16 நவம்பர், 2010

ஸ்பெக்ட்ரம்

CAG அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, 'ஸ்பெக்ட்ரம் ஊழல்' என்று சொல்லுவது தவறு. அரசுக்கான வருமான இழப்பு என்ற வார்த்தையை வேண்டுமானால் இப்பிரச்சினையில் பயன்படுத்தலாம். அவ்வறிக்கையின் படியும் கூட, இது யூக அடிப்படையிலான இழப்பே (Paper value) தவிர, நிஜமான இழப்பல்ல.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ட்ராயின் நடைமுறைகளை – அதாவது 2ஜிக்கு ஏலம் இல்லை - தொலைத்தொடர்பு அமைச்சகம் சரியாகவே பின்பற்றி இருக்கிறது. 1998/99 காலக்கட்ட்த்தில் இருந்தே இந்த நடைமுறைதான் பா.ஜ.க. ஆட்சியிலும் கூட பின்பற்றப் பட்டது.

2ஜி என்பது கோடிக்கணக்கான இந்திய மக்களின் தேவையும், உரிமையும் கூட. 3ஜி மாதிரியான ஆடம்பரச்சேவை அல்ல இது. எனவே 2ஜி, 3ஜி இவற்றுக்கு இடையேயான நடைமுறைகளை பொதுமைப்படுத்தி பேசுவது தவறு. முந்தையது லாபநோக்கமற்ற சேவையை அடிப்படையாகவும், பிந்தையது லாபத்தை எதிர்நோக்கிய சேவையையும் கொண்டது. வீடியோ கால் உள்ளிட்ட லொட்டு லொசுக்குகள் 3ஜியில். மொபைல் போனில் பேசுவதற்கான அலைவரிசை 2ஜியில். இந்த அடிப்படை தெரியாதவர்கள்கூட 'ஸ்பெக்ட்ரம் - ஊழல்' என்றெல்லாம் பேசுவது வினோதமானது.

ஒரு வாதத்துக்கு இப்படி வைத்துக் கொள்ளலாம். CAG அறிக்கை சுட்டிக் காட்டுவதைப் போல நிறுவனங்களுக்கு பெரியத் தொகைக்கு 2ஜி அலைவரிசை ஒதுக்கப்பட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்நிறுவனங்கள் தாங்கள் அலைவரிசைக்காக செலவழித்த தொகையை, கூடுதல் லாபம் சேர்த்து மக்களிடம்தானே பெற நினைப்பார்கள்? இந்தியாவுக்கு மொபைல்போன் வந்த காலக்கட்டத்தில் இருந்த கட்டண விவரங்களை இப்போது நினைத்துப் பார்க்கவும். இன்று மொபைல் போனுக்கு நாம் செலவழிக்கும் கட்டணத்தையும் நினைத்துப் பார்க்கவும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற முன்னேறிய நாடுகளை ஒப்பிடும்போது நம் நாட்டில் மொபைல் போனுக்கான சேவைக்கட்டணம் மிக மிக குறைவாக இன்று இருக்கிறது என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை குறைந்த தொகைக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், அதன் பயனை இன்று இந்தியர்கள் அனுபவிக்கிறோம். சேவைக்கட்டணம் குறைவாக இருப்பதால்தான் இன்று இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கூட எளிய மனிதர்களின் அத்தியாவசியப் பொருளாக மொபைல் போன் மாறியிருக்கிறது.

2ஜி என்ற விஷயம் 2007ஆம் ஆண்டிலேயே காலாவதியாகக் கூடிய தொழில்நுட்பம். இத்தொழில்நுட்பத்தின் அடுத்தப் பரிணாமமான 3ஜியை பற்றி அப்போது எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். காலாவதி ஆகிக் கொண்டிருக்கும் ஒரு தொழில்நுட்பத்தை CAG அறிக்கை குறிப்பிடும் பணத்தை முதலீடாக செலுத்தி வாங்க பைத்தியக்காரன் கூட தயாராக இருந்திருக்க மாட்டான்.

ஒரு பேச்சுக்கு இப்படி வைத்துக் கொள்வோமே?

எந்திரன் திரைப்படம் வெளிவந்து 50 நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. அடுத்த மாதம் கமல்ஹாசனின் 'மன்மதன் அம்பு' திரைப்படம் வெளியாக இருக்கிறது. 200, 300 ரூபாய் டிக்கெட் கட்டணமாக 'மன்மதம் அம்பு' பார்ப்பீர்களா? அல்லது ஓடித் தேய்ந்துப்போன எந்திரனுக்கு இந்த தொகையை செலவழிக்க நினைப்பீர்களா? எந்திரனுக்கு இன்று சாதாரணத் திரையரங்குகளில் 50 ரூபாய் வைத்தால்தான் ரசிகன் தியேட்டருக்கு வருவான். 'புதுப்படம்' என்ற ஹோதாவில் 'மன்மதன் அம்பு'வுக்கு 100, 200 என்று டிக்கெட் கட்டணத்தை தியேட்டர்காரர்கள் நிர்ணயிக்க முடியும். – இதுதான் சார் ஸ்பெக்ட்ரம் விஷயத்திலும் லாஜிக். எந்தத் தொகை நியாயமான தொகையோ, அந்தத் தொகைக்குதான் 2ஜி அலைவரிசை ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை.

இந்தப் பிரச்சினையில் எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், நடுத்தர மற்றும் கிராமப்புற ஏழைமக்கள் மொபைல் போன் வசதியை பெறக்கூடாது என்று மறைமுகமாக வலியுறுத்துகிறவர்கள். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை CAG அறிக்கையின் படியான விலைக்கு ஒதுக்கப்பட்டிருக்குமானால் ஒரு நிமிடத்துக்கு ரூ.10/- என்ற அளவில் கூட மொபைல்போனுக்கான கட்டணத்தை நிறுவனங்களால் உயர்த்தியிருக்க முடியும். அப்போதுதான் அவர்களுக்கும் கட்டுப்படியாகும்.

ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படுகிறது. சந்தை விலையில் கிலோ பதினோரு ரூபாய் என்பதால், இந்த பத்து ரூபாய் பணம் ஊழல் செய்யப்பட்டது என்று கூறுவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? இந்த அடிப்படையில் பார்த்தால் 'பல்லாயிரம் கோடி ரூபாய் அரிசி ஊழல்' என்று ஜெயலலிதா உளறுவாரேயானால், தமிழக ஏழை மக்கள் அவரை காறி உமிழ மாட்டார்களா?

அரிசி எப்படி சந்தை விலையை விட பத்து மடங்குக்கும் கீழாக தமிழகத்தில் வழங்கப்படுகிறது? இது அரசு ஏழை மக்களுக்கு தரும் சலுகை, உரிமை. இதே அடிப்படையில் தான் 2ஜி சேவையையும் நாம் பார்க்க வேண்டும். நவீன உலகம் தொலைதொடர்பால் நிர்மாணிக்கப் படுகிறது. தேசத்தின் கீழ்த்தட்டு குடிமகன் வரைக்கும் இந்த வசதி கிடைத்தாக வேண்டும்.

இல்லை. நான் அரிச்சந்திரன் பரம்பரையில் வந்தவன். நேர்மை, கருமை, எருமைதான் என்னுடைய கொள்கை என்று சொல்லுபவர்கள் சலுகை விலையில் வழங்கப்படும் கேஸ் சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. இவற்றின் சந்தை விலை கொடுத்து வாங்கத் தயாராக இருக்க வேண்டும்.

நிறுவனங்களுக்கு ஒதுக்குவதில், லெசென்ஸு வழங்குவதில் சில 'தள்ளு-முள்ளு' மேட்டர்கள் நிச்சயமாக நடந்திருக்கலாம். எந்த ஒரு அரசு தொடர்பான விஷயத்திலும் இது சகஜம்தான். ஆயினும் ஒட்டுமொத்தமாக லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை, யூக அடிப்படையில் கூறி, அவற்றை மக்கள் நிஜமென்று நம்புமளவுக்கு ஊடகங்கள் பூசி, மெழுகுவது என்பது ராஜா என்ற தனிநபருக்கு எதிரான மனோபாவம் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னே? தென்மாநிலத்தைச் சேர்ந்தவர், தமிழர் - அதிலும் ஒரு தலித்.. நாட்டின் முக்கியமான துறையை ஆண்டால் கோபம் வராதா என்ன? நியாயம்தானே?

நண்பர் பிரதீப் ஜெயப்பிரகாஷ் 'ஸ்பெக்ட்ரம்' குறித்த அவரது அவதானிப்புகளை ஒரு நீண்ட மடலாக ஆங்கிலத்தில் எனக்கு தந்திருக்கிறார். அவரிடம் வலைப்பூ இல்லை. மொழியாக்கம் செய்து வெளியிட முடியுமா என்று கோரியிருந்தார். அவரது வேண்டுகோளையேற்று சில 'சரக்குகளை' சைட் டிஷ்ஷாக இணைத்து இந்தப் பதிவு...

134 கருத்துகள்:

  1. தெளிவாய் புரிகிறது...மிக்க நன்றி..!

    பதிலளிநீக்கு
  2. தமிழ்நாட்டின் எம்.பி கள் கையில் இருக்கும் இலாகாகள் கூட வடநாட்டு லாபி/ செய்தி சேனல்களுக்கு உறுத்தலாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. முருகனடிமை12:58 PM, நவம்பர் 16, 2010

    ஆங்கிலம் தெரியுமா? இல்லை குன்ஸாவாக எழுதியதா?

    பதிலளிநீக்கு
  4. சொல்ற விஷயங்கள் எல்லாம் உண்மை தான் ஆனா இந்த காரணங்களுக்காக தான் இழப்பு ஏற்படுத்த பட்டதா ?

    பதிலளிநீக்கு
  5. மானியம் கொடுப்பதற்கு பதிலாக அரசே குறைந்த விலையில் நிறுவனங்களுக்கு உரிமம் கொடுத்துள்ளது.அரசு என்பது எல்லா நேரத்திலும் இலாபம் சம்பாத்திக்கும் அமைப்பு கிடையாது.தனியார் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்ப்பட்டால் அது குற்றம்.குறைந்த விலையில் மக்களுக்கு சேவை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அரசே தன் வருவாயை குறைத்துக்கொண்டு உரிமம் வழங்கினால் அது குற்றமல்ல. அது மக்கள் சேவை.

    பதிலளிநீக்கு
  6. What you said is absolutely right.. Congress used this opportunity to get the Plum Portfolio back to its kitty.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லா1:43 PM, நவம்பர் 16, 2010

    Mr. Yuvakrishna, come out of DMK mindset and revisit the same.

    Can you give some explanation of Mrs.Raja's 700 cr. profit in a year.

    பதிலளிநீக்கு
  8. //2ஜி என்ற விஷயம் 2007ஆம் ஆண்டிலேயே காலாவதியாகக் கூடிய தொழில்நுட்பம்//
    :))

    பதிலளிநீக்கு
  9. //இது யூக அடிப்படையிலான இழப்பே (Paper value) தவிர, நிஜமான இழப்பல்ல.//

    நிஜ இழப்புக்கும் யூக இழ்ப்புக்கும் என்ன வித்தியாசம்

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா2:25 PM, நவம்பர் 16, 2010

    konjam yosikkura mathiri thaan irukku

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா2:28 PM, நவம்பர் 16, 2010

    மிகநேர்த்தியான கட்டுரை. ஊழல் என உளருவாயர்களின் வாயை அடைக்க இது போன்ற கட்டுரைகள் வரவேண்டும். வாழ்த்துக்கள் லக்கி.

    பதிலளிநீக்கு
  12. யோகியாருக்கு ஆதரவு தெரிவிக்கும் கிருஷ்ண அந்த நிறுவனம் வேறு நிறுவனத்துக்கு பல ஆயிரம் கோடிக்கு விற்றுவிட்டது என்பது உங்கள் பதிவில் மறைக்க பட்டுள்ளது. அப்பாடி பலகோடி அதிகம் கொடுத்தது வாங்கிய நிருவனனம் எப்படி குறைந்த விலையில் சேவை வழங்கும்?

    பதிலளிநீக்கு
  13. உங்கள் படைப்பு முகவும் அருமை ,
    தொலைநோக்கு பார்வை கொண்டதாக இருக்கிறது.. http://shanthibabu.blogspot.com/

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லா3:06 PM, நவம்பர் 16, 2010

    இதையும் மொழிப்பெயர்த்து பதிவில் சேருங்கள். (நன்றி: NDTV.COM)


    NO PROCEDURES FOLLOWED

    •Rules changed after the game had begun

    •Cut-off date for applications advanced by a week

    •Licenses issued on a first-come-first-served basis

    •No proper auction process followed, no bids invited

    •Raja ignored advice of TRAI, Law Ministry, Finance Ministry

    •TRAI had recommended auctioning of spectrum at market rates

    FAVOURITISM, CORPORATES ENCASH PREMIUM


    •Unitech, Swan Telecom got licenses without any prior telecom experience

    •Swan Telecom given license even though it did not meet eligibility criteria

    •Swan got license for Rs. 1537 crore, sold 45% stake to Etisalat for Rs. 4200 crore

    •Unitech Wireless got license for Rs. 1661 crore, sold 60% stake for
    Rs. 6200 crore

    •All nine companies paid DoT only Rs. 10,772 crore for 2G licences

    பதிலளிநீக்கு
  15. பல நாளா நான் மட்டும்தான் வரு இழப்புத்தானே ஒழிய லஞ்சம் கிடையாது என்று தனியாளா குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.ஆனால் இதில் லஞ்சம்...பணம்...விளையாடவில்லை என்று கூற முடியாது.அதான் அரசாங்க விஷயத்தில் இது சகஜம்,தள்ளுமுள்ளு என்று நீங்க ஒப்புதல் வாகு மூலம் கொடுக்கும்போதே தெரிகிறது.அங்கே,லஞ்சம் விளையாடியுள்ளது என்பது.இதை நேரடியாகவே சொல்லியிருக்கலாம்.அப்புறம் இந்த 2 ஜி, 3 ஜி
    எல்லாம் விள்க்கியதர்க்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. நெத்தியடி கட்டுரை. பின்ன... இந்திய மக்களின் நலனுக்காகவே அவதரித்து, சேவையை மட்டுமே வாழ்க்கை இலட்சியமாக கொண்டு, ஏழைமக்களின் ஒரே ஆபத்பாண்டவர்களாக ராஜா, திமுகவினரைப் பத்தி இப்பவாவது மக்கள் தெரிஞ்சுக்கட்டும். யுவகிருஷ்ணா, உங்கள் சேவை, கலைஞருக்குத் தேவை.

    பதிலளிநீக்கு
  17. பல விதமான விளக்கங்கள் .எது உண்மை ! உங்கள் கட்டுரை சில விளக்கம் தந்துள்ளது .ஒரே ஒரு உண்மை ! தென்மாநிலத்தைச் சேர்ந்தவர், தமிழர் - அதிலும் ஒரு தலித்.. நாட்டின் முக்கியமான துறையை ஆண்டால் நமக்கே
    பிடிக்காமல் இருக்கும் பொழுது அவர் (அவா)களுக்கு எப்படி பிடிக்கும் .

    பதிலளிநீக்கு
  18. 1. 2 G ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள், மக்களுக்கு இலவச சேவையை தருகின்றனவா?
    2 . லாபம் இல்லாவிட்டால் தனியார் முதலீடு செய்வார்களா?

    பதிலளிநீக்கு
  19. உங்க நண்பர் பிரதீப் சொல்வது(எழுதியது) உண்மையாகவே இருக்கட்டும், முதலில் வருபவர்க்கே டெண்டர் கொடுக்கப்படும் என்று விதிகளை மாற்றியதன் மர்மமென்ன ?

    பி.கு: 3G ஏலத்தில் எடுத்த நிறுவனங்கள் அவற்றை சூட்டோடு சூடாக கொளுத்த லாபத்திற்கு வேறு நிறுவனங்களுக்கு விற்றுவிட்டன. அப்படீன்னா அரசு மன்னிக்கவும் ஆண்டி ராசா மலிவாக ஏலம் விட்டதால் இவர்கள் மலிவு விலையில் சேவை தருவார்கள் என்று நம்ப சொல்கிறாரா உங்கள் நண்பர்.

    படா காமேடியகீதுபா!!!

    பதிலளிநீக்கு
  20. //- A new player, Swan Telecom, bought licences for 13 circles with the necessary spectrum for $340 million but managed to sell a 45-percent stake in the company to UAE’s Etisalat for $900 million. This swelled its valuation to $2 billion without a single subscriber.

    - Another new player, Unitech, paid $365 million as licence fee but sold a 60-percent stake to Norway’s Talenor for $1.36 billion, taking its valuation to nearly $2 billion, again without a single subscriber.??


    If it is old technology and why Telenor and Etisalat have paid huge amount and still UNINOR (Joint venture between Unitech & Telenor) offers cheap tariff?

    Don't bluff by just comparing the Movies Enthiran & Manmathan Ambu without knowing the technology and business behind the whole stuff.

    பதிலளிநீக்கு
  21. பெயரில்லா4:38 PM, நவம்பர் 16, 2010

    Be Careful while analyzing Spectrum!! Its not a joke. This has caused a heavy loss to the Govt revenue.

    //2ஜி என்பது கோடிக்கணக்கான இந்திய மக்களின் தேவையும், உரிமையும் கூட. 3ஜி மாதிரியான ஆடம்பரச்சேவை அல்ல இது. எனவே 2ஜி, 3ஜி இவற்றுக்கு இடையேயான நடைமுறைகளை பொதுமைப்படுத்தி பேசுவது தவறு. முந்தையது லாபநோக்கமற்ற சேவையை அடிப்படையாகவும், பிந்தையது லாபத்தை எதிர்நோக்கிய சேவையையும் கொண்டது. வீடியோ கால் உள்ளிட்ட லொட்டு லொசுக்குகள் 3ஜியில். மொபைல் போனில் பேசுவதற்கான அலைவரிசை 2ஜியில். இந்த அடிப்படை தெரியாதவர்கள்கூட 'ஸ்பெக்ட்ரம் - ஊழல்' என்றெல்லாம் பேசுவது வினோதமானது.//

    Conflicting stuff. 2G when used by major CUSTOMER market - is going to yield HEAVY PROFITS! While 3G is going to be for HIGH Society (Rich people as u said)!!

    Example: Soaps - Hamam-Rexona-Lifebouy -- being used by Middle Class segment - yields higher profits (priced lower). But not outdated. Soap - DOVE? is very costly - used by uppermiddle or even high only.

    So - 2G is CASH COW. It should have been regulated and done as proper as it should have been!

    பதிலளிநீக்கு
  22. பெயரில்லா4:42 PM, நவம்பர் 16, 2010

    your understaning is wrong.
    You get any % form raja

    அந்த நிறுவனம் வேறு நிறுவனத்துக்கு பல ஆயிரம் கோடிக்கு விற்றுவிட்டது அப்பாடி பலகோடி அதிகம் கொடுத்தது வாங்கிய நிருவனனம் எப்படி குறைந்த விலையில் சேவை வழங்கும்

    பதிலளிநீக்கு
  23. பெயரில்லா4:43 PM, நவம்பர் 16, 2010

    your blog is well known you given wrong and bad support to Raja

    பதிலளிநீக்கு
  24. I repeat the following 2 comments..


    ந்த நிறுவனம் வேறு நிறுவனத்துக்கு பல ஆயிரம் கோடிக்கு விற்றுவிட்டது அப்பாடி பலகோடி அதிகம் கொடுத்தது வாங்கிய நிருவனனம் எப்படி குறைந்த விலையில் சேவை வழங்கும்


    உங்கள் சேவை, கலைஞருக்குத் தேவை

    பதிலளிநீக்கு
  25. லக்கி!

    அனானி பதிவர்கள் கூட அசால்ட்டாக சொன்ன கருத்துக்களை கவனத்தில் கொள்ளுங்கள்.

    ஸ்பெக்ட்ரம் கிடைக்காத மொபைல் முதலைகளும், தயாநிதி மாறனும் சேர்ந்து கிளப்பிய பூதம் தான் இந்த முறைகேடு என்றாலும், ராசாவை உத்தமர் என்று சொன்னால், அது முழு பூசனிக்காயை லிமிடெட் மீல்ஸ்க்குள் மறைப்பது போலாகும். உண்மைகளை மறைத்து எழுதுவதுவதனால், தாங்கள் மு.க வின் அல்லக்கை போன்ற தோற்றம் உருவாகும் வாய்ப்புள்ளது.

    திருத்துங்கள் என்று சொல்லவில்லை! திருத்தினால் Better

    பதிலளிநீக்கு
  26. மிக தவறான முன்னுதாரண கட்டுரை .ஏலத்தில் ஒதுக்க படுவது வேறு ... வந்தவர்களுக்கு வாரி வழங்கிவிட்டேன் என சொல்வது வேறு. ஒதுக்க பட்டது .சரி .அப்படி என்றால் வாங்கிய கம்பெனிகள் எங்கே ? தொலைதொடர்புக்கு சம்மந்தம் இல்லாத.பேர் தெரியாத தொலைதொடர்ப்பு கட்டமைப்பு இல்லாத கம்பெனிகள்.
    Please read the below article ...

    http://alturl.com/5eeer

    பதிலளிநீக்கு
  27. What Raja did is like a clearance Sale, 2G was there since 98/99 and when Raja became Telecomm Min in 2007, found that some unutilized 2G spectrum bandwidth is available. He foreseen that 3G shall hit by 2008/2009, hence did a Stock Clarence Sale as per already existing and followed up process..



    Actually Raja did a additional revenue generation, he could have just ignored the unutilized 2G Bandwidth and kept quiet. In that case this whole issue wouldn't pop-upped and few Old Big Telecom Providers shall be enjoying the tele com market with their own tariffs..

    பதிலளிநீக்கு
  28. Many have mentioned that few companies have sold the allotted spectrum at higher cost to others. It's same like buying Ration Rice and selling in Open Market for higher price.

    If rice itself can be sold at 200% of its original ration price, why can't those companies sell allotted spectrum to a higher Price?
    Why the media mafias not focus and investigate who is behind these companies, Why the Companies regulatory body and other such bodies not acted long back. There is no second opinion that those companies need to treat as Rice Thieves. Why they point only on Raja. He had allotted as per the policy (First Come First Serve) that’s all.

    Also, many says that PM and Law ministries have written & advised Telecom Min on this, But, Raja says his ministry have answered & replied to their letters. Why those medias are NOT showing the reply, just they show letters written by PMO.

    பதிலளிநீக்கு
  29. 1.75 இலட்சம் கோடி கொடுத்து எடுத்திருந்தாலும் நீங்கள் சொல்லும் விலையில் சேவை கொடுத்திருக்க முடியும்.அப்படியானால் வெறும் 10,000 கோடியில் பெற்றவர்கள் எவ்வளவு லாபம் அடைந்திருப்பார்கள். இது தான் பிரச்சனையின் மைய புள்ளியே.அதை அழகாக திரித்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  30. We are getting for cheaper price, because of prevailing competition. Competition is high here unlike other countries because govt. has NOT placed a limit on the number of service providers. sometime back Airtel/Vodafone chief were advocating the govt to place a cap on the number of players in the market as their revenues started to fall.

    பதிலளிநீக்கு
  31. @ பெயரில்லதவர்:-
    \\ இதையும் மொழிப்பெயர்த்து பதிவில் சேருங்கள். (நன்றி: NDTV.COM)
    FAVOURITISM, CORPORATES ENCASH PREMIUM

    •Unitech, Swan Telecom got licenses without any prior telecom experience

    •Swan Telecom given license even though it did not meet eligibility criteria

    •Swan got license for Rs. 1537 crore, sold 45% stake to Etisalat for Rs. 4200 crore

    •Unitech Wireless got license for Rs. 1661 crore, sold 60% stake for
    Rs. 6200 crore

    •All nine companies paid DoT only Rs. 10,772 crore for 2G licences
    //

    ஸ்பெக்ட்ரம் பெற்ற நிறுவனங்கள் அனைத்துக்கும் வேல்யுவேஷன் அதிகமாகிவிட்டது என்ற குற்றச்சாட்டு...

    இதில் என்ன பிரச்னை? வாங்கிய ஸ்பெக்ட்ரத்தை மற்றொருவருக்கு விற்று இந்த ‘இடைத்தரகர்கள்’ ஏகப்பட்ட பணம் பார்த்துவிட்டதுபோல, புரிதல் அற்ற மக்கள் எழுதுகின்றனர். இந்த மதிப்புகள் எல்லாம் பேப்பர் மதிப்புகள். புரமோட்டர்களுக்கு இன்னும் கைக்குப் பணம் வரவில்லை. நான் 1 லட்ச ரூபாய் போட்டு ஒரு நிறுவனம் தொடங்குகிறேன். ஒரு பங்கு ரூபாய் 10 என்று, 10,000 பங்குகள். 100 சதவிகிதப் பங்குகளும் என்னிடம். எனக்கு 1 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் கிடைக்கிறது. அதை வாங்க 20 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அதை என் நிறுவனம், வங்கி ஒன்றிடம் கடனாக வாங்கித் தருகிறது என்று வைத்துக்கொள்வோம். ஸ்பெக்ட்ரம் கிடைத்தவுடன் ஒரு அந்நிய நிறுவனம், என் நிறுவனம் புதிதாக வெளியிடும் 10,000 பங்குகளை, பங்கு ஒன்றுக்கு 1,00,000 ரூபாய் என்று கொடுத்து (அதாவது மொத்தம் 100 கோடி ரூபாய் கொடுத்து) வாங்குகிறது. இப்போது இருவரிடமும் ஆளுக்கு 50% பங்குகள் உள்ளன. என்னிடம் இருக்கும் பங்குகளின் மதிப்பு இப்போது 100 கோடி ரூபாய். ஆனால் நான் முதலீடு செய்ததோ ஒரு லட்சம் ரூபாய். ஆனால் என் பங்கை உடனே யாரிடமாவது விற்று 100 கோடியைத் தள்ளிக்கொண்டு நான் ஓடிவிடமுடியுமா?

    நிச்சயம் முடியாது.

    அந்தப் பணத்தைக்கொண்டு, அந்த ஸ்பெக்ட்ரத்தை வைத்துக்கொண்டு, இந்த நிறுவனம் ஏகப்பட்ட செலவில் கருவிகளை வாங்கி, ஆட்களை வேலைக்கு எடுத்து, சேவையை வழங்கி, வாடிக்கையாளர்களைப் பிடித்து, பணம் சம்பாதித்து... போட்டிகளை சமாளித்து, சில ஆண்டுகள் கழித்து லாபம் சம்பாதிக்கப்போகிறது. அல்லது லாபம் சம்பாதிக்கமலேயே நஷ்டமும் அடைந்து கடையை இழுத்துமூடலாம்.


    என் கம்பெனிக்குள் வந்திருக்கும் 100 கோடியைக் கொண்டு நான் டவர்கள் அமைத்து, சிம் கார்டுகள் விற்று, லாபம் சம்பாதித்து, கடனை அடைத்து, என்றாவது ஒரு நாள் என் பங்குகளை யாரிடமாவது விற்று, அல்லது நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிட வைத்து, பொதுமக்களிடம் விற்று... என்று ஒரு பெரிய நீண்ட கதை.

    யூனிநாரும் வீடியோகானும் இன்று எவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கவேண்டும் தெரியுமா லாபம் பெற? பெருமுதலைகளான ஏர்டெல்லும் வோடஃபோனும் டாடாவும் ஐடியாவும் ரிலையன்ஸும் இருக்கும் துறையில் நிறையவே கஷ்டப்படவேண்டும், லாபம் செய்ய.

    அடுத்து, ஸ்வான் டெலிகாம் பிரச்னை. இது ஒரு பிரச்னையே கிடையாது. ஒன்றும் தெரியாதவர்கள் கிளப்பிவிடும் வதந்தி. எந்த ஒரு நிறுவனமும் ஸ்பெக்ட்ரம் பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சகம் அறிவிக்கிறது. ஸ்வான் டெலிகாம் பெறுகிரது. இதில் பிரச்னை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

    நம் மக்கள் கார்பரேட் ஃபினான்ஸ் பற்றி ஓரளவுக்காவது தெரிந்துகொண்டு இதைப்பற்றியெல்லாம் பேசினால் நன்றாக இருக்கும்.
    IF YOU REALLY WANT TO KNOW THE TRUTHS, PLEASE READ LINKS:-
    http://thoughtsintamil.blogspot.com/2010/11/blog-post_13.html
    http://thoughtsintamil.blogspot.com/2008/10/blog-post_12.html
    http://thoughtsintamil.blogspot.com/2008/10/blog-post_12.html

    பதிலளிநீக்கு
  32. பெயரில்லா7:51 PM, நவம்பர் 16, 2010

    \\ ஏன் இந்த 2G அலைப்பரவலை வெறும் கட்டணத்துக்கு விற்றாகள்? ஏன் ஏலத்துக்கு விடவில்லை?
    \\

    இதற்கான பதிலை ராஜா தெளிவாகவே சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில் (1991, 1992) 2G உரிமத்துக்கு என்று கனமான ஒரு தொகை வசூலிக்கப்பட்டது. பிறகு இது வருமானத்தில் ஒரு பங்கு என்று மாற்றப்பட்டது. பிறகு ஒரு குறிப்பிட்ட கட்டணம் என்று மாற்றப்பட்டது. இது கடந்த சில வருடங்களாக(FROM 1999) இருந்துவருவது.

    இதில் ராஜா வந்து ஏதோ குழப்படி செய்து, அரசு வருமானத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கினார் என்பது அபத்தமான பொய்.

    ஒரு கொள்கை என்று இருந்தால், அதன்படித்தான் செயல்படமுடியும். கொள்கையை நடுநடுவே மாற்றினால், முன்னால் வந்தவர்களுக்கு வசதியாகவும் பின்னால் வருபவர்களுக்குக் கஷ்டமாகவும் ஆகிவிடலாம் அல்லவா?

    பதிலளிநீக்கு
  33. நக்கீரன்:-7:53 PM, நவம்பர் 16, 2010

    ராசாவின் நக்கீரன் பேட்டி:-
    தெளிவான சொற்கள்.. அழுத்தமான வாதங்கள்.. தடுமாற்றமில்லாத குரல்.. இவைதான் ஆ.ராசாவிடம் நக்கீரன் பேசியபோது வெளிப்பட்டவை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு சாதகமாகச் செயல்பட்டதாகவும், பிரதமர் உள்பட நிதியமைச்சகம் -சட்ட அமைச்சகம் ஆகியவற்றின் பரிந்துரைகளைக் கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதாகவும், 2001-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலேயே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியதால் அரசுக்கு 1லட்சத்து 76ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்றும் மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கை நிறுவனத்தின் அறிக்கை தெரிவிப்பதாக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி விரிவாகவே நம்மிடம் பேசினார் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா.
    ""மத்திய தலைமைக் கணக்குத் தணிக்கைத் துறை(சி.ஏ.ஜி) என்பது ஒரு நிறுவனம். அது தனக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அறிக்கையைத் தயாரித்து மத்திய அரசுக்கு அளிக்கிறது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, அறிக்கையின் சாராம்சம் என்ன என்பதை தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத்ராய் வெளியிடவில்லை. அந்த அறிக்கை இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுமில்லை. சில ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் மட்டும் உள்நோக்கத்துடன் இந்த விவகாரம் பற்றி தொடர்ந்து சர்ச்சைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அடிப்படை ஆதாரமற்ற இந்த சர்ச்சைகள் குறித்து நான் பல முறை விளக்கமளித்திருந்தாலும் இப்போது சி.ஏ.ஜி.யை முன்வைத்து எழுப்பப்படும் குற்றச் சாட்டுகளுக்கு என் பதிலை அளிக்க விரும்புகிறேன்.

    இந்தியாவில் தேசியத் தகவல் தொழில்நுட்பக் கொள்கை 1994-ம் ஆண்டில் முதன்முதலாக உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2 ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றைகள் ஏலம் விடப்பட்டன. அந்த ஏலத்தில் 3 நிறுவனங்கள் கலந்துகொண்டு அலைக்கற்றைகளைப் பெற்றன. அப்போது, ஒரு செல்போன் அழைப் புக்கான கட்டணம் (அவுட்கோயிங்) 16 ரூபாயாக இருந்தது. இந் நிலையில், ஏலம் எடுத்த 3 கம்பெனிகளும் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடுத்தன. அதாவது, தங்களுக்கு நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும், ஏலத்தொகையைக் கட்ட முடியாது என்றும், அதனை உரிய முறையில் சரி பண்ண வேண்டுமென்றும் கோரின. மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டும் இதை சரி செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கையை வகுக்கும்படியும் சொன்னது.

    அதன்படி, 1999-ம் ஆண்டில் புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை உருவாக்கப் பட்டது. அதில், "ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடவேண்டாம். ஸ்பெக்ட்ரம் பெறும் நிறுவனங் களிடம் லாபத்தில் பங்கு என நிர்ணயிக்கலாம். அதுதான் அரசுக்கு அதிக வருவாய் தரும்' என்று மத்திய அரசு தனது கொள்கையை வகுத்தது. இதனடிப்படையில்தான் இந்தத்துறைக்கு பொறுப்பு வகித்த பா.ஜ.க அமைச்சர்கள் பிரமோத்மகாஜன், அருண்ஷோரி ஆகியோரும் அதன்பின் பொறுப்பு வகித்த தயாநிதிமாறனும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தார்கள். இதுதான் இப்போதும் தொடர்கிறது.

    2007-ம் ஆண்டு நான் இந்தத் துறைக்குப் பொறுப்பேற்றபோது, எஸ்.டி.டி. அவுட்கோயிங் கட்டணம் 2 ரூபாயாகவும், உள்ளூர் அழைப்புக்கான கட்டணம் 1 ரூபாய் 60 பைசாவாகவும் இருந்தது. அப்போது இருந்த செல்போன் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை 33 கோடி. வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், கட்டணம் குறையவும் என்ன செய்யலாம் என ஆய்வும் ஆலோசனையும் நடத்தியதில் பயன்படுத்தப்படாமல் நிறைய அளவில் ஸ்பெக்ட்ரம் இருப்பதையும், அதைப் பயன்படுத்தினால் வாடிக்கையாளர்கள் பெருகு வார்கள். அதன் மூலம் அரசுக்கு வருமானம் கூடும். அதேநேரத்தில், அதிகப் பயன்பாட்டின் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் குறையும் என்பதை அறிந்தோம்.

    பதிலளிநீக்கு
  34. மக்கள் நலனுக்காகத்தான் ராஜா இப்படி செய்தாரா??
    நல்ல நகைச்சுவை....

    இந்த ஊழல் பற்றி பேசும் போது சரியான அறிவிப்பு இல்லாமல் ஏலம் விட்டதாக கூறுகிறார்களே... அது பற்றி ஒன்றுமே கூறவில்லை.

    இப்போதான் புரிகிறது ஏன் கல்மாடி காம்ன் வெல்த் விளையாட்டுகளில் ஊழல் செய்தார் என்று. ஆம் பாம்புகளை விட்டு கட்டடங்களை இடித்து வெளிநாட்டு வீரர்களையெல்லாம் துரத்தி விட்டால் இந்திய வீரர்கள் நிறைய பதக்கம் வாங்கலாம் அல்லவா???

    ஒவ்வொரு அரசியல்வாதிகளும் இவ்வளவு நல்லவர்கள் எனத்தெரியாமல் போய்விட்டதே.....

    பதிலளிநீக்கு
  35. பெயரில்லா9:13 PM, நவம்பர் 16, 2010

    வருமான இழப்பு தெரிந்தோ/தெரியாமலோ ஏற்படுத்துவது, ஊழல் இல்லையா என்பது விவாதிக்கப்பட வேண்டியது. இதனால்தான் ராசா தைரியமாக இருக்கிறார். ஆனால் எல்லாம் ரூல்ஸ்படிதான் நடந்தது என்றாலும்
    - கடைசி தேதியை முன்கூட்டி மாற்றியது
    - தகுதி இல்லாத/ போர்ட், லெட்டர்பேட் மட்டும் போட்ட கம்பெனிகளுக்கும் கொடுத்தது
    - அந்த தத்திங்களும் பங்குகளை குபீர் விலைக்கு உடனே விற்றது
    இவைகளும் முக்கிய பிரச்னை. இதற்கு ராசா என்ன பதில் சொல்வார்?

    பதிலளிநீக்கு
  36. வணக்கம் லக்கி,

    உங்களால் முடிந்தால் கீழே இருக்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பீர்களா ?
    --> ஏலம் ஆரம்பித்தவுடன் ஏன் ஏலதேதி ஏன் ஒரு வாரம் முன்னதாகவே மாற்றி அமைக்கப்பட்டது ?
    --> unitech என்பது ஒரு கட்டுமான நிறுவனம், எந்தவிதமான முன் அனுபவம் இல்லாத ஒரு நிறுவனத்திற்கு
    எதற்காக இந்த அலைவரிசை ஒதுக்கப்பட்டது ?
    சரி அப்படியே இந்த அலைவரிசையின் மதிப்பு 1500 கோடிகள் என்றே வைத்து கொள்வோம்
    ஏன் அவ்வளவு அவசரமாக அந்த நிறுவனம் வேறு ஒரு நிறுவனத்திற்கு இதை விற்கவேண்டும் ?
    அதுவும் 1500 சொச்சம் கோடிகளுக்கு வாங்கி 5000 சொச்சம் கோடிகளுக்கு விற்க வேண்டும் ?
    --> swan டெலிகாம் அடிப்படை விதிகளை கூட பின்பட்ட்ராத ஒரு நிறுவனம் எப்படி ஏலத்தில் நுழைந்து
    ஒதுக்கீட்டையும் பெற்றது ? அலைவரிசை ஒதுக்கீட்டிற்கு முன்பும், பின்பும் பிறகு இந்த நிறுவனத்தின் பங்குகளை, கடன் பத்திரங்களை
    "யாரெல்லாம்" வாங்கி விற்று இருக்கிறார்கள்.
    இந்த கேள்விகளுக்கு உங்களாலோ, ராசாவோ இல்லை மதிப்பு மிக்க முதல்வராலோ பதில் கூற முடியுமா ?
    இது போன்ற ராசாவிற்கும் திமு கழகத்திற்கும் ஆதரவான பதிவு எழுதி இவர்களின் ஊழலை மூடி மறைக்க
    பார்க்காதீர்கள். ராசாவின் கரம் அப்பழுக்கற்றதாக இருக்கும் பட்சத்தில் அவரது தூய்மையை நிரூபிக்க
    தைரியமாக விசாரணையை வேகப்படுத்தி தனது நேர்மையை நிருபிக்கலாமே ?

    நவீன்

    பதிலளிநீக்கு
  37. லக்கி,
    அன்பு வணக்கங்கள்.. தெளிவான கட்டுரை.. கட்டுரையின் சாராம்சத்தில் தான் குழப்பமே..

    எனக்கு தெரிந்த சில விடயங்கள்.. தவறெனில், பின்னூட்டம் இடுவோர் & லக்கி தெரிய படுத்தவும்..
    - பிரதமர் அலுவலகத்தையும் எதிர்த்தே 2ஜி அலைவரிசை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு வழங்க பட்டுள்ளது. இவ்வளவு தொலை நோக்கு பார்வை உள்ள ராஜா, மக்களுக்கு சென்றடைய வேண்டிய திட்டத்தை, பிரதமர் அலுவலகம் எதிர்க்க நேர்ந்தால், அதை விளக்கியிருக்கலாமே.. ஏன் அதை பத்திரிகையில் கூட எதிர்ப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டிருக்கலாம், DK Mathur மற்றும் பிரதமர் மக்களுக்கு தீங்கு இழைக்கிறார்கள் என்று.. குற்றம், ராஜா வினது மாத்திரம் இல்லை என்பதும் உண்மை.
    - தொலை தொடர்பு துறையை கையில் வைத்துள்ள ராஜா அலைவரிசை வழங்கப்பட்ட நிறுவனங்கள் தங்கள் பங்குகளை அதிக விலைக்கு விற்று லாபம் பார்க்கும் போது, அவர்களின் நடவடிக்கையை எதிர்த்து அவர்களின் லைசென்ஸ் களை ரத்து செய்திருக்க வேண்டாமோ.. நீங்கள் கூறிய முறையிலேயே, பங்குகளை வாங்கிய நிறுவனங்கள் மக்களிடம் தங்கள் செலவை ஈடு கட்ட அதிக கட்டணம் வசூலிக்க மாட்டார்கள் என்பது எப்படி நிச்சயம்? லாப நோக்கில்லாமல் செயல் பட அவர்கள் ஒன்றும் போது நிறுவனங்கள் அல்லவே...
    - மற்றபடி அவர் தமிழர், தலித் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே. நாட்டிற்கு வர வேண்டிய பாக்கி நம் தலையில் விடியும் போது, அதை உச்ச நீதிமன்றமே தட்டி கேட்கும் போது, கலைஞர் அவர்களே ராஜா அவர்களை பதவி துறக்க செய்திருப்பின், திமுக வின் மரியாதை கூடியிருக்குமே தவிர குறைந்திருக்காது. காங்கிரஸ் மேலிடம், ஊழலை காரணம் காட்டி ஒரு முதன் மந்திரியையே பதவி இழக்க செய்திருப்பது ஒரு நல்ல உதாகரணம். தயவு செய்து ராஜா அவர்களை பதவி இழக்க செயா நடந்த கண் துடைப்பு தான் மகாராஷ்ட்ரத்தில் நடந்தது என கூறுபவர்கள், ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்கவும். பதவியில் இருந்து விலக்க பட்ட ஒருவர் ஒரு மாநிலத்தின் முதன் மந்திரி.
    - இன்னொரு விடயம், இங்கு குறிப்பிட்டுள்ள படி, தொலை தொடர்பு துறையை காங்கிரஸ் கபில் சிபல் அவர்களுக்கு வழங்கியமைக்கு, அவர்கள் கூறும் காரணம், 'அவை கூட்ட தொடர் நடக்கும் பொழுது, மந்திரி சபை விஸ்தரிப்பு மற்றும் மாற்றங்களை தவிர்ப்பதற்கே'. மற்றபடி இத்துணை சக்தி வாய்ந்த, தொலை தொடர்பு துறையை விட்டு கொடுக்க கலைஞர் அவ்வளவு எளிதான கட்சி தலைவர் அல்லர்.

    கட்டுரையில் இருக்கும் கருத்துக்கள் உங்கள் நண்பர் பிரதீப் உடையதே, உங்கள் உடையது இல்லை என்று கூறுவீர்கள் ஆனால் நண்பரை தெளிவு படுத்த வேண்டுகிறேன்.
    நடக்க இருப்பது நல்லதாகவே நடக்கும். :-)

    பதிலளிநீக்கு
  38. //யூக அடிப்படையிலான இழப்பே (Paper value) //


    Media conveniently forget abt this paper value and not even mentioning this on their talks...

    பதிலளிநீக்கு
  39. பெயரில்லா10:21 PM, நவம்பர் 16, 2010

    I don't know what you are all smoking. Please verify your facts before your biased bashing.

    Thappu yaaru panninalum thappu daan. Idula where is casteism coming in??

    Ungaloda logic padi patha, Swan and Unitech should be the provides. Only then they can provide 2G at a low cost. But I hope you know what they did. I also hope that you know who owns them.

    Please check your facts before drawing conclusions. Why cannot you realize that they are after all looting your hard earned money??

    பதிலளிநீக்கு
  40. பெயரில்லா10:21 PM, நவம்பர் 16, 2010

    அப்படின்னா டான்சி வழக்குல அம்மாவும் எந்த தப்பும் பண்னலங்கறீங்க. நீங்க எப்போல இருந்து அ.தி.மு.காவுக்கு மாறுனீங்க?

    பதிலளிநீக்கு
  41. பெயரில்லா10:31 PM, நவம்பர் 16, 2010

    லக்கி உங்களின் வாதம் முட்டாள் தனமாக தெரியவில்லையா? உங்களுக்கும் மண்டபத்துல எழுதி தராங்களா? மண்டபமா இல்ல கழகமா? என்னங்க இது? முறையா ஏலம் விடாதது தப்பில்லையா? வாங்கி வித்தவன் எல்லாம் அதிக விலைக்கு தானே வித்துருக்கான்? அவ்ளோ நேர்மையான அரசு ஏன் இந்த விளக்கத்த தரல? உங்க கழகத்துல கூட சொல்லலையே?
    "இது யூக அடிப்படையிலான இழப்பே (Paper value) தவிர, நிஜமான இழப்பல்ல."

    CAG சொல்லறது ஊகம்னா பிரதீப் ஜெயப்பிரகாஷ் சொல்றது அத விட பேத்தலா இருக்கு. அட போங்க சார், நான் இனி இங்க வரதுக்கே யோசிக்கணும்.

    பதிலளிநீக்கு
  42. நிறுவனங்கள் தாங்கள் அலைவரிசைக்காக செலவழித்த தொகையை, கூடுதல் லாபம் சேர்த்து மக்களிடம்தானே பெற நினைப்பார்கள்? இந்தியாவுக்கு மொபைல்போன் வந்த காலக்கட்டத்தில் இருந்த கட்டண விவரங்களை இப்போது நினைத்துப் பார்க்கவும். இன்று மொபைல் போனுக்கு நாம் செலவழிக்கும் கட்டணத்தையும் நினைத்துப் பார்க்கவும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற முன்னேறிய நாடுகளை ஒப்பிடும்போது நம் நாட்டில் மொபைல் போனுக்கான சேவைக்கட்டணம் மிக மிக குறைவாக இன்று இருக்கிறது என்பதை நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும்.

    @ யுவா, இது ஒரு மோசமான பதிவு. நீங்க லஞ்ச ஊழலை ஆதரித்து பதிவு போடுவது வருத்தத்தை அளிக்கிறது. கோவை நிகழ்ச்சியில் குற்றவாளி ஒரு தலித் என்பதால் அவருக்கு தூக்கு தண்டனை குடுக்க வேண்டாமா? என்ன உங்கள் நியாயம் ??? திமுக காரராக இருங்கள்.. அதற்காக இதெல்லாம் ஓவர்...

    பதிலளிநீக்கு
  43. பெயரில்லா10:59 PM, நவம்பர் 16, 2010

    Respected Sir,

    In this issue, I strongly believe RAJA is a culprit. Your friend (indirectly you too) is not writing the fact. He says people does not understand the technology, but he is the one who did not understand what happened in 2G auction or may be he is pretending.

    What ever happened is, worst thing that could happen to our country and Raja is the main culprit on this issue.

    பதிலளிநீக்கு
  44. நாடே பரபரப்பாக பேசிக்கொண்டிருக்கும் ஒரு விசயத்தை வேறு கோணத்தில் பார்க்கும்
    உங்கள் பார்வை ஆச்சரியமாக இருக்கிறது.
    ====== நிறுவனங்களுக்கு ஒதுக்குவதில், லெசென்ஸு வழங்குவதில் சில 'தள்ளு-முள்ளு' மேட்டர்கள் நிச்சயமாக நடந்திருக்கலாம். எந்த ஒரு அரசு தொடர்பான விஷயத்திலும் இது சகஜம்தான்.======
    இதை சகஜமாக எடுத்துகொள்ளும் அளவுக்கு நாம் சமைக்கப்பட்டுவிட்டோம் என்பதுதான்
    இதிலுள்ள வேதனையான விஷயம்.சகிப்புத்தன்மைக்கு பரிசென்றால் மெடல் நமக்குத்தான்.

    பதிலளிநீக்கு
  45. பெயரில்லா11:26 PM, நவம்பர் 16, 2010

    Biggest joke of the year. It was so hilarious. keep up the good work like writing this kind of story( oops from somebody!)

    பதிலளிநீக்கு
  46. பெயரில்லா11:36 PM, நவம்பர் 16, 2010

    சும்மா நானும் ப்ளாக் வச்சுருக்கேன் நு கண்டத எழுத கூடாது... நீ படிச்சவன்தான... வேண்டாம் எதாவது வந்துட போகுது வாய்ல..... ஒரு லட்சத்து எழுநூறு கோடி சொல்ல்றன்களே அது எப்டின்னு கணக்கு கேளு அது கரெக்ட் அத விட்டுட்டு செஞ்சதேல்லாம் கரெக்ட் நு சொல்ல கூடாது.... நாம குழந்தை கெடயாது நாம எல்லாருக்கும் தெரியும் எந்த ஒரு அரசாங்க வேலைலயும் இந்த மாதிரியான திருட்டுத்தனங்கள் இருக்கத்தான் செய்யும் ஆனால் இந்த விஷயம் கொஞ்சம் பெரியது.... சுண்டக்காய சோத்துல மறைக்கலாம் முழு பூசனிக்காய முடியுமா... லக்கி நீங்க எழுதிருக்கறத பார்த்தா நீங்க ஒரு வேஸ்ட் நு தோணுது ப்ளீஸ் திமுக காரன் மாதிரி எழுதாதீங்க... நீங்களாவது பத்திரிகை தருமத்த கடை புடிங்கோ... அவங்களுக்கு தினகரன், சன் அண்ட் கலைஞர் டிவி உள்ளது நீங்க எழுதுவது போல் செய்தியை திரிப்பதற்கு... ஐயோ கொலை பன்ன்றான்கப்பா கேஸ் தான இந்தாளு....

    பதிலளிநீக்கு
  47. அந்த தொகை அரசுக்கான வருவாய் இழப்பு என்பது பல செய்தித்தாள் படிக்கும் சாதாரண தமிழனுக்கும் இந்நேரம் புரிந்திருக்கும்.

    இருப்பினும் ‘குடும்பம்’ தங்களுக்குள் பகிர்ந்து கொண்ட 15 ஆயிரத்து சொச்சம், மிச்சம் கோடிகளுக்கு கணக்கு என்னாவது? அதற்கு ஆதாரங்கள் இல்லை என்று சொல்வீர்களா?

    பதிலளிநீக்கு
  48. 2ஜி என்பது 2007 ஆம் ஆண்டிலேயே காலாவதியான தொழில்நுட்பம் என்பது அடுத்த சப்பைகட்டு. இன்றைய தொலைதொடர்பு நிறுவனங்கள் 2ஜியைத் தான் தங்களது முதன்மை அலைவரிசைகளாக பயன்படுத்துகின்றன. இன்னமும் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு 2ஜி தான் பெரும்பாலான மொபைல் சேவை தருபவர்களின் முதன்மையான அலைகற்றைகளாக இருக்கும்.

    என்ன தான் 3ஜி அலைக்கற்றைகளை அரசு ஏலம் விட்டாலும், அவை முழுமையாக செயல்படுத்தபட இன்னமும் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்...

    பதிலளிநீக்கு
  49. //நிறுவனங்களுக்கு ஒதுக்குவதில், லெசென்ஸு வழங்குவதில் சில 'தள்ளு-முள்ளு' மேட்டர்கள் நிச்சயமாக நடந்திருக்கலாம். எந்த ஒரு அரசு தொடர்பான விஷயத்திலும் இது சகஜம்தான். //

    ஓ, அப்படியா? எவ்வளவு தள்ளு நடந்திருக்கும்? 10 கோடி ரூபாய்? 100 கோடி ரூபாய்?

    ஒரு லட்சம் கோடியாக இல்லாத வரை ஏன் புலம்பிக் கொண்டிருக்கிறோம்! அது வரை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான், இல்லையா? அவங்களும் பிழைக்க வேண்டும் அல்லவா? பாவம், சாப்பாட்டுக்கு வழி இல்லாத ஏழைகள்!

    நிற்க.

    ஏலத்தில் அலைக்கற்றை வாங்கிய 3G சேவைக்கு டாடா டோகோமோ நிர்ணயித்துள்ள விலை என்ன தெரியுமா? விசாரித்துப் பாருங்கள். நிமிடத்துக்கு 10 ரூபாய் இல்லை!

    கடப்பாரையை தின்னக் கொடுத்து சுக்கு கசாயம் செரிக்கக் கொடுக்கிறீர்கள்.

    1967ல் காங்கிரசுக்கு எதிராக என்னென்ன பார்த்து தமிழ் மக்கள் திமுகவை ஆட்சிக்குக் கொண்டு வந்தார்களோ அது அனைத்தும் இன்றைய திமுக அதிகாரத்தில் நடந்து கொண்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  50. பெயரில்லா12:56 AM, நவம்பர் 17, 2010

    Thae Article is like Kalaigar giving statement under veeramani's name.

    பதிலளிநீக்கு
  51. Dear Yuva,

    This is a completely biased to the benefit of Raja - which is very wrong.

    Why bring caste into the issue? That's a very cheap trick.

    All I can say is, as Nepoleon tells Kamal in Virumandi, if you can sleep well knowing and believing what you are saying is true - then it's good.


    When individuals are held more important than the nation - this is how we compromise.

    பதிலளிநீக்கு
  52. பெயரில்லா1:13 AM, நவம்பர் 17, 2010

    visayam correcthan.
    aana 2 enthiran ticketla onna counter la vikkama veliye 10 roopaikkum innum onna counter la 100 roopaikkum viththa theater karanukkum nasatam thana lucky atha yen neenga sollala. aanalum lucky inga oru anony sonna mathiri mindset change pannanum . because "CHANGE WE NEED"

    பதிலளிநீக்கு
  53. //ஊழல் இல்லை. வருமான இழப்பு தான் //
    //Swan got license for Rs. 1537 crore, sold 45% stake to Etisalat for Rs. 4200 crore

    •Unitech Wireless got license for Rs. 1661 crore, sold 60% stake for
    Rs. 6200 crore
    //
    இது தான் விஞ்சான பூர்வமான ஊழல் என்பது!

    பதிலளிநீக்கு
  54. //நண்பர் பிரதீப் ஜெயப்பிரகாஷ் 'ஸ்பெக்ட்ரம்' குறித்த அவரது அவதானிப்புகளை ஒரு நீண்ட மடலாக ஆங்கிலத்தில் எனக்கு தந்திருக்கிறார். அவரிடம் வலைப்பூ இல்லை. மொழியாக்கம் செய்து வெளியிட முடியுமா என்று கோரியிருந்தார். அவரது வேண்டுகோளையேற்று சில 'சரக்குகளை' சைட் டிஷ்ஷாக இணைத்து இந்தப் பதிவு...///


    ஆஹா உங்கள் நண்பரின் ஸ்பெக்ட்ரம் பற்றிய அவதானிப்பை பற்றி நினைக்கும் போது “புல்லரிக்கின்றது”..

    காக்கைகளின் கூட்டம் இருக்கும் மட்டும் இந்த மாதிரி பதிவுகள் தவிர்க்கமுடியாது!!!

    பதிலளிநீக்கு
  55. Lucky, Please dont publish these kind of articles, there are lot of truths hidden in this, the corporates who bought the bandwidths are sold them with higher prices, so instead of government, they have got the profit... Looks like your friend is sent this from the affected politician view. I would suggest you not to publish other opinions in your blogs like these... I have a great opinion on your blogs... so keep rocking with your analysis. Hope you wont mind this comment.

    பதிலளிநீக்கு
  56. லக்கி நீங்கள் சிறிது மிகை படுத்தி இருந்தாலும் வெறும் கருப்பு வெள்ளை பார்வை இல்லாமல் இந்த விவகாரத்தை நோக்கும் அனைவரும் தங்களின் கருத்துகளை ஒத்துகொள்வார்கள்.

    ஊடகங்களில் அதுவும் ஆங்கில ஊடகங்களில் மத்திய அரசின் கண்ணசைவு இல்லாமல் இதுபோன்ற 'சுடு' கிளம்புவது சாத்தியமில்லை.

    இந்த விஷயத்தில் துள்ளி குதிக்கும் ஊடகங்கள் ஏன் இதில் இருக்கும் கார்ப்பரேட் விளையாட்டை வேண்டுமென மறைக்கின்றன. டாட்டா மற்றும் அனில் அம்பானி குழுமங்கள் சலுகை பெற்றாதாய் குற்றம் சாட்டுபவர்கள் இதற்க்கு முன்னால் இருந்த பாரபட்சங்களை மறைப்பது ஏன்?

    ராஜா மட்டுமே குற்றவாளி என்பது போலும் அவரை பலிகடா ஆக்குவதும்... என்ன சொல்வது.

    ஹிந்தியில் ஒரு சொலவடை உண்டு 'ஹமாம் மே சப் நன்கே ஹை' (குளிக்கும் இடத்தில எல்லோரும் அம்மனம்தான்).

    ராஜாவை குடையும் எந்த ஊடகத்துக்கும் இந்த விஷயத்தில் மற்ற சுத்த சுயப்ரகசங்களை கேள்வி கேட்க்கும் தைரியம் இல்லாதது ஏன். இந்த விஷயத்தில் காங்கிரசுக்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லை என்றும் ராஜா அத்தனை பணத்தையும் சுருட்டிக்கொண்டு சென்னை வந்துவிட்டது போலும் அமைக்கப்படும் திரைக்கதையை கண்டு வெறுப்புதான் வருகிறது.

    ராஜா ஓரளவு நெளிவுசுளிவு இல்லாதவராய் இருந்திருந்தால் மத்தியில் தாக்கு பிடித்திருக்க முடியாது, ஆனால் அது முக்கிய தகுதி. சரத் பவார் மீது பலமான உணவு பொருள் ஏற்றுமதி, IPL சம்பந்தமான அதிகார துஷ்ப்ரோயோக ஆதாரங்கள். என்ன செய்யமுடிந்தது?

    1.76 இலட்சம் கோடி ஊழல் என புரளி கிளப்பி...எவளோ பெரிய நம்பர்...

    கோவை மோகன்ராஜ் என்கவுன்டர் ஆகட்டும் ராஜா விவகாரம் ஆகட்டும் உண்மையை உணர யாருக்கும் ஆர்வம இல்லை.யாரையாவது பலி போடவேண்டும். அவளவுதான்.

    பதிலளிநீக்கு
  57. லக்கி நீங்கள் சிறிது மிகை படுத்தி இருந்தாலும் வெறும் கருப்பு வெள்ளை பார்வை இல்லாமல் இந்த விவகாரத்தை நோக்கும் அனைவரும் தங்களின் கருத்துகளை ஒத்துகொள்வார்கள்.

    ஊடகங்களில் அதுவும் ஆங்கில ஊடகங்களில் மத்திய அரசின் கண்ணசைவு இல்லாமல் இதுபோன்ற 'சுடு' கிளம்புவது சாத்தியமில்லை.

    இந்த விஷயத்தில் துள்ளி குதிக்கும் ஊடகங்கள் ஏன் இதில் இருக்கும் கார்ப்பரேட் விளையாட்டை வேண்டுமென மறைக்கின்றன. டாட்டா மற்றும் அனில் அம்பானி குழுமங்கள் சலுகை பெற்றாதாய் குற்றம் சாட்டுபவர்கள் இதற்க்கு முன்னால் இருந்த பாரபட்சங்களை மறைப்பது ஏன்?

    ராஜா மட்டுமே குற்றவாளி என்பது போலும் அவரை பலிகடா ஆக்குவதும்... என்ன சொல்வது.

    ஹிந்தியில் ஒரு சொலவடை உண்டு 'ஹமாம் மே சப் நன்கே ஹை' (குளிக்கும் இடத்தில எல்லோரும் அம்மனம்தான்).

    ராஜாவை குடையும் எந்த ஊடகத்துக்கும் இந்த விஷயத்தில் மற்ற சுத்த சுயப்ரகசங்களை கேள்வி கேட்க்கும் தைரியம் இல்லாதது ஏன். இந்த விஷயத்தில் காங்கிரசுக்கு எள்ளளவும் சம்பந்தம் இல்லை என்றும் ராஜா அத்தனை பணத்தையும் சுருட்டிக்கொண்டு சென்னை வந்துவிட்டது போலும் அமைக்கப்படும் திரைக்கதையை கண்டு வெறுப்புதான் வருகிறது.

    ராஜா ஓரளவு நெளிவுசுளிவு இல்லாதவராய் இருந்திருந்தால் மத்தியில் தாக்கு பிடித்திருக்க முடியாது, ஆனால் அது முக்கிய தகுதி. சரத் பவார் மீது பலமான உணவு பொருள் ஏற்றுமதி, IPL சம்பந்தமான அதிகார துஷ்ப்ரோயோக ஆதாரங்கள். என்ன செய்யமுடிந்தது?

    1.76 இலட்சம் கோடி ஊழல் என புரளி கிளப்பி...எவளோ பெரிய நம்பர்...

    கோவை மோகன்ராஜ் என்கவுன்டர் ஆகட்டும் ராஜா விவகாரம் ஆகட்டும் உண்மையை உணர யாருக்கும் ஆர்வம இல்லை.யாரையாவது பலி போடவேண்டும். அவளவுதான்.

    பதிலளிநீக்கு
  58. luckylook, I was a fan of oyur site till I saw this absoulutely biased and false post...the problem is you have let your heroworship affect your objectivity..nice examples given but all misleading, the whole thing is that while govt sold the licences for X , people who bought it made profits of 10X and 100X, so where will that money be collected from?? obviously common man so how can you give some absolute BS on how govt has done good for common man...if I didnt respect you better I would have thought this post is an unbaked assessment by a DMK sycophant

    Pls sir nammallam netrikan thirappin8um kutram kutrame solravanga...dayavu senju makkala muttal aakathinga

    am sure this post will fetch you some political clout - good start to your political career - at bthe cost of normal people who follow ur blog great going!

    aana kalaignar thamizha pugazhndavarkitta idukku mela ethirparthathu enga kutramthan valarga ungal jalra...aana dayavu senju adutha murai arasaiyalvadi pathi thappa ezhuthatheenga neengalum antha saakadaila muthedukka pakkaravaru than...

    பதிலளிநீக்கு
  59. பெயரில்லா10:36 AM, நவம்பர் 17, 2010

    எதற்க்கெடுத்தாலும் தி.மு.க அரசை தூக்கிப்பிடிக்கணும் உங்களுக்கு.. அதுக்காக, spectrum சென்சிடிவ் விஷயங்களில் உங்கள் திமுக அபிமானத்தை காட்ட வேண்டாம்.. அப்படியே திமுக அபிமானத்தை காட்ட வேண்டும் என்றால்.. உங்கள் template ' லேயே சொல்லிவிடுங்கள்.. நடுநிலையான பதிவாக உங்களது இருக்கும் என்பதாலேயே, பலர் உங்கள் வலைமனைக்கு வருகிறார்கள்..

    பதிலளிநீக்கு
  60. கிருட்டிணன்11:35 AM, நவம்பர் 17, 2010

    மா சிவகுமார் அவர்களுக்கு மறுபடி
    / * ஏலத்தில் அலைக்கற்றை வாங்கிய 3G சேவைக்கு டாடா டோகோமோ நிர்ணயித்துள்ள விலை என்ன தெரியுமா? விசாரித்துப் பாருங்கள். நிமிடத்துக்கு 10 ரூபாய் இல்லை! */

    நான் திமுக அனுதாபி அல்ல. மக்களை கொள்ளை அடிக்கும் இந்த கும்பல் ஒழிய வேண்டும் என்று நினைப்பவன். BSNL 3G video call சேவை ஒரு நிமிடத்திற்கு 60 பைசா ( ஊழல் நடக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். ஏனென்றால் BSNL ஒரு பொதுத்துறை நிறுவனம். அவர்களுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ). டாட்டா டோகோமோ 5 பைசா / செகண்ட் = 3 ரூபாய் / நிமிடம். மூன்று ரூபாய் மிக அதிகம் தான். லக்கி திமுக அனுதாபி என்றாலும் இந்த பதிவு என்னை சிந்திக்க வைக்கிறது. அரசுக்கு வருவாய் இழப்பென்றாலும் மக்களுக்கு நல்லது நடந்தா சரி. ஆனால் லஞ்சம் வாங்கியதற்கு ராஜாவை நீக்கியது சரி. அவர் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  61. லக்கி, அப்படியே இதையும் ஒருமுறை படிச்சிருங்க.. http://www.dinamalar.com/News_Detail.asp?Id=127783

    பதிலளிநீக்கு
  62. பெயரில்லா12:26 PM, நவம்பர் 17, 2010

    //நண்பர் பிரதீப் ஜெயப்பிரகாஷ் 'ஸ்பெக்ட்ரம்' குறித்த அவரது அவதானிப்புகளை ஒரு நீண்ட மடலாக ஆங்கிலத்தில் எனக்கு தந்திருக்கிறார். அவரிடம் வலைப்பூ இல்லை. மொழியாக்கம் செய்து வெளியிட முடியுமா என்று கோரியிருந்தார். அவரது வேண்டுகோளையேற்று சில 'சரக்குகளை' சைட் டிஷ்ஷாக இணைத்து இந்தப் பதிவு...///

    A guy who can write an article in english, and that too abt such a controversial matter, don't have a blog....

    Nambitom...

    Where is this "Tamil","Dalit" comes in to picture? such a racist/fascist bias.

    It's a shame that I have to put a disclaimer as a non brahmin..

    பதிலளிநீக்கு
  63. மிக நேர்த்தியான பதிவு , ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி என்பது மிகை படுத்தப்பட்ட ஒன்று என்றாலும் , ஊழல் நடந்ததற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகிறது .

    பதிலளிநீக்கு
  64. அருமையாக தங்கள் நிலைப்பாட்டை கூறிவிட்டீர்கள். ஆமாம் அப்படி தாண்டா செலவு பண்ணுவோம் என்று 320 கோடிக்கு வக்காலத்து வாங்கியவர் வேறு என்ன செய்ய முடியும்..

    பதிலளிநீக்கு
  65. மிகவும் வருந்தத்தக்க கண்டிக்கத்தக்க பதிவு இது. இப்படி தவறு செய்பவர்களுக்குச் சாதகாமாக மக்களுக்குத் தெரியாத விசயங்களைச் சொல்லி தவறை மூடி மறைப்பது கடுமையாக கண்டிக்கத்தக்க்கது.

    எப்படி என்கவுண்டரை ஆதரிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தோ, இது போன்ற குற்றச்சாட்டுகளை பொய் கூறி திசை திருப்பும் போக்கும் ஜனநாயகத்திற்கு ஆபத்துதான்.

    2ஜி, 3ஜி என்பன கம்பியில்லா தகவல் பறிமாற்ற தொழில்நுட்ப முறைகள். 2ஜி என்பது நாம் இப்போது பேசுகிறோம் அல்லவா அந்தத் தொழில்நுட்பம். குறைந்த அளவு தகவல்களைப் பரப்பும் முறை. 3ஜி என்பது மிக மிக அதிகமான தகவல்களைப் பரப்பும் முறை, இதில் வீடியோக்கள் கூட அனுப்ப முடியும். 3ஜி வந்த பிறகு 2ஜி காலாவதியாகும் என்பது அடிமுட்டாள்தனமானது. இப்படி எந்த கோப்பிலாவது போட்டிருக்கிறதா? எங்கு படித்தார் அவர் என்று சொல்ல முடியுமா? விக்கியில் கூட 2ஜி 3ஜி பற்றி எல்லாம் இருக்கிறதே, இதை வெளியிடுவதற்கு முன்னர் சரிதானா என படித்தீர்களா?

    3ஜி வந்தாலும் 2ஜி காலாவதியாகக்கூடிய விசயம் கிடையாது. ஏனென்றால்,
    - என்னதான் 3ஜி வந்தாலும், நாம் பேசுவது 2ஜி யில்தான், வீடியோ இண்டர்நெட் சமாச்சாரங்கள்தான் 3ஜியில் இருக்கும்.
    - இதற்காக பிரத்யோக மொபைல் வாங்கவேண்டியிருக்கும். அது இல்லாதவர்கள் 2ஜிதான் உபயோகிப்பார்கள்.
    - அப்படிப்பட்ட போன் இருந்தாலும் நமது Service Provider யிடம் இந்த வசதியைக் கேட்டுப் பெற வேண்டும்.
    - Service Provider, சிக்னல்களில் இதற்காக சில மாற்றங்கள் செய்ய வேண்டியது இருக்கும். குறிப்பிட்ட பெரு நகரங்களில் மட்டும்தான் இந்த வசதி முதலில் வரும்.
    - அப்படியே எல்லா ஊர்களிலும் மாற்றம் செய்து, அனைவரும் 3ஜி மொபைல் வாங்கி, அனைவருக்கும் அந்த வசதி கொடுக்க இன்னும் 5 முதல் 10 வருடங்கள் ஆகலாம்.
    - அப்படியே ஆனாலும், அந்த சமயத்தில் பேசும் முறை 2ஜி யில்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  66. //ஸ்பெக்ட்ரம் அலைவரிசை குறைந்த தொகைக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், அதன் பயனை இன்று இந்தியர்கள் அனுபவிக்கிறோம்//

    ஸ்பெக்ட்ரம் குறைந்த விலைக்கு ஒதுக்கப்பட்டது நமக்கு சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு அல்ல. சில real estate வணிகம் செய்யும் நிறுவனங்களுக்கு. அவர்கள், மொபைல் சேவை அளிக்கும் நிறுவனக்களுக்கு கூடுதல் விலையில்தான் விற்றிருக்கிறார்கள். குறைந்த விலைக்கு அவர்கள் வாங்கவில்லை. நமக்கு சலுகைகள் ஏதும் கிடைக்கும் வாய்ப்பு இல்லை.

    இது உங்களுக்கும் தெரியுமென்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  67. """ஸ்பெக்ட்ரம் அலைவரிசை குறைந்த தொகைக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால், அதன் பயனை இன்று இந்தியர்கள் அனுபவிக்கிறோம். சேவைக்கட்டணம் குறைவாக இருப்பதால்தான் இன்று இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் கூட எளிய மனிதர்களின் அத்தியாவசியப் பொருளாக மொபைல் போன் மாறியிருக்கிறது.""""

    உங்களுடய மேற்குறிய கருத்து மிகவும் முட்டாள் தனமானது. ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை குறைந்த விலைக்கு ஒதுக்கியிருந்தாலும், அதை வாங்கிய பெரும்பாலான நிறுவனங்கள் அதை பெரிய விலைக்கு விற்று லாபம் அடைதிருகின்றன.. அதனால் நீங்கள் கூறியது போல இன்று மூலை முடுக்கெல்லாம் எளியவர்களும் பயன் படுத்தும் பொருளாக மொபைல் மாறியதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை... சொல்ல போனால் இது சேவை அளிக்கும் நிறுவனங்கள் அதிகரித்ததால், அவர்களுக்கு இடையேயான போட்டி அதிகரித்ததால் மக்களுக்கு கிடைத்த லாபம்.

    உங்களை மாதிரி ஆட்கள் இந்த மாதிரியான உழல்களை ஆதரிப்பதை, நியாயபடுத்துவதை நிறுத்துங்கள்.

    பதிலளிநீக்கு
  68. பெயரில்லா3:58 PM, நவம்பர் 17, 2010

    இதுல ஜாதி எங்க வந்தது.பிரபலமான விசயங்களை பற்றி வித்தியாசமாக, தப்பு தப்பா எழுதி மக்களை வெறுப்பேத்தி நீங்க மேலும் பிரபலம் ஆகலாம் என்ற நினைப்பா ?
    அதெப்படி பிரபலமான ஆட்கள் எந்தவொரு விசயத்தையும் வித்தியாசமாகத்தான் பார்ப்பார்கள் ஆகவே நானும் வித்தியாசமாக யோசிக்கறன் என மன்னராட்சி நடத்துபவர்களிடம் பணம் வாங்கி கொண்டு கிளம்பி விடுகிறீர்கள்??
    உங்க சிந்தனையை அனைத்து டிவி சேனல்களுக்கும் அனுப்பிவிட்டு அவர்களுக்கும் புத்தி சொல்லி விட்டு,அப்படியே தஞ்சை கல்வெட்டிலும் பதித்து விட்டு சீட் கேட்டு குடும்ப ஆட்சி நடத்துவர்களிடம் செல்லுங்கள்..
    த்தூ... இது ஒரு பொழப்பு ...

    பதிலளிநீக்கு
  69. 'பல்லாயிரம் கோடி ரூபாய் அரிசி ஊழல்' என்று ஜெயலலிதா உளறுவாரேயானால், தமிழக ஏழை மக்கள் அவரை காறி உமிழ மாட்டார்களா?


    உன்மை சொன்னதும் சுட்டு விட்டது போல. உங்கள் எழுத்துகளில் ஆத்திரம் தெரிகிறது. நீங்கள் தி மு க சொம்பு தூக்கி என்று தெரியும். இது ரொம்ப ஓவர். நீங்கள் முன்னேற்பாடுடன் தான் செயல் படுகிறீர்கள். விரைவில் தேர்தல் வேறு வருகிறதே. இப்படியே அவர்கள் வேட்டியை தூக்கி பிடித்து நில்லுங்கள். யாருக்கும் தெரியும் உங்களுக்கும் ஒரு சீட் தரலாம்.

    பதிலளிநீக்கு
  70. பெயரில்லா4:18 PM, நவம்பர் 17, 2010

    lucky krishna,

    you stooped to a new low publishing this article. Yeah! the mode of a scam is always different. how many hundreds of crores he and ur DMK family would have received behind the back on such a deal? You guys have no shame and you are telling us that if we ask about that, we should not buy gas, rice etc etc.. Where does the caste and region belong in any scam? You & your logic sucks!!

    பதிலளிநீக்கு
  71. பெயரில்லா4:34 PM, நவம்பர் 17, 2010

    ஆளப்பிறந்தவன் --> DMK-la next election seat kidachiducha! Unga mela iruntha mathipu inimel thuli kooda irukathu... neengalum ippadi patta aalthaanu puriya vachiteenga

    பதிலளிநீக்கு
  72. ராஜா சும்மா ஒரு பாத்துரூபா, வடை, டீ வாங்கிட்டு 2g ஏலம் விட்டுட்டாரு கண்டுக்க வேண்டாம் மக்களே...இது ஒரு ஊழல்ன்னு சொன்ன திமுக கோவிச்சுக்கும்... அவர் தலித் முக்காடு போட்டுக்கிட்டுதான் டெல்லி போனார்..

    பதிலளிநீக்கு
  73. பெயரில்லா4:57 PM, நவம்பர் 17, 2010

    உனது ப்ளாக் நன்றாக இருக்கு - பொதுவில்.

    ஆனால், மொத்தத்தில் மக்களுக்குத் தவறு என்று தெளிவாக இருக்கும் விஷயங்களில் கூட உன்னை மாதிரி ஆட்கள் அதிபுத்திசாலி என்று நினைத்துக்கொண்டு மாற்றுக் கருத்தை எழுதுகிறீர்கள். இந்த மாதிரி போஸ்ட் நீ போடறது இது முதல் முறை இல்லை.

    கழகங்களுக்கு சொம்படிப்பதை நிறுத்தி விட்டு, நல்ல போஸ்ட்களை மட்டுமே போடு தம்பி. பொதுஜனம் சந்தோஷப்படும்.

    பதிலளிநீக்கு
  74. தோழர்களே!

    பின்னூட்டங்களில் வந்திருக்கும் பல எதிர்வினைகள் ரொம்ப ரொம்ப சப்பையாக இருக்கிறது.

    திரும்ப திரும்ப பேசியதையே பேச வேண்டுமா என்று அலுப்பாகவும் இருக்கிறது.

    சுருக்கமா சொல்ல முயற்சிக்கிறேன்.

    பாயிண்ட் நெ.1 : CAG ரிப்போர்ட், பயனீயர் பத்திரிகையின் கட்டுரை, இத்யாதி, இத்யாதியெல்லாம் ராசாவை குற்றவாளி என்று சொல்ல போதுமானதல்ல. அவர் யாரிடமாவது ‘பேரம்’ நடத்தி, பணம் கைமாறியதா என்பதை நிரூபித்தால் மட்டுமே அவரை ஊழல் செய்ததாக குற்றம் சாட்ட முடியும்.

    பாயிண்ட் நெ. 2 : இங்கே பின்னூட்டங்களில் மக்கள் பேசும் லெவலுக்கு யோக்கியதையை கடைப்பிடிக்க வேண்டுமானால் ஷேர்மார்க்கெட், ரியல் எஸ்டேட் போன்ற பல தொழில்களை இழுத்து மூட வேண்டியதுதான்.

    பாயிண்ட் நெ. 3 : இந்த விவகாரத்தில் ‘தில்லு-முல்லு’களுக்கு வாய்ப்பிருக்கிறது என்றே பதிவிலும் எழுதியிருக்கிறேன். ஆயினும் நடந்ததற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை.

    பாயிண்ட் நெ. 4 : தோழர் அதிபிரதாபன் அவர்கள் இந்த மின்காந்த அலைவரிசை சமாச்சாரம் பற்றி கொஞ்சம் கூடுதலாக படிக்க வேண்டும். ஏற்கனவே நம் நாட்டில் கிட்டத்தட்ட 10 பிளேயர்கள் ஸ்பெக்ட்ரமில் இருக்கிறார்கள். ராசா காலத்தில் விற்கப்பட்ட அலைவரிசை ராணுவத்திடம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த கூடுதல் அலைவரிசை. இதன் மூலம் கூடுதலாக 3 பிளேயர்கள் வர வாய்ப்பிருந்தது. இன்றுவரை யூனிநார் மட்டுமே வந்திருக்கிறார்கள்.

    2ஜி, 3ஜி என்பதற்கெல்லாம் ரொம்ப குழம்ப வேண்டாம். அது அடுத்தடுத்த வெர்ஷன் மாதிரிதான். 3ஜி என்றால் அதில் வெறும் வீடியோதான், வாய்ஸ் கால் இருக்காது என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

    பாயிண்ட் நெ. 5 : குறைவான தொகையில் நாம் மொபைல் போன் உபயோகிக்க ராஜாதான் காரணமென்று என்னுடைய பதிவில் இல்லை. நான் பதிவில் சொல்லாத விஷயங்களுக்கு எல்லாம் பதில் அளித்து தொலைக்க வேண்டியிருக்கிறது. ஸ்பெக்ட்ரல் 92ல் இருந்து ஒதுக்கப்படும் முறையைதான் இதற்கு காரணமாக குறிப்பிட்டிருக்கிறேன். தனியாக ராஜாவை பெருமைப்படுத்தவில்லை.

    ஓக்கே. வேறெதுவும் சிந்தனையை தூண்டுமளவுக்கு இல்லை என்பதால் இந்த விளக்கங்களோடு முடித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  75. தோழர்களே!

    பின்னூட்டங்களில் வந்திருக்கும் பல எதிர்வினைகள் ரொம்ப ரொம்ப சப்பையாக இருக்கிறது. திரும்ப திரும்ப பேசியதையே பேச வேண்டுமா என்று அலுப்பாகவும் இருக்கிறது.

    சுருக்கமா சொல்ல முயற்சிக்கிறேன்.

    பாயிண்ட் நெ.1 : CAG ரிப்போர்ட், பயனீயர் பத்திரிகையின் கட்டுரை, இத்யாதி, இத்யாதியெல்லாம் ராசாவை குற்றவாளி என்று சொல்ல போதுமானதல்ல. அவர் யாரிடமாவது ‘பேரம்’ நடத்தி, பணம் கைமாறியதா என்பதை நிரூபித்தால் மட்டுமே அவரை ஊழல் செய்ததாக குற்றம் சாட்ட முடியும்.

    பாயிண்ட் நெ. 2 : இங்கே பின்னூட்டங்களில் மக்கள் பேசும் லெவலுக்கு யோக்கியதையை கடைப்பிடிக்க வேண்டுமானால் ஷேர்மார்க்கெட், ரியல் எஸ்டேட் போன்ற பல தொழில்களை இழுத்து மூட வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  76. பாயிண்ட் நெ. 3 : இந்த விவகாரத்தில் ‘தில்லு-முல்லு’களுக்கு வாய்ப்பிருக்கிறது என்றே பதிவிலும் எழுதியிருக்கிறேன். ஆயினும் நடந்ததற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை.

    பாயிண்ட் நெ. 4 : தோழர் அதிபிரதாபன் அவர்கள் இந்த மின்காந்த அலைவரிசை சமாச்சாரம் பற்றி கொஞ்சம் கூடுதலாக படிக்க வேண்டும். ஏற்கனவே நம் நாட்டில் கிட்டத்தட்ட 10 பிளேயர்கள் ஸ்பெக்ட்ரமில் இருக்கிறார்கள். ராசா காலத்தில் விற்கப்பட்ட அலைவரிசை ராணுவத்திடம் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த கூடுதல் அலைவரிசை. இதன் மூலம் கூடுதலாக 3 பிளேயர்கள் வர வாய்ப்பிருந்தது. இன்றுவரை யூனிநார் மட்டுமே வந்திருக்கிறார்கள்.

    2ஜி, 3ஜி என்பதற்கெல்லாம் ரொம்ப குழம்ப வேண்டாம். அது அடுத்தடுத்த வெர்ஷன் மாதிரிதான். 3ஜி என்றால் அதில் வெறும் வீடியோதான், வாய்ஸ் கால் இருக்காது என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

    பாயிண்ட் நெ. 5 : குறைவான தொகையில் நாம் மொபைல் போன் உபயோகிக்க ராஜாதான் காரணமென்று என்னுடைய பதிவில் இல்லை. நான் பதிவில் சொல்லாத விஷயங்களுக்கு எல்லாம் பதில் அளித்து தொலைக்க வேண்டியிருக்கிறது. ஸ்பெக்ட்ரல் 92ல் இருந்து ஒதுக்கப்படும் முறையைதான் இதற்கு காரணமாக குறிப்பிட்டிருக்கிறேன். தனியாக ராஜாவை பெருமைப்படுத்தவில்லை.

    ஓக்கே. வேறெதுவும் சிந்தனையை தூண்டுமளவுக்கு உருப்படியாக இல்லை என்பதால் இந்த விளக்கங்களோடு முடித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  77. மற்றும் ஒரு மகிழ்ச்சியான செய்தி தோழர்களே!

    சற்று நேரம் முன்பாக நீலகிரி பாராளுமன்றத் தொகுதியில் இருந்து தோழர் ஒருவர் பேசினார். மானமிகு ராசா அவர்களின் தொகுதி இது. இந்தப் பதிவினை துண்டுப் பிரசுரங்கள் மற்றும் ஃபிளெக்ஸ் போர்டுகள் வடிவில் மக்களுக்கு கொண்டு செல்ல அனுமதியும் கேட்டார்.

    இங்கே பின்னூட்டமிட்ட அனைவருமே, பிரிண்ட் செய்யப்படும் துண்டுப் பிரசுரங்களுக்கும், ஃபிளெக்ஸ் போர்டுகளுக்கும் அடியில் சென்று, இதே பின்னூட்டங்களை இடுமாறு சிரம் தாழ்த்தி வேண்டிக் கொள்கிறேன்!

    பதிலளிநீக்கு
  78. நானும் என்னைச் சுற்றி
    இருப்பவர்களும் சௌக்கியமாக இருப்பதால், அகில இந்தியாவும், அதே சௌக்கியத்துடன் இருக்கிறது என்று அரசியல்வாதிகள் நம்ப வைத்துவிட்டார்கள்..
    நீங்க சம்பாதிப்பதை நான் குற்றம் சொல்லவில்லை. ஆனால், உங்களுக்கு வாய்ப்பு கிடைத்த மாதிரி ...எல்லோருக்கும் இந்தச் சமூகத்தில் நல்லபடியா வாழ வாய்ப்பு, by default இருக்கிறது என்று நினைக்கிறீர்கள் பாருங்கள், அதைத்தான் தப்பு என்கிறேன்....

    பதிலளிநீக்கு
  79. லக்கி,
    அரசியலுக்குள் வரவில்லை. இங்கு நான் சொன்னவற்றை மட்டும் தெளிவுபடுத்திக்கொள்கிறேன்.

    3ஜி வருகையினால் 2ஜி காலாவதியாகாது என்பதனை காரணங்களுடன் சொல்லியிருக்கிறேன்.
    அதில் ஏதேனும் இரு காரணத்தையாவது மறுத்துக்கூற இயலுமா? இப்படி பொதுவாக சொல்லுகிறீர்களே. நான் சொன்னவற்றில் எது ஏற்புடையது இல்லை என்றாவது கூறுங்கள், திருத்திக்கொள்ள வசதியாக இருக்கும்.

    இன்னும் விளங்குமாறு சொல்லுவதென்றால், GSM, CDMA, GPRS, EDGE என்பதுதான் 2ஜி. இந்தியா முழுவதும் பெரும்பான்மையான மக்கள் வைத்திருப்பது GSM/CDMA போன்தான். அனைத்து Network களும் GSM/CDMA தான்.

    முதலில் அனைத்து இடங்களிலும் 3G Network கருவிகளைப் பொருத்த வேண்டும், அப்படிப் பொருத்தினாலும் மக்கள் 3ஜி போன் வாங்க வேண்டும், அப்படியே வாங்கினாலும் வசதியைக் கேட்டுப் பெற வேண்டும்.

    அனைத்தையும் மாற்ற 5 முதல் 10 ஆண்டுகள் ஆகும் என்கிறேன். 2ஜி உடனேயே காலாவதியாகிவிடாது.

    மேலும் 3ஜி என்பது Value Added Service தானே ஒழிய, அனைவருக்கும் வழங்கப்படும் சேவை அல்ல. இந்த சேவையைக் கேட்டுப் பெறாதவர்கள் 2ஜி யைத்தான் உபயோகிக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  80. பிரதாபன்!

    1ஜி, 2ஜி, 3ஜி - விஷயங்களில் கொஞ்சம் குழம்பியிருக்கிறீர்கள் அல்லது நீங்கள் நினைப்பது சரியென்று நினைக்கிறீர்கள்.

    1ஜி - அனலாக் வாய்ஸ் சிஸ்டம்.

    2ஜி - டிஜிட்டல்

    3ஜி - டிஜிட்டலில் கூடுதல் வசதிகள் (வீடியோ கால், மெசேஜிங் போன்றவை)

    ஓக்கே.

    2ஜி பரவலான பிறகு 1ஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று நினைக்கிறீர்களா?

    3ஜி பரவலாகும் போது 2ஜிக்கு அவசியமே இருக்கப் போவதில்லை. 2ஜி 2 வருடத்துக்குள் ஒழியுமா, 5 வருடத்துக்குள் ஒழியுமா என்று ஜோசியம் சொல்ல முடியாது. கலர் ஸ்க்ரீன் மொபைல் நம்மை எவ்வளவு வேகத்தில் ஆக்கிரமித்தது? இந்தே வேகத்தை முன்கூட்டியே கணக்கிட முடிந்ததா?

    2ஜி = சிறிய ஓட்டை

    3ஜி = பெரிய ஓட்டை

    வீடியோ மொபைல் சர்வீஸ் = பெரிய பூனை

    வாய்ஸ் மொபைல் சர்வீஸ் = சின்ன பூனை

    இரண்டு பூனைகளும் நுழைந்து வெளியேற ஒரே ஒரு ஓட்டை போதும். எனவே 2ஜி விரைவில் அதற்கான தேவையை இழந்துவிடும். புரிகிறதா?

    ப்யூச்சரில் மவுசில்லாத பிசினஸில் ஒரு கோடியே 75 லட்சத்தை எவனும் கொட்ட மாட்டான் சார்.

    ஸ்ஸப்பா.... இதுக்கு மேலயும் எளிமையா புரியவைக்க முடியுமான்னு தெரியலை :-(

    பதிலளிநீக்கு
  81. //ப்யூச்சரில் மவுசில்லாத பிசினஸில் ஒரு கோடியே 75 லட்சத்தை எவனும் கொட்ட மாட்டான் சார்.
    //

    அது ஒரு லட்சத்து 70000 கோடி

    பதிலளிநீக்கு
  82. பெயரில்லா9:17 PM, நவம்பர் 17, 2010

    லக்கி,
    சொல்லப்படும் தொகை யில் கண்டிப்பாக கோளாறு உள்ளது. அதற்காக எதுவுமே நடக்கவில்லை, எந்த வரம்பு மீறலும் இல்லை, நடந்ததெல்லாம் admission க்கு வாங்கும் கமிஷன் மாதிரி தான் என்ற தோற்றத்தை உருவாக்குவதாக இருப்பது எற்றுக்கொள்ளகூடியது அல்ல.
    மக்களுக்காக என்று சொல்லப்பட்டு செய்யப்படும் விசயங்களில் தான் ஊழல் நடத்த முடியும்.ஊழலுக்காகவே ஒரு துறை இல்லை. அப்படி பார்க்க போனால் இது வரை எந்த ஊழலும் நடக்கவே இல்லை.
    ஒரு தமிழர், ஒரு தலித் என்பதிற்காக செய்யப்படும் துவேசம் போன்றதே தனக்கு பிடித்தமானவர்கள் செய்யும் தவறுகளை நீர்த்துப் போக செய்தலும்.

    பதிலளிநீக்கு
  83. பெயரில்லா9:54 PM, நவம்பர் 17, 2010

    your reply is not correct.
    not for technoligial.
    it may out of service soon

    The main qustion is How licence sold very big marign.

    •Swan got license for Rs. 1537 crore, sold 45% stake to Etisalat for Rs. 4200 crore

    •Unitech Wireless got license for Rs. 1661 crore, sold 60% stake for
    Rs. 6200 crore

    You are answars is support you eraly artical.
    Other wise you are acting as insent.

    பதிலளிநீக்கு
  84. பெயரில்லா10:23 PM, நவம்பர் 17, 2010

    yuva,your response to prathapan shows your ignorance!
    He clearly explained 2G and still you are not able to understand that!!!?
    If I have to release tender and choose the company that will give me more income and not chose the first one which will give me low income!
    prathapan can refrain making comments to ppls who are adamant in proving wrong things right!
    ethana kodi ungalukku lucky?!!
    pana naththam thangala mudiyala!

    பதிலளிநீக்கு
  85. வலைப்பதிகரை பொறுத்த வரை

    ஸ்பெக்ட்ரம் வழக்கில் கண்டனத்தை தெரிவித்த உச்ச நீதி மன்ற நீதிபதிகள் முட்டாள்கள்.
    வெளிப்படையான ஏல முறையை பரிந்துரைத்த பிரதமர் அலுவலகத்தை சேர்ந்தவர்கள் முட்டாள்கள்
    77 பக்க அறிக்கை தந்த கணக்கு தணிக்கை அமைப்பு அதிகாரிகள் முட்டாள்கள்
    அமைச்சரை ராஜினாமா செய்ய வைத்த சோனியா முட்டாள்
    ஏலம் எடுத்த நிறுவன பங்குகளை வாங்கி லாபம் என நினைப்போர் முட்டாள்கள்

    மக்களுக்கு நன்மை செய்யும் ஒரே நோக்கதிற்காக பலப்பல கோடிகளை குறைத்து உரிமம் அளித்த அமைச்சர் நல்லவர்
    முந்தைய அரசுகளின் கொள்கைகளை எப்போதும் அப்படியே ஏற்று நடந்துகொள்ளும் அமைச்சர் சிறந்த நிர்வாகி
    பல உண்மையான தகவல்களை மறைத்து மக்களின் நன்மைக்காகவே உரிமம் வாங்கிய நிறுவனங்கள் நல்லவை
    அதை விளக்கும் இந்த வலைப்பதிகர் அறிவாளி

    இந்த பின்னூட்டம் இடும் (என்னையும் சேர்த்து) அனைவரும் பைத்தியகாரர்கள்

    அப்படிதானே?

    பதிலளிநீக்கு
  86. நீங்கள் சொல்வதுபடி வைத்துக்கொண்டாலும், அதை ஏன் வெளியுலகுக்கு தெரியாமல் செய்ய வேண்டும்.

    விவசாயக்கடன் அறுபதாயிரம் கோடி தள்ளுபடி செய்தபோது எவ்வளவு விளம்பரம் செய்தார்கள், அதுபோல் இந்த தள்ளுபடி விலைக்கும் விளம்பரங்கள் வந்திருந்தால் "நீங்கள் சொன்னதுமட்டுமே" உண்மை என்று நம்பலாம்.

    பதிலளிநீக்கு
  87. 2 G & 3 G தொழில் நுட்பத்தில் நீங்கள் சொல்வது உண்மை என்றே நினைக்கிறேன். ஆனால், ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து / மறைத்து விட்டீர்கள். 1 G யிலுருந்து 2 G மாறும்போது நம் நாட்டில் mobile phone அவ்வளவாக உபயோகத்தில் இல்லை (1991-1992). அதனால் பெரிய பாதிப்பு யாருக்கும் இல்லை. ஆனால், இப்போது இருக்கும் 35 கோடி கை பேசியில் ஏறக்குறைய 32 கோடி (90%) கை பேசிகள் 2 G யில் மட்டுமே இயங்க கூடியவை. அதனால் தான் 2G யின் லைப் இன்னும் நிறைய நாட்களுக்கு இருக்கும்

    பதிலளிநீக்கு
  88. //பாயிண்ட் நெ. 2 : இங்கே பின்னூட்டங்களில் மக்கள் பேசும் லெவலுக்கு யோக்கியதையை கடைப்பிடிக்க வேண்டுமானால் ஷேர்மார்க்கெட், ரியல் எஸ்டேட் போன்ற பல தொழில்களை இழுத்து மூட வேண்டியதுதான்.//
    உண்மையாகவா? எல்லோருமா இவ்வளவு அயோக்யர்கள்? கண்டிப்பாக இல்லை என்று நம்புகிறேன்
    //பாயிண்ட் நெ.1 : CAG ரிப்போர்ட், பயனீயர் பத்திரிகையின் கட்டுரை, இத்யாதி, இத்யாதியெல்லாம் ராசாவை குற்றவாளி என்று சொல்ல போதுமானதல்ல. அவர் யாரிடமாவது ‘பேரம்’ நடத்தி, பணம் கைமாறியதா என்பதை நிரூபித்தால் மட்டுமே அவரை ஊழல் செய்ததாக குற்றம் சாட்ட முடியும்.//
    உண்மை. அதற்க்கான விசாரணை நடத்த வேண்டுமானால் அதில் சம்மந்த பட்டவர் பதவியில் இருந்தால் அது எப்படி நேர்மையாக நடக்க முடியும்.

    பதிலளிநீக்கு
  89. //பின்னூட்டங்களில் வந்திருக்கும் பல எதிர்வினைகள் ரொம்ப ரொம்ப சப்பையாக இருக்கிறது.//

    Good attitude. Keep it up!

    பதிலளிநீக்கு
  90. பெயரில்லா8:12 AM, நவம்பர் 18, 2010

    Am reading your post for quite sometime where you are clearly defending DMK... There is a cleAR indication that what he has done is wrong but i dont know how you are defending it.. It is said that he has followed the 1999 cost based is the price which was in 99 same as now( rice was mere 10 rupees what about now?) and also the CAG has indicated that he ignored the advice of threee ministries.. why did he do so? And also what about SWAN. And why did he prepond the bid.. lot of questions to be answered boss. image of tamils have been tarnished because of this.. dont just blindly support because you like this party..

    பதிலளிநீக்கு
  91. பெயரில்லா8:20 AM, நவம்பர் 18, 2010

    யுவகிருஷ்ணா, இன்னொரு மோசமான கட்டுரை. எப்படியோ பத்திரிகையாளராகி விட்ட நீங்கள் அதற்குரிய பொறுப்புடன் எழுதுவது நல்லது. இந்த சர்ச்சையில் நிகழ்ந்த ஊழல்களை தணிக்கை அறிக்கை தெள்ளத் தெளிவாக வைத்த பின்னரும் இவ்வாறு சப்பைக்கட்டு கட்டுவது நகைச்சுவையே. ஊழல் பெருச்சாளிகளுக்கு துணை போகும் இந்த மாதிரி நபர்களால்தான் தேசம் அழிகிறது. எத்தனை சைபர் என்றே கணக்கு வைக்க முடியாத பணத்தை ஒரு குடும்பமே கொள்ளையடிக்கிறது. உணவில்லாமல் பல குழந்தைகள் அதே தேசத்தில் இறக்கின்றன. ஊழல் செய்பவர்களுக்கு இது உறைககவே உறைக்காதா?

    பதிலளிநீக்கு
  92. 1. பின்னூட்டங்களை flex பலகைகளிலும், துண்டு பிரசுரங்களிலும் சேர்க்குமளவுக்கு எதிர்ப்பாளர்களிடம் வசதி இருக்காதே லக்கி! எல்லோரும், அமைச்சராக இருந்து சம்பாதித்திருக்கிறார்களா என்ன!

    2. //ப்யூச்சரில் மவுசில்லாத பிசினஸில் ஒரு கோடியே 75 லட்சத்தை எவனும் கொட்ட மாட்டான் சார்.//

    ஏலம் ஏன் விடவில்லை? விட்டிருந்தால் இன்னும் குறைவாக கிடைத்திருக்கும் என்கிறீர்களா?

