2 டிசம்பர், 2009

பேரினவாதத்தின் ராஜா!

தமிழ் பத்திரியுலகையில் பணிபுரியும் முற்போக்காளர்களில் குறிப்பிடத்தக்கவர் அண்ணன் அருள்எழிலன். மூத்தப் பத்திரிகையாளரான இவர் தற்போது வெகுஜன வார இதழ் ஒன்றினில் தலைமை உதவி ஆசிரியராக பணிபுரிகிறார். பல்வேறு இணையத்தளங்களிலும், சஞ்சிகைகளிலும் மாற்று சிந்தனைகளோடு கூடிய அரசியல் கட்டுரைகளை வரைந்து வருகிறார். கட்டுரைக்கான இவரது மொழிநடையும், வடிவமும் மிகச்சிறப்பானது.

நம் அண்டைநாடான இலங்கையில் தொடர்ச்சியாக நடந்துவரும் இனப்படுகொலைகளையும், அரசியல் அராஜகங்களையும் குறித்து ‘பேரினவாதத்தின் ராஜா’ என்ற தலைப்பில் நூல் எழுதியிருக்கிறார். வரும் ஞாயிறு (6-12-09) அன்று மாலை 5.30 மணிக்கு சென்னை புக்பாய்ண்ட் அரங்கில் (ஸ்பென்ஸர் பிளாஸா எதிரில், அண்ணாசாலை காவல்நிலையம் அருகில்) இந்நூல் வெளியிடப்படுகிறது.

கலந்து கொள்பவர்கள் : தமிழருவி மணியன், பி.சி.வினோஜ்குமார், மீனாகந்தசாமி, பீர்முகம்மது, நடராஜா குருபரன், ரஞ்சிதா குணசேகரன், பாரதிதம்பி, ராஜூமுருகன் மற்றும் நூலாசிரியர் டி.அருள் எழிலன்.

புலம் வெளியீடு.

அனைவரும் வருக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக