13 செப்டம்பர், 2011

இரண்டு முக்கியச் செய்திகள்

இன்று வாசிக்க கிடைத்த இரண்டு முக்கியச் செய்திகள் :

உலகின் மொத்த அழகிகளும் பிரேஸிலில் குவிந்திருந்தார்கள். இவர்களில் யார் பிரபஞ்ச அழகி என்ற முடிவு இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும். அவர்களில் ஒருவர் கொலம்பிய நாட்டைச் சேர்ந்த 22 வயது அழகியான கேத்தலினா ரொபாயோ. 33.5-24-36.5 அளவு கொண்டவர். ஐந்தடி ஒன்பது அங்குலம் உயரம். மிஸ் கொலம்பியா 2010-ம் இவர்தான்.

அமைப்பாளர்களின் ஏற்பாட்டின் படி டாப்-16ல் வந்த அழகிகள் அனைவரும் க்ரூப் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வைபவம் நடந்து கொண்டிருந்தது. எல்லாமே நன்றாகதான் நடந்தது.

மறுநாள் உள்ளூர் செய்தித்தாள் ஒன்றில் கேத்தலினாதான் தலைப்புச்செய்தி. பவழவண்ண குட்டைப்பாவாடை அணிந்து போஸ் கொடுத்தவர், துரதிருஷ்டவசமாக கீழ் உள்ளாடை அணிய மறந்துவிட்டிருக்கிறார். இந்த சீனை ‘க்ளிக்’ செய்த போட்டோகிராஃபர் ஸ்பெஷல் ஜூம் போட்டு, ஜொள்ளிக்கொண்டே போட்டோவாக எடுத்துத் தள்ளியிருக்கிறார்.

பரபரவென்று நெருப்பு மாதிரி பற்றிக்கொண்டது மேட்டர். போட்டோ இணையம் மூலமாக பரவ, உலகமகா காமகொடூரர்கள் ஒட்டுமொத்தமாக கூகிளில் கேத்தலினாவின் குட்டைப்பாவாடையை தேடித்தேடி உற்றுப் பார்த்தார்கள். இதுபற்றி கேத்தலினாவிடம் விளக்கம் கேட்டபோது, தான் உள்ளாடை அணிந்திருந்ததாகவே கருத்து தெரிவித்திருக்கிறார்.

பரபரப்புக்காக நிகழ்ச்சி அமைப்பாளர்களோடு கூட்டு சேர்ந்து இவர் ‘அண்டர்ப்ளே’ செய்திருப்பாரோ என்றொரு ஐயம் ஊடகங்களுக்கு. இல்லை, சொந்த பப்ளிசிட்டிக்காகவே இந்த ச்சீ ச்சீ விளையாட்டை விளையாடிருப்பார் கேத்தலீனா என்பது சக அழகிகளின் கருத்து.

சம்பவத்துக்கு பிறகு அம்மணியின் மவுசு எடக்குமடக்காக உயர்ந்திருக்கிறது. இதைக்கண்டு மற்ற அழகிகள் ‘ச்சே.. வடை போச்சே’ என்று கூட புலம்புகிறார்களாம். இப்போதெல்லாம் பொது இடத்துக்கு கேத்தலீனா செல்லும்போதெல்லாம் கூட்டம், இன்னொரு சான்ஸ் கிடைக்காதா என்று எகனைமொகனையாக கூடிவிட, ‘பாடி’கார்டுகளுக்கு செம டென்ஷனாம்.

என்ன காட்டி என்ன பிரயோசனம்? கடைசியில் அங்கோலா நாட்டு அழகி பிரபஞ்சத்திலேயே அழகானவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

எனக்கு இந்த செய்தியில் தெரியவேண்டிய விஷயம் என்னவென்றால், மறக்காமல் தான் உள்ளாடையை அணிந்ததாக கேத்தலினாவின் வெர்ஷன் இருக்கிறது. அவர் அணிந்ததற்கும், போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்கும் இடையிலான நேரத்தில், அவருக்கே தெரியாமல் அதை அவிழ்த்த தில்லாலங்கடி யாரென்பதுதான்.

இந்தப் படத்தில் மேடம் உள்ளாடை மட்டுமே அணிந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இரண்டாவது நம்மூர் செய்தி.