    பிரதம மந்திரி, நிதிஅமைச்சகம், சட்ட அமைச்சகம், தொலை தொடர்புத் துறை செயலர் என்று வரிசையாக சொன்ன பரிந்துரைகளை எல்லாம் புறக்கணித்தது ஏன்?

    அலைக்கற்றை விலை நிர்ணயம் குறித்த ராசாவின் கூற்றுகளை பொய்யாக்கும் விபரங்கள்

    3. கொள்கை அறிவிக்கும் முன்பே ரிலையன்சுக்கு அலைக்கற்றை ஒதுக்கியது ஏன்?
    ரிலையன்சுக்குக் கிடைத்த முறையற்ற ஆதாயம் பற்றி CAG

    4. அரசுப் பதவியில் தள்ளுமுள்ளு இருப்பது இயல்புதான் என்று சொன்னதை இன்னும் விபரமாக விளக்குங்களேன்.

    5. இந்த நாட்டின், சமூகத்தின் முதல் எதிரிகள் ஊழல் வாதிகள், அரசுப் பதவிகளை சொந்த நலனுக்காக பயன்படுத்துபவர்கள். அவர்களுக்கு ஆதரவு அளிப்பது சமூக விரோதம். (அது ராசாவாக இருந்தாலும் சரி, கருணாநிதியாக இருந்தாலும் சரி, செயலலிதாவாக இருந்தாலும் சரி).

    ஆத்திரப்படாமல் ஆளப் பிறந்திருக்கும் யுவகிருஷ்ணாவிடம் குறைந்தபட்ச அரசியல் நேர்மையை எதிர்பார்க்கிறோம்.

    அன்புடன்,
    மா சிவகுமார்

    பதிலளிநீக்கு
  93. Krishna, what is the answer for this?

    http://savukku.net/index.php?option=com_content&view=article&id=163:2010-11-15-20-03-33&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

    பதிலளிநீக்கு
  94. லக்கி அண்ணா!
    நேரமிருந்தால் வாசியுங்கள்,

    http://sundaresan-n.blogspot.com/2010/11/blog-post.html

    விரும்பினால் இணைப்புக் கொடுங்கள்..........
    நன்றி.............

    பதிலளிநீக்கு
  95. பெயரில்லா12:36 PM, நவம்பர் 18, 2010

    Your talking as a DMK supporter. You are not writing as a press, to hide from a wrong you cant say dalit o iyer. Mistake is mistake. If you see the details of how the spectrum went to wrong companies and events that happened during those time you can understand how much he bend the rules to give spectrum to those guys. Still 2G, GSM spectrum is invaluable resource in the country it is not outdated, not only in our country u can also see in developed countries where they have gone to 4g still 2g is used by most people. Also the amount of loss might not be 1.76 lakh crores, but it will be any where around 60-80 thousand crores. So understand it is as a journalist not as a DMK man.
    -Ram

    பதிலளிநீக்கு
  96. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  97. அய்யா பெரியோர்களே , முடிந்தால் நீங்கள் எல்லாம் ஒரு வார்டு மெம்பர் ஆவது ஆகி மக்கள் சேவை செஞ்சு பாருங்க .... ப்ளாக்ல போஸ்டிங் போடறதும் கமெண்ட்ஸ் குடுக்கறதும் ரொம்ப ஈஸி தான்... இதில எத்தன பேர் நம்ம நாட்டுல இருக்கிங்க...?

    பதிலளிநீக்கு
  98. கிருட்டிணன்8:18 PM, நவம்பர் 18, 2010

    மக்களே ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் ஒதுக்கி நான் தரும் மூன்று சுட்டிகளை பொறுமையாக படியுங்கள். தமிழில் தான் உள்ளது. மூன்று பாகங்களாக. நமக்கான சவுக்கடியும் இதில் உள்ளது. உண்மை ரொம்ப சுடுது.

    http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-0/
    http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-02/
    http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-03/

    இதற்கு முன்பு லக்கியை நம்பி ஒரு பின்னூட்டம் இட்டேன். பிறகு கூகிளாண்டவர் மூலமாக இந்த சுட்டிகள் கிடைத்தன.

    பதிலளிநீக்கு
  99. ஜெய் - தமிழ்நாடுடாக்12:24 AM, நவம்பர் 19, 2010

    ராஜா தொலைதொடர்பு அமைச்சர் ஆவதற்கு முன்பு இருந்த அமைச்சர்களுக்கு எல்லாம் இவ்வளவு அலைகற்றைகள் இன்னும் கையிருப்பு உள்ளது என்பது தெரியாது(அல்லது மறைக்கப்பட்டது?????).... இப்படி தெரியாமல் இருந்து வந்ததில் யார் லாபம் அடைந்து வந்தார்கள் என்பது அனைவரும் யூகிக்கக் கூடியதே.... ஏற்கனவே உரிமம் பெற்றிருந்த பெரிய தொலைதொடர்பு நிறுவனங்கள் தான்.... ஏர்டெல், ஏர்செல், டாடா, ரிலையன்ஸ் போன்ற கம்பெனிகள்....

    அதிக போட்டியில்லாமல், நூறு கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில், மொத்தம் இந்த நான்கைந்து நிறுவனங்களை நம்பி தான் மொத்த மக்கள் தொகையும் இருந்தது..... நல்லா காசு பாத்துட்டு இருந்தாங்க....


    ராஜா வந்தான்.... இன்னும் எவ்வளவு அலைக்கற்றை உபயோகப் படுத்தப் படாமல் இருக்குதுன்னு தோண்டி எடுத்தான்..... அதை, இன்னும் பல புதிய நிறுவனங்களுக்கு வித்தான்.... (இதுல கமிஷன் அடிச்சானா?? இல்லையா?? எவ்வளவு அடிச்சான்?? அதெல்லாம் எனக்கு முக்கியமில்லை...)

    புதிய நிறுவனங்களுக்கு கொடுத்தானா... அவுங்களையும் இந்திய மார்க்கெட்ல நுழைச்சானா.... இதுல யாருக்கு நஷ்டம்??????? ஏற்கனவே, தங்களோட தொலைதொடர்பு சேவையை நாடு முழுசும் பரப்பி வச்சுகிட்டு கோடிக்கணக்கான மக்களை வாடிக்கையாளர்களா தன் வசம் வச்சுகிட்டிருந்த பழைய மகா கோடீஸ்வரர்களுக்கு தான் நஷ்டம்... ஏன்???? இது வரைக்கும் போட்டினு பெருசா இல்ல.... 100 கோடி மக்களை நாலா பிரிச்சு நாலு பேரும் அனுபவிச்சுகிட்டு இருந்தானுங்க.... போட்டின்னு இன்னும் 10 பேரு உள்ள நுழைஞ்சா கோவம் வருமா வராதா????? வரத்தானே செய்யும்....


    அது மட்டுமா.... இந்த ராஜா வந்த பிறகு தான் "Number portability"யை இந்தியாவில் கொண்டு வருவதற்கு தீவிர முயற்சி எடுத்தான்.... நம்பர் போர்டபிலிட்டினா என்னனா..... "நாம இப்போ ஒரு செல் கனெக்சன் வச்சிருக்கோம்... அது ஏர்டெல்னு வச்சுப்போம்... இப்போ நாம வோடஃபோன்ல ஒரு ப்ளான் நல்லா இருக்குன்னு அந்த கம்பெனியோட வாடிக்கையாளரா மாறனும்னா, அந்த வோடஃபோன் காரன் ஒரு புது நம்பர நமக்கு கொடுத்து, இனிமே இது தான்டா உன் நம்பரு... என் கம்பெனி ப்ளானை நீ யூஸ் பண்ணனும்னா நீ இந்த புது நம்பர் மூலமா தான் நீ யூஸ் பண்ணியாகனும்னு சொல்லுவான்.... இதுவே நம்பர் போர்டபிலிட்டி அறிமுகம் ஆச்சுனா, ஒரு கம்பெனில இருந்து இன்னொரு கம்பெனி மாறினாலும் நம்மளோட பழைய நம்பரையே மெயின்டெயின் பண்ணிக்குற வாய்ப்பு நமக்கு கிடைக்கும்...."

    இத தான் ராஜா கொண்டு வந்தே தீருவேன்னு அடம் புடிச்சான்.... நம்ம பழைய பெரும் தொழில் நிறுவனங்கள் எல்லாம் அவங்களால முடிஞ்ச அளவு இந்த நம்பர் போர்டபிலிட்டி விஷயத்துக்கு ஒத்துழைக்க மறுத்தாங்க... மறுத்துகிட்டு வராங்க.... ராஜா கொஞ்சம் விடாப்பிடியா இருந்தான்.... இதனாலேயும் கூட ராஜா மேல இந்த தொழிலதிபருங்களுக்கு எல்லாம் கடுப்பு.....

    எனக்கு தெரிஞ்சு பல பேரு, தங்களோட பல வருசத்து ஃபோன் நம்பர மாத்திடக் கூடாதுங்குற ஒரே காரணுத்துக்காக வேற செல் ஃபோன் கனெக்சனுக்கு மாறாம இருக்காங்க....

    நம்பர் போர்டபிலிட்டி மட்டும் இருந்துச்சுனா... "அட போடா... ஏர்டெல்லாவது மண்ணாவது ... நான் போறேன் புதுசா வந்த யூனிநாருக்கு"னு அவன் அவன் போய்கிட்டே இருப்பான்....

    இதுலயும் நஷ்டம் யாருக்கு.....???? ஏற்கனவே இந்தியாவுல பெரிய அளவுல மார்கெட்ட பிடிச்சு வச்சிருக்குற பழைய பெரும் நிறுவனங்களுக்கு தான் நஷ்டம்....


    இவ்வளவு பெரிய முதலைகளை பகைச்சுகிட்டு ஒருத்தன் அமைச்சரா இருந்துட முடியுமா இந்தியாவுல??????????????????????

    யோசிங்க... யோசிங்க....

    பதிலளிநீக்கு
  100. shame on you yuvakrishna. Being in the press industry, you would know how much the guy and his boss-es (and lady-love) got on this.

    பதிலளிநீக்கு
  101. கிருட்டிணன்12:54 PM, நவம்பர் 19, 2010

    @ shanthibabu
    /* அய்யா பெரியோர்களே , முடிந்தால் நீங்கள் எல்லாம் ஒரு வார்டு மெம்பர் ஆவது ஆகி மக்கள் சேவை செஞ்சு பாருங்க .... ப்ளாக்ல போஸ்டிங் போடறதும் கமெண்ட்ஸ் குடுக்கறதும் ரொம்ப ஈஸி தான்... இதில எத்தன பேர் நம்ம நாட்டுல இருக்கிங்க...? */

    உங்கள் பதில் முட்டாள்தனமானது. ஒழுங்கா வரி கட்டுறவன், சரியான ஆளுக்கு யோசித்து வாக்களிப்பவன், அவன் வேலையை ஒழுங்கா பார்த்திகிட்டு இருக்குறவன், இன்ன பிற சமூகத்திற்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பவன், எல்லாமே நாட்டுக்கு சேவை செய்கின்றவந்தான். வார்டு மெம்பர் இல்லையென்றால் கவுன்சிலர் ஆகித்தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்ற உங்களின் அறியாமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது. அவனவனுக்கு வேறு வேலை இருப்பதால் தான் இவர்களை போன்றவர்களிடம் சமூகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை கொடுத்து அதுக்கு சம்பளம் மற்றும் சலுகைகளை நம் பணத்தில் இருந்தே தருகிறோம். ஒரு குண்டூசி வாங்கினால் கூட அதில் அரசுக்கு நாம், மற்றும் அதை தயாரித்தவன் வரி கட்டுகிறோம். அதனால் இந்த நாட்டில் வாழும் பிச்சைகாரன் கூட கேள்வி கேட்கலாம். ஏனென்றால் அவன் ஒரு நாலு இட்லி சாப்பிட்டான் என்றால் அதிலும் அரசின் வரிப்பணம் இருக்கிறது. இதை தான் தகவல் அறியும் உரிமை சட்டமும் சொல்கிறது. சபை நலன் கருதி உங்களை கெட்ட வார்த்தையில் திட்டமல் விடுகிறேன். மனசுக்குள்ள நெறைய திட்டிவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  102. கிருட்டிணன்12:59 PM, நவம்பர் 19, 2010

    @ shanthibabu
    /* அய்யா பெரியோர்களே , முடிந்தால் நீங்கள் எல்லாம் ஒரு வார்டு மெம்பர் ஆவது ஆகி மக்கள் சேவை செஞ்சு பாருங்க .... ப்ளாக்ல போஸ்டிங் போடறதும் கமெண்ட்ஸ் குடுக்கறதும் ரொம்ப ஈஸி தான்... இதில எத்தன பேர் நம்ம நாட்டுல இருக்கிங்க...? */

    குறைந்த பட்சம் இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசா வேண்டாம். வேற யார் மேலயும் உங்களுக்கு கோபம் வரவில்லை என்றால் வினோதம் தான்.

    பதிலளிநீக்கு
  103. Lucky,
    Come out of DMK mindset and revisit the same.
    If he really wanted to give the benefit to the people, he could offered the spectrum to BSNL or passed the tenders for BSNL for 100 million lines. You know how long that tender process is going on and nothing is happening.

    பதிலளிநீக்கு
  104. are you mad at this level? My god? I agree that we have to give respect to other's opinion & thought.. But not to go along with madness.. I wasted my time by reading your blog.. It was my mistake... Anyway thanks for posting..

    பதிலளிநீக்கு
  105. In one of your comment you asked for Evidence.. In today's outlook, it clearly mentioned with text.. Please look at Mr.True Tamizhan's post...

    பதிலளிநீக்கு
  106. பெயரில்லா3:40 AM, நவம்பர் 20, 2010

    அந்த நிறுவனம் வேறு நிறுவனத்துக்கு பல ஆயிரம் கோடிக்கு விற்றுவிட்டது என்பது உங்கள் பதிவில் மறைக்க பட்டுள்ளது. அப்பாடி பலகோடி அதிகம் கொடுத்தது வாங்கிய நிருவனனம் எப்படி குறைந்த விலையில் சேவை வழங்கும்?

    What's your response to the above question?

    There's absolutely no logic in what you have posted (Not that I expected any).

    Just being a Dalit does not give you a right to loot the country.

    பதிலளிநீக்கு
  107. .@kiritinan //அவனவனுக்கு வேறு வேலை இருப்பதால் தான் இவர்களை போன்றவர்களிடம் சமூகத்தை நிர்வகிக்கும் பொறுப்பை கொடுத்து அதுக்கு சம்பளம் மற்றும் சலுகைகளை நம் பணத்தில் இருந்தே தருகிறோம்//

    அரசாங்க செயல்பாடுகளில் மக்கள் நேரிடையாக பங்கேற்கின்றனர். அரசாங்கத்தில் தீர்மானங்களை உருவாக்கும் வகையில் மக்கள் நேரிடையாக தொடர்பு உண்டு .

    பதிலளிநீக்கு
  108. அரசியல் என்பது மக்கள் குழுக்களில் முடிவெடிவெடுக்கும் முறையைக் குறிக்கும் சொல். பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும்.
    அரசியல் என்பது என்ன என்பது பற்றிப் பலர் பல கோணங்களிலிருந்து பார்த்து வரைவிலக்கணம் கொடுத்துள்ளார்கள். இவ் வரைவிலக்கணங்களுள் சில கீழே தரப்பட்டுள்ளன
    "ஆட்சி செய்வதற்குரிய கலையும், அறிவியலும் ஆகும்."
    குறிப்பாக, இது "பொதுத் திட்டங்களுக்காக, மக்கள் ஆதரவைத் திரட்டுவதன்மூலம், முரண்பாடுகளைத் தீர்க்கும் ஒரு நடைமுறையாகும்"
    "என்ன, எப்பொழுது, எங்கே, எப்படி யார் பெறுகிறார்கள்" என்பதே அரசியல்".

    ஆனால் நாம் இன்று செய்துகொண்டிருப்பது என்ன என்பதை சற்று சிந்திப்போம் ,
    இன்றைய பல இந்திய இளைஞர்களின் அதிகப்படியான எதிர்பார்ப்பு என்னவென்றால்
    ஐம்பதாயிரம் சம்பளத்தில் ஒரு வேலை , ஒரு கார் , ஒரு பிளாட் , அழகான ஒரு மனைவி .
    இதையும் தாண்டி சிந்திப்பவர்கள் , கவிஞர்களாகவும் , எழுத்தாளர்களாகவும் ,
    இயகுனர்களாகவும், வலைப்பூவிலும் , முகநூளிலும் ,தன் சிந்தனையை வெளிபடுத்துகிறனர் .

