அறிவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிவிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 அக்டோபர், 2011

உதவுபவர்களை இனி செருப்பால் அடிப்போம்!

ஏறுக்கு மாறாக பேசுவது என்றால் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.

‘தமிழ் வலைப்பதிவர்களுக்கு நாம் எவ்வாறு உதவலாம்?’ என்று கலந்தாலோசிக்க முயற்சித்த பாவத்துக்காக indiblogger என்கிற அமைப்பினை போட்டுத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள் சில வலைப்பதிவர்கள். இவர்கள் தமிழில் எழுதுவதை அவர்கள் பார்க்க வாய்ப்பில்லை என்றாலும், பார்த்தாலும் பெரியதாக கண்டுக்கொள்ளப் போவதில்லை என்றாலும், நாம் பார்த்துத் தொலைத்துவிட்டோமே என்கிற பாவத்துக்காக இந்தப் பதிவினை எழுதித் தொலைக்க வேண்டியிருக்கிறது.

indiblogger.in என்பது இந்திய வலைப்பதிவர்களை ஒரு குடையின் கீழ் திரட்டும் ஒரு அமைப்பு. bloggingஐ passion ஆக கொண்ட வலைப்பதிவர்கள் சிலர், லாபநோக்கமின்றி தொடங்கிய இணைய அமைப்பு. ஆங்கிலம் மட்டுமன்றி, இந்திய மொழிகளில் வலைப்பதியும் யாரும் இந்த இணையத்தளத்தில் உறுப்பினர்கள் ஆகலாம். ஓரளவுக்கு நம்முடைய ‘தமிழ்மணம்’ திரட்டி மாதிரி என்றும் சொல்லலாம். ஆனால் தமிழ்மணத்தை விட சில கூடுதல் செயல்பாடுகள் கொண்டவர்கள். இந்திய நகரங்களில் ஆங்காங்கே அவ்வப்போது வலைப்பதிவர் சந்திப்புகளை நிகழ்த்துகிறார்கள். இந்தச் சந்திப்புகளில் பல்வேறு ஆக்கப்பூர்வமான, மொக்கைப்பூர்வமான விஷயங்கள் நிகழும்.

கடந்த ஆண்டு சென்னையில் இண்டி பிளாக்கர் சந்திப்பு நடந்தபோது பாலபாரதி, உண்மைத்தமிழன் உள்ளிட்ட சீனியர் பதிவர்களோடு பல ஜூனியர் பதிவர்களும் கலந்துகொண்டோம். ஏழெட்டு தமிழ் வலைப்பதிவர்களை கண்டதுமே இண்டிபிளாக்கர் டீம் மகிழ்ச்சி அடைந்தது. தமிழின் மூத்த வலைப்பதிவரான பாலபாரதிக்கு பேச மேடை அமைத்துத் தந்து கவுரவித்தது. தமிழ் வலைப்பதிவுகளில் நடைபெறும் முயற்சிகள் குறித்து விரிவாக ‘தமிழிலேயே’ பேசினார் பாலபாரதி. ஆங்கில மற்றும் இந்தி வலைப்பதிவுகளுக்கு கிடைக்கும் விளம்பர ஆதரவு உள்ளிட்ட விஷயங்களை சுட்டிக்காட்டி, அம்மாதிரியான வசதிகள் தமிழ் வலைப்பதிவுகளுக்கும் கிடைத்தால், இம்முயற்சிகள் மேலும் பரவலாகும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் புதியதாக வலைப்பதிய வரும் தமிழ் வலைப்பதிவர்களுக்கு, போதுமான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் இல்லையென்றும், இவையெல்லாம் கிடைக்கும் பட்சத்தில் தமிழில் வலைபதிபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென்றும் அவர் யோசனை சொன்னார்.

இவ்வாண்டுக்கான இண்டிபிளாக்கர் வலைப்பதிவர் சந்திப்பு கடந்த வாரம் சென்னையில் நடந்தது. “How we can help tamil bloggers?” என்று தனியாக ஒரு அமர்வினை இச்சந்திப்பில் இண்டிபிளாக்கர் அமைப்பினர் முன்னெடுத்ததற்கு காரணம், கடந்தாண்டு பாலபாரதி சந்திப்பில் பகிர்ந்துக்கொண்ட கருத்துகளின் விளைவே என்று கருதுகிறேன்.

“help” என்கிற சொல்லினை ‘உதவி’ என்பதாகவே புரிந்துக் கொள்கிறேன். “May I help you?” என்று யாராவது நம்மைப் பார்த்துக் கேட்கும் பட்சத்தில், “Yes, Please” என்று அங்கீகரிப்பதோ அல்லது “No, Thanks” என்று மறுதலிப்பதோதான் நாகரிகம். “எனக்கு உதவ நீ யாருடா?” என்று கேட்பது அநாகரிகம். ஒருவன் உதவ நினைப்பதை தவறு என்று சொல்லுவது எவ்வகையில் சரியானது என்று தெரியவில்லை. தன்முனைப்புக்காக ஏதாவது ஸ்டண்ட் அடித்துவிட்டு, அதற்கு ‘தமிழ், தமிழன், தன்மானம்’ சாயம் பூசுவது சர்வநிச்சயமாக போலி தமிழுணர்வு, போலி சுயமரியாதை.

“ஈழத்தமிழர்களுக்கு உதவுவோம்” என்று அரசியல்வாதிகளோ, தமிழுணர்வாளர்களோ சொன்னால் அல்லது வலைப்பதிவர்கள் பதிவு போட்டால், அது ஈழத்தமிழர்களை அவமதிப்பது ஆகுமா? அவமதிப்பு என்று கருதுவதுதான் உணர்வினை கொச்சைப்படுத்தும் செயல்.

உதவுகிறார்களோ இல்லையா என்பது வேறு விஷயம். உதவி தேவைப்படுபவர்கள் உபயோகித்துக் கொள்ளட்டும். வேண்டாமென்பவர்கள் மறுத்துக் கொள்ளட்டும். ஆனால் யாரும் ‘உதவுகிறோம்’ என்று சொல்வதையே ஆட்சேபித்து, ‘ஆ, ஊ’வென்று கும்மியடிப்பது அக்மார்க் பாசிஸம்.

‘உடான்ஸ்’ என்று ஒரு திரட்டி நடத்தப்படுகிறது? தமிழ்மணம், இண்ட்லி, தமிழ்வெளி என்று ஏற்கனவே ஏராளமான திரட்டிகள் இருக்கும்போது, புதியதாக இந்த ‘திரட்டி’யை யார் கேட்டது? இந்த திரட்டி இப்போது புதியதாக ஏதோ ஒரு சிறுகதைப் போட்டி நடத்துகிறது. தமிழ் வலைப்பதிவர்களுக்கு சிறுகதையே எழுதத் தெரியாதா? இவர்கள் போட்டோவோடு Hint கொடுத்துதான் சிறுகதை எழுத வேண்டுமா? அவ்வளவு கற்பனை வறட்சியிலா தமிழ் வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள்? இந்த சிறுகதைப் போட்டி தமிழ் வலைப்பதிவர்களின் புனைவாற்றலை கொச்சைப்படுத்துகிறது. உடான்ஸ் இந்தியிலோ, வங்காளத்திலோ இப்படி ஒரு சிறுகதைப் போட்டியை நடத்துமா? – இப்படியெல்லாம் கேள்விகளை அடுக்கினால் இது எவ்வளவு அபத்தம், எவ்வளவு முட்டாள்த்தனம்?

கடந்த ஆண்டு கூட ஏதோ ‘பதிவர் சங்கம்’ அது இதுவென்று பேச்சு அடிபட்டது. எத்தனை பதிவர்களை கலந்தாலோசித்து அம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது? ‘தேவை’யென்று நினைத்த ஒரு சிலர் பேசி வைத்துக்கொண்டுதானே அம்முயற்சியை மேற்கொண்டோம். அம்மாதிரி இண்டிபிளாக்கர் தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஏதோ உதவ முன்வந்தது எப்படி தமிழர்களை, தமிழை கொச்சைப்படுத்துவதாகும்?

ஏதோ உரிமையை கேட்பதாக பாவனை செய்துக்கொண்டு, நடந்து முடிந்த இண்டிபிளாக்கர் சந்திப்பில் நடந்தது வெற்று கலாட்டா. இதன் மூலமாக அங்கு கூடியிருந்த 200க்கும் மேற்பட்ட வலைப்பதிவர்கள் மத்தியில், தமிழ் வலைப்பதிவாளர்கள் கோமாளிகளாக பார்க்கப்பட்டார்கள் என்பதே உண்மை. இவ்வளவு கலாட்டா நடக்கும்போதும், இண்டிபிளாக்கர் அமைப்பாளர்கள் மிக அமைதியாகவே, பெருந்தன்மையாகவே இப்பிரச்சினையைக் கையாண்டார்கள். நல்லவேளையாக ‘எல்லோரும் வெளியே போங்க’ என்று ‘நிஜமான அவமானத்தை’ தமிழ் வலைப்பதிவர்களுக்கு நிகழ்த்திவிடவில்லை என்பது கொஞ்சம் ஆறுதலான சமாச்சாரம்.

அங்கு கலந்துகொண்ட தமிழ் வலைப்பதிவர்களுக்கு தான் மட்டுமே அத்தாரிட்டி என்ற தோற்றத்தை உருவாக்கி கலாட்டா செய்த பதிவரின் விளம்பர வெறியை கன்னா பின்னாவென்று கண்டிக்கிறோம்.

கூகிள் ஆட்சென்ஸில் ஏதோ தில்லுமுல்லு செய்து சம்பாதிக்கும் தமிழ் வலைப்பதிவர்கள், அந்த டெக்னிக்கை சக பதிவர்களுக்கே சொல்லிக் கொடுக்காத அற்பத்தனத்தோடு இருக்கையில், எவனோ ஒருவன் எப்படியோ உதவ வருகிறேன் எனும்போது, அதையும் தடுத்து நிறுத்துவது அயோக்கியத்தனம் இல்லையா? உதாரணத்துக்கு ஜாக்கிசேகரை சொல்லுவோம். தமிழின் நெ.1 பதிவராக இப்போது இருக்கும் நிலையிலும், போதுமான தொழில்நுட்ப அறிவில்லாததால், பதிவுமூலமாக ஐந்து பைசா கூட சம்பாதிக்க இயலாத நிலையில் இருக்கிறார். இவரைப் போன்றவர்களுக்கு இண்டிபிளாக்கர் உதவுவதில் யாருக்கு என்ன ஆட்சேபணை இருக்கமுடியும்?

மேலும் தன்மானம் இழப்பு, சோறு போடுதல் என்றெல்லாம் பெரிய வார்த்தைகள் சொல்லப்படுகின்றன. ஜெண்டில்மேன்ஸ்... அங்கு சென்ற எல்லோருமே ‘கலாட்டாவுக்குப் பிறகும்’, அவர்கள் கொடுத்த டீ-ஷர்ட்டை க்யூவில் நின்று வாங்கி வந்தோம் என்பதை நினைவுபடுத்தவே விரும்புகிறேன். செஞ்சோற்றுக் கடனுக்காக யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கலாம். அதற்காக அங்கே நாகரிகமாக அமைதி காத்த மற்ற வலைப்பதிவர்களை சிலர் கொச்சைப்படுத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டங்களில் யாராவது மைக்கில் பேசிக்கொண்டிருக்கும்போது மொக்கை கமெண்டுகள் அடிப்பது, குறுக்கீடு செய்வது, குடித்துவிட்டு கலாட்டா செய்வது என்று சமகால தமிழ் வலைப்பதிவு கலாச்சாரம் ஜெகஜ்ஜோதியாகவே இருக்கிறது. இதன் நீட்சியாகதான் இண்டிபிளாக்கர் சந்திப்பில் சலசலப்பும் நடந்தது.

- இந்த கூட்டறிக்கை அதிஷா மற்றும் யுவகிருஷ்ணா ஆகியோரால் தமிழ் வலைப்பதிவர் சமூகத்துக்கு கையளிக்கப்படுகிறது -

7 ஜூலை, 2011

லதானந்த்

லதானந்த் என்கிற பெயர் வலைப்பூ எழுதுவதற்கு முன்பாகவே எனக்கு ஓரளவு பரிச்சயமான பெயர்தான். பல இதழ்களிலும் சிறுகதை, கட்டுரை, நையாண்டி என்று எழுதி வந்தவர். விகடனில் திருக்குறளை மாற்றி சென்னை பாஷையில் எழுதி, பிற்பாடு பெரும் எதிர்ப்பு கிளம்பி பாதியிலேயே நின்ற தொடரை எழுதியவர் இவர்தான்.

2008ல் அவர் வலைப்பூ தொடங்கி எழுதிக் கொண்டிருந்தபோது, எனது தளத்தில் அவரைக்குறித்து பின்வருமாறு எழுதியிருந்தேன்.

கடந்த சிலநாட்களாக மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்று பார்க்கிறேனோ இல்லையோ? லதானந்த் அங்கிளின் பக்கங்கங்களை தவறாது வாசித்து விடுகிறேன். வலையுலகுக்கு வந்து இன்னமும் முழுமையாக ஒரு மாதம் கூட ஆகவில்லை. என்னை அவரது பரமரசிகன் ஆக்கிவிட்டார், அங்கிள் எல்லா மேட்டரிலும் செம விளாசு விளாசுகிறார், சண்டை போடுகிறார், கொஞ்சுகிறார், கோபப்படுகிறார், நிறைய சாப்பிடுகிறார், ஜோக் அடிக்கிறார், அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். மிக சுலபமாக இளைஞர்களை கவர்ந்துவிடும் ஒரு ஆளுமை லதானந்த் அங்கிள். ம்... வலையுலகில் எல்லாப் பெருசுகளுமே இவரைப் போல இருந்துவிட்டிருந்தால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. வலைப்பதிவர்களில் எப்போதுமே நான் சந்திக்க விரும்பும் ஒரு பதிவர் போர்பறை அசுரன். இப்போது லதானந்த் அங்கிளையும் சந்தித்துப் பேச வேண்டுமென்ற கொலைவெறி வந்திருக்கிறது.

இதை வாசித்துவிட்டு, கைப்பேசியில் தொடர்பு கொண்டார். முதல் பேச்சிலேயே மிக நெருக்கமாக அவரை உணரமுடிந்தது. அவரோடு பேசியவர்களுக்கு தெரியும். உரையாடல் என்பது அவரைப் பொறுத்தவரை ஒன் வே டிராஃபிக். தொண்ணூறு சதவிகிதம் அவர்தான் பேசுவார். மீதி பத்து சதவிகிதம் கூட நாம் ‘ம்’ கொட்டியதாகதான் இருக்கும். அவரோடு ஒரே ஒருமுறை பேசியவர்கள் கூட சுலபமாக சொல்லிவிடலாம். லதானந்த் ஒரு வெள்ளந்தியான மனிதர்.

பொதுவாக இரவுகளில் நீண்டநேரம் பேசுவார். முன்னிரவில் தொடங்கி, பின்னிரவு வரை ஏதாவது பேசிக்கொண்டிருப்பார். வீட்டில் இருப்பவர்கள் எரிச்சல் படுவார்கள். ஒரு பெரிய ஆபிஸரோடு பேசிக்கொண்டிருக்கிறேன் என்று சமாளிப்பேன். என்ன ஆபிஸர் என்று கேட்டால், சிட்டிக்கு கமிஷனர் மாதிரி, அவர் காட்டுக்கு கமிஷனர் என்று சொல்லி வைப்பேன்.

ஒருமுறை ஏதோ பணி தொடர்பாக சென்னைக்கு வந்திருந்தார். சந்திக்கலாமா என்று கேட்டு, தான் தங்கியிருந்த விடுதியின் பெயரை சொன்னார். சென்ட்ரல் ரயில் நிலையத்தை ஒட்டி, வால்டாக்ஸ் சாலையில் இருந்த விடுதியில் அவரை நானும், பாலா அண்ணாவும் சந்தித்தோம். பாலா அண்ணாவுக்கு ஒரு பழக்கம். வலையுலக நண்பர்கள் யாரிடம் பழகுவதாக இருந்தாலும், அவர்களது உண்மையான பெயரை கேட்டுத் தெரிந்துக் கொள்வார். பெரும்பாலும் அப்பெயரிட்டுதான் அழைப்பார். லதானந்த் அவரது உண்மைப்பெயரை சொல்ல மறுத்ததால் பாலாண்ணாவுக்கு அவர் மீது கோபம்.

அதன்பிறகு எப்போதெல்லாம் சென்னை வருகிறாரோ, அப்போதெல்லாம் சந்திப்பார். ஒருமுறை அசோக்நகரில் ஏதோ ஒரு பாரில் ஜ்யோவ்ராம் உள்ளிட்ட நண்பர்களோடு பேசியதாக நினைவு. இன்னொரு முறை நானும், அதிஷாவும் அவரை ரயிலேற்றிவிட சென்ட்ரலுக்குப் போயிருந்தோம். அன்ரிசர்வ்ட் பெட்டியில் முட்டி, மோதி உட்காரும் சீட்டினை வென்று எடுத்தார். பெரும்பாலும் வண்டலூர் வனத்துறை மாளிகையில் தங்குவார் என்பதால், நகரம் தாண்டிப்போய் அவரை சந்திப்பது எங்களுக்கு கொஞ்சம் சிரமம். சந்திக்க முடியாத சந்தர்ப்பங்களில் உடனே கோபித்துக் கொள்வார். ஆனால் மறுநாளே இணைய அரட்டைப் பெட்டியில் வந்து வழக்கமான ‘குஜால்’ மூடில் உரையாடுவார்.

என்னையும், அதிஷாவையும் காட்டுலாவுக்கு வருமாறு தொடர்ச்சியாக அழைத்துக் கொண்டிருந்தார். பணி நெருக்கடி காரணமாக இருவருமே ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று நாட்கள் விடுப்பு எடுக்க முடியாததால் அவரது அழைப்பை ஏற்றுக்கொள்ள இயலாத சூழல். இதற்காகவும் ஒரு முறை கோபித்துக் கொண்டார். இன்னொரு முறை குடும்பத்தோடு ஊட்டிக்கு வாருங்கள் என்று அழைத்தார். குழந்தை மிக சிறியவளாக இருக்கிறாள், பெரிய பயணத்துக்கு அழைத்துவர அச்சமாக இருக்கிறது என்று மறுத்தேன். அதற்கும் கோபித்துக் கொண்டார்.

அடிக்கடி கோபித்துக் கொள்வது குழந்தை மனம். லதானந்த் குழந்தை மனதுக்காரர்.

செம்மொழி மாநாடு கோவையில் நடந்தபோது, வருகிறீர்களா என்று கேட்டார். ஆமாம், பணிநிமித்தம் வருகிறேன் என்றபோது, வீட்டுக்கு கட்டாயம் வரவேண்டும் என்று கட்டளையிட்டார். பத்திரிகையாளர்களின் பயணத்திட்டத்தை செய்தி மக்கள் தொடர்புத்துறை ஏற்பாடு செய்திருந்ததால், அங்கே அப்படி, இப்படி நகரமுடியவில்லை. சென்னை வந்தபோது தொலைபேசி மன்னிப்பு கேட்டேன். அப்போதும் கோபித்துக் கொண்டார். பின்னர் விசாரித்துப் பார்த்ததில் கோவைக்கு வந்து செல்லும், எந்த நண்பருமே அவரை பார்க்காமல் திரும்பினால் இப்படித்தான் செல்லமாக கோபித்துக் கொள்வார் என்று தெரிந்துகொள்ள முடிந்தது.

இப்படி கோபித்து, கோபித்து விளையாடுவதுதான் அவரது குணம். ஏதாவது குறும்பாக விளையாடிக் கொண்டே இருப்பார். ஐம்பதை கடந்தவர் என்பது அவரது பேச்சில் தெரியவே தெரியாது.

சமீபத்தில் அவருக்கு இதய அறுவைச்சிகிச்சை நடந்ததாக கேள்விப்பட்டேன். வழக்கமான விருமாண்டி மீசையில்லாமல் சஞ்சய் திருமணத்துக்கு வந்திருந்தார். என்ன சார், சிங்கத்தைப் போய் இப்படி சிரைச்சி விட்டுட்டாங்களே என்று விளையாட்டாக கேட்டேன். உடலும் கொஞ்சம் உள்வாங்கியிருந்தது. ’மசுருதானே, வளர்த்துடலாம் லக்கி’ என்றார்.

சில நாட்களுக்கு முன்பாக சென்னை வந்திருப்பதாகவும், எங்கேயாவது சந்திக்கலாம் என்றும் சொல்லியிருந்தார். அப்போது தோழர் அதிஷாவுக்கு ‘காலில் ஆணி’ (இந்தச் சொல்லில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கிறது)பிரச்சினை தொடர்பாக, அலைச்சலில் இருந்தோம். சந்திக்க முடியவில்லை. வழக்கம் போல லதானந்துக்கு கோபம்.

நேற்று இரவு திடீரென இறங்கியது அந்தச் செய்தி. சென்னை நண்பர்கள் கலந்துப் பேசி சனிக்கிழமை மாலை ஒரு அஞ்சலிக் கூட்டத்துக்கு கூட ஏற்பாடு செய்துவிட்டோம். நல்லவேளையாக இன்று காலை அந்த கூட்டம் ‘கேன்சல்’ என்கிற மகிழ்ச்சிக்குரிய செய்தி கிடைத்திருக்கிறது. நேற்றிரவு முழுக்க இருந்த கடுமையான மன உளைச்சல் இன்று தீர்ந்ததில் நிம்மதி. லதானந்த் இம்மாதிரி விளையாடியது குறித்து எந்த கோபமுமில்லை. இப்படி விளையாடுமளவுக்கு அவருக்கு ‘தில்’ இருப்பது குறித்துதான் ஆச்சரியமும், வியப்பும். குழந்தையின் சுபாவம் விளையாடுவதுதான். லதானந்த் விளையாடியிருக்கிறார். இதில் கோபப்படவோ, கண்டிக்கவோ எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவரை கொஞ்சத்தான் தோன்றுகிறது. கவியரசர் கண்ணதாசன் கூட இதுமாதிரி செத்து, செத்து விளையாடியதாக வனவாசத்தில் எழுதியிருந்ததாக ஞாபகம்.

அப்புறம் இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேனே?

நேற்று இரவு கிடைத்த அந்த ‘டுபாக்கூர்’ அதிர்ச்சிச் செய்தியை பாலாண்ணாவோடு பகிர்ந்துக் கொண்டபோது, அதிர்ந்துப் போய் பேசிக்கொண்டிருந்தார். அந்தப் பேச்சின் இறுதியாக ‘குறுகுறுப்பு’ தாங்காமல் கேட்டார். “இப்பவாவது சொல்லுய்யா. அவரோட உண்மையான பேரு என்னா?”

எனக்கு இப்பவும் நிஜமாகவே அவரது பெயர் தெரியாது.

6 ஜூலை, 2011

YES, I AM LUCKY!

அதிகமான நண்பர்கள் இருப்பதின் அவஸ்தை நேற்றுதான் புரிந்தது.

மதியம் ஒரு மணிக்கு, பத்து பத்து பேராக க்ரூப் எஸ்.எம்.எஸ். அனுப்ப ஆரம்பித்தேன். நாலரை மணி வரைக்கும் இடைவிடாமல் அனுப்பிக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது.

எஸ்.எம்.எஸ். கிடைத்ததுமே செளபா அண்ணன் போன் செய்தார்.

“டேய் இங்கிலீஷ்லே என்னமோ அனுப்பியிருக்கே. எனக்கும் ஒண்ணும் புரியல. என்ன மேட்டருன்னு வாயாலேயே சொல்லுடா” – சீவலப்பேரி பாண்டிகள் இங்கிலீஷ் எஸ்.எம்.எஸ்.-சுக்கு பழகவில்லை என்பதும், தமிழில் எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதி இன்னமும் கார்பன் மொபைலுக்கு வராத அவலமும் ஒருசேர சுட்டது.

“பொண்ணு பொறந்துருக்குன்னு எஸ்.எம்.எஸ். அனுப்புனேண்ணே”

“அடப்பாவி. நீ விடலைப் பையனாவே என் மனசுலே பதிஞ்சிட்டியேய்யா.. உனக்கு அதுக்குள்ளே கல்யாணம் ஆகி, ஒரு பொண்ணும் பொறந்துடிச்சா?”

“அண்ணே! இது ரெண்டாவது பொண்ணுண்ணே!”

YES, I AM LUCKY.

தமிழ்மொழிக்கு தங்கச்சி பிறந்துவிட்டாள்.

அகிலம் ஆளும் அம்மா, தங்கத்தாரகை டாக்டர் புரட்சித்தலைவியின் சிம்மராசி, மகம் நட்சத்திரத்தில் ‘தமிழ் நிலா’ பிறந்திருக்கிறாள். எப்படியோ எங்கள் வீட்டிலும் ஒரு ‘முதல்வர்’ சில பல பத்தாண்டுகளுக்கு பிறகு உருவெடுக்க, ஜோசியப்படி வாய்ப்பிருக்கிறது.

’பொண்ணு’ பிறந்ததால், என்னுடைய அம்மாவுக்கு மட்டும் கொஞ்சம் வருத்தம். அவருக்கு கொள்ளி வைக்கவாவது, நான் ஒரே புள்ளையாக பிறந்திருக்கிறேனாம். எனக்கு கொள்ளி வைக்க ஒரு புள்ளை இல்லையே என்பது அவரது அங்கலாய்ப்பு. நெருப்புக்கு பையனோ, பொண்ணோ கணக்கு கிடையாது. கட்டையில் ஊற்றப்படும் கிருஷ்ணாயிலின் (மண்ணெண்ணெய்) அளவுதான் நெருப்பின் வீரியத்துக்குக் காரணம் என்று அவருக்கு பகுத்தறிவுப் பாடமெடுத்து சமாளித்திருக்கிறேன்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது, தண்டபாணி சாரிடம் நடந்த ஒரு ஈழ விவாதத்தில் எனக்குப் பிறக்கப் போகும் மகனுக்கு ‘திலீபன்’ என்று பெயர் வைப்பதாக சபதம் செய்திருந்தேன். அந்த சபதம் நிறைவேறாது என்பதுதான் எனக்கிருக்கும் ஒரே வருத்தம். இனி தமிழ் திலீபனுக்கு வாய்ப்பில்லை. இந்திய அரசின் ‘நாமிருவர், நமக்கிருவர்’ கோஷத்தை, ஓர் இந்தியனாக மதிக்கிறேன்.

முதல் குழந்தை பிறந்தபோது பாரா சொன்னார். “இன்னும் இருவது வருஷத்துலே நீ ஒரு கோடி ரூபாய் சம்பாதிச்சியாவணும். அப்போ தங்கம் விலை சவரனுக்கு ஒரு லட்சரூபாயா கூட இருக்கலாம்”.

ம்.. இன்னும் இருபது வருடத்தில் இரண்டு கோடி ரூபாயாவது சம்பாதித்தே ஆக வேண்டும்.

எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல், ட்விட்டர், ஃபேஸ்புக், பஸ், கூகிள் ப்ளஸ், இத்யாதி, இத்யாதியிலெல்லாம் வாழ்த்து சொல்லிய நட்புள்ளங்களுக்கு தனித்தனியாக நன்றி சொன்னால், முழுவதுமாக 48 மணி நேரம் (அதாவது அடுத்த இருபது வருடத்தில் முழுசாக ரெண்டுநாள்) வீணாகி விடும் என்பதால், இப்பதிவின் வாயிலாகவே எல்லோருக்கும் நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன். நன்றி. நன்றி. நன்றி.

23 மே, 2011

திராவிட இயக்கத்தின் என்சைக்ளோபீடியா

தந்தை பெரியாரின் அணுக்கமான தொண்டராக இருந்தவர் குத்தூசி குருசாமி. இவரது அந்நாளைய கட்டுரைகளுக்கு அரசு அபராதம் விதிக்கும். விதிக்கப்பட்ட அபராதங்களை வாசகர்களிடமே வசூலித்து கட்டுவார். அபராதம் விதிக்கப்படும் கட்டுரைகளையே குத்தூசியார் தரவேண்டுமென்று மேலும், மேலும் வாசகர்கள் வசூல் மழை பொழிவார்கள்.

அவரது எழுத்துப் பாணி அச்சுஅசலாக நாத்திகச் செம்மல் இரா.தியாகராசன் அவர்களுக்கும் இருந்ததால், சின்னக்குத்தூசியார் என்கிற பெயரே இவருக்கு நிலைபெற்றது. படிக்கும் காலத்திலேயே திராவிட இயக்க சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர். ஆசிரியராக தனது வாழ்வினை தொடங்கியவர், பின்னர் பத்திரிகைத்துறையிலும் முத்திரை பதித்தார்.

கலைஞரை எதிர்த்து கட்சி கண்ட ஈ.வெ.கி.சம்பத்தின் நெருங்கிய நண்பர் இவர் என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். தமிழ் தேசியக்கட்சி காங்கிரஸில் ஐக்கியமானபோது, காமராசரின் நவசக்தியில் சின்னக்குத்தூசியார் காரசாரமான தலையங்கங்கங்களை தீட்டிவந்தார். எத்தனையோ பத்திரிகைகளை இவரது எழுத்து அலங்கரித்து வந்தாலும், என்றுமே எதிலுமே கொள்கை சமரசம் செய்துக் கொண்டதேயில்லை.

திராவிட இயக்கத்தின் என்சைக்ளோபீடியாவாக வாழ்ந்துவந்த சின்னக்குத்தூசியார் நேற்றுடன் அழியாப்புகழ் பெற்று இயற்கையோடு கலந்திருக்கிறார். தமிழ் பத்திரிகையாளர்களுக்கு திராவிட இயக்கம் குறித்த எந்த ஐயம் ஏற்பட்டாலும், சின்னக்குத்தூசியாரை தொடர்பு கொள்ளலாம். இதைப்பற்றி அவருக்கு தெரியாததே இல்லை எனலாம். பகுத்தறிவு, சுயமரியாதை ஆகிய கொள்கைகளுக்காக தனது வாழ்க்கையையே தியாகம் செய்தார். காலமெல்லாம் பார்ப்பனீயத்தை தீரத்தோடு எதிர்த்து வாழ்ந்த சின்னக்குத்தூசியார் பிறப்பால் பார்ப்பனர் என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம்.

அவரது இறுதிக்கால வாழ்வு பெரும்பாலும் நக்கீரன் ஆசிரியர் அண்ணாச்சியையே சார்ந்திருந்திருக்கிறது. தனக்கென குடும்பம் ஏற்படுத்திக் கொள்ளாத சின்னக்குத்தூசியாருக்கு சொந்த மகனாகவே அண்ணாச்சி செயல்பட்டிருக்கிறார். அவரது பூவுடல் கூட பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது அண்ணாச்சியின் நக்கீரன் அலுவலகத்தில்தான். அந்திமக் காரியங்களையும் அண்ணாச்சியே முன்நின்று செய்திருக்கிறார்.

“கலைஞர் என்ன செய்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்துப் பேசுவார்” என்று பா.ராகவன் அவரது அஞ்சலிக்குறிப்பில் எழுதியிருக்கிறார். முழுக்க முழுக்க இக்கருத்தில் இருந்து முரண்படுகிறேன்.

1992 பாபர் மசூடி இடிப்புக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக முரசொலியில் எதிர்த்து எழுதிவந்தார் சின்னக்குத்தூசியார். 1998 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., நான்கு எம்.பி.க்களோடு தமிழகத்தில் வலுவாக காலூன்றியது. அப்போதைய அரசியல் சூழலில் திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய அரசியலுக்காக பா.ஜ.க.வோடு சமரசம் செய்து, கூட்டணி வைத்துக்கொள்ளும் நிலையிலும் இருந்தது.

சின்னக்குத்தூசியாரை அழைத்த கலைஞர், இனி பா.ஜ.க. எதிர்ப்பு விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்கும்படி கேட்டுக் கொண்டார். அரசியல் கூட்டணிக்காக கொள்கைக்கு எதிராக செயல்படுவதில் தனக்கு விருப்பமில்லை என்று இவர் மறுப்பு தெரிவிக்க, கலைஞரின் குரலில் கடுமை கூடியது.

“உங்களுக்கு மட்டும்தான் தலையங்கம் எழுத வரும்னு இல்லே. நானே நல்லா எழுதுவேன். தெரியுமில்லே?”

“நான் எழுதறதைவிட நீங்க நல்லா எழுதுவீங்க, நிறைய பேர் படிப்பாங்கன்னும் எனக்கு தெரியும்” என்று சொல்லிவிட்டு, முரசொலியில் இருந்து மூட்டை கட்டியவர் சின்னக்குத்தூசியார். கழகம், பாஜகவோடு கூட்டணியில் இருந்தவரை திமுகவோடு, தனக்கு பெரிய இடைவெளியை ஏற்படுத்திக் கொண்டார்.

கொள்கைக்காக வாழ்வை தியாகம் செய்த இந்த மகத்தானவரை, திராவிட இயக்கத்தவன் ஒவ்வொருவனும் தன் நெஞ்சில் ஏற்றி வைத்து சுமக்க வேண்டும்.

19 ஆகஸ்ட், 2010

ஒரு அவசர உதவி!

இதைப் படிக்கும் எல்லோருமே ஒரு காலத்தில் நிச்சயமாக மாணவனாகவே இருந்திருப்பீர்கள். எனவேதான் உங்களிடம் இந்த உதவியைக் கோருகிறேன். ஆசிரியர்கள் யாராவது இந்தப் பதிவை வாசித்தாலும் உதவலாம்.

- உங்களுக்கு வாய்த்த ஆசிரியர் அல்லது இப்போது பணியில் இருக்கும் உங்களுக்கு தெரிந்த ஆசிரியர் யாராவது மிகச்சிறந்த ஆசிரியராக இருந்திருக்கலாம். நாடே போற்ற வேண்டிய அவரைப் பற்றிய தகவல்கள் உங்கள் ஊரைத்தவிர வேறு யாருக்கும் தெரியாமல் போயிருக்கலாம். அதுபோல யாராவது இருந்தால் தொடர்பு எண்ணோடு தந்து உதவுங்கள்.

- நீங்கள் பத்து அல்லது பண்ணிரெண்டாம் வகுப்பு படித்தபோது யாராவது ஒரு ஆசிரியர் உங்கள் எதிர்காலம் குறித்த அக்கறையோடு வழிகாட்டுதல் காட்டியிருக்கலாம். இதனால் உங்கள் வாழ்க்கையே மாறியிருக்கக்கூடும். அதுபோன்ற ஆசிரியர் மற்றும் உங்கள் அனுபவங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

- ஆசிரியர்கள் குறித்து பாசிட்டாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ உங்களுக்கு சில எண்ணங்கள் இருக்கக்கூடும். அதையும் தெரிவிக்கலாம்.


இதெல்லாம் ஏன் எதற்கு என்று நீங்கள் தொடர்பு கொண்டபின் மின்னஞ்சலில் தெரிவிக்கிறேன். என்னை தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி : yuvakrishna@gmail.com

2 ஜூலை, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு!

’செம்மொழி மாநாடு - முதல்வர் கொடுத்த பறக்கும் முத்தம்’ என்ற தலைப்பில் மாநாடு குறித்த என்னுடைய 6 பக்க கட்டுரை, இன்று கடைகளில் விற்பனையாகும் (08 ஜூலை 2010 இதழ்) 'புதிய தலைமுறை' வார இதழில் வெளிவந்திருக்கிறது.