கோவைக்கு அருகில் நடந்திருக்கிறது. போத்தனூர் சிமெண்ட் கலவை ஃபேக்டரியில் ஒரிசாவைச் சேர்ந்த பினோத், நிஸ்தார், டேவிட், பெகோர் ஆகியோர் பணியாற்றியிருக்கிறார்கள்.

ஒருநாள் ரொம்ப காஜூ ஏறிப்போன நால்வரும் தண்டபாணி என்பவரின் வீட்டுத் தோட்டத்துக்கு வந்திருக்கிறார்கள். அங்கு ஒரு அழகான கன்றுக்குட்டி இருந்திருக்கிறது.

அதன் வாயைப் பொத்தி நால்வரும் மாறி, மாறி...

விஷயம் முடிந்ததும் தப்பித்திருக்கிறார்கள். கன்றுக்குட்டியின் கதறல் சத்தத்தைக் கேட்டு வந்த உரிமையாளர் தண்டபாணி நிலைமையை யூகித்திருக்கிறார். தப்பித்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவனைப் பிடித்து என்ன ‘மேட்டர்’ என்று விசாரித்துத் தெரிந்துக் கொண்டார்.

ஊர்மக்களும் கூடிவிட, காவல் நிலையத்துக்குப் போய் ’புகார்’ செய்துவிட்டு வந்திருக்கிறார்கள். விசித்திரமான புகாரை நம்ப மறுத்ததாலோ என்னவோ போலிஸார் போதிய ஆர்வம் காட்டவில்லை. இதையடுத்து காமுகர்கள் பணிபுரிந்த தொழிற்சாலைக்கு மக்கள் படையெடுத்து, மற்ற மூவரையும் பிடித்து தென்னைமரத்தில் கட்டிவைத்து உதைத்திருக்கிறார்கள். அப்போதும் காவல்துறையினர் வந்து சேரவில்லை.

இதையடுத்து கன்றுக்குட்டிக்கு நீதி கேட்டு காவல் நிலையம் முன்பாக மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். உடனடியாக விழித்துக் கொண்ட காவல்துறை நால்வரையும் கைது செய்தது. கன்றுக்குட்டி மருத்துவப் பரிசோதனைக்கு கால்நடை மருத்துவரிடம் அனுப்பப்பட்டது. மருத்துவர், கன்றுக்குட்டி கற்பழிக்கப்பட்டதை உறுதி செய்து சான்றிதழ் அளித்தால், நாலு பேரின் டவுசரும் கிழியும்.

எந்தப் பிரிவுகளில் வழக்கு தொடுப்பது என்று ஆரம்பத்தில் குழம்பிப் போன காவல்துறை, பின்னர் மிருகத்தை கொலை செய்ய முயற்சித்தது, இயற்கைக்குப் புறம்பான உறவு ஆகிய செக்‌ஷன்களில் வழக்கு பதிந்திருக்கிறது.

எனக்கு இந்தச் செய்தியில் ஆர்வத்தைத் தூண்டிய விஷயம் இந்தப் படம்தான். காமூகர்களோடு, கன்றுக்குட்டியையும் நிற்கவைத்து போட்டோ எடுத்து பத்திரிகைகளுக்கு கொடுத்த அசத்தல் ஐடியா யாருடையது?

18 கருத்துகள்:

  1. ரொம்ப நாள் கழிச்சி லக்கி போஸ்ட் படிச்ச மாறி இருக்கு பாஸ்

    பதிலளிநீக்கு
  2. ஒன்று 'கழன்ற' குட்டி செய்தி...

    மற்றொன்று கன்று குட்டி செய்தி...


    இரண்டாவது மேட்டர் விசித்திரமாகவும், இப்படியும் இருப்பார்களா என்றும் யோசிக்க வைக்கிறது...

    பதிலளிநீக்கு
  3. cowboys veettai vittu pala maathankal maadu meyththu kondiruppaarkal.appothu ithu pola nadappathundaam. ivarakalai be(a)ggars enru azhaippaarkal.

    பதிலளிநீக்கு
  4. //அங்கு ஒரு அழகான கன்றுக்குட்டி இருந்திருக்கிறது//

    அதென்ன "அழகான" ?? இதெல்லாம் ரொம்ப டூ மச். அப்புறம் கவ் டீசிங்ல உள்ள தள்ளிடுவாங்க.

    பதிலளிநீக்கு
  5. சூப்பர் மேட்டர் தான்.. ஆமாங்க ரெண்டுமே மேட்டர் சம்பந்த பட்டது தான்....

    // மருத்துவர், கன்றுக்குட்டி கற்பழிக்கப்பட்டதை உறுதி செய்து சான்றிதழ் அழித்தால், நாலு பேரின் டவுசரும் கிழியும்.//

    சான்றிதழ் அளித்தால்....

    என் பிளாக் பக்கம் இந்தமாறி எழுத்து பிழை கண்டுபிடிக்க வந்துறாதிங்க, ப்ளீஸ்.....

    பதிலளிநீக்கு
  6. ஷகீலா, பாபிலோனா, நேஹா ஆண்ட்டி, இப்போ இந்த குட்டிகள் மேட்டர்ன்னு நீங்க தேர்ந்தேடுக்குற விஷயங்கள் ஒரு மார்க்கமா தான் இருக்கு...

    பதிலளிநீக்கு
  7. லாஸ்ட் லைன் செம ரகளை..:)))))))) அந்த போட்டோ எடுத்தவனோட தொழில் பக்தி இருக்கே..அடடடா..அப்பப்பா..

    பதிலளிநீக்கு
  8. இதுக்கு அவனுங்க ஓரின சேர்க்கையில் ஈடுபடலாம். இதுக்கு அது பெட்டர். பெட்டர்தான் சரியென்று சொல்லவில்லை. அய்யோ இனிமே இந்த கன்னுகுட்டிய எந்த காளை மாடு கட்டிக்கும் ? அதோடு வாழ்கையே நாசமா போயிடுச்சே !!!!!!

    பதிலளிநீக்கு
  9. ஆம், இரண்டும் அதே முக்கியமான செய்திகளே!

    பதிலளிநீக்கு
  10. அனானி சொன்ன மாதிரி கன்னுகுட்டியோட வாழ்க்கைய பாழாய் போச்சு. முகத்தை மறைச்சு போட்டோ எடுத்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  11. பகிவுக்கு நன்றி.

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    பதிலளிநீக்கு
  12. இந்த இளைஞர்கள் இப்படி தடம்புரண்டதுக்கு காரணம் ஆயிரம் சொல்லலாம். அதில் முக்கியமாக சமூகம் தான் பெரும்பங்கு வகிக்கிறது. அவர்களை அழைத்து இந்த தவற்றின் தீவிரத்தை உணர்த்தி நல்வழி படுத்துதல்தான் சரி. அதை விடுத்து இப்படி போட்டோ போட்டு அசிங்கப்படுத்தினால், தெரியாமல் தவறு செய்யும் மற்றும் தரைமறைக்க மேலும் குற்றம் செய்வதையும்தான் ஊக்குவிக்கும். யுவ கிருஷ்ணா , தயவு செய்து போட்டோவை எடுத்துவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  13. //
    ரொம்ப காஜூ ஏறிப்போன
    //

    காஜூ-ன்னா என்ன? கேந்தி-யா?

    பதிலளிநீக்கு
  14. இதில் என்ன தப்பு இருக்குன்னு புரியலை. எந்த பெண்ணுக்கும் பாதிப்பில்லை. யாருடைய கற்பும் கெடவும் இல்லை.

    மிருகங்களுடன் புணர்வதால் அவற்றுக்கு ஒன்றும் அவமானமும் வரப்போவதில்லை. இயல்பான இதையெல்லாம் போய் ஏன் தான் பெரிதுபடுத்திச்செய்தியாக்குகின்றனரோ.

    பதிலளிநீக்கு
  15. இப்புடி கண்ணுகுட்டி போட்டோவையும் சேர்த்து போட்டு , அந்த கண்ணு குட்டி வாழ்க்கையையே கேள்விகுறி ஆக்கிட்டாங்களே.. என்ன கொடுமை..

    பதிலளிநீக்கு
  16. என்ன கொடும சார் இது?!!!

    பதிலளிநீக்கு