப்பேன்
    -தானை தலைவர், தமிழின தலைவர்.
    இதை எல்லாம் விடுவிடு பூனை குட்டிக்கு பேர் வைத்தார் என்று சொல்லி ஒரு பதிவு. இதே வேலையாக போய் விட்டது. இவர் ஒன்றும் செய்ய வில்லை என்றால் அவரும் ஒன்றும் செய்ய வில்லை. நேர்மையான மனிதராக இருந்தால் இதை ஒத்துகொள்ள என்ன தயக்கம். தி மு க கண்ணாடியை கலட்டி வைத்து விட்டு வாருங்கள். அம்மாவின் ஜால்ராக்களுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் காண்பியுங்கள். நீங்கள் சொன்னது போல 1973, ஆகஸ்ட் 13 நான் அறிக்கை விட்டேன்.. என்பது போல தலைவர் அறிக்கை விட்டதே இல்லையா?
    thanks
    nellai

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா11:11 AM, மார்ச் 18, 2013

    Yuva, I like your writing style with nakkal and unique narration. But not this kind of useless topics or anything biased towards DMK. When you write about politics, please remove your DMK coat (which is forcing you to support DMK and Dr.Kalaingar) and start write/criticize both DMK and ADMK. There are so many topics like koodankulam, Teso, Power cut, Dr.Kalaingar's drama and his statements and Dr.Amma's adamant decisions.. etc.

    _parithi.

    பதிலளிநீக்கு
  8. யுவா உங்க எழுத்துகள் மிகவும் அருமை , அரசியல் பற்றி எழுதும்போது மட்டும் முடியும் அளவு நடு நிலைமையை கடை பிடியுங்கள் , உங்கள் யாருக்கு மாப்பிள்ளை யாரோ? பதிவு மாதிரி ...

    பதிலளிநீக்கு