அரசியல் கலக்காமல் ஊடகங்களில் மாநாடு குறித்து வெளிவந்திருக்கும் ஒரே கட்டுரை அனேகமாக இதுவாகத்தான் இருக்கும். மாநாட்டில் இரண்டே இரண்டு இடத்தில் திமுக கொடி காணப்பட்டது என்று சகபத்திரிகையாளர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அதில் ஒரு கொடி வைத்திருந்தவரை நம் புகைப்படக் கலைஞர் படம்பிடித்திருந்தார். அப்படம் லே-அவுட்டிலும் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

வலைப்பதிவில் கட்டுரையை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பில்லை. ஒருவாரம் கழித்து பதிந்தால் ‘ராஜீவ்காந்தி படுகொலை’ மாதிரி பழைய நியூஸ் ஆகிவிடும். எனவே படிக்க விரும்புபவர்கள் கடையில் வாங்கிப் படிக்கலாம்.

11 மே, 2010

லும்பினி!

சமூகநீதிக்கு குரல் கொடுக்கக்கூடிய இன்னொரு இணையத்தளம் தோழர்களால் தொடங்கப் பட்டிருக்கிறது : http://www.lumpini.in

நமக்கு உவப்பானதா, உவப்பற்றதா என்பது முக்கியமில்லை. ஆயினும் பொதுப்புத்திக்கு எதிரான மாற்று சிந்தனைகளுக்கு நல்ல களமாக லும்பினி அமையும் என்பதை எதிர்ப்பார்க்கலாம். வரும் காலத்தில் மிக முக்கியமான ஆக்கங்களை இத்தளத்தில் எதிர்ப்பார்க்கிறேன். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஒரு இயக்கமாக இயங்கிய இலக்கியப் பத்திரிகையான நிறப்பிரிகையின் சில இதழ்கள் இந்த இணையத்தளத்தில் வாசிக்க கிடைக்கிறது.

பத்து நிமிடத்தில் பார்த்த பறவைப் பார்வையில் பார்த்ததில், தளத்தின் வடிவம் மிக சிறப்பாக, வாசிப்புக்கு ஏதுவாக இருப்பதை உணரமுடிகிறது. வழக்கமான இணையத்தள மரபுக்கு ஏற்ப இங்கும் திராவிடக்குரலுக்கு இதுவரை இடஒதுக்கீடு ஏதுமில்லை. அனேகமாக கீற்று மற்றும் வினவு தளங்களுக்கு மாற்றாக இத்தளம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. அடுத்தடுத்து இத்தளம் செயல்படும் விதத்தை வைத்தே எதையும் தீர்மானிக்க முடியும்.

லும்பினி ஆசிரியர் குழுவினருக்கு வாழ்த்துகள்!

30 ஏப்ரல், 2010

அன்ன கரீனா - அனைவரும் வருக!

ஒரு தொடர் நிகழ்வு தொடர்ச்சியாக சிறப்பாக நடைபெற அதன் அமைப்பாளர்கள் மட்டுமே காரணமாகி விட முடியாது. அந்நிகழ்வு யாருக்காக நிகழ்த்தப்படுகிறதோ அவர்களின் பங்கேற்பும், ஆர்வமும் மட்டுமே வெற்றியை தேடித்தர முடியும். அவ்வகையில் 'உரையாடல்' அமைப்பு, நியூ ஹாரிசன் மீடியா பத்ரியோடு இணைந்து நடத்திவரும் உலகப்பட திரையிடல் வெற்றிகரமாக ஓராண்டை வரும் மாதத்தோடு நிறைவுசெய்வதை பங்கேற்பாளர்களின் வெற்றியாக நாம் கொண்டாடலாம்.

இந்த வெற்றி எப்படி சாத்தியப்பட்டது என்பதை பைத்தியக்காரன் பதிவு போட்டு விளக்கியிருக்கிறார்.

முதல்வருட நிறைவு கொண்டாட்டத்தை முன்வைக்கும் விதமாக உங்கள் சிந்தனைகளை ஒட்டுமொத்தமாக டவுசர் அவிழ்க்கும் (இட் மீன்ஸ் கட்டவிழ்த்தல்) திரைப்படம் ஒன்றினை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் உரையாடல் அமைப்பாளர்கள். லியோ தால்ஸ்தாய் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதிய நாவல் பலமுறை படமாக்கப்பட்டிருக்கிறது. உரையாடல் அமைப்பு திரையிடப்போகும் படமோ அரதப்பழசானது. 1935 கிறிஸ்துமஸுக்கு வெளியானது. நெஞ்சில் மாஞ்சா சோறு இருப்பவர்கள் வரும் ஞாயிறு அன்று திரையிடலுக்கு வரலாம். படம் பார்த்து தாவூ தீருபவர்களுக்கு உரையாடல் அமைப்பு சோடா வாங்கித்தர தயாராக இருக்கிறது.


படத்தின் பெயர்: Anna Karenina (1935)
Director: Clarence Brown
Actors: Greta Garbo (Anna Karenina), Fredric March (Vronsky)
Language: English
பட நேரம் : 95 min
நாள் : மே 2ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : சரியாக மாலை 6 மணி
இடம் : கிழக்கு பதிப்பகம், எல்டாம்ஸ் ரோடு, சென்னை

அனைவரும் வருக...

12 ஏப்ரல், 2010

கீற்று இணையத்தளத்தின் பாசிஸம்!

முன்பு நான் மதிப்பு வைத்திருந்த ஆளுமைகள் மீதும், அமைப்புகள் மீதுமான பிம்பம் எனக்கு உடைந்துகொண்டே வருகிறது. தமிழ், தேசியம், இத்யாதிகள் மீதான பிரேமை இதுபோன்ற ஆளுமைகள் மற்றும் அமைப்புகளின் பால் என்னை ஈர்த்தது. ஆனால் நெருங்கிப் பார்த்தும், தொடர்ச்சியான செயல்பாடுகளை அவதானித்துமே நான் மேலே குறிப்பிட்ட பிம்ப உடைப்பு ஏற்படத் தொடங்கியது.

கடைசியாக ‘கீற்று' இணையத்தளம்.

இணையத்தளத்தை நான் பாவிக்கத் தொடங்கிய ஆரம்பகாலக் கட்டத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக இத்தளத்தை நம்பினேன். இணையத் தளங்களில் கட்டமைக்கப்பட்ட பொதுப்புத்திக்கு எதிரானதாகவும், மாற்று அரசியலையும், மாற்று சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்ளும் தளமாகவும் கீற்று விளங்கியது அந்தக் காலம்.

ஆனால் ஒரு கட்டத்தில் மாற்று சிந்தனையாளர்களுக்கு இடையே கூட பிரிவினை ஏற்படுத்தி குளிர்காய கீற்று முயல்கிறதோ என்றுகூட எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. குறிப்பாக ஆதவன் தீட்சண்யா தொடர்பான பிரச்சினையை சொல்லலாம். வேண்டுமென்றே தீட்சண்யாவின் ஆளுமைக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக கீற்று செயல்படுகிறது என்றே அப்போது எண்ணினேன். அதன் தொடர்ச்சியாக ஆதவன் பங்கேற்றிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி மீதான காழ்ப்பும் கூட கீற்றுக்கு ஏற்பட்டிருப்பது இப்போதுதான் வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

கடந்த வாரம் எனக்கு தோழர் ஒருவரிடமிருந்து வந்த மின்னஞ்சல் கீழே :

எனது கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை

தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு 'இந்து மக்கள் கட்சி' சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதைப் பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்தக் கலாசார அடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்:

இடம் : ICSA அரங்கம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர் - 8
(எழும்பூர் மியூசியம் எதிரில்)
நாள் : 15.4.2010 வியாழக்கிழமை, மாலை 5 மணி

பங்கேற்பாளர்கள் :

அ. மார்க்ஸ், ச. தமிழ்ச்செல்வன், தேவபேரின்பன், வெளி ரங்கராஜன், சி. மோகன், கே.ஏ. குணசேகரன், கோ. சுகுமாரன், வ.ஐ.ச. ஜெயபாலன், ராஜன்குறை, இந்திரன், சமயவேல், இராமாநுஜம், ஆதவன் தீட்சண்யா, அன்பாதவன், யவனிகா ஸ்ரீராம், லதா ராமகிருஷ்ணன், பிரளயன், பா. வெங்கடேசன், ஓவியா, ரஜினி, அஜிதா, சங்கர்ராம சுப்ரமணியன், என்.டி. ராஜ்குமார், பசுமைக்குமார், கரிகாலன், மணிமுடி, லீனா மணிமேகலை, கம்பீரன், மு. சிவகுருநாதன், மணல்வீடு ஹரிக்கிருஷ்ணன், மோனிகா, மணிவண்ணன், கே.டி. காந்திராஜன், அய்யப்பமாதவன், பீர் முகம்மது, சிராஜுதீன், அசதா, அஜயன்பாலா, செல்மா பிரியதர்சன், நீலகண்டன், இசை, இளங்கோ கிருஷ்ணன், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன், பொன் வாசுதேவன், விசுவநாதன் கணேசன், யாழனி முனுசாமி, விஜய் மகேந்திரன், சந்திரா, பாக்யம் சங்கர், வசுமித்ரா, சிநேகிதன், சுபஸ்ரீ, மீனா, அமுதா, கவின் மலர், நிர்மலா கொற்றவை.

எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அனைவரும் வாருங்கள்.