    பதிலளிநீக்கு
  109. உண்மையை சொல்லப்போனால் சமூக அக்கறையும் , தொலைநோக்கு பார்வையும் உள்ள வலைபூ நண்பர்களும் , முகநூல் நண்பர்களும் சற்று களத்தில் இறங்க முற்படவேண்டும்.
    இன்று வலைபூ நண்பர்களும் , முகநூல் நண்பர்களும் எந்தனை பேர் எங்களை போல் கிராமத்தில் வசிக்கிறார்கள் என்று சொல்லுங்கள் .கிராம ஜனங்கள் நிலை மிகவும் பரிதாபகரமானதாகும். பட்டணத்துக்காகவே கிராமங்கள் இருந்து வருகின்றன. கிராம சீர்திருத்தம் என்பது பட்டணங்களில் வாழ்பவர்களின் சௌகரியத்துக்கு ஆக செய்யப்படும் காரியமேயாகும். கசாப்புக் கடைக்காரன் ஆட்டைப்பற்றி கவலை கொள்ளுவது போல்தான் பட்டணக்காரன் கிராமத்தைப் பற்றி கவலை கொள்ளுவதாய் இருக்கிறது. அரசியல் தானாகட்டும், சமூக இயல் தான் ஆகட்டும் எவ்வளவுதான் முற்போக்கடைந்தாலும் கிராமக்காரனின் நிலை ஒரே மாதிரிதான். அவன் பாடுபட்டு உழைத்து வஸ்துக்களை உண்டாக்க வேண்டியதும், அதன் பலனை பட்டணக்காரன் அனுபவிப்பதுமல்லாமல் கிரம்திற்காக உருவாக்கப்படும் திட்டங்களையும் கிரம்தானையும் கிண்டலடிக்கும் மனோபாவம் இன்று நிலவுகிறது .
    எனக்கு தெரிந்து இந்த இரண்டு வருடங்களில்தான் குக்கிராமங்களில் கூட மொபைல் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன .
    இதை வாசிக்கும் எத்தனை பேர் கிராமத்தில் வசிக்கின்றனர் என்று எண்ணி பாருங்கள் . இங்கு பின்னுட்டம் எழுதுவதும் , வலை பூ எழுதுவதும் ,ஒரு பெரிய காரியமல்ல , தற்பெருமைக்காக சொல்லவில்லை , நான் M.E இறுதியாண்டு படிக்கும் பொழுதே அகில உலக கருத்தரங்கில் கலந்து கொண்டு தனது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்த போது அமெரிக்க நிறுவனம் ஓன்று சம்பளமாக சுமார் மூன்று லட்சம் ரூபாய்க்கு வேலை வாய்ப்பு அளித்தது, ஆனால் அந்த வாய்ப்பை நிராகரித்து இந்தியாவிலேயே எங்கள் குடுப்பதினரோடு எங்கள் கிராமத்தில் இருப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி என்று கூறிவிட்டேண். இப்பொழுது சொல்லுங்கள் நீ பிழைக்க தெரியாதவள் என்று ஏன் என்றால் படித்தவர்களும் பட்டினதாரும் என்னை பார்த்து சொல்லும் ஒரே வார்த்தை இதுதான் .நாம் கிராமத்துக்குப்போய் அவர்களுடைய பழமைப்பித்தை ஒழிக வேண்டும் மூடநம்பிக்கையை அகற்றவேண்டும் , நீங்கள் இதை செய்தால் அதுவே கிராம முன்னேற்றமான வேலையாகும். மற்றபடி நீங்கள் என்ன செய்தாலும் அது பயன்படாது.

    பதிலளிநீக்கு
  110. உண்மையை சொல்லப்போனால் சமூக அக்கறையும் , தொலைநோக்கு பார்வையும் உள்ள வலைபூ நண்பர்களும் , முகநூல் நண்பர்களும் சற்று களத்தில் இறங்க முற்படவேண்டும்.
    இன்று வலைபூ நண்பர்களும் , முகநூல் நண்பர்களும் எந்தனை பேர் எங்களை போல் கிராமத்தில் வசிக்கிறார்கள் என்று சொல்லுங்கள் .கிராம ஜனங்கள் நிலை மிகவும் பரிதாபகரமானதாகும். பட்டணத்துக்காகவே கிராமங்கள் இருந்து வருகின்றன. கிராம சீர்திருத்தம் என்பது பட்டணங்களில் வாழ்பவர்களின் சௌகரியத்துக்கு ஆக செய்யப்படும் காரியமேயாகும். கசாப்புக் கடைக்காரன் ஆட்டைப்பற்றி கவலை கொள்ளுவது போல்தான் பட்டணக்காரன் கிராமத்தைப் பற்றி கவலை கொள்ளுவதாய் இருக்கிறது. அரசியல் தானாகட்டும், சமூக இயல் தான் ஆகட்டும் எவ்வளவுதான் முற்போக்கடைந்தாலும் கிராமக்காரனின் நிலை ஒரே மாதிரிதான். அவன் பாடுபட்டு உழைத்து வஸ்துக்களை உண்டாக்க வேண்டியதும், அதன் பலனை பட்டணக்காரன் அனுபவிப்பதுமல்லாமல் கிரம்திற்காக உருவாக்கப்படும் திட்டங்களையும் கிரம்தானையும் கிண்டலடிக்கும் மனோபாவம் இன்று நிலவுகிறது .
    எனக்கு தெரிந்து இந்த இரண்டு வருடங்களில்தான் குக்கிராமங்களில் கூட மொபைல் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன .
    இதை வாசிக்கும் எத்தனை பேர் கிராமத்தில் வசிக்கின்றனர் என்று எண்ணி பாருங்கள் . இங்கு பின்னுட்டம் எழுதுவதும் , வலை பூ எழுதுவதும் ,ஒரு பெரிய காரியமல்ல ,

    பதிலளிநீக்கு
  111. தற்பெருமைக்காக சொல்லவில்லை , நான் M.E இறுதியாண்டு படிக்கும் பொழுதே அகில உலக கருத்தரங்கில் கலந்து கொண்டு தனது ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்த போது அமெரிக்க நிறுவனம் ஓன்று சம்பளமாக சுமார் மூன்று லட்சம் ரூபாய்க்கு வேலை வாய்ப்பு அளித்தது, ஆனால் அந்த வாய்ப்பை நிராகரித்து இந்தியாவிலேயே எங்கள் குடுப்பதினரோடு எங்கள் கிராமத்தில் இருப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி என்று கூறிவிட்டேண். இப்பொழுது சொல்லுங்கள் நீ பிழைக்க தெரியாதவள் என்று ஏன் என்றால் படித்தவர்களும் பட்டினதாரும் என்னை பார்த்து சொல்லும் ஒரே வார்த்தை இதுதான் .நாம் கிராமத்துக்குப்போய் அவர்களுடைய பழமைப்பித்தை ஒழிக வேண்டும் மூடநம்பிக்கையை அகற்றவேண்டும் , நீங்கள் இதை செய்தால் அதுவே கிராம முன்னேற்றமான வேலையாகும். மற்றபடி நீங்கள் என்ன செய்தாலும் அது பயன்படாது.

    பதிலளிநீக்கு
  112. பெயரில்லா12:55 PM, நவம்பர் 20, 2010

    ஈழத்தில் தமிழினத்தை காங்கிரஸ் சோனியா கூட்டம் கருணாக்களின் துணையோடு அழித்து விட்டது இனி பாக்கி தமிழகம் ... தமிழகத்தில் தமிழினத்தை அழிக்க கலைஞரின் துணை அல்ல தேவை ... கலைஞரின் அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்க வைப்பதன் மூலம் தமிழகத்தில் இருக்கும் மீதம் உள்ள தமிழுணர்வும் அழிந்து போய் பார்ப்பன கும்பலிடம் சரணாகி தமிழன் தன் இனம் மொழி தொலைந்து அடிமையானது அறியாமலே அடிமையாகிப்போவான்... அதற்கு இனி திமுக வின் பற்கள் ஒவ்வொன்றாக பிடுங்கப்படும் .... முதல் பல் ராசா...........

    பதிலளிநீக்கு
  113. அருமையான கவிதை! வாழ்த்துகள் யுவா.

    பதிலளிநீக்கு
  114. அண்ணே.. வணக்கம்ண்ணே..
    இப்படி, திடீர்னு நல்ல(?) நீயூஸ்-ச சொன்னீங்கனா..

    விடுங்கண்ணே...

    வயதான காலத்தில, கலைஞர் பாவம்.
    ஹி..ஹி.. நல்லாத்தான் இருக்கு கதை..


    கழகம்னா சும்மாவா?.. கரை படியாத கட்சியாச்சே..
    ஹி..ஹி..

    நடத்துங்க.. நடத்துங்க...

    பதிலளிநீக்கு
  115. //இ.சி.ஆர் said...
    லக்கி!

    அனானி பதிவர்கள் கூட அசால்ட்டாக சொன்ன கருத்துக்களை கவனத்தில் கொள்ளுங்கள்.

    ஸ்பெக்ட்ரம் கிடைக்காத மொபைல் முதலைகளும், தயாநிதி மாறனும் சேர்ந்து கிளப்பிய பூதம் தான் இந்த முறைகேடு என்றாலும், ராசாவை உத்தமர் என்று சொன்னால், அது முழு பூசனிக்காயை லிமிடெட் மீல்ஸ்க்குள் மறைப்பது போலாகும். உண்மைகளை மறைத்து எழுதுவதுவதனால், தாங்கள் மு.க வின் அல்லக்கை போன்ற தோற்றம் உருவாகும் வாய்ப்புள்ளது.

    திருத்துங்கள் என்று சொல்லவில்லை! திருத்தினால் Better//

    ********

    லக்கி....

    நண்பர் இ.சி.ஆர். சொன்னதையே நானும் வழிமொழிகிறேன்...

    திருத்துங்கள் என்று சொல்லவில்லை.. ஆனால், திருத்தினால் நன்றாக இருக்கும் என்று சொல்கிறேன்...

    பதிலளிநீக்கு
  116. //ப்யூச்சரில் மவுசில்லாத பிசினஸில் ஒரு கோடியே 75 லட்சத்தை எவனும் கொட்ட மாட்டான் சார்.//

    ********

    லக்கி, இதென்ன புது கணக்கு (ரொம்ப கம்மியா காட்டறீங்க!!??)

    அது 1,70,000 கோடி இல்லையா?

    பதிலளிநீக்கு
  117. ஜால்ரா சத்தம் காதை கிழிக்கிறது. தி மு க விடம் உங்களுக்கு உள்ள அபிமானம் நன்றாக தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  118. அப்பொழுது இதே முறையை ஏன் பெட்ரோல், 3G, உணவு பொறுட்கள் வீடு, மனை போன்ற எல்லாவற்றிற்கும் கடை பிடிக்கலாமே இந்த அரசாங்கம். மக்களுக்கு மிக நன்றாக இருக்குமே. மக்கள் நிமதியான வாழ்கையை நடத்த உதவுமே

    பதிலளிநீக்கு
  119. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு உழல் குத்தற சட்டை, சாதி பெயர் சொல்லி திசை திருபாதீர்கள்

    பதிலளிநீக்கு
  120. பெயரில்லா8:13 PM, நவம்பர் 25, 2010

    hi lucky, unmaitamilankku irukkum poruppu 0.1 % kooda ungalukku illai

    பதிலளிநீக்கு
  121. பெயரில்லா11:47 AM, நவம்பர் 26, 2010

    அவர்கள் சொல்லுவது போல ஒன்று வாடகைக்கும் மற்றது விற்பனை செய்யப்பட்டது என்றே வைத்து கொள்வோம். அந்த வாடகையை அரசு நேரடியாக கொடுத்து இருந்தால் முன்பணம் அதிகமாக கிடைத்து இருக்கும். அதே நேரம் வாடகையும் அதிகமாக கிடைத்து இருக்கும். ஒரு இடைத்தரகர் இருப்பதால் அரசுக்கு எப்படி லாபம்?. அதுவும் அந்த இடைத்தரகர் ஒரு மாதத்தில் ஆயிரக்கணக்கான கொடிகளை சம்பாதிக்கும் போது???



    2g , 3g என்பது எல்லாம் சும்மா. எல்லாம் ஒன்று தான். வாடிக்கையாளர் எண்ணிக்கை தான் கணக்கு. 3g குறைந்த விலைக்கு போக காரணம் ஏற்கனவே இந்திய சந்தை நிரம்பி வழிவது தான். 2g ஏலம் போடும் போது நிலைமை அப்படி இல்லை. இந்திய சந்தைக்கு சர்வதேசமே போட்டி போட்டது.
    இந்த செல் நிறுவனங்கள் இவ்வளவு பணத்தை கொடுப்பது எதற்காக என கேள்வி வரலாம். இப்போது நிறைய நிறுவனங்கள் நஷ்டத்தில் ஓடுவதும் உண்மையே. ஆனால் இந்தியாவில் கிட்டத்தட்ட அறுபது கோடி வாடிக்கையாளர்கள ் உள்ளனர். அவர்கள் தங்களது வருவாயில் மூன்று சதவீதத்தை எப்படியும் செலவு செய்வார்கள். கிட்டத்தட்ட இந்தியாவின் மொத்த வருமானத்தில் மூன்று சதவீதம் ஒரு நிறுவனத்திற்கு போகிறது என்றால் எப்படி?. யோசித்து பாருங்கள் இந்த வருமானத்தை வருங்காலத்தில் எடுக்க செல் நிறுவங்கள் இப்போதைக்கு எவ்வளவு நஷ்டம் என்றாலும் தாங்குவார்கள்.

    பதிலளிநீக்கு
  122. அண்டப்புளுகு அசகாய புளுகு என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். லக்கி நீங்க சொல்றது அதற்கும் மேலே. சான்சே இல்ல தலைவரே. 1.7 லட்சம் ஊழல் என்பது அதிகம் தான். ஆனால் அதிக பட்சம் ஒரு லட்சம் கோடிக்கு அரசுக்கு நஷ்டம் தான். உங்க கடை இப்படி நாறக்கூடாது

    பதிலளிநீக்கு
  123. ஸ்பெக்ட்ரமை விழுங்கியது பெரிய பொந்து...

    யோக்கியன் வர்ரான் சொம்ப எடுத்து உள்ள வை.....

    கருணாநிதிக்கும் ஊழலுக்கும் உள்ள தொடர்பு...உப்பிற்கும் ஊறுகாய்க்கும் உள்ள தொடர்பு....

    ஊழல் என்றால் கருணாநிதியை மிஞ்ச உலகில் ஆள் இல்லை.

    பதிலளிநீக்கு
  124. What abt the bribe received for allocating that frequency.. is that a seed for incresing indian economy???

    பதிலளிநீக்கு
  125. 2ஜி ஸ்பெக்ட்ரம் அதிர்ச்சியளிக்கும் ஆடியோ உரையாடல்


    அரசியல் வட்டாரங்களிலும், ஊடக மேலிடங்களிலும், செல்வாக்குள்ளவர் நீரா ராடியா. இவர் 2009-ஆம் ஆண்டு சில அரசியல் தலைவர்கள் மற்றும் ஊடகப் புள்ளிகளிடம் நடத்திய தொலைபேசி உரையாடல்கள் இப்போது வெளிவந்து பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.


    ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில் இந்தத் தொலைபேசி உரையாடல்களின் பதிப்பு ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உரையாடல் பதிவுகளிலிருந்து சில பகுதிகளை இங்கு வெளியிடுகிறோம்.

    http://dinamani.com/edition/story.aspx?artid=335999&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest

    பதிலளிநீக்கு
  126. i do not agree with u because the 2g must come with an bid type.

    பதிலளிநீக்கு
  127. 3 month la 5 times unga blog open pannuven. super.But politics ,socity matter yellam ungalukku set aagathu .Because neenga antha alavukku illa. So please avoid politics etc etc. masala than ungalukku ok. Please try to repost this article as truth. Enjoy pannunga lucky.

    பதிலளிநீக்கு