தொடர்புக்கு :
கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்
3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை - 20
பேசி : 94441 20582
----------------------------------------------------------------------------------------------
*கண்டன ஒன்றுகூடலுக்கான தலைப்பு ஈழத்துப் பெண் கவிஞர் பெண்ணியாவின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுக்கான அறிவிப்பினை கீற்றுத்தளமும் இன்று வெளியிட்டிருக்கிறது. எப்படி என்று கீழே பாருங்கள்! சுட்டி : http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5509:2010-04-12-02-50-45&catid=902:2009-08-16-17-58-44&Itemid=268 (அனேகமாக இப்பதிவினை கண்டபிறகு கீற்று நிர்வாகம் அந்தப் பக்கத்தை அழித்துவிடலாம். ஆனாலும் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டிருக்கிறது)

தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது நேரடித் தாக்குதல், போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வுகளாக கேரளாவில் - பாலியல் உரிமை தொடர்பாக கருத்து தெரிவித்த பால் சக்காரியாவின் மீது சிபிஎம் கட்சியினர் தாக்குதல் நடத்தியதும், லீனாமணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு 'இந்து மக்கள் கட்சி' சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்ததையும் பார்க்கலாம். கருத்து சுதந்திரம், பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதை எளிமைப்படுத்தி பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்து மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் இந்தக் கலாசார அடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்

கீற்று செய்திருக்கும் ஆபாசமான / அருவருப்பான வேலையை சிகப்பு எழுத்துகளில் நீங்கள் காணமுடியும். இதுவரை வெகுசன சாதீய ஊடகங்கள் எத்தகையை திருகுவேலையை செய்துவருகிறது என்று நாம் சொல்லிக் கொண்டிருந்தோமே அதே வேலையைதான் ‘கீற்று' போன்ற மாற்று ஊடகங்களும் செய்துவருகின்றன என்ற கொடுமையை எங்கே போய் சொல்வது? கொடுமை கொடுமை என்று கோயிலுக்கு போனால் அங்கே இன்னொரு பெரிய கொடுமை தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்ததாம்.

பால் சக்கரியா மீதான மார்க்சிஸ்டுகளின் தாக்குதலை கீற்று கண்டிப்பதாக இருந்தால் அதை வேறு வழியில் கண்டிக்கலாம். கட்டுரை எழுதலாம். சம்பந்தமேயில்லாமல் ஒரு நிகழ்வின் அழைப்பை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டிருக்கக் கூடாது.

மேற்கண்ட நிகழ்வில் மார்க்சிஸ்ட் தோழர்களான ச.தமிழ்செல்வன், ஆதவன் தீட்சண்யா, பிரளயன் போன்றவர்கள் கலந்துகொள்ளும் நிலையில் கீற்று செய்திருக்கும் திருட்டுச் செயல் வெட்கக்கேடானது. கட்சிக்கும், அத்தோழர்களுக்கும் இடையேயான உறவை கெடுப்பது. கீற்று மீதான நம்பகத்தன்மையை என்னைப் போன்றோர் முற்றிலுமாக இழந்துவிடக் கூடிய அருவருப்பான செயல் இது. அறத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய செயலும் கூட.

ஏ.ஆர்.ரஹ்மான் - பிரத்யேகப் பேட்டி!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கிராமி விருது வாங்கியபோது கிராமி நாயகன் ஒரு பதிவிட்டிருந்தேன். ஏ.ஆர்.ரஹ்மானை பேட்டிக்காக சந்தித்த அனுபவங்களை அதில் பகிர்ந்துகொண்டிருந்தேன்.

பதிவை வாசித்த பலரும் அப்பேட்டியை இணையத்தில் ஏற்றும்படி கேட்டுக் கொண்டிருந்தார்கள். என்னுடைய சீனியர் கல்யாண்ஜி தன்னுடைய வலைப்பதிவில் இப்போது அப்பேட்டியை பதிவிட்டிடுக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பிரத்யேகப் பேட்டியை இங்கே வாசிக்கலாம்!

6 ஏப்ரல், 2010

ஏப்ரல் 10 - வாயாடிகள் வரலாம்!

அங்காடி தெரு, பையா, கலைஞர், பெண்ணாகரம், பாமக, சங்கம், சுவிங்கம், உலகப்படம், உள்ளூர் படம், மொக்கைப் பதிவர்கள், எழுத்தாளர்கள், எழுத்தாளர் ஆக ஆசைப்படுபவர்கள், சுகுணா திவாகர், தண்டோரா, பராக் ஒபாமா, ஐ.பி.எல், சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான், சானியா மிர்ஸா, நித்தியானந்தர், சாருநிவேதிதா, ஜெயமோகன், தமிழ்ப்படம், கோவா, சுறா, விஜய், அஜீத், அசல்...

பேசவா நமக்கு விஷயம் இல்லை?

எதுவேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் ஆந்திரா மெஸ் மீல்ஸ் மாதிரி அன்லிமிட்டெட் ஆக பேசிக்கொண்டேயிருக்கலாம். இங்கே தலைவர் இல்லை. செயலாளர் இல்லை. மேடை இல்லை. மைக் இல்லை. எனவே யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் தயக்கமே இல்லாமல் லொடலொடக்கலாம். கூடுதல் கவர்ச்சி அம்சமாக சந்திப்புக்கு பின்னான ஸ்பெஷல் டீக்கடை சந்திப்பும் நடக்கும்.

எனவே தைரியமாக முகமூடியின்றி, திறந்தமனதோடு வாருங்கள்.

மேட்டர் என்ன?

கெரகம். வேறென்ன?

பதிவர்சந்திப்பு!

எங்கே?

அரசு இலவசமாக அனுமதிப்பதால் மெரீனா கடற்கரை காந்தி சிலைக்கு அருகில்.

எப்போது?

நல்ல ராகுகாலத்திலா என்று தெரியாது. ஆனாலும் எந்நேரமும் நமக்கு நல்ல நேரம்தான். மாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை.

தேதியை சொல்ல மறந்துவிட்டோம். நோட் பண்ணிக்குங்க.

ஏப்ரல் 10, சனிக்கிழமை. முன்னர் ஏப்ரல் 11 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஞாநி மற்றும் பாஸ்கர்சக்தி இணைந்து நடத்தும் கேணியும் அதே நேரத்தில் நடைபெறும் என்பதால் ஒருநாள் முன்னதாக நடைபெறுகிறது.

மேலதிக விவரங்களுக்கு :
பாலபாரதி @ 99402 03132

ஆர்வமுள்ள, ஆர்வமில்லாத பதிவர்கள்/வாசகர்கள்/வி.ஐ.பி.க்கள் வரலாம். யாரும் தனியாக வெத்தலைப்பாக்கு வைத்தெல்லாம் அழைக்கப்பட மாட்டார்கள். அழைக்கப்படுவது ரஜினிகாந்தாகவே இருந்தாலும் இந்தப் பதிவு மட்டும்தான் அழைப்பு. சந்திப்புக்கு வர எண்ணியவர்கள் மற்றும் சந்திப்பில் ஆர்வம் கொண்டவர்கள் இந்த அறிவிப்பினை அவரவர் பதிவில் போட்டால் எண்ணி மூன்றே நாளில் மூன்று கோடி ரூபாய் லாட்டரி அடிக்கும் என்று இமயமலையில் நித்யயோகத்தில் இருக்கும் நித்தியானந்தர் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்.

பதிவர்கள் பயன்பெற ஒரு நீதிமொழி : வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!

30 மார்ச், 2010

சங்கம்!

மேற்படி வருத்தமில்லா வாலிபர் சங்கத்துக்கு ஆதரவாக கூட்டத்தில் பேசியவன் என்ற முறையில் இப்போது வருந்துகிறேன். உண்மைத்தமிழன் என்ற பதிவர் தற்போது எழுதியிருக்கும் பதிவின் பாணியை வைத்துப் பார்த்தால் சங்கத்தை வைத்து உப்புமா வாங்கி சாப்பிடலாம் என்றுதான் தோன்றுகிறது.

நான் ஆதரித்துப் பேசிய குழுமம் வேறு. உருவாகப் போகும் குழுமம் வேறு என்று தெரிகிறது. அப்பதிவு மூலமாக வெளிப்பட்டிருக்கும் வக்கிர சிந்தனைகள் மிக மோசமானது. இப்படிப்பட்ட ஆட்களின் முன்முயற்சியால் ஏற்படுத்தப்படும் சங்கம் அல்லது குழுமம் என்பதின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பதை ஜோசியம் பார்க்காமலேயே உணர்ந்துவிடலாம்.

தனிப்பட்ட முறையில் நண்பர்கள் என்ற முறையில் பேசிக்கொள்ளும் பர்சனல் விஷயங்களை கூட பதிவுகளுக்கு எடுத்துவந்து பொதுவிவாதமாக எடுத்துச் செல்லும் போக்கு மிக மிக மோசமானது என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லிக் கொள்கிறேன். அதிலும் ஒரு பதிவரின் பணிக்கு வேட்டு வைக்கும் எண்ணத்தோடு விஷமத்தனமான முறையில் அந்த கடைசி பத்திகள் எழுதப்பட்டிருக்கிறது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் பதிவர் சந்திப்புகளில் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக்கொள்வது கூட தடைபடும். சந்திப்புகளில் கலந்துகொள்ளவே பலரும் யோசிப்பார்கள்.

ஆரம்பிப்பதற்கு முன்பாகவே இவ்வளவு ஆடுபவர்கள், ஆரம்பித்த பின்பு எவ்வளவு ஆடுவார்களோ? :-(

சங்கம், கிங்கம் என்றில்லாமல் வழக்கம்போல பதிவராகவே செயல்பட விரும்புகிறேன். கூட்டத்தில் ‘சங்கம் தேவை' என்று நான் கொடுத்த ஆதரவை, இப்பதிவின் மூலமாக வாபஸ் பெற்றுக் கொள்கிறேன் என்று மனவருத்தத்தோடு என்னை கூட்டத்துக்கு அழைத்து கருத்து சொல்லச் சொன்ன மற்ற நண்பர்களுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

26 மார்ச், 2010

நீச்சல் கற்றுக் கொள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், என்.ஐ.எஸ். தகுதிபெற்ற அனுபவம் வாய்ந்த நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு சென்னையில் கீழ்க்கண்ட நீச்சல் குளங்களில் ‘நீச்சல் கற்றுக் கொள்' வகுப்பினை நடத்தி வருகிறது.

1. அண்ணா நீச்சல்குளம், மெரீனா

2. வேளச்சேரி நீச்சல்குளம்

3. ஷெனாய் நகர் நீச்சல்குளம்


'நீச்சல் கற்றுக்கொள்' தினமும் ஒருமணிநேர வகுப்பாக காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை 12 நாட்கள் கொண்ட தொகுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் விவரங்களுக்கு நீச்சல்குள பொறுப்பாளர்களை அணுகலாம்.

அண்ணா நீச்சல் குளம். போன் : 2901250. கைப்பேசி : 9940341476

வேளச்சேரி நீச்சல் குளம். போன் : 22354381. கைப்பேசி : 9940341473

ஷெனாய் நகர் நீச்சல் குளம். போன் : 26474794. கைப்பேசி : 9940341480


முந்தையப் பதிவின் பின்னூட்டத்தில் உலக பிரபல எழுத்தாளர் ரைட்டர் சி.எஸ்.கே. அவர்கள் வலைப்பதிவுகளில் சிட்டிசன் ஜர்னலிசம் இல்லவே இல்லையென்றும், குறிப்பாக அதுகுறித்துப் பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டிருப்பதாலும் சமூகநலன் நோக்கில் இப்பதிவை இட்டே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது!


:-(

5 மார்ச், 2010

Univercell Chennai Blogger meet!


www.indiblogger.in பற்றி தமிழ்பதிவர்களுக்கு பெரிய அறிமுகம் கிடையாது. இந்திய மொழிகளில் எழுதிவரும் வலைப்பதிவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு இணையத்தளம்.

இத்தளத்தின் மூலமாக அவ்வப்போது வலைப்பதிவர் தொடர்பான சந்திப்புகளும், நிகழ்ச்சிகளும் நடந்துவருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் வரும் 20ஆம் தேதி ஒரு சந்திப்பு ஜி.ஆர்.டி. கன்வென்ஷன் சென்டரில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்படிருக்கிறது. தமிழ் வலைப்பதிவர்களும் பங்கேற்கலாம். ஏற்கனவே சில பிரபல(!) வலைப்பதிவர்கள் இச்சந்திப்பில் பங்கேற்க தங்கள் பெயரை பதிவு செய்திருப்பதை சம்பந்தப்பட்ட பக்கத்தில் அறியமுடிகிறது.

என்று & எங்கே?

சனிக்கிழமை, மார்ச் 20, 2010 பிற்பகல் 2.30 மணி. நிகழ்ச்சி முடியும் நேரம் மாலை 6 மணி.

இடம் : ஜி.ஆர்.டி. கன்வென்ஷன் சென்டர்
120, சர். தியாகராயா சாலை,
தி. நகர், சென்னை - 600 017.
(ஜி.ஆர்.டி. கிராண்ட் டேஸ்க்கு அடுத்து)

மேலதிக விவரங்களுக்கு : 45018949 என்ற தொலைபேசி எண்ணில் indiblogger அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

சந்திப்புக்கு வர விரும்புபவர்கள் இந்தப் பக்கத்தில் சென்று உடனடியாக தங்களது பெயரை பதிவு செய்யவும். அதிகபட்சம் 150 பேர் மட்டுமே கலந்துகொள்ளக் கூடிய நிகழ்ச்சி என்பதால் முதலில் பதிபவர்களுக்கே முன்னுரிமை கிடைக்கும்.

பொதுவாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஓசியில் எதையாவது வழங்குவார்கள் என்பதால், நம் தமிழ் பண்பாட்டுக்கிணங்க தமிழ் வலைப்பதிவர்கள் முண்டியடிக்கும்படி தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். நிகழ்ச்சியை வழங்குபவர்கள் : யுனிவர்செல், சென்னை.

3 மார்ச், 2010

ஒரு அறிவிப்பு!

நித்தியானந்தரை சாருவுக்கு முன்பு பிடிக்கும். எனக்கு சாருவை இப்போதும் பிடிக்கும். இதைத்தவிர்த்து நித்தியானந்தருக்கும், எனக்கும் எந்தவித நேரடித் தொடர்புமில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். எனவே ‘ர’ நடிகை தொடர்பான நித்தியானந்தரின் அஜால் குஜால் வேலை தொடர்பாக எனக்கு யாரும் தொலைபேசவோ, மின்னஞ்சலவோ வேண்டாமென்று தயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன். ஏனெனில் நானும் எதையும் விளக்குப் பிடித்து பார்த்ததில்லை. சன் நியூஸில்தான் பார்த்தேன். ஏகப்பட்ட வேலைகளுக்கு நடுவில் சிணுங்கிக் கொண்டேயிருக்கும் போனை தூக்கிப்போட்டு உடைத்துவிடலாமா என்று வெறுப்பு வருகிறது.

நித்தியானந்தர் குறித்த யுவகிருஷ்ணாவின் கட்டுரை நாளை வெளிவரும் அல்லது நாளை மறுநாள் வெளிவரும் அல்லது அடுத்த வருடம் வெளிவரும் அல்லது வெளிவராமலேயே கூடப்போகும்.

ஒரு நண்பரின் கடிதம் :

அன்புள்ள யுவகிருஷ்ணா,

பாராவின் பயிலரங்கம் முடிந்து சிவராம், சுரேஷ் கண்ணன், நீங்கள் மற்றும் நான் பேசிக்கொண்டிருந்தோம் ஞாபகம் இருக்கிறதா?

"கொஞ்ச நாளில் பாருங்க நித்யானந்தா எதிலாவது மாட்டுவார்... சாரு அப்படியே பல்டி அடிப்பாரென்று சொல்லியிருந்தீர்கள்." அப்படியே நடந்துவிட்டது.

மனுஷா...! நீங்க மந்திரக்கோலை கையில் எடுத்துக்கொள்ளுங்கள். நடக்க இருப்பது முன்கூட்டியே உங்களுக்குத் தெரிகிறதே...! அடுத்த பரமஹம்சர் நீங்கள் தான்....

Just for kidding :-)))))

அன்புடன்,
கிருஷ்ண பிரபு,
சென்னை.

25 பிப்ரவரி, 2010

கான் - ஒரு எதிர்வினை!

Hi

I do not know why you guys always support Muslims in the first place.

If the same movie has been taken by a Hindu, will you appreciate?
Immediately, You and Your groups will start writing about SECULARISM

Have you ever written about those hindus who are staying in Pakistan and do not have rights to vote also?


Think man. Think and write before you think again.

During mogul period what has happened to our country. Imagine.
Go and read the books. You will know the truth.

Sooner the entire India will be converted to Islam and Christianity.
Do not worry. Your kid and my kid will do a research on Hinduism just like Americans are doing about Greeks and Latin. But they are the one burried those civilization.


Bye

Regards
Ramanujam Varaddhan

* - * - * - * - * - * - * - * - *

வணக்கம் திரு ராமானுஜம் வரதன்!

இப்படம் ஒரு இந்து இயக்குனரால்தான் இயக்கப்பட்டிருக்கிறது. நாயகனை தவிர்த்து படத்தில் பணிபுரிந்த பெரும்பாலானோர் இந்துக்களே.

முகலாயர் காலத்தில் ‘இந்தியா’ என்றொரு நாடே கிடையாது. இன்று இருக்கும் அமைப்பு கூட பரஸ்பர நலன் சார்ந்த ஒரு கூட்டமைப்பு மட்டுமே. இங்கே பரஸ்பர நலன்கள் மறுக்கப்படுவதுதான் தெலுங்கானா, நக்சல்பாரி உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது.

நீங்கள் அஞ்சுவதைப் போல இந்நாடு ஒட்டுமொத்தமாக இஸ்லாமியத்துக்கோ, கிறிஸ்தவத்துக்கோ மாறக்கூடிய வாய்ப்பு எக்காலத்திலும் இல்லை. சுதந்திரம் அடைந்தபோது இங்கிருந்த மத விகிதாச்சாரம் அப்படியேதான் இருக்கிறது. இன்னும் பார்க்கப்போனால் இந்துக்களின் சதவிகிதம் அதிகரித்துக் கொண்டுதான் செல்கிறது.

சிந்திக்க வேண்டியது நானல்ல. நீங்கள்!

அன்புடன்
யுவகிருஷ்ணா

22 பிப்ரவரி, 2010

கற்றதும், பெற்றதும்!

அண்ணா மூன்றெழுத்து
எம்.ஜி.ஆர் மூன்றெழுத்து
திமுக மூன்றெழுத்து
சுஜாதா-வும் மூன்றெழுத்து



’அவரிடமிருந்து கற்றதும், பெற்றதும் எவ்வளவோ!’ என்று ஒருவார்த்தையில் புகழாரம் சூட்டலாம். க்ளிஷேவாக இருந்தாலும் உண்மையும் கூட. என்னுடைய ஹிஸ்டரி வாத்தியார் தண்டபாணியிடம் கற்றதும் கூட, இவரிடம் கற்றதில் பாதியளவுதான் இருக்கும். அவர்மீது சில காட்டமான விமர்சனங்கள் இருந்தாலும்கூட, அவர்தான் எனக்கு ஒரிஜினல் ‘வாத்தியார்’.

70களில் ஏதோ துண்டு துக்கடா கேரக்டர்களில் நடித்துக் கொண்டிருந்த கமல்ஹாசன் பெரிய ஹீரோவாக வருவார் என்று கணித்ததில் ஆகட்டும், எங்கோ மூலையில் முடங்கிக் கொண்டிருந்த மனுஷ்யபுத்திரனின் திறனை உலகுக்கு அறிவித்ததில் ஆகட்டும்.. வாத்தியாரின் தீர்க்கதரிசனம் என்றுமே ‘மிஸ்’ ஆனதில்லை.

‘பெண்களூர்’ என்று விளிப்பதாகட்டும், சமத்துவம் பேசும் ஹீரோயினிடம், “ஆம்பளைன்னா சட்டையோட மேல் பட்டன் ரெண்டை திறந்துவிட்டுப்பேன். நீ செய்வியா?” என்று டயலாக் எழுதிய நக்கலாகட்டும். வாத்தியார் வாத்தியார்தான்! ஆணாதிக்கமாக இருந்தாலும் ரசிக்கக்கூடிய ஆணாதிக்கம்.

எழுத்தில் கணேஷ்-வசந்தில் தொடங்கி, சினிமாவில் விக்ரம், இந்தியன் தாத்தாவென்று பயணித்து ரோபோவரை தொடர்ச்சியாக இயங்கிய ஃபேண்டஸி சிங்கம். ‘கண்ணேதிரே தோன்றினாள்’ படத்தின் பட்டாம்பூச்சி வசனம் நினைவிருக்கிறதா?

எழுத்து, சினிமாவென்று குறுகிவிடாமல் சமூகத்தில் பரவலாக பல தளங்களில் அறிமுகமான சகலகலா வல்லவன். அப்துல்கலாமுக்கு கல்லூரித் தோழர். மின்னணு வாக்கு இயந்திர முறையை நாட்டுக்கு அறிமுகப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர்.

ஸ்ரீரங்க நாயகன், ஸ்ரீரங்கநாதனோடு அடைக்கலமாகி, அதற்குள்ளாக இரண்டு வருடங்களாகிறதாம். இன்னும் அவர் எழுதிக்கொண்டே இருப்பதைப்போன்ற மாந்திரீக யதார்த்தம். அவரது வீச்சு அத்தகையது. மறைந்தும் மறையாமல் வாழ்பவர்களில் எம்.ஜி.ஆருக்கு அடுத்த இடம் நிச்சயம் இவருக்கு.

அவரிடம் கற்றதையும், பெற்றதையும் அசைப்போட ஒரு சிறிய கூட்டம். பிப்ரவரி 27, சனிக்கிழமை, மாலை 5.30 மணி. காந்தி சிலை அருகில். சென்னை மெரீனா கடற்கரை. நிகழ்வு அமைப்பு : ஐகாரஸ் பிரகாஷ், உருப்படாதது நாராயணன்.

பிரபல (இந்த சொல்லை சொல்லவே அஞ்சவேண்டியிருக்கிறது. மொக்கைகளும், மொன்னைகளும் கூட பிரபலமாக இருக்கிறார்கள்) எழுத்தாளர்கள், வலைப்பதிவர்கள் மற்றும் ட்விட்டர்கள் சிறுந்திரளாக கலந்துகொள்கிறார்கள். யாவரும் வரலாம்.

4 பிப்ரவரி, 2010

07.02.10 - படம் பார்க்க இலவச டிக்கெட்!


ஓசியில் யாராவது உங்களுக்காக பிரத்யேகமாக படம் போட்டு காட்டும் வாய்ப்பு என்பது உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது அரிதாகதான் நிகழும். யாராவது இளிச்சவாயர் மாட்டினால் மட்டுமே இது சாத்தியம். ‘உரையாடல்' அமைப்பு மிக்க மகிழ்ச்சியோடு அந்த இளிச்சவாய் பட்டத்தை ஏற்றுக் கொள்கிறது. வரும் ஞாயிறு உங்களுக்காக இலவசமாக கிழக்கு மொட்டை மாடி அரங்கில் ஒரு ஆங்கிலப்படம் திரையிடப்படுகிறது. யார் வேண்டுமானாலும் வரலாம். படம் பார்க்கலாம். வீட்டில் இருந்து வரும்போது ஒரு தலையணையையும், பாயையும் நீங்கள் கொண்டு வருவதாக இருந்தால் படுத்துக்கொண்டே படம் பார்க்கும் வசதியும் கிழக்கு அரங்கில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாமறிந்த அளவில் உலகில் இதுவரை எந்த அரங்கிலுமே இப்படிப்பட்ட வசதி இல்லை.

பெயர்: The Beautiful Country

மொழி : ஆங்கிலம்

வெளியான ஆண்டு: 2004

பட நேரம் : 125 நிமிடங்கள்

நாள் : 07.02.10, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 5.30 மணி
இடம் : கிழக்கு பதிப்பகம் மொட்டைமாடி, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை.

அனைவரும், ஆர்வமுள்ள தங்கள் இஷ்டமித்திர பந்துக்கள் மற்றும் பேட்டுகளோடு வருமாறு கேட்டுக் கொள்கிறோம். படத்தின் போஸ்டரைப் பார்த்தால் ‘பிட்’ பிட்டாக சூப்பராக இருக்கும் என்று தோன்றுகிறது.

தொடர்புள்ள சுட்டிகள்:

http://naayakan.blogspot.com/2010/02/blog-post_04.html

http://en.wikipedia.org/wiki/The_Beautiful_Country

http://www.imdb.com/title/tt0273108/

11 ஜனவரி, 2010

பதிவர்களுக்காக மாதப்பத்திரிகை!

சர்புதீன் என்ற தோழர் தமிழிணையத்தில் பதியப்படும் கதை, கட்டுரை, கவிதை இத்யாதிகளை வைத்தே ஒரு தனி மாத இதழ் நடத்த முன்வந்திருக்கிறார். கடந்த இரண்டு வருடங்களாக செயல்பட்டு வரும் ‘வெள்ளிநிலா' என்ற மாத இதழை இதற்காக பயன்படுத்த இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பான தோழர் சர்புதீனின் இடுகையை காணவும்!

7 டிசம்பர், 2009

நானும் ரவுடிதான்!


சாட்டிங் தொடங்கி பேங்க்கிங் வரை சர்வமும் இப்போது இணையங்களில்தான் நடத்தப்படுகின்றன. அல்லது செல்பேசிகளில். திருட்டுகள் அதிகம் நடைபெறுவதும் இங்கேதான். மொபைல் ஃபோனில் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புவது தொடங்கி இணையத்தள வங்கிக் கணக்கை ஹைஜாக் செய்வது முதல் பல்வேறு மோசடிகள் உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கின்றன. விதவிதமாக தூண்டில் போட்டு வகையாக மாட்டவைத்து, முடிந்தவரை அபகரித்துவிடுவார்கள்.

எத்தனை திறமையாக, எவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் இருந்தாலும், எங்காவது, எப்படியாவது சறுக்கல் ஏற்பட்டுவிடுகிறது. காஸ்ட்ரோவின் மகன் முதல் கடைக்கோடியில் உள்ள சாமானியன் வரை அனைவரும் சைபர் க்ரைமுக்கு இரையாகிவிடுகிறார்கள்.

எனில், நம்மால் ஒன்றுமே செய்யமுடியாதா? முடியும். தூண்டிலில் இருந்து தப்ப வேண்டுமானால், வெறும் எச்சரிக்கை உணர்வு மட்டும் போதாது. எது தூண்டில் என்பதையும் தூண்டிலை வீசுபவர்கள் எப்படியெல்லாம் இயங்குகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். மீள்வதற்கான வழிகளையும் தெரிந்துகொள்ளவேண்டும்.

குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த விறுவிறுப்பான தொடர்,இப்போது நூல் வடிவில்.

நூலை இணையத்தில் வாங்